I தெசலோனிக்கேயர்
Chapter 1
அத்தியாயம்– 1
1 பவுலும் சில்வானும் தீமோத்தேயும் பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக 2 தேவனுக்குப் பிரியமான சகோதரர்களே உங்களுடைய விசுவாசத்தின் செயல்களையும் உங்களுடைய அன்பின் பிரயாசத்தையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்களுடைய நம்பிக்கையின் பொறுமையையும் நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து 3 நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்று நாங்கள் அறிந்து 4 எங்களுடைய ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக்குறித்து வேண்டுதல்செய்து உங்களெல்லோருக்காகவும் எப்பொழுதும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம் 5 எங்களுடைய நற்செய்தி உங்களிடம் வசனத்தோடுமாத்திரமல்ல வல்லமையோடும் பரிசுத்த ஆவியானவரோடும் முழு நிச்சயத்தோடும் வந்தது நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்களுக்காக எப்படிப்பட்டவர்களாக இருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே 6 நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே பரிசுத்த ஆவியானவரின் மகிழ்ச்சியோடு திருவசனத்தை ஏற்றுக்கொண்டு எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி 7 இவ்விதமாக மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் அனைவருக்கும் மாதிரிகளானீர்கள் 8 எப்படியென்றால் உங்களிடமிருந்து கர்த்தருடைய வசனம் மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் பரவியதுமல்லாமல் நாங்கள் அதைக்குறித்து ஒன்றும் சொல்லவேண்டியதாக இல்லாதபடிக்கு தேவனைப்பற்றின உங்களுடைய விசுவாசம் எல்லா இடங்களிலும் பிரசித்தமானது 9 ஏனென்றால் அவர்கள்தாமே எங்களைக்குறித்து உங்களிடம் எங்களுக்குக் கிடைத்த வரவேற்பு இன்னதென்பதையும் ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு நீங்கள் சிலை வழிபாடுகளைவிட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும் 10 அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தவரும் இனிவரும் கோபத்திலிருந்து நம்மை விடுவித்து இரட்சிக்கிறவருமாக இருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும் அறிவிக்கிறார்களே
Chapter 2
அத்தியாயம்– 2
தெசலோனிக்கேயாவில் பவுலின் ஊழியம்
1 சகோதரர்களே நாங்கள் உங்களிடம் வந்தது பிரயோஜனமில்லாததாக இருக்கவில்லையென்று நீங்களே அறிந்திருக்கிறீர்கள் 2 உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி முன்னே பிலிப்பிப்பட்டணத்திலே நாங்கள் பாடுகள்பட்டு நிந்தையடைந்திருந்தும் மிகுந்த போராட்டத்தோடு தேவனுடைய நற்செய்தியை உங்களுக்குச் சொல்லும்படி நம்முடைய தேவனுக்குள் தைரியங்கொண்டிருந்தோம் 3 எங்களுடைய போதகம் வஞ்சகத்தினாலும் தவறான விருப்பத்தினாலும் உண்டாகவில்லை அது தந்திரமுள்ளதாகவும் இருக்கவில்லை 4 தேவன் எங்களை நேர்மையானவர்கள் என்று நம்பி நற்செய்தியை எங்களிடம் ஒப்புவித்தார் நாங்கள் மனிதர்களுக்கு அல்ல எங்களுடைய இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம் 5 உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி நாங்கள் ஒருபோதும் முகத்துதியான வசனங்களைச் சொல்லவுமில்லை பொருளாசையுள்ளவர்களாக மாயம்பண்ணவும் இல்லை தேவனே சாட்சி 6 நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களாக உங்களுக்குப் பாரமாக இருக்கக்கூடியவர்களானாலும் உங்களிடத்திலாவது மற்றவர்களிடத்திலாவது மனிதர்களால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை 7 பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல நாங்கள் உங்களிடம் கனிவாக நடந்துகொண்டோம் 8 நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாக இருந்து தேவனுடைய நற்செய்தியை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல் நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே எங்களுடைய உயிரையும் உங்களுக்குக் கொடுக்க விருப்பமாக இருந்தோம் 9 சகோதரர்களே நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாக இருக்கும் உங்களில் ஒருவனுக்கும் பாரமாக இல்லாதபடிக்கு இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து தேவனுடைய நற்செய்தியை உங்களுக்குப் பிரசங்கித்தோம் 10 விசுவாசிகளாகிய உங்களுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையில்லாமலும் நடந்தோம் என்பதற்கு நீங்களும் சாட்சி தேவனும் சாட்சி 11 மேலும் தம்முடைய ராஜ்யத்திற்கும் மகிமைக்கும் உங்களை அழைத்த தேவனுக்கு நீங்கள் தகுதியுள்ளவர்களாக நடக்கவேண்டுமென்று 12 தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கும் புத்தியும் பாராட்டுதலும் எச்சரிப்புமாகச் சொன்னதை அறிந்திருக்கிறீர்கள் 13 ஆகவே நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது அதை மனித வசனமாக ஏற்றுக்கொள்ளாமல் தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம் அது மெய்யாகவே தேவவசனம்தான் விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனாக இருக்கிறது 14 எப்படியென்றால் சகோதரர்களே யூதேயா நாட்டில் கிறிஸ்து இயேசுவிற்குள்ளான தேவனுடைய சபைகளை நீங்கள் பின்பற்றினவர்களாகி அவர்கள் யூதர்களாலே எப்படிப் பாடுகள்பட்டார்களோ அப்படியே நீங்களும் உங்களுடைய சொந்த மக்களாலே பாடுகள்பட்டீர்கள் 15 அந்த யூதர்கள் கர்த்தராகிய இயேசுவையும் தங்களுடைய தீர்க்கதரிசிகளையும் கொலை செய்தவர்களும் எங்களைத் துன்பப்படுத்தினவர்களும் தேவனுக்கு விருப்பமில்லாதவர்களும் மனிதர்கள் அனைவருக்கும் விரோதிகளுமாக இருந்து 16 யூதரல்லாதவர்கள் இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் அவர்களோடு பேசாதபடிக்குத் தடை செய்கிறார்கள் இவ்விதமாக எக்காலத்திலும் தங்களுடைய பாவங்களை முழுமையாக்குகிறார்கள் அவர்கள்மேல் கோபம் பூரணமாக வந்திருக்கிறது 17 சகோதரர்களே நாங்கள் இருதயத்தின்படி உங்களோடிருந்து சரீரத்தின்படி கொஞ்சநாட்கள் உங்களைவிட்டுப் பிரிந்திருந்ததினாலே உங்களுடைய முகத்தைப் பார்க்கவேண்டுமென்று மிகுந்த ஆசையோடு அதிகமாக முயற்சி செய்தோம் 18 ஆகவே நாங்கள் உங்களிடம் வர ஒன்று இரண்டுமுறை விருப்பமாக இருந்தோம் பவுலாகிய நானே வர விருப்பமாக இருந்தேன் சாத்தானோ எங்களைத் தடைசெய்தான் 19 எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாக இருப்பவர்கள் யார் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள் 20 நீங்களே எங்களுக்கு மகிமையும் சந்தோஷமுமாக இருக்கிறீர்கள்
Chapter 3
அத்தியாயம்– 3
1 ஆகவே நாங்கள் இனிக் காத்திருக்கமுடியாமல் அத்தேனே பட்டணத்தில் தனிமையாக இருப்பது நல்லது என்று நினைத்தோம் 2 இந்த உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும் உங்களுடைய விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும் நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் நற்செய்தியில் எங்களுடைய உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம் 3 இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே 4 நமக்கு உபத்திரவம் வருமென்று நாங்கள் உங்களிடத்திலிருந்தபோது உங்களுக்கு முன்னறிவித்தோம் அப்படியே சம்பவித்ததென்றும் அறிந்திருக்கிறீர்கள் 5 ஆகவே நான் இனிப் பொறுத்திருக்கமுடியாமல் எங்களுடைய வேலை வீணாகப்போகத்தக்கதாகச் சோதனைக்காரன் உங்களைச் சோதனைக்கு உட்படுத்தினதுண்டோவென்று உங்களுடைய விசுவாசத்தை அறியும்படிக்கு அவனை அனுப்பினேன் 6 இப்பொழுது தீமோத்தேயு உங்களிடமிருந்து எங்களிடம் வந்து உங்களுடைய விசுவாசத்தையும் அன்பையும்குறித்து நீங்கள் எப்பொழுதும் எங்களை அன்பாக நினைத்துக்கொண்டு நாங்கள் உங்களைக் காண வாஞ்சையாக இருக்கிறதுபோல நீங்களும் எங்களைக் காண வாஞ்சையாக இருக்கிறீர்கள் என்பதைக்குறித்தும் எங்களுக்கு நற்செய்தி சொன்னதினாலே 7 சகோதரர்களே எங்களுக்குச் சம்பவித்த எல்லா நெருக்கத்திலும் உபத்திரவத்திலும் உங்களுடைய விசுவாசத்தினாலே உங்களால் ஆறுதல் அடைந்தோம் 8 நீங்கள் கர்த்தருக்குள் நிலைத்திருந்தால் நாங்கள் பிழைத்திருப்போம் 9 மேலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நாங்கள் உங்களைக்குறித்து அடைந்திருக்கிற மிகுந்த சந்தோஷத்திற்காக நாங்கள் தேவனுக்கு எவ்விதமாக நன்றி செலுத்துவோம் 10 உங்களுடைய முகத்தைக் கண்டு உங்களுடைய விசுவாசத்தின் குறைவுகளை நிறைவாக்கும்படிக்கு இரவும் பகலும் மிகவும் வேண்டிக்கொள்ளுகிறோமே 11 நம்முடைய பிதாவாகிய தேவனும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் உங்களிடத்திற்கு எங்களை நேராக வழிநடத்துவாராக 12 நாங்கள் உங்களிடம் வைத்திருக்கிற அன்புக்கு ஒப்பாக நீங்களும் ஒருவரிலொருவர் வைக்கும் அன்பிலும் மற்ற எல்லா மனிதர்களிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து 13 இவ்விதமாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடும்கூட வரும்போது நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாக இருக்கும்படி உங்களுடைய இருதயங்களைப் பலப்படுத்துவாராக
Chapter 4
அத்தியாயம்– 4
தேவனுக்குப் பிரியமாக வாழ்வது
1 அன்றியும் சகோதரர்களே நீங்கள் இந்தவிதமாக நடக்கவும் தேவனுக்குப் பிரியமாக இருக்கவும்வேண்டுமென்று நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே அதிகமதிகமாக முன்னேறும்படிக்கு கர்த்தராகிய இயேசுவிற்குள் உங்களை வேண்டிக்கொண்டு புத்திசொல்லுகிறோம் 2 கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த வழிமுறைகளை அறிந்திருக்கிறீர்களே 3 நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய விருப்பமாக இருக்கிறது அந்தப்படி நீங்கள் வேசித்தனத்திற்கு விலகியிருந்து 4 தேவனை அறியாத மக்களைப்போல மோக இச்சைக்குட்படாமல் 5 உங்களில் அவனவன் தன்தன் சரீரத்தைப் பரிசுத்தமாகவும் மரியாதையாகவும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து 6 இந்தக் காரியத்தில் ஒருவனும் தன் சகோதரனை ஏமாற்றாமலும் கெடுதல் செய்யாமலும் இருக்கவேண்டும் முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்டக் காரியங்கள் எல்லாவற்றையும்குறித்துக் கர்த்தர் நீதியை நிலைநாட்டுகிறவராக இருக்கிறார் 7 தேவன் நம்மை அசுத்தத்திற்கு அல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார் 8 ஆகவே புறக்கணிக்கிறவன் மனிதர்களை அல்ல தமது பரிசுத்த ஆவியானவரை நமக்குத் தந்தருளின தேவனையே புறக்கணிக்கிறான் 9 சகோதர அன்பைக்குறித்து நான் உங்களுக்கு எழுதவேண்டியதில்லை நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாக இருப்பதற்கு தேவனால் போதிக்கப்பட்டவர்களாக இருக்கிறீர்களே 10 அந்தப்படி நீங்கள் மக்கெதோனியா நாடெங்கிலும் உள்ள சகோதரர்களெல்லோருக்கும் செய்துவருகிறீர்கள் சகோதரர்களே அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாகப் பெருகவும் 11 அவிசுவாசிகளிடத்தில் ஒழுக்கமாக நடந்து ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு 12 நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே அமைதலுள்ளவர்களாக இருக்கவிரும்பவும் உங்களுடைய சொந்த வேலைகளைப் பார்க்கவும் உங்களுடைய சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம் 13 அன்றியும் சகோதரர்களே மரித்துப்போனவர்களுக்காக நீங்கள் நம்பிக்கை இல்லாதவர்களான மற்றவர்களைப்போல துக்கப்பட்டு அறிவில்லாமலிருக்க எனக்கு மனதில்லை 14 இயேசுவானவர் மரித்து பின்பு உயிரோடு எழுந்திருந்தாரென்று நம்புகிறோமே அப்படியே இயேசுவிற்குள் மரித்தவர்களையும் தேவன் அவரோடு கொண்டுவருவார் 15 கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது கர்த்தருடைய வருகைவரைக்கும் உயிரோடிருக்கும் நாம் மரித்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை 16 ஏனென்றால் கர்த்தர்தாமே ஆரவாரத்தோடும் பிரதான தூதனுடைய சத்தத்தோடும் தேவ எக்காளத்தோடும் பரலோகத்திலிருந்து இறங்கிவருவார் அப்பொழுது கிறிஸ்துவிற்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள் 17 பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக மேகங்கள்மேல் அவர்களோடு ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு இவ்விதமாக எப்பொழுதும் கர்த்தரோடு இருப்போம் 18 ஆகவே இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்
Chapter 5
அத்தியாயம்– 5
1 சகோதரர்களே இவைகள் நடக்கும் நாட்களையும் நேரங்களையும்குறித்து உங்களுக்கு எழுதவேண்டியதில்லை 2 இரவிலே திருடன் வருகிறவிதமாகக் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாக அறிந்திருக்கிறீர்கள் 3 சமாதானமும் பாதுகாப்பும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல அழிவு திடீரென அவர்கள்மேல் வரும் அவர்கள் தப்பிப்போவதில்லை 4 சகோதரர்களே அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக நீங்கள் இருளில் இருக்கிறவர்களில்லையே 5 நீங்களெல்லோரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும் பகலின் பிள்ளைகளுமாக இருக்கிறீர்கள் நாம் இரவிற்கும் இருளுக்கும் உரியவர்களல்ல 6 ஆகவே மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாமும் தூங்காமல் விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாக இருக்கக்கடவோம் 7 தூங்குகிறவர்கள் இரவிலே தூங்குவார்கள் வெறிகொள்ளுகிறவர்கள் இரவிலே வெறிகொள்ளுவார்கள் 8 பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாக இருந்து விசுவாசம் அன்பு என்னும் மார்புக்கவசத்தையும் இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைக்கவசத்தையும் அணிந்துகொண்டிருக்கக்கடவோம் 9 தேவன் நம்மைத் தண்டிப்பதற்காக நியமிக்காமல் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாக இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார் 10 நாம் உயிரோடிருக்கிறவர்களானாலும் மரித்தவர்களானாலும் அவரோடு நாம் ஒன்றாகப் பிழைத்திருப்பதற்காக அவர் நமக்காக மரித்தாரே 11 ஆகவே நீங்கள் செய்துவருகிறபடியே ஒருவரையொருவர் தேற்றி ஒருவருக்கொருவர் பக்திவளர்ச்சி உண்டாகும்படிச் செய்யுங்கள் 12 அன்றியும் சகோதரர்களே உங்களுக்குள்ளே கடுமையாக உழைத்து கர்த்தருக்குள் உங்களை விசாரணை செய்கிறவர்களாக இருந்து உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து 13 அவர்களுடைய செயல்களின் அடிப்படையில் அவர்களை மிகவும் அன்பாக நினைத்துக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம் உங்களுக்குள்ளே சமாதானமாக இருங்கள் 14 மேலும் சகோதரர்களே நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால் ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள் திடனற்றவர்களைத் தேற்றுங்கள் பலவீனரைத் தாங்குங்கள் எல்லோரிடத்திலும் நீடியசாந்தமாக இருங்கள் 15 ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள் உங்களுக்குள்ளும் மற்ற அனைவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய விரும்புங்கள் 16 எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள் 17 இடைவிடாமல் ஜெபம்செய்யுங்கள் 18 எல்லாவற்றிலேயும் நன்றி சொல்லுங்கள் அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவிற்குள் உங்களைக்குறித்து தேவனுடைய விருப்பமாக இருக்கிறது 19 ஆவியை அவித்துப்போடாமலிருங்கள் 20 தீர்க்கதரிசனங்களை சாதாரணமாக எண்ணாதிருங்கள் 21 எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள் 22 தீமையாகத் தோன்றுகிற எல்லாவற்றையும்விட்டு விலகுங்கள் 23 சமாதானத்தின் தேவன்தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக உங்களுடைய ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக 24 உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர் அவர் அப்படியே செய்வார் 25 சகோதரர்களே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் 26 சகோதரர்கள் எல்லோரையும் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள் 27 இந்தக் கடிதம் பரிசுத்தமான சகோதரர்கள் எல்லோருக்கும் வாசிக்கப்படவேண்டுமென்று கர்த்தரின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன் 28 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக ஆமென்