கொலோசெயர்
Chapter 1
அத்தியாயம்– 1
1 தேவனுடைய விருப்பத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும் சகோதரனாகிய தீமோத்தேயும் 2 கொலோசே பட்டணத்தில் கிறிஸ்துவிற்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாக இருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதாவது நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக 3 கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள உங்களுடைய விசுவாசத்தையும் பரிசுத்தவான்கள் எல்லார்மேலுமுள்ள உங்களுடைய அன்பையும்குறித்து நாங்கள் கேள்விப்பட்டு 4 பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம் 5 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு நன்றிசெலுத்தி எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம் 6 அந்த நம்பிக்கையைக்குறித்து நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய நற்செய்தியினாலே கேள்விப்பட்டீர்கள் அந்த நற்செய்தி உலகமெங்கும்பரவிப் பலன்தருகிறதுபோல உங்களிடத்திலும் வந்து நீங்கள் அதைக்கேட்டு தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல் அது உங்களுக்குள்ளும் பலன் தருகிறதாக இருக்கிறது 7 அதை எங்களுக்குப் பிரியமான உடன் வேலையாளும் உங்களுக்காகக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனுமாக இருக்கிற எப்பாப்பிராவினிடம் நீங்கள் கற்றறிந்திருக்கிறீர்கள் 8 ஆவியானவருக்குள்ளான உங்களுடைய அன்பையும் அவனே எங்களுக்குத் தெரியப்படுத்தினான் 9 இதினிமித்தம் நாங்கள் அதைக் கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம் செய்கிறோம் நீங்கள் எல்லா ஞானத்தோடும் ஆவியானவருக்குரிய விவேகத்தோடும் அவருடைய விருப்பத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும் 10 எல்லாவித நல்ல செயல்களாகிய கனிகளைத் தந்து தேவனை அறிகிற அறிவில் வளர்ச்சியடைந்து கர்த்தருக்குப் பிரியமுண்டாக வாழவும் அவருக்குத் தகுதியாக நடந்துகொள்ளவும் 11 சந்தோஷத்தோடுகூடிய எல்லாப் பொறுமையும் நீடிய சாந்தமும் உண்டாவதற்கு மகிமையான அவருடைய வல்லமையின்படி எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும் உங்களுக்காக ஜெபம் செய்கிறோம் 12 ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்திரத்தில் பங்கடைவதற்கு நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும் 13 இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாக இருக்கிற பிதாவிற்கு நன்றி செலுத்துகிறோம் 14 குமாரனாகிய இயேசுகிறிஸ்துவிற்குள் அவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது 15 அவர் கண்ணுக்குத் தெரியாத தேவனுடைய ரூபமும் எல்லாப் படைப்புக்கும் முதற்பேறுமானவர் 16 ஏனென்றால் அவருக்குள் எல்லாம் படைக்கப்பட்டது பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான எல்லாப் பொருட்களும் சிங்காசனங்களானாலும் கர்த்தத்துவங்களானாலும் அரசாங்க ஆட்சி புரிவோர்களானாலும் அதிகாரங்களானாலும் எல்லாமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் படைக்கப்பட்டது 17 அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர் எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது 18 அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர் எல்லாவற்றிலும் முதல்வராக இருக்கும்படி அவரே துவக்கமும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த முதற்பேறுமானவர் 19 எல்லாப் பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாக இருக்கவும் 20 அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாகத் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் தேவனுக்கு விருப்பமானது 21 முன்னே தேவனுக்கு அந்நியர்களாகவும் தீய செயல்களினால் மனதிலே விரோதிகளாகவும் இருந்த உங்களையும் பரிசுத்தர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்குமுன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார் 22 நீங்கள் கேட்ட நற்செய்தியினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல் நிலையாகவும் உறுதியாகவும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும் 23 அந்த நற்செய்தி வானத்தின்கீழே இருக்கிற எல்லாப் படைப்புகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன் 24 இப்பொழுது நான் உங்கள்நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக என் சரீரத்தினாலே நிறைவேற்றுகிறேன் 25 ஆரம்ப காலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாக இருந்து இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தை நிறைவாகத் தெரியப்படுத்துகிறதற்கு 26 உங்கள்நிமித்தம் தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட வேலையின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன் 27 யூதரல்லாதவர்களுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தப் பிரியமானார் கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம் 28 எந்த மனிதனையும் கிறிஸ்து இயேசுவிற்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு அவரையே நாங்கள் அறிவித்து எந்த மனிதனுக்கும் புத்திசொல்லி எந்த மனிதனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் செய்கிறோம் 29 அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையான செய்கையை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்
Chapter 2
அத்தியாயம்– 2
1 உங்களுக்காகவும் லவோதிக்கேயாவில் இருக்கிறவர்களுக்காகவும் சரீரத்தில் என் முகத்தைக் காணாதிருக்கிற மற்றெல்லோருக்காகவும் மிகுந்த போராட்டம் எனக்கு உண்டென்று நீங்கள் அறியவிரும்புகிறேன் 2 அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவிற்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன் 3 அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது 4 ஒருவனும் பொய்யான வாதங்களால் உங்களை ஏமாற்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன் 5 சரீரத்தின்படி நான் தூரமாக இருந்தும் ஆவியின்படி உங்களோடுகூட இருந்து உங்களுடைய ஒழுங்கையும் கிறிஸ்துவின் மேலுள்ள உங்களுடைய விசுவாசத்தின் உறுதியையும் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன் 6 ஆகவே நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும் அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும் அவருக்குள் நடந்துகொண்டு 7 நீங்கள் போதிக்கப்பட்டபடியே விசுவாசத்தில் உறுதிப்பட்டு நன்றி செலுத்துவதோடு அதிலே பெருகுவீர்களாக 8 உலக ஞானத்தினாலும் மாயமான தந்திரத்தினாலும் ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள் அது மனிதர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலக வழிபாடுகளையும்பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப்பற்றினதல்ல 9 ஏனென்றால் தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் குடிகொண்டிருக்கிறது 10 மேலும் எல்லாத் துரைத்தனங்களுக்கும் அதிகாரத்திற்கும் தலைவராக இருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணம் உள்ளவர்களாக இருக்கிறீர்கள் 11 அல்லாமலும் நீங்கள் கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினாலே மாம்சத்திற்குரிய பாவசரீரத்தைக் களைந்துவிட்டதினால் கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் பெற்றீர்கள் 12 ஞானஸ்நானத்திலே அவரோடுகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும் அதிலே அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பின தேவனுடைய செயலின்மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடுகூட உயிரோடு எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள் 13 உங்களுடைய பாவங்களினாலேயும் உங்களுடைய சரீரவிருத்தசேதனம் இல்லாமையினாலேயும் மரித்தவர்களாக இருந்த உங்களையும் அவரோடுகூட உயிர்ப்பித்து அக்கிரமங்கள் எல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து 14 நமக்கு எதிரானதாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தை அழித்து அதை நடுவில் இல்லாதபடிக்கு எடுத்து சிலுவையின்மேல் ஆணியடித்து 15 துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் பறித்துக்கொண்டு வெளியரங்கமாக வெளிப்படுத்தி அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றி சிறந்தார் 16 ஆகவே உணவையும் பானத்தையும் குறித்தாவது பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையும் குறித்தாவது ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாமல் இருப்பானாக 17 அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாக இருக்கிறது அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது 18 மூட்டுகளாலும் தசை நரம்புகளாலும் உதவிபெற்று இணைக்கப்பட்டு தேவவளர்ச்சியாக வளர்ந்தேறுகிற சரீரமுழுவதையும் ஆதரிக்கிற தலையைப் பற்றிக்கொள்ளாமல் 19 மாய்மாலமான தாழ்மையிலும் தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமடைந்து காணாத காரியங்களிலே துணிவாய் நுழைந்து தன் சரீரசிந்தையினாலே வீணாக கர்வம் கொண்டிருக்கிற எவனும் உங்களுடைய பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை ஏமாற்றாதிருக்கப் பாருங்கள் 20 நீங்கள் கிறிஸ்துவோடுகூட உலகத்தின் வழக்கங்களுக்கு மரித்ததுண்டானால் இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல 21 மனிதர்களுடைய கட்டளைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து தொடாதே ருசி பாராதே தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உடன்படுகிறதென்ன 22 இவையெல்லாம் அநுபவிக்கிறதினால் அழிந்துபோகுமே 23 இப்படிப்பட்டப் போதனைகள் சுயவிருப்பமான ஆராதனையையும் போலியான தாழ்மையையும் சரீர ஒடுக்கத்தையும்பற்றி ஞானம் என்கிற பெயர்கொண்டிருந்தாலும் இவைகள் மாம்சத்தைப் பாதுகாப்பதற்கேயன்றி வேறு எதற்கும் உபயோகப்படாது
Chapter 3
அத்தியாயம்– 3
பரிசுத்த ஜீவியத்திற்கான விதிமுறைகள்
1 நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால் கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள் 2 பூமியிலுள்ளவைகளை இல்லை மேலானவைகளையே விரும்புங்கள் 3 ஏனென்றால் நீங்கள் மரித்தீர்கள் உங்களுடைய ஜீவன் கிறிஸ்துவோடு தேவனுக்குள் மறைந்திருக்கிறது 4 நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது நீங்களும் அவரோடுகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள் 5 ஆகவே விபசாரம் அசுத்தம் மோகம் தீய எண்ணம் விக்கிரக ஆராதனையான பொருளாசை ஆகிய இந்த உலகத்திற்குரிய பாவ சுபாவத்தை அழித்துப்போடுங்கள் 6 இவைகளினாலேயே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவனுடைய கோபம் வரும் 7 நீங்களும் முற்காலத்தில் அவர்களுக்குள்ளே வாழ்ந்தபோது அவைகளைச் செய்துகொண்டுவந்தீர்கள் 8 இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும் உங்களுடைய வாயிலிருந்து வரக்கூடாத நிந்தனையும் வம்புவார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள் 9 ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள் பழைய மனிதனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு 10 தன்னைப் படைத்தவருடைய சாயலுக்கு ஒப்பாக பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனிதனை அணிந்துகொண்டிருக்கிறீர்களே 11 அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை விருத்தசேதனம் உள்ளவனென்றும் விருத்தசேதனம் இல்லாதவனென்றுமில்லை யூதனல்லாதவனென்றும் வெளிதேசத்தானென்றுமில்லை அடிமையென்றும் சுதந்திரமானவனென்றுமில்லை கிறிஸ்துவே எல்லோரிலும் எல்லாமுமாக இருக்கிறார் 12 ஆகவே நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாக உருக்கமான இரக்கத்தையும் தயவையும் மனத்தாழ்மையையும் அமைதியையும் நீடிய பொறுமையையும் அணிந்துகொண்டு 13 ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால் கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் 14 இவை எல்லாவற்றின்மேலும் பூரண நற்குணத்தின் கட்டாகிய அன்பை அணிந்துகொள்ளுங்கள் 15 தேவசமாதானம் உங்களுடைய இருதயங்களில் ஆளக்கடவது இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள் நன்றியுள்ளவர்களாகவும் இருங்கள் 16 கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே எல்லா ஞானத்தோடும் பரிபூரணமாக குடியிருப்பதாக பாடல்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு உங்களுடைய இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி 17 வார்த்தையினாலாவது செயல்களினாலாவது நீங்கள் எதைச்செய்தாலும் அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து அவர் மூலமாகப் பிதாவாகிய தேவனுக்கு நன்றி செலுத்துங்கள் 18 மனைவிகளே கர்த்தருக்கேற்கும்படி உங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள் 19 கணவன்மார்களே உங்களுடைய மனைவிகளில் அன்பு செலுத்துங்கள் அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள் 20 பிள்ளைகளே உங்களுடைய பெற்றோருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள் இது கர்த்தருக்கு விருப்பமானது 21 பிதாக்களே உங்களுடைய பிள்ளைகள் மனம் தளர்ந்துபோகாதபடி அவர்களை கோபமூட்டாமலிருங்கள் 22 வேலைக்காரர்களே சரீரத்தின்படி உங்களுடைய எஜமான்களாக இருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து நீங்கள் மனிதர்களைப் பிரியப்படுத்த விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு பணிவிடைசெய்யாமல் தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடு பணிவிடைசெய்யுங்கள் 23 நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைத் தொழுதுகொள்ளுகிறதினாலே உரிமைப்பங்கின் பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து 24 எதைச்செய்தாலும் அதை மனிதர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாகச் செய்யுங்கள் 25 அநியாயம் செய்கிறவன் தான் செய்த அநியாயத்திற்குரிய பலனை அடைவான் பட்சபாதமே இல்லை
Chapter 4
அத்தியாயம்– 4
1 எஜமான்களே உங்களுக்கும் பரலோகத்தில் எஜமான் இருக்கிறாரென்று அறிந்து வேலைக்காரர்களுக்கு நீதியும் செம்மையுமானதைச் செய்யுங்கள் 2 இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள் நன்றியுள்ள இருதயத்தோடு ஜெபத்தில் விழித்திருங்கள் 3 கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக்குறித்துப் பேசவேண்டிய பிரகாரமாகப் பேசி அதை வெளிப்படுத்துவதற்கு 4 தேவவார்த்தை செல்லும்படியான வாசலை தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள் 5 அவிசுவாசிகளுக்கு முன்பாக ஞானமாக நடந்து காலத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் 6 அவனவனுக்கு எவ்வாறு பதில்சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு உங்களுடைய வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாகவும் உப்பினால் சாரமேறினதாகவும் இருப்பதாக 7 பிரியமான சகோதரனும் உண்மையுள்ள ஊழியக்காரனும் கர்த்தருக்குள் எனக்கு உடன்வேலையாளுமாக இருக்கிற தீகிக்கு என்பவன் என் செய்திகளையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பான் 8 உங்களுடைய செய்திகளை அறியவும் உங்களுடைய இருதயங்களைத் தேற்றவும் 9 அவனையும் உங்களில் ஒருவனாக இருக்கிற உண்மையும் பிரியமும் உள்ள சகோதரனாகிய ஒநேசிமு என்பவனையும் உங்களிடம் அனுப்பியிருக்கிறேன் அவர்கள் இந்த இடத்துச் செய்திகளையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பார்கள் 10 என்னோடுகூடக் காவலில் இருக்கிற அரிஸ்தர்க்கும் பர்னபாவிற்கு நெருங்கிய உறவினரான மாற்கும் வாழ்த்துதல் சொல்லுகிறார்கள் மாற்குவைக்குறித்து உத்தரவுபெற்றீர்களே இவன் உங்களிடம் வந்தால் இவனை அங்கீகரித்துக்கொள்ளுங்கள் 11 யுஸ்து என்னப்பட்ட இயேசுவும் வாழ்த்துதல் சொல்லுகிறான் விருத்தசேதனம் உள்ளவர்களில் இவர்கள்மட்டும் தேவனுடைய ராஜ்யத்திற்காக என் உடன்வேலையாட்களாக இருந்து எனக்கு ஆறுதல் செய்துவந்தார்கள் 12 எப்பாப்பிராவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான் உங்களைச் சேர்ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன் நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகள் எல்லாவற்றிலும் தேறினவர்களாகவும் பூரண நிச்சயமுள்ளவர்களாகவும் நிலைநிற்கவேண்டுமென்று தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான் 13 இவன் உங்களுக்காகவும் லவோதிக்கேயருக்காகவும் எராப்போலியருக்காகவும் மிகுந்த விழிப்புள்ளவனாக இருக்கிறான் என்பதற்கு நான் சாட்சியாக இருக்கிறேன் 14 பிரியமான மருத்துவனாகிய லூக்காவும் தேமாவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள் 15 லவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரர்களையும் நிம்பாவையும் அவன் வீட்டில் கூடுகிற சபையையும் வாழ்த்துங்கள் 16 இந்தக் கடிதம் உங்களிடம் வாசிக்கப்பட்டபின்பு இது லவோதிக்கேயா சபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள் லவோதிக்கேயாவிலிருந்து வரும் கடிதத்தை நீங்களும் வாசியுங்கள் 17 அர்க்கிப்பைக் கண்டு நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாக இருப்பாயாகவென்று சொல்லுங்கள் 18 பவுலாகிய நான் என் கையினால் எழுதி உங்களை வாழ்த்துகிறேன் நான் கட்டப்பட்டிருக்கிறதை நினைத்துக்கொள்ளுங்கள் கிருபை உங்களோடிருப்பதாக ஆமென்