தமிழ் (Tamil): Indian Revised Version - Tamil

Updated ? hours ago # views See on DCS Draft Material

II தெசலோனிக்கேயர்

Chapter 1

அத்தியாயம்– 1

1 பவுலும் சில்வானும் தீமோத்தேயும் நம்முடைய பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது 2 நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக 3 சகோதரர்களே நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக தேவனுக்கு நன்றிசெலுத்த கடனாளிகளாக இருக்கிறோம் உங்களுடைய விசுவாசம் மிகவும் பெருகுகிறதினாலும் நீங்களெல்லோரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறதினாலும் அப்படிச் செய்கிறது தகுதியாக இருக்கிறது 4 நீங்கள் சகிக்கிற எல்லாத் துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினாலே உங்களைக்குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மைபாராட்டுகிறோம் 5 நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் பாடுகள் அநுபவிக்கிறவர்களாக இருக்க அந்த ராஜ்யத்திற்கு நீங்கள் தகுதியுடையவர்கள் என்று எண்ணப்படும்படிக்கு தேவன் நியாயமானத் தீர்ப்புச் செய்கிறவரென்பதற்கு அதுவே ஆதாரமாக இருக்கிறது 6 உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும் உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடுகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாக இருக்கிறதே 7 தேவனை அறியாதவர்களுக்கும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள தண்டனையைக் கொடுக்கும்படிக்கு 8 கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதர்களோடும் எரிகிற அக்கினியோடும் வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும் 9 அந்த நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராகவும் நீங்கள் எங்களுடைய சாட்சியை நம்பினபடியினாலே உங்களிடத்திலும் நம்புகிறவர்களெல்லோரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராகவும் 10 அவர் வரும்போது அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும் அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் விலகி நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள் 11 ஆகவே நம்முடைய தேவனும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் அளிக்கும் கிருபையின்படியே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் உங்களிடத்திலும் நீங்கள் அவரிடத்திலும் மகிமைப்படும்படிக்கு 12 நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குத் தகுதியுள்ளவர்களாக்கவும் தமது தயவுள்ள விருப்பம் முழுவதையும் விசுவாசத்தின் செயல்களையும் பலமாக உங்களிடம் நிறைவேற்றவும் வேண்டுமென்று எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம்

Chapter 2

அத்தியாயம்– 2

கர்த்தருடைய வருகை

1 அன்றியும் சகோதரர்களே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும் நாம் அவரிடத்தில் சேர்க்கப்படுவதையும்குறித்து நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால் 2 கிறிஸ்துவினுடைய நாள் வந்துவிட்டது என்று தீர்க்கதரிசனமாகவோ எங்களுடைய வார்த்தையாகவோ எங்களிடத்திலிருந்து கடிதம் வந்ததாகவோ சொல்லப்பட்டால் உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள் 3 எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள் ஏனென்றால் விசுவாச துரோகம் முன்னதாக நடந்து பின்பு அழிவின் மகனாகிய பாவமனிதன் வெளிப்பட்டாலொழிய அந்த நாள் வராது 4 அவன் எதிர்த்து நிற்கிறவனாகவும் தேவனென்னப்படுவது எதுவோ ஆராதிக்கப்படுவது எதுவோ அவையெல்லாவற்றிற்கும்மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாகவும் தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாகவும் இருப்பான் 5 நான் உங்களிடத்திலிருந்தபோது இவைகளைச் சொன்னது உங்களுக்கு ஞாபகமில்லையா 6 அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு இப்பொழுது அவனைத் தடைசெய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே 7 அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுவதற்குமுன்னே அது வெளிப்படாது 8 நீக்கப்படும்போது அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான் அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து தம்முடைய வருகையின் தோற்றத்தினாலே நாசம்பண்ணுவார் 9 அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி எல்லா பொய்யான வல்லமையோடும் அடையாளங்களோடும் அற்புதங்களோடும் 10 கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் எல்லாவித வஞ்சகத்தோடும் இருக்கும் இரட்சிக்கப்படத்தக்கதாகச் சத்தியத்தை நேசிக்க அவர்கள் மறுத்ததினால் அப்படி நடக்கும் 11 ஆகவே சத்தியத்தை விசுவாசிக்காமல் அநீதியில் பிரியப்படுகிற எல்லோரும் தண்டனைக்குள்ளாக்கப்படும்படிக்கு 12 அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய மாய வஞ்சகத்தை தேவன் அவர்களுக்கு அனுப்புவார் 13 கர்த்தருக்குப் பிரியமான சகோதரர்களே நீங்கள் ஆவியானவராலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும் சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு தொடக்கம் முதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலே நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனுக்கு நன்றிசொல்ல கடனாளிகளாக இருக்கிறோம் 14 நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மகிமையை அடையும்படிக்கு எங்களுடைய நற்செய்தியினாலே அந்த இரட்சிப்பிற்கு அவர் உங்களை அழைத்தார் 15 ஆகவே சகோதரர்களே நீங்கள் உறுதிகொண்டு வார்த்தையினாலாவது கடிதத்தினாலாவது நாங்கள் உங்களுக்கு உபதேசித்த முறைமைகளைக் கைக்கொள்ளுங்கள் 16 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்தியஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாக நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும் 17 உங்களுடைய இருதயங்களைத் தேற்றி எல்லா நல்வசனத்திலும் செயல்களிலும் உங்களை உறுதிப்படுத்துவாராக

Chapter 3

அத்தியாயம்– 3

பவுல் அவர்களை ஜெபிக்க வேண்டுதல்

1 கடைசியாக சகோதரர்களே உங்களிடம் கர்த்தருடைய வசனம் பரவி மகிமைப்படுகிறதுபோல எவ்விடத்திலும் பரவி மகிமைப்படும்படிக்கும் 2 துன்மார்க்கமான பொல்லாத மனிதர்களுடைய கையிலிருந்து நாங்கள் விடுவிக்கப்படும்படிக்கும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் விசுவாசம் எல்லோரிடத்திலும் இல்லையே 3 கர்த்தரோ உண்மையுள்ளவர் அவர் உங்களை உறுதிப்படுத்தி தீமையிலிருந்து விலக்கிக் காத்துக்கொள்ளுவார் 4 மேலும் நாங்கள் கட்டளையிடுகிறவைகளை நீங்கள் செய்துவருகிறீர்களென்றும் இனிமேலும் செய்வீர்களென்றும் உங்களைக்குறித்துக் கர்த்தருக்குள் நம்பிக்கையாக இருக்கிறோம் 5 கர்த்தர் உங்களுடைய இருதயங்களை தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராக நடத்துவாராக 6 மேலும் சகோதரர்களே எங்களிடம் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடக்காமல் சோம்பேறியாக இருக்கிற எந்தச் சகோதரனையும் நீங்கள் விட்டுவிலகவேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் 7 இன்னவிதமாக எங்களைப் பின்பற்றவேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே நாங்கள் உங்களுக்குள்ளே சோம்பேறியாக நடக்காமல் 8 ஒருவனிடத்திலும் இலவசமாகச் சாப்பிடாமலும் உங்களில் ஒருவனுக்கும் பாரமாக இல்லாதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம் 9 உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல் நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாக இருக்கவேண்டுமென்றே அப்படிச்செய்தோம் 10 ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும்கூடாதென்று நாங்கள் உங்களிடம் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே 11 உங்களில் சிலர் எந்தவொரு வேலையும் செய்யாமல் மற்றவர்களுடைய வேலையில் தலையிட்டு சோம்பேறிகளாகத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம் 12 இப்படிப்பட்டவர்கள் அமைதலோடு வேலைசெய்து தங்களுடைய சொந்த உணவைச் சாப்பிடவேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம் 13 சகோதரர்களே நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமல் இருங்கள் 14 மேலும் இந்தக் கடிதத்தில் சொல்லிய எங்களுடைய வசனத்திற்கு ஒருவன் கீழ்ப்படியாமற்போனால் அவனைக் கவனத்தில் கொண்டு அவன் வெட்கப்படும்படிக்கு அவனோடுகூட சேராமல் இருங்கள் 15 ஆனாலும் அவனை விரோதியாக நினைக்காமல் சகோதரனாக நினைத்து அவனுக்குப் புத்திசொல்லுங்கள் 16 சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் எல்லாவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக கர்த்தர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக 17 பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன் என் கடிதங்கள் ஒவ்வொன்றுக்கும் இதுவே அடையாளம் இப்படியே எழுதுகிறேன் 18 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக ஆமென்