ரோமர்கள்
Chapter 1
அத்தியாயம்– 1
1 இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனாக இருப்பதற்காக அழைக்கப்பட்டவனும் தேவனுடைய நற்செய்திக்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல் 2 ரோமாபுரியில் உள்ள தேவனுக்குப் பிரியமானவர்களும் பரிசுத்தவான்களாவதற்காக அழைக்கப்பட்டவர்களாகிய அனைவருக்கும் எழுதுகிறதாவது 3 நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக 4 இயேசுகிறிஸ்துவைக்குறித்து தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாகப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னமே தம்முடைய நற்செய்தியைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர் 5 சரீரத்தின்படி தாவீதின் வம்சத்தில் பிறந்தவரும் பரிசுத்த ஆவியின்படி தேவனுடைய குமாரர் என்று மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்ததினாலே பலமாக நிரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாக இருக்கிறார் 6 அவர் எல்லா தேசத்து மக்களையும் அவர்களுக்குள் இயேசுகிறிஸ்துவினால் அழைக்கப்பட்டவர்களாகிய உங்களையும் 7 தமது நாமத்தினிமித்தம் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியப்பண்ணுவதற்காக எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் கொடுத்திருக்கிறார் 8 உங்களுடைய விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே முதலாவது நான் உங்களெல்லோருக்காகவும் இயேசுகிறிஸ்து மூலமாக என் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன் 9 நான் ஜெபம்பண்ணும்போதெல்லாம் இடைவிடாமல் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறதைக்குறித்துத் தேவகுமாரனுடைய நற்செய்தியினாலே என் ஆவியோடு நான் வணங்குகிற தேவன் எனக்குச் சாட்சியாக இருக்கிறார் 10 நீங்கள் உறுதிப்படுத்தப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுப்பதற்காகவும் 11 உங்களுக்குள்ளும் எனக்குள்ளும் உள்ள விசுவாசத்தினால் உங்களோடு நானும் ஆறுதல் அடைவதற்கும் உங்களைப் பார்க்க ஆவலாக இருக்கிறதினாலே 12 நான் எப்படியாவது உங்களிடம் வருகிறதற்கு தேவனுடைய விருப்பத்தினாலே எனக்கு நல்ல பயணம் சீக்கிரத்தில் அமையவேண்டும் என்று ஜெபித்துக்கொள்கிறேன் 13 சகோதரர்களே யூதரல்லாதவர்களாகிய மற்றவர்களுக்குள்ளே நான் அநேகரை இரட்சிப்பிற்குள் வழிநடத்தினதுபோல உங்களுக்குள்ளும் சிலரை இரட்சிப்பிற்குள் வழிநடத்துவதற்காக உங்களிடம் வருவதற்காக பலமுறை நான் யோசனையாக இருந்தேன் ஆனாலும் இதுவரைக்கும் எனக்குத் தடை உண்டானது என்று நீங்கள் அறியாமல் இருக்க எனக்கு மனமில்லை 14 கிரேக்கர்களுக்கும் மற்ற அந்நியர்களுக்கும் ஞானிகளுக்கும் மூடர்களுக்கும் நான் கடனாளியாக இருக்கிறேன் 15 எனவே ரோமாபுரியில் இருக்கிற உங்களுக்கும் என்னால் முடிந்தவரை நற்செய்தியைப் பிரசங்கம்பண்ண விரும்புகிறேன் 16 கிறிஸ்துவின் நற்செய்தியைக்குறித்து நான் வெட்கப்படமாட்டேன் முதலில் யூதர்களிலும் பின்பு கிரேக்கர்களிலும் விசுவாசிக்கிறவன் எவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாக இருக்கிறது 17 விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்த நற்செய்தியினால் வெளிப்படுத்தப்படுகிறது 18 சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனிதர்களுடைய எல்லாவிதமான அவபக்திக்கும் அநியாயத்திற்கும் எதிராக தேவனுடைய கோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது 19 தேவனைக்குறித்து தெரிந்துகொள்வது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் 20 எப்படியென்றால் காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தெய்வீகத்தன்மை என்பவைகள் படைக்கப்பட்டிருக்கிறவைகளினாலே உலகம் உண்டாக்கப்பட்டதிலிருந்து தெளிவாகக் காணப்படும் எனவே அவர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது 21 அவர்கள் தேவனைத் தெரிந்தும் அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும் நன்றி சொல்லாமலும் இருந்து தங்களுடைய சிந்தனைகளினாலே வீணரானார்கள் உணர்ச்சி இல்லாத அவர்களுடைய இருதயம் இருள் அடைந்தது 22 அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பைத்தியக்காரர்களாகி 23 அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனிதர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய உருவங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள் 24 இதனால் அவர்கள் தங்களுடைய இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்களுடைய சரீரங்களை அவமானப்படுத்துவதற்காக தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார் 25 தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி படைத்தவரைத் தொழுதுகொள்ளாமல் படைக்கப்பட்டவைகளைத் தொழுதுகொண்டார்கள் அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் ஆமென் 26 இதனால் தேவன் அவர்களை இழிவான இச்சைகளுக்கு ஒப்புக்கொடுத்தார் அப்படியே அவர்களுடைய பெண்கள் இயற்கையான இச்சையை இயற்கைக்கு எதிரான இச்சையாக மாற்றினார்கள் 27 அப்படியே ஆண்களும் பெண்களை இயற்கையின்படி அனுபவிக்காமல் ஒருவர்மேல் ஒருவர் இச்சையினாலே பொங்கி ஆணோடு ஆண் அவலட்சணமானதை செய்து தங்களுடைய தவறுகளுக்குத்தக்க பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள் 28 தேவனைத் தெரிந்துகொள்ளும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனமில்லாமல் இருந்ததால் தவறான காரியங்களைச் செய்வதற்காக தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார் 29 அவர்கள் எல்லாவிதமான அநியாயத்தினாலும் வேசித்தனத்தினாலும் துரோகத்தினாலும் பொருளாசையினாலும் குரோதத்தினாலும் நிறையப்பட்டு பொறாமையினாலும் கொலையினாலும் வாக்குவாதத்தினாலும் வஞ்சகத்தினாலும் வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாக 30 கோள் சொல்லுகிறவர்களுமாக அவதூறு பண்ணுகிறவர்களுமாக தேவனைப் பகைக்கிறவர்களுமாக மூர்க்கர்களுமாக அகந்தை உள்ளவர்களுமாக வீம்புக்காரர்களுமாக பொல்லாதவைகளை யோசிக்கிறவர்களுமாக பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாக 31 உணர்வு இல்லாதவர்களுமாக உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாக சுபாவ அன்பு இல்லாதவர்களுமாக இணங்காதவர்களுமாக இரக்கம் இல்லாதவர்களுமாக இருக்கிறார்கள் 32 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குத் தகுதியானவர்கள் என்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் தெரிந்திருந்தும் அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல் அவைகளைச் செய்கிற மற்றவர்களையும் ஏற்றுக்கொள்ளுகிறவர்களுமாக இருக்கிறார்கள்
Chapter 2
அத்தியாயம்– 2
நடுநிலையான தேவனின் நியாயத்தீர்ப்பு
1 ஆகவே மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே நீ யாரானாலும் சரி சாக்குப்போக்குச் சொல்லமுடியாது நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ அவைகளை நீயும் செய்கிறதினால் நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைநீயே குற்றவாளியாக்குகிறாய் 2 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம் 3 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்த்தும் அவைகளையே செய்கிறவனே நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறாயோ 4 அல்லது தேவனுடைய தயவு நீ மனம்திரும்புவதற்கு உன்னை நடத்துகிறதென்று தெரியாமல் அவருடைய தயவு பொறுமை நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ 5 உன் மனதின் கடினத்திற்கும் மனம்திரும்பாத இருதயத்திற்கும் தகுந்தபடி தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபத்தின் தண்டனை நாளிலே உனக்காகக் கோபத்தினைக் குவித்துக்கொள்ளுகிறாயே 6 தேவன் அவனவனுடைய செய்கைகளுக்குத் தகுந்தபடி அவனவனுக்குப் பலன் கொடுப்பார் 7 சோர்ந்துபோகாமல் நல்ல செயல்களைச்செய்து மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுப்பார் 8 சண்டைக்காரர்களாக இருந்து சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல் அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ தேவனுடைய உக்கிரமான கோபம் வரும் 9 முதலில் யூதர்களிலும் பின்பு கிரேக்கர்களிலும் பொல்லாப்பு செய்கிற எந்தவொரு மனிதனுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும் 10 முதலில் யூதர்களிலும் பின்பு கிரேக்கர்களிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும் 11 தேவனிடம் பட்சபாதம் இல்லை 12 எவர்கள் நியாயப்பிரமாணம் இல்லாமல் பாவம் செய்கிறார்களோ அவர்கள் நியாயப்பிரமாணம் இல்லாமல் கெட்டுப்போவார்கள் எவர்கள் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டவர்களாகப் பாவம் செய்கிறார்களோ அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே நியாயத்தீர்ப்பு அடைவார்கள் 13 நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்குமுன்பாக நீதிமான்களாவதில்லை நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள் 14 அன்றியும் நியாயப்பிரமாணம் இல்லாத யூதரல்லாதோர் சுபாவமாக நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது நியாயப்பிரமாணம் இல்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாக இருக்கிறார்கள் 15 அவர்களுடைய மனச்சாட்சியும் சாட்சியிடுகிறதினாலும் குற்றம் உண்டு குற்றம் இல்லை என்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றை ஒன்று தீர்க்கிறதினாலும் நியாயப்பிரமாணத்திற்கு தகுந்த செயல்கள் தங்களுடைய இருதயங்களில் எழுதியிருக்கிறது என்று காண்பிக்கிறார்கள் 16 என்னுடைய நற்செய்தியின்படியே தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனிதர்களுடைய இரகசியங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும் 17 நீ யூதனென்று பெயர்பெற்று நியாயப்பிரமாணத்தில் நிலைத்திருந்து தேவனைக்குறித்து மேன்மைபாராட்டி 18 நியாயப்பிரமாணத்தினால் உபதேசிக்கப்பட்டவனாக அவருடைய விருப்பத்தை அறிந்து நன்மை எது தீமை எது என்று தெரிந்துகொள்கிறாயே 19 நீ உன்னைக் குருடர்களுக்கு வழிகாட்டியாகவும் இருளில் இருப்பவர்களுக்கு வெளிச்சமாகவும் 20 பேதைகளுக்குப் போதகனாகவும் குழந்தைகளுக்கு ஆசிரியராகவும் நியாயப்பிரமாணத்தின் அறிவையும் சத்தியத்தையும் காட்டிய சட்டமுடையவனாகவும் நினைக்கிறாயே 21 இப்படியிருக்க மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்கு நீயே போதிக்காமல் இருக்கலாமா திருடக்கூடாது என்று பிரசங்கம் பண்ணுகிற நீ திருடலாமா 22 விபசாரம் செய்யக்கூடாது என்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையடிக்கலாமா 23 நியாயப்பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறி நடந்து தேவனைக் கனவீனம்பண்ணலாமா 24 எழுதியிருக்கிறபடி தேவனுடைய நாமம் யூதரல்லாதவர்களுக்குள்ளே உங்கள் மூலமாக அவமதிக்கப்படுகிறதே 25 நீ நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்து நடந்தால் விருத்தசேதனம் பிரயோஜனமுள்ளதுதான் நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்தால் உன் விருத்தசேதனம் விருத்தசேதனமில்லையே 26 மேலும் விருத்தசேதனமில்லாதவன் நியாயப்பிரமாணத்திற்குரிய நீதிகளைக் கைக்கொண்டு நடந்தால் அவனுடைய விருத்தசேதனமில்லாமை விருத்தசேதனம் என்று எண்ணப்படுமல்லவா 27 சுபாவத்தின்படி விருத்தசேதனமில்லாதவனாக இருந்தும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறவனாக இருந்தால் அவன் வேத எழுத்தும் விருத்தசேதனமும் உள்ளவனாக இருந்தும் நியாயப்பிரமாணத்தை மீறுகிற உன்னைக் குற்றப்படுத்துவானே 28 எனவே வெளிப்புறமாக யூதனானவன் யூதன் இல்லை வெளிப்புறமாக சரீரத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனம் இல்லை 29 உள்ளத்திலே யூதனானவனே யூதன் எழுத்தின்படி உண்டாகாமல் ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம் இப்படிப்பட்டவனுக்கு வரும் புகழ்ச்சி மனிதராலே உண்டாகவில்லை தேவனாலே உண்டாயிருக்கிறது
Chapter 3
அத்தியாயம்– 3
தேவனுடைய உண்மை
1 இப்படியானால் யூதனுடைய மேன்மை என்ன விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன 2 அது எல்லாவிதத்திலும் உயர்ந்ததாக இருக்கிறது தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே 3 சிலர் விசுவாசிக்காமற்போனாலும் என்ன அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை ஒன்றுமில்லாமல் ஆக்குமா 4 அப்படியாக்காது நீர் உம்முடைய வசனங்களில் நீதிமானாக விளங்கவும் உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியானது என்று எழுதியிருக்கிறபடி தேவனே சத்தியவான் என்றும் எந்த மனிதனும் பொய்யன் என்றும் சொல்வோமாக 5 நான் மனிதர்கள் பேசுகிறதுபோலப் பேசுகிறேன் நம்முடைய அநீதி தேவனுடைய நீதியைக் காண்பித்தால் என்னசொல்லுவோம் கோபத்தைக் காட்டுகிற தேவன் அநீதி உள்ளவராக இருக்கிறார் என்று சொல்லலாமா 6 அப்படிச் சொல்லக்கூடாது அப்படிச்சொன்னால் தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பது எப்படி 7 அன்றியும் என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால் இனி நான் பாவி என்று தீர்க்கப்படுவது ஏன் 8 நன்மை வருவதற்காகத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாம் அல்லவா நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்கள் என்றும் சிலர் எங்களை அவமதிக்கிறார்களே அப்படிப் போதிக்கிறவர்கள்மேல் வரும் தண்டனை நீதியாக இருக்கும் 9 ஆனாலும் என்ன அவர்களைவிட நாங்கள் விசேஷமானவர்களா கொஞ்சம்கூட விசேஷமானவர்கள் இல்லை யூதர்கள் கிரேக்கர்கள் எல்லோரும் பாவத்திற்கு உட்பட்டவர்கள் என்பதை முன்பே வெளிப்படுத்தினோமே 10 அப்படியே ஒருவன்கூட நீதிமான் இல்லை 11 உணர்வுள்ளவன் இல்லை தேவனைத் தேடுகிறவன் இல்லை 12 எல்லோரும் வழிதவறி ஒன்றாகக் கெட்டுப்போனார்கள் நன்மைசெய்கிறவன் இல்லை ஒருவன்கூட இல்லை 13 அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட சவக்குழி தங்களுடைய நாக்குகளால் ஏமாற்றுகிறார்கள் அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது 14 அவர்கள் வாய் சபிக்கிறதினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது 15 அவர்கள் கால்கள் இரத்தம் சிந்துகிறதற்கு அலைகிறது 16 நாசமும் உபத்திரவமும் அவர்கள் வழிகளில் இருக்கிறது 17 சமாதான வழியை அவர்கள் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள் 18 அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயம் இல்லை என்று எழுதியிருக்கிறதே 19 மேலும் வாய்கள் எல்லாம் அடைக்கப்படுவதற்கும் உலகத்தார் எல்லோரும் தேவனுடைய தண்டனைத்தீர்ப்புக்கு உள்ளானவர்களாவதற்கும் நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறது என்று தெரிந்திருக்கிறோம் 20 இப்படியிருக்க பாவத்தைத் தெரிந்துகொள்ளுகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறதினால் எந்த மனிதனும் நியாயப்பிரமாணத்தின் செயல்களினாலே தேவனுக்குமுன்பாக நீதிமானாக்கப்படுவது இல்லை 21 இப்படியிருக்க நியாயப்பிரமாணம் இல்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது அதற்கு நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியாக இருக்கிறது 22 அது இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும் விசுவாசத்தினாலே வரும் தேவநீதியே விசுவாசிக்கிற எல்லோருக்குள்ளும் எவர்கள் மேலும் அது வரும் வித்தியாசமே இல்லை 23 எல்லோரும் பாவம்செய்து தேவமகிமை இல்லாதவர்களாகி 24 இலவசமாக அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள் 25 தேவன் பொறுமையாக இருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களை அவர் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிப்பதற்காகவும் தாம் நீதியுள்ளவரும் இயேசுவிடம் விசுவாசமாக இருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாக காண்பிப்பதற்காகவும் இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிப்பதற்காகவும் 26 கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தை விசுவாசிக்கும் விசுவாசத்தினாலே வரும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார் 27 இப்படியிருக்க மேன்மைபாராட்டுவது எங்கே அது நீக்கப்பட்டது எந்தப் பிரமாணத்தினாலே செய்கையின் பிரமாணத்தினாலா இல்லை விசுவாசப்பிரமாணத்தினாலே 28 எனவே மனிதன் நியாயப்பிரமாணத்தின் செயல்கள் இல்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்மானிக்கிறோம் 29 தேவன் யூதர்களுக்கு மட்டுமா தேவன் யூதரல்லாதோர்களுக்கும் தேவனல்லவா ஆம் யூதரல்லாதோர்களுக்கும் அவர் தேவன்தான் 30 விருத்தசேதனம் உள்ளவர்களை விசுவாசத்தினாலும் விருத்தசேதனம் இல்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாகவும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே 31 அப்படியானால் விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை ஒன்றுமில்லாமல் ஆக்குகிறோமா அப்படி இல்லை நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே
Chapter 4
அத்தியாயம்– 4
ஆபிரகாம் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல்
1 அப்படியானால் நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் சரீரத்தின்படி என்னத்தைக் கண்டுபிடித்தான் என்று சொல்லுவோம் 2 ஆபிரகாம் செயல்களினாலே நீதிமானாக்கப்பட்டான் என்றால் மேன்மைபாராட்ட அவனுக்குக் காரணம் உண்டு ஆனால் தேவனுக்குமுன்பாக மேன்மைபாராட்டமுடியாது 3 வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது 4 வேலை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபை என்று எண்ணப்படாமல் கடன் என்று எண்ணப்படும் 5 ஒருவன் செயல்களைச் செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடம் விசுவாசம் வைக்கிறவனாக இருந்தால் அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும் 6 அந்தப்படி செயல்கள் இல்லாமல் தேவனாலே நீதிமான் என்று எண்ணப்படுகிற மனிதனுடைய பாக்கியத்தைக் காண்பிப்பதற்காக 7 எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ அவர்கள் பாக்கியவான்கள் 8 எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான் 9 இந்தப் பாக்கியம் விருத்தசேதனம் உள்ளவனுக்குமட்டும் வருமோ அல்லது விருத்தசேதனம் இல்லாதவனுக்கும் வருமோ ஆபிரகாமுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறோமே 10 அது எப்பொழுது அவனுக்கு அப்படி எண்ணப்பட்டது அவன் விருத்தசேதனம் உள்ளவனாக இருந்தபோதா அல்லது விருத்தசேதனம் இல்லாதவனாக இருந்தபோதா விருத்தசேதனம் உள்ளவனாக இருந்தபோது இல்லை விருத்தசேதனம் இல்லாதவனாக இருந்தபோதே 11 மேலும் விருத்தசேதனம் இல்லாத காலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான் விருத்தசேதனம் இல்லாதவர்களாக விசுவாசிக்கிற எல்லோருக்கும் நீதி எண்ணப்படுவதற்காக அவர்களுக்கு அவன் தகப்பனாக இருப்பதற்கும் 12 விருத்தசேதனத்தைப் பெற்றவர்களாக மட்டுமில்லை நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் விருத்தசேதனம் இல்லாத காலத்தில் அடைந்த விசுவாசமாகிய அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களாகவும் இருக்கிறவர்களுக்குத் தகப்பனாக இருப்பதற்கும் அந்த அடையாளத்தைப் பெற்றான் 13 அன்றியும் உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்கோ அல்லது அவன் வம்சத்திற்கோ நியாயப்பிரமாணத்தினால் கிடைக்காமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது 14 நியாயப்பிரமாணத்தைச் சேர்ந்தவர்கள் வாரிசுகளானால் விசுவாசம் வீணாகப்போகும் வாக்குத்தத்தமும் இல்லாமல்போகும் 15 மேலும் நியாயப்பிரமாணம் கோபத்தை உண்டாக்குகிறது நியாயப்பிரமாணம் இல்லை என்றால் கீழ்ப்படியாமையும் இல்லை 16 எனவே சுதந்திரமானது கிருபையினால் உண்டாகிறதாக இருப்பதற்காக அது விசுவாசத்தினாலே வருகிறது நியாயப்பிரமாணத்தைச் சேர்ந்த வம்சத்தினர்களுக்குமட்டும் இல்லை நம் எல்லோருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சேர்ந்தவர்களான எல்லா வம்சத்தினர்களுக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாக இருப்பதற்காக அப்படி வருகிறது 17 அநேக தேசமக்களுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி அவன் தான் விசுவாசித்தவருமாக மரித்தோரை உயிரோடு எழுப்பி இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல அழைக்கிறவருமாக இருக்கிற தேவனுக்குமுன்பாக நம்மெல்லோருக்கும் தகப்பன் ஆனான் 18 உன் வம்சம் இவ்வளவாக இருக்கும் என்று சொல்லப்பட்டபடியே தான் அநேக தேசமக்களுக்கு தகப்பனாவதை நம்புகிறதற்கு வழியில்லாதிருந்தும் அதை நம்பிக்கையோடு விசுவாசித்தான் 19 அவன் விசுவாசத்திலே பலவீனமாக இருக்கவில்லை அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாக இருக்கும்போது தன் சரீரம் செத்துப்போனதையும் சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் நினைக்காமல் இருந்தான் 20 தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாகச் சந்தேகப்படாமல் 21 தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராக இருக்கிறார் என்று முழுநிச்சயமாக நம்பி தேவனை மகிமைப்படுத்தி விசுவாசத்தில் வல்லவன் ஆனான் 22 எனவே அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது 23 அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்பது அவனுக்காகமட்டும் இல்லை நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது 24 நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும் 25 அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும் நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்
Chapter 5
அத்தியாயம்– 5
விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்படுதல்
1 இந்தவிதமாக நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறதினால் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவனிடம் சமாதானம் பெற்றிருக்கிறோம் 2 அவர் மூலமாக நாம் இந்தக் கிருபைக்குள் பிரவேசிக்கும் பாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து தேவமகிமையை அடைவோம் என்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம் 3 அதுமட்டும் இல்லை உபத்திரவம் பொறுமையையும் பொறுமை பரீட்சையையும் பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறது என்று நாங்கள் அறிந்து 4 உபத்திரவங்களிலும் மேன்மைபாராட்டுகிறோம் 5 மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியானவராலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறதினால் அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது 6 அன்றியும் நாம் பெலன் இல்லாதவர்களாக இருக்கும்போதே குறித்தக் காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரர்களுக்காக மரித்தார் 7 நீதிமானுக்காக ஒருவன் இறப்பது அரிது நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான் 8 நாம் பாவிகளாக இருக்கும்போது கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த அவரது அன்பை நிரூபிக்கிறார் 9 இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க தேவனுடைய கோபத்திற்குத் தப்பி அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமே 10 நாம் தேவனுக்கு பகைவர்களாக இருக்கும்போது அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவரோடு ஒப்புரவாக்கப்பட்டோம் என்றால் ஒப்புரவாக்கப்பட்டப்பின்பு நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமே 11 அதுமட்டும் இல்லாமல் இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாக நாம் தேவனுக்குள் களிகூறுகிறோம் 12 இப்படியாக ஒரே மனிதனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே நுழைந்ததுபோலவும் எல்லா மனிதர்களும் பாவம் செய்ததினால் மரணம் எல்லோருக்கும் வந்ததுபோலவும் இதுவும் ஆனது 13 நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்பே பாவம் உலகத்தில் இருந்தது நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது 14 அப்படியிருந்தும் மரணமானது ஆதாம் முதல் மோசே வரைக்கும் ஆதாமின் கீழ்ப்படியாமைக்கு இணையாகப் பாவம் செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது அந்த ஆதாம் பின்பே வந்தவருக்கு முந்தின அடையாளமானவன் 15 ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானது இல்லை எப்படியென்றால் ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனிதனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாகப் பெருகியிருக்கிறது 16 மேலும் ஒருவன் பாவம் செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவிற்கு ஒப்பானது இல்லை அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினால் தண்டனைக்குரியதாக இருந்தது கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்குரியதாக இருக்கிறது 17 அல்லாமலும் ஒருவனுடைய மீறுதலினாலே அந்த ஒருவன்மூலமாக மரணம் ஆண்டுகொண்டிருக்க கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்கள் என்பது அதிக நிச்சயமே 18 எனவே ஒரே மீறுதலினாலே எல்லா மனிதர்களுக்கும் தண்டனைக்குரிய தீர்ப்பு உண்டானதுபோல ஒரே நீதியினாலே எல்லா மனிதர்களுக்கும் ஜீவனைக் கொடுக்கும் நீதிக்குரிய தீர்ப்பு உண்டானது 19 அன்றியும் ஒரே மனிதனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள் 20 மேலும் மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது அப்படியிருந்தும் பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாகப் பெருகினது 21 ஆதலால் பாவம் மரணத்தை ஆண்டுகொண்டதுபோல கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக நீதியினாலே நித்தியஜீவனை ஆண்டுகொண்டது
Chapter 6
அத்தியாயம்– 6
பாவத்தினால் மரணம்
1 ஆகவே என்னசொல்லுவோம் கிருபை பெருகுவதற்காகப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா சொல்லக்கூடாதே 2 பாவத்திற்கு மரித்த நாம் இனி அதிலே எப்படி வாழ்வோம் 3 கிறிஸ்து இயேசுவிற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாம் அனைவரும் அவருடைய மரணத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமல் இருக்கிறீர்களா 4 மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டதுபோல நாமும் புதிய ஜீவனுள்ளவர்களாக நடந்துகொள்வதற்கு அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவோடு அடக்கம் பண்ணப்பட்டோம் 5 ஆகவே அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால் அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம் 6 நாம் இனிப் பாவத்திற்கு அடிமையாக இல்லாதபடிக்கு பாவசரீரம் ஒழிந்துபோவதற்காக நம்முடைய பழைய மனிதன் அவரோடு சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம் 7 மரித்தவன் பாவத்திற்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே 8 எனவே கிறிஸ்துவோடு நாம் மரித்தோம் என்றால் அவரோடு பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம் 9 மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த கிறிஸ்து இனி இறப்பதில்லை என்று அறிந்திருக்கிறோம் மரணம் இனி அவரை ஆண்டுகொள்ளுவதில்லை 10 அவர் மரித்தது பாவத்திற்கென்று ஒரேமுறை மரித்தார் அவர் பிழைத்திருக்கிறது தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார் 11 அப்படியே நீங்களும் உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள் 12 ஆகவே நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படிவதற்காக மரணத்திற்குரிய உங்களுடைய சரீரத்தில் பாவம் ஆளுகை செய்யாமல் இருக்கட்டும் 13 நீங்கள் உங்களுடைய சரீர உறுப்புகளை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடுக்காமல் உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து உங்களுடைய சரீர உறுப்புகளை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள் 14 நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்பட்டிருக்கிறதினால் பாவம் உங்களை மேற்கொள்ளமுடியாது 15 இதினால் என்ன நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறதினால் பாவம் செய்யலாமா செய்யக்கூடாதே 16 மரணத்திற்குரிய பாவத்திற்கானாலும் நீதிக்குரிய கீழ்ப்படிதலுக்கானாலும் எதற்குக் கீழ்ப்படிவதற்காக உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ அதற்கே அடிமைகளாக இருக்கிறீர்கள் என்று தெரியாமல் இருக்கிறீர்களா 17 முன்பு நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாக இருந்தும் இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாகக் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம் 18 பாவத்திலிருந்து நீங்கள் விடுதலையாக்கப்பட்டு நீதிக்கு அடிமைகளானீர்கள் 19 உங்களுடைய சரீர பலவீனத்தினால் மனிதர்கள் பேசுகிறதுபோலப் பேசுகிறேன் அக்கிரமத்தைச் செய்வதற்காக முன்பே நீங்கள் உங்களுடைய சரீர உறுப்புகளை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல இப்பொழுது பரிசுத்தமானதைச் செய்வதற்காக உங்களுடைய சரீர உறுப்புகளை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள் 20 பாவத்திற்கு நீங்கள் அடிமைகளாக இருந்தகாலத்தில் நீதிக்கு விலகினவர்களாக இருந்தீர்கள் 21 இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தெரிகிற காரியங்களினாலே அந்தகாலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது அவைகளின் முடிவு மரணமே 22 இப்பொழுது நீங்கள் பாவத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு தேவனுக்கு அடிமைகளானதினால் பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன் முடிவோ நித்தியஜீவன் 23 பாவத்தின் சம்பளம் மரணம் தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்
Chapter 7
அத்தியாயம்– 7
நியாயப்பிரமாணத்தின் முடிவு
1 நியாயப்பிரமாணத்தை தெரிந்திருக்கிறவர்களோடு பேசுகிறேன் சகோதரர்களே ஒரு மனிதன் உயிரோடிருக்கும்வரைக்கும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறது என்று தெரியாமல் இருக்கிறீர்களா 2 அது எப்படியென்றால் கணவனையுடைய ஒரு பெண் தன் கணவன் உயிரோடிருக்கும்வரை நியாயப்பிரமாணத்தின்படி அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள் கணவன் மரித்தபின்பு கணவனைப்பற்றிய பிரமாணத்திலிருந்து விடுதலையாகி இருக்கிறாள் 3 ஆகவே கணவன் உயிரோடிருக்கும்போது அவள் வேறொரு மனிதனை திருமணம்செய்தால் அவள் விபசாரி என்று சொல்லப்படுவாள் ஆனால் கணவன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்திலிருந்து விடுதலையானபடியால் வேறொரு மனிதனை திருமணம் செய்தாலும் அவள் விபசாரி இல்லை 4 அதுபோல என் சகோதரர்களே நீங்கள் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி தேவனுக்கென்று பலன் கொடுப்பதற்காக கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தவர்களானீர்கள் 5 நாம் சரீரத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்குரிய பலன்களைக் கொடுக்கக்கூடியதாக நம்முடைய சரீர உறுப்புகளிலே பெலன்செய்தது 6 இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படி இல்லை புதுமையான ஆவியின்படி ஊழியம் செய்வதற்காக நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்திற்கு நாம் மரித்தவர்களாகி அதில் இருந்து விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம் 7 எனவே என்னசொல்லுவோம் நியாயப்பிரமாணம் பாவமோ இல்லையே பாவம் என்னவென்று நியாயப்பிரமாணத்தினால்தான் நான் தெரிந்துகொண்டேனேதவிர மற்றப்படி இல்லை இச்சிக்காமல் இருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால் இச்சை பாவம் என்று நான் தெரியாமல் இருப்பேனே 8 பாவமானது கட்டளையினாலே வாய்ப்பைப்பெற்று எல்லாவிதமான இச்சைகளையும் எனக்குள் நடப்பித்தது நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் பாவம் செத்ததாக இருக்குமே 9 முன்பே நியாயப்பிரமாணம் இல்லாதவனாக இருந்தபோது நான் ஜீவனுள்ளவனாக இருந்தேன் கட்டளை வந்தபோது பாவம் உயிர்கொண்டது நான் மரித்தவனானேன் 10 இப்படியிருக்க ஜீவனுக்குரிய கட்டளை எனக்கு மரணத்திற்குரியதாக இருப்பதைப் பார்த்தேன் 11 பாவமானது கட்டளையினாலே வாய்ப்பைப்பெற்று என்னை ஏமாற்றியது அதினாலே என்னைக் கொன்றது 12 எனவே நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளது கட்டளையும் பரிசுத்தமாகவும் நீதியாகவும் நன்மையாகவும் இருக்கிறது 13 இப்படியிருக்க நன்மையானது எனக்கு மரணமானதோ அப்படி இல்லை பாவமே எனக்கு மரணமானது பாவம் கட்டளையினாலே அதிக பாவமுள்ளதாவதற்கும் அது நன்மையானதைக்கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே பாவமாகவே இருக்கும்படிக்கும் அப்படியானது 14 மேலும் நமக்குத் தெரிந்திருக்கிறபடி நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாக இருக்கிறது நானோ பாவத்திற்குக் கீழாக விற்கப்பட்டு சரீரத்திற்குரியவனாக இருக்கிறேன் 15 எப்படியென்றால் நான் செய்கிறது எனக்கே புரியவில்லை நான் விரும்புகிறதைச் செய்யாமல் நான் வெறுக்கிறதையே செய்கிறேன் 16 இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாக இருக்க நியாயப்பிரமாணம் நல்லது என்று ஏற்றுக்கொள்ளுகிறேனே 17 எனவே நான் இல்லை எனக்குள் வாழ்கிற பாவமே அப்படிச் செய்கிறது 18 அது எப்படியென்றால் என்னிடம் அதாவது என் சரீரத்தில் நன்மை வாழ்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன் நன்மை செய்யவேண்டும் என்கிற விருப்பம் என்னிடம் இருக்கிறது நன்மை செய்வதோ என்னிடம் இல்லை 19 எனவே நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல் விரும்பாத தீமையையே செய்கிறேன் 20 அதன்படி நான் விரும்பாததை நான் செய்தால் நான் இல்லை எனக்குள் வாழ்கிற பாவமே அப்படிச் செய்கிறது 21 ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடம் தீமை உண்டு என்கிற ஒரு பிரமாணத்தைப் பார்க்கிறேன் 22 உள்ளான மனிதனுக்குத் தகுந்தபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாக இருக்கிறேன் 23 ஆனாலும் என் மனதின் பிரமாணத்திற்கு எதிராகப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் உறுப்புகளில் இருக்கிறதைப் பார்க்கிறேன் அது என் உறுப்புகளில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்திற்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது 24 நிர்பந்தமான மனிதன் நான் இந்த மரணசரீரத்திலிருந்து யார் என்னை விடுதலையாக்குவார் 25 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன் எனவே நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்கும் சரீரத்தினாலே பாவப்பிரமாணத்திற்கும் சேவை செய்கிறேன்
Chapter 8
அத்தியாயம்– 8
ஆவியானவரின் பிரமாணம்
1 ஆனபடியால் கிறிஸ்து இயேசுவிற்கு உட்பட்டவர்களாக இருந்து சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிறவர்களுக்கு தண்டனைத்தீர்ப்பு இல்லை 2 ஜீவனுடைய ஆவியானவரின் பிரமாணம் கிறிஸ்து இயேசுவிற்குள் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்திலிருந்து விடுதலையாக்கினதே 3 அது எப்படியென்றால் சரீரத்தினாலே பலவீனமாக்கப்பட்ட நியாயப்பிரமாணம் செய்யமுடியாததை தேவனே செய்வதற்காக தம்முடைய குமாரனைப் பாவசரீரத்தின் சாயலாகவும் பாவத்தை நீக்கும் பலியாகவும் அனுப்பி சரீரத்திலே பாவத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்த்தார் 4 சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிற நம்மிடம் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறுவதற்காகவே அப்படிச் செய்தார் 5 அன்றியும் சரீரத்தின்படி நடக்கிறவர்கள் சரீரத்திற்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிறவர்கள் ஆவியானவருக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள் 6 சரீரசிந்தை மரணம் ஆவியானவரின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாகும் 7 எப்படியென்றால் சரீரசிந்தை தேவனுக்கு எதிரான பகை அது தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமலும் கீழ்ப்படியமுடியாமலும் இருக்கிறது 8 சரீரத்திற்கு உட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாக இருக்கமாட்டார்கள் 9 தேவனுடைய ஆவியானவர் உங்களுக்குள் இருந்தால் நீங்கள் சரீரத்திற்கு உட்பட்டவர்களாக இல்லாமல் ஆவியானவருக்கு உட்பட்டவர்களாக இருப்பீர்கள் கிறிஸ்துவின் ஆவியானவர் இல்லாதவன் அவருடையவன் இல்லை 10 மேலும் கிறிஸ்து உங்களுக்குள் இருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் இறந்ததாகவும் ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாகவும் இருக்கும் 11 அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவருடைய ஆவியானவர் உங்களுக்குள் இருந்தால் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவர் உங்களுக்குள் வாழ்கிற தம்முடைய ஆவியானவராலே மரணத்திற்குரிய உங்களுடைய சரீரங்களையும் உயிர்ப்பிப்பார் 12 எனவே சகோதரர்களே சரீரத்தின்படி பிழைப்பதற்கு நாம் சரீரத்திற்குக் கடனாளிகள் இல்லை 13 சரீரத்தின்படி பிழைத்தால் இறப்பீர்கள் ஆவியானவராலே சரீரத்தின் செயல்களை அழித்தால் பிழைப்பீர்கள் 14 மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியானவராலே நடத்தப்படுகிறார்களோ அவர்கள் தேவனுடைய குமாரர்களாக இருக்கிறார்கள் 15 அப்படியே திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல் ஆவியானவரால் அப்பா பிதாவே என்று கூப்பிடக்கூடிய பிள்ளை என்கிற உரிமையைப் பெற்றீர்கள் 16 நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம் என்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனே சாட்சிக் கொடுக்கிறார் 17 நாம் பிள்ளைகளானால் வாரிசுகளுமாமே தேவனுடைய வாரிசுகளும் கிறிஸ்துவிற்கு உடன் வாரிசுகளுமாமே கிறிஸ்துவோடு நாம் மகிமைப்படுவதற்காக அவரோடு பாடுபட்டால் அப்படி ஆகும் 18 ஆதலால் இந்தக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடம் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடக்கூடியவைகள் அல்லவென்று எண்ணுகிறேன் 19 மேலும் தேவனுடைய குமாரர்கள் வெளிப்படுத்தப்படுவதற்காக தேவனுடைய படைப்புகள் அதிக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறது 20 அது என்னவென்றால் படைப்புகள் அழிவிற்குரிய அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடு 21 அந்தப் படைப்புகள் சொந்த இஷ்டத்தினாலே இல்லை கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது 22 எனவே நமக்குத் தெரிந்திருக்கிறபடி இதுவரைக்கும் படைப்புகள் எல்லாம் ஒன்றாகத் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது 23 அதுவும் இல்லாமல் ஆவியானவரின் முதற்பலன்களைப் பெற்ற நாமும் நம்முடைய சரீர மீட்பாகிய பிள்ளை என்கிற உரிமை வருகிறதற்குக் காத்திருந்து நமக்குள்ளே தவிக்கிறோம் 24 அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் பார்க்கப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கை இல்லை ஒருவன் தான் பார்க்கிறதை நம்பவேண்டியது என்ன 25 நாம் பார்க்காததை நம்பினோமானால் அது வருகிறதற்குப் பொறுமையோடு காத்திருப்போம் 26 அப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார் நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியது என்னவென்று தெரியாமல் இருக்கிறதினால் ஆவியானவர்தாமே சொல்லிமுடியாத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார் 27 ஆவியானவர் தேவனுடைய விருப்பத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல்செய்கிறதினால் இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியானவரின் சிந்தை என்னவென்று அறிவார் 28 அன்றியும் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாக தேவனிடம் அன்பாக இருக்கிறவர்களுக்கு எல்லாம் நன்மைக்குரியவைகளாக நடக்கிறது என்று அறிந்திருக்கிறோம் 29 தம்முடைய குமாரன் அநேக சகோதரர்களுக்குள்ளே முதற்பேறானவராக இருப்பதற்காக தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக இருப்பதற்கு முன்குறித்திருக்கிறார் 30 எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்தும் இருக்கிறார் எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியும் இருக்கிறார் எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியும் இருக்கிறார் 31 இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம் தேவன் நம்முடைய பட்சத்தில் இருந்தால் நமக்கு எதிராக இருப்பவன் யார் 32 தம்முடைய சொந்தக்குமாரன் என்றும் பார்க்காமல் நம்மெல்லோருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர் அவரோடு சேர்த்து மற்ற எல்லாவற்றையும் நமக்குக் கொடுக்காமல் இருப்பது எப்படி 33 தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார் தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர் 34 தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார் கிறிஸ்துவே மரித்தவர் அவரே உயிரோடு எழுந்தும் இருக்கிறவர் அவரே தேவனுடைய வலதுபக்கத்திலும் இருக்கிறவர் நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே 35 உமக்காக எந்தநேரமும் கொல்லப்படுகிறோம் அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நடந்தாலும் 36 கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார் உபத்திரவமோ வியாகுலமோ துன்பமோ பசியோ நிர்வாணமோ நாசமோசமோ பட்டயமோ 37 இவைகள் எல்லாவற்றிலேயும் நாம் நம்மேல் அன்பு வைத்திருக்கிறவராலே முற்றிலும் வெற்றி பெறுகிறவர்களாக இருக்கிறோமே 38 மரணமானாலும் ஜீவனானாலும் தேவதூதர்களானாலும் அதிகாரங்களானாலும் வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும் வரும்காரியங்களானாலும் 39 உயர்வானாலும் தாழ்வானாலும் வேறெந்தப் படைப்புகளானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமுடியாது என்று நம்பியிருக்கிறேன்
Chapter 9
அத்தியாயம்– 9
யூதர்களுக்காக பவுலின் வேதனை
1 எனக்கு அதிக துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது 2 நான் சொல்லுகிறது பொய்யல்ல கிறிஸ்துவிற்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்த ஆவியானவருக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாக இருக்கிறது 3 சரீரத்தின்படி என் இனத்தைச் சேர்ந்த என் சகோதரர்களுக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாகவேண்டுமென்று விரும்புவேனே 4 அவர்கள் இஸ்ரவேலர்களே புத்திரசுவிகாரமும் மகிமையும் உடன்படிக்கைகளும் நியாயப்பிரமாணமும் தேவ ஆராதனையும் வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே 5 முற்பிதாக்கள் அவர்களுடையவர்களே சரீரத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் மேலான தேவன் ஆமென் 6 தேவவசனம் நிறைவேறாமல்போனது என்று சொல்லக்கூடாது ஏனென்றால் இஸ்ரவேல் வம்சத்தார் எல்லோரும் இஸ்ரவேலர் இல்லையே 7 அவர்கள் ஆபிரகாமின் வம்சத்தினராக இருந்தாலும் அனைவரும் பிள்ளைகள் அல்லவே ஈசாக்கினிடம் உன் வம்சம் விளங்கும் என்று சொல்லியிருக்கிறதே 8 அது எப்படியென்றால் சரீரத்தின்படி பிள்ளைகள் ஆனவர்கள் தேவனுடைய பிள்ளைகள் அல்லவே வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகள் ஆனவர்களே அந்த வம்சம் என்று எண்ணப்படுகிறார்கள் 9 அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது குறித்த காலத்திலே வருவேன் அப்பொழுது சாராள் ஒரு மகனைப் பெறுவாள் என்பதே 10 இதுமட்டுமல்லாமல் நம்முடைய முற்பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது 11 குழந்தைகள் இன்னும் பிறக்காமலும் நன்மை தீமை ஒன்றும் செய்யாமல் இருக்கும்போது தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படி இருக்கிற அவருடைய தீர்மானம் செயல்களினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படி 12 மூத்தவன் இளையவனுக்கு ஊழியம் செய்வான் என்று அவளுக்கு சொல்லப்பட்டது 13 அப்படியே யாக்கோபை நேசித்து ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது 14 ஆகவே நாம் என்னசொல்லுவோம் தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா சொல்லக்கூடாதே 15 அவர் மோசேயைப் பார்த்து எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பமாக இருப்பேனோ அவன்மேல் இரக்கமாக இருப்பேன் எவன்மேல் உருக்கமாக இருக்க விருப்பமாக இருப்பேனோ அவன்மேல் உருக்கமாக இருப்பேன் என்றார் 16 ஆகவே விரும்புகிறவனாலும் இல்லை ஓடுகிறவனாலும் இல்லை இரங்குகிற தேவனாலே ஆகும் 17 மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடம் காண்பிப்பதற்காகவும் என்னுடைய பெயர் பூமியில் எங்கும் பிரசித்தமடைவதற்காகவும் உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனோடு சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது 18 எனவே எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பாமாக இருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாக இருக்கிறார் எவனைக் கடினப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார் 19 அப்படியானால் அவர் இன்னும் ஏன் குற்றம் கண்டுபிடிக்கிறார் அவருடைய விருப்பத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார் என்று என்னோடு சொல்லுவாய் 20 அப்படியானால் மனிதனே தேவனோடு எதிர்த்து வாக்குவாதம் செய்கிற நீ யார் உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கினவனைப் பார்த்து நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று சொல்லலாமா 21 மிதிக்கப்பட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்திற்காகவும் ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்திற்காகவும் செய்கிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ 22 தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும் தமது வல்லமையைத் தெரிவிக்கவும் 23 தாம் மகிமைக்காக ஆயத்தம்பண்ணின கிருபா பாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் செல்வத்தைத் தெரியப்படுத்தவும் விருப்பமாக அழிவிற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட கோபத்தின் தண்டனையின் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடு பொறுமையாக இருந்தால் உனக்கு என்ன 24 அவர் யூதர்களிலிருந்து மட்டுமல்ல யூதரல்லாத மக்களிடமிருந்து நம்மை அழைத்திருக்கிறாரே 25 அந்தப்படி எனக்கு மக்களாக இல்லாதவர்களை என்னுடைய மக்கள் என்றும் நேசிக்கப்படாமல் இருந்தவளை நேசிக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன் 26 நீங்கள் என்னுடைய மக்கள் இல்லை என்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள் என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது 27 அல்லாமலும் இஸ்ரவேல் மக்களுடைய எண்ணிக்கை கடற்கரை மணலைப்போல இருந்தாலும் மீதியாக இருப்பவர்கள்மட்டும் இரட்சிக்கப்படுவார்கள் என்றும் 28 அவர் நீதியோடு சீக்கிரமாகத் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார் கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார் என்றும் ஏசாயா இஸ்ரவேலரைக்குறித்துச் சொல்லுகிறான் 29 அல்லாமலும் ஏசாயா முன்பே சொன்னபடி சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு வம்சத்தைக்கூட மீதியாக வைக்காமல் இருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவைப்போல இருந்திருப்போம் 30 இப்படியிருக்க நாம் என்னசொல்லுவோம் நீதியைத் தேடாத யூதரல்லாத மக்கள் நீதியை அடைந்தார்கள் அது விசுவாசத்தினால் உண்டாகும் நீதியே 31 நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை 32 ஏனென்றால் அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல் நியாயப்பிரமாணத்தின் செயல்களினாலே தேடினதினால் அதை அடையவில்லை இடறுதற்கான கல்லில் இடறினார்கள் 33 இதோ இடறுதற்கான கல்லையும் தவறுகிறதற்கான கன்மலையையும் சீயோனில் வைக்கிறேன் அவரிடம் விசுவாசமாக இருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடி நடந்தது
Chapter 10
அத்தியாயம்– 10
1 சகோதரர்களே இஸ்ரவேல் மக்கள் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனிடம் செய்யும் விண்ணப்பமாகவும் இருக்கிறது 2 தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியம் உண்டு என்று அவர்களைக்குறித்துச் சாட்சி சொல்லுகிறேன் ஆனாலும் அது அறிவிற்குரிய வைராக்கியம் இல்லை 3 எப்படியென்றால் அவர்கள் தேவனுடைய நீதியை அறியாமல் தங்களுடைய சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறதினால் தேவனுடைய நீதிக்குக் கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள் 4 விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாக இருக்கிறார் 5 மோசே நியாயப்பிரமாணத்தினால் வரும் நீதியைக்குறித்து இவைகளை செய்கிற மனிதன் இவைகளால் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறான் 6 விசுவாசத்தினால் வரும் நீதியானது கிறிஸ்துவை இறங்கிவரப்பண்ணுவதற்காக பரலோகத்திற்கு ஏறுகிறவன் யார் 7 அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணுவதற்கு பாதாளத்திற்கு இறங்குகிறவன் யார் என்று உன் உள்ளத்திலே சொல்லாமல் இருப்பாயாக என்று சொல்லுகிறதும் அல்லாமல் 8 இந்த வார்த்தை உன் அருகில் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே 9 என்னவென்றால் கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு தேவன் அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார் என்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் 10 இருதயத்திலே விசுவாசிக்கிறதினால் நீதி உண்டாகும் வாயினாலே அறிக்கைபண்ணுகிறதினால் இரட்சிப்பு உண்டாகும் 11 அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவது இல்லை என்று வேதம் சொல்லுகிறது 12 யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை எல்லோருக்கும் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற எல்லோரையும் அளவில்லாமல் ஆசீர்வதிக்கிறவராக இருக்கிறார் 13 எனவே கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான் 14 அவரை விசுவாசிக்காதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள் அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள் பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள் 15 அனுப்பப்படவில்லை என்றால் எப்படிப் பிரசங்கிப்பார்கள் சமாதானத்தைச் சொல்லி நல்ல காரியங்களை நற்செய்தியாக அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே 16 ஆனாலும் நற்செய்திக்கு அவர்கள் எல்லோரும் கீழ்ப்படியவில்லை அதைக்குறித்து ஏசாயா கர்த்தாவே எங்கள் மூலமாகக் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான் 17 எனவே விசுவாசம் கேட்பதினாலே வரும் தேவனுடைய வசனத்தைக் கேட்பதினாலே விசுவாசம் வரும் 18 இப்படியிருக்க அவர்கள் கேள்விப்படவில்லையா என்று கேட்கிறேன் கேள்விப்பட்டார்கள் அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூமியின் கடைசிவரைக்கும் செல்லுகிறதே 19 இஸ்ரவேலர் அதை அறியவில்லையா என்று கேட்கிறேன் அறிந்தார்கள் முதலாவது மோசே என் மக்களாக இல்லாதவர்களைக் கொண்டு நான் உங்களுக்கு எரிச்சல் உண்டாக்குவேன் புத்தியீனமுள்ள மக்களாலே உங்களுக்குக் கோபமூட்டுவேன் என்றான் 20 அல்லாமலும் ஏசாயா என்னைத் தேடாதவர்களாலே கண்டுபிடிக்கப்பட்டேன் என்னைக் கேட்காதவர்களுக்கு என்னை வெளிப்படுத்தினேன் என்று தைரியத்தோடு சொல்லுகிறான் 21 இஸ்ரவேலரைக்குறித்தோ கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப் பேசுகிறவர்களுமாக இருக்கிற மக்களிடம் நாள்முழுவதும் என் கரங்களை நீட்டினேன் என்று அவன் சொல்லியிருக்கிறான்
Chapter 11
அத்தியாயம்– 11
இஸ்ரவேலரைத் தள்ளிவிடவில்லை
1 இப்படியிருக்க தேவன் தம்முடைய மக்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன் தள்ளிவிடவில்லையே நானும் ஆபிரகாமின் வம்சத்திலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன் 2 தேவன் தாம் முன்குறித்துக்கொண்ட தம்முடைய மக்களைத் தள்ளிவிடவில்லை எலியாவைக்குறித்துச் சொல்லிய இடத்தில் வேதம் சொல்லுகிறதை தெரியாமல் இருக்கிறீர்களா அவன் தேவனைப் பார்த்து 3 கர்த்தாவே உம்முடைய தீர்க்கதரிசிகளை அவர்கள் கொலைசெய்து உம்முடைய பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள் நான் ஒருவன்மட்டும் மீதியாக இருக்கிறேன் என் உயிரையும் வாங்கத் தேடுகிறார்களே என்று இஸ்ரவேலருக்கு எதிராக விண்ணப்பம் செய்தபோது 4 அவனுக்கு உண்டான தேவனுடைய பதில் என்ன பாகாலுக்கு முன்பாக முழங்கால்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாக வைத்தேன் என்பதே 5 அதுபோல இந்தக்காலத்திலும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாக இருக்கிறது 6 அது கிருபையினாலே உண்டாயிருந்தால் செயல்களினாலே உண்டாயிருக்காது அப்படியில்லை என்றால் கிருபையானது கிருபை இல்லையே அன்றியும் அது செயல்களினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாக இருக்காது அப்படியில்லை என்றால் செய்கையானது செய்கை இல்லையே 7 அப்படியானால் என்ன இஸ்ரவேலர் தேடுகிறதை அடையாமல் இருக்கிறார்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ அதை அடைந்திருக்கிறார்கள் மற்றவர்கள் இன்றைய நாள்வரை கடினப்பட்டிருக்கிறார்கள் 8 தூக்கத்தின் ஆவியையும் பார்க்காமல் இருக்கிற கண்களையும் கேட்காமல் இருக்கிற காதுகளையும் தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியானது 9 அன்றியும் அவர்களுடைய பந்தி அவர்களுக்குச் சுருக்கும் கண்ணியும் இடறுதற்கான கல்லும் பதிலுக்குப்பதில் கொடுப்பதுமாக இருக்கட்டும் 10 பார்க்காதபடிக்கு அவர்களுடைய கண்கள் இருள் அடையட்டும் அவர்களுடைய முதுகை எப்போதும் குனியப்பண்ணும் என்று தாவீதும் சொல்லியிருக்கிறான் 11 இப்படியிருக்க விழுந்துபோவதற்காகவா இடறினார்கள் என்று கேட்கிறேன் அப்படி இல்லையே அவர்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்புவதற்காக அவர்களுடைய தவறுதலினாலே யூதரல்லாத மக்களுக்கு இரட்சிப்பு கிடைத்தது 12 அவர்களுடைய தவறு உலகத்திற்கு செல்வமும் அவர்களுடைய குறைவு யூதரல்லாத மக்களுக்கு செல்வமாகவும் இருக்க அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாக அப்படியிருக்கும் 13 யூதரல்லாத மக்களாகிய உங்களோடு பேசுகிறேன் யூதரல்லாத மக்களுக்கு நான் அப்போஸ்தலனாக இருக்கிறதினாலே என் இனத்தார்களுக்குள்ளே நான் வைராக்கியத்தை எழுப்பி அவர்களில் சிலரை இரட்சிக்கவேண்டுமென்று 14 என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன் 15 அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாக இருக்க அவர்களை அங்கீகரித்துக்கொள்ளுதல் எப்படி இருக்கும் மரித்தோருக்கு ஜீவன் உண்டானதுபோல இருக்கும் அல்லவோ 16 மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாக இருந்தால் பிசைந்த மாவு முழுவதும் பரிசுத்தமாக இருக்கும் வேரானது பரிசுத்தமாக இருந்தால் கிளைகளும் பரிசுத்தமாக இருக்கும் 17 சில கிளைகள் முறித்துப் போடப்பட்டிருக்க காட்டு ஒலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்திற்கும் உடன்பங்காளியாக இருந்தால் 18 நீ அந்தக் கிளைகளுக்கு எதிராகப் பெருமைப்படாதே பெருமைப்பட்டால் நீ வேரைச் சுமக்காமல் வேர் உன்னைச் சுமக்கிறது என்று நினைத்துக்கொள் 19 நான் ஒட்டவைக்கப்படுவதற்கு அந்தக் கிளைகள் முறித்துப் போடப்பட்டது என்று சொல்லுகிறாயே 20 நல்லது அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப் போடப்பட்டன நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய் மேட்டிமைச் சிந்தையாக இல்லாமல் பயந்திரு 21 சுபாவக்கிளைகளை தேவன் தப்பவிடாமல் இருக்க உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாக இரு 22 எனவே தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார் விழுந்தவர்களிடம் கண்டிப்பையும் உன்னிடத்தில் தயவையும் காண்பித்தார் அந்தத் தயவிலே நிலைத்திருந்தால் உனக்குத் தயவு கிடைக்கும் நிலைக்காவிட்டால் நீயும் வெட்டப்பட்டுப் போவாய் 23 அன்றியும் அவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திராதிருந்தால் அவர்களும் ஒட்டவைக்கப்படுவார்கள் அவர்களை மீண்டும் ஒட்டவைக்கிறதற்கு தேவன் வல்லவராக இருக்கிறாரே 24 சுபாவத்தின்படி காட்டு ஒலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு சுபாவத்திற்கு எதிராக நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருந்தால் சுபாவக்கிளைகளாகிய அவர்கள் தங்களுடைய சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா 25 மேலும் சகோதரர்களே நீங்கள் உங்களையே புத்திமான்கள் என்று நினைக்காதபடி ஒரு இரகசியத்தை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்று இருக்கிறேன் அது என்னவென்றால் யூதரல்லாத மக்களுடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பகுதி மக்களுக்கு கடினமான மனது உண்டாயிருக்கும் 26 இப்படியே இஸ்ரவேல் மக்கள் அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள் மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து அவபக்தியை யாக்கோபைவிட்டு நீக்குவார் என்றும் 27 நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது இதுவே நான் அவர்களோடு செய்யும் உடன்படிக்கை என்றும் எழுதியிருக்கிறது 28 நற்செய்தியைக்குறித்து அவர்கள் உங்கள்நிமித்தம் பகைவர்களாக இருக்கிறார்கள் தெரிந்துகொள்ளுதலைக்குறித்து அவர்கள் முற்பிதாக்களினிமித்தம் நேசிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் 29 தேவனுடைய கிருபைவரங்களும் அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே 30 எனவே நீங்கள் முற்காலத்திலே தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருந்து இப்பொழுது அவர்களுடைய கீழ்ப்படியாமையினாலே இரக்கம் பெற்றிருக்கிறதுபோல 31 அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமல் இருந்தும் பின்பு உங்களுக்குக் கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம்பெறுவார்கள் 32 எல்லோர்மேலும் இரக்கமாக இருப்பதற்காக தேவன் எல்லோரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார் 33 ஆ தேவனுடைய செல்வம் ஞானம் அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாக இருக்கிறது அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளந்துபார்க்க முடியாதவைகள் அவருடைய வழிகள் ஆராய்ந்துபார்க்க முடியாதவைகள் 34 கர்த்தருடைய சிந்தையைத் தெரிந்துகொண்டவன் யார் அவருக்கு ஆலோசனைக்காரனாக இருந்தவன் யார் 35 தனக்குத் திரும்பக்கிடைக்கும் என்று முதலில் அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார் 36 எல்லாம் அவராலும் அவர் மூலமாகவும் அவருக்காகவும் இருக்கிறது அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக ஆமென்
Chapter 12
அத்தியாயம்– 12
தேவனுடைய கிருபைகள்
1 அப்படியிருக்க சகோதரர்களே நீங்கள் உங்களுடைய சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும் என்று தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன் இதுவே நீங்கள் செய்யும் புத்தியுள்ள ஆராதனை 2 நீங்கள் இந்த உலகத்திற்கேற்ற வேஷம் போடாமல் தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான விருப்பம் என்னவென்று பகுத்தறிவதற்காக உங்களுடைய மனம் புதிதாக மாறுகிறதினாலே மறுரூபமாகுங்கள் 3 அல்லாமலும் எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது உங்களில் யாராவது தன்னைக்குறித்து நினைக்கவேண்டிய அளவிற்கு அதிகமாக நினைக்காமல் அவனவனுக்கு தேவன் பகிர்ந்துகொடுத்த விசுவாச அளவின்படி தெளிந்த எண்ணம் உள்ளவனாக நினைக்கவேண்டும் 4 ஏனென்றால் நமக்கு ஒரே சரீரத்திலே அநேக உறுப்புகள் இருந்தும் எல்லா உறுப்புகளுக்கும் ஒரே வேலை இல்லாததைப்போல 5 அநேகராகிய நாமும் கிறிஸ்துவிற்குள் ஒரே சரீரமாக இருக்க ஒருவருக்கொருவர் உறுப்புகளாக இருக்கிறோம் 6 நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்கள் உள்ளவர்களாக இருக்கிறதினால் நம்மில் தீர்க்கதரிசனம் சொல்லுகிற வரத்தை உடையவன் விசுவாசப்பிரமாணத்தின்படி சொல்லட்டும் 7 ஊழியம் செய்கிறவன் ஊழியத்திலும் போதிக்கிறவன் போதிக்கிறதிலும் 8 புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் நிலைத்திருக்கவேண்டும் பகிர்ந்துகொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கட்டும் முதலாளியானவன் கவனமாக இருக்கவேண்டும் இரக்கம் செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யட்டும் 9 உங்களுடைய அன்பு மாயமில்லாமல் இருக்கட்டும் தீமையை வெறுத்து நன்மையைப் பிடித்துக்கொண்டிருங்கள் 10 சகோதர அன்பினாலே ஒருவர்மேல் ஒருவர் பாசமாக இருங்கள் மரியாதை கொடுக்கிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள் 11 அசதியாக இல்லாமல் எச்சரிக்கையாக இருங்கள் ஆவியிலே அனலாக இருங்கள் கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள் 12 நம்பிக்கையிலே சந்தோஷமாக இருங்கள் உபத்திரவத்திலே பொறுமையாக இருங்கள் ஜெபத்திலே உறுதியாக நிலைத்திருங்கள் 13 பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள் அந்நியர்களை உபசரியுங்கள் 14 உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள் ஆசீர்வதிக்கவேண்டுமேதவிர சபிக்காமல் இருங்கள் 15 சந்தோஷப்படுகிறவர்களோடு சந்தோஷப்படுங்கள் அழுகிறவர்களோடு அழுங்கள் 16 ஒருவரோடொருவர் ஒரேசிந்தை உள்ளவர்களாக இருங்கள் மேட்டிமையானவைகளைச் சிந்திக்காமல் தாழ்மையானவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள் உங்களை நீங்களே புத்திமான்கள் என்று நினைக்கவேண்டாம் 17 ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாமல் இருங்கள் எல்லா மனிதர்களுக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்யுங்கள் 18 உங்களால் முடிந்தவரை எல்லா மனிதர்களோடும் சமாதானமாக இருங்கள் 19 பிரியமானவர்களே பழிவாங்குதல் என்னுடையது நானே பதில்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதி இருக்கிறதினால் நீங்கள் பழிவாங்காமல் தேவனுடைய கோபத்தின் தண்டனைக்கு இடம்கொடுங்கள் 20 அன்றியும் உன் பகைவன் பசியாக இருந்தால் அவனுக்கு ஆகாரம் கொடு அவன் தாகமாக இருந்தால் அவனுக்கு ஏதாவது குடிக்கக்கொடு நீ இப்படிச் செய்வதினால் நெருப்புத் தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய் 21 நீ தீமையினாலே வெல்லப்படாமல் தீமையை நன்மையினாலே வெல்லு
Chapter 13
அத்தியாயம்– 13
அதிகாரத்திற்குக் கீழ்ப்படிதல்
1 எந்த மனிதனும் உயர் அதிகாரம் உள்ளவர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும் ஏனென்றால் தேவனாலேயல்லாமல் ஒரு அதிகாரமும் இல்லை உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது 2 எனவே அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான் அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே தண்டனையை வரவழைத்துக்கொள்கிறார்கள் 3 மேலும் அதிகாரிகள் நல்ல செயல்களுக்கு அல்ல தீய செயல்களுக்கே பயங்கரமாக இருக்கிறார்கள் எனவே நீ அதிகாரத்திற்குப் பயப்படாமல் இருக்கவேண்டுமானால் நன்மைசெய் அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும் 4 உனக்கு நன்மை உண்டாவதற்காக அவன் தேவனுடைய ஊழியக்காரனாக இருக்கிறான் நீ தீமைசெய்தால் பயந்திரு பட்டயத்தை அவன் வீணாகப் பிடித்திருக்கவில்லை தீமைசெய்கிறவன்மேல் கோபத்தின் தண்டனையை வரப்பண்ணுவதற்காக அவன் நீதியைச் செலுத்துகிற தேவனுடைய ஊழியக்காரனாக இருக்கிறானே 5 எனவே நீங்கள் கோபத்தின் தண்டனைக்காக மட்டுமில்லை மனச்சாட்சிக்காகவும் கீழ்ப்படியவேண்டும் 6 இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள் அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவனுடைய ஊழியக்காரர்களாக இருக்கிறார்களே 7 எனவே எல்லோருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள் யாருக்கு வரியைச் செலுத்தவேண்டுமோ அவனுக்கு வரியையும் யாருக்கு சொத்துவரியைச் செலுத்தவேண்டுமோ அவனுக்கு சொத்துவரியையும் செலுத்துங்கள் யாருக்குப் பயப்படவேண்டுமோ அவனுக்குப் பயப்படுங்கள் யாருக்கு மதிப்புக் கொடுக்கவேண்டுமோ அவனுக்கு மதிப்புக் கொடுங்கள் 8 ஒருவரிலொருவர் அன்பு செலுத்துகிற கடனைத்தவிர வேறு எதிலும் யாருக்கும் கடன்படாமல் இருங்கள் அயலகத்தாரிடம் அன்புசெலுத்துகிறவன் நியாயப்பிரணத்தை நிறைவேற்றுகிறான் 9 எப்படியென்றால் விபசாரம் செய்யாதிருப்பாயாக கொலை செய்யாதிருப்பாயாக களவு செய்யாதிருப்பாயாக பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக இச்சிக்காமல் இருப்பாயாக என்கிற இந்தக் கட்டளைகளும் வேறு எந்தக் கட்டளையும் உன்னிடத்தில் நீ அன்பாக செலுத்துவதுபோல மற்றவனிடமும் அன்புசெலுத்துவாயாக என்கிற ஒரே வாக்கியத்தில் அடங்கியிருக்கிறது 10 அன்பு மற்றவனுக்கு தீமை செய்யாது எனவே அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாக இருக்கிறது 11 தூக்கத்தைவிட்டு எழுந்திருக்க வேண்டிய நேரமானது என்று நாம் நேரத்தை அறிந்தவர்களாக இப்படி நடக்கவேண்டும் நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு அருகில் இருந்ததைவிட இப்பொழுது அது நமக்கு மிக அருகில் இருக்கிறது 12 இரவு கடந்துபோனது பகல் அருகில் வந்துவிட்டது எனவே இருளின் செயல்களை நாம் தள்ளிவிட்டு ஒளியின் ஆயுதங்களை அணிந்துகொள்வோம் 13 களியாட்டும் வெறியும் வேசித்தனமும் காமவிகாரமும் வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாக நடக்காமல் பகலிலே நடக்கிறவர்கள்போல ஒழுங்காக நடப்போம் 14 தீய இச்சைகளுக்கு இடமாக சரீரத்தைக் கொடுக்காமல் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள்
Chapter 14
அத்தியாயம்– 14
நியாயந்தீர்த்தல்
1 விசுவாசத்தில் பலவீனமாக உள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள் ஆனாலும் அவனுடைய மன சந்தேகங்களைக் குற்றமாக தீர்மானிக்காமல் இருங்கள் 2 ஒருவன் எந்த உணவுப்பொருளையும் சாப்பிடலாம் என்று நம்புகிறான் பலவீனமாக உள்ளவனோ காய்கறிகளைமட்டும் சாப்பிடுகிறான் 3 சாப்பிடுகிறவன் சாப்பிடாமல் இருக்கிறவனை அற்பமாக நினைக்காமல் இருக்கவேண்டும் சாப்பிடாமல் இருக்கிறவனும் சாப்பிடுகிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காமல் இருக்கவேண்டும் தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே 4 மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார் அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய முதலாளிக்கே அவன் பொறுப்பாளி அவன் நிலைநிறுத்தப்படுவான் தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராக இருக்கிறாரே 5 அன்றியும் ஒருவன் ஒருநாளைவிட மற்றொரு நாள் சிறந்தது என்று நினைக்கிறான் வேறொருவன் எல்லா நாட்களையும் சமமாக நினைக்கிறான் அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாக இருக்கட்டும் 6 நாட்களை சிறப்பாக்கிக்கொள்கிறவன் கர்த்தருக்கென்று சிறப்பாக்கிக் கொள்கிறான் நாட்களை சிறப்பாக்கிக் கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று சிறப்பாக்கிக் கொள்ளாமல் இருக்கிறான் சாப்பிடுகிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறபடியால் கர்த்தருக்கென்று சாப்பிடுகிறான் சாப்பிடாமல் இருக்கிறவனும் கர்த்தருக்கென்று சாப்பிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறான் 7 நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதும் இல்லை ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதும் இல்லை 8 நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம் நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம் எனவே பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாக இருக்கிறோம் 9 கிறிஸ்துவும் மரித்தவர்களுக்கும் ஜீவனுள்ளவர்களுக்கும் ஆண்டவராக இருப்பதற்காக மரித்தும் உயிரோடு எழுந்தும் பிழைத்தும் இருக்கிறார் 10 இப்படியிருக்க நீ உன் சகோதரனைக் குற்றவாளி என்று தீர்க்கிறது என்ன நீ உன் சகோதரனை அற்பமாக நினைக்கிறது என்ன நாமெல்லோரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே 11 அப்படியே முழங்கால்கள் எல்லாம் எனக்கு முன்பாக முடங்கும் நாக்குகள் எல்லாம் தேவனை அறிக்கைப்பண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்பதாகக் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது 12 எனவே நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கு ஒப்புவிப்பான் 13 இப்படியிருக்க நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகள் என்று தீர்க்காமல் இருப்போமாக ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடையையும் இடறலையும் போடக்கூடாது என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள் 14 எந்தப்பொருளும் தன்னில்தானே தீட்டானவைகள் இல்லை என்று கர்த்தராகிய இயேசுவிற்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன் ஒரு பொருளைத் தீட்டானது என்று நினைக்கிறவன் எவனோ அவனுக்கு அது தீட்டானதாக இருக்கும் 15 ஆகாரத்தினாலே உன் சகோதரனுக்கு விசனம் உண்டாக்கினால் நீ அன்பாக நடக்கிறவன் இல்லை அவனை உன் ஆகாரத்தினாலே கெடுக்காதே கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே 16 உங்களுடைய நல்ல செயல்கள் அவமதிக்கப்பட இடங்கொடுக்காமல் இருங்கள் 17 தேவனுடைய ராஜ்யம் சாப்பிடுவதும் குடிப்பதும் இல்லை அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியானவரால் உண்டாகும் சந்தோஷமாகவும் இருக்கிறது 18 இவைகளிலே கிறிஸ்துவிற்கு ஊழியம் செய்கிறவன் தேவனுக்குப் பிரியமானவனும் மனிதனால் அங்கீகரிக்கப்பட்டவனுமாக இருக்கிறான் 19 எனவே சமாதானத்திற்குரியவைகளையும் ஐக்கிய பக்திவளர்ச்சியை உண்டாக்கக்கூடியவைகளையும் நாடுவோம் 20 ஆகாரத்திற்காக தேவனுடைய செயல்களை அழித்துப்போடாதே எந்த உணவுப்பொருளும் சுத்தமானதுதான் ஆனாலும் இடறல் உண்டாகச் சாப்பிடுகிறவனுக்கு அது தீமையாக இருக்கும் 21 இறைச்சி சாப்பிடுவதும் மதுபானம் அருந்துகிறதும் வேறு எதையாவது செய்கிறதும் உன் சகோதரன் இடறுவதற்கோ தவறுவதற்கோ பலவீனப்படுகிறதற்கோ காரணமாக இருந்தால் அவைகளில் ஒன்றையும் செய்யாமல் இருப்பதே நன்மையாக இருக்கும் 22 உனக்கு விசுவாசம் இருந்தால் அது தேவனுக்குமுன்பாக உனக்குள்மட்டும் இருக்கட்டும் நல்லது என்று நிச்சயித்த விஷயத்தில் தன்னைக் குற்றவாளியாக்காதவன் பாக்கியவான் 23 ஒருவன் சந்தேகத்துடன் சாப்பிட்டால் அவன் விசுவாசம் இல்லாமல் சாப்பிடுகிறதினால் தண்டனைக்குரியவனாகத் தீர்க்கப்படுகிறான் விசுவாசத்தினாலே வராத எதுவும் பாவமே
Chapter 15
அத்தியாயம்– 15
ஒருவரையொருவர் தாங்குங்கள்
1 அன்றியும் பலம் உள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாக நடக்காமல் பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும் 2 நம்மில் ஒவ்வொருவனும் அயலகத்தானுக்கு பக்திவளர்ச்சிக்குரிய நன்மையை உண்டாக்குவதற்காக அவனுக்குப் பிரியமாக நடக்கவேண்டும் 3 கிறிஸ்துவும் தமக்கே பிரியமாக நடக்காமல் உம்மை அவமதிக்கிறவர்களுடைய அவமானங்கள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார் 4 தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கை உள்ளவர்களாவதற்காக முன்பே எழுதியிருக்கிறவைகள் எல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது 5 நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்துவதற்காக 6 பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன் கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே நீங்கள் ஒரே சிந்தை உள்ளவர்களாக இருக்க உங்களுக்கு தயவு செய்வாராக 7 எனவே தேவனுக்கு மகிமையுண்டாகும்படி கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள் 8 மேலும் முற்பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களை உறுதியாக்குவதற்காக தேவனுடைய சத்தியத்தினால் இயேசுகிறிஸ்து விருத்தசேதனம் உள்ளவர்களுக்கு ஊழியக்காரர் ஆனார் என்றும் 9 யூதரல்லாத மக்களும் இரக்கம் பெற்றதினால் தேவனை மகிமைப்படுத்துகிறார்கள் என்றும் சொல்லுகிறேன் அப்படியே இதனால் நான் யூதரல்லாத மக்களுக்குள்ளே உம்மை அறிக்கைசெய்து உம்முடைய நாமத்தைச் சொல்லி சங்கீதம் பாடுவேன் என்று எழுதியிருக்கிறது 10 மேலும் யூதரல்லாத மக்களே அவருடைய மக்களுடன் சேர்ந்து களிகூருங்கள் என்கிறார் 11 மேலும் யூதரல்லாத மக்களே எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள் மக்களே எல்லோரும் அவரைப் புகழுங்கள் என்றும் சொல்லுகிறார் 12 மேலும் ஈசாயின் வேரும் யூதரல்லாத மக்களை ஆளுகை செய்கிற ஒருவர் தோன்றுவார் அவரிடம் யூதரல்லாத மக்கள் நம்பிக்கை வைப்பார்கள் என்று ஏசாயா சொல்லுகிறான் 13 பரிசுத்த ஆவியானவரின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருக நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவிதமான சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக 14 என் சகோதரர்களே நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும் எல்லா அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும் ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களுமாக இருக்கிறீர்கள் என்று நானும் உங்களைக்குறித்து நிச்சயித்திருக்கிறேன் 15 அப்படியிருந்தும் சகோதரர்களே யூதரல்லாதவர்கள் பரிசுத்த ஆவியானவராலே பரிசுத்தமாக்கப்பட்டு தேவனுக்குப் பிரியமான பலியாகும்படி நான் தேவனுடைய நற்செய்தி ஊழியத்தை நடத்தும் ஆசாரியனாக இருந்து யூதரல்லாதவர்களுக்கு இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனாவதற்கு 16 தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்துவதற்காக இவைகளை நான் அதிக தைரியமாக எழுதினேன் 17 எனவே நான் தேவனுக்குரியவைகளைக்குறித்து இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மேன்மை பாராட்டமுடியும் 18 யூதரல்லாதவர்களை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணுவதற்கு அற்புத அடையாளங்களின் பலத்தினாலும் தேவ ஆவியானவரின் பலத்தினாலும் கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு செய்தவைகளைத்தவிர வேறொன்றையும் சொல்ல நான் துணியவில்லை 19 இப்படி எருசலேமிலிருந்து ஆரம்பித்து இல்லிரிக்கம் தேசம்வரைக்கும் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பூரணமாகப் பிரசங்கம் செய்திருக்கிறேன் 20 மேலும் அவருடைய செய்தியை அறியாமல் இருந்தவர்கள் பார்ப்பார்கள் என்றும் கேள்விப்படாமல் இருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்கள் என்றும் எழுதியிருக்கிறபடியே 21 நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாமல் கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்படாத இடங்களில் நற்செய்தியை அறிவிக்கும்படி விரும்புகிறேன் 22 உங்களிடம் வருவதற்கு இதினாலே அநேகமுறை தடைபட்டேன் 23 இப்பொழுது இந்தப் பகுதிகளிலே எனக்கு இடம் இல்லதாதினாலும் உங்களிடம் வரும்படி அநேக வருடமாக எனக்கு அதிக விருப்பம் உண்டாயிருக்கிறபடியினாலும் 24 நான் ஸ்பானியா தேசத்திற்கு பயணம்செய்யும்போது உங்களிடம் வந்து உங்களைப் பார்க்கவும் உங்களிடம் கொஞ்சம் திருப்தியடைந்தபின்பு அந்த இடத்திற்கு உங்களால் நான் வழியனுப்பப்படவும் எனக்கு நேரம் கிடைக்கும் என்று நம்பியிருக்கிறேன் 25 இப்பொழுதோ பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்வதற்காக நான் எருசலேமுக்குப் பயணம் செய்ய இருக்கிறேன் 26 மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் உள்ளவர்கள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற ஏழைகளுக்கு சில பொருளுதவிகளைச் செய்ய விருப்பமாக இருக்கிறார்கள் 27 இப்படிச்செய்வது நல்லதென்று நினைத்தார்கள் இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளிகளாகவும் இருக்கிறார்கள் எப்படியென்றால் யூதரல்லாதவர்கள் அவர்களுடைய ஞானநன்மைகளில் பங்குபெற்றிருக்க சரீர நன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய இவர்கள் கடனாளிகளாக இருக்கிறார்களே 28 இந்தக் காரியத்தை நான் நிறைவேற்றி இந்தப் பலனை அவர்கள் கையிலே பத்திரமாக ஒப்புவித்தப்பின்பு உங்களுடைய ஊர்வழியாக ஸ்பானியாவிற்குப் போவேன் 29 நான் உங்களிடம் வரும்போது கிறிஸ்துவினுடைய நற்செய்தியின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடு வருவேன் என்று அறிந்திருக்கிறேன் 30 மேலும் சகோதரர்களே தேவ விருப்பத்தினாலே நான் சந்தோஷத்தோடு உங்களிடம் வந்து உங்களோடு ஓய்வெடுப்பதற்காக 31 யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளுக்கு நான் தப்புவிக்கப்படுவதற்காகவும் நான் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குச் செய்யப்போகிற தர்மஉதவிகள் அவர்களால் அங்கீகரிக்கப்படுவதற்காகவும் 32 நீங்கள் தேவனை நோக்கி செய்யும் ஜெபங்களில் நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடு சேர்ந்து போராடவேண்டும் என்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் பரிசுத்த ஆவியானவருடைய அன்பினாலும் உங்களை வேண்டிக்கொள்கிறேன் 33 சமாதானத்தின் தேவன் உங்கள் அனைவரோடும் இருப்பாராக ஆமென்
Chapter 16
அத்தியாயம்– 16
பவுலின் இறுதி அறிவுரை.
1 கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொண்டு 2 எந்தக் காரியத்தில் உங்களுடைய உதவி அவளுக்குத் தேவையாக இருக்கிறதோ அந்தக் காரியத்திலே நீங்கள் அவளுக்கு உதவிசெய்யவேண்டும் என்று அவளை உங்களிடம் ஒப்புவிக்கிறேன் அவள் அநேகருக்கும் எனக்கும்கூட ஆதரவாக இருந்தவள் 3 கிறிஸ்து இயேசுவிற்குள் என் உடன்வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள் 4 அவர்கள் என்னுடைய ஜீவனுக்காகத் தங்களுடைய கழுத்தைக் கொடுத்தவர்கள் அவர்களைப்பற்றி நான்மட்டும் அல்ல யூதரல்லாதவர்களில் உண்டான சபையார் எல்லோரும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள் 5 அவர்களுடைய வீட்டிலே கூடிவருகிற சபையையும் வாழ்த்துங்கள் அகாயாவிலே கிறிஸ்துவிற்கு முதற்பலனாகிய என் பிரியமான எப்பனெத்தை வாழ்த்துங்கள் 6 எங்களுக்காக அதிகமாக பிரயாசப்பட்ட மரியாளை வாழ்த்துங்கள் 7 அப்போஸ்தலர்களுக்குள் பெயர்பெற்றவர்களும் எனக்கு முன்பே கிறிஸ்துவிற்குள்ளானவர்களும் என் இனத்தாரும் என்னோடு காவலில் கட்டப்பட்டவர்களுமாக இருக்கிற அன்றோனீக்கையும் யூனியாவையும் வாழ்த்துங்கள் 8 கர்த்தருக்குள் எனக்குப் பிரியமான அம்பிலியாவை வாழ்த்துங்கள் 9 கிறிஸ்துவிற்குள் நம்மோடு உடன்வேலையாளாகிய உர்பானையும் என் பிரியமான ஸ்தாக்கியையும் வாழ்த்துங்கள் 10 கிறிஸ்துவிற்குள் உத்தமனாகிய அப்பெல்லேயை வாழ்த்துங்கள் அரிஸ்தொபூலுவின் குடும்பத்தாரை வாழ்த்துங்கள் 11 என் இனத்தானாகிய ஏரோதியோனை வாழ்த்துங்கள் நர்கீசுவின் குடும்பத்தாரில் கர்த்தருக்குள் இருக்கிறவர்களை வாழ்த்துங்கள் 12 கர்த்தருக்குள் அதிகமாக பிரயாசப்படுகிற திரிபேனாளையும் திரிபோசாளையும் வாழ்த்துங்கள் கர்த்தருக்குள் அதிகமாக பிரயாசப்பட்ட பிரியமான பெர்சியாளை வாழ்த்துங்கள் 13 கர்த்தருக்குள் தெரிந்துகொள்ளப்பட்ட ரூபையும் எனக்கும் தாயாகிய அவனுடைய தாயையும் வாழ்த்துங்கள் 14 அசிங்கிரீத்துவையும் பிலெகோனையும் எர்மாவையும் பத்திரொபாவையும் எர்மேயையும் அவர்களோடு இருக்கிற சகோதரர்களையும் வாழ்த்துங்கள் 15 பிலொலோகையும் யூலியாளையும் நேரேயையும் அவனுடைய சகோதரியையும் ஒலிம்பாவையும் அவர்களோடு இருக்கிற பரிசுத்தவான்கள் எல்லோரையும் வாழ்த்துங்கள் 16 ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள் கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள் 17 அன்றியும் சகோதரர்களே நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு எதிராகப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருந்து அவர்களைவிட்டு விலகவேண்டும் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன் 18 அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கு ஊழியம் செய்யாமல் தங்களுடைய வயிற்றுக்கே ஊழியம் செய்து நயமான மொழிகளாலும் இனிய பேச்சினாலும் கபடு இல்லாதவர்களின் இருதயங்களை ஏமாற்றுகிறவர்களாக இருக்கிறார்கள் 19 உங்களுடைய கீழ்ப்படிதல் எல்லோருக்கும் தெரியவந்திருக்கிறது எனவே உங்களைக்குறித்து சந்தோஷப்படுகிறேன் ஆனாலும் நீங்கள் நன்மைக்கு ஞானிகளும் தீமைக்குப் பேதைகளுமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன் 20 சமாதானத்தின் தேவன் சீக்கிரமாகச் சாத்தானை உங்களுடைய கால்களின் கீழே நசுக்கிப்போடுவார் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களோடு இருப்பதாக ஆமென் 21 என் உடன்வேலையாளாகிய தீமோத்தேயும் என் இனத்தாராகிய லூகியும் யாசோனும் சொசிபத்தரும் உங்களை வாழ்த்துகிறார்கள் 22 இந்தக் கடிதத்தை எழுதின தெர்தியுவாகிய நான் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறேன் 23 என்னையும் சபைகள் அனைத்தையும் உபசரித்துவருகிற காயு உங்களை வாழ்த்துகிறான் பட்டணத்தின் பொருளாளரான ஏரஸ்தும் சகோதரனாகிய குவர்த்தும் உங்களை வாழ்த்துகிறார்கள் 24 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென். 25 ஆதிகாலம்முதல் இரகசியமாக இருந்து இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளிப்படுத்தப்பட்டதும் எல்லா தேசத்து மக்களும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாக இருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிற 26 இயேசுகிறிஸ்துவைப்பற்றிய பிரசங்கமாகிய என் நற்செய்தியின்படியே உங்களைப் பலப்படுத்த வல்லவரும் 27 தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாக இருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாக என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக ஆமென்