Matthew
Matthew 1
Matthew 1:1-3
வசனங்கள் 1
17 இயேசு கிறிஸ்துவின் முன்னோர்களை அட்டவணை இடுகிறதது.
தாவீதின் குமாரன், ஆபிரகாமின் குமாரன்
மாற்று மொழிபெயர்ப்பு: "ஆபிரகாமின் சந்ததியாயிருந்த, தாவீதின் சந்ததி." ஆபிரகாமின் சந்ததிக்கும் அவரின் சந்ததி தாவீதுக்கும், மற்றும் தாவீதுக்கும் அவரின் சந்ததி இயேசுவுக்கும் இடையே பல தலைமுறைகள் இருந்தது. "தாவீதின் குமாரன்" என்ற பதம் மத்தேயு: 9:27 லிலும் மற்ற இடங்களிலும் தலைப்பாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இங்கு இயேசுவின் குடும்ப சரித்தரத்தைக் குறிப்பதாக இருக்கிறது.
ஆபிரகாம் ஈசாக்கின் தகப்பன்
மாற்று மொழிபெயர்ப்பு: "ஆபிரகாம் ஈசாக்கின் தகப்பனனான்" அல்லது "ஆபிரகாமுக்கு ஈசாக்கு என்ற மகன் இருந்தான்" அல்லது "ஆபிரகாமுக்கு ஈசாக்கு என்ற பெயருடைய மகன் இருந்தான்."நீங்கள் ஒரு குறிப்பிட்ட முறையைத் தேர்ந்தெடுத்து, அட்டவணை முழுவதற்கும் பயன்படுத்தினால் இதைப் படிப்பவர்களுக்குத் தெளிவாகப் புரியும்.
தாமார்
பெயர்களுக்கு ஆண் மற்றும் பெண் பாலினங்களை அடையாள படுத்தும் மொழிகள், அவளுடைய பெயருக்கு பெண் பாலினத்தை பயன்படுத்த வேண்டும்.
Matthew 1:4-6
இயேசு கிறிஸ்துவின் முன்னோர்களின் குடும்ப அட்டவணை தொடர்கிறது. மத்தேயு 1:2
3ல் பயன்படுத்தின அதே வார்த்தை முறையை பயன்படுத்தவும்.
சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்.
"சல்மோன் போவாசின் தகப்பன், போவாசின் தாய் ராகாப்" அல்லது "சல்மோனும் ராகாபும் போவாசின் பெற்றோர்கள்."
போவாஸ் ரூத்தினிடத்தில் ஓபேதை பெற்றான்.
"போவாஸ் ஓபேதின் தகப்பன், ஓபேதின் தாய் ரூத்," அல்லது "போவாசும் ரூத்தும் ஓபேதின் பெற்றோர்கள்."
ராகாப் ... ரூத்
ஆண் மற்றும் பெண் பாலின பெயர் குறிப்பு உள்ள மொழிகள் அவற்றை இவர்களுடைய பெயர்களுக்குப் பயன்படுத்த வேண்டும்.
தாவீது சாலமோனை உரியாவின் மனைவியினிடத்தில் பெற்றான்.
"தாவீது சாலமோனின் தகப்பன், சாலமோனின் தாய் உரியாவின் மனைவி" அல்லது "தாவீதும் உரியாவின் மனைவியும் சாலோமோனின் பெற்றோர்கள்."
உரியாவின் மனைவி
"உரியாவின் விதவை"
Matthew 1:7-8
இயேசு கிறிஸ்துவின் முன்னோர்களின் குடும்ப அட்டவணை தொடர்கிறது. மத்தேயு 1:2
3ல் பயன்படுத்தின அதே வார்த்தை முறையை பயன்படுத்தவும்.
ஆசா
சில நேரங்களில் அவன் பெயர் "ஆசாப்" என்று மொழிபெயர்க்கப்படுகிறது.
யோராம் உசியாவின் தகப்பன்
உண்மையில் யோராம் உசியாவின் தாத்தாவின் தாத்தா, அதினால் "தகப்பன்", "முன்னோர்" (UDB) என்று மொழிபெயர்க்கப்படலாம்.
Matthew 1:9-11
இயேசு கிறிஸ்துவின் முன்னோர்களின் குடும்ப அட்டவணை தொடர்கிறது. மத்தேயு 1:2
3ல் பயன்படுத்தின அதே வார்த்தை முறையை பயன்படுத்தவும்
ஆமோன்
இது சில நேரங்களில் "ஆமோஸ்" என்று மொழிபெயர்க்கப்படுகிறது.
யோசியா எகோனியாவின் தகப்பன்
உண்மையில் யோசியா எகோனியாவின் தாத்தா.
பாபிலோனுக்கு சிறைபட்டுபோன காலத்தில்
"பாபிலோனுக்கு போக கட்டாயப்படுத்தப்போது" அல்லது "பாபிலோனியர்கள் அவர்களை பாபிலோனில் வாழும்படி செய்தபோது." யார் பாபிலோனுக்கு சென்றார்கள் என்று உங்கள் மொழியில் குறிப்பிடுவது அவசியம் என்றால் "இஸ்ரவேலர்கள்" அல்லது "யூதாவில் வாழ்ந்த இஸ்ரவேலர்கள்" என்று சொல்லலாம்.
Matthew 1:12-14
இயேசு கிறிஸ்துவின் முன்னோர்களின் குடும்ப அட்டவணை தொடர்கிறது. மத்தேயு 1:2
3ல் பயன்படுத்தின அதே வார்த்தை முறையை பயன்படுத்தவும்.
சிறைபிடிப்பிற்குப்பின்
மத்தேயு 1 : 11 றில் பயன்படுத்தின அதே வார்த்தை முறையை பயன்படுத்தவும்.
சலாத்தியேல் செருபாபேலின் தகப்பன்
சலாத்தியேல் உண்மையில் செருபாபேலின் தாத்தா
Matthew 1:15-17
இயேசு கிறிஸ்துவின் குடும்ப சரித்திரம் தொடர்கிறது. மத்தேயு 01:01;1:2
3ல் பயன்படுத்தின அதே வார்த்தை முறையை பயன்படுத்தவும்.
மரியாள், இவரிடதிலிருந்து இயேசு பிறந்தார்
மரியாள், இவரிடதிலிருந்து இயேசு பிறந்தார் என்ற வாக்கியம் செய்வினையில் "மரியாள் இயேசுவைப் பெற்றாள்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
பாபிலோனுக்கு சிறைபிடிப்பு
மத்தேயு 1 : 11 றில் பயன்படுத்தின அதே வார்த்தை முறையை பயன்படுத்தவும்.
Matthew 1:18-19
இயேசுவின் பிறப்பிற்கு வழிவகுத்த சம்பவங்களின் கணக்கை இது துவக்குகிறது. உங்கள் மொழியில் தலைப்பு மாற்றதை குறிக்க வழி இருக்குமானால் இங்கு பயன்படுத்தவும்.
மரியாள் யோசேப்பைத் திருமணம் செய்ய நிச்சயிக்கபட்டாள்
மரியாள் யோசேப்பைத் திருமணம் செய்ய நிச்சயிக்கபட்டாள். "திருமணம் செய்ய உறுதி செய்யப்பட்டாள்" (UDB) "திருமணத்திற்கு தீர்மானிக்கப்பட்டாள்." பெற்றோர்கள் பிள்ளைகளின் திருமணங்களை ஒழுங்குபடுத்துவது இயல்பான ஒன்று.
அவர்கள் கூடி வரும் முன்னே
"அவர்கள் உடல் உறவு வைக்குமுன்" என்று அர்த்தமாம்.
அவள் கர்ப்பம் அடைந்திருக்கக் காணப்பட்டாள்
"அவள் குழந்தையை பெற்றெடுக்கப்போகிறாள் என்பதை உணர்ந்தார்கள்"
பரிசுத்த ஆவியானவரால்
பரிசுத்த ஆவியானவர் மரியாள் குழந்தையை பெறும்படி பெலப்படுத்தினார்.
Matthew 1:20-21
இயேசுவின் பிறப்பிற்கு வழிவகுத்த நிகழ்வுகளை சொல்லும்படி இது தொடர்கிறது.
தோன்றினார்
சடிதியில் ஒரு தூதன் யோசேப்பினிடத்தில் வந்தார்
தாவீதின் குமாரன்
இந்த காரியத்தில், "
னுடைய குமாரன்" என்பது "
னுடைய சந்ததி". தாவீது யோசேப்பபினுடைய தகப்பன் அல்ல, ஆனால் யோசேப்பின் முன்னோன்.
அவளில் கருதரித்திருக்கிறவர் பரிசுத்த ஆவியானவரால் கருத்தரித்திருக்கிறது
"பரிசுத்த ஆவியானவர் கருத்தரித்த குழந்தையால் மரியாள் கர்ப்பம் அடைந்தாள்."
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள்
கர்த்தரே தூதனை அனுப்பியதால், குழந்தையானது ஆண் என்று தூதன் அறிந்திருந்தான்.
நீ அவரைப் பெயரிட்டு அழைப்பாய்
இது ஒரு கட்டளை: "அவர் பெயரை கூப்பிடு" அல்லது "அவற்றுக்கு பெயர் கொடு" அல்லது “பெயர் சூட்டு"
அவர் அவரின் மக்களை காப்பார்
"அவரின் மக்கள்" என்பது யூதர்களைக் குறிக்கிறது
Matthew 1:22-23
இயேசுவின் பிறப்பு நிறைவேறும் என்று உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தை மத்தேயு மேற்கோள் காட்டுகிறார்.
ஆண்டவரால் தீர்க்கதரிசியின் மூலமாக சொல்லப்பட்டதை
இதை நேர்மறையில் "வெகுகாலத்திற்கு முன்பு ஆண்டவர், ஏசாயா தீர்க்கதரிசியினிடம் எழுத சொன்னது" என்று குறிப்பிடலாம்.
இதோ
மாற்று மொழிபெயர்ப்பு: "பார்" அல்லது "கவனி" அல்லது "நான் என்ன சொல்கிறேன் என்பதற்கு கவனம் செலுத்துங்கள்."
கன்னிகை கர்ப்பம் தரித்து ஒரு மகனைப் பெறுவாள்
இந்த வசனம் ஏசாயா புத்தகத்திலிருந்து நேரிடையாக எடுக்கப்பட்டிருகிறது. ஏசாயா 7:14
Matthew 1:24-25
இந்தப் பகுதி இயேசுவின் பிறப்பிற்கு வழிவகுக்கும் சம்பவங்களுக்கு வித்திடுகிறது.
கட்டளையிடப்பட்டது
தூதன் அவனிடம் மரியாளை தன் மனைவியாக எடுத்துக்கொள்ளவும் அவருக்கு இயேசு என்று பெயரிடும்படியகவும் சொன்னார் (20
21).
அவளோடு உடலுறவு கொள்ளவில்லை
அவளோடு உறங்காதே
"அவளோடு உடல் உறவு வைக்கவில்லை"
அவரை இயேசு என்று அழைத்தான்
"யோசேப்பு தன் மகனுக்கு இயேசு என்று பெயரிட்டான்"
Matthew 2
Matthew 2:1-3
இந்த அதிகாரம் யூதருக்கு அரசனாக இயேசு பிறந்த போது என்ன நடந்தது என்பதை விவரிக்கிறது.
யூதேயாவிலுள்ள பெத்லகேம்
"யூதேயாவிலுள்ள பெத்லகேம் பட்டணத்தில்"
படித்த மனிதர்கள்
"நட்சத்திரங்களை படித்த மனிதர்கள்" படித்த மனிதர்கள்
"நட்சத்திரங்களை படித்த மனிதர்கள்"
ஏரோது
மகா ஏரோதை குறிக்கிறது.
யூதருக்கு அரசனாக பிறந்திருக்கிறவர் எங்கே?
அரசனாகப்போகிறவர் பிறந்திருக்கிறார் என்பதை அம்மனிதர்கள் அறிந்திருந்தனர். அவர் எங்கு இருக்கிறார் என்பதை அறிய முற்பட்டனர். "யூதருக்கு அரசனாகப் போகிறவர் பிறந்திருக்கிறார். அவர் எங்கே?
அவரின் நட்சத்திரம்
"அவரைக்குறித்து சொல்லும் நட்சத்திரம்" அல்லது "அவருடைய பிறப்பிற்கு சம்பந்தமுள்ள நட்சத்திரம்." அக்குழந்தை அந்த நட்சத்திரத்தின் சொந்தக்காரர் என்று அவர்கள் சொல்லவில்லை.
ஆராதனை
இவ்வார்த்தைக்கு பொருந்தக்கூடிய அர்த்தங்கள்: 1) அக்குழந்தை தெய்வீகமானது என்று கருதி ஆராதிக்க முற்ப்பட்டர்கள், அல்லது 2) மனித அரசனாக அவரை "கனப்படுத்த" விரும்பினார்கள். உங்களது மொழியில் இரண்டு அர்த்தங்களையும் சொல்லும் ஒரு வார்த்தை இருக்குமானால் அதை பயன்படுத்தலாம்.
அவன் கலங்கினான்
அவனுக்கு பதில் வேறொருவன் யூதருக்கு அரசனாக கூறப்படலாம் என்பதால் "அவன் வருத்தப்பட்டான்"
முழு எருசலேம்
"எருசலேமிலிருந்த மக்களில் அநேகர்" அரசன் ஏரோது என்ன செய்யக்கூடும் என்று பயந்திருந்தனர்.
Matthew 2:4-6
இது யூதருக்கு அரசனாக இயேசு பிறந்த போது என்ன நடந்தது என்பதை விவரிக்க தொடர்கிறது.
யூதேயாவிலுள்ள பெத்லகேமில்
மாற்று மொழிபெயர்ப்பு: "யூதேயாவிலுள்ள பெத்லகேமென்னும் பட்டணத்தில்."
தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டது இதுவே
செய்வினையில் "தீர்க்கதரிசி எழுதினது இதுவே." தீர்க்கதரிசியால் எழுதப்பட்டது தீர்க்கதரிசியால் எழுதப்பட்டது
"தீர்க்கதரிசி மீகா வால் எழுதப்பட்டது." நீ, பெத்லேகேமே, ...யூதாவின் தலைவர்களில் சிறியதல்ல "பெத்லகேமில் வாழ்பவர்களே, உங்கள் பட்டணம் மிகவும் முக்கியம்" (UDB) அல்லது "நீ, பெத்லேகேமே, ... முக்கியமான பட்டணங்களில் ஒன்று."
Matthew 2:7-8
"பெத்லகேமில் வாழ்பவர்களே, உங்கள் பட்டணம் மிகவும் முக்கியம்" அல்லது "நீ, பெத்லேகேமே, ... முக்கியமான பட்டணங்களில் ஒன்று."
பண்டிதர்களை ரகசியமாக ஏரோது அழைத்தான்
மற்றவர்கள் அறியாமல் ஏரோது பண்டிதர்களோடு பேசினான் என்பது அர்த்தமாம். சின்னக்குழந்தை
சின்னக்குழந்தை
குழந்தை இயேசுவைக் குறிக்கிறது.
ஆராதனை
மத்தேயு 1:2 இல் பயன்படுத்தின வார்த்தையையே பயன்படுத்தவும்.
Matthew 2:9-10
இது யூதருக்கு அரசனாக இயேசு பிறந்த போது என்ன நடந்தது என்பதை விவரிக்க தொடர்கிறது.
அரசன் சொன்னதைக் கேட்ட பிறகு
அரசனைக் கேட்ட பிறகு
"பின்பு" அல்லது "படித்த மனிதர்கள் அரசன் சொன்னதை கேட்ட பிறகு"
அவர்களுக்கு முன் சென்றது
மாற்று மொழிபெயர்ப்பு:"அவர்களை வழிநடத்தியது"
அசையாமல் நின்றது
அசையாமல் நின்றது
மறு மொழிபெயர்ப்பு "நின்றது"
Matthew 2:11-12
இது யூதருக்கு அரசனாக இயேசு பிறந்த போது என்ன நடந்தது என்பதை விவரிக்க தொடர்கிறது.
அவர்கள்
பண்டிதர்களைக் குறிக்கும்.
ஆராதனை
மத்தேயு 01:01|1:2] இல் பயன்படுத்தின வார்த்தையையே பயன்படுத்தவும்.
Matthew 2:13-15
இது யூதருக்கு அரசனாக இயேசு பிறந்த போது என்ன நடந்தது என்பதை விவரிக்க தொடர்கிறது.
அவர்கள் பிரிந்து சென்றார்கள்
“பண்டிதர்கள் பிரிந்து சென்றார்கள்”
எழுந்திரு, எடு ... ஓடு ...இரு ... நீ...கர்த்தர் யோசேப்போடு பேசுகிறார், அதனால் இவை யாவும் ஒருமையில் இருக்கவேண்டும்.
ஏரோது மரிக்கும் வரை
மத்தேயு 2:19வரை ஏரோது மரிக்க வில்லை. எத்தனை நாட்கள் அவர்கள் எகிப்தில் தங்கியிருந்தார்கள் என்பதை இவ்வாக்கியம் விளக்குகிறது. ஆனால் ஏரோது இந்த நேரத்தில் தான் மரித்தான் என்று கூறவில்லை.
எகிப்திலிருந்து நான் என் மகனை அழைத்தேன்
இது ஓசியாவிலிருந்து நேரிடையாக எடுக்கப்பட்டது (11:01). மத்தேயுவிலுள்ள கிரேக்க பதத்தின் வார்த்தை முறைஓசியாவிலுள்ள எபிரேய பதத்தினை விட சற்று வித்தியாசமாக உள்ளது. “எகிப்திற்கு வெளியே” என்ற பதத்தில் அழுத்தம் உள்ள, எதோ ஒரு இடம் அல்ல: “என்னுடைய மகனை எகிப்திலிருந்து நான் அழைத்தேன்.”
Matthew 2:16
இது யூதருக்கு அரசனாக இயேசு பிறந்த போது என்ன நடந்தது என்பதை விவரிக்க தொடர்கிறது.
பின்பு ஏரோது
ஏரோது, யோசேப்பு மரியாளோடும் இயேசுவோடும் எகிப்திற்கு ஓடிப்போன பின்பு என்ன செய்தான் என்பதை விவரிக்கிறது. மத்தேயு 2:19 வரை ஏரோது மரிக்க வில்லை.
அவன் பரியாசம் பண்ணப்பட்டான்.
“பண்டிதர்கள் அவனை சூழ்ச்சி செய்து கலங்கப்பண்ணினார்கள்
அவன் அனுப்பி ஆண் குழந்தைகளைக் கொன்றான்
அவன் அனுப்பி அனைத்துஆண் குழந்தைகளைக் கொன்றான்
மறு மொழிப்பெயர்ப்பு: “அனைத்து பையன்களையும் கொல்லும்ம்படி கட்டளை பிறப்பித்தான்” அல்லது “அவன் ஆண் குழந்தைகளை கொல்லும்படி வீரர்களை அனுப்பினான்.”
Matthew 2:17-18
இது யூதருக்கு அரசனாக இயேசு பிறந்த போது என்ன நடந்தது என்பதை விவரிக்க தொடர்கிறது. வசனம் 18 எரேமியாவிலிருந்து எடுக்கப்பட்டது (31:15). மத்தேயுவிலுள்ள கிரேக்க பதத்தின் வார்த்தை முறை எரேமியாவிலுள்ள எபிரேய பதத்தினை விட சற்று வித்தியாசமாக உள்ளது.
Matthew 2:19-21
இது யூதருக்கு அரசனாக இயேசு பிறந்த போது என்ன நடந்தது என்பதை விவரிக்க தொடர்கிறது.
இதோ
இது இந்த பெரிய கதையில் இன்னுமொரு சம்பவத்தின் ஆரம்பத்தை குறிக்கிறது. கடந்த சம்பவங்களிலிருந்த மக்கள் அல்லாமல் வேறே மக்களை ஈடுபடுத்தி இருக்கலாம். உங்கள் மொழியில் இதை செய்ய ஒரு வழி இருக்கலாம்.
சின்ன குழந்தையின் உயிரை எடுக்க முனைந்தவன்
சின்ன குழந்தையின் உயிரை எடுக்க முனைந்தவன்
“சின்ன குழந்தையைக் கொள்ள முனைந்தவன்.”
Matthew 2:22-23
இது யூதருக்கு அரசனாக இயேசு பிறந்த போது என்ன நடந்தது என்பதை விவரிக்க தொடர்கிறது.
ஆனால் அவன் கேட்ட பொழுது
ஆனால் அவன் கேட்ட பொழுது
“ஆனால் யோசேப்பு கேட்ட பொழுது
அவன் தகப்பன் ஏரோது
இது அர்கேலாயூவின் தகப்பன்.
அவன் அங்கு செல்ல பயந்தான்
“அவன்” யோசேப்பைக் குறிக்கிறது.
அவன் நசரேயன் என்று அழைக்கப்படுவார்
அவன் நசரேயன் என்று அழைக்கப்படுவான்
“அவர்” என்பது இயேசுவைக் குறிக்கிறது.
Matthew 3
Matthew 3:1-3
அநேக ஆண்டுகள் கழிந்து அதாவது யோவான் ஸ்நானகன் வளர்ந்து பிரசங்கம் செய்ய துவங்கும் பொழுது இந்தப் பகுதி நடைபெறுகிறது.
இது தான் அவன்
இந்த “அவன்” என்ற பிரதிப்பெயர் யோவான் ஸ்நானகனைக் குறிக்கிறது.
இவனே ஏசாயா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டவன். என்னவென்றால்,
மறு மொழிபெயர்ப்பு: “ஏசாயா தீர்க்கதரிசி இவ்வாறு சொன்ன பொழுது அவன் யோவான் ஸ்நானகனைப் பற்றியே கூறினான்.”
கர்த்தரின் வழியை ஆயத்தப்படுத்து, அவரின் பாதைகளை நேராக்கு
கர்த்தரின் வழியை ஆயத்தப்படுத்து, அவரின் பாதைகளை நேராக்கு
இது மக்களை மனம் திரும்புவதற்கு ஆயத்தப்படுவதற்காக யோவான் ஸ்நானகனின் அழைப்பின் செய்தியிலுள்ள உருவகமாகும்.
Matthew 3:4-6
யோவான் ஸ்நானகன் தொடர்ந்து பிரசங்கம் செய்துகொண்டிருந்தார்
அவர்கள் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்
அவர்கள் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்
“யோவான் அவர்களை ஞான ஸ்நானம் பண்ணுவித்தான்.”
அவர்கள்
எருசலேமிலிருந்தும், யூதேயா மற்றும் யோர்தான் நதியைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்து வந்த ஜனங்கள்.
Matthew 3:7-9
யோவான் ஸ்நானகன் தொடர்ந்து பிரசங்கம் செய்துகொண்டிருந்தார்
விஷமுள்ள சர்ப்பத்தின் பிள்ளைகளே
இது உருவணி ஆகும். விஷமுள்ள சர்ப்பங்கள் ஆபத்தானவைகளும் தீமையைக் குறிப்பதுமாகும். மறு மொழிபெயர்ப்பு: “தீமையான விஷமுள்ள சர்ப்பங்களே!” அல்லது “நீங்கள் விஷமுள்ள சர்ப்பத்தை போல தீமையானவர்கள்”
வரப்போகும் கோபாக்கினைக்கு தப்பித்துக்கொள்ள உங்களை எச்சரித்தவன் யார்
பாவத்தை விட மனதில்லாமல் தேவன் தரும் தண்டனையிலிருந்து மட்டும் தப்பித்துக்கொள்ள ஞானஸ்நானம் கொடுங்கள் என்று யோவானை அவர்கள் கேட்டுக் கொண்டதால், அவன் அவர்களை இந்த பதில் தேவையில்லாத கேள்வியைக் கேட்டுக் கடிந்து கொண்டான். “ஞானஸ்நானம் பெற்றால் தேவனுடைய கோபாக்கினையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று நினையாதே.”
வரப்போகிற கோபாக்கினையிலிருந்தது
மறு மொழிபெயர்ப்பு: “வரப்போகிற தண்டனையிலிருந்து” அல்லது “அவன் செயல்படவிருக்கிற தேவனுடைய கோபாக்கினையிலிருந்து” அல்லது “ஏனென்றால் தேவன் உங்களைத் தண்டிக்கப்போகிறார்.” “கோபாக்கினை” என்ற வார்த்தை தேவன் தரும் தண்டனையைக் குறிக்கிறது, ஏனென்றால் அவருடைய கோபம் தண்டனைக்கு முன்னிருக்கிறது.
நம் தகப்பன் ஆபிரகாம் நமக்குண்டு
“ஆபிரகாம் நம் முன்னோன்” அல்லது “நாம் ஆபிரகாமின் சந்ததி”
இந்தக் கல்லுகளிலிருந்தும் ஆபிரகாமுக்கு பிள்ளைகளை தேவனுக்கு எழுப்பக் கூடும்
“இந்தக் கல்லுகளிலிருந்தும் தேவன் மாம்ச சந்ததிகளை உண்டாக்கி ஆபிரகாமுக்குக் கொடுக்க முடியும்”
Matthew 3:10-12
யோவான் ஸ்நானகன் தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டிருந்தான்.
கோடரியானது ஏற்கனவே மரத்தின் வேரின் அருகே வைக்கப்பட்டுள்ளது. நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்.
கோடரியானது ஏற்கனவே மரத்தின் வேரின் அருகே வைக்கப்பட்டுள்ளது. நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்.
உருவக அர்த்தம் என்னவென்றால் “வெட்டப்போகிற மரத்தின் வேரருகே கோடாரியை வைத்துள்ள மனிதனைப் போல தேவன், பாவத்திலிருந்து நீங்கள் மனம் திரும்பவில்லை என்றால், உங்களைத் தண்டிக்கும்படி ஆயத்தமாய் இருக்கிறார்.”
நான் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்
யோவான் மனம்திரும்பின மக்களை ஞானஸ்நானம் பண்ணுவித்தான். ஆனால் எனக்கு பின் வருகிறவர் யோவானுக்கு பின் வருகிறவர் இயேசுவே
அவர் உங்களுக்குப் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்
இது ஒரு உருவகமாகும். இதன்அர்த்தம் என்னவென்றால் “உங்களுக்குள் தேவன் பரிசுத்த ஆவியை வைத்து, நியாயம் விசாரிக்க உன்னை அக்கினி ஊடே நடத்தி, தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கப்போகிறவர்களை சுத்திகரிக்கிறார்.”
அவர் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்
இயேசு உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
பதரை முழுவதும் கோதுமை உலைக்களத்தினின்று சுத்தம் செய்யும்படி அவரின் தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது
இந்த உருவகம் நீதியுள்ளவர்களையும் அநீதியுள்ளவர்களையும் கிறிஸ்து வேறுபிரிக்கும் முறைக்கும், ஒரு மனிதன் கோதுமையையும் பதரையும் பிரிக்கும் முறைக்கும் ஒப்புமைப்படுத்துகிறது. இது ஒரு உருவகம் ஆக மொழிபெயர்க்கப்பட்டால் அவ்வொப்புமைப் புரியும்: “கிறிஸ்துவானவர் தூற்றுக்கூடை தன் கையில் உள்ள மனிதனுக்கு ஒப்பாயிருக்கிறார்.”
அவரின் தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது
மறு மொழிபெயர்ப்பு: “கிறிஸ்து தூற்றுக்கூடையைப் பிடித்துக்கொண்டிருக்கிறார் ஏனென்றால் அவர் ஆயத்தமாயிருக்கிறார்.”
தூற்றுக்கூடை
இந்த உபகரணம் கோதுமையை புடைத்து பதரை கோதுமையினின்று பிரிப்பதற்கு பயன்படுவதாகும். கனமுள்ள தானியம் கீழே விழும். வேண்டாத பதர் காற்றினால் வாரிக்கொண்டு போகப்படும். இது வைக்கோல் தூவுகிற உபகரணத்துக்கு சமானம்.
அவரின் உலைக்களம்
தானியத்திலிருந்து பதரைப் பிரிக்கும் இடம் இது.மறு மொழிபெயர்ப்பு: “அவரின் மைதானம்” அல்லது “தானியத்திலிருந்து பதரைப் பிரிக்கும் மைதானம்”
அவரின் களஞ்சியத்தில் கோதுமையை சேர்ப்பார்...பதரையோ அவியாத அக்கினியில் சுட்டெரிப்பார்
அவரின் களஞ்சியத்தில் கோதுமையை சேர்ப்பார்...பதரையோ அவியாத அக்கினியில் சுட்டெரிப்பார்
தேவன் எவ்வாறு நீதிமான்களையும் தீமையானவர்களையும் பிரிக்கிறார் என்பதைச் சொல்லும் உருவகம் இதுவாகும். கோதுமையானது விவசாயின் களஞ்சியம் செல்வது போல் நீதிமான்கள் பரலோகம் செல்வர், பதரைப்போல் இருக்கும் மக்களை அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார்.
Matthew 3:13-15
இயேசு எப்படி யோவான் ஸ்நானகனால் ஞானஸ்நானம் பெற்றார் என்பதைக் குறிக்கும் கணக்கை இவை துவக்குகிறது.
உன்னால் நான் ஞானஸ்நானம் பண்ணப்படவேண்டும்.
உன்னால் நான் ஞானஸ்நானம் பண்ணப்படவேண்டும்.
“நான்” யோவான் ஸ்நானகன்; “நீங்கள்” இயேசு கிறிஸ்துவைக் குறிக்கும்.
நீர் என்னிடத்தில் வருகிறீரோ?
இது பதிலை எதிர்பார்க்காதக் கேள்வி. மறு மொழிபெயர்ப்பு: “நீர் பாவி இல்லை ஆதலால், நீர் என்னிடம் வரக்கூடாது, மாறாக நீர் என்னை ஞானஸ்நானம் பண்ணுவியும்.” “நீர்” இயேசு கிறிஸ்துவைக் குறிப்பதையும், “நான்” யோவானைக் குறிப்பதையும் குறித்துக்கொள்ளுங்கள்.
Matthew 3:16-17
இயேசு எப்படி யோவான் ஸ்நானகனால் ஞானஸ்நானம் பெற்றார் என்பதைக் குறிக்கும் காரியங்களை இவை துவக்குகிறது.
அவர் ஞானஸ்நானம் பெற்ற பின்பு
அவர் ஞானஸ்நானம் பெற்ற பின்பு
மாற்று மொழிபெயர்ப்பு: “யோவான் இயேசுவை ஞானஸ்நானம் பண்ணுவித்தப்பின்பு.”
வானங்கள் அவருக்குத் திறக்கப்பட்டது
மறு மொழிபெயர்ப்பு: “வானம் திறந்திருக்கிறதை அவர் கண்டார்” அல்லது “வானங்கள் திறக்கிறதை அவர் கண்டார்.”
புறாவைப்போல் கீழே இறங்கி வருகிறதை
புறாவைப்போல் கீழே இறங்கி வருகிறதை
இது 1. ஆவியானவர் புறாவைப்போல் இருந்தார் என்பது ஒரு சாதாரண கூற்றாக இருக்கலாம். 2. ஆவியானவர் மென்மையாக இயேசுவின் மேல் இறங்கினதை, புறா இறங்குவதற்கு, ஒப்புமையாக சொல்லப்பட்டிருக்கலாம்.
இதோ
இது இந்த பெரிய கதையில் இன்னுமொரு சம்பவத்தின் ஆரம்பத்தை குறிக்கிறது. கடந்த சம்பவங்களிலிருந்த மக்கள் அல்லாமல் வேறே மக்களை ஈடுபடுத்தி இருக்கலாம். உங்கள் மொழியில் இதை செய்ய ஒரு வழி இருக்கலாம்.
Matthew 4
Matthew 4:1-4
இந்தப்பகுதி சாத்தான் எப்படி இயேசுவை சோதித்தான் என்பதை விவரிக்கிறது.
சாத்தான். ... சோதிக்கிறவன்
இவைகள் ஒரே ஜந்துவைக் குறிக்கிறதினால், நீங்கள் ஒரே வார்த்தையைக் கூட அவ்விரண்டிற்கும் மாறாகப் பயன்படுத்தலாம்.
அவர் உபவாசமாயிருந்தார் ... அவர் பசியாயிருந்தார்
இவை இயேசுவைக் குறிக்கிறது.
நீர் தேவனுடைய குமாரனேயானால், கட்டளையிடும்
இது 1. சொந்த ஆதாயத்திற்காக அற்புதம் செய்ய ஒரு சோதனை, “நீர் தேவனுடைய குமரனே, அதினால் நீர் கட்டளையிடலாம்” 2. ஒரு சவால் அல்லது குற்றச்சாட்டு, “நீரே தேவனுடைய குமாரன் என்பதைக் கட்டளையிட்டு நிரூபியும்” (UDB). இயேசு தேவனுடைய குமாரன் என்று சாத்தான் அறிந்திருக்கக்கூடும் என்று அனுமானிப்பது சிறந்தது.
கல்லுகளை அப்பங்களாகும்படி கட்டளையிடும்
“இந்தக் கல்லுகளுக்கு சொல்லுங்கள், ‘அப்பமாகு!’”
Matthew 4:5-6
இந்தப்பகுதி சாத்தான் எப்படி இயேசுவை சோதித்தான் என்பதை விவரிக்கிறது.
நீர் தேவனுடைய குமாரனேயானால் கீழே குதியும்
இது 1. சொந்த ஆதாயத்திற்காக அற்புதம் செய்ய ஒரு சோதனை, “நீர் தேவனுடைய குமாரனாயிருப்பதால் கீழே குதியும்” 2. ஒரு சவால் அல்லது குற்றச்சாட்டு, “நீர் தேவனுடைய குமாரனே என்பதைக் கீழே குதித்து நிரூபியும்” (UDB). இயேசு தேவனுடைய குமாரன் என்று சாத்தான் அறிந்திருக்கக்கூடும் என்று அனுமானிப்பது சிறந்தது
கீழே
நிலத்தில்
அவர் கட்டளையிடுவார் ...“தேவன் தம்முடைய தூதர்களுக்கு உம்மை கவனிக்கும்படியாய்க்கட்டளையிடுவார்” அல்லது “தேவன் தம்முடைய தூதர்களுக்கு கட்டளையிடுவார், ‘அவரைப் பார்த்துக்கொள்ளுங்கள்.’”
Matthew 4:7-9
இந்தப்பகுதி சாத்தான் எப்படி இயேசுவை சோதித்தான் என்பதை விவரிக்கிறது.
மறுபடியும் எழுதப்பட்டிருகிறது.
மறுபடியும் எழுதப்பட்டிருகிறது
“மறுபடியும், வேதத்தில் உள்ளதை உங்களுக்கு சொல்லுவார்.”
அவன் அவரிடத்தில் சொன்னான்
அவன் அவரிடத்தில் சொன்னாரன்
“பிசாசு இயேசுவிடம் சொன்னான்”
இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்
“நான் இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்.” சோதனைக்காரன் “இவை எல்லாவற்றையும்” என்பதில் அழுத்தம் வைக்கிறான். ஒரு சிலவற்றை அல்ல.
Matthew 4:10-11
இந்தப்பகுதி சாத்தான் எப்படி இயேசுவை சோதித்தான் என்பதை விவரிக்கிறது.
இது மூன்றாவது முறையாக இயேசு சாத்தானைக் கடிந்துக்கொண்டது
பிசாசானவன்
“சாத்தானைக்” குறிக்க மத்தேயு வேறே பதத்தை உபயோகித்தான்.
இதோ
“இதோ” என்ற வார்த்தை பின்வரும் மிக முக்கியமான செய்திக்கு நம் கவனத்தைத் திருப்பும்படி ஏவுகிறது.
Matthew 4:12-13
கலிலேயாவில் இயேசுவின் ஊழியத்தின் துவக்கத்தை இந்தப் பகுதி விவரிக்கிறது
யோவான் கைது செய்யப்பட்டான்
“அரசன் யோவானைக் கைது செய்தான்.”
Matthew 4:14-16
கலிலேயாவில் இயேசுவின் ஊழியத்தின் துவக்கத்தை இந்தப் பகுதி விவரிக்கிறது
Matthew 4:17
கலிலேயாவில் இயேசுவின் ஊழியத்தின் துவக்கத்தை இந்தப் பகுதி விவரிக்கிறது
பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது
இதே போன்றதொன்றை மத்தேயு 3:1,2 இல் மொழிபெயர்த்ததைப் போல செய்யவும்.
Matthew 4:18-20
கலிலேயாவில் இயேசுவின் ஊழியத்தின் துவக்கத்தை இந்தப் பகுதி விவரிக்கிறது
வலையைப் போட்டு
“வலையை வீசி”
என்னை பின் தொடர்ந்து வா
இயேசு சீமோனையும் அந்திரேயாவையும் தன்னைப் பின் தொடரும்படியும் தனக்கு சீஷராகும்படியும் அழைத்தார். மறு மொழிபெயர்ப்பு: “என் சீடர்களாய் இருங்கள்.”
நான் உங்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக்குவேன்
மறு மொழிபெயர்ப்பு: “நீங்கள் மீன்களைப் பிடித்ததைப் போல் தேவனுக்காக மனிதர்களைப் பிடிக்க நான் உங்களுக்குக் கற்றுக்கொடுப்பேன்.”
Matthew 4:21-22
கலிலேயாவில் இயேசுவின் ஊழியத்தின் துவக்கத்தை இந்தப் பகுதி விவரிக்கிறது
அவர்கள் வலைகளை பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள்
அவர்கள் வலைகளை பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள்
“அவர்கள்” என்பது இரண்டு சகோதரர்கள் மற்றும் செபதியாவைக் குறிக்கலாம், அல்லது இரண்டு சகோதரர்களை மாத்திரம் குறிக்கலாம்.
அவர் அவர்களை அழைத்தார்
“இயேசு யோவான் மற்றும் யாக்கோபை அழைத்தார்.” இந்த பதம் இயேசு தன்னைப் பின் தொடரும்படியும், தன்னோடு வாழும்படியும், தன் சீஷராகும்படியும் அழைத்தார்.
உடனே
“அந்தப் பொழுதில்”
படகை விட்டு ... அவரைப் பின் தொடர்ந்தார்கள். ..இது ஒரு வாழ்க்கை மாற்றம் என்பது புரியவேண்டும். அவர்கள் இனி மீனவர்களல்ல. வாழ்நாள் முழுவதும் இயேசுவைப் பின் தொடர தங்கள் குடும்ப வியாபாரத்தை விட்டார்கள்.
Matthew 4:23-25
கலிலேயாவில் இயேசுவின் ஊழியத்தின் துவக்கத்தை இந்தப் பகுதி விவரிக்கிறது.
எல்லா வகையான நோய்களையும் எல்லா வகையான வியாதிகளையும்
“ஒவ்வொரு நோயும் ஒவ்வொரு வியாதியும்”
“வியாதி” மற்றும் “நோய்” என்ற வார்த்தைகள் அர்த்தத்தில் மிக ஒற்றுமை உடையவைகள். முடியுமானால் இரண்டு வார்த்தைகளாக மொழிபெயர்க்கலாம். “நோய்” ஒரு மனிதனை வியாதிப்பட வைக்கிறது.”வியாதி” என்பது உடல் பெலவீனம் அல்லது நோய்வாய்ப்படும்போது ஏற்படும் உடலுபாதை ஆகும்.
தெக்கபோலி
“பத்துப்பட்டணங்கள்” (UDB), கலிலேயாக் கடலோரத்தின் தென்கிழக்குப் பகுதி
Matthew 5
Matthew 5:1-4
அதிகாரங்கள் 5
7 ஒரே சம்பவம். இயேசு மலை மேல் ஏறி தன் சீடர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.
அவர் தன் வாயைத் திறந்தார்
“இயேசு பேசத் தொடங்கினார்”
அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்
“அவர்களுக்கு” என்ற வார்த்தை சீடர்களைக் குறிக்கிறது.
ஆவியில் எளிமை
“தேவன் தங்களுக்குத் தேவை என்று அறிந்தவர்கள்”
துயரப்படுகிறவர்கள்
இம்மக்கள் சோகமாக இருக்கக் காரணங்கள்: 1. உலகத்தின் பாவநிலை அல்லது 2. அவர்களுடைய சுயப்பாவங்கள் அல்லது 3. ஒருவருடைய மரணம். துயரப்படுகிறதற்கானக் காரணத்தை உங்கள் மொழியானது வேண்டினாலொழிய சொல்லவேண்டாம்.
அவர்கள் ஆறுதல் அடைவார்கள்
மறு மொழிபெயர்ப்பு: “தேவன் அவர்களை ஆறுதல்படுத்துவார்.”
Matthew 5:5-8
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
நீதியின் மேல் பசி, தாகம்
“உண்பதிலும் குடிப்பதிலும் உள்ள விருப்பம் நேர்மையாக வாழவும் விருப்பம்.” அவர்கள் நிரப்பப்படுவார்கள்
“தேவன் அவர்களை நிரப்புவார்.”
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்
“இருதயத்தில் சுத்தமுள்ள மக்கள்”
அவர்கள் தேவனை பார்ப்பார்கள்
“அவர்கள் தேவனோடு வாழ அனுமதிக்கப்படுவார்கள்” அல்லது”தேவன் அவர்களைத் தன்னோடு வாழ அனுமதிப்பார்.”
Matthew 5:9-10
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
சமாதானம் பண்ணுபவர்கள்
இவர்கள் மற்றவர்கள் தங்களுக்குள் சமாதானமாய் இருக்க உதவுபவர்கள்.
தேவனுடைய மகன்கள்
இவர்கள் தேவனுடைய சொந்தப் பிள்ளைகள்
துன்பப்படுத்தப்படுபவர்கள்
மறு மொழிபெயர்ப்பு: “மற்றவர்களால் நேர்மையாக நடத்தப்படாதவர்கள்”
நீதியினிமித்தம்
“ஏனென்றால் தேவன் அவர்கள் செய்ய வேண்டும் என்று விரும்புவதை அவர்கள் செய்கிறார்கள்”
பரலோக ராஜ்ஜியம் அவர்களுடையது
“தேவன் பரலோக ராஜ்ஜியத்தில் அவர்கள் வாழ அனுமதித்து இருக்கிறார்.”பரலோக ராஜ்ஜியம் அவர்களுடையது அல்ல; ஆனால், தேவன் தம்முடைய பிரசன்னத்தில் வாழ உரிமைக்கொடுத்தார்.
Matthew 5:11-12
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
என்னிமித்தம் பொய்யாய் உங்களுக்கு எதிராக
“என்னை நீ பின்பற்றுவதால் உன்பேரில் உண்மையல்லாததை” அல்லது “என்னை பின்பற்றுவதைத் தவிர நீ எதுவும் செய்யாமல் அதற்கு தகுதியற்றவனாய் இருந்தபோதும்”
களிகூர்ந்து மகிழக்கடவாய்
“களிகூரு”, “மகிழ்ந்திரு” இரண்டும் ஒன்றையே சொல்லுகிறது. இயேசு தன்னை க் கேட்டுக்கொண்டிருக்கிறவர்கள் களிகூர மட்டும் அல்ல முடியுமானால் இன்னும் சந்தோஷமாய் இருக்க விரும்புகிறார்.
Matthew 5:13-14
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
நீங்கள் உலகத்திற்கு உப்பாயிருக்கிறீர்கள்
“நீங்கள் உலகத்திலுள்ள மக்களுக்கு உப்பாயிருக்கிறீர்கள்” அல்லது “உணவிற்கு உப்பு எப்படியோ, உலகத்திற்கு நீங்கள் அப்படி.” இது 1. “உப்பானது உணவை சுவையாக்குவதைப்போல், நீங்கள் உலகத்திலுள்ள மக்கள் நல்லவர்களாகும் பொருட்டு அவர்களை பாதிக்க வேண்டும்” 2. “உப்பு உணவை பதப்படுத்துவது போல் நீங்கள் உலக மக்கள் கெட்டுப்போவதிலிருந்து காப்பீர்கள்” என்று அர்த்தம் கொள்ளலாம்.
உப்பு சாரமற்றுப்போனால்
இது 1. “உப்பு செய்ய வேண்டியதை செய்யாமல் தன் வல்லமையை இழக்குமானால்” அல்லது 2. “உப்பு சாரம் அற்று போனால்”
எவ்வாறு மறுபடியும் சாரமாக்கப்படும்?
“எவ்வாறு மறுபடியும் உபயோகமாக்கப்படும்?” அல்லது “அது மறுபடியும் உபயோகப்பட வேறே வழி இல்லை.”
மனிதரால் மிதிக்கப்படுவதற்கும் வெளியிலே கொட்டப்படுவதற்கும்
“மனிதர்கள் நடந்து செல்லும் சாலைகளில் கொட்டப்படுவதற்கு மாத்திரமே பயன்படும்”
நீங்கள் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறீர்கள்
“நீங்கள் உலகத்திலுள்ள மக்களுக்கு ஒளியை போன்றவர்கள்.”
மலை மேல் இருக்கும் பட்டணம் மறைந்திருக்க மாட்டாது
“மலை மேல் இருக்கும் பட்டணத்தின் ஒளியானது இரவில் மறைந்திருக்க மாட்டாது” அல்லது”மலை மேலுள்ள பட்டணத்தின் விளக்குகளை ஒவ்வொருவரும் காண்பார்கள்”
Matthew 5:15-16
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
மக்கள் விளக்கைக் கொளுத்தவும் மாடார்கள்
“மக்கள் விளக்கைக் கொளுத்தவும் மாடார்கள்”
விளக்கு
இது ஒரு திரியுள்ள எரிப்பான் ஒலிவ எண்ணெயும் உள்ள ஒரு சின்ன கிண்ணம். முக்கியமான விஷயம் என்னவென்றால் அது ஒளி தந்தது.
கூடையின் கீழ் வை
“கூடையின் கீழ் விளக்கை வைக்க.” விளக்கை கொளுத்தி யாரும் வெளிச்சம் காணாத வண்ணம் அதைக் கூடையின் கீழ் வைத்தால் முட்டாள்தனமானது என்று கூறுகிறது.
Matthew 5:17-18
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
ஒரு எழுத்தாகிலும் அல்லது ஒரு எழுத்தின் உறுப்பாகிலும்*
“ஒரு எழுத்தாகிலும் அல்லது ஒரு எழுத்தின் உறுப்பாகிலும்” அல்லது “முக்கியமல்லாத யாதொரு நியப்பிரமாணங்களானாலும்”
வானம் மற்றும் பூமி
“தேவன் படைத்த ஒவ்வொன்றும்”
எல்லாம் நிறைவேற்றி முடிந்தது
“நியாயப்பிரமாணத்தில் எழுதப்பட்ட எல்லாவற்றையும் தேவன் செய்து முடித்தார்,”
Matthew 5:19-20
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
இந்தக் கட்டளைகளில் சிறிதான யாதொன்றையும் மீறுகிறவர்
“இந்தக் கட்டளைகளில் யாதொன்றிற்கும் கீழ்ப்படியாதவர், சிறிதான யாதொன்றிற்கும் கூட”
சிறியவன் என்று அழைக்கப்படுவான்
“தேவன் இவர்கள் முக்கியமில்லாதவர்கள் என்று சொல்லுவார்.”
சிறியவன்
“சிறிதளவே முக்கியத்துவம்”
அவர்களுக்கு போதிக்கிறவன்
தேவனுடைய எதாவது கட்டளைகளை போதிக்கிறவன்
பெரியவன்
“மிகவும் முக்கியமானவன்”
நீங்கள் ... உங்களுடைய ... நீங்கள்
இவை பன்மையில் உள்ளது
Matthew 5:21-22
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருந்தார். “நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்கள்”மற்றும் “நான் உங்களுக்கு சொல்லுகிறேன்” என்பவைகள் பன்மையில் சொல்லப்பட்டிருக்கிறது. “கொலை செய்யாதிருப்பாயாக” என்பது ஒருமையில் சொல்லப்பட்டிருந்தாலும் பன்மையில் மொழிபெயர்க்கப்படவேண்டும்.
ஆனால் நான் சொல்லுகிறேன்
இந்த “நான்” அழுத்தி சொல்லப்பட்டிருகிறது. இது இயேசுவானவர் சொன்னவைகள் தேவனுடைய கட்டளைகளுக்கு நிகராக முக்கியமானவைகள் என்று காட்டுகிறது. இந்த பதத்தை அழுத்தி காண்பிக்க மொழிபெயருங்கள்.
கொலை செய் ... கொலை செய்கிறவன் ,இது கொலையைக் குறிக்கிறது, ஆயினும் எல்லா விதமான கொலைகளை அல்ல.
சகோதரன்
இது சொந்த சகோதரனையோ அல்லது அருகில் வசிப்பவரோ அல்ல, சக விசுவாசியைக் குறிக்கிறது.
தகுதியற்ற மனிதன் ... முட்டாள்
சரியாக யோசிக்க முடியாத மக்களுக்கான மானக்கேடு. “தகுதியற்ற மனிதன்” “மூளை இல்லதவனுக்கு,” சமமாகும். “முட்டாள்கள்” தேவனுக்கு கீழ்படியாமை என்னும் எண்ணத்தைச் சேர்க்கிறது.
ஆலோசனைச் சங்கம்
இது அவ்விடத்து ஆலோனைச் சங்கம், எருசலேமிலுள்ள நியாய சங்கம் அல்ல.
Matthew 5:23-24
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
நீங்கள்
இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருந்தார். இங்கு கூறப்பட்டிருக்கிற “நீ”, உன்னுடைய” என்பவைகள் ஒருமையில் உள்ளது, ஆனால் உங்கள் மொழி இவைகளை பன்மையில் மொழிபெயர்க்க தேவைப்படலாம்.
காணிக்கையை செலுத்துகிறது
“உங்கள் காணிக்கையைக் கொடுக்கிறது” அல்லது “உங்கள் காணிக்கைகளைக் கொண்டுவருகிறது”
அங்கு நினைவுகூர்ந்தால்
“பலிபீடத்தண்டையில் நிற்கும்போது நீ நினைவுகூர்ந்தால்”
உனக்கெதிராக உன் சகோதரனுக்கு யாதொரு குறை இருந்தால்
“மற்றொருவன் உன்னால் செய்யப்பட்ட பாதிப்பையோ அல்லது குறையையோ நினைவுகூர்ந்தால்”
முதலாவது உன் சகோதரனோடு ஒப்புரவாகு
“காணிக்கை செலுத்துமுன் உன் சகோதரனோடு சமாதானம் பண்ணு”
Matthew 5:25-26
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருந்தார். இங்கு கூறப்பட்டிருக்கிற “நீ”, உன்னுடைய” என்பவைகள் ஒருமையில் உள்ளது, ஆனால் உங்கள் மொழி இவைகளை பன்மையில் மொழிபெயர்க்க தேவைப்படலாம்.
எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும்
“முடிவில் உன் எதிராளி உன்னை ஒப்புக்கொடுக்கலாம்” அல்லது “அதனால் உன் எதிராளி உன்னை ஒப்புக்கொடுக்கலாம்”
நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடுக்கலாம்
“நீதிமன்றத்திற்கு உன்னை கூட்டி கொண்டு போகலாம்”
அதிகாரி
நீதிபதியின் தீர்மானங்களை நிறைவேற்ற அதிகாரம் உள்ளவன்
அங்கு
சிறைச்சாலை
Matthew 5:27-28
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருந்தார். இங்கு கூறப்பட்டிருக்கிற “நீ கேட்டிருக்கிறாய்”, நான் உன்னோடு சொல்லுவது” என்பவைகள் ஒருமையில் உள்ளது, ஆனால் உங்கள் மொழி இவைகளை பன்மையில் மொழிபெயர்க்க தேவைப்படலாம்.
ஒப்புக்கொடு
இந்த வார்த்தை செயல்படுகிறது அல்லது ஏதாகிலும் செய்கிறது என்று அர்த்தப்படும்.
ஆனால் நான் உனக்கு சொல்லுகிறேன்
இந்த “நான்” அழுத்தி சொல்லப்பட்டிருக்கிறது. இது இயேசுவானவர் சொன்னவைகள் தேவனுடைய கட்டளைகளுக்கு நிகராக முக்கியமானவைகள் என்று காட்டுகிறது. இந்த பதத்தை அழுத்தி காண்பிக்க மொழிபெயருங்கள்.
ஓரு பெண்ணை இச்சையோடு ஒருவன் பார்த்தால் அவளோடு ஏற்கனவே இருதயத்தில் விபச்சாரம் செய்தாயிற்று
இந்த உருவகம் ஒரு பெண்ணை இச்சிக்கிறவன், ஒரு பெண்ணோடு விபச்சசாரம் செய்தவனுக்கு இணையாக குற்றவாளியாவான் என்பதைக் காட்டுகிறது.
ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கிறவன்
“இன்னொரு பெண்ணை அடைய மனதில் விரும்புகிறவன்”
Matthew 5:29-30
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருந்தார். இங்கு கூறப்பட்டிருக்கிற “நீ”, உன்னுடைய” என்பவைகள் ஒருமையில் உள்ளது, ஆனால் உங்கள் மொழி இவைகளை பன்மையில் மொழிபெயர்க்க தேவைப்படலாம்.
வலது கண் ... வலது கை
மிகவும் முக்கியமான கண் அல்லது கை, இடது கண் அல்லது கைக்கு எதிர்பட்டிருக்கிறது. “வலது” என்பதை “சிறந்தது” என்று மொழிபெயர்க்கவேண்டும். அல்லது “மட்டும்.”
உன் வலது கண் உன்னை இடறச் செய்யும்மானால்
“உன் வலது கண் உன்னை இடறச்செய்யுமானால்” அல்லது “நீ காண்பதால் பாவம் செய்ய விரும்பினால்.” “இடறல்” “பாவத்திற்கு” உருவகமாகும். இயேசு இதை வேடிக்கையாக பயன்படுத்துகிறார். ஏனென்றால் இடறாமல் இருக்க மக்கள் கண்களையே பயன்படுத்துகின்றனர்.
பிடுங்கிப்போடு
“கட்டாயப்படுத்தி அதை அகற்று” அல்லது “அதை அழித்துவிடு” (UDB). வலது கண் என்று பிரத்தியேகமாக குறிப்பிடப்படவில்லை என்றால், “உன் கண்களைப் பிடிங்கிப்போடு” என்று மொழிபெயர்க்கவும். கண்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்குமானால், “அவைகளைப் பிடிங்கிப்போடு” என்று மொழிபெயர்க்கவும்.
உன்னிலிருந்து அதை எறிந்து போடு
“அதை அகற்று”
உன் உடல் பாகங்களில் ஒன்று அழிய வேண்டும்
“உன் உடலின் ஒரு பகுதியை நீ இழக்கவேண்டும்”
உன் வலது கை
இந்த ஆகுபெயர் முழு மனிதனின் செயல்பாட்டிற்கும் கையை இணைக்கப் பயன்படுத்தப்பட்டிருகிறது.
Matthew 5:31-32
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
அது... சொல்லப்பட்டது
கர்த்தரே “சொன்னவர்” (UDB). இயேசுவானவர் தாம் கர்த்தரையோ அல்லது கர்த்தருடைய வார்த்தையையோ அவர் ஏற்றுக்கொள்ள மறுக்கவில்லை என்பதை எளிமையாக செயல்பாட்டுவினையைப் பயன்படுத்திருக்கிறார்.
தன் மனைவியை அனுப்பிவிடுகிறவன்
விவாகரத்திற்கு இது சுற்றிவழைத்துக் கூறும் சொல் ஆகும்.
கொடுக்கக்கடவன்
இது ஒரு கட்டளை: “அவன் கொடுக்கவேண்டும்.”
ஆனால் நான் உங்களுக்கு சொல்லுகிறேன்
இயேசு “சொல்லப்பட்டதிலிருந்து” தாம் சொல்வது மாறுபட்டது என்பதை சுட்டிக்காட்டுகிறார். அழுத்தம் “நான்” என்ற வார்த்தையில் உள்ளது ஏனென்றால் “சொன்னவற்றை” விட தான் மிக முக்கியமானவர் என்பதை சொல்கிறார்.
விபச்சாரம் செய்யப் பண்ணுகிறவன்
சரியாக ஒரு பெண்ணை விவாகரத்து செய்யாதவனே “அவளை விபச்சாரம் செய்ய வைக்கிறான்” (மத்தேயு 5:27 இல் உள்ள “விபச்சாரம் செய்ய தூண்டிய” என்ற பதத்திற்கும் இங்கு பயன்படுத்தின வார்த்தைகளையே பயன்படுத்தவும்). அநேக கலாச்சாரத்தில் அவள் மறு திருமணம் செய்வது சாதரணமாக இருக்கலாம், ஆனால் விவாகரத்து சரியாகச் செய்யப்படவில்லை என்றால், அந்த மறு மணமும் விபச்சாரமே.
Matthew 5:33-35
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருந்தார். இங்கு கூறப்பட்டிருக்கிற “நீ கேட்டிருக்கிறாய்” என்பதில் உள்ள “நீ”, மற்றும் “நான் உங்களுக்கு சொல்லுகிறேன்” என்பவைகள் பன்மையில் உள்ளது, ஆனால், “நீங்கள் சத்தியம் பண்ணாமல்” இதில் உள்ள “நீங்கள்” ஒருமையில் உள்ளது.
சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருகிரீர்கள்
“உங்கள் மதத் தலைவர்கள் உங்களுக்கு சொல்லியிருகிறார்கள், ‘பூர்வத்தாருக்கு தேவன் “சத்தியம் பண்ணவேண்டாம்” என்று சொன்னார்.’” கர்த்தரே “சொன்னவர்.” இயேசுவானவர் தாம் கர்த்தரையோ அல்லது கர்த்தருடைய வார்த்தையையோ அவர் ஏற்றுக்கொள்ள மறுக்கவில்லை என்பதை எளிமையாக்க எதிர்மறையை பயன்படுத்திருக்கிறார். ஆனால், உங்களுடையதல்லாததை மற்றவர்கள் உங்கள் வார்த்தைகளை நம்பும்படி பயன்படுத்தவேண்டாம் என்று தன்னைக் கேட்டுக்கொண்டிருக்கிறவர்களுக்குச் சொன்னார்.
அது சொல்லப்பட்டது
மத்தேயு 5:31இல் மொழிபெயர்த்தததைப்போல செய்யவும்.
ஆணை ... சத்தியம்...இது 1. தேவனிடமும் மக்களிடமும், தேவன் உங்களிடம் எதிர்பார்கிறதையே செய்வீர்கள் என்பதை சொல்லவும் (UDB). அல்லது 2. நீ பார்த்ததில் உள்ள உண்மையை சொல்லுகிறாய் என்று தேவன் அறிவார் என்று மக்களிடம் சொல்லுங்கள்.
ஆனால் நான் உங்களுக்கு சொல்லுகிறேன்
ஆனால் நான் உங்களுக்கு சொல்லுகிறேன்
மத்தேயு 5:31, 32 இல் உள்ளதைப்போல மொழிபெயர்க்கவும்.
சத்தியம் பண்ணவேண்டாம் ... வானத்தின் மேலும் ... தேவனுடைய சிங்காசனம் ... பூமியின் மேலும் ... அவரின் பாதப்படி ... எருசலேமின் மேலும் ... மகா ராஜாவின் நகரம்.
இது ஏசாயாவிலிருந்தும் (66:1); சங்கீதத்திலிருந்ததுமான (148:1,2
தேவன்
“மகா ராஜா”) உருவகம். இயேசுவைக் கேட்டுக்கொண்டிருக்கிறவர்கள் தங்களுடைய பூமியின் அரசர்களின் சிங்கசனத்தையோ, அரசருடைய கீழான பாதபீடத்தையோ அல்லது அவன் வாழும் நகரத்தையோ தங்களுடையதாகக் கருதி தாங்கள் சொல்லும் வார்த்தைகளை உறுதிப்படுத்த நினையாததைப்போல், பரலோகத்தையோ, பூமியையோ, எருசலேமையோ, பயன்படுத்தக்கூடாது.
ஒருபோதும் சத்தியம் பண்ணவேண்டாம்.
உங்கள் மொழியில் கட்டளைகளுக்கு பன்மை வடிவம் இருக்குமானால் அதை இங்கு பயன்படுத்துங்கள். “பொய் சத்தியம் பண்ணாமல்” (5:33) என்பது கேட்கிறவனை பொய்யாக சத்தியம் பண்ணவொட்டாமல் சத்தியம் பண்ணலாம் என்பதை அனுமதிக்கிறது. “ஒருபோதும் சத்தியம் பண்ணாதே” என்பது சத்தியம் பண்ணுவதைத் தடுக்கிறது.
சத்தியம் பண்ணாதே
வசனம் 33றை மொழிபெயர்த்ததைப்போல் செய்யவும்
Matthew 5:36-37
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருகிறார். “ நீ சத்தியம் பண்ணுவாயா” என்பதில் உள்ள “நீ”, மற்றும் “நீ கூடாதே” என்பவைகள் ஒருமையில் உள்ளது. நீங்கள் அவற்றை பன்மையில் மொழிபெயர்க்கலாம். “உங்கள் பேச்சில்”உள்ள “உங்கள்” பன்மையில் உள்ளது.
தேவனுடைய சிங்காசனம், பாதபீடம், பூமிக்குரிய வீடு ஆகியவற்றின் மீது சத்தியம் பண்ண இவைகள் தங்களுடையது அல்ல என்று தன்னைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு இயேசு மத்தேயு05:33, 5:34
35 இல் சொன்னார். இங்கு, அவைகளுடைய தலைகளும் அவர்களுடையது அல்ல என்பதையும் சொல்லுகிறார்.
சத்தியம்
வசனம் 5:33,34ஐ மொழிபெயர்த்ததைப்போல் செய்யவும்
உங்கள் பேச்சு ‘உள்ளதை, உள்ளதென்றும்’ என்றும், அல்லது ‘இல்லதை, இல்லதென்றும்’ இருக்கக் கடவது.
“’ஆம்’ என்று நீங்கள் நினைத்தால் ‘ஆம்’என்று சொல்லவும், ‘இல்லை’ என்று நினைத்தால் ‘இல்லை’ என்று’ சொல்லுங்கள்.”
Matthew 5:38-39
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருகிறார்.
சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டீர்கள்
வசனம் 5:33ஐ மொழிபெயர்த்ததைப்போல் செய்யவும்
நீங்கள் கேள்விப்பட்டீர்கள்
“நீ” ஒருமையில் உள்ளது
கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல்
மற்றவர்கள் தங்களுக்கு செய்வதை அவர்களுக்கு திரும்ப செய்ய மக்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆயினும் பாதிப்புக்கு சமமாக.
ஆனால் நான் உங்களுக்கு சொல்லுகிறேன்
வசனம் 5:31,32ஐ மொழிபெயர்த்ததைப்போல் செய்யவும்
பொல்லாதவன்
“ஒரு பொல்லாத மனிதன்” அல்லது “உங்களைக் காயப்படுத்துபவன்”
உன் வலது கன்னத்தில் யாரேனும் அறைந்தால், திருப்பி
இவையெல்லாம் பன்மையில் உள்ளது.
அறைந்தால் ... உன் வலது கன்னம்
இயேசுவின் கலாச்சாராத்தில் ஒரு மனிதனின் பக்கவாட்டில் அடிப்பது அவமானமாகும். கண், கை, போல “வலது” கன்னம் இடதைவிட முக்கியமாக கருதப்படுகிறதினால் அதை அறைதல்... மிகவும் மோசமான அவமானமாகும். அடித்தல்
இந்த வினைச்சொல் திறந்திருக்கும் கையின் பின் பக்கத்தை வைத்து அறைந்ததை காட்டுகிறது.
அவனுக்கு மற்றதையும் காட்டு
“அவன் மற்ற கன்னத்திலும் அறையட்டும்.”
Matthew 5:40-42
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருகிறார். எல்லா “நீ” ,“உன்னுடைய” மற்றும் “விடு”, “போ”, “கொடு”, “திரும்பாதே” என்ற கட்டளைகள் ஒருமையில் உள்ளது. இவைகளை பன்மையில் மொழிபெயர்க்கலாம்.
வஸ்திரம் .... அங்கி
“வஸ்திரம்” என்பது கனமான சட்டையை போல உடலை ஒட்டி அணியப்படுவது. “அங்கி” வஸ்திரத்தை விட மதிப்புடையது. பின் வஸ்திரத்தின் மேல் உஷ்ணத்திற்காக இரவில் அணியப்படுவதாகும்.
அவனை விடு ... வைத்துக்கொள்ள
“அவனுக்குக் கொடு”
யாராயினும்
எந்த மனிதனும் ஒரு மைல்
ஒரு மைல்
ஆயிரமுழம், ஒரு ரோம போர் சேவகன் மற்றவனைத் தன் சுமையை அடுத்தவனை சுமக்க வைக்க சட்டத்தில் இடமுண்டு.
அவனோடு
இது உன்னை தன்னோடு வரும்படி கட்டாயம் பண்ணுபவனைக் குறிக்கும்.
அவனோடு இரண்டு
“அவன் கட்டாயப்படுத்தும் ஒரு மைல் தூரம் போ, பின்னர் இன்னொரு மைல் கூடப்போ”
Matthew 5:43-45
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருகிறார். “நீ சிநேகித்து ... உன் சத்துருவை பகைப்பாயாக” என்பது மட்டும் ஒருமையில் உள்ளது. ஆனால் பன்மையில் மொழிபெயர்க்கவும். மற்ற “நீங்கள்” என்ற பதமும் “நேசி”, “ஜெபி” என்ற கட்டளைகள் பன்மையில் உள்ளது.
சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்
வசனம் 5:33ஐ மொழிபெயர்த்ததைப்போல் செய்யவும்
“அயலான்” என்றச் சொல் அதே சமுதாயத்தின் உறுப்பினர்களையும் அல்லது நன்றாக கவனிக்க விரும்பும் மக்கள் குழுவையும் குறிக்கிறது. வெறுமனே அருகில் வசிப்பவர்களை இது குறிக்கவில்லை. இதை நீங்கள் பன்மையில் மொழிபெயர்த்தல் வேண்டும்.
நான் உங்களுக்கு சொல்லுகிறேன்
நான் உங்களுக்கு சொல்லுகிறேன்
வசனம் 5:31, 32 ஐ மொழிபெயர்த்ததைப்போல் செய்யவும்
உங்கள் தகப்பனுக்கு மகன்களாக இருப்பீர்கள்
“உங்கள் தகப்பனுடைய குணாதிசயம் உங்களுக்கு இருக்கலாம்”
Matthew 5:46-48
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருகிறார். “நீங்கள்”, “உங்களுடைய” என்பவைகள் பன்மையில் உள்ளது.
வாழ்த்து
இது, கேட்பவன் நலமாக இருக்க விரும்புவதைக் காண்பிக்கும் ஒரு பொதுவான வார்த்தையாகும்.
இந்த வசனங்களில் உள்ள நான்கு கேள்விகளும் பதிலை எதிர்பார்க்கவில்லை. UDB இல் அவற்றை வாக்கியங்களாக எப்படி மாற்றலாம் என்று காண்பிக்கிறது.
Matthew 6
Matthew 6:1-2
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். எல்லா “நீங்கள்” “உன்னுடைய” ஆகியவைகள் பன்மையில் உள்ளது.
உனக்கு முன்பாக எக்காளம் ஊதாதே
உனக்கு முன்பாக எக்காளம் ஊதாதே
மக்கள் கூட்டத்தில் எக்காளம் ஊதும் ஒருவனைப்போல் உனக்கு கவனத்தை ஈர்க்காதே.
துதி
மத்தேயு 5:15, 16இல் உள்ள அதே வார்த்தையை பயன்படுத்தவும்
Matthew 6:3-4
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். எல்லா “நீங்கள்” “உன்னுடைய” ஆகியவைகள் பன்மையில் உள்ளது.
உன் வலது கை செய்வதை உன் இடது கை அறிய விடாதே
இது முழு இரகசியத்திற்கான ஒரு உருவகம். கைகள் எப்பொழுதும் இணைந்தே வேலை செய்கிறவைகள். மற்ற கை செய்வதை மறு கை எப்பொழுதும் “அறிந்திருக்கும்” என்று சொல்லலாம். ஆனால் அவ்வாறு நெருங்கி இருக்கும் அவை கூட ஏழைகளுக்கு உதவி செய்வதை அறிய நீ அனுமதிக்கக்கூடாது.
உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதாக.
“மற்றவர்கள் அறியாது நீ ஏழைகளுக்கு உதவவேண்டும்”
Matthew 6:5-7
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். வசனங்கள் 5,6, இல் இருக்கும் எல்லா “நீங்கள்” “உன்னுடைய” ஆகியவைகள் பன்மையில் உள்ளது. 6 இல் அவைகள் ஒருமையில் உள்ளது. அவற்றை பன்மையாக மொழிபெயர்க்கலாம்.
நிச்சயமாக நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்
“நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்”
உன் உள்ளறைக்குள் பிரவேசி
“ஒரு தனித்த இடத்திற்கு போ” அல்லது “ஒரு உள்ளறைக்குள் போ”
அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா
“மக்கள் தனிமையில் என்ன செய்கிறார்கள் என்பதை உன் பிதா பார்க்கிறார்” என்று மொழிபெயர்க்கலாம்.
திரும்ப திரும்ப வருகிற தேவையற்றவைகள்
மதியற்ற வார்த்தைகளை திரும்ப திரும்பச் சொல்வது.
அதிகமாய் பேசுவது
“நீண்ட ஜெபங்கள்” அல்லது “அதிக வார்த்தைகள்”
Matthew 6:8-10
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். “ஜெபம்பண்ணும் விதமாவது” என்று சொல்லும்போது அவர் மக்களைப் பார்த்து பன்மையில் சொல்லுகிறார். “உன்னுடைய” “பரலோகத்திலிருக்கும் பிதா” அன்று வரும்போதெல்லாம் ஒருமையில் உள்ளது.
உம்முடைய நாமம் பரிசுத்தப் படட்டும்
உம்முடைய நாமம் பரிசுத்தம் என்பது அனைவரும் அறியவேண்டுமென்று விரும்புகிறோம்”
உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக
“எல்லார்மீதும் எல்லாவற்றின் மீதும் நீர் முழுமையாக ஆளுகை செய்வதைப் பார்க்க நாங்கள் விரும்புகிறோம்”
Matthew 6:11-13
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
“நாங்கள்,” “நம்முடைய,” மற்றும் “எங்களுடைய” என்பது வருகிற இடத்திலெல்லாம் இயேசு பேசிக்கொண்டிருந்த மக்களைக் குறிக்கிறது.`
கடன்கள்
கடன் என்பது ஒருவன் மற்றவனுக்கு கொடுக்கவேண்டியது. இது பாவத்தைக் குறிக்கும் உருவணியாகும்.
கடனாளி
மற்றவனுக்கு கடனைத் திரும்பக் கொடுக்கவேண்டுபவன் கடனாளியாவான்
Matthew 6:14-15
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். “நீங்கள்” மற்றும் “உங்களுடைய” என்று வரும்போதெல்லாம் பன்மையில் உள்ளது.
Matthew 6:16-18
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். வசனங்கள் 17, 18இல் இருக்கும் எல்லா “நீங்கள்” “உன்னுடைய” ஒருமையில் உள்ளது. அவற்றை பன்மையாக மொழிபெயர்க்கலாம்.
மேலும்
“கூட”
உன் தலையை அபிஷேகம்பண்ணு
“நீ எப்பொழுதும் காணப்படுவதைப்போலவே காணப்படுங்கள். தலையை “அபிஷேகம்பண்ணு” என்பது ஒருவனுடைய தலைமுடிக்கான இயல்பு பராமரிப்பைக் குறிக்கிறது. “அபிஷேகம்பண்ணப்பட்ட்வர்” என்று அர்த்தம் கொள்ளும் “கிறிஸ்து” என்பதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
Matthew 6:19-21
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். வசனங்கள் 21இல் இருக்கும் எல்லா “நீங்கள்” “உன்னுடைய” ஆகியவைத் தவிர மற்றவை பன்மையில் உள்ளது.
பொக்கிஷங்களை உங்களுக்கு சேர்த்துவையுங்கள்
நம்மை சந்தோஷப்படுத்தும் பொருள்கள் பொக்கிஷங்களாகும்.
Matthew 6:22-24
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். எல்லா “நீங்கள்” “உன்னுடைய” ஒருமையில் உள்ளது. அவற்றை பன்மையாக மொழிபெயர்க்கலாம்.
கண்ணானது சரீரத்தின் விளக்காய் இருக்கிறது
“விளக்கைப் போல, கண்கள் தெளிவாக பார்ப்பதற்கு உனக்கு உதவி செய்கிறது”
உன் கண் நன்றாய் இருந்தால், உன் முழு சரீரமும் வெளிச்சத்தால் நிரம்பி இருக்கும்.
உன் கண்கள் பெலனாய் இருந்தால், நீ பார்க்க முடிந்தால், பின் உன் முழு சரீரமும் ஒழுங்காய் செயல்புரிகிறது. அதென்னவென்றால், நீ நடக்கலாம், வேலை செய்யலாம். இது பரந்தமனப்பான்மை மற்றும் பேராசை என்ற பகுதிகளில் தேவன் பார்ப்பதைப்போல் பார்ப்பதற்கான உருவணியாகும்.
கண்
இதை பன்மையில் மொழிபெயர்க்கலாம்
ஒளியால் நிறைந்திருக்கும்
புரிந்துகொள்ளுதலுக்கான உருவணியாகும்.
உன் கண் கெட்டிருந்தால்
இது மந்திரத்தைக் குறிக்கவில்லை. மறு மொழிபெயர்ப்பு: “தேவன் காரியங்களைப் பார்ப்பது போல நீ பார்ப்பதில்லை.” பொருளாசைக்கு இது உருவணியாக இருக்கலாம். (UDB
“நீ எப்படி பேராசையாய் இருப்பாய்”20:15).)
உன்னிலுள்ள வெளிச்சம் இருளாய் இருக்கிறது
“நீ வெளிச்சம் என்று நினைத்திருப்பதே இருளாய் இருக்கிறது.” இது தான் தேவன் பார்ப்பதுபோல் காரியங்களைப் பார்க்கிறான் என்று எண்ணுகிறவனுக்கு உவமையாகும்.
அவ்விருள் எவ்வளவு அதிகம்
இருளில் இருப்பது நல்லதல்ல. இருளில் இருந்து கொண்டு தான் வெளிச்சத்தில் இருக்கிறேன் என்று எண்ணுகிறது அதிலும் கேடாய் இருக்கிறது.
ஒன்று, அவன் ஒருவனை நேசித்து மற்றவனை வெறுப்பான், அல்லது ஒருவனை சேவித்து மற்றவனை நிந்திப்பான்.இந்தச் சொற்றொடர் இரண்டுமே ஒரே காரியத்தை தான் குறிக்கிறது
தேவனுக்கும் பணத்திற்கும் ஒரே நேரத்தில் அன்பையும் விசுவாசத்தையும் காண்பிக்க முடியாத நிலைமை.
தேவனுக்கும் செல்வத்திற்கும் நீ சேவை செய்ய முடியாது
“நீ தேவனையும் பணத்தையும் ஒரே சமயத்தில் ஆராதிக்க முடியாது”
Matthew 6:25-26
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். எல்லா “நீங்கள்” “உன்னுடைய” என்று வருபவைப் பன்மையில் உள்ளது.
உணவை விட வாழ்வும், உடுப்பை விட சரீரமும் விசேஷித்தவை இல்லையா?
உணவும், உடுப்பும் வாழ்வில் மிகவும் முக்கியமானவைகள் அல்ல. இந்த உணர்ச்சிக்குறிப்பு வினாவானது “நீ என்னத்தை உண்கிறாய் என்பதைவிடவும், என்ன உடுத்துகிறாய் என்பதை விடவும் விஷேசித்தது.” மறு மொழிபெயர்ப்பு: “உணவை விட உயிர் விசேஷமல்லவா? மற்றும் சரீரம் உடுப்பை விட விசேஷித்தவை அல்லவா?
களஞ்சியங்கள்
தானியம் சேர்த்துவைக்கும் இடம்
அவைகளை விட நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவோ?
பதிலை எதிர்ப்பார்க்காத இந்தக் கேள்வி, “பறவைகளை விட நீங்கள் விசேஷமானவர்கள்.” என்று அர்த்தம் கொள்ளச்செய்கிறது. மறு மொழிபெயர்ப்பு: “பறவைகளை விட நீங்கள் விசேஷமானவர்கள் அல்லவோ?”
Matthew 6:27-29
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். எல்லா “நீங்கள்” “உன்னுடைய” என்று வருபவைப் பன்மையில் உள்ளது.
கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் வாழ்நாளில் ஒரு முழத்தைக் கூட்டுவான்?
இந்த பதிலை எதிர்ப்பார்க்காத கேள்வி, கவலைப்பட்டு ஒருவனும் அதிக நாட்கள் வாழ முடியாது, என்பதைச் சொல்லுகிறது.
ஒரு முழம்
ஒரு முழம் பாதி மீட்டரைவிட சற்று குறைவான அளவு. இங்கு இதை ஒரு உருவணியாகப் பயன்படுத்தப்பட்டிருகிறது.
உடையைக் குறித்து ஏன் நீங்கள் கவலைப்படுகிறீர்கள்?
இந்த கேள்வி “நீங்கள் என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படவேண்டாம்” என்று அர்த்தப்படுகிறது.
நினைத்துப்பார்
“கருத்தில் கொள்”
லீலி பூ
ஒரு வகைக் காட்டுப் பூ
Matthew 6:30-31
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். எல்லா “நீங்கள்” “உன்னுடைய” என்று வருபவைப் பன்மையில் உள்ளது.
புல்
“லீலியையும்” “புல்லையும்” குறிக்க ஒரேச் சொல் உங்கள் மொழியில் இருந்தால் உபயோகிக்கவும்.
அடுப்பில் வீசவும்
இயேசு வாழ்ந்த நாட்களில் யூதர்கள் அடுப்பெரிக்க புல்லை உபயோகித்தனர். மறு பொழிபெயர்ப்பு: “அக்கினியில் வீசவும்” அல்லது “எரிக்கவும்.”
ஒ! அற்ப விசுவாசிகளே!
மக்கள் தேவனிடம் குறைந்த விசுவாசம் வைத்தப்படியால் இயேசு அவரகளைக் கடிந்து கொண்டார். மறு மொழிபெயர்ப்பு: “குறைந்த விசுவாசம் உள்ளவர்களே” அல்லது “ஏன் உங்கள் விசுவாசம் குறைவு பட்டது?”
ஆகையால்
மாற்று மொழிபெயர்ப்பு: “இதன் காரணமாக”
Matthew 6:32-34
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். எல்லா “நீங்கள்” “உன்னுடைய” என்று வருபவைப் பன்மையில் உள்ளது.
...க்காக, ... ...க்காக
இந்த ஒவ்வொன்றும் ஒரு வாக்கியத்தை அறிமுகம் செய்கிறது. அதென்னவென்றால், புறஜாதிகள் இவைகளை நாடுவார்கள், அதனால் “கவலைப்படாதிருங்கள்”; “உங்கள் பரலோகப்பிதா உங்கள் தேவைகளை அறிவார்,” அதினால் கவலைப்படாதிருங்கள்.”
ஆகையால்
மாற்று மொழிபெயர்ப்பு: “இதன் காரணமாக”
நாளை நாளைக்காக கவலைப்படும்
இந்த உருவகம் “அடுத்த நாள்” வாழ்கிறவனைக் குறிக்கும்.
அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.
“ஒரு நாளுக்குள்ளே அதின் போதுமான கெட்டக் காரியங்கள் இருக்கும்” என்று மொழிபெயர்க்கலாம்.
Matthew 7
Matthew 7:1-2
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். எல்லா “நீங்கள்” மற்றும் “கட்டளைகள்” பன்மையில் உள்ளது.
நீங்கள் நியாயம் தீர்க்கப்படுவீர்கள்
நீங்கள் நியாயம் தீர்க்கப்படுவீர்கள்
செய்வினையில்: “தேவன் உங்களை கண்டிப்பார்” அல்லது “மக்கள் உங்களைக் கண்டிப்பார்கள்.”
...க்காக
வசனம் 2, வசனம் 1 றில் அடிப்படைகொண்டுள்ளது என்று வாசிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.
அளவு
- தண்டனையின் அளவையோ அல்லது 2 நியாயத்தீர்புக்கான அளவுகோளாகவோ இருக்கலாம்.
Matthew 7:3-5
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். எல்லா “நீங்கள்” “உன்னுடைய” ஒருமையில் உள்ளது. அவற்றை பன்மையாக மொழிபெயர்க்கலாம்.
ஏன் பார்க்கிறாய் ... எப்படி சொல்லுகிறாய்
தங்களுடைய தவறுகளை அல்லது பாவங்களை முதலில் பார்க்கும்படி இயேசு அவர்களுக்கு சவால் விடுகிறார்.
வைக்கோல் புல்லின் சிறு துண்டு ... மரத்துண்டு
ஒருவனுடைய மிகச்சிறிய மற்றும் மிகப்பெரிய தவறுகளுக்கான உருவணி.
சகோதரன்
இது சக விசுவாசியைக்குறிக்கும், சொந்த சகோதரனையோ, அருகில் வசிப்பவனையோ அல்ல
கண்
வாழ்க்கைக்கான உருவகம்
சிறு வைக்கோல் புல்லின் துண்டு
“கறை” அல்லது :துரும்பு”, அல்லது “சின்னத் துகள்”. கண்களில் இயல்பாக விழுவதைக் குறிக்கும் சிறு பொருளின் வார்த்தையைக் குறிப்பிடலாம்.
மரத்துண்டு
மரத்திலிருந்து வெட்டப்பட்ட பெரும்பகுதி. ஒருவனின் கண்ணிற்குள் உண்மையிலேயே ஒரு மரத்துண்டு புகமுடியாது.
Matthew 7:6
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். எல்லா “நீங்கள்” “உன்னுடைய” என்பவை பன்மையில் உள்ளது.
நாய்கள் ... ஆண் பன்றி ...மிதிப்பது ... திரும்பி பீறுதல்
அநேகமாக ஆண் பன்றிகளே “மிதித்துப்போடும்”; நாய்கள் “திரும்பிப்” “பீறும்” (UDB).
நாய்கள் ... ஆண் பன்றி
இந்த மிருகங்கள் அசுத்தமானவைகள் என்று கருதப்பட்டு தேவன் அவைகளைப் புசிக்கக்கூடாது என்று இஸ்ரவேலர்களுக்குச் சொன்னார். பரிசுத்தமானதை கருத்தில் கொள்ளாத துன்மார்க்கர்களுக்கு இவை உருவணியாகும். இவைகளை அப்படியே மொழிபெயர்ப்பது நல்லது.
முத்துக்கள்
இவை உருண்டையான விலையேறப்பெற்ற அல்லது பாசிமணிகளுக்கு ஒப்பாயிருக்கிறது. இவைகள் தேவனை அறிகிற அறிவுக்கு அல்லது விலைமதிப்புள்ள பொருட்களுக்கு உவமானமாக இருக்கிறது.
Matthew 7:7-10
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். எல்லா “நீங்கள்” “உன்னுடைய” என்பவை பன்மையில் உள்ளது.
கேளுங்கள் ...தேடுங்கள் ... தட்டுங்கள்
இந்த மூன்றும் உறுதியான ஜெபத்திற்கு உருவகமாக இருக்கிறது. தொடர்ந்து ஒரு காரியத்தை செய்வதைக் குறிக்க உங்கள் மொழியில் ஒரு படிவம் இருக்குமானால் அதை இங்கு பயன்படுத்துங்கள்.
கேளுங்கள்
தேவனிடம் வினவுங்கள்
தேடுங்கள்
“எதிர்பாருங்கள்” அல்லது “தேடுங்கள்”
தட்டுங்கள்
தட்டுவது
கதவில் தட்டுவது வீட்டிற்கு உள்ளே அல்லது அறைக்குள்ளே இருக்கும் நபரிடம் கதவைத் திறக்கும்படி நாகரீகமாக வினவுவது. கதவைத் தட்டுவது அநாகரீகம் என்றால், உங்கள் மொழியிலுள்ள அதற்கு நிகரான வார்த்தையைப் பயன்படுத்தவும். அல்லது “தேவன் கதவைத் திறக்கும்படி விரும்புவதாக தேவனிடம் தெரிவி.”
அல்லது ... அல்லது
இவை விடப்படலாம். ஏனென்றால் இயேசு தான் ஏற்கனவே வேறு வார்த்தைகளினால் சொன்னவற்றை திரும்ப சொல்லப்போகிறார் (UDB). இவைகள் தவிர்க்கப் படலாம்.
உங்களில் இருக்கும் எந்த மனிதன்
இந்த பதிலை எதிர்பார்க்காத கேள்வி, “உங்களில் ஒருவனும்” என்று அர்த்தப்படுகிறது.
ரொட்டித் துண்டு ... கல் ... மீன் ... பாம்பு
இவைகள் இருக்கிறவண்ணமாக மொழிபெயர்க்கப்பட வேண்டும்.
ரொட்டித் துண்டு
“ஏதோ ஒரு உணவு”
Matthew 7:11-12
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். எல்லா “நீங்கள்” “உன்னுடைய” என்பவை பன்மையில் உள்ளது.
மனுஷர் உங்களுக்கு செய்யவேண்டுமென்று நீங்கள் விரும்பும் காரியங்கள்
“உங்களிடத்தில் மற்றவர் நடந்து கொள்ள நீங்கள் விரும்பும் முறை” (UDB)
Matthew 7:13-14
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். எல்லா “நீங்கள்” “உன்னுடைய” என்பவை பன்மையில் உள்ளது.
மொழிபெயர்க்கும்போது இரண்டு வாசல்கள் மற்றும் இரண்டு வழிகளுக்குண்டான வித்தியாசத்தை கூடுமானவரை பொருத்தமான வார்த்தைகள் “அகலம்” ,“விசாலம்” மற்றும் “குறுகல்” போன்ற வார்த்தைகளுக்குப் பயன்படுத்தி அழுத்தம் திருத்தமாக சொல்லவும்.
குறுகலான வாசல் வழியாய் பிரவேசியுங்கள்
“ஆகையால், குறுகலான வாசல் வழியாய்ப் பிரவேசியுங்கள்” என்பதை வசனத்தின் கடைசியில் மாற்றி வைக்கவும்.
வாசல் ... வழி
இது, மனுஷர் நடக்கும் “வழி,” “வாசலை” சென்றடைதல் மற்றும் “வாழ்வு” அல்லது “அழிவில்” (UDB) பிரவேசித்தல் என்பதற்கான உருவணியாகும். அதனால் “அழிவிற்கு செல்லும் பாதை விசாலமானது மற்றும் அதற்கு செல்லும் வாசல் அகலமானது” என்று மொழிபெயர்க்கவும்”. வாசல், வழி ஆகியவை யின் வரிசை மாற்றவேண்டாம்.
வாசல் அகலமும், பாதை விசாலமுமாய் இருக்கிறது ... வாசல் குறுகலும், வழி இடுக்கமுமாக இருக்கிறது.
வினைச்சொல்லுக்கு முன்பு ULB பெயரெச்சங்களை இட்டிருக்கிறது. ஏனென்றால் பெயரெச்சங்கள் மத்தியில் இருக்கும் வித்தியாசத்தைக் காட்டவே. பெயரெச்சங்களை வித்தியாசம் காட்டும் முறையில் உங்கள் மொழிபெயர்ப்பை அமையுங்கள்.
அழிவு
அழிகின்ற மனுஷரைக் குறிக்கும் ஒரு பொதுவானச் சொல் இது. இந்த சந்தர்ப்பத்தில் இது உடல் மரணத்தைக் குறிக்கிறது. இது நித்திய மரணத்திற்கான உருவணி ஆகும். நிதர்சன “வாழ்க்கைக்கு” எதிர்ப்பதமாகும். இது நித்திய வாழ்விற்கான உருவணி ஆகும்.
Matthew 7:15-17
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
ஜாக்கிரதையாயிருங்கள்
“எச்சரிக்கையாயிருங்கள்”
அவர்கள் கனிகளால்
இயேசு தீர்க்கதரிசிகளின் செயல்பாடுகளை ஒரு செடியின் கனிகளுக்கு ஒப்பிடுகிறார். மறு மொழிபெயர்ப்பு: “அவர்கள் செயல்படும் முறை”
மனுஷர் சேர்ப்பாரோ ...?
“மனுஷர் பறிக்கமாட்டார் ...” இயேசு பேசிக்கொண்டிருக்கும் மனுஷர்கள் விடை இல்லை என்பதைத் தெரிந்திருப்பர்.
நல்ல மரம் நல்லக் கனிகளைக் கொடுக்கும்
இயேசு தீர்க்கதரிசிகளின் செயல்பாடுகளை ஒரு செடியின் கனிகளுக்கு ஒப்பிடுகிறதைத் தொடர்ந்தார்.
கெட்ட மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கும்
இயேசு கள்ளத்தீர்க்கதரிசிகளின் கள்ளச்செயல்பாடுகளைக் குறிக்க ஒரு செடியின் கனியை உருவணியாகப் பயன்படுத்துகிறார்.
Matthew 7:18-20
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்
இயேசு கள்ளத்தீர்க்கதரிசிகளின் கள்ளச்செயல்பாடுகளைக் குறிக்க ஒரு செடியின் கனியை உருவணியாகப் பயன்படுத்துகிறார். இங்கு, கெட்ட மரங்களுக்கு என்ன நடக்கும் என்பதை மட்டும் குறிப்பிடுகிறார். கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு இவ்வாறே நடக்கும் என்பது மறைத்து சொல்லப்பட்டிருக்கிறது.
அவர்கள் கனிகளினால் அவர்களை அறிவீர்கள்.
“அவர்கள் கனிகள்” தீர்க்கதரிசியையோ அல்லது மரங்களையோ குறிக்கலாம். இந்த உருவகம் மரங்களின் கனிகளும் தீர்க்கதரிசியின் செயல்களும் அவர்கள் நல்லவர்களா ?அல்லது கள்வர்களா ?என்பதைச் சொல்லுகிறது. ஒன்றை மட்டும் குறிக்கும் வகையில் மொழிபெயர்க்க முடியுமானால் அப்படி செய்யவும்.
Matthew 7:21-23
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
என் பிதாவின் சித்தம் செய்கிறவன் எவனோ
“என் பிதா விரும்புவதைச் செய்கிறவன் எவனோ”
நாம்
இது இயேசுவை உள்ளடக்கவில்லை
அந்த நாளில்
“அந்த நாள்” என்று இயேசு சொன்னதன் காரணம் என்னவென்றால் தன்னைக் கேட்டுக்கொண்டிருக்கிறவர்கள் நியாயத்தீர்ப்பின் நாளைத்தான் குறிப்பிடுகிறார் என்று புரிந்து கொள்வார்கள் என்று அறிந்திருந்தார். நீங்கள் இந்த உண்மையை (UDB இல் உள்ளது போல) வாசிப்பவர்கள் இயேசு எந்த நாளைக் குறித்து பேசுகிறார் என்பதைப் பற்றி தெரியவில்லை என்றால் சேர்த்துக்கொள்ளவும்.
Matthew 7:24-25
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
ஆகையால்
“அக்காரணத்தினால்”
கன்மலையின் மேல் தன் வீட்டைக் கட்டும் புத்தியுள்ள மனுஷன்
இயேசு தனக்குக் கீழ்படிகிறவர்களைக் கன்மலையின் மேல் தன் வீட்டைக் கட்டும் புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுகிறார். மழையோ, காற்றோ, பெருவெள்ளமோ வீட்டை அணுகினாலும் , வீடு இடிந்து விடாது.
கன்மலை
இது களிமண் அல்லது மண்ணுக்கு அடியிலுள்ள பாறை ஆகும். மாறாக இது நிலத்துக்கு மேல் உள்ள பாறை அல்ல.
Matthew 7:26-27
இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.
மணலின் மேல் தன் வீட்டைக்கட்டும் புத்தியில்லாத மனுஷனைப்போல்
அதே உருவகத்தை இங்கும் தொடர்கிறார். இயேசு தனக்குக் கீழ்படியாதவர்களை மணலின் மேல் தன் வீட்டைக் கட்டும் புத்தியில்லாதவனுக்கு ஒப்பிடுகிறார். மழையும், வெள்ளமும்., காற்றும் வாரிக்கொண்டு போகும் மணலின் மீது புத்தியில்லாதவன் தான் தன் வீட்டைக் கட்டுவான்.
விழுந்தது
வீடு விழும்போது என்ன நடக்கும் என்பதைக் குறிக்கும் ஒரு பொது வார்த்தையை பயன்படுத்தவும்.
அதன் வீழ்ச்சி பெரிதாக இருந்தது.
மழையும், வெள்ளமும், காற்றும் வீட்டை முழுவதும் அழித்தது.,
Matthew 7:28-29
அப்படியே ஆயிற்று
உங்கள் மொழியில் ஒரு கதையின் புதுப் பகுதியின் துவக்கத்தை குறிக்கும் வார்த்தை இருக்குமானால் இங்கு பயன்படுத்தவும்.
Matthew 8
Matthew 8:1-3
இது இயேசு அற்புதமாக மக்கள் அநேகரை சுகமாக்கும் பகுதியைத் துவக்குகிறது.
இயேசு மலையிலிருந்து இறங்கினபோது திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தார்கள்.
மறு மொழிபெயர்ப்பு: “இயேசு மலையிலிருந்து இறங்கினவுடனே, திரள் கூட்டம் அவரைப் பின் தொடர்ந்தது.” திரள் கூட்டம் மலையில் அவரோடு இருந்தவர்களையும், அவரோடு அங்கு இல்லாதவர்களையும் குறிக்கலாம்.
இதோ
“இதோ” என்ற வார்த்தை கதையின் புது கதாபாத்திரத்தைக் காட்ட உதுவுகிறது. உங்கள் மொழியில் இதை செய்ய ஏதேனும் வழி இருக்குமானால் இங்கு பயன்படுத்தவும்.
ஒரு குஷ்டரோகி
“குஷ்டரோகமுள்ள ஒரு மனுஷன்” அல்லது “தோல் வியாதிப்பட்ட ஒரு மனுஷன்” (UDB)
நீர் சித்தம் கொண்டால்
மறு மொழிபெயர்ப்பு: “நீர் விரும்பினால்” அல்லது “நீர் வாஞ்சித்தால்”. இயேசு தன்னை குணமாக்க வல்லமை உள்ளவர் என்பதை அக்குஷ்டரோகி அறிந்திருந்தான், ஆனால், இயேசு தன்னைத் தொட அவருக்கு விருப்பம் இருக்குமோ என்பதை அறியாதிருந்தான்.
நீர் என்னை சுத்தமாக்கும்
மறு மொழிபெயர்ப்பு: “நீர் என்னை சுகமாக்கலாம்” அல்லது “தயவு செய்து குணமாக்கும்” (UDB).
உடனே
“அப்பொழுதே”
அவன் தன குஷ்டரோகத்திநின்று குணமானான்
“சுத்தமாகு” என்று இயேசு சொன்னதில் அந்த மனிதன் குணமானான். மறு மொழிபெயர்ப்பு: “அவன் நன்றாக இருந்தான்” அல்லது “குஷ்டரோகம் அவனை விட்டது” அல்லது “குஷ்டரோகம் முடிந்தது.”
Matthew 8:4
இது இயேசு குஷ்டரோகமுள்ள மனிதனை குணமாகியக் கணக்கைத் தொடர்கிறது.
அவன்
குஷ்டரோகமிருந்த மனிதன்
ஒருவனோடும் ஒன்றும் சொல்லாதே
அந்த மனிதன் ஆசாரியனிடம் பலி செலுத்தச் சென்றபோது பேசி இருக்கக்கூடும் (UDB). ஆனாலும், அங்கு என்ன நடந்ததென்பதை ஒருவனோடும் அவன் சொல்லக்கூடாது என்று இயேசு விரும்பினார். “ஒருவனோடும் ஒன்றும் சொல்லாதே” அல்லது “நான் உன்னை சுகமாக்கினேன் என்பதை ஒருவனோடும் சொல்லாதே” என்று மொழிபெயர்க்கலாம்.
உன்னை ஆசாரியனிடத்தில் காண்பி
யூத சட்டம் குணமான தன் தோலை அம்மனிதன் ஆசாரியனிடத்தில் காண்பிப்பதை எதிர்பார்க்கிறது. ஏனென்றால் ஆசாரியனே அவனை மறுபடியும் மற்ற மனுஷரோடு இருக்க அனுமதிப்பவன்.
அவர்களுக்கு சாட்சியாக மோசே கட்டளையிட்ட காணிக்கையை செலுத்து,
மோசேயின் நியாயப்பிரமாணம் ஒருவன் குஷ்டரோகத்தினின்று குணமானால் ஆசாரியனிடத்தில் நன்றிபலி செலுத்தக்கடவன் என்பதை எதிர்பார்க்கிறது. ஆசாரியன் அதை ஏற்றுக்கொள்ளும்போது அவன் சுகமானான் என்பதை மனுஷர் அறிந்து கொள்ளுவார்கள்.
அவர்களுக்கு
இது 1. ஆசாரியர்களைக் குறிக்கலாம் அல்லது 2. மக்களைக் குறிக்கலாம் அல்லது 3. இயேசுவின் விமர்சகர்களைக் குறிக்கலாம். அந்த குழுக்களைக் குறிக்கும் பெயர்ச்சொல்லின் மாற்றுச் சொல் ஏதேனும் உங்கள் மொழியில் இருந்தால் அதை பயன்படுத்தவும்.
Matthew 8:5-7
இயேசு அநேகரை குணமாக்கிய கணக்கைத் தொடர்கிறது.
அவனுக்கு ... அவனுக்கு
இயேசு
முடக்குவாதம்
வியாதியால் “அசையக் கூடாமல்”
இயேசு அவனிடம், “நான் வந்து அவனைக் குணப்படுத்துவேன்” என்று சொன்னார்.
“இயேசு நூற்றுக்கு அதிபதியைப் பார்த்து, “நான் உன் வீட்டிற்கு வந்து உன்னுடைய வேலைக்காரனை சுகமாக்குவேன்.”
Matthew 8:8-10
இயேசு அநேகரை குணமாக்கிய கணக்கைத் தொடர்கிறது.
என்னுடைய கூரையின் கீழ் நீர் பிரவேசிக்கவேண்டும்
“நீர் என்னுடைய வீட்டிற்குள் பிரவேசிக்கவேண்டும்”
சொல்லும் ஒரு வார்த்தை
“கட்டளைக் கொடும்”
வீரர்கள்
“தேறின போர்வீரர்கள்”
இஸ்ரவேலிலும் கூட நான் இந்த அளவு விசுவாசம் உள்ளவரைக் காணவில்லை
தேவனுடைய பிள்ளைகள் என்றும் மற்ற எவரை விடவும் விசுவாசம் உடையவர்கள் என்றும் எண்ணப்படும் இஸ்ரவேலிலும் கூட இவ்வளவு விசுவாசத்தை நான் காணவில்லை. இயேசு அது தவறு என்றும் நூற்றுக்கு அதிபதியின் விசுவாசம் பெரியது என்றும் சொன்னார்.
Matthew 8:11-13
ரோம நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரனை சுகமாக்கின கதை தொடர்கிறது.
நீங்கள்
“அவரைப் பின் தொடர்ந்தவர்களைக்” குறிக்கும்.
கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும்
இதை “எல்லா இடத்திலிருந்தும்,” அல்லது “தூரத்திலிருந்து எல்லா திசையிலிருந்தும்” என்று மொழிபெயர்க்கலாம்.
மேஜையில் சாய்ந்து
இந்த கலாச்சாரத்தில் மக்கள் மேஜையின் பக்கவாட்டில் சாய்ந்து கொண்டு உணவு உண்பர். நண்பர்களும் குடும்பத்தினரும் ஒன்றாக வாழ்வதைக் குறிக்கும் ஆகுபெயராகும். “குடும்பம் மற்றும் நண்பர்களாக வாழ்வார்கள்” என்றி மொழிபெயர்க்கலாம்.
ராஜ்ஜியத்தின் மகன்கள் எறியப்படுவார்கள்
“தேவன் ராஜ்ஜியத்தின் மகன்களை எறிவார்”
ராஜ்ஜியத்தின் மகன்கள்
“...இன் மகன்கள்” என்ற பதம் ஒன்றிற்கு சொந்தம் என்று குறிக்கிறது. இந்த இடத்தில் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் குறிக்கிறது. “மகன்கள்” எறியப்படுவதும் அன்னியர் வரவேற்க்கப்படுவதும் முரண்தொடையாக உள்ளது. “தேவன் தங்களை ஆளும்படி ஒப்புக்கொடுத்திருக்க வேண்டியவர்கள்” என்று இதை மொழிபெயர்க்கலாம். (UDB)
புறம்பான இருள்
இந்த வெளிக்கொணர்வு தேவனை மறுப்பவர்கள் அடையும் நித்திய இடத்தைக் குறிக்கிறது. “தேவனிடத்திலிருந்து தள்ளி இருக்கும் இருளான இடம்.”
அப்படியே உங்களுக்கும் செய்யப்படுவதாக
“அப்படியே நான் உங்களுக்கு செய்வேன்.”
வேலைக்காரன் சுகமானான்
“இயேசு வேலைக்காரனை சுகமாக்கினார்.”
அந்த மணி நேரத்தில்
“இயேசு அவன் வேலைக்காரனை சுகமாக்குவேன் என்று சொன்ன அதே நேரத்தில்”
Matthew 8:14-15
இயேசு அநேகரை சுகமாக்கும் கணக்குத் தொடர்கிறது
இயேசு வந்து விட்டார்
இயேசு தன்னுடைய சீடர்களோடு வந்திருக்கலாம், ஆனால் சம்பவத்தின் முழு கவனமும் இயேசு சொன்னவற்றின் மீதும் அவர் என்ன பேசினார் என்பதின் மீதிலுமே உள்ளது. தவறான அர்த்தம் கொள்ளுதலைத் தவிர்க்கும் வகையில் சீடர்கள் அங்கு இருப்பதைச் சொல்லவும்.
பேதுருவின் மாமியார்
“பேதுருவின் மனைவியின் தாய்”
காய்ச்சல் அவளை விட்டது
காய்ச்சல் அவளை விட்டது என்று சொல்லுவதால் காய்ச்சல் ஆள்தத்துவம் உடையது என்று வாசிப்பவர் புரிந்து கொள்வர் என்றால் “அவள் தேறினாள்” அல்லது “இயேசு அவளை சுகமாக்கினார்” என்று மொழிபெயர்க்கவும்.
எழுந்து
“படுக்கையை விட்டு எழுந்து”
Matthew 8:16-17
இயேசு அநேகரை சுகமாக்கும் கணக்குத் தொடர்கிறது
சாயங்காலம்
மாற்கிலிருந்து UDB இயேசு கப்பர்நகூமிற்கு ஓய்வுனாளன்று வந்தார் என்பதை எடுத்துள்ளது (மாற்கு 1:21). ஏனென்றால் யூதர்கள் ஓய்வுநாளில் வேலையோ பிரயாணமோ செய்யமாட்டார்கள். மக்களை இயேசுவிடம் கொண்டு வர சாயங்காலம் வரை காத்திருந்தார்கள். தவறான அர்த்தம் கொள்ளவில்லை என்றால், ஓய்வுநாளை குறிப்பிடவேண்டும் என்ற அவசியம் இங்கில்லை.
ஒரு வார்த்தையாலே அவைகளைத் துரத்தினார்.
இது மிகைப்படுத்துதல் ஆகும்: இயேசு ஒரு வார்த்தைக்கு மேலே சொல்லி இருக்கக்கூடும். “இயேசு ஒரு முறை தான் பேசவேண்டி இருந்தது;உடனே பிசாசுகள் அவனை விட்டது.”
ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறியது
“இயேசு, இஸ்ரவேலிடம் வெளிப்படுத்தும்படி தேவன் ஏசயாவிடம் சொன்ன தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார்.”
ஏசாயாவால் சொல்லப்பட்டது
“ஏசாயாவால் சொல்லப்பட்டது”
பலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நோய்களை சுமந்து
“பலவீனத்திலிருந்து மக்களை விடுதலையாக்கி அவர்களை நலமாக்கினார்”
Matthew 8:18-20
தன்னை பின் தொடர்பவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை இயேசு விரிவுபடுத்தினார்.
அவர், அவரை
இது ஏசுவைக் குறிக்கிறது
வழிமுறைகளை அவர் கொடுத்தார்
“என்ன செய்யவேண்டும் என்பதை அவர்களுக்குச் சொன்னார்”
பின்பு
“வழிமுறைகளைச் சொன்ன” பின்பு ஆனால் படகில் ஏறும் முன்பு (UDB யைப் பார்க்கவும்)
எங்குவேண்டுமானாலும்
“எவ்விடமும்”
நரிகளுக்கு குழிகள் உண்டு, வானத்தின் பறவைகளுக்குக் கூடுண்டு
இங்குள்ள விலங்குகள் காட்டு விலங்குகளின் பெரிய கூட்டத்தையே பிரதிபலிக்கிறது.
நரிகள்
நாய்களைப்போல் நரிகள் கூடிட்டு வாழும் பறவைகளையும் மற்ற சிறிய மிருகங்களையும் தின்னும். நரிகள் உங்கள் பகுதியில் பரிட்சயம் இல்லை என்றால் நாய் போன்ற விலங்குகளின் பெயரோ அல்லது ரோமம் உள்ள மிருகத்தின் பெயரையோ குறிப்பிடலாம்.
குழிகள்
நரிகள் நிலத்தில் குழிகளைத் தோண்டி அதில் வாழும். “நரிகளுக்கு” பதில் நீங்கள் சொல்லும் மிருகம் வாழும் இடத்தைக் குறிக்க பொருத்தமான வார்த்தையைப் பயன்படுத்தவும்.
தலைசாய்க்க இடமில்லை
“தூங்குவதற்கு அவர்களுக்கென்று சொந்தமாக ஒரு இடமில்லை”
Matthew 8:21-22
இயேசு தன்னைப் பின்பற்றுபவர்களிடம் தான் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை விரிவுபடுத்துகிறார்.
என்னுடைய தகப்பனை அடக்கம் பண்ணப் போக அனுமதிக்கவேண்டும்.
இது ஒரு சாந்தமான வேண்டுகோள். மரித்தவர்களை அன்றே அடக்கம் செய்வது யூத முறைமையாகும். அதனால், இந்த மனிதனின் தந்தை மரிக்கவில்லை என்ற போதும் “அடக்கம்” என்ற சொல்லை தன் தந்தையை மரிக்கும்வரை ஒரு சில நாட்களோ அல்லது சில வருடங்களோ கவனிக்க வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்லப் பயன்படுத்தினான். அவனின் தந்தை மரித்திருந்தால், ஒரு சில மணி நேரங்கள் தான் போய் வருகிறேன் என்று கேட்டிருப்பான். தந்தை மரித்தானோ அல்லவோ என்பதை தவறான அர்த்தம் தவிர்க்க மட்டும் பயன்படுத்தவும்.
மரித்தவர்கள் மரித்தோரை அடக்கம் செய்யட்டும்.
இது ஒரு பாதி, நிறைவு பெறாத வாக்கியமாக்கும். அதனால் சில வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தவும். இங்கிருக்கும் “அடக்கம்” என்ற வார்த்தையை அம்மனிதனின் வேண்டுகோளில் உள்ள “அடக்கம்” என்ற வார்த்தையிலுள்ளதைப் பயன்படுத்தவும்.
விடு ... அடக்கம் செய்ய
இது ஒருவனின் தந்தையின் பொறுப்பிலிருந்து ஒரு மனுஷனை மறுப்பதின் பெருவழி. “மரித்தவர் அடக்கம் செய்யட்டும்” அல்லது “மரித்தோர் அடக்கம் செய்ய விடு,” “மரித்தோருக்கு தங்களைத் தாங்களே அடக்கம் செய்வதைத் தவிர வாய்ப்பு கொடாதே.”
மரித்தோர் ... தங்கள் மரித்தோரை
“மரித்தோர்” என்பது தேவ ராஜ்யத்திற்கு வெளியில் இருப்பவர்களைக் குறிக்க பயன்படும் உருவணி ஆகும். “தங்கள் மரித்தோரை” தேவ ராஜ்யத்திற்கு வெளியில் இருந்து மரிப்பவனின் சொந்தக்காரர்கள்.
Matthew 8:23-25
இயேசு புயலை அடக்கும் கதையை இது துவக்குகிறது.
படகில் படகில் ஏறினார்
“இயேசு படகில் ஏறினார்”
அவர் சீடர்கள் அவரைப் பின் தொடர்ந்தார்கள்
மத்தேயு 08:21, 8:22 இல் “சீடர்” மற்றும் “பின்பற்று” என்ற வார்த்தைகளைக் குறித்த வார்த்தைகளையே பயன்படுத்தவும்
இதோ
இது பெரிய கதையில் இன்னுமொரு சம்பவத்தின் துவக்கத்தைக் குறிக்கிறது. இங்கு முன் சம்பவங்களில் இருந்தவர்கள் அல்லாமல் வேறே மக்களை ஈடுபடுத்தி இருக்கலாம். உங்கள் மொழி இதை செய்ய ஒரு வழி வைத்திருக்கலாம்.
கடலில் ஒரு பெரிய புயல் எழும்பினது
“ஒரு பெரிய புயல் கடலின் மேல் எழும்பினது”
அதனால் படகு அலைகளால் மூடப்பட்டது
“அதனால் அலைகள் படகை மூடிற்று.”
அவரை எழுப்பி, “எங்களைக் காப்பாற்றும்” என்று சொன்னார்கள்.
“எங்களைக் காப்பாற்றும்” என்ற வார்த்தையோடு அவரை எழுப்பவில்லை. முதலில் அவரை “எழுப்பி” பின் “எங்களைக் காப்பாற்றும்” என்று சொன்னார்கள்.
நாங்கள் மரிக்கப்போகிறோம்
“நாங்கள் மரித்துக்கொண்டிருக்கிறோம்”
Matthew 8:26-27
இயேசு புயலை அடக்கும் சம்பவத்தை இது முடிக்கிறது.
அவர்களை
சீடர்கள்
நீங்கள் ... நீங்கள்
பன்மை
ஏன் நீங்கள் பயப்படுகிறீர்கள் ...?
பதிலை எதிர்பார்க்காமல் இயேசு இந்தக் கேள்வியினால் அவர்களைக் கடிந்துகொண்டார். “நீங்கள் பயப்படக்கூடாது” அல்லது “நீங்கள் பயப்படும்படி ஒன்றுமில்லை” என்று இது அர்த்தப்படும்.
அற்ப விசுவாசிகளே
“நீங்கள்” பன்மையில் உள்ளது. மத்தேயு 6:30 இல் உள்ளதை மொழிபெயர்த்ததைப் போல மொழிபெயர்க்கவும்.
இவர் எப்படி பட்டவரோ, கடலும் காற்றும் கூட அவருக்கு கீழ்ப்படிகிறதே??
இந்த கேள்வியினால் சீடர்கள் திகைத்துப்போனார்கள் என்பதைத் தெரிவிக்கிறது. “காற்றும் கடலும் கூட அவருக்கு கீழ்ப்படிகிறதே! இவர் எப்படிப்பட்டவரோ?” அல்லது “நாம் பார்த்த மற்ற மனிதர்களைப் போல் அல்ல இவர்! காற்றும் கடலும் கூட இவருக்கு கீழ்ப்படிகிறதே!” என்று மொழிபெயர்க்கலாம்.
காற்றும் கடலும் கூட இவருக்கு கீழ்ப்படிகிறதே
மனிதர்களோ அல்லது விலங்குகளோ கீழ்படிவது பெரிய விசேஷமில்லை. ஆனால் காற்றும் தண்ணீரும் கீழ்ப்படிவது திகைப்புத்தான். இந்த ஆள்தத்துவப்படுவது இயற்கைப் பொருள்களும் கேற்கக்கூடும் என்றும் மனுஷர்களைப் போல் பதில் செய்யவும் கூடும் என்று விளக்குகிறது.
Matthew 8:28-29
இது இயேசு பிசாசினால் பிடிபட்ட இரண்டு பேரை சுகமாக்கும் சம்பவத்தைத் துவக்குகிறது.
மறுபகுதிக்கு
“கலிலேயாக் கடலின் மறுப்பக்கத்தில்”
கதரேனர்களுடைய நாடு
கதரேனர்களுடைய நாடு
கதரேனர்கள் கதரா என்னும் பட்டணத்தினிமித்தம் இப்பேர் பெற்றனர்.
அவர்கள் ... முரட்டாட்டமானவர்கள், அதனால் ஒரு வழிப்போக்கனும் அவ்வழியே செல்ல முடியாது.
இவர்களைப் பிடித்திருந்த பிசாசுகள் மிகவும் பயங்கரமானவைகள்; அதனால் ஒருவரும் அவ்வழியே செல்ல முடியவில்லை.
இதோ
இது பெரிய கதையில் இன்னுமொரு சம்பவத்தின் துவக்கத்தைக் குறிக்கிறது. இங்கு முன் சம்பவங்களில் இருந்தவர்கள் அல்லாமல் வேறே மக்களை ஈடுபடுத்தி இருக்கலாம். உங்கள் மொழி இதை செய்ய ஒரு வழி வைத்திருக்கலாம்.
தேவக் குமரனே, நாங்கள் உம்மிடத்தில் என்ன செய்ய வேண்டும்?
இந்த முதல் கேள்வியானது ஆக்ரோஷமானது.
தேவக் குமாரன்
பிசாசுகள் இந்த பெயரை இயேசு யாராய் இருக்கிறார் என்பதால் அவர் வரவேற்கப்படவில்லை என்பதைச் சொல்லப் பயன்படுத்துகின்றன.
குறித்த நேரம் முன்பே எங்களைத் துன்புறுத்தவா வந்தீர்?
இந்த இரண்டாம் கேள்வியும் ஆக்ரோஷமானதுதான். பதிலை எதிர்பார்க்கவில்லை என்றாலும் , இது, “தேவன் எங்களைத் தண்டிக்கும்படி குறித்த நேரத்திற்கு முன் எங்களைத் தண்டித்து நீர் தேவனுக்கு கீழ்படியாமல் போகாதிரும்.” என்று அர்த்தப்படுகிறது.
Matthew 8:30-32
இது இயேசு பிசாசினால் பிடிபட்ட இரண்டு பேரை சுகமாக்கும் சம்பவத்தைத் துவக்குகிறது.
இப்பொழுது
இது, கதைப் பின்னும் தொடரும் முன் ஆசிரியர் வாசகர்களுக்கு தெரியவேண்டியதைத் தெரிவிக்கிறார் என்பதைக் குறிக்கிறது. இயேசு வருவதற்கு முன்னமே பன்றிகள் அங்கு இருந்தன.
நீர் எங்களைத் துரத்துவீரானால்
இது, “நீர் எங்களைத் துரத்தப் போகிறபடியினால்” என்றும் அர்த்தம் கொள்ளலாம்.
எங்களை
மற்ற யாரையும் அல்ல
அவைகளை
அம்மனிதனுக்குள்ளிருந்தப் பிசாசுகள்
பிசாசுகள் வெளியே வந்து பன்றிகளுக்குள் சென்றன
“பிசாசுகள் அவனை விட்டு மிருகங்களுக்குள் சென்றன”
இதோ
“இதோ” என்ற வார்த்தை ஒரு ஆச்சரியப்படுத்தும் கருத்திற்கு நம் கவனத்தைத் திருப்ப நம்மைத் தயார்படுத்துகிறது.
செங்குத்தான மலையிலிருந்து வேகமாக இறங்கின
“செங்குத்தான மலையிலிருந்து வேகமாக ஓடி இறங்கின”
தண்ணீரில் அழிந்தன
“மூழ்கின”
Matthew 8:33-34
இது இயேசு பிசாசினால் பிடிபட்ட இரண்டு பேரை சுகமாக்கும் சம்பவத்தைத் முடிக்கிறது.
பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவன்
“பன்றிகளைப் பராமரித்துக் கொண்டிருந்தவன்”
பிசாசுகளால் ஆளப்பட்டிருந்த இரண்டு மனிர்தர்களுக்கு என்ன ஆனது
பிசாசுகளால் ஆளப்பட்டிருந்த இரண்டு மனிர்தர்களுக்கு என்ன ஆனது
பிசாசு பிடித்திருந்த மனிதருக்கு இயேசு என்ன செய்தார்.
இதோ
இது பெரிய கதையில் இன்னுமொரு சம்பவத்தின் துவக்கத்தைக் குறிக்கிறது. இங்கு முன் சம்பவங்களில் இருந்தவர்கள் அல்லாமல் வேறே மக்களை ஈடுபடுத்தி இருக்கலாம். உங்கள் மொழி இதை செய்ய ஒரு வழி வைத்திருக்கலாம்.
எல்லா பட்டணமும்
அதிகமான அல்லது முக்கால்வாசி மக்கள் என்று அர்த்தப்படலாம். ஒவ்வொருவனுமல்ல.
பகுதி
“பட்டணமும் அதின் அருகிலுள்ள நிலமும்”
Matthew 9
Matthew 9:1-2
இயேசு பக்கவாதமுள்ள ஒரு மனிதனை குணமாக்கும் சம்பவத்தைச் சொல்லும் பகுதியைத் துவக்குகிறது
இயேசு படகில் ஏறினார்
இயேசு படகில் ஏறினார்
சீடர்கள் இயேசுவோடு சென்றிருக்கலாம்.
ஒரு படகு
மத்தேயு 8:23இல் உள்ள அதே படகாககக் கூட இருக்கலாம். குழப்பத்தைத் தவிர்க்க மட்டும் இதனைக் குறிப்பிடவும்.
அவருடைய சொந்த ஊருக்கு வந்தார்.
“அவர் தங்கியிருந்த பட்டணத்திற்கு”
இதோ
இது பெரிய கதையில் இன்னுமொரு சம்பவத்தின் துவக்கத்தைக் குறிக்கிறது. இங்கு முன் சம்பவங்களில் இருந்தவர்கள் அல்லாமல் வேறே மக்களை ஈடுபடுத்தி இருக்கலாம். உங்கள் மொழி இதை செய்ய ஒரு வழி வைத்திருக்கலாம்.
அவர்கள் ... அவர்களுடைய
முடக்குவாதம் உள்ளவனை யேசுவிடம் கொண்டு வந்தவர்கள். முடக்குவாதம் உள்ளவனையும் உள்ளடக்கி இருக்கலாம்.
குமாரன்
அம்மனிதன் இயேசுவினுடைய சொந்தக் குமாரன் அல்ல. இயேசு அவனிடம் சாந்தமாகப் பேசினார். இது குழப்புகிறது என்றால், “என் நண்பனே” அல்லது “வாலிபனே”என்று மொழிபெயர்க்கவும்.
உன்னுடையப் பாவங்கள் மன்னிக்கப்பட்டது
“தேவன் உன் பாவங்களை மன்னித்தார்” அல்லது “நான் உன் பாவங்களை மன்னித்தேன்”
Matthew 9:3-6
இயேசு பக்கவாதமுள்ள ஒரு மனிதனை குணமாக்கும் சம்பவத்தைச் சொல்லும் பகுதியைத் தொடர்ந்து சொல்லுகிறது.
இதோ
இது பெரிய கதையில் இன்னுமொரு சம்பவத்தின் துவக்கத்தைக் குறிக்கிறது. இங்கு முன் சம்பவங்களில் இருந்தவர்கள் அல்லாமல் வேறே மக்களை ஈடுபடுத்தி இருக்கலாம். உங்கள் மொழி இதை செய்ய ஒரு வழி வைத்திருக்கலாம்.
அவர்களுக்குள்ளே
“அவர்களுக்கே” அவர்களுடைய மனதில், அல்லது “ஒருவருக்கொருவர்” தங்கள் வாயினால் என்று அர்த்தம் கொள்ளலாம்.
பரிசேயர்கள் தேவன் மட்டுமே செய்யக்கூடும் என்பவைகளைத் தானும் செய்ய முடியும் என்று உரிமைக்கொண்டாடினார்.
அவர்களின் நினைவுகளை அறிந்திருந்தார்
இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையிலோ அல்லது அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருப்பதை கண்டதாலோ இயேசு அவர்கள் நினைத்துக்கொண்டிருந்ததை அறிந்திருந்தார்.
ஏன் உங்கள் மனதில் தீமையை நினைத்துக்கொண்டிருகிறீர்கள்?
இந்த கேள்வியை இயேசு அவர்களை கடிந்து கொள்ளும்படி பயன்படுத்தினார்.
நீங்கள் ... உங்களுடைய
பன்மை
தீமை
இது சமூகநெறித் தீமை அல்லது துன்மார்க்கம், ஒரு சிறிய தவறல்ல.
எது சுலபமானது ...?
இயேசு இந்தக் கேள்வியினால், அவனுடைய பாவங்களே அவன் முடக்குவாதனாய் இருப்பதற்குக் காரணம் என்றும், அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டால் அவன் நடக்க முடியும் என்றும் பரிசேயர்கள் நினைத்து இருந்ததினால், அவர்களுக்கு தான் அவனை சுகமாக்குவதனால் பாவங்களையும் மன்னிக்க அவரால் கூடும் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள் என்பதிற்காக, நினைப்பூட்டினார்.
உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது” அல்லது “எழுந்து நட” என்று சொல்வதா, எது சுலபமானது?
“’உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது’ என்று சொல்வது சுலபமா?” அல்லது “’எழுந்து நட’ என்று சொல்வது சுலபமானதோ?’” உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது. இது 1. “நான் உன் பாவங்களை மன்னிக்கிறேன்” (UDB) 2. தேவன் உன் பாவங்களை மன்னிக்கிறார்” என்று அர்த்தப்படும். “உன்னுடைய” என்பது ஒருமையில் உள்ளது.
ஆயினும் நீ அறிந்துகொள்ளும்படி
“நான் உங்களுக்கு நிரூபித்துக் காட்டுவேன்.” “உங்களுக்கு” பன்மையில் உள்ளது.
உன்னுடைய ... உன்னுடைய
ஒருமை
உன் வீட்டுக்குப் போ
இயேசு அவன் வேறெங்கும் போக வேண்டாம் அவனைத் தடுக்கிறார். அவன் தன வீட்டுக்குப் போக அவனுக்கு சந்தர்ப்பம் கொடுக்கிறரர்.
Matthew 9:7-9
இயேசு முடக்குவாதம் உள்ள மனிதனை குணமாக்கும் சம்பவம் இது முடிக்கிறது. பின்பு இயேசு ஒரு வரி வசூலிப்பவனை தன் சீடனாய் இருக்க அழைக்கிறார்.
துதி
மத்தேயு 5:15, 16 இல் பயன்படுத்தின அதே வார்த்தையை பயன்படுத்தவும்.
இப்படிப்பட்ட அதிகாரம்
பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்லும் அதிகாரம்
மத்தேயு ...அவனுக்கு...அவன்
சபைப் பாரம்பரியம் மத்தேயு இந்த சுவிசேஷத்தின் ஆசிரியர் என்று சொல்லுகிறது. ஆனால் இந்த குறிப்புகள் பிரதிப் பெயர்ச்சொற்களாகிய அவனுக்கு, அவன் என்பவைகளை எனக்கு, நான் என்று மாற்றுவதற்கு எந்தக் காரணமும் கொடுக்கவில்லை
அவர் அவனிடம் சொன்னார்
“இயேசு மத்தேயுவிடம் சொன்னார்”
இயேசு அவ்விடம் விட்டு கடந்து போனார்.
இந்தச் சொற்றொடர் “இதோ” என்ற வார்த்தையோடு ஆரம்பிக்கும் சம்பவத்தை (மத்தேயு 09:07 ; 9:8) அறிமுகப்படுத்துகிறது. உங்கள் மொழியில் இதை செய்யக்கூடிய வழி இருக்குமானால் செய்யவும்.
கடந்து போவது
என்பதைக் குறிக்க பொதுவான வார்த்தையைப் பயன்படுத்தவும். இயேசு மலை மீது ஏறினாரா அல்லது மலையிலிருந்து இறங்கினாரா அல்லது கப்பர்நகூமுக்குப் போனாரா அல்லது அங்கிருந்து தூரப்போனாரஎன்பது தெளிவில்லை.
அவன் எழுந்து அவரைத் தொடர்ந்து போனான்
ஒரு சீடனாய் “மத்தேயு எழுந்து இயேசுவைப் பின் தொடர்ந்தான்” (UDB யைப் பார்க்கவும்), இயேசுவின் அடுத்த சேருமிடத்திற்கல்ல.
Matthew 9:10-11
வரிவசூலிக்கும் மத்தேயுவின் வீட்டில் இந்த சம்பவங்கள் நடைபெறுகிறது.
வீடு
இது ஒருவேளை மத்தேயுவின் வீடாய் இருக்கலாம் (UDB யைப் பார்க்கவும்). ஆனால் அது இயேசுவின் வீடாய்க் கூட இருக்கலாம் (“இயேசுவோடும் அவர் சீடர்களோடும் உணவுப்பந்திருந்தார்கள்)
இதோ
“இதோ” என்ற வார்த்தை இந்த சங்கதியில் வரும் புதிய மனுஷர்களை நமக்குக் காட்டுவதாய் இருக்கிறது. உங்கள் மொழியில் இதைச் செய்ய ஒரு வழி இருக்கலாம். ஆங்கிலத்தில் “ஒரு மனிதன் இருந்தான், அவன் ...” சொல்லப்பட்டிருக்கிறது.
பரிசேயர்கள் அதைக் கண்டபோது
“இயேசு ஆயக்காரரோடும் (வரிவசூலிப்பவர்கள்) பாவிகளோடும் உண்பதைப் பரிசேயர்கள் பார்த்தபோது.”
Matthew 9:12-13
வரிவசூலிக்கும் மத்தேயுவின் வீட்டில் இந்த சம்பவங்கள் நடைபெறுகிறது.
இயேசு இதைக் கேள்விப்பட்டபோது
“இதை” என்பது பரிசேயர்கள் இயேசு அவர்களோடு இயேசு ஆயக்காரரோடும் (வரிவசூலிப்பவர்கள்) பாவிகளோடும் உணவு உண்பதைக் குறித்தக் கேள்வியைக் குறிக்கும்.
உடலில் வலிமை உள்ளவர்கள்
“திடகாத்திரமாய் இருப்பவர்கள்.”
வைத்தியர்
“மருத்துவர்” (UDB)
வியாதியாய் இருப்பவர்களுக்கு இதுமாதிரி ஒருவர் தேவை
“வியாதியாய் இருப்பவர்களுக்கு மருத்துவர் தேவை”
நீங்கள் போய் இது என்ன என்று கற்றுக்கொள்ள வேண்டும்
“இதன் அர்த்தத்தை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்”
நீங்கள் போக வேண்டும்
பிரதிப் பெயர் “நீங்கள்” என்பது பரிசேயர்களைக் குறிக்கிறது.
Matthew 9:14-15
யோவான் ஸ்நானகனின் சீடர்கள் ஏன் இயேசுவின் சீடர்கள் உபவாசிப்பதில்லை என்று கேள்வி எழுப்பினார்கள்.
கல்யாணத்திற்கு வந்தவர்கள் துக்கமாய் இருக்கலாமா...அவர்களுக்கு?
கல்யாணத்திற்கு வந்தவர்கள் மணவாளன் அவர்களோடு இருக்கையில் உபவாசிக்க வேண்டுமென்று யாரும் எதிர்பார்க்கமாட்டார்கள்.
கல்யாணத்திற்கு வந்தவர்கள்
இயேசுவின் சீடர்களுக்கு இது உருவகமாகும்.
மணவாளன் அவர்களோடு இருக்கும்போது...மணவாளன் அவர்களை விட்டு எடுத்துக்கொள்ளப்படுவார்
“மணவாளன்” இயேசுவாகும். அவர் இன்னும் உயரோடு இருக்கிறார். “இன்னும்” சீடர்களோடு “இருக்கிறார்”.
மணவாளன் அவர்களை விட்டு எடுத்துக்கொள்ளப்படுவார்
“வேறொருவன் மணவாளனை எடுத்துக்கொண்டு செல்வார்.” கொள்ளப்படுவதைச் சொல்லும் உருவகம் இதுவாகும்.
துக்கமாயிருக்க
“வருந்துவது...சோகமாயிருப்பது” (UDB)
Matthew 9:16
யோவானின் சீடர்கள் கேட்டக் கேள்விக்கு இயேசு தொடர்ந்து பதிலளித்துக் கொண்டிருந்தார்.
ஒருவனும் பழைய துணியின்மேல் புதுத் துணியைப் போடமாட்டான்.
பழைய பாரம்பரியத்தை மட்டும் தெரிந்தவர்கள் புதியவைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஆடை
“உடுப்பு”
மறைக்கப்பயன்படும் துணி
கிழிந்த துணிமீது மறைக்கப் பயன்படும் “புதிய துணி”
Matthew 9:17
யோவானின் சீடர்கள் கேட்டக் கேள்விக்கு இயேசு தொடர்ந்து பதிலளித்துக் கொண்டிருந்தார்.
பழையத் துருத்தியில் புதுத் திராட்ச ரசம் ஊற்றவும் மாட்டார்கள்.
யோவானின் சீடர்களின் கேள்விக்கு (நாமும் பரிசேயர்கள் மட்டும் ஏன் அடிக்கடி உபவாசிக்க வேண்டும், ஆனால் உங்கள் சீடர்கள் மட்டும் ஏன் அப்படி செய்வதிலை? ) பதிலாக சொல்லப்பட்ட உருவகமோ # அல்லது உவமானமோ இதுவாகும்
போடமாட்டார்கள். “ஊற்றவும் மாட்டார்கள்” (UDB) அல்லது “மனுஷர் போடவும் மாட்டார்கள்”
புது திராட்ச ரசம்
“திராட்ச பானம்.” இது புளிக்காத ரசத்தைக் குறிக்கிறது. திராட்சைப் பழம் உங்கள் இடத்தில் இல்லாதது என்றால், உங்கள் பகுதிகளில் உள்ள பொதுவான பழத்தின் பெயரைக் பயன்படுத்தவும்.
பழைய துருத்திகள்
பல முறை உபயோகப்படுத்தப்பட்ட துருத்தியைக் குறிக்கிறது.
துருத்திகள்
மிருகத்தின் தோல்களிலிருந்து செய்யப்பட்ட பைகள் இவை. இவை “திராட்ச ரசப்பைகள்” அல்லது “தோல் பைகள்”என்றும் அழைக்கப்படும் (UDB).
துருத்தி வெடித்துப்போகும்
புது ரசம் புளித்துப் பெருகும் போது, அவைகள் விரிய முடியாமல் கிழிந்துத் திறக்கும்.
அழிந்தது
“கெட்டுவிட்டது” (UDB)
புதுத் துருத்திகள்
“புதியத் துருத்திகள்” அல்லது “புதிய ரசப்பைகள்.” இது உபயோகப்படுத்தப்படாத துருத்திகளைக் குறிக்கிறது.
Matthew 9:18-19
யூதத் தலைவனின் மகளைக் குணமாக்குவதைப்பற்றிய கணக்கு இங்கு துவங்குகிறது. இந்தக் காரியங்கள் யோவான் சீடர்கள் உபவாசத்தைக் குறித்து கேட்ட கேள்விக்கு இயேசு சொன்ன பதிலை இது குறிக்கிறது. இதோ “இதோ” என்ற வார்த்தை இந்த சங்கதியில் வரும் புதிய மனுஷர்களை நமக்குக் காட்டுவதாய் இருக்கிறது. உங்கள் மொழியில் இதைச் செய்ய ஒரு வழி இருக்கலாம். அவரை தலைக் குனிந்து வணங்கி யூத கலாச்சாரத்தில் ஒருவருக்கு மரியாதை செலுத்தும் முறை இப்படியே. வந்து அவள் மீது உம் கையை வையும் அப்பொழுது அவள் பிழைப்பாள் இது யூதத் தலைவனுக்கு இயேசுவுக்கு தன் மகளை பிழைக்கச் செய்யும் சக்தி இருக்கிறது என்று நம்பினான் என்பதைக் காட்டுகிறது. அவர் சீடர்கள் இயேசுவின் சீடர்கள்
Matthew 9:20-22
யூதத் தலைவனின் மகளை குணமாக்க சென்று கொண்டிருக்கும்போது எவ்வாறு மற்றொரு பெண்ணை குணமாக்கினார் என்பதை விவரிக்கிறது.
இதோ
“இதோ” என்ற வார்த்தை இந்த சங்கதியில் வரும் புதிய மனுஷர்களை நமக்குக் காட்டுவதாய் இருக்கிறது. உங்கள் மொழியில் இதைச் செய்ய ஒரு வழி இருக்கலாம்.
மிகுந்த ரத்தப் போக்கு இருந்தது
“மிகக்கடுமையாக ரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது.” அந்நேரம் அதற்கானது இல்லையென்றாலும் அவளுடைய கருப்பையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்திருக்கலாம். சில கலாச்சாரங்கள் இந்த நிலைமையை குறிக்க சாந்தமான வேறொரு வழி இருக்கலாம்.
அவர் துணியைத் தொட்டால்தான், நான் சுகமாவேன்
அவர் உடுப்பு அவளை சுகமாக்கும் என்று அவள் நம்பவில்லை. இயேசு அவளை சுகமாக்குவார் என்று நம்பினாள்.
உடுப்பு
“அங்கி”
ஆனால்
“பதிலாக.” அவள் நடக்கும் என்று நம்பினது நடக்கவில்லை.
மகள்
அப்பெண் இயேசுவின் உண்மையான மகளல்ல. இயேசு அவளிடல் சாந்தமாகப் பேசிக்கொண்டிருந்தார். இது குழப்பமாய் இருக்கிறது என்றால், “வாலிபப் பெண்ணே” என்று மொழிபெயர்க்கவும். அல்லது கழித்து விடவும்.
Matthew 9:23-24
யூதத் தலைவனின் மகளை குணமாக்கும் செய்தியை விவரிக்கிறது.
தலைவனின் வீடு
இது யூதத் தலைவனின் வீடு.
புல்லாங்குழல்
இது காற்றை ஒரு முனைப்பகுதியில் ஊதி இசைக்கும் ஒரு நீளமான உள்ளே குழிவு உள்ள இசைக்கருவி ஆகும்.
குழல் ஊதுபவர்கள்
“குழல் ஊதும் மக்கள்”
தூரம் போங்கள்
உங்கள் மொழியில் இருக்குமானால் பன்மையைப் பயன்படுத்தவும் ஏனென்றால் இயேசு அனேகரோடு பேசிக்கொண்டிருந்தார்.
அந்தச் சிறுமி மரிக்கவில்லை, உறங்கிக் கொண்டிருந்தாள்
இயேசு உறக்கம் என்கிற பிம்பத்தை உபயோகப்படுத்திறார் ஏனென்றால் அவள் மரணம் ஒரு சிறு மணித்துளி மட்டுமே; அவளை எழுப்பப்போகிறார் என்பதையும் அறிந்திருந்தார்.
Matthew 9:25-26
யூதத் தலைவனின் மகளை குணமாக்கும் சம்பவம் முடிகிறது.
மக்கள் கூட்டத்தை வெளியே அனுப்பிய போது
“இயேசு மக்கள் கூட்டத்தை வெளியே அனுப்பியப் பிறகு” அல்லது “குடும்பம் அந்த மக்களை வெளியே அனுப்பியப் பிறகு”
எழுந்து
“படுக்கையை விட்டு எழுந்து.” மத்தேயு 08:14, 8:15 இல் உள்ள அதே கருத்து தான்.
இந்த சங்கதி அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று
இந்த ஆள்தத்துவம் மக்களே அச்செய்தியை மற்றவர்களுக்கு சொன்னார்கள் என்பதைச் சொல்லுகிறது. “அந்த முழுப் பிரதேசத்தின் மக்களும் அதைப் பற்றிக் கேள்விப்பட்டார்கள்” (UDB) அல்லது “அந்தச் சிறுமி உயிரோடு இருப்பதைப் பார்த்தவர்கள் அந்தப் பகுதியிலுள்ள ஒவ்வொருக்கும் சொல்ல ஆரம்பித்தார்கள்.”
Matthew 9:27-28
இயேசு இரண்டு குருடர்களைக் குணமாக்கும் சங்கதியை இது துவங்குகிறது.
இயேசு அங்கிருந்து சென்று கொண்டிருக்கும்போது
அந்தப் பகுதியை விட்டு இயேசு போய்க் கொண்டிருந்தார்.
கடந்து சென்றார்
இயேசு மலைக்கு மேலே சென்றாரோ அல்லது கீழே சென்றாரோ தெரியவில்லை. போவதைக் குறிக்கும் பொதுவான வார்த்தையைப் பயன்படுத்தவும்.
தாவீதின் குமாரன்
இயேசு தாவீதின் சொந்தக் குமாரனல்ல, அதனால் “தாவீதின் சந்ததி” என்று மொழிபெயர்க்கலாம் (UDB). ஆயினும், “தாவீதின் குமாரன்” மேசியாவுக்குக் கொடுத்த பெயர்களில் ஒன்றாகும். இயேசுவை இந்தப் பெயர் வைத்து அழைத்துக்கொண்டுமிருந்திருக்கலாம்.
இயேசு வீட்டினுள் வந்தபோது
இது இயேசுவின் வீடாக இருக்கலாம் |(UDB), அல்லது மத்தேயு 9:10 இல் சொல்லப்பட்ட வீடாக இருக்கலாம்.
ஆம், கர்த்தாவே
“ஆம், கர்த்தாவே, நீர் எங்களை குணமாக்க முடியும் என்று நம்புகிறோம்.”
Matthew 9:29-31
இயேசு இரண்டு குருடர்களை குணமாக்கும் சங்கதியை இது முடிக்கிறது.
அவர்களுடையக் கண்களைத் தொட்டு, பின்பு சொன்னார்
அவர்கள் இவருடையக் கண்களையும் ஒரே நேரத்தில் தொட்டாரா என்பதும், அல்லது தன் வலது கையை பயன்படுத்தி ஒவோருவனைத் தொட்டாரா என்பதும் தெரியவில்லை. இடது கை சுத்தமல்லாத வேலைகளைச் செய்யப் பயன்படுத்துவதால், அவர் தன வலது கையைப் பயன்படுத்தியிருப்பார் என்றே சொல்லலாம். அவர் தொடும் பொழுதே பேசினாரா அல்லது தோட்டப் பிறகு பேசினாரா என்பதும் தெளிவில்லை.
அவர்கள் கண்கள் திறக்கப்பட்டது
“தேவன் அவர்கள் கண்களை சுகமாக்கினார்” அல்லது “அந்த இரண்டு குருடர்களுக்கும் பார்க்க முடிந்தது”
ஆனால்
“பதிலாக.” இயேசு சொன்னதை அம்மனிதர்கள் செய்யவில்லை.
செய்தியைப் பரப்பி
“அனேக மக்களுக்கு தங்களுக்கு நடந்ததைச் சொன்னார்கள்”
Matthew 9:32-34
இயேசு தனது சொந்த ஊரின் மக்களை குணமாக்கும் சங்கதியை இது தொடர்கிறது.
இதோ
“இதோ” என்ற வார்த்தை இந்த சங்கதியில் வரும் புதிய மனுஷர்களை நமக்குக் காட்டுவதாய் இருக்கிறது. உங்கள் மொழியில் இதைச் செய்ய ஒரு வழி இருக்கலாம்.
ஊமையன்
பேச முடியாதவன்
ஊமையன் பேசினான்
“ஊமையன் பேசத் தொடங்கினான்” அல்லது “ஊமையனாக இருந்தவன் பேசினான்” அல்லது “இனி ஊமையன் அல்லாதவன், பேசினான்”
மக்கள் திகைத்தனர்
“மக்கள் ஆச்சரியப்பட்டனர்”
இதுவரைப் பார்க்கப் படவில்லை
“ஒருபோதும் இது நடக்கவில்லை” அல்லது “இது மாதிரியானதை ஒருவரும் பார்த்ததில்லை.”
பிசாசுகளை அவர் துரத்தினார்
“பிசாசுகள் போகும்படி கட்டாயப்படுத்தினார்.” பிரதிப் பெயர் “அவர்” இயேசுவைக் குறிக்கிறது.
Matthew 9:35-36
கலிலேயாப் பகுதியில் இயேசு கற்றுக்கொடுத்ததையும், பிரசங்கம் செய்ததையும், குணமாக்கினதையும் சுருக்கமாகச் இந்தப் பகுதி சொல்லுகிறது.
அனைத்துப் பட்டணங்களும்
“அநேகப் பட்டணங்கள்.”
பட்டணங்கள்...கிராமங்கள்
“பெரிய கிராமங்கள்...சின்ன கிராமங்கள்” அல்லது “பெரிய நகரங்கள்...சிறிய பட்டணங்கள்”
எல்லா வகை நோயும் மற்றும் எல்லா வகை வியாதியும்
“ஒவ்வொரு நோய் மற்றும் ஒவ்வொரு நோய்.” “வியாதி” மற்றும் “நோய்” என்ற வார்த்தைகள் மிகவும் ஒற்றுமையானவைகள். முடியுமானால் இரண்டு வார்த்தைகளாக மொழிபெயர்க்கலாம். “நோய்” ஒருவனை வியாதிப்படுத்துகிறது. “வியாதி” என்பது நோயினால் வரும் உடல் பெலவீனம்.
மேய்ப்பனில்லாத ஆடுகள் போல அவர்கள் இருந்தார்கள்
“அம்மக்களுக்கு தலைவனில்லை”
Matthew 9:37-38
இயேசு, முந்தின பகுதியில், தம்முடைய சீஷர்கள் மக்கள் கூட்டத்தின் தேவைகளுக்கு எவ்வாறு பதில்செய்யவேண்டுமென்று அறுவடையைக் குறித்ததான உருவக அணியைப் பயன்படுத்துகிறார்.
அறுப்பு மிகுதி, ஆனால் கூலிக்காரர்களோ கொஞ்சம்
இந்த உருவணி தேவன்மீதும் மாற்றும் அவருடைய ராஜ்யத்தில் சேர்க்கப்படுவதிலும் நம்பிக்கை உள்ள அநேகரையும், விளைநிலத்தில் வளரும் உணவையும் வேலை ஆட்களுக்கு தேவனைப் பற்றிச் சொல்லுபவர்களையும் ஒப்புமைப்படுத்திப் பார்க்கிறது. உருவகம் என்னவென்றால் கொஞ்சம்பேர் மாத்திரமே தேவனைப் பற்றி அநேகருக்குச் சொல்ல இருகிறார்கள்.
அறுப்பு
“முற்றிய உணவை சேர்ப்பது”
கூலிக்காரர்கள்
“வேலை ஆட்கள்”
அறுப்பின் கர்த்தரிடம் ஜெபம் பண்ணுங்கள்
“கர்த்தரிடம் ஜெபம் பண்ணுங்கள். அவர் அறுப்புக்கு அதிகாரியாயிருக்கிறார்.
Matthew 10
Matthew 10:1
இயேசு தன் பன்னிரண்டு சீடர்களை வேலைக்கு அனுப்பும் சங்கதிகளை இது துவங்குகிறது.
தன பன்னிர்ரெண்டு சீடர்களையும் ஒன்றாக அழைத்தார்
“தன் பன்னிரண்டு சீடர்களையும் அழைப்பித்தார்”
அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்
அவைகளைத் துரத்தினார்
“அசுத்த ஆவிகளைப் போகப்பண்ணினார்”
எல்லா வகையான வியாதியும் எல்லா வகையான நோயும்
“ஒவ்வொரு வியாதி மற்றும் ஒவ்வொரு நோய்.” “வியாதி” மற்றும் “நோய்” என்ற வார்த்தைகள் மிகவும் ஒற்றுமையானவைகள். முடியுமானால் இரண்டு வார்த்தைகளாக மொழிபெயர்க்கலாம். “நோய்” ஒருவனை வியாதிப்படுத்துகிறது. “வியாதி” என்பது நோயினால் வரும் உடல் பெலவீனம்.
Matthew 10:2-4
இயேசு தன் பன்னிரண்டு சீடர்களை அவரின் வேலைக்கு அனுப்பும் சங்கதிகளை இது தொடர்கிறது.
முதல்
வரிசையில், பதவியில் அல்ல
சீலத்தான்
சாத்தியமான அர்த்தங்கள்: 1. “சீலத்தான்” அல்லது 2. “முனைப்பு மிக்கவன்.” முதல் அர்த்தம், யூதர்களை ரோமர்களின் ஆட்சியிலிருந்து விடுவிக்க விரும்பும் ஒரு குழுவின் அங்கத்தினன் என்று காட்டுகிறது. மறு மொழிபெயர்ப்பு: “தேசபக்தி உள்ளவன்” அல்லது “தேசியவாதி” அல்லது “விடுதலைப் போராட்ட வீரன்.” இரண்டாம் அர்த்தம், தேவன் காணப்பட முனைப்பு கொண்டவன் என்று காட்டுகிறது. மறு மொழிபெயர்ப்பு: “உணர்ச்சிகரமானவன்.”
ஆயக்காரனாகிய (வரிவசூலிப்பவன்) மத்தேயு
“ஆயக்காரனாக இருந்த மத்தேயு”
அவரைக் காட்டிக்கொடுத்த
“இயேசுவைக் காட்டிக்கொடுத்த”
Matthew 10:5-7
இயேசு தன் பன்னிரண்டு சீடர்களை அவரின் வேலைக்கு அனுப்பும் சங்கதிகளை இது தொடர்கிறது.
இந்த பன்னிரெண்டு பேரை இயேசு அனுப்பினார்
“இயேசு இந்த பன்னிரண்டு மனுஷரை அனுப்பினார்” அல்லது “இந்த பன்னிரண்டு பேரைத் தான் இயேசு
அனுப்பினார்”
அனுப்பினார் பிரத்தியேகமான வேலைக்காக இயேசு அவர்களை வெளியே அனுப்பினார். “வெளியே அனுப்பினார்” என்ற வார்த்தை “அப்போஸ்தலர்கள்” என்ற பெயர்ச்சொல்லுக்கு வினைச்சொல்லின் வடிவமாக இருக்கிறது.
அவர்களுக்கு அவர் போதித்தார்
“அவர்கள் செய்ய வேண்டியதை அவர்களுக்குச் சொன்னார்.” அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டார்” என்று இதை மொழிபெயர்க்கலாம்.
காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டார்
முழு இஸ்ரவேல் தேசத்தையும் தங்கள் மேய்ப்பனிடமிருந்து வழி தப்பிப்போன ஆடுகளுக்கு ஒப்பிடும் உருவகமாகும்.
இஸ்ரவேல் வீட்டார்
இந்தக் கூற்று இஸ்ரவேல் தேசத்தைக் குறிக்கிறது. “இஸ்ரவேல் ஜனங்கள்” அல்லது “இஸ்ரவேலின் சந்ததி” என்று இதை மொழிபெயர்க்கலாம்.
நீங்கள் போகும் போதும்
“நீங்கள்” என்ற பிரதிப் பெயர்ச்சொல் பன்னிரண்டு சீடர்களைக் குறிக்கிறது.
பரலோக ரரஜ்யம் சமீபமாய் வந்திருக்கிறது
மத்தேயு 3:1,2இல் இந்த கருத்தை மொழிபெயர்த்ததைப் போல் மொழிபெயர்க்கவும்.
Matthew 10:8-10
இயேசு தன் பன்னிரண்டு சீடர்களை அவரின் வேலைக்கு அனுப்பும் சங்கதிகளை இது தொடர்கிறது.
நீங்கள்...உங்களுடைய
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
பொன்னையோ, வெள்ளியையோ, அல்லது செம்பையோ சேர்க்கவேண்டாம்
“பொன்னையோ, வெள்ளியையோ, அல்லது செம்பையோ சேர்க்கவேண்டாம்”
சேர்த்து
“பெறு,” “ஏற்றுக்கொள்,” அல்லது “எடு”
பொன், வெள்ளி, அல்லது செம்பு
இந்தப் பொருள்களிலிருந்து காசுகள் செய்யப்படுகின்றது. இந்த அட்டவணை பணத்திற்கான உருவகமாகும். இந்தப் பொருள்கள் உங்கள் பகுதிகளில் தெரியப்படாதவைகள் என்றால், “பணம்” என்றே மொழிபெயருங்கள்.
பைகள்
இது “கச்சைகள்” அல்லது “பணக்கச்சைகள்,” என்று அர்த்தப்படும். பணத்தைக் கொண்டுபோகப் பயன்படும் எதற்குவேண்டுமானாலும் இந்த வார்த்தைப் பயன்படும். கச்சை துணியிலிருந்தோ அல்லது தோலிலிருந்தோ செய்யப்பட்ட நீளமான பட்டை ; இடுப்பைச் சுற்றிக் கட்டுவர். இவை பெரும்பாலும் அகலமாக இருந்தததால் மடித்து பணத்தைக் கொண்டுபோகப் பயன்படுத்துவர்.
பிரயாணப் பை
பிரயாணத்தின் போது பொருட்களை எடுத்துக் கொண்டு செல்லப் பயன்படும் ஏதேனும் பையாக இருக்கலாம். அல்லது ஒருவனால் உணவையோ அல்லாதோ பணத்தையோ சேர்த்துவைக்கப் பயன்படுபவையாக இருக்கலாம்.
இரண்டு அங்கிகள்
மத்தேயு 05:40இல் உபயோகப்படுத்தின அதே வார்த்தையை “அங்கிகளுக்குப்” பயன்படுத்தவும்.
கூலியாள்
“வேலையாள்”
உணவு
“அவனுக்கு என்னத் தேவையோ”
Matthew 10:11-13
இயேசு தன் பன்னிரண்டு சீடர்களை அவரின் வேலைக்கு அனுப்பும் சங்கதிகளை இது தொடர்கிறது.
நீங்கள்...உங்களுடைய
இந்தப் பிரதிப் பெயர் பன்னிரண்டு சீடர்களைக் குறிக்கிறது.
எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கையில்
எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கையில்
“ஒரு பட்டணத்திலோ அல்லது கிராமத்திலோ நீங்கள் பிரவேசிக்கும்போது” அல்லது “நீங்கள் பிரவேசிக்கும் ஒவ்வொரு பட்டணத்திலும் அல்லது கிராமத்திலும்”
பட்டணம்...கிராமம்
“பெரிய கிராமம்...சிறிய கிராமம்” அல்லது “பெரிய பட்டணம்...சிறிய பட்டணம்.” மத்தேயு 09:35இல் கூறப்பட்டுள்ள அதே வார்த்தைகள் தான் இவைகள்.
நீங்கள் புறப்படும்வரை அங்கேயே தங்கியிருங்கள்
“பட்டணத்தை அல்லது கிராமத்தையோ விட்டுப்போகும் வரை அந்த மனிதனின் வீட்டிலே தங்கி இருங்கள்”
ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கும்போது, அதை வாழ்த்துங்கள்
“ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கும்போது, அதில் வாழும் மக்களை வாழ்த்துங்கள்.” “அக்காலத்தில் பொதுவான வாழ்த்துதல் என்னவென்றால் “இந்த வீட்டிற்கு சமாதானம் உண்டாவதாக!”
அந்த வீடு தகுதியானது.
“அந்த வீட்டில் வசிக்கும் மக்கள் உங்களை நன்றாக வரவேற்றார்கள்” (UDB) அல்லது “அந்த வீட்டில் வசிக்கும் மக்கள் உங்களை நன்றாக கவனித்தார்கள்”
உங்கள் சமாதானம் அதன் மீது வரட்டும்
“உங்கள் சமாதானம் அதன் மீது வரட்டும்” அல்லது “அந்த வீட்டில் வசிப்பவர்கள் சமாதானத்தோடு வாழ்வார்கள்” (UDB யைப் பார்க்கவும்)
உங்கள் சமாதானம்
அந்த வீட்டின் மனிதர்மீது தேவன் கொண்டுவரவேண்டுமென்று அப்போஸ்தலர்கள் கேட்ட சமாதானம்
தகுதியில்லை என்றால்
“உங்களை அவர்கள் நன்றாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றால்” (UDB) அல்லது “உங்களை ஒழுங்காக கவனிக்கவில்லை என்றால்”
உங்கள் சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பி வரட்டும்
இந்த இரண்டு அர்த்தங்களில் ஒரு அர்த்தம் இது கொள்ளலாம். 1. அந்த வீடு தகுதியில்லை என்றால், தேவன் அவர்களின் சமாதானத்தை அல்லது ஆசீர்வாதங்களை அவர்களின் வீட்டிற்கு போகாமல் பார்த்துக்கொள்வார். (UDB), அல்லது 2. அந்த வீடு தகுதி இல்லை என்றால், அப்போஸ்தலர்கள் எதையாவது செய்து, அதாவது தேவனிடம் அவர்களின் சமாதானத்தின் வாழ்த்துதலை கனப்படுத்தாதேயும் என்று கேட்கலாம். வாழ்த்துதலை திரும்பப்பெற்று கொள்ளவதைச் சொல்ல உங்கள் மொழியில் வழி இருக்குமானால், இங்கு உபயோகிக்கவும்.
Matthew 10:14-15
இயேசு தன் பன்னிரண்டு சீடர்களை அவரின் வேலைக்கு அனுப்பும் சங்கதிகளை இது தொடர்கிறது. 10:1.
உங்களை ஏற்றுக்கொள்ளாமலும் அல்லது கவனியாமலும் இருக்கிறவர்கள்
“அந்தப் பட்டணத்தார் உங்களை ஏற்றுக்கொள்ளவில்லை அல்லது கவனிக்கவில்லை என்றாலோ”
நீங்கள்...உங்களுடைய
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
உங்கள் வார்த்தைகளுக்கு செவிகொடுத்து
“உங்கள் செய்திக்கு செவிகொடுத்து” (UDB) அல்லது “நீங்கள் என்ன சொல்லுகிறீர்களோ அதற்கு செவிகொடுத்து”
பட்டணம்
மத்தேயு 10:11 இல் இதை மொழி பெயர்த்ததைப் போலவே மொழிபெயர்க்கவும்.
உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறி
“உங்கள் கால்களில் உள்ள அந்த வீட்டின் தூசியை அல்லது அந்தப் பட்டணத்தின் தூசியை உதறி.” இது, தேவன் அந்த வீட்டின் அல்லது அப்பட்டணத்தின் மக்களை தள்ளினார் என்பதற்கான அடையாளமாகும். (UDB யைப் பார்க்கவும்)
இது தாங்கக்கூடியதாய் இருக்கட்டும்
“பாடு குறைவாய் இருக்கட்டும்”
சோதோம் கொமோரா நாடு
“தேவன் பரத்திலிருந்து அனுப்பப்பட்ட அக்கினியால் அழித்த சோதோம் கொமோரா பட்டணங்களில் வாழ்ந்தவர்கள்,”
அந்தப் பட்டணம்
அப்போஸ்தலர்களையோ அல்லது அவர்களுடைய செய்தியை ஏற்றுக்கொள்ளாத அந்தப் பட்டணத்து மக்கள்.
Matthew 10:16-18
இயேசு, தனக்காக வேலை செய்யும்போது தனது பன்னிரண்டு சீடர்கள் படப்போகும் பாடுகளைக் குறித்து அவர்களுக்குச் சொல்லத் தொடங்கினார்.
இதோ
“இதோ” என்ற வார்த்தை பின்வருபவற்றை அழுத்திச் சொல்லுகிறது. மாற்று மொழிபெயர்ப்பு: “பார்” அல்லது “கவனி” அல்லது “நான் சொல்லப்போவதற்கு கவனம் செலுத்து” (UDB யைப் பார்)
நான் உங்களை அனுப்புகிறேன்
இயேசு அவர்களை ஒரு பிரத்தியேகமான ஒரு வேலைக்கு அனுப்புகிறார்.
ஒநாய்களின் மத்தியில் ஆடுகளைப் போல
இயேசு தான் அனுப்பும் சீடர்களை தாக்கக்கூடிய காட்டு விலங்குகள் மத்தியில் பாதுகாப்பில்லாமல் செல்லும் தற்காப்பு இல்லாத விலங்குகளுக்கு ஒப்பிடுகிறார்.
ஆடுகளைப் போல
தற்காப்பற்ற
ஓநாய்களின் மத்தியில்
“ஆபத்தான ஒநாய்கள் போலுள்ள மக்கள் மத்தியில்” அல்லது “ஆபத்தான மிருகங்கள் நடப்பதைப் போல நடப்பவர்கள் மத்தியில்” அந்த உருவகத்தைக் குறிப்பாய்ச் சொல்லவும்.
பாம்புகளைப் போல வினாவுள்ளவர்களையும் புறாக்களைப் போல கபடற்றவர்களாயும்
குறிப்பிடவில்லைஎன்றால் நலமாயிருக்கும் உருவகங்கள்: “கபடற்றவர்களாகவும்நேர்மையானவர்களாகவும் இருப்பது போல் விவேகத்தோடும் எச்சரிக்கையோடும் நடந்துகொள்ளுங்கள்.
உங்களை ஒப்புக்கொடுக்கும் மனிதர்களுக்கு எச்சரிக்கையாய் இருங்கள்
“ஜாக்கிரதையாய் இருங்கள், ஏனென்றால் மனுஷர் உங்களை ஒப்புக்கொடுப்பார்கள்.”
எச்சரிக்கையாய் இருங்கள்
“விழிப்பாயிரு” அல்லது “கவனமாயிரு” அல்லது “மிகவும் எச்சரிக்கையோடு”
உங்களை ஒப்புக்கொடுத்து
யூதாஸ் ஏசுவுக்கு செய்தததைக் குறிக்க இந்த வார்த்தையைத் தான் பயன்படுத்தினர் (UDB). மறு மொழிபெயர்ப்பு: “உங்களைக் காட்டிக்கொடுத்து”, அல்லது “உங்களை விட்டுக் கொடுத்து” அல்லது “உங்களைக் கைது செய்யப்படவும் தீர்ப்பு செய்யப்படவும் வைத்து.”
ஆலோசனைச் சங்கம்
அர்த்தம் என்னவென்றால், சமுதாயத்தில் அமைதியை காக்கும் அவ்விடத்தின் மதத் தலைவர்கள் அல்லது மூப்பர்கள். மறு மொழிபெயர்ப்பு: “நீதிமன்றங்கள்”
சாட்டையினால் உங்களை அடித்து
“சாட்டையினால் உங்களை அடித்து”
நீங்கள் கொண்டுவரப்படுவீர்கள்
“அவர்கள் உங்களைக் கொண்டுவருவார்கள்” அல்லது “உங்களை இழுத்துக் கொண்டு வருவார்கள்.”
என்னிமித்தம்
“நீங்கள் எனக்கு சொந்தமானபடியால்” (UDB) அல்லது “நீங்கள் என்னைப் பின்பற்றுவதால்”
அவர்களுக்கும் புறஜாதிகளுக்கும்
“அவர்களுக்கும்” என்ற பிரதிப் பெயர் “ஆளுநர்களை மற்றும் அரசர்களை அல்லது குற்றம் சாட்டும் யூதர்களைக்” குறிக்கிறது.
Matthew 10:19-20
இயேசு, தனக்காக வேலை செய்யும்போது தனது பன்னிரண்டு சீடர்கள் படப்போகும் பாடுகளைக் குறித்து அவர்களுக்கு தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். இது மத்தேயு 10:16 இல் துவங்குகிறது..
அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும் போது
“அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும் போது. இங்கு உள்ள “அவர்கள்” மத்தேயு 10:16, 17 இல் உள்ள அதே “மக்கள்” தான். ”
உங்களை ஒப்புக்கொடுத்து
மத்தேயு 10:16, 17 இல் மொழிபெயர்த்ததைப் போல செய்யவும்.
நீங்கள்
“நீங்கள்” மற்றும் “உங்களுடைய” என்னும் பிரதிப் பெயர்கள் இந்த பகுதி முழுவதிலும் பன்னிரண்டு அப்போஸ்தலர்களைத் தான் குறிக்கிறது.
சங்கடப்படாதிருங்கள்
“கவலைப்படாதிருங்கள்”
நீங்கள் என்ன அல்லது எப்படி பேசுவீகள் என்று
“எப்படி பேசுவீர்கள் அல்லது என்ன சொல்லப்போகிறீர்கள் என்று.” இந்த இரு கருத்தும் ஒன்றி “நீங்கள் சொல்லப்போவது” என்று சொல்லப்படலாம்.
அந்த மணிநேரத்தில்
“அந்த நேரத்தில்”
உங்கள் பிதாவின் ஆவியானவர்
வேண்டுமென்றால், “பரலோகத்திலிருக்கும் பிதாவின் ஆவியானவர்” என்று மொழிபெயர்க்கலாம் அல்லது அப்பக்கத்தின் கீழே இது பூமியின் தகப்பனுடைய ஆவியையல்ல இது தேவனுடைய ஆவியானவர் என்று ஒரு குறிப்பை எழுதவும் .
உங்களுக்குள்ளே
“உங்கள் மூலமாக”
Matthew 10:21-23
இயேசு, தனக்காக வேலை செய்யும்போது தனது பன்னிரண்டு சீடர்கள் படப்போகும் பாடுகளைக் குறித்து அவர்களுக்கு தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். இது மத்தேயு 10:16 இல் துவங்குகிறது.
சகோதரன் தன் சகோதரனையும் தகப்பன் தன் பிள்ளையையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்
மறு மொழிபெயர்ப்பு: “சகோதரர்கள் தங்கள் சகோதரரகளையும் தகப்பன்மார் தங்கள் பிள்ளைகயையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்.”
ஒப்புக்கொடுத்து
மத்தேயு 10:16, 17 இல் இவ்வார்த்தையை மொழிபெயர்த்ததைப் போலவே மொழிபெயர்க்கவும்.
எதிராக எழுந்து
“எதிராக கலகம்” (UDB) அல்லது “விரோதமாகத் திரும்பி”
அவர்களை மரணத்திற்கு ஏற்படுத்தி
“அவர்களைக் கொல்லுவதற்கு வைத்து” அல்லது “அதிகாரிகள் அவர்களைக் கொல்லுவதற்கு வைத்து”
நீங்கள் எல்லாராலும் வெறுக்கப்படுவீர்கள்
மறு மொழிபெயர்ப்பு: “எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்” அல்லது “அனைத்து மனுஷரும் உங்களை வெறுப்பார்கள்”
நீங்கள்...நீங்கள்...நீங்கள்...நீங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
என்னுடைய நாமத்தினிமித்தம்
“என்னிமித்தம்” அல்லது “நீங்கள் என்மீது நம்பிக்கை வைத்துள்ளதால்” (UDB)
நிலைத்திருக்கிற யாராயிருந்தாலும்
“விசவாசமாய் நிலைத்திருக்கும் யாராயினும்”
அந்த மனிதன் இரட்சிக்கப்படுவான்
மறு மொழிபெயர்ப்பு: “தேவன் அந்த மனிதனை விடுவிப்பார்”
அடுத்ததிற்கு விரைந்து சென்று
“அடுத்த பட்டணத்திற்கு விரைந்து செல்லவும்”
வந்துவிட்டார்
“வந்தடைந்தார்”
Matthew 10:24-25
இயேசு, தனக்காக வேலை செய்யும்போது தனது பன்னிரண்டு சீடர்கள் படப்போகும் பாடுகளைக் குறித்து அவர்களுக்கு தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். இது மத்தேயு 10:16 இல் துவங்குகிறது.
ஒரு சீடன் தன் குருவைவிட பெரியவனல்ல
இது ஒரு பொதுவான உண்மையாகும். இது ஒரு சீடனையோ குருவையோ குறித்ததல்ல. குருவைவிட ஒரு சீடன் “முக்கியமானவனல்ல,” இது ஒருவேளை அவனுக்கு குருவைவிட்ட “அதிகம் தெரியாமல் இருக்கலாம்” அல்லது “பெரியப் பதவி இல்லாமலிருக்கலாம்” அல்லது “சிறந்தவனாக இல்லாமலிருக்கலாம்.” மறு மொழிபெயர்ப்பு: “ஒரு சீடன் எப்பொழுதும் அவன் குருவைவிட முக்கியத்துவம் குறைந்தவன்” அல்லது “ஒரு குரு தன் சீடனைவிட முக்கியமானவர்.”
வேலைக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லை
“வேலைக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லை.” இது ஒரு பொதுவான் உண்மையாகும், எஜமானையோ அடிமையையோ குறிக்கும் சொற்றொடர் அல்ல. மறு மொழிபெயர்ப்பு: “ஒரு வேலைக்காரன் தன எஜமானைவிட ஒருபோதும் பெரியாவனல்ல” அல்லது “எஜமான் எப்பொழுதும் தன் வேலைக்காரனைவிட பெரியவன்.”
வேலைக்காரன்
“அடிமை”
எஜமான்
“உரிமையாளன்”
தன் குருவைப் போல் இருப்பதே ஒரு சீடனுக்கு போதுமானது
“தன் குருவைப் போல் இருப்பதை எண்ணி திருப்தியாய் இருக்க வேண்டும் .”
அவன் குருவைப் போல
“அவன் குரு அறிந்தவற்றை அறிந்து” அல்லது “அவன் குருவை போலவே இருந்து.”
வேலைக்காரன் தன எஜமானைப் போல
“வேலைக்காரன் தன எஜமானைப் போல முக்கியத்துவம் பெறுவதில் திருப்தி அடையவேண்டும்”
பெயல்செபூலின் வீட்டின் எஜமானை அவ்வாறு அழைத்தார்களானால், அவன் வீட்டாரை எவ்வளவு அதிகம்
இயேசு தரக்குரைவாய் நடத்தப்பட்டார், அதுபோல இயேசுவின் சீடர்களும் அவ்வாறே நடத்தப்படவும் அல்லது அதிலும் மோசமாக நடத்தப்பட்டவும் எதிர்ப்பார்க்க வேண்டும் (UDB).
அவர் அழைத்தார்களானால்
மறு மொழிபெயர்ப்பு: “மனுஷர் அவ்வாறு அழைத்ததினால்.”
வீட்டு எஜமான்
“வீட்டு எஜமான்” என்பதை இயேசு தனக்கான உருவகமாகப் பயன்படுத்துகிறார்.
பெயல்செபூல்
மூலபாஷையில் இந்த வார்த்தை 1. “பெயல்செபூல்” என்று அப்படியே மொழிபெயர்க்கலாம் அல்லது 2. சொல்லவருகின்ற அர்த்தமாகிய “சாத்தான்” என்று மொழிபெயர்க்கலாம்.
அவன் வீட்டாரை
“அவன் வீட்டாரை” என்ற உருவகத்தை தனது சீடர்களைக் குறிக்க இயேசு உபயோகப்படுத்துகிறார்.
Matthew 10:26-27
இயேசு, தனக்காக வேலை செய்யும்போது தனது பன்னிரண்டு சீடர்கள் படப்போகும் பாடுகளைக் குறித்து அவர்களுக்கு தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். இது மத்தேயு 10:16 இல் துவங்குகிறது.
அவர்களுக்கு பயப்படாதிருங்கள்
“அவர்களுக்கு” என்ற பிரதிப்பெயர் இயேசுவை பின்பற்றுகிறவர்களைத் தவறாக நடத்துபவர்களைக் குறிக்கிறது.
வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை, அறியக்கூடாத ரகசியம் இல்லை
இந்த இணைப்போக்கு “மனுஷர் மறைப்பதை தேவன் வெளிப்படுத்துவார்” என்று மொழிபெயர்க்கலாம்.
நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் பகல் வெளிச்சத்தில் சொல்லுங்கள், உங்கள் காதுகளில் மெதுவாக நீங்கள் கேட்கிறதை வீட்டுக் கூரையிலிருந்து பிரசித்தம் பண்ணுங்கள்.
இந்த இணைப்போக்கு “உங்களுக்கு நான் இருளில் சொல்வதை மனுஷருக்கு பகலில் சொல்லுங்கள், உங்கள் காதுகளில் மெதுவாக கேட்பதை வீட்டுக் கூரையிலிருந்து பிரசித்தம் பண்ணுங்கள்” என்று மொழிபெயர்க்கலாம்.
நான் உங்களுக்கு இருளில் சொல்வதை
“நான் உங்களுக்கு ரகசியமாய் சொல்வதை” (UDB) அல்லது “உங்களுக்கு நான் தனிமையில் சொல்வதை”
பகலில் சொல்லுங்கள்
“வெளிப்படையாக சொல்லுங்கள்” அல்லது “பொது இடத்தில் சொல்லுங்கள்” (UDB யைப் பார்க்கவும்)
உங்கள் காதுகளில் மெதுவாக கேட்பதை
“உங்களுக்கு நான் கிசுகிசுப்பதை”
வீட்டுக் கூரையிலிருந்து பிரசித்தம் பண்ணுங்கள்
“யாவரும் கேட்கும் வண்ணம் உரக்கச் சொல்லுங்கள்.” இயேசு வாழ்ந்த காலத்தில் வீட்டுக்கூரைகள் தட்டையாக் இருந்தது. எனவே தூரத்திலிருப்பவர்கள்கூட சத்தமாகப் பேசுபவரைக் கேட்க முடியும்.
Matthew 10:28-31
இயேசு, தனக்காக வேலை செய்யும்போது தனது பன்னிரண்டு சீடர்கள் படப்போகும் பாடுகளைக் குறித்து அவர்களுக்கு தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். இது மத்தேயு 10:16 இல் துவங்குகிறது.
ஆத்துமாவையல்லாமல் சரீரத்தை மாத்திரம் கொல்பவர்களுக்கு நீங்கள் பயப்படாமல் இருங்கள்
“மனுஷருக்கு பயப்படாதிருங்கள். அவர்கள் உங்கள் சரீரத்தை கொல்லலாம். ஆனால் அவர்கள் உங்கள் ஆத்துமாவைக் கொல்ல முடியாது.”
சரீரத்தைக் கொல்லுபவர்கள்
சரீர மரணத்தை ஏற்ப்படுத்துபவர்கள். இந்த வார்த்தைகள் ஒருமாதிரியாக இருந்தால், “உங்களைக் கொல்ல” அல்லது மற்றவர்களைக் கொல்ல” என்று மொழிபெயர்க்கலாம்.
சரீரம்
ஒருவனின் தொடக்கூடியப் பகுதி
ஆத்துமாவைக் கொல்ல
மரித்தப்பிறகு மனுஷரைத் துன்புறுத்துவது
ஆத்துமா
மனிதனின் தொடமுடியாதப் பகுதி. சரீரம் மரித்தாலும் வாழும் பகுதி
ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறது இல்லையா?
இந்த பதிலை எதிர்பார்க்காதக் கேள்வி “குருவிகளை நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஒரு சிறு காசுக்கு இரண்டு குருவிகள் வாங்கலாம். அவைகளுக்கு சிறிதளவே மதிப்புள்ளது.” (UDB)
குருவிகள்
இவைகள் சிறிய மற்றும், விதை தின்னும் பறவைகள். இதை மனிதர் முக்கியமானவைகள் என்று கருதாதக் காரியங்களுக்கு உருவகமாக இங்கு இருக்கிறது.
ஒரு சிறு காசு
இதை அநேகமாக சின்ன காசு என்று பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது ஒரு கூலியின் தினசரிக் கூலியில் பதினாறில் ஒரு பங்கே விலைபோகும் செம்புக் காசைக் குறிக்கிறது. “சிறிதளவுக் காசு” என்று மொழிபெயர்க்கப்படலாம்.
அவற்றில் ஒன்று கூட பிதா அறியாமல் தரையில் விழுவதில்லை
இந்த வெளிக்கூற்று “உங்கள் பிதா அறிந்தாலொழிய அவற்றில் ஒன்று கூடத் தரையில் விழாது” அல்லது “உங்கள் பிதா அறிந்திருந்தால் மட்டுமே அவற்றுள் ஒன்று கூட தரையிலே விழும்”
அவற்றுள் ஒன்றுக் கூட
“ஒரு குருவிக்கூட”
தரையில் விழுகிறது
“சாகிறது”
உங்கள் தலையிலுள்ள முடிகளெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது
“உங்கள் தலையில் எத்தனை முடிகள் உள்ளது என்று தேவன் அறிவார்”
எண்ணப்பட்டிருக்கிறது
“கூட்டப்பட்டிருக்கிறது”
குருவிகளைக்காட்டிலும் நீங்கள் விசேஷித்தவர்கள்
“குருவிகளைக்காட்டிலும் தேவன் உங்களை மேன்மையாக கருதுகிறார்”
Matthew 10:32-33
இயேசு, தனக்காக வேலை செய்யும்போது தனது பன்னிரண்டு சீடர்கள் படப்போகும் பாடுகளைக் குறித்து அவர்களுக்கு தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். இது மத்தேயு 10:16 இல் துவங்குகிறது.
மனுஷர் முன் என்னை அறிக்கைச் செயகிற யாரும்
என்னுடைய சீடன் என்று சொல்லும் யாராயினும்” அல்லது “மற்றவர்கள் முன்பு என்னை கருதுகிறவன் எனக்கு நேர்மையாய் இருக்கிறான்”
அறிக்கை
“கருதுதல்”
மனுஷர்முன்
“மக்கள் முன்” அல்லது “மற்ற மக்கள் முன்”
பரலோகத்தில் இருக்கும் பிதா
இயேசு பிதாவாகிய தேவனைக் குறித்து பேசுகிறார்.
என்னை மனிதர் முன் மறுதலிக்கிறவன்
என்னை மனிதர் முன் மறுதலிக்கிறவன்
“என்னை மனிதர் முன் விட்டுவிடுகிறவன்” அல்லது “மனிதர் முன் என்னை தள்ளிவிடுகிறவன்” அல்லது “என்னுடைய சீடன் என்று மற்ற மனிதர்முன் அறிக்கை செய்யாதவன்” அல்லது “எனக்கு நேர்மையாய் இருக்கிறேன் என்பதை மறுக்கிறவன்.”
Matthew 10:34-36
இயேசு, தனக்காக வேலை செய்யும்போது தனது பன்னிரண்டு சீடர்கள் படப்போகும் பாடுகளைக் குறித்து அவர்களுக்கு தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். இது மத்தேயு 10:16 இல் துவங்குகிறது.
நினையாதிருங்கள்
“யூகிக்காதிருங்கள்” அல்லது “நீங்கள் நினைக்கக் கூடாது”
பட்டயம்
இந்த உருவகம் 1. கோரச் சாவு (மத்தேயு 10:37, 10:38 இல் உள்ள “சிலுவை” பார்க்கவும்) அல்லது 2. பிரிவை உண்டாக்கும் சண்டை
ஏற்படுத்து
“திருப்புதல்” அல்லது “பிரித்தல்” அல்லது “தனிமைப்படுத்தல்”
தகப்பனுக்கு எதிராக ஒருவன்
“தகப்பனுக்கு எதிராக மகன்”
ஒருவனின் எதிரிகள்
“ஒரு மனுஷனின் எதிரிகள்” அல்லது “ஒரு மனிதனின் மோசமான எதிரிகள்”
அவன் வீட்டாரே
“தன் சொந்த குடும்ப உறுப்பினர்கள்”
Matthew 10:37-39
இயேசு, தனக்காக வேலை செய்யும்போது தனது பன்னிரண்டு சீடர்கள் படப்போகும் பாடுகளைக் குறித்து அவர்களுக்கு தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். இது மத்தேயு 10:16 இல் துவங்குகிறது.
நேசிக்கிறவன்...பாத்திரனல்ல
மறு மொழிபெயர்ப்பு: “நேசிக்கிறவர்கள்...பாத்திரர்கள் அல்ல” அல்லது “நீங்கள் நேசித்தால்...நீங்கள் பாத்திரர்கள் அல்ல.”
எவன்
“யாராயினும்” அல்லது “யார் ஒருவன்” அல்லது “இவனாயினும்” அல்லது “மனுஷர் யார்”
நேசிக்கிற
“நேசம்” என்கிற வார்த்தை “சகோதர சிநேகத்தைக்” குறிக்கிறது அல்லது “ஒரு நண்பனின்” சிநேகத்தைக் குறிக்கிறது. “அக்கறை கொண்டு” அல்லது “அர்ப்பணிப்போடு” அல்லது “பிரியத்தோடு” என்றும் மொழிபெயர்க்கலாம்.
எனக்கு பாத்திரம் அல்ல
“என்னுடயவனாய் இருக்க தகுதியில்லை” அல்லது “என்னுடைய சீடனாய் இருக்கத் தகுதி இல்லை” அல்லது “எனக்கு சொந்தமாய் இருக்க தகுதி இல்லை.” (UDB)
எடுத்துக்கொள்ளாதவன்...இல்லை
மறு மொழிபெயர்ப்புகள்: “எடுத்துக்கொள்ளாதவர்கள்...இல்லை” அல்லது “நீங்கள் எடுத்துக்கொள்ளவில்லை என்றால்...நீங்கள் இல்லை” அல்லது “நீங்கள் எடுத்துக் கொள்ளாதவரையில்.”
எடுத்துக்கொண்டு...சிலுவை மற்றும் பின்தொடர்ந்து
சாகவும் ஆயத்தமாக இருப்பதற்கான உருவகம் இது. ஒரு பொருளை எடுத்துக் கொண்டு மற்றவர் பின்னே நடந்து சொல்வதைக் குறிக்கும் பொதுவான வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்.
எடுத்துக்கொண்டு
“தூக்கு” அல்லது “எடுத்துக் கொண்டு” மற்றும் சுமந்து”
கண்டடைகிறவன்...இழந்துவிடுவான்...இழக்கிறவன்....கண்டடைவான்
எவ்வளவு குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தவும். மறு மொழிபெயர்ப்பு:“கண்டடைகிறவர்கள்...இழந்துபோவார்கள்...இழந்துபோகிறவர்கள்...கண்டடைவார்கள்” அல்லது “நீங்கள் கண்டடைந்தால்...இழந்துபோவீர்கள்...இழந்துபோகிறவர்கள்...கண்டடைவார்கள்.”
கண்டடைகிறது
“வைத்திருக்கிறது” அல்லது “பாதுகாக்கிறது” என்பதற்கான ஆகுபெயர் ஆகும். மறு மொழிபெயர்ப்பு: “வைத்துக்கொள்ள முயற்சிக்கிறது” அல்லது “பாதுகாக்க முயற்சிக்கிறது.”
இழந்து போவார்கள்
அம்மனிதன் மரித்துப்போவான் என்பது இதன் அர்த்தமல்ல. “சத்திய வாழ்வு கிடைக்காது” என்பதற்கான உருவகமாகும்.
இழக்கிறது
மறு மொழிபெயர்ப்பு: “விட்டுவிடுகிறது” அல்லது “விட்டுவிட ஆயத்தமாயிருக்கிறது.”
என்னிமித்தம்
“என்னை நம்புகிறதினால்” (UDB) “என்னால்” அல்லது “என்னிமித்தம்.” மத்தேயு 10:16, 18 இல் உள்ள “என்னிமித்தமாக” என்பதன் அதே கருத்து இதுவாகும்.
கண்டடைவார்கள்
இந்த உருவகம் “சத்திய வாழ்வைக் கண்டடைவார்கள்” என்று பொருள்படும்.
Matthew 10:40-41
இயேசு தன்னுடைய சீடர்கள் போகும் போது உதவி செய்பவர்களுக்கு அவர் பதில் செய்வார் என்பதை விவரிக்கத் துவங்குகிறார்.
எவன் ஒருவன்
“யாராயினும்” அல்லது “எவனாயினும்” அல்லது “எவனொருவன்” (UDB) என்று மொழிபெயர்க்கப்படலாம்.
வரவேற்கிறது
மத்தேயு 10:14 இல் உள்ள “ஏற்றுக்கொள்கிறது” என்ற வார்த்தையே தான் இதும். “விருந்தாளி போல ஏற்றுக்கொள்ளுதல்”
நீங்கள்
“நீங்கள்” என்றப் பிரதிப் பெயர் இயேசு பேசிக்கொண்டிருக்கும் பன்னிரண்டு சீடர்களைக் குறிக்கும்
என்னை அனுப்பினவரை வரவேற்கிறான்
“என்னை அனுப்பின பிதாவாகிய தேவனை வரவேற்கிறான்”
Matthew 10:42
இயேசு தன்னுடைய சீடர்கள் போகும் பொது உதவி செய்பவர்களுக்கு அவர் பதில் செய்வார் என்பதை விவரிப்பதை முடித்தார்.
கொடுக்கிற யாராயினும்
“கொடுக்கிற எவனாயினும்.”
இந்த முக்கியத்துவமில்லாதவர்களுள் ஒருவனுக்கு, என்னுடைய சீடனாயிருப்பதினால் ஒரு கலசம் தண்ணீர் குடிப்பதற்குக் கொடுத்தால்.
இந்த முக்கியத்துவமில்லாதவர்களுள் ஒருவனுக்கு, என்னுடைய சீடன் என்பதால் ஒரு கலசம் தண்ணீர் குடிப்பதற்குக் கொடுத்தால்
“இந்த சிறியவருள் ஒருவனுக்கு என்னுடைய சீடனாயிருப்பதினால் குடிக்க ஒரு கலசம் குளிர்ந்த நீர் கொடுத்தால்” அல்லது “என்னுடைய சீடர்களுள் மிகச் சிறியவனுக்கு குடிக்க குளிர்ந்த நீர்” என்று மொழிபெயர்க்கப்படலாம்.
அவனுடைய பலனை இழந்துபோவதில்லை
“அவனுடைய வெகுமதியைக் கண்டிப்பாகப் பெறுவான்”
இழந்து
“மறுக்கப்பட்டு.” தங்களுடையது எடுத்துக்கொள்ளப்படுவதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
Matthew 11
Matthew 11:1-3
இந்தப் பகுதி எவ்வாறு இயேசு யோவானின் சீடர்களுக்கு பிரதியுத்திரம் சொன்னார் என்பதைச் சொல்லத் துவங்குகிறது.
இப்படி ஆயிற்று
இந்தப் பதம் ஒருப் பகுதியின் துவக்கத்தைக் குறிக்கிறது. ஒரு பகுதியின் துவக்கத்தைக் குறிக்க உங்க மொழியில் ஒரு வழி இருக்குமானால், நீங்கள் அதைப் பயன்படுத்தலாம். “பின்பு” அல்லது “அதற்குப் பின்பு” என்று மொழிபெயர்க்கப்படலாம்.
உபதேசித்தல்
“போதித்தல்” அல்லது “கட்டளைக்கொடுத்தல்” என்று இவ்வார்த்தையை மொழிபெயர்க்கலாம்.
அவருடையப் பன்னிரண்டு சீடர்கள்
இது இயேசுவின் தெரிந்துகொள்ளப்பட்ட பன்னிரண்டு சீடர்களைக் குறிக்கிறது.
இப்பொழுது
“அந்த நேரத்தில்.” இதை கழித்துவிடலாம். (UDB)
யோவான் சிறைச்சாலையிலிருந்து கேள்விப்பட்டபோது
மறு மொழிபெயர்ப்பு: “சிறைச்சாலையிலிருக்கும் யோவான், கேள்விப்பட்டபோது” அல்லது “சிறைச்சாலையிலிருக்கும் யோவானுக்கு ஒருவன் சொன்னபோது”
தன்னுடைய சீடர்கள் மூலம் ஒரு செய்தியை அனுப்பினான்
யோவான் ஸ்நானகன் தன்னுடைய சொந்த சீடர்களை இயேசுவுக்கான செய்தியோடு அனுப்பினான்.
அவருக்குச் சொன்னது
“அவர்” என்ற பிரதிப்பெயர் ஏசுவைக் குறிக்கிறது.
நீர்தான் வரப்போகிறவரா
“வரப்போகிறவர்” அல்லது “நாங்கள் வருவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்” என்று மொழிபெயர்க்கலாம். இது மேசியா என்பதற்கு மறைமுகமாகச் சொல்லும் சொல் ஆகும். (“கிறிஸ்து,” UDB)
நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும்
“நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்.” “நாங்கள்” என்ற பிரதிப்பெயர் யோவானின் சீடர்களை மாத்திரமல்ல எல்லா யூதர்களையும் குறிக்கும்.
Matthew 11:4-6
யோவான் ஸ்நானகனின் சீடர்களுக்கு இயேசுவின் பதிலை இது நிறைவு செய்கிறது.
யோவானுக்கு அறிக்கை
“யோவானிடம் சொல்லுங்கள்”
Matthew 11:7-8
யோவான் ஸ்நானகனைப் பற்றி மக்கள் கூட்டத்திடம் இயேசு பேசத்துவங்குகிறார்.
எதைப் பார்க்க வெளிய போனீர்கள்
இயேசு, யோவான் எப்படிப்பட்டவன் என்று மனுஷர் நினைக்கும்படி செய்ய, இந்த பதத்தை மூன்று பதில் எதிர்பாரா கேள்விகளில் பயன்படுத்தினார். “நீங்கள் பார்க்கவா போனீர்கள்...?நிச்சயம் இல்லை!” அல்லது “நிச்சயம் நீங்கள் பார்ப்பதற்காக வெளியே செல்லவில்லை...!” என்று மொழிபெயர்க்கப்படலாம்.
காற்றினால் அசைக்கப்பட்ட நாணல்
- யோர்தான் நதி ஓரம் உள்ளச் செடிகளைக் குறிக்கலாம் (UDB) அல்லது 2. ஒரு மனிதனுக்கு உருவகமாகச் சொல்லப்பட்டிருக்கலாம்: “காற்றினால் அசைக்கப்பட்ட நாணல் போன்றவன்.” என்று அர்த்தப்படலாம். இந்த உருவகத்திற்கு இரண்டு சாத்தியமான விளக்கங்கள் உண்டு: 1. அந்தமாதிரியான மனிதன் காற்றினால் சுலபமாக அசைக்கப்படலாம்; அடிக்கடி தன் மனதை மாற்றும் மனிதனுக்கு உருவகம், 2. காற்று வீசும்போது அதிக சத்தம் எழுப்பும்; முக்கியமாக எதையும் சொல்லாமல் வெறுமனே பேசுவதற்க்கான உருவகம்.
நாணல்
“நீளமான, புல் வகைச் செடி”
மெல்லிய வஸ்திரத்தினால் உடுத்தப்பட்டு
“விலைஉயர்ந்த ஆடைகளை உடுத்துகிறது.” செல்வந்தர்கள் இது போல உடுத்துவார்கள்.
உண்மையாக
இந்த வார்த்தை “இதோ” என்று அடிக்கடி மொழிபெயர்க்கப்படும். பின்வருபவற்றிற்க்கு அதிக அழுத்தம் தருகிறது. மறு மொழிபெயர்ப்பு: “உண்மையில்”
Matthew 11:9-10
யோவான் ஸ்நானகனைப் பற்றி மக்கள் கூட்டத்திடம் இயேசு பேசுகிறதை தொடர்கிறார்.
ஆனால் நீங்கள் வெளியே சென்று பார்த்தது என்ன
யோவான் ஸ்நானகனைக் குறித்த பதில் எதிர்பாராக் கேள்விகளின் தொகுப்பை இது தொடர்கிறது.
ஒரு தீர்க்கதரிசியைப் பார்க்கவா வெளியே சென்றீர்கள்?
இந்த பன்மை பிரதிப்பெயர் “நீங்கள்” இரண்டு தடவையுமே மக்கள் கூட்டத்தைத்தான் குறிக்கிறது.
தீர்க்கதரிசியிலும் மேலான
“ஒரு சாதாரண தீர்க்கதரிசி அல்ல” அல்லது :ஒரு சாதாரண தீர்க்கதரிசியைக் காட்டிலும் முக்கியமான”
இதுவே அவன்
“இது” என்பது யோவான் ஸ்நானகனைக் குறிக்கிறது.
இவனைப் பற்றியே எழுதப்பட்டிருக்கிறது
“இவன்” என்ற பிரதிப்பெயர் அடுத்த சொற்றொடரில் உள்ள “என்னுடைய தூதுவன்” என்பதைக் குறிக்கிறது.
பார், உன் முகத்திற்கு முன்பாக உன் வழியை ஆயத்தம் பண்ணும் என்னுடைய தூதுவனை நான் அனுப்புகிறேன்.
மல்கியா தீர்க்கதரிசியிடமிருந்து இயேசு மேற்கோள் காட்டுகிறார். என்னவென்றால் மல்கியாவிலுள்ள (3:1)அந்த தூதுவன் யோவானே என்று.
நான் என் தூதுவனை அனுப்புகிறேன்
பிரதிப் பெயர்கள் “நான்” மற்றும் “என்னுடைய” தேவனைக் குறிக்கிறது. இந்த பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனத்தை எழுதியவர் தேவனை மேற்கோள் காட்டுகிறார்.
உன் முகத்திற்கு முன்பாக
“உனக்கு முன்பாக” அல்லது “உனக்கு முன்பாகப் போவதற்கு.” “உனக்கு” என்ற பிரதிப்பெயர் ஒருமையில் உள்ளது, ஏனென்றால் தேவன் மேசியாவிடம் நேர்முகமாகப் பேசுகிறார்.
Matthew 11:11-12
யோவான் ஸ்நானகனைப் பற்றி மக்கள் கூட்டத்திடம் இயேசு பேசுகிறதைத் தொடர்கிறார்.
பிறந்த பெண்களிடத்தில்
“பெண்கள் பெற்று எடுத்தவர்களுள்” அல்லது “இதுவரை வாழ்ந்த எல்லா மனிதரும்” (UDB)
யோவான் ஸ்நானகனைக் காட்டிலும் பெரியவன் ஒருவனுமில்லை
மறு மொழிபெயர்ப்பு: “யோவான் ஸ்நானகன் பெரியவன்”
பரலோக ராஜ்யத்தில்
தேவன் ஸ்தாபிக்கும் ராஜ்ஜியத்தின் பகுதி. மறு மொழிபெயர்ப்பு: “பரலோக ராஜ்ஜியதினுள் பிரவேசித்தவர்கள்”
அவனிலும் பெரிய
“யோவானிலும் அதிக முக்கியத்துவம் உள்ள”
யோவான் ஸ்நானகனின் நாட்களிலிருந்து இப்பொழுது வரை
“யோவான் பிரசங்கம் பண்ணத்துவங்கின நேரம் துவங்கி”
பரலோக ராஜ்ஜியம் வன்முறையை அனுபவித்திருக்கிறது; வன்முறையாளர்கள் அதை பலவந்தமாய் கைப்பற்றுகிறார்கள்.
சாத்தியமான அர்த்தங்கள் 1. வன்முறையாளர்கள் வன்முறையாக அதை கையாளுகிறார்கள் (UDB) அல்லது 2. “பரலோக ராஜ்யத்தின் கீழ் உள்ளவர்களை துன்பப்படுத்துகிறவர்களும், வன்முறையாளர்களும் பலவந்தம்பண்ணி அதைப் பிடிக்கப்பார்க்கிறார்கள்” அல்லது 3. “பரலோக ராஜ்ஜியம் முன்னேறி வல்லமையாய் சென்று கொண்டிருக்கிறது; அதனால் வல்லவர்கள் அதில் பங்காளர்களாக விரும்புகிறார்கள்.”
Matthew 11:13-15
யோவான் ஸ்நானகனைப் பற்றி மக்கள் கூட்டத்திடம் இயேசு பேசுகிறதைத் தொடர்கிறார்.
நியாயப்பிரமாணம்
மோசேயின் நியாயப்பிரமாணம்
யோவான்
“யோவான் ஸ்நானகன்”
ஒருவேளை நீங்கள்
“நீங்கள்” என்ற பிரதிப்பெயர் கூட்டத்தில் உள்ள மக்களைக் குறிக்கிறது.
இது எலியா
“இது” யோவான் ஸ்நானகனைக் குறிக்கிறது. இந்த சொற்றொடர் ஆகுபெயராகும். இந்த ஆகுபெயர் யோவான் ஸ்நானகன் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசி எலியாவுக்கு ஒத்திருக்கிறார் என்கிறது.
கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்.
சில மொழிகளில் இரண்டாம் நபர் இலக்கணத்தை உபயோகிப்பது எளிமையாக இருக்கலாம்: “கேட்கிறதற்கு காதுள்ளவர்கள் கேட்கக்கடவர்கள்.”
கேட்கிறதற்கு காதுள்ளவன்
“கேட்கிற யாராயினும்”, அல்லது “என்னை கேட்கிற யாராயினும்”
அவன் கேட்கட்டும்
“அவன் நன்றாகக் கேட்கட்டும்” அல்லது “நான் சொல்வதற்கு அவன் கவனம் செலுத்தட்டும்”
Matthew 11:16-17
யோவான் ஸ்நானகனைப் பற்றி மக்கள் கூட்டத்திடம் இயேசு பேசுகிறதைத் தொடர்கிறார்.
நான் என்னத்திற்கு ஒப்பிடுவது
இது பதில் எதிர்பாராக் கேள்வியின் துவக்கம். இயேசு, அக்கால மனிதரையும் சந்ததியில் பிள்ளைகள் என்ன சொல்லுவார்கள் என்பதையும் ஒப்புமையை அறிமுகப்படுத்த இதை பயன்படுத்தினார். ஒரு பதில் எதிர்பாரா கேள்வியைக் கொண்டு துவங்குகிறார்.
சந்தையில் உட்கார்ந்து ஒருவரை ஒருவர் அழைத்து விளையாடும் பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது.
இந்த உருவகம் 1. இயேசு “புல்லாங்குழல் ஊதினார்,” யோவான் “துக்கித்தான்,” ஆனால் “இன்றைய சந்ததி” நடனமாடவும் அழவும் மறுக்கிறது. கீழ்ப்படிதலுக்கான உருவகங்கள், அல்லது 2. “மோசேயின் நியாயப்பிரமாணத்தில் தாங்கள் கூட்டின சட்டங்களுக்கு கீழ்ப்படியாத மக்களை பரிசேயர்களும் மதத் தலைவர்களும் விமர்சித்தார்கள்” என்று அர்த்தப்படலாம்.
இந்த சந்ததி
“இப்பொழுது வாழும் மக்கள்” அல்லது “இந்த மக்கள்” அல்லது “இந்த சந்ததியின் மக்களே” (UDB)
சந்தை
இது மக்கள் தங்கள் பொருட்களை விற்க வரும் ஒரு பெரிய திறந்த வெளி மைதானம்.
உங்களுக்கு நாங்கள் புல்லாங்குழல் ஊதினோம்
“நாங்கள்” சந்தையில் உட்கார்ந்துள்ள பிள்ளைகளைக் குறிக்கிறது. “நீங்கள்” என்பது “இந்த சந்ததியைக்” குறிக்கிறது அல்லது இசையைக் கேட்டும் பதிலளிக்காதவர்களைக் குறிக்கலாம்.
புல்லாங்குழல்
இது ஒரு முனையில் காற்றை ஊதி இசைக்கப்படும் ஒரு நீளமான, மத்தியில் காலியான இசைக் கருவி.
நீங்கள் நடனம்பண்ணவில்லை
“நீங்கள் இசைக்கு நடனம்பண்ணவில்லை”
நீங்கள் அழவில்லை
“நீங்கள் எங்களோடு அழவில்லை”
Matthew 11:18-19
யோவான் ஸ்நானகனைப் பற்றி மக்கள் கூட்டத்திடம் இயேசு பேசுகிறதைத் தொடர்கிறார்.
ரொட்டி உண்ணாமல்
“உணவு உண்ணாமல்.” இதை “அடிக்கடி உபவாசித்து” அல்லது “நல்ல உணவு உண்ணாமல்” என்று மொழிபெயர்க்கலாம் (UDB). யோவான் உணவே உண்டதில்லை என்று அர்த்தமில்லை.
அவர்கள் சொல்லுகிறார்கள், ‘அவனுக்கு பிசாசு இருக்கிறது’
யோவானைக் குறித்து மக்கள் சொன்னதை இயேசு சொல்லுகிறார். இதை எதிர்மறையாக “அவனுக்கு பிசாசு இருக்கிறது என்று அவர்கள் சொல்லுகிறார்கள்” அல்லது “அவனுக்கு பிசாசு இருப்பதால் அவனைக் குற்றப்படுத்துகிறார்கள்.” என்று சொல்லலாம்.
அவர்கள்
“அவர்கள்” என்ற பிரதிப்பெயர் இக்கால சந்ததியைக் குறிக்கிறது (வசனம் 16)
மனுஷக்குமாரன்
இயேசு தான் மனுஷக்குமாரன் என்று அங்கிருந்தவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்த்தார். “நான், மனுஷக்குமாரன்” என்று மொழிபெயர்க்கப்படலாம்.
அவர்கள் சொன்னார்கள், ‘பார், அவன் பெருந்தீனிக்காரன்’
அவர் மனுஷக்குமாரன் என்பதற்கு மக்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதை இயேசு மேற்கோள் காட்டுகிறார். இதை எதிர்மறையாக, “அவர் பெருந்தீனிக்காரன் என்று அவர்கள் சொல்லுகிறார்கள்” அல்லது “நிறைய சாப்பிடுவதால் அவரைக் குற்றப்படுத்தினார்கள்.”
அவர் பெருந்தீனிக்காரன்
“அவர் பேராசை தீனிக்காரன்” அல்லது “அவர் வழக்கமாக நிறைய சாப்பிடுபவர்”
குடிகாரன்
“குடிப்பவன்” அல்லது “வழக்கமாகக் குடிப்பவன்”
ஆனால் ஞானம் தன் செயல்களால் நீதியுள்ளதாக்கப்படுகிறது
இயேசு இந்த சூழ்நிலைக்கு ஒரு பழமொழியை இடுகிறார். ஏனென்றால், அவரையும் யோவானையும் மறுத்தவர்கள் ஞானமாக செயல்படவில்லை. இது செய்வினை வாக்கியமாக மொழிபெயர்க்கப்படலாம்.
ஞானம் நீதியாக்கப்பட்டது
இந்த வெளிக்கூற்றில் ஞானம் ஆள்தத்துவம் உடையதாய்க் காட்டப்படுகிறது. ஞானம் தேவனுக்கு முன்பாக வைக்கப்பட்டதைப் போல் அல்ல ஆனால் நீதியாக்கப்பட்டது போல இங்கு உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது.
அவளின் செயல்கள்
“அவள்” என்ற பிரதிப்பெயர் ஆள்தத்துவம் உடைய ஞானத்தைக் குறிக்கிறது.
Matthew 11:20-22
இயேசு தான் முன்பு அற்புதங்களைச் செய்த பட்டணத்து மக்களுக்கு எதிராகப் பேசத் துவங்கினார்.
பட்டணங்களைக் கடிந்துகொண்டு
இயேசு இங்கு ஆகு பெயரைப் பயன்படுத்தி தவறு செய்யும் அப்பட்டணத்து மக்களைக் கடிந்துகொள்கிறார்..
பட்டணங்கள்
“சிறிய பட்டணங்கள்”
அவருடைய பெரும்பாலான மகத்துவமானக் கிரியைகள் நடப்பிக்கப்பட்ட இடங்கள்
இது செய்வினைச் சொல்லோடு “தமது பெரும்பாலான மகத்துவமானக் கிரியைகளை செய்த இடங்கள்” என்று மொழிபெயர்க்கலாம்.
மகத்துவமான கிரியைகள்
“மகத்துவ வேலைகள்” அல்லது “வல்லமையின் வேலைகள்” அல்லது “அற்புதங்கள்” (UDB) என்று மொழிபெயர்க்கலாம்.
அவர்கள் மனந்திரும்பாததினால்
“அவர்கள்” என்ற பிரதிப்பெயர் அந்தப் பட்டணங்களில் மனந்திரும்பாத மக்களைக் குறிக்கிறது.
உனக்கு ஐயோ, கோராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே!
கோராசின் மற்றும் பெத்சாயிதா பட்டணத்தார்கள் தன்னை அங்குக் கேட்டுக்கொண்டிருப்பது போல இயேசு பேசினாலும் அவர்கள் அங்கு இல்லை.
கோராசின்...பெத்சாயிதா...தீரு...சீதோன்
இந்தப் பட்டணங்களின் பெயர்கள் அங்கு வாழ்கிறவர்களுக்கு ஆகுபெயராக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
தீருவிலும் சீதோனிலும் உங்களுக்குள் நடந்த மகத்துவமானக் கிரியைகள் நடப்பிக்கப்பட்டிருக்குமானால்
செய்வினை வடிவில், “தீருவிலும் சீதோனிலும் உங்களுக்குள் நான் செய்த மகத்துவமானக் கிரியைகள் நான் நடப்பித்திருந்தேனானால்” என்று மொழிபெயர்க்கலாம்.
உனக்கு ஐயோ
“நீ” என்ற பிரதிப்பெயர் இங்கு ஒருமையில் உள்ளது.
அவர்கள் முன்னமே மனந்திரும்பியிருப்பார்கள்
“அவர்கள்” என்ற பிரதிபெயர் தீரு மற்றும் சீதோன் பட்டணத்தாரைக் குறிக்கிறது.
மனந்திரும்பி
“அவர்கள் தங்கள் பாவங்களுக்காக வருந்தியது போலக் காட்டப்பட்டு”
நியாயத்தீர்ப்பின் நாளிலே தீருவுக்கும் சீதோனுக்கும் தாங்கக்கூடியதாய் இருக்கும்
“தீருவுக்கும் சீதோனுக்கும் உங்களுக்கு செய்வதைப் பார்க்கிலும் தேவன் நியாயத்தீர்ப்பின் நாளிலே கிருபை செய்வார்” அல்லது “தேவன் உங்களை தீருவையும் சீதொனையும் தண்டிப்பதைப் பார்க்கிலும் உங்களை அதிகமாய் தண்டிப்பார்” (UDB பார்). மறைத்துக் கூறப்பட்டுள்ள தகவல் என்னவென்றால் “நான் அற்புதங்களைச் செய்வதை நீங்கள் கண்டும் என்னை விசுவாசித்து மனந்திரும்பாததினால்.”
உன்னைக் காட்டிலும்
“நீ” என்ற பிரதிப்பெயர் ஒருமையில் உள்ளது. அது கோராசினையும் பெத்சாயிதாவையும் குறிக்கிறது.
Matthew 11:23-24
இயேசு தான் முன்னமே அற்புதங்களைச் செய்த பட்டணத்தாருக்கு எதிராக தொடர்ந்து பேசுகிறார்.
நீ, கப்பர்நகூமே
கப்பர்நகூம் பட்டணத்தார் தன்னைக் கவனிப்பது போல இயேசு பேசிக்கொண்டிருக்கிறார்; ஆனால் அவர்கள் அங்கு இல்லை. “நீ” என்ற பிரதிபெயர் இந்த இரண்டு வசனங்களிலும் ஒருமையில் வந்து கப்பர்நகூம் பட்டணத்தாரைக் குறிக்கிறது.
கப்பர்நகூம்...சோதோம்
இந்தப் பட்டணங்களின் பெயர்கள் அங்கு வாழ்கிறவர்களுக்கு ஆகுபெயராக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
வான பரியந்தம் நீ உயர்த்தப்படுவாய் என்று எண்ணுகிறாயா?
இயேசு கப்பர்நகூமின் பட்டணத்தாருடைய ஆணவத்தை பதில் தேவையில்லாக் கேள்வியின் மூலம் கடிந்து கொள்கிறார். செய்வினை வடிவில், “பரலோகம் வரை செல்வீர்களா? அல்லது “தேவன் உங்களை கனப்படுத்துவார் என்று எண்ணுகிறீர்களோ?, என்று மொழிபெயர்க்கப்படலாம்
உயர்த்தப்படுவீர்
“கனப்படுத்தப்படுவீர்”
பாதாளத்திற்கு கொண்டுவரப்படுவீர்
செய்வினை வடிவில், “தேவன் உங்களை பாதாளத்திற்குக் கொண்டுவருவார்.” மொழிபெயர்க்கலாம்.
சோதோமில் செய்த மகத்துவக் கிரியைகள் உங்களிடத்தில் செய்யப்பட்டிருந்தால்
செய்வினை வடிவில், “நான் சோதோமில் செய்த மகத்துவக் கிரியைகளை உங்களிடத்தில் செய்திருந்தால்” என்று மொழிபெயர்க்கலாம்.
மகத்துவக் கிரியைகள்
“வல்லமையானக் கிரியைகள்” அல்லது “வல்லமையின் கிரியைகள்”அல்லது “அற்புதங்கள்” (UDB)
இது நிலைத்திருந்திருக்கும்
“இது” என்றப் பிரதிப்பெயர் சோதோம் பட்டணத்தைக் குறிக்கிறது.
நியாயத்தீர்ப்பின் நாளிலே சோதோம் தேசத்திற்கு இலகுவாய் இருக்கும்
“உங்களுக்கு செய்வதைப் பார்க்கிலும் தேவன் நியாயத்தீர்ப்பின் நாளிலே சோதோமுக்கு கிருபை செய்வார்” அல்லது “தேவன் உங்களை நியாயத்தீர்ப்பின் நாளிலே சோதோமை தண்டிப்பதைப் பார்க்கிலும் உங்களை அதிகமாய் தண்டிப்பார்” (UDB பார்). மறைத்துக் கூறப்பட்டுள்ள தகவல் என்னவென்றால் “நான் அற்புதங்களைச் செய்வதை நீங்கள் கண்டும் என்னை விசுவாசித்து மனந்திரும்பாததினால்.”
Matthew 11:25-27
இயேசு மக்கள் மத்தியிலிருந்து கொண்டே தனது பரலோக தேவனை நோக்கி ஜெபிக்கிறார்.
இயேசு பதிலளித்து சொன்னது
இது 1. இயேசு அனுப்பிய சீடர்கள் (மத்தேயு 10:5), திரும்பி வந்தார்கள் (மத்தேயு 12:1); அவர்களில் ஒருவன் கேட்டதற்கு அவர் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். 2. மனந்திரும்பாத பட்டணங்களுக்கு தான் கூறின நியாயத்தீர்ப்பை முடித்துக்கொண்டிருந்தார்: “இன்னும், இயேசு சொன்னார்.” என்று அர்த்தப்படலாம்.
ஓ தகப்பனே
பிதாவாகிய தேவனைக் குறிக்கிறது, உலகத் தகப்பனை அல்ல
பரலோகத்திற்க்கும் பூலோகத்திற்கும் கர்த்தர்
இது ஆகுபெயராக மொழிபெயர்க்கப்படலாம். “பரலோகத்திலேயும் பூலோகத்திலேயும் இருக்கும் எல்லாருக்கும் எல்லாவற்றிற்கும் அவர் எஜமானாய்,” அல்லது ஒரேக் கூற்றாக, “பிரபஞ்சத்தின் எஜமான்.”
இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, சிறுக் குழந்தைகளைப் போல கல்லாதவர்களுக்கு வெளிப்படுத்தினீர்.
“இவைகள்” என்பதன் பொருள் விளங்கவில்லை. உங்கள் மொழியில் இவைகள் எவைகள் என்று தெளிவு படுத்துவது அவசியமானால் மாற்று மொழிபெயர்ப்பு சிறந்தது: “ஞானிகளும் கல்விகற்றவர்களும் சத்தியங்களைக் கற்கவிடாமல் அதைப் பேதைகளுக்கு வெளிப்படுத்தினீர்.”
மறைக்கப்பட்டு
“வெளிப்படுத்தப்பட்டு” என்பதன் எதிர் வினைச்சொல் ஆகும்.
ஞானிகளும் கல்விமான்களும்
“ஞானிகளும் கல்விமான்களும்.” மறு மொழிபெயர்ப்பு: “தங்களை ஞானிகளும் கல்விமான்கள் என்று எண்ணுபவர்கள்.” (UDB பார்)
அவர்களுக்கு வெளிப்படுத்தி
“அவைகளை” என்ற பிரதிப்பெயர் “இவைகள்” என்று முன் வசனங்களில் உள்ளதைக் குறிக்கிறது.
சிறுக் குழந்தைகளைப் போல கல்லாதவர்களுக்கு
இந்த முழு சொற்றொடரும் இந்த எல்லா அர்த்தங்களையும் (“சிறுக் குழந்தைகள்” மற்றும் “கல்லாதவர்கள்” அல்லது “பேதைகள்”) சேர்த்துச் சொல்லும் ஒரே வார்த்தையை மொழிபெயர்க்கிறது. மறு மொழிபெயர்ப்பு: “பேதையான சிறுக் குழந்தைகள்”
சிறு குழந்தைகள் போல
ஞானமில்லாத அல்லது கல்லாத அல்லது தாங்கள் ஞானம் அற்றவர்கள் என்றும் கல்லாதவர் என்றும் தெரிந்தவர்களுக்கு உருவகம் இது.
உம்முடையப் பார்வைக்குப் பிரியமாயிருந்தது
“அப்படி செய்வது நல்லது என்று கண்டீர்”
எல்லாக் காரியங்களும் என்னுடைய பிதாவினிடத்திலிருந்து எனக்கு ஒப்புவிக்கப்பட்டது
செய்வினை வடிவில், “என்னுடைய பிதா எல்லாக் காரியங்களையும் எனக்கு ஒப்புவித்தார்” அல்லது “என்னுடையத் தகப்பன் எல்லாவற்றையும் என்னிடம் தந்தார்.”
தகப்பனைத் தவிர ஒருவனும் குமாரனை அறியான்
“பிதா ஒருவரே குமாரனை அறிவார்.” குமாரனை அறிகிறது “தனிப்பட்ட அனுபவத்தால் அறிகிறது” குமாரன் இயேசு தன்னையே படர்க்கை இலக்கணத்தில் குறிப்பிடுகிறார். குமாரனைத் தவிர ஒருவனும் தகப்பனை அறியான் “குமாரன் ஒருவரே தகப்பனை அறிவார்.” தகப்பனை அறிகிறது “தனிப்பட்ட அனுபவத்தால் அறிகிறது” குமாரன் அவரை வெளிப்படுத்த விரும்பும் யாருக்கும் மறு மொழிபெயர்ப்பு: “குமாரன் தகப்பனை வெளிப்படுத்த விரும்பினால் தான் தகப்பனை யார் என்று மக்கள் அறிந்து கொள்வார்கள்” குமாரன் அவரை வெளிப்படுத்த விரும்புவர்களுக்கு “அவரை” என்ற பிரதிப்பெயர் பிதாவாகிய தேவனைக் குறிக்கிறது.
Matthew 11:28-30
கூட்டத்தோடு பேசுகிறதை இயேசு முடிக்கிறார்
வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்கள்
யூத சட்டத்தின் “சுமை” என்ற உருவகத்தைக் குறிக்கிறது.
நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்
“உங்களின் சுமையிலிருந்து பாரத்திலிருந்தும் உங்களை இளைப்பாறப்பண்ணுவேன்”
என்னுடைய சுமையை உங்கள் மேல் ஏற்றுக்கொள்ளுங்கள்
“நீங்கள்” என்ற பிரதிப்பெயர் “வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் எல்லாரையும் குறிக்கிறது.” இந்த உருவகம் “நான் உங்களுக்கு கொடுக்கும் பணியை ஏற்றுக்கொள்ளுங்கள்” (UDB பார்) அல்லது “என்னோடு கூட சேர்ந்து வேலை செய்யுங்கள்.”
என்னுடைய சுமை இலகுவானது.
“இலகு” என்ற வார்த்தை கனமான என்பதன் எதிர்பதம் ஆகும்.
Matthew 12
Matthew 12:1-2
ஓய்வு நாளில் தங்கள் பசியைப் போக்க தனது சீடர்கள் பயிரை பறித்ததற்காக பரிசேயர்களால் குற்றம் சாட்டப்பட்டபோது இயேசு அவர்களை வாதாடிக் காப்பாற்றினார்.
பயிர்நிலங்கள்
பயிர் விதைக்குமிடம். கோதுமை என்பது என்ன என்று தெரிவில்லை என்றால் “பயிர்” என்ற வார்த்தை மிகவும் பொதுவாக இருந்தால், “ரொட்டி செய்யப் பயன்படும் பயிரை விதைக்குமிடம்” என்று மொழிபெயர்க்கவும்.
கதிர்களைக் கொய்து அவைகளை உண்டு...ஓய்வுநாளில் செய்யத்தகாதை செய்து
மற்றவர் விளைநிலத்தில் கதிர்களைக் கொய்து அவைகளை உண்பது திருட்டாக எண்ணப்படவில்லை (UDB பார்). கேள்வி என்னவென்றால் ஓய்வுநாளில் செய்யத்தகாததை செய்யலாமா என்பதுதான்.
அவர்களுக்கு
கதிர்கள்
கதிர்கள்
ஒரு புல் போல் இருக்கும், கோதுமை தானியத்தின் தலைப் பகுதி. அது பயிரின் விதிகளையோ அல்லது முதிர்ந்த தானியங்களையோ கொண்டிருக்கும்.
பார்
மறு மொழிபெயர்ப்பு: “பார்” அல்லது “கவனி” அல்லது “நான் உங்களுக்கு சொல்வதை கவனமாய்க் கேள்.”
Matthew 12:3-4
ஓய்வு நாளில் தங்கள் பசியைப் போக்க தனது சீடர்கள் பயிரை பறித்ததற்காக பரிசேயர்களால் குற்றம் சாட்டப்பட்டபோது இயேசு அவர்களை வாதாடிக் காப்பாற்றுவதைத் தொடர்ந்தார்.
அவர்களுக்கு...நீங்கள்
பரிசேயர்கள்
நீங்கள் படித்திருக்கவில்லையா?
இயேசு பரிசேயர்களை தாங்கள் வாசித்தவைகளிலிருந்து கற்றுக்கொள்ளவில்லை என்று மென்மையாக கடிந்துகொள்கிறார். மறு மொழிபெயர்ப்பு: “நீங்கள் வாசித்ததிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.”
அவன்...அவனுக்கு
தாவீது
சமூகத்தப்பம்
தேவனுக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளதும் அவருக்குக் கொடுக்கப்பட்டதுமான அப்பம்
அவனோடு இருந்தவர்கள்
“தாவீதும் அவனோடிருந்த மனிதரும்”
சட்டத்திற்கு உட்பட்டு ஆசாரியர்களுக்கு மட்டும்
“ஆசாரியர்கள் மட்டுமே அதை உண்ண அனுமதிக்கப்படுவர்”
Matthew 12:5-6
ஓய்வு நாளில் தங்கள் பசியைப் போக்க தனது சீடர்கள் பயிரை பறித்ததற்காக பரிசேயர்களால் குற்றம் சாட்டப்பட்டபோது இயேசு அவர்களை வாதாடிக் காப்பாற்றுவதைத் தொடர்ந்தார்.
நீங்கள்...நீங்கள்
பரிசேயர்கள்
நியாயபிரமாணத்தில் வாசித்ததில்லையா?
“நீங்கள் நியாயப்பிரமாணத்தில் வாசித்திருகிறீர்கள், அதனால் இவ்வாறு அது சொல்லுகிறது என்று அறிவீர்கள்”
ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தி
“மற்ற நாளில் செய்வதை ஓய்வு நாளில் செய்வது”
குற்றமில்லாதிருக்கிறார்கள்
“தேவன் அவர்களை தண்டிப்பதில்லை”
தேவாலயத்திலும் பெரியவர்
“தேவாலயத்திலும் பெரியவர் ஒருவர்.” இயேசு தன்னையே பெரியவர் என்று குறிப்பிடுகிறார்.
Matthew 12:7-8
ஓய்வு நாளில் தங்கள் பசியைப் போக்க தனது சீடர்கள் பயிரை பறித்ததற்காக பரிசேயர்களால் குற்றம் சாட்டப்பட்டபோது இயேசு அவர்களை வாதாடிக் காப்பாற்றுவதைத் தொடர்ந்தார்.
உங்களுக்குத் தெரிந்திருந்தால்
“நீங்கள் தெரிந்திருக்கவில்லை”
நீங்கள்...நீங்கள்
பரிசேயர்கள்
இரக்கத்தையே விரும்புகிறேன், பலியை அல்ல
பலிகள் நல்லது, ஆனால் இரக்கம் இன்னும் நல்லது.
இது என்ன அர்த்தப்படுகிறது
“தேவன் வேதத்தில் சொன்னவைகள்”
நான் விரும்புகிறேன்
“நான்” என்ற பிரதிப்பெயர் தேவனைக் குறிக்கிறது.
Matthew 12:9-10
இயேசு தான் ஒருவனை ஓய்வுநாளில் குணமாகினதைக் குற்றப்படுத்தின பரிசேயர்களுக்கு பதிலளிக்கிறார்.
இயேசு அங்கிருந்து சென்றார்
“இயேசு பயிர்நிலத்தை விட்டுச் சென்றார்”
அவர்களுடைய
அவர் பேசிக்கொண்டிருந்த பரிசேயர்களுடைய ஜெப ஆலயத்தில்
இதோ
“இதோ” என்ற வார்த்தை கதையில் ஒரு புதிய மனிதனுக்கு நம்மை அறிமுகப்படுத்துகிறது. உங்கள் மொழியில் இதைச் செய்ய வேறு வழி இருக்கலாம்.
உளர்ந்த கை
“சுருங்கின” அல்லது “கைமுட்டியினுள் வளைந்த”
Matthew 12:11-12
இயேசு தான் ஒருவனை ஓய்வுநாளில் குணமாகினதைக் குற்றப்படுத்தின பரிசேயர்களுக்குத் தொடர்ந்து பதிலளிக்கிறார்.
உங்களில் எந்த மனிதன்...பிடித்து...வெளியே தூக்கிவிடமாட்டான்?உங்களில் எந்த மனிதன்...பிடித்து...வெளியே தூக்கிவிடமாட்டான்?
மறு மொழிபெயர்ப்பு: “உங்களில் அனைவரும்...அதைத்தூக்கி வெளியே விடுவீர்கள்.”
அவர்களுக்கு...நீங்கள்
பரிசேயர்கள்
அவன் ...இருந்தால்
“அந்த மனிதன் ...இருந்தால்”
வெளியே எடுத்து
“ஆட்டை குழியிலிருந்து வெளியே எடுத்து”
நன்மை செய்வது சட்டத்திற்குட்பட்டதா
“நன்மை செய்கிறவர்கள் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிவதில்லை” அல்லது “நன்மை செய்கிறவர்கள் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிகிறார்கள்”
Matthew 12:13-14
இயேசு தான் ஒருவனை ஓய்வுநாளில் குணமாகினதைக் குற்றப்படுத்தின பரிசேயர்களுக்குத் தொடர்ந்து பதிலளிக்கிறார்.
மனிதன்
சூம்பிப் போன கை உடையவன்
உன் கையை நீட்டு
“உன் கையை வெளியே பிடி” அல்லது “உன் கையை நீளமாக்கு.”
அவன்
மனிதன்
அது...அது
மனிதனின் கை
சுகமாக்கப்பட்டது
“முழுவதும் குணமாக்கப்பட்டது” அல்லது “மறுபடியும் சுகமாய்”
விரோதமாய் சதித்திட்டம்
“காயப்படுத்த திட்டம் பண்ணி”
எவ்வாறு செய்வது என்று பார்த்து
“செய்வதற்கான வழிகளைக் கண்டு”
அவரைக் கொலை செய்து
இயேசுவை கொலை செய்து
Matthew 12:15-17
இந்த பகுதி இயேசு எவ்வாறு ஏசாயாவின் தீர்க்கதரிசனங்களுள் ஒன்றை நிறைவேற்றினார் என்பதை விவரிக்கிறது.
இது
“அவரைக் கொலை செய்ய பரிசேயர்கள் திட்டம் பண்ணிக்கொண்டிருக்கிரார்கள்.
பின்வாங்கி
“விட்டு”
மற்றவர்களுக்குத் தன்னைக் காட்டாமல்
“அவரைக்குறித்து யாரிடமும் சொல்லாமல்”
ஏசாயாத் தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது, என்னவென்றால்
“தேவனால் சொல்லப்பட்டு ஏசாயா தீர்க்கதரிசியால் எழுதப்பட்டது”
Matthew 12:18
இந்தப் பகுதி எவ்வாறு இயேசுவின் செயல்பாடுகள் ஏசாயாத் தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றியது என்று சொல்வதைத் தொடர்கிறது. ஏசாயா எழுதிய இந்த வார்த்தைகள் தேவன் சொன்ன வார்த்தைகள்.
Matthew 12:19-21
இந்தப் பகுதி எவ்வாறு இயேசுவின் செயல்பாடுகள் ஏசாயாத் தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றியது என்று சொல்லத் தொடர்கிறது. ஏசாயா எழுதிய இந்த வார்த்தைகள் தேவன் சொன்ன வார்த்தைகள்.
அவர்...அவருடைய
“...னுடைய வேலைக்காரன்” (ரோமர்: 12:18)
காயம்பட்ட நாணலை அவர் முறிக்கமாட்டார்
“பெலவீனமான மனுஷரை அவர் தள்ளமாட்டார்”
காயம்பட்ட
“பகுதி முறிந்துபோன அல்லது பழுதான”
புகையும் திரி
புகையும் திரி
நெருப்பு அணைக்கப்பட்ட ஒரு விளக்கின் திரி; இது உதவியற்ற நொடிந்து போனவர்களைக் குறிக்கிறது.
வரை
இதை ஒரு புதிய வாக்கியத்தோடு மொழிபெயர்க்கலாம்: “அவர் ...வரை இதைத்தான் செய்வார்”
நியாயத்திற்கு வெற்றியை அனுப்புகிறார்
“அவர் மனுஷரை நம்பிக்கைக் கொள்ளுமாறு செய்தார்”
Matthew 12:22-23
இது இயேசு பிசாசின் வல்லமையால் ஒருவனைக் குணப்படுத்தினார் என்று பரிசேயர்கள் சொல்லுகிறதை சொல்லத் துவங்குகிறது.
குருடனும் ஊமையுமான ஒருவன்
“பார்க்கவும் பேசவும் கூடாத ஒருவன்.”
மக்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
“இயேசு அந்த மனிதனை குனமாக்கினதைப் பார்த்த அனைவரும் பிரமித்துப்போனார்கள்”
Matthew 12:24-25
இது இயேசு பிசாசின் வல்லமையால் ஒருவனைக் குணப்படுத்தினார் என்று பரிசேயர்கள் சொல்லுகிறதை சொல்லத் துவங்குகிறது.
இந்த அற்புதம்
குருடும் செவிடும் பிசாசு பிடித்திருந்தவனுமான ஒருவன் குணமான அற்புதம்
பெயேல்செபூலினாலே அன்றி இவன் பிசாசுகளைத் துரத்தவில்லை
பெயேல்செபூலினாலே அன்றி இவன் பிசாசுகளைத் துரத்தவில்லை
“இவன் பெயேல்செபூலின் வேலையாள்.ஆகவே தான் இவன் பிசாசைத் துரத்த முடிந்தது.
இந்த மனிதன்
பரிசேயர்கள் இயேசுவை பெயர்வைத்துக் கூப்பிடாமல் அவரைத் தாங்கள் தள்ளினோம் என்பதைக் காட்டினார்கள்.
அவர்களுடைய...அவர்களுக்கு
பரிசேயர்கள்
Matthew 12:26-27
இது இயேசு பிசாசின் வல்லமையால் ஒருவனைக் குணப்படுத்தினார் என்று பரிசேயர்கள் சொல்லுகிறதை சொல்லத் துவங்குகிறது.
சாத்தானே சாத்தானை விரட்டினால்
“சாத்தானே தந்து ராஜ்ஜியத்திற்கு விரோதமாய் கிரியை செய்தால்”
அவனுடைய ராஜ்ஜியம் எப்படி நிலைக்கும்
“சாத்தனுடைய ராஜ்ஜியம் நிலைக்க முடியாது,” அல்லது “சாத்தானுடைய ராஜ்ஜியம் விழுந்து விடும்.”
வெளியே துரத்தி
“கட்டாயப்படுத்தி துரத்தி” அல்லது “துரத்தி” அல்லது “வெளியே வீசி” அல்லது “வெளியே போட்டு”
யாரால் உம்மைப் பின்பற்றுபவர்கள் அவைகளைத் துரத்துகிறார்கள்
மறு மொழிபெயர்ப்பு: “பெயல்செபூலின் வல்லமையாலும் கூட உம்மை பின்பற்றுபவர்கள் பிசாசுகளைத் துரத்தலாம்” (அல்லது UDB பார்).
அவர்கள் உங்கள் நியாதிபதிகளாயிருப்பார்கள்
மறு மொழிபெயர்ப்பு: “நான் பெயல்செபூலின் வல்லமையால் பிசாசுகளைத் துரத்துகிறேன் என்று நீங்கள் சொல்லுவதால் உங்களை தேவ வல்லமையால் பிசாசுகளைத் துரத்தும் உங்களைப் பின்பற்றுபவர்கள் நியாயம்தீர்ப்பார்கள்.”
Matthew 12:28-30
இது இயேசு பிசாசின் வல்லமையால் ஒருவனைக் குணப்படுத்தினார் என்று பரிசேயர்கள் சொல்லுகிறது தொடர்கிறது.
உங்கள் மேல்
பரிசேயர்கள் மேல்
பெலவானை முந்தி கட்டினாலோழிய
“பலவானை முந்தி அடக்காமல்”
என்னுடன் இல்லாதவன்
“எனக்கு உறுதுணையாய் இல்லாதவன்” அல்லது “என்னோடு வேலை செய்யாதவன்”
எனக்கு எதிராய் இருக்கிறான்
“எனக்கு எதிராய் வேலை செய்கிறவன்” அல்லது “என்னுடைய வேலையை அழிக்கிறவன்”
சேர்த்து
கதிர்களை அறுப்பதை குறிக்கும் பொதுவான சொல்.
Matthew 12:31-32
இது இயேசு பிசாசின் வல்லமையால் ஒருவனைக் குணப்படுத்தினார் என்று பரிசேயர்கள் சொல்லுகிறதைத் தொடர்கிறது.
உங்களுக்கு
பரிசேயர்களுக்கு
மனிதர் செய்யும் ஒவ்வொரு பாவமும் தேவதூஷணமும் மனிதனுக்கு மன்னிக்கப்படும்
“மனிதர் செய்யும் ஒவ்வொரு பாவமும் தேவதூஷணமும் தேவன் மன்னிப்பார்” அல்லது “பாவங்களும் தேவதூஷணங்களும் செய்யும் ஒவ்வொரு மனிதனையும் தேவன் மன்னிப்பார்”
ஆவியானவருக்கு விரோதமான தூஷணம் மன்னிக்கப்படமாட்டாது
“ஆவியானவருக்கு விரோதமான தூஷணத்தை தேவன் மன்னிக்கமாட்டார்”
மனுஷக்குமாரனுக்கு விரோதமாக யார் பேசும் எந்த வார்த்தையும் மன்னிக்கப்படும்
“மனுஷக்குமாரனுக்கு விரோதமாக யார் பேசும் எந்த வார்த்தையையும் தேவன் மன்னிப்பார்”
இந்த உலகம் ... வரப்போகிற
மறு மொழிபெயர்ப்பு: “இந்த நேரம்...வந்துகொண்டிருக்கிற நேரம்.”
Matthew 12:33-35
இது இயேசு பிசாசின் வல்லமையால் ஒருவனைக் குணப்படுத்தினார் என்று பரிசேயர்கள் சொல்லுகிறதைத் தொடர்கிறது.
ஒன்று, மரத்தை நல்லதாக்கி அதன் கனியை நல்லதாக்கு, அல்லது மரத்தை தீயதாக்கு அதன் கனியை தீயதாக்கு
“கனி நன்றாக இருப்பதால் மரம் நன்றாக இருக்கிறது என்று தீர்மானி, அல்லது கனி தீயதாக இருப்பதால்,மரமும் அப்படியே இருக்கிறது என்றும் தீர்மானித்துக்கொள்.”
நல்லது...தீயது
இது 1. “பலமான...பலவீனமான” அல்லது 2. “சாப்பிடக்கூடிய...சாப்பிட முடியாத” என்று அர்த்தப்படும்.
அதன் கனிகளால் மரம் அறியப்படும்.
இது 1. “மக்கள் ,மரத்தின் கனியைப் பார்த்து மரம் நல்லதா தீயதா என்று அறிந்து கொள்ளுவார்கள்” அல்லது 2. “மரம் எந்த வகை என்று அதன் கனியைப் பார்த்து மக்கள் அறிந்து கொள்ளுவார்கள்.”
நீங்கள் ...நீங்கள்
பரிசேயர்கள்
இருதயத்தில் உள்ளவைகளை வாய் பேசுகிறது
“ஒரு மனிதன் தன் இருதயத்தில் என்ன இருக்கிறதோ அதையே பேசுவான்”
நல்ல பொக்கிஷம்...கெட்ட பொக்கிஷம்
நல்ல பொக்கிஷம்...கெட்ட பொக்கிஷம்
“நீதியான எண்ணங்கள்...தீமையான எண்ணங்கள்”
Matthew 12:36-37
இது இயேசு பிசாசின் வல்லமையால் ஒருவனைக் குணப்படுத்தினார் என்று பரிசேயர்கள் சொல்லுகிறதைத் தொடர்கிறது.
நீங்கள் ...நீங்கள்
பரிசேயர்கள்
மக்கள் கணக்குக் கொடுப்பார்கள்
“தேவன் அதைக்குறித்துக் கேட்பார்” அல்லது “தேவன் அதன் மதிப்பை நியாயம் விசாரிப்பார்”
உபயோகமற்ற
“பயனற்ற” மறு மொழிபெயர்ப்பு: “தீமையான” (UDB பார்)
அவர்கள்
“மக்கள்”
நீங்கள் நியாயம்தீர்க்கப்படுவீர்கள்...நீங்கள் குற்றப்படுத்தப்படுவீர்கள்
“தேவன் உங்களை நியாயம்தீர்ப்பார்...தேவன் உங்களை குற்றப்படுத்துவார்”
Matthew 12:38-40
நம்பிக்கை இல்லாத வேதபாரகரையும் பரிசேயர்களையும் இயேசு கடிந்து கொண்டார் ஏனென்றால் குருடனை சுகமாக்கியப் பிறகும் பிசாசு பிடித்திருந்தவனை விடுதலை ஆக்கிய பின்னும் அவர் ஒரு அடையாளம் காண்பிக்கவேண்டும் என்று கேட்டனர்.
விருப்பம்
“வாஞ்சை”
பொல்லாத விபச்சார சந்ததி
இந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் தீமையானதை செய்வதில் சந்தோஷப்பட்டு தேவனுக்கு விசுவாசமாக இல்லாமல் இருந்தனர்.
ஒரு அடையாளமும் அதற்கு கொடுக்கப்படாது
“இந்த பொல்லாத விபச்சார சந்ததிக்கு தேவன் ஒரு அடையாளத்தையும் காண்பிக்கமாட்டார்.”
யோனாவின் அடையாளம்
இது, “யோனாவுக்கு என்ன நடந்தது” அல்லது “தேவன் யோனாவுக்கு செய்த அற்புதம்”என்று மொழிபெயர்க்கப்படலாம்.
பூமியின் இருதயத்தில்
நிதர்சனமான கல்லறைக்குள்
Matthew 12:41
நம்பிக்கை இல்லாத வேதபாரகரையும் பரிசேயர்களையும் இயேசு கடிந்து கொண்டிருந்தார்; ஏனென்றால் குருடனை சுகமாக்கியப் பிறகும் பிசாசு பிடித்திருந்தவனை விடுதலை ஆக்கிய பின்னும் அவர் ஒரு அடையாளம் காண்பிக்கவேண்டும் என்று கேட்டனர்.
நினிவேயின் மக்கள் எழுந்திருப்பார்கள்...இந்த சந்ததியோடு...அதைக் குற்றப்படுத்துவார்கள்
மறு மொழிபெயர்ப்புகள்: “நினிவேயின் மக்கள் இந்த சந்ததியைக் குற்றப்படுத்துவார்கள்...தேவன் அவர்கள் குற்றப்படுத்துதளைக் கேட்டு அதை தண்டிப்பார்” அல்லது “தேவன் நினிவேயின் மனுஷரையும்...இந்த சந்ததியையும் பாவத்தின் குற்றவாளிகளாக நியாயம் தீர்ப்பார், ஆனால் அவர்கள் மனம்திரும்பினதினாலும் நீங்கள் திரும்பவில்லை அதனாலும், தேவன் உங்களை மட்டுமே தண்டிப்பார்”
இந்த சந்ததி
இயேசு பிரசிங்கித்துக்கொண்டிருந்த காலத்தில் வாழ்ந்த மக்கள்
பெரியவர் ஒருவர்
“மிகவும் முக்கியமான ஒருவர்”
Matthew 12:42
நம்பிக்கை இல்லாத வேதபாரகரையும் பரிசேயர்களையும் இயேசு கடிந்து கொண்டிருந்தார்.
தெற்கிலுள்ள ராணி எழும்புவாள்...இந்த சந்ததியாரோடு...அதைக் குற்றப்படுத்துவாள். மறு மொழிபெயர்ப்புகள்: “தெற்கிலுள்ள ராணி இந்த சந்ததியை குற்றப்படுத்துவாள்...தேவன் அவள் குற்றப்படுத்துதளைக் கேட்டு அதை தண்டிப்பார்” அல்லது
மறு மொழிபெயர்ப்புகள்: “தெற்கிலுள்ள ராணி மக்கள் இந்த சந்ததியைக் குற்றப்படுத்துவார்கள்...தேவன் அவள் குற்றப்படுத்துதளைக் கேட்டு அதை தண்டிப்பார்” அல்லது “தேவன் தெற்கிலுள்ள ராணியையும்...இந்த சந்ததியையும் பாவத்தின் குற்றவாளிகளாக நியாயம் தீர்ப்பார், ஆனால் அவள் சாலமோனைக் கேட்க வந்ததாலும் நீங்கள் எனக்கு செவிகொடுக்கவில்லை அதனாலும், தேவன் உங்களை மட்டுமே தண்டிப்பார்”
தெற்கிலுள்ள ராணி
புறஜாதி ராஜ்ஜியமான சேபாவின் ராணியை இது குறிக்கிறது
பூமியின் கடையாந்தரங்களிலிருந்து அவள் வந்தாள்
“அவள் வெகு தூரத்திலிருந்து வந்தாள்”
இந்த சந்ததி
இயேசு பிரசிங்கித்துக்கொண்டிருந்த காலத்தில் வாழ்ந்த மக்கள்
பெரியவர் ஒருவர்
“மிகவும் முக்கியமான ஒருவர்”
Matthew 12:43-45
நம்பிக்கை இல்லாத வேதபாரகரையும் பரிசேயர்களையும் இயேசு கடிந்து கொண்டிருந்தார்.
தண்ணீரில்லாத இடங்கள்
“வறண்ட இடங்கள்” அல்லது “மக்கள் வாழாத இடங்கள்” (UDB பார்)
அதைக் காணமாட்டார்கள்
“ஒரு இளைப்பாறுதலையும் காணமாட்டார்கள்”
இது சொல்லுகிறது
“அசுத்த ஆவி சொல்லுகிறது”
அந்த வீடு கூட்டப்பட்டு சரியாக வைக்கப்பட்டுள்ளது என்று காண்கிறது
மறு மொழிபெயர்ப்பு: “அசுத்த ஆவி யாரோ அந்த வீட்டை சுத்தமாக கூட்டி எது எங்கு இருக்கவேண்டுமோ அங்கு வைத்து இருக்கிறதைக் கண்டது.”
Matthew 12:46-47
இயேசுவின் தாயும் சகோதரர்களும் அங்கு வந்தது அவருடைய ஆவிக்குரிய குடும்பத்தைப் பற்றி சொல்ல அவருக்கு ஒரு நல்ல தருணமாக அமைந்தது.
அவர் தாய்
இயேசுவின் மனிதத் தாய்
அவர் சகோதரர்கள்
இது 1. சொந்தக் குடும்பம் அல்லது ஒன்றுவிட்டக் குடும்பத்தின் சகோதரர்கள் என்றோ (UDB பார்) அல்லது 2. நெருங்கிய நண்பர்கள் அல்லது இஸ்ரவேலுக்குள் உள்ள சம்பந்தப்பட்டவர்களாக இருக்கலாம் என்று அர்த்தப்படும்.
தேடுகிறது
“விரும்புகிறது”
Matthew 12:48-50
இயேசுவின் தாயும் சகோதரர்களும் அங்கு வந்தது அவருடைய ஆவிக்குரிய குடும்பத்தைப் பற்றி சொல்ல அவருக்கு ஒரு நல்ல தருணமாக அமைந்தது.
அவரிடம் சொன்ன அவன்
“யேசுவிடம் அவரது தாயும் சகோதரர்களும் அவரைப் பார்க்கக் காத்து இருக்கிறார்கள் என்று சொன்னவன்”
யார் என்னுடைய தாய்? யார் என்னுடைய சகோதரர்கள்?
மறு மொழிபெயர்ப்பு: “யார் என்னுடைய தாய் மற்றும் சகோதரர்கள் என்று நான் உண்மையாக உங்களுக்கு சொல்லுகிறேன்.”
யாராயினும்
“எவராயினும்”
Matthew 13
Matthew 13:1-2
இந்த அதிகாரத்தில், கடற்கரை அருகில் ஒரு படகில் அமர்ந்து இயேசு பரலோகராஜ்யம் எப்படிப்பட்டது என்று சொல்லும் அநேக உவமைகளை திரளான மக்களுக்குக் கூறி விவரித்தார்.
அந்த நாளில்
முந்தின அதிகாரத்தில் நடந்த சம்பவங்கள் நடந்த அதே நாளில் இவைகளும் நடந்தது.
வீட்டுக்கு வெளியே
இயேசு யார் வீட்டில் தங்கி இருந்தார் என்று குறிப்பிடப்படவில்லை
படகில் ஏறி
இது ஒரு திறந்த மரத்தாலான கட்டுமரத்தோடுக்கூடிய மீன்பிடி படகாக இருக்கலாம்.
Matthew 13:3-6
பரலோகராஜ்யம் எப்படிப்பட்டது என்று சொல்லும் அநேக உவமைகளைத் திரளான மக்களுக்குக் கூறி விவரித்தார்.
இயேசு அநேகக் காரியங்களை உவமைகள் வாயிலாக அவர்களுக்கு சொன்னார்.
இயேசு அநேகக் காரியங்களை உவமைகள் வாயிலாக அவர்களுக்கு சொன்னார்.
“இயேசு அநேகக் காரியங்களை உவமைகளில் சொன்னார்”
அவர்களுக்கு
திராளான மக்களுக்கு
இதோ
மறு மொழிபெயர்ப்புகள்: “பார்” அல்லது “கவனி” “நான் சொல்ல வருவது என்ன என்பதற்கு கவனம் செலுத்து”
ஒரு விதைக்கிறவன் விதைக்கப் புறப்பட்டான்“ஒரு விவசாயி நிலத்தில் சில விதைகளைத் தூவ வெளியே புறப்பட்டான்.”
அவன் விதைக்கையில்
“விதைப்பவன் விதைக்கையில்”
வழி அருகே
நிலத்தின் அருகிலுள்ள “பாதை.” மக்கள் நடமாட்டத்தினால் அது கடினமாக இருந்திருக்கலாம்.
அவைகளைப் பட்சித்துப் போட்டது
“எல்லா விதைகளையும் உண்டது”
கற்பாறையான நிலம்
பாறைகள் மேல் இருக்கும் உதிர் மண்
உடனே அவைகள் தழைத்தது
“விதைகள் உடனே தழைத்து வளர்ந்தது”
அவைகள் சுட்டெரிக்கப்பட்டது
“சூரியன் செடிகளை சுட்டெரித்ததால் அவைகள் மிகவும் சூடாயிற்று””
அவைகள் உதிர்ந்தது
“செடிகள் காய்ந்து செத்தது”
Matthew 13:7-9
பரலோகராஜ்யம் எப்படிப்பட்டது என்று சொல்லும் அநேக உவமைகளைத் திரளான மக்களுக்குக் கூறி விவரித்துக்கொண்டிருந்தார்.
முட்செடியின் நடுவில் விழுந்தது
“முட்செடிகளும் வளரும் இடத்தில் அவைகள் விழுந்தது”
அவைகளைத் திணறடித்தது
“புதிய துளிர்களை திணறடித்தது.” களைகள் நல்ல செடிகளை வளரவிடாமல் தடுப்பதைக் குறிக்கும் பொதுவான சொல்லைப் பயன்படுத்தவும்.
தானியம் தந்தது
“அறுவடைத் தந்தது” அல்லது “அநேக விதைகளை வளரச் செய்தது” அல்லது “கனி தந்தது”
காதுள்ளவன் கேட்கக்கடவன்
இரண்டாம் நபர் இலக்கணத்தை பயன்படுத்துவது சில மொழிகளில் இயற்கையாக இருக்கலாம்: “கேட்பதற்கு காதுள்ள நீங்கள், கேளுங்கள்.”
காதுள்ளவன்
“கேட்கக்கூடிய யாராயினும்” அல்லது “என்னைக் கேட்கிற யாராயினும்”
அவன் கேட்கட்டும்
“நன்றாக அவன் கேட்கட்டும்” அல்லது “நான் சொல்லுவதற்கு அவன் கவனம் செலுத்தட்டும்”
Matthew 13:10-12
பரலோகராஜ்யம் எப்படிப்பட்டது என்று சொல்லும் அநேக உவமைகளைத் திரளான மக்களுக்குக் கூறி விவரித்துக்கொண்டிருந்தார்.
அவர்களுக்கு
சீடர்களுக்கு
உங்களுக்கு பரலோக ராஜ்ஜியத்தின் மர்மங்களை அறிந்துகொள்ளும் பாக்கியம் கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆனால் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை.
மறைத்துவைக்கப்பட்டத் தகவலைத் தந்து இதை செய்வினை வடிவில் மொழிபெயர்க்கலாம்: “தேவன் உங்களுக்கு பரலோக ரஜ்ஜியத்தின் மர்மங்களை அறிந்துகொள்ளும் பாக்கியம் கொடுத்திருக்கிறார், ஆனால் தேவன் அவர்களுக்குக் கொடுக்கவில்லை” அல்லது “தேவன் உங்களைப் பரலோக ராஜ்ஜியத்தின் மர்மங்களை அறிந்துகொள்ள பலனைத் தந்திருக்கிறார், ஆனால் அவர் இந்த மக்களை பெலப்படுத்தவில்லை.”
நீங்கள்
சீடர்கள்
மர்மங்கள்
மறைத்துவைக்கப்பட்டிருந்த சத்தியங்களை இயேசு இப்பொழுது வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார். மறு மொழிபெயர்ப்பு: “ரகசியங்கள்” அல்லது “மறைக்கப்பட்ட சத்தியங்கள்” (UDB பார்).
யாருக்கு இருக்கிறதோ
“புரிந்துகொள்ளுதல் யாருக்கு இருக்கிறதோ” அல்லது “நான் கற்றுக் கொடுப்பதை ஏற்றுக்கொள்ளும் யாராயினும்.”
அவனுக்கு அதிகம் கொடுக்கப்படும்
இது செய்வினை வடிவில்: “தேவன் அவனுக்கு அதிக புரிந்துகொள்ளுதளைக் கொடுப்பார்” என்று மொழிபெயர்க்கப்படலாம்.
அவனுக்கு பெரிய நன்மை இருக்கிறது
“அவன் தெளிவாகப் புரிந்துகொள்ளுவான்”
யாருக்கு இல்லையோ
“புரிந்துகொள்ளுதல் இல்லாத எவரும்” அல்லது “நான் கற்றுக்கொடுப்பதை ஏற்றுக்கொள்ளாத யாராயினும்”
அவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்
இது செய்வினை வடிவில்: “தேவன் அவனிடம் உள்ளதை எடுத்துக்கொள்ளுவார்” என்று மொழிபெயர்க்கப்படலாம்.
Matthew 13:13-14
பரலோகராஜ்யம் எப்படிப்பட்டது என்று சொல்லும் அநேக உவமைகளைத் திரளான மக்களுக்குக் கூறி விவரித்துக்கொண்டிருந்தார்.
அவர்களிடம் நான் பேசுகிறேன்
“அவர்களிடம்” என்ற பிரதிப்பெயர் இந்த இரண்டு வசனங்கள் முழுவதிலும் அந்த திரளான மக்கள் கூட்டத்தையே குறிக்கிறது.
ஏனென்றால், அவர்கள் பார்த்தாலும், அவர்கள் உண்மையில் பார்ப்பதில்லை, மற்றும் அவர்கள் கேட்டாலும் அவர்கள் உண்மையில் கேட்பதில்லை
இயேசு இந்த இணைப்போக்கை மக்கள் கூட்டம் புரிந்துகொள்ள மறுத்ததைத் தன் சீடர்களிடம் தெரிவிக்கப் பயன்படுத்தினார்.
அவர்கள் பார்த்தாலும், உண்மையில் அவர்கள் பார்க்கவில்லை
“அவர்கள் பார்த்தாலும், அவர்கள் உணர்ந்தறிவதில்லை.” வினைச் சொற்கள் வினை செய்யப்படும் பொருளைக் கேட்டால், இது “அவர்கள் காரியங்களைப் பார்த்தாலும் அவைகளைப் புரிந்துகொள்ளுவதில்லை” அல்லது “நடக்கிறவைகளை அவர்கள் பார்த்தாலும், அவைகள் என்ன அர்த்தப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளமாட்டார்கள்” என்று மொழிபெயர்க்கப்படலாம்.
அவர்கள் கேட்டாலும், அவர்கள் உண்மையில் கேட்பதுமில்லை, அவர்கள் புரிந்துகொள்ளுவதுமில்லை
“அவர்கள் கேட்டாலும், புரிந்துகொள்ளுவதில்லை.” வினைச் சொற்கள் வினை செய்யப்படும் பொருளைக் கேட்டால், இது, “உபதேசங்களைக் கேட்டாலும், சத்தியத்தை புரிந்துகொள்ளுவதில்லை” என்று மொழிபெயர்க்கப்படலாம்.
நீங்கள் கேட்கும் போது கேட்கிறீர்கள், ஆனால் நீங்கள் ஒருபோதும் புரிந்துகொள்ளப்போவதில்லை; நீங்கள் பார்க்கும்போது பார்க்கிறீர்கள் ஆனால் நீங்கள் ஒருபோதும் உணர்ந்து அறிவதில்லை
ஏசாயாவின் நாட்களில் விசுவாசமில்லாத மக்களைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசியின் கூற்றை இது துவங்குகிறது. இயேசு இந்தக் கூற்றை தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கும் மக்களைக் குறிக்கப் பயன்படுத்துகிறார். இது மற்றொரு இணைப்போக்கு ஆகும்.
நீங்கள் கேட்கும் போது கேட்கிறீர்கள், ஆனால் நீங்கள் ஒருபோதும் புரிந்துகொள்ளப்போவதில்லை;
இது, “நீங்கள் கேட்பார்கள், ஆனால் புரிந்துகொள்ளமாட்டீர்கள்.” என்று மொழிபெயர்க்கப்படலாம். வினைச் சொற்கள் வினை செய்யப்படும் பொருளைக் கேட்டால், இது, “நீங்கள் காரியங்களைக் கேட்கிறீர்கள் ஆனால் அவைகளைப் புரிந்துகொள்ளமாட்டீர்கள்.”
நீங்கள் பார்க்கும்போது பார்க்கிறீர்கள் ஆனால் நீங்கள் ஒருபோதும் உணர்ந்து அறிவதில்லை
“நீங்கள் பார்க்கிறீர்கள், அனால் நீங்கள் உணர்ந்தறிவதில்லை.” வினைச் சொற்கள் வினை செய்யப்படும் பொருளைக் கேட்டால், இது,”நீங்கள் காரியங்களைப் பார்கிறீர்கள், ஆனால் அவைகளை உணர்ந்தறிவதில்லை.”
Matthew 13:15
பரலோகராஜ்யம் எப்படிப்பட்டது என்று சொல்லும் அநேக உவமைகளைத் திரளான மக்களுக்குக் கூறி விவரித்துக்கொண்டிருந்தார். மத்தேயு 13:13|13:14 ல் துவங்கின ஏசாயாவின் வார்த்தைகளைக் கூறுவதைத் திரும்பக் கூறத் தொடர்ந்தார்.
மக்களின் இருதயம் மந்தமானது
“இந்த மக்கள் இனி ஒருபோதும் கற்றுக்கொள்ளமாட்டார்கள்” (UDB பார்)
அவர்கள் காதுகள் கேட்பதால் கொழுத்தது
“கவனிக்க அவர்கள் இனி ஒருபோதும் வாஞ்சியர்கள்” (UDB பார்)
அவர்கள் கண்களை அவர்கள் மூடிக்கொண்டார்கள்
“அவர்கள் கண்களை அவர்கள் மூடிக்கொண்டார்கள்” அல்லது “அவர்கள் பார்க்க மறுக்கிறார்கள்”
அவர்கள் கண்களால் காண்பதுமில்லை, செவிகளால் கேட்பதுமில்லை, இருதயத்தால் புரிந்துகொள்ளுவதுமில்லை, அவர்கள் திரும்புவதுமில்லை
“அதனால் அவர்கள் கண்களால் அவர்களுக்குப் பார்க்க முடிவதில்லை, செவிகளால் கேட்க முடிவதில்லை, இருதயத்தில் புரிந்துகொள்ள முடிவதில்லை, பலனாக மறுபடியும் திரும்ப முடிவதில்லை.”
மறுபடியும் திரும்பு
“பின் திரும்பு” அல்லது “மனந்திரும்பு”
நான் அவர்களைக் குணமாக்கவேண்டும்
“நான் அவர்களைக் குணப்படுத்த வையுங்கள்.” மறு மொழிபெயர்ப்பு: “நான் அவர்களை மறுபடியும் ஏற்றுக்கொள்ள வையுங்கள்.”.”
Matthew 13:16-17
பரலோகராஜ்யம் எப்படிப்பட்டது என்று சொல்லும் அநேக உவமைகளைத் திரளான மக்களுக்குக் கூறி விவரித்துக்கொண்டிருந்தார்.
உங்களுடைய ... நீங்கள்
இயேசு தனது சீடர்களிடம் பேசுகிறார்
அவர்கள் பார்க்கிறார்கள்
“அவர்களால் பார்க்க முடிகிறது” அல்லது “அவர்களுக்குப் பார்க்க பெலன் இருக்கிறது”
அவர்கள் கேட்கிறார்கள்
“அவர்களால் கேட்க முடிகிறது” அல்லது “அவர்களுக்குப் கேட்க பெலன் இருக்கிறது”
நீங்கள் பார்க்கும் காரியங்கள்
“நான் செய்ய நீங்கள் பார்த்த காரியங்கள்”
நீங்கள் கேட்டக் காரியங்கள்
“நான் பேச நீங்கள் கேட்ட காரியங்கள்”
Matthew 13:18-19
பரலோகராஜ்யம் எப்படிப்பட்டது என்று சொல்லும் அநேக உவமைகளைத் திரளான மக்களுக்குக் கூறி விவரித்துக்கொண்டிருந்தார். மத்தேயு 13:3,7, 8 இல் சொன்ன உவமையை இங்கு விளக்குகிறார்.
இருதயத்தில் விதைக்கப்பட்டதைத் தீயவன் வந்து பிடுங்கிக்கொண்டு போகிறான்
“சாத்தான் வந்து அவன் கேட்ட தேவனுடைய வார்த்தையை மறக்கச் செய்கிறான்.”
பிடுங்கிக்கொண்டு
சரியான சொந்தக்காரனிடமிருந்து அவனுடையதைப் பிடுங்கிக் கொண்டு போகிறதைக் குறிக்கும் ஒரு வார்த்தையைப் பயன்படுத்த முயற்சிக்கவும்.
அவனுடைய இருதயத்தில் விதைக்கப்பட்டது
இது செய்வினை வடியில்: “தேவன் அவன் இருதயத்தில் விதைத்த வார்த்தை.”
அவன் இருதயத்தில்
கவனிக்கிறவனுடைய இருதயத்தில்
வழியருகே விதைக்கப்பட்டவன் இவன் தான்
எழுத்தின்படியான மொழிபெயர்ப்பு அறிவுண்டாக்கவில்லை என்றால், இயேசு தான் விதைப்பவர், செய்தி தான் விதை, கேட்பவர் தான் வழியருகே உள்ள நிலம் என்று புரியும்படி மொழிபெயர்க்கவும். சாத்தியமான மொழிபெயர்ப்பு: “இது தான் வழியருகே விதைக்கப்பட்டவையுடன் நடப்பவை.”
வழியருகே
“சாலை” அல்லது “பாதை.” மத்தேயு 13:03|13:4 இல் மொழிபெயர்த்ததைப் போல மொழிபெயர்க்கவும்.
Matthew 13:20-21
பரலோகராஜ்யம் எப்படிப்பட்டது என்று சொல்லும் அநேக உவமைகளைத் திரளான மக்களுக்குக் கூறி விவரித்துக்கொண்டிருந்தார். மத்தேயு 13:3, 7, 8 இல் சொன்ன உவமையை இங்கு விளக்குகிறார்
பாறையான நிலத்தில் வதைக்கிறவன்
எழுத்தின்படியான மொழிபெயர்ப்பு அறிவுண்டாக்கவில்லை என்றால், இயேசு தான் விதைப்பவர், செய்தி தான் விதை, கேட்பவர் தான் பாறையான நிலம் என்று புரியும்படி மொழிபெயர்க்கவும். சாத்தியமான மொழிபெயர்ப்பு: “இது தான் பாறையான நிலத்தில் விதைக்கப்பட்டவையுடன் நிலைமை.”
அவனுக்கு வேர் இல்லை
“அவனுக்கு மேலோட்டமான வேர்களே உள்ளது” அல்லது “அவன் இளமையான செடியின் வேர்களுக்கு இடம் தருவதில்லை”
வார்த்தையினால்
“செய்தியினால்”
அவன் உடனே தடுமாறுகிறான்
“உடனே விழுந்துபோகிறான்” அல்லது “உடனே தனது விசுவாசத்தை விட்டுவிட்டான்.”
Matthew 13:22-23
பரலோகராஜ்யம் எப்படிப்பட்டது என்று சொல்லும் அநேக உவமைகளைத் திரளான மக்களுக்குக் கூறி விவரித்துக்கொண்டிருந்தார். மத்தேயு 13:3, 7, 8 இல் சொன்ன உவமையை இங்கு விளக்குகிறார்
முட்செடிகளின் நடுவில் விதைக்கப்பட்டவன்...நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவன்
எழுத்தின்படியான மொழிபெயர்ப்பு அறிவுண்டாக்கவில்லை என்றால், இயேசு தான் விதைப்பவர், செய்தி தான் விதை, கேட்பவன் தான் முட்செடி உள்ள நிலம் என்று புரியும்படி மொழிபெயர்க்கவும். சாத்தியமான மொழிபெயர்ப்பு: “இது தான் முட்செடி உள்ள நிலத்தில் விதைக்கப்பட்டவையின் நிலைமை... இது தான் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவையின் நிலைமை.”
வார்த்தை
“செய்தி”
உலகத்தின் கவலையும் செல்வத்தின் வஞ்சனையும் வார்த்தையை திணறடிக்கிறது; அதனால் அது கனியற்று போகிறது.
இது, “களைகள் நல்ல செடிகள் வளருவதிலிருந்து தடுப்பது போல, உலகக் கவலையும் செல்வத்தின் வஞ்சனையும் இந்த மனிதனை கனிகொடுப்பதிலிருந்து தடுக்கிறது” என்று மொழிபெயர்க்கப்படலாம்.
உலகத்தின் கவலைகள்
“இந்த உலகத்தில் மக்கள் கவலைப்படும் காரியங்கள்”
கனியற்று போனது
“உற்ப்பத்தியற்று போனது”
இவன் தான் உண்மையில் கனி தருகிறவன்
“இவைகள் தான் கனியுள்ளதும் உற்பத்தி செய்கிறதுமானவைகள்” அல்லது “பலமுள்ள செடிகள் நல்ல கனிகள் தருவது போல, இந்த மக்கள் உற்பத்தி செய்வர்.”
Matthew 13:24-26
பரலோகராஜ்யம் எப்படிப்பட்டது என்று சொல்லும் அநேக உவமைகளைத் திரளான மக்களுக்குக் கூறி விவரித்துக்கொண்டிருந்தார்.
இயேசு அவர்களுக்கு இன்னொரு உவமையைக் கொடுத்தார்
திரளான மக்களுக்கு இயேசு மற்றொரு உவமையைச் சொன்னார்.
பரலோக ராஜ்ஜியம் ஒரு மனிதனைப் போல
இந்த மொழிபெயர்ப்பு பரலோக ராஜ்யத்தை ஒரு மனிதனுக்கு இணையாக சொல்லக்கூடாது. ஆனால் பரலோக ராஜ்ஜியம் இங்கு கூறப்பட்டுள்ள உவமையில் உள்ள சூழ்நிலையைப் போன்றது.
நல்ல விதை
“நல்ல உணவு விதைகள்” அல்லது “நல்ல தானிய விதைகள்.” இயேசு கோதுமையைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார் என்று மக்கள் நினைத்திருப்பார்.
அவன் எதிரி வந்தான்
“அவன் எதிரி நிலத்துக்கு வந்தான்.”
களைகள்
இது ,”கெட்ட விதை” அல்லது “களை விதைகள்.” இந்தக் களைகள் இளமையில் நல்ல செடி போலத் தோன்றும், ஆனால், அந்த தானியம் விஷமாக இருக்கிறது.
இலைகள் தழைத்த போது
“கோதுமையின் விதைகள் முளைக்கையில்” அல்லது “செடிகள் மேலே வந்த பொழுது”
அவற்றின் விளைச்சலை வரச்செய்து
“தானியத்தை உற்பத்திசெய்து” அல்லது “கோதுமை தானியத்தை உற்பத்திசெய்து”
பின்பு களைகளும் தோன்றியது
மறு மொழிபெயர்ப்பு: “பின்பு மக்கள் களைகளும் நிலத்தில் இருக்கிறது என்று பார்ப்பார்கள்.”
Matthew 13:27-28
பரலோகராஜ்யம் எப்படிப்பட்டது என்று சொல்லும் அநேக உவமைகளைத் திரளான மக்களுக்குக் கூறி விவரித்துக்கொண்டிருந்தார். இந்த வசனங்கள் களைகளின் உவமையைத் தொடர்கிறது.
நில உரிமையாளன்
நல்ல விதையை நிலத்தில் விதைத்த அதே மனிதன்
உங்களுடைய நிலத்தில் நல்ல விதையை நீங்கள் விதைக்கவில்லையா?
“உங்கள் நிலத்தில் நல்ல விதைகளை விதைத்தீர்கள்.” நில உரிமையாளன் அநேகமாக வேலைக்காரர்களை வைத்து விதை விதைத்திருப்பான் (UDB பார்).
அவன் அவர்களிடம் சொன்னான்
“நில உரிமையாளன் வேலைக்காரர்களிடம் சொன்னான்”
நாங்கள் ... விரும்புகிறீரா?
“நாங்கள்” என்ற வார்த்தை வேலைக்காரர்களைக் குறிக்கிறது.
அவைகளைச் சேர்த்து
வீசி எறியும்படி “களைகளைப் பிடுங்கி”
Matthew 13:29-30
பரலோகராஜ்யம் எப்படிப்பட்டது என்று சொல்லும் அநேக உவமைகளைத் திரளான மக்களுக்குக் கூறி விவரித்துக்கொண்டிருந்தார். இந்த வசனங்கள் களைகளின் உவமையை முடிக்கிறது.
நில உரிமையாளன் சொல்லுகிறான்
“நில உரிமையாளன் தன் வேலைக்காரர்களிடம் சொல்லுகிறான்”
அறுக்கிறவர்களைப் பார்த்து நான் சொல்லுவேன், “களைகளை முதலில் பிடுங்கி எரிப்பதற்காக கட்டாக அவைகளைக் கட்டி, கோதுமையை களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள்” என்று.
இதை செய்யப்பாடுவினையாக மொழிபெயர்க்கலாம்: “நான் அறுப்பவர்களிடம் களைகளை முதலில் பிடுங்கி எரிப்பதற்காக கட்டாக அவைகளைக் கட்டி, கோதுமையை என்னுடைய களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள்,” என்று சொல்லுவேன்.
என்னுடைய களஞ்சியம்
தானியங்களை சேர்த்து வைக்கப் பயன்படும் விவசாய நிலத்தில் உள்ள ஒரு கட்டிடம்.
Matthew 13:31-32
பரலோகராஜ்யம் எப்படிப்பட்டது என்று சொல்லும் அநேக உவமைகளைத் திரளான மக்களுக்குக் கூறி விவரித்துக்கொண்டிருந்தார்.
இயேசு இன்னொரு உவமையை அவர்களுக்கு கொடுத்தார்
“இயேசு இன்னொரு உவமையை திரளான மக்களுக்கு சொன்னார்”
பரலோக ராஜ்ஜியம் இப்படிப்பட்டது
மத்தேயு 13:24 இல் எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்.
கடுகு விதை
பெரிய செடியாக வளரும் ஒரு மிகச் சிறிய விதை மற்ற எல்லா விதைகளைப் பார்க்கிலும் இந்த விதை சிறியது.
இயேசுவைக் கவனித்துக்கொண்டிருந்தவர்களுக்கு கடுகு விதை தான் சிறியது.
ஆனால் அது வளரும்போது
“ஆனால் செடி வளரும்போது”
ஒரு மரமாகும்
“ஒரு பெரிய புதர் ஆகும்”
ஆகாயத்துப் பறவைகள்
“பறவைகள்”
Matthew 13:33
பரலோகராஜ்யம் எப்படிப்பட்டது என்று சொல்லும் அநேக உவமைகளைத் திரளான மக்களுக்குக் கூறி விவரித்துக்கொண்டிருந்தார்.
இயேசு அவர்களுக்கு இன்னொரு உவமையைச் சொன்னார்
“இயேசு கூட்டத்தாருக்கு இன்னொரு உவமையைச் சொன்னார்”
பரலோக ராஜ்ஜியம் இப்படிப்பட்டது.
மத்தேயு 13:24 இல் எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பாருங்கள். பரலோக ராஜ்ஜியம் புளிப்புச்சத்து பரப்புவதைப்போல இருக்கிறது.
மூன்று படி மாவு
“நிறைய மாவு” அல்லது நிறைய மாவை உங்கள் மொழியில் சொல்லப்படும் வார்த்தையைப் பயன்படுத்தவும் (UDB பார்).
அது உப்பும் வரை
மாவு எழும்பும்வரை. உள்வைத்து சொல்லப்பட்ட தகவல் என்னவென்றால் புளிப்புச்சத்தும் மூன்று படி மாவும் ரொட்டி சுடும் பிசைந்த மாவாக மாற்றப்பட்டது.
Matthew 13:34-35
பரலோகராஜ்யம் எப்படிப்பட்டது என்று சொல்லும் அநேக உவமைகளைத் திரளான மக்களுக்குக் கூறி விவரித்துக்கொண்டிருந்தார்.
இவை எல்லாவற்றையும் இயேசு மக்களுக்கு உவமைகளாகச் சொன்னார்; உவமைகள் அல்லாமல் அவர்களுக்கு அவர் ஒன்றும் சொல்லவில்லை.
வரிசை “சொன்னார்...உவமைகள்...உவமைகள்...சொன்னார்” என்பது அவர் அவர்களிடம் உவமைகளாகச் சொன்னார் என்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்தக் காரியங்கள் எல்லாம்
மத்தேயு 13:1 ல் இயேசு போதிக்கத் துவங்கினதை இது குறிக்கிறது. உவமைகள் அல்லாமல் அவர்களுக்கு அவர் ஒன்றும் சொல்லவில்லை. “உவமைகள் அன்றி அவர்களுக்கு அவர் ஒன்றும் போதிக்கவில்லை.” மறு மொழிபெயர்ப்பு: “அவர்களுக்கு # அவர் சொன்னது ஒவ்வொன்றும் உவமையில் சொன்னார்.”
அவர் சொன்னபோது, தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது உண்மையைப் போகலாம். அவர் சொன்னபோது, தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது உண்மையைப் போகலாம்.
செய்வினைச் சொல்லாக, “தேவன் தீர்க்கதரிசிகளுள் ஒருவனுக்கு முன்பு சொன்னதை உண்மை ஆக வைத்தார்” (UDB) என்று மொழிபெயர்க்கலாம்.
அவர் சொன்னபோது
“தீர்க்கதரிசி சொன்னபோது”
மறைந்திருந்த காரியங்கள்
செயவினைச் சொல்லாக, “தேவன் மறைத்து வைத்தக் காரியங்கள்.”
உலகத் தோற்றமுதல்
“உலகத்தின் துவக்கம் முதல்” அல்லது “தேவன் உலகத்தை உருவாக்கியதிலிருந்து.”
Matthew 13:36-39
இயேசு தன் சீடர்களோடு ஒரு வீட்டுக்குள் போய் பரலோக ராஜ்ஜியத்தின் உவமைகளை விவரித்தார்.
வீட்டுக்குள்ளே போய்
“வீட்டுக்குள்ளே போய்” அல்லது “அவர் தங்கியிருந்த வீட்டுக்குள் போய்.”
விதைக்கிற மனிதன்
“விதைக்கிறவன்”
மனுஷக்குமாரன்
இயேசு தன்னைத்தான் குறிப்பிடுகிறார்.
ராஜ்ஜியத்தின் குமாரர்கள்
“ராஜ்ஜியத்திற்கு உரியவர்கள்”
பொல்லாதவனின் குமாரர்கள்
“பொல்லாதவனுக்கு உரியவர்கள்”
அவைகளை விதைத்த எதிரியானவன்
களைகளை விதைக்கும் எதிரியானவன்
உலகத்தின் முடிவு
“காலத்தின் முடிவு”
Matthew 13:40-43
இயேசு தன் சீடர்களோடு ஒரு வீட்டுக்குள் போய் பரலோக ராஜ்ஜியத்தின் உவமைகளை விவரிக்க துவங்கினார்..
ஆதலால், களைகளை சேர்த்து அக்கினியில் எரிப்பது போல
செய்வினைச் சொற்களோடு, “ஆதலால், மனுஷர் களைகளை சேர்த்து அக்கினியில் எரிப்பது போல.” மொழிபெயர்க்கலாம்.
உலகத்தின் முடிவு
“காலத்தின் முடிவு”
மனுஷக் குமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்
இயேசு இங்கு தமக்காகப் பேசுகிறார். இதை, “மனுஷக்குமாரனாகிய நான் தூதர்களை அனுப்புவேன்” என்று மொழிபெயர்க்கலாம்.
அக்கிரமம் செய்கிறவர்கள்
“நெறிமுறையின்றி செயல்படுபவர்கள் அல்லது “தீயவர்கள்”
அக்கினி சூளை
அக்கினி சூளை
“தீச்சூளை” என்று இதை மொழிபெயர்க்கலாம். “சூளை” என்பது என்னவென்று தெரியவில்லை என்றால், “அடுப்பு”என்று மொழிபெயர்க்கப்படலாம்.
சூரியனைப் போலப் பிரகாசித்து
“சூரியனைப் பார்ப்பது எவ்வளவு சுலபமோ அவ்வளவு சுலபமாக”
காதுள்ளவன் கேட்கக்கடவன்
முன்னிலை இலக்கண பயன்பாடு சில மொழிகளில் இயற்கையாகவே இருக்கும்: “காதுள்ள நீங்கள் கேட்கக்கடவீர்கள்,” அல்லது “உங்களுக்கு காதுள்ளது ஆதலால், கேளுங்கள்.”
Matthew 13:44-46
இயேசு தன் சீடர்களோடு ஒரு வீட்டுக்குள் போய் பரலோக ராஜ்ஜியத்தின் உவமைகளைத் தொடர்ந்து விவரித்தார். இந்த இரண்டு உவமைகளில், இயேசு இரண்டு உவமைகளை உபயோகித்து தனது சீடர்களுக்கு பரலோக ராஜ்ஜியம் எப்படி எதற்கு ஒப்பனையாய் இருக்கிறது என்று போதித்தார்..
பரலோக இராஜ்ஜியமானது
இதை மத்தேயு 13:24 இல் மொழிபெயர்த்தது எவ்வாறென்று பார்க்கவும்.
நிலத்தில் புதைந்து இருக்கும் பொக்கிஷம்
பொக்கிஷம் என்பது மிகவும் விலையேறப்பெற்ற, மதிப்புமிக்க, சேகரிக்கப்பட்ட பொருட்கள். இது செயவினைச் சொல்லோடு: “நிலத்தில் யாரோ ஒருவனால் புதைக்கப்பட்ட பொக்கிஷம்”
அதை மறைத்து
“அதை மூடி”
தன்னுடையதெல்லாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கினான்
மறைத்துச் சொல்லப்பட்ட தகவல் என்னவென்றால், நிலத்தை வாங்குகிறவன் அங்கு புதைக்கப்பட்டுள்ள பொக்கிஷத்தை அடையும்படி அதை வாங்குகிறான்.
ஒரு வியாபாரி
வியாபாரி என்பவன் மொத்தமாக வியாபாரம் செய்பவன்; பெரும்பாலும் தூர இடங்களிலிருந்து பொருட்களை வாங்கி விற்கிறவன்.
விலையேறப்பெற்ற முத்துகளுக்காக எதிர்ப்பார்த்தல்
மறைத்துச் சொல்லப்பட்ட தகவல் என்னவென்றால் தான் வாங்குவதற்காக விலையேறப்பெற்ற முத்துக்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்
விலையேறப்பெற்ற முத்துக்கள்
“சிறந்த முத்துக்கள்” அல்லது “அழகான முத்துக்கள்” என்று மொழிபெயர்க்கலாம். “முத்து” என்பது கெட்டியான, வழுவழுப்பான, மினுமினுப்பான, கடலுக்குள் இருக்கும் நத்தையின் உள்ளே உருவாகி வெள்ளை அல்லது மிதமான நிறமுடைய கொட்டை போல் இருக்கும். இது மாணிக்கமாக அதிக விலை நிர்ணயிக்கப்படுகிறதும், அல்லது விலையேறப்பெற்ற அணிகலனை உருவாக்கவும் பயன்படும்.
Matthew 13:47-48
இயேசு தன் சீடர்களோடு ஒரு வீட்டுக்குள் போய் பரலோக ராஜ்ஜியத்தின் உவமைகளைத் தொடர்ந்து விவரித்தார். இந்த இரண்டு உவமைகளில், இயேசு இரண்டு உவமைகளை உபயோகித்து தனது சீடர்களுக்கு பரலோக ராஜ்ஜியம் எப்படி எதற்கு ஒப்பனையாய் இருக்கிறது என்று போதித்துக்கொண்டிருந்தார்.
பரலோக ராஜ்ஜியமானது
இதை மத்தேயு 13:24 இல் மொழிபெயர்த்தது எவ்வாறென்று பார்க்கவும். # பரலோக ராஜ்ஜியம் வலை போல அல்லாமல், எல்லா வகை மீன்களைப் பிடிக்கும் வலை போல எல்லா மனுஷரையும் இழுக்கும். கடலில் வீசப்பட்ட வலைப் போல செயவினைச் சொல்லோடு: “சில மீனவர்கள் கடலில் வீசும் வலைப் போல.”
கடலில் வீசப்பட்ட வலை
“ஒரு ஏரியில் வீசப்பட்ட வலை”
எல்லாவகை ஜந்துக்களையும் சேகரித்து
“எல்லா வகை மீன்களையும் பிடித்து”
கடற்கரைக்கு அதை இழுத்து
“கடற்கரைக்கு வலையை இழுத்து” அல்லது “கரைக்கு வலையை இழுத்து”
நல்ல காரியங்கள்
“நல்லவைகள்”
தகுதியில்லாதவைகள்
தகுதியில்லாதவைகள்
கெட்ட மீன்கள்” அல்லது “சாப்பிட முடியாத மீன்கள்”
அவைகளை வீசி
“வைத்துக்கொள்ளவில்லை”
Matthew 13:49-50
இயேசு தன் சீடர்களோடு ஒரு வீட்டுக்குள் போய் பரலோக ராஜ்ஜியத்தின் உவமைகளைத் தொடர்ந்து விவரித்தார்.
உலகத்தின் முடிவு
“காலத்தின் முடிவு”
வந்தது
“வெளியே வந்து” அல்லது “வெளியே போய்” அல்லது “பரலோகத்திலிருந்து வந்து”
அவர்களை வீசி
“துன்மார்க்கரை வீசி”
அக்கினிச் சூளை
“தீச்சூளை” என்று மொழிபெயர்க்கலாம். பழைய ஏற்பாடு புஸ்தகம் தானியல் 3:6 இல் பாதாளத்தின் அக்கினிக்கு உருவகமாக இருக்கிறது. “சூளை” என்பது என்ன என்று தெரியவில்லை என்றால் “அடுப்பு” என்ற வார்த்தையை உபயோகப்படுத்தலாம்.
அழுகையும் பற்கடிப்பும் இருக்கும் இடம்
“துன்மார்க்கர் அழுதும் பற்கடிக்கும் இடம்”
Matthew 13:51-53
இயேசு தன் சீடர்களோடு ஒரு வீட்டுக்குள் போய் பரலோக ராஜ்ஜியத்தின் உவமைகளைத் தொடர்ந்து விவரித்தார்.
“இந்தக் காரியங்களைப் புரிந்துகொண்டீர்களா?” சீடர்கள் அவரிடம், “ஆம்” என்று சொன்னார்கள்.
தேவையென்றால், செய்யப்பாட்டு வினையாக: “இவையெல்லாம் புரிந்ததா என்று இயேசு அவர்களைப் பார்த்து கேட்டார். அதற்கு அவர்கள் சொன்னார்கள்.”
சீடனாய் மாறுவது
“...குறித்துக் கற்றுக்கொண்டு”
பொக்கிஷம்
பொக்கிஷம் என்பது மிகவும் விலையேறப்பெற்ற, மதிப்புமிக்க, சேகரிக்கப்பட்ட பொருட்கள். இங்கு, இவைகள் சேகரிக்கப்பட்டுள்ள இடத்தைக் குறிக்கலாம், “பொக்கிஷச்சாலை” அல்லது “சேமிப்புக்கிடங்கு.”
Matthew 13:54-56
இயேசுவின் சொந்த ஊரில் அவர் ஜெப ஆலயத்தில் கற்பிக்கும்போது எவ்வாறு அவர் சொந்த மக்களால் மறுக்கப்பட்டார் என்பதன் கணக்கு இது.
தனது சொந்த இடம்
“சொந்த ஊர்” (UDB பார்)
அவர்களது ஜெபாலயத்தில்
“அவர்கள்” என்ற பிரதிப்பெயர் அவ்விடத்தின் மக்களைக்குறிக்கிறது.
அவர்கள் மலைத்துப்போயினர்
“அவர்கள் அதிசயித்துப்போயினர்”
இந்த அற்புதங்கள்
“இந்த அற்புதங்களைச் செய்ய எங்கிருந்து இவருக்கு வல்லமைக் கிடைக்கிறது”
தச்சனுடைய மகன்
மரத்திலிருந்தோ அல்லது கற்களிலிருந்தோ பொருட்களைச் செய்கிறவன் தச்சன் ஆவான். “தச்சன்” யார் என்பதுத் தெரியவில்லை என்றால், “கட்டுபவன்” என்ற வார்த்தை உபயோகப்படுத்தலாம்.
Matthew 13:57-58
இயேசுவின் சொந்த ஊரில் அவர் ஜெப ஆலயத்தில் கற்பிக்கும்போது எவ்வாறு அவர் சொந்த மக்களால் மறுக்கப்பட்டார் என்பதைத் தொடர்ந்து இது சொல்லுகிறது.
அவரைக்குறித்து அவர்கள் இடறல் அடைந்தார்கள்
“இயேசுவின் சொந்த ஊர் மக்கள் அவரிடம் எதிர்த்து நின்றார்கள்” அல்லது “...அவரை ஏற்றுக்கொள்ளவில்லை”
தீர்க்கதரிசி கனமில்லாதவனல்ல
“எல்லா இடங்களிலேயும் கனம்பெற்றவன் தீர்க்கதரிசி” அல்லது “ஒரு தீர்க்கதரிசி எல்லா இடங்களிலேயும் கனம் பெறுகிறான்” அல்லது “மனுஷர் தீர்க்கதரிசியை எங்கும் கனப்படுத்துகிறார்கள்”
அவர் சொந்த நாடு
“அவர் சொந்த இடம்” அல்லது “அவர் சொந்த ஊர்”
அவர் சொந்தக் குடும்பம்
“அவர் சொந்த வீடு”
அங்கு அவர் எந்த அற்புதங்களையும் அவர் செய்யவில்லை
“இயேசு தனது சொந்த ஊரில் எந்த அற்புதங்களையும் அவர் செய்யவில்லை”
Matthew 14
Matthew 14:1-2
இங்கு சொல்லப்பட்டுள்ள சம்பவங்கள் நடக்கும் முன்பே மத்தேயு 14:03
14:11,12 வரை கூறப்பட்டுள்ள சம்பவங்கள் நடந்தது.
அந்த சமயத்தில்
“அந்த நாட்களில்” அல்லது “இயேசு கலிலேயாவில் ஊழியம் செய்து கொண்டிருந்த போது.”
ஏரோது ராஜா
ஏரோது அந்திப்பா, நான்கில் ஒரு பகுதி இஸ்ரவேலை ஆள்பவன்.
இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டு
“இயேசுவைக் குறித்த சான்றுகளைக் கேள்விப்பட்டு” அல்லது “இயேசுவின் புகழைக் குறித்துக் கேள்விப்பட்டு”
அவன் சொன்னான்
ஏரோது சொன்னான்
Matthew 14:3-5
இது ஏரோது எவ்வாறு யோவான் ஸ்நானகனைக் கொன்றான் என்பதைக் குறித்த கணக்கைச் சொல்லுகிறது. யோவானை ஏரோது பிடித்துக்கட்டி சிறைச்சாலையில் போட்டான்.
அநேகமாக, ஏரோது தனக்காக இக்காரியத்தைச் செய்ய மற்றவர்களுக்குக் கட்டளை இட்டிருக்கலாம்.
யோவானை ஏரோது பிடித்து
“ஏரோது யோவானைக் கைது செய்தான்”
யோவான் அவனிடம், “அவளை உன் மனைவியாக வைக்க நியாமில்லை, என்றான்.
“ஏனென்றால், அவளை அவனின் மனைவியாக வைக்க அவனுக்கு நியாயமில்லை என்று யோவான் அவனிடம் சொன்னான்.”
யோவான் அவனிடம் சொன்னான்
“யோவான் ஏரோதிடம் சொல்லிக்கொண்டே இருந்தான்.” (UDB பார்)
இது நியாயமில்லை
எரோதியாளை ஏரோது திருமணம் செய்யும்போது பிலிப்பு உயிரோடு இருக்கிறான் என்பதை UDB அனுமானிக்கிறது. ஆனால் மோசேயின் சட்டமும் ஒருவன் தன சகோதரனின் மனைவியைத் திருமணம் செய்வதைத் தடுக்கிறார்.
Matthew 14:6-7
இது ஏரோது யோவான் ஸ்நானகனை எவ்வாறு கொன்றான் என்பதைக் குறித்துத் தொடர்ந்து சொல்லுகிறது.
நடுவில்
பிறந்த நாள் விழாவைக் கொண்டாட வந்திருக்கும் விருந்தாளிகள் நடுவில்
Matthew 14:8-9
இது ஏரோது யோவான் ஸ்நானகனை எவ்வாறு கொன்றான் என்பதைக் குறித்துத் தொடர்ந்து சொல்லுகிறது.
தனது தாயால் போதிக்கப்பட்டபிறகு
மறு மொழிபெயர்ப்பு: “அவள் தாய் அவளுக்கு போதித்தப்பிறகு.”
போதித்து
“பயிற்சி கொடுத்து”
என்ன கேட்கவேண்டுமென்று
“என்ன கேட்கலாமென்று” என்று இதை மொழிபெயர்க்கலாம். இந்த வார்த்தைகள் மூல பாஷை கிரேக்கத்தில் இல்லை. இவைகள் இச் சம்பவத்தால் மறைத்துச் சொல்லப்படுகிறது.
அவள் சொன்னாள்
“அவள்” என்ற பிரதிப்பெயர் ஏரோதின் மகளைக் குறிக்கிறது.
தட்டு
பெரியத் தட்டு
அவளின் வேண்டுகோளின் நிமித்தம் ராஜா மிகவும் வருந்தினான்
“அவளின் வேண்டுகோள் ராஜாவை மிகவும் கலங்கச் செய்தது.”
ராஜா
ராஜா ஏரோது அந்திப்பாஸ்
Matthew 14:10-12
ஏரோது யோவான் ஸ்நானகனைக் கொலை செய்ததன் கணக்கை இது தொடர்கிறது.
அவன் தலை ஒரு தட்டின் மீது வைத்துக்கொண்டுவரப்பட்டு அந்தச் சிறு பெண்ணுக்குக் கொடுக்கப்பட்டது.
“யாரோ ஒருவன் அவன் தலையை ஒரு தட்டில் வைத்து அந்தச் சிறு பெண்ணுக்குக் கொடுத்தான்.”
தட்டு
இது ஒரு பெரிய தட்டு
சிறு பெண்
வாலிபப் பெண்ணைக் குறிக்கும் சொல்லைப் பயன்படுத்தவும்.
அவன் சீடர்கள்
“யோவானின் சீடர்கள்”
சடலம்
“செத்துப்போன சரீரம்”
அவர்கள் போய் இயேசுவிடம் சொன்னார்கள்
“யோவானின் சீடர்கள் இயேசுவிடம் சென்று யோவான் ஸ்நானகனுக்கு என்ன நடந்தது என்பதைச் சொன்னார்கள்”
Matthew 14:13-14
யோவான் ஸ்நானகன் மரித்தப் பின்பு இயேசு தனித்துச் சென்றார்
இதைக் கேள்விப்பட்டு
“யோவான் ஸ்நானகனுக்கு என்ன நடந்தது என்று கேள்விப்பட்டு” அல்லது “யோவானைக் குறித்த செய்தியைக் கேட்டார்கள்.”
அவர் பின்வாங்கி
அவர் மக்கள் நடுவிலிருந்து விலகிச் சென்றார்.
அங்கிருந்து
“அந்த இடத்திலிருந்து”
மக்கள் கூட்டத்தார் அதை கேட்டபோது
“அவர்கள் சென்றுவிட்டார்கள் என்று கேள்விப்பட்டபோது” (UDB பார்) அல்லது “அவர் சென்றுவிட்டார் என்று கூட்டத்தார் கேள்விப்பட்டபோது.”
மக்கள் கூட்டத்தார்
“மக்கள் கூட்டம்” அல்லது “மக்கள்”
பின்பு இயேசு அவர்களுக்கு முன் வந்து பெரியக் கூட்டத்தைக் கண்டார்
“அவர் அக்கறைக்கு வந்தபோது ஒரு பெரியக் கூட்டத்தைக் கண்டார்.”
Matthew 14:15
தனித்துச் சென்ற இடத்திற்கும் தன்னை பின் தொடர்ந்து வந்தவர்களை இயேசு போஷித்தார்.
சீடர்கள் அவரிடம் வந்தார்கள்
“இயேசுவின் சீடர்கள் அவரிடம் வந்தார்கள்”
Matthew 14:16-18
தனித்துச் சென்ற இடத்திற்கும் தன்னை பின் தொடர்ந்து வந்தவர்களை இயேசு போஷித்தார்.
அவர்களுக்கு தேவை ஏற்படவில்லை
“கூட்டத்திலிருந்த மக்களுக்கு தேவை ஒன்றுமே இல்லாதிருந்தது”
நீங்கள் அவர்களுக்குக் கொடுங்கள்
“நீங்கள்” என்ற வார்த்தை பன்மையில் உள்ளது.
அவர்கள் அவரிடம் சொன்னார்கள்
“சீடர்கள் இயேசுவிடம் சொன்னார்கள்”
ஐந்து அப்பத் துண்டும் இரண்டு மீன்களும்
“5 அப்பத் துண்டுகளும் 2 மீன்களும்”
என்னிடம் அவைகளைக் கொண்டுவாருங்கள்
“அப்பத் துண்டுகளையும் மீன்களையும் என்னிடம் கொண்டு வாருங்கள்”
Matthew 14:19-21
தனித்துச் சென்ற இடத்திற்கும் தன்னைப் பின்தொடர்ந்து வந்தவர்களை இயேசு போஷித்தார்.
கீழே உட்கார்ந்து
அல்லது “கீழேப் படுத்து.” உங்கள் கலாச்சாரத்தில் சாப்பிட பொதுவாக எப்படி அமருவார்கள் என்று கூறும் சொல்லைப் பயன்படுத்தவும்.
எடு
“அவர் கையில் எடுத்து.” அவர் அதைத் திருடவில்லை.
துண்டுகள்
“அப்பத்தின் துண்டுகள்”
மற்றும் பார்த்து
இது 1. பார்த்துக்கொண்டிருந்த பொழுது அல்லது 2. “பார்த்த பிறகு” என்றும் பொருள் படலாம்.
அவர்கள் எடுத்து
“சீடர்கள் அவைகளைச் சேர்த்து.”
அதை சாப்பிட்டவர்கள்
“அப்பத்தையும் மீன்களையும் சாப்பிட்டவர்கள்.”
Matthew 14:22-24
இயேசு தண்ணீரின் மேல் நடக்கிறார்.
உடனே
“இயேசு ஐந்தாயிரம் பேர்களுக்கு உணவு கொடுத்த அடுத்த கணமே”
சாயங்காலம் ஆனபோது
“சாயங்காலத்தில்” அல்லது “இருட்டானப் பிறகு”
அலைகள் நிமித்தம் கட்டுப்படுத்தமுடியாமல்
“அலைகள் படகுக்கு எதிராக வந்து மோதியது.”
Matthew 14:25-27
இயேசு தண்ணீரின் மேல் நடக்கிறார்.
அவர் கடலின் மேல் நடந்து கொண்டிருந்தார்
“இயேசு தண்ணீர்களின் மேலே நடந்தார்.
அவர்கள் மிரண்டுபோயினர்
“சீடர்கள் பயந்து போனார்கள்”
ஆவி
செத்து போன மனிதனின் உடலை விட்டுப் பிரிந்த ஆவி
Matthew 14:28-30
இயேசு தண்ணீரின் மேல் நடக்கிறார்.
பேதுரு அவருக்கு பதிலளித்தான்
“பேதுரு இயேசுவுக்கு பதிலளித்தான்”
Matthew 14:31-33
இயேசு தண்ணீரின் மேல் நடக்கிறார்.
“ஓ! அற்ப விசுவாசிகளே”
மத்தேயு 6:30 இல் எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்.
ஏன் நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள்
“நீங்கள் சந்தேகப்பட்டிருக்கக்கூடாது”
Matthew 14:34-36
இயேசு தனித்த இடத்திலிருந்த வந்த உடனே கலிலேயாவில் செய்து கொண்டிருந்த தன்னுடைய ஊழியத்தைத் தொடர்ந்தார்.
அவர்கள் மறுபக்கம் சென்ற பொழுது
“இயேசுவும் அவர் சீடர்களும் குளத்தின் மறுபக்கம் சென்றபொழுது.
கெனேசரேத்
கலிலேயா கடலின் வடமேற்கில் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர்
அவர்கள் செய்திகளை அனுப்பினர்
“அந்தப் பகுதியின் மனுஷர் செய்திகளை அனுப்பினர்”
அவர்கள் அவரைக் கெஞ்சினார்கள்
“வியாதியஸ்தர்கள் அவரைக் கெஞ்சினார்கள்”
வஸ்திரம்
“அங்கி” அல்லது “அவர் உடுத்தியிருந்தது”
Matthew 15
Matthew 15:1-3
இயேசுவுக்கும் மதத்தலைவர்களுக்கும் இடையே உண்டான சந்திப்பைக்குறித்துச் சொல்ல இங்கு துவங்குகிறது.
முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி
“முந்தின மதத் தலைவர்கள் கொடுத்த சட்டங்களை மதிக்காமல்.”
அவர்கள் கை கழுவி
அவர்கள் கை கழுவி
“சட்டம் எதிர்ப்பார்க்கிறபடி பண்டிகையில் அவர்கள் தங்கள் கைகளைக் கழுவாமல்”
Matthew 15:4-6
இயேசுவுக்கும் மதத்தலைவர்களுக்கும் இடையே உண்டான சந்திப்பைக்குறித்துச் சொல்வது இங்குத் தொடருகிறது.
யாராயினும்
“எவராயினும்” அல்லது “எவன் ஒருவன்”
தனது தகப்பனை கனம்பண்ணி
தன் தகப்பனைப் பராமரிப்பதால் மரியாதை செலுத்தி
உங்கள் பாரம்பரியத்திற்காக தேவனுடைய வார்த்தையை வெறுமையாக்கினீர்கள்
மறு மொழிபெயர்ப்பு: “நீங்கள் பாரம்பரியத்தை தேவனுடைய வார்த்தைக்கு மேலாக உயர்த்தினீர்கள்”
Matthew 15:7-9
இயேசுவுக்கும் மதத்தலைவர்களுக்கும் இடையே உண்டான சந்திப்பைக்குறித்துச் சொல்வது இங்குத் தொடருகிறது.
ஏசாயாவின் தீர்க்கதரிசனம் நன்றாக செய்தது
மறு மொழிபெயர்ப்பு: “ஏசாயா இந்த உண்மையை தனது # தீக்கதரிசனத்தில் சொல்லி இருக்கிறார்”
அவன் சொன்னபொழுது மறு மொழிபெயர்ப்பு: “தேவன் சொன்னதை அவன் சொன்னபொழுது”
இவர்கள் தங்கள் உதடுகளினால் என்னை கணம் பண்ணுகிறார்கள்
மறு மொழிபெயர்ப்பு: “இந்த மக்கள் நல்ல காரியங்கள் எல்லாவற்றையும் சொல்லுகிறார்கள்”
ஆனால் அவர்கள் இருதயமோ எனக்கு தூரமாய் இருக்கிறது
மறு மொழிபெயர்ப்பு: “ஆனால் அவர்கள் என்னை உண்மையில் நேசிப்பதில்லை.”
விருதாவாய் என்னை ஆராதிக்கிறார்கள்
மறு மொழிபெயர்ப்பு: “அவர்கள் ஆராதனை என்னில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை” அல்லது “அவர்கள் என்னை ஆராதிப்பது போல நடிக்கிறார்கள்”
மனுஷரின் கட்டளைகள்
“மனுஷர் இயற்றும் சட்டங்கள்.”
Matthew 15:10-11
இயேசு மக்களுக்கு உவமையைக் கொண்டு கற்றுக்கொடுக்கிறார்.
கேட்டு புரிந்துகொள்
இயேசு வரப்போகிற வாக்கியத்தின் முக்கியத்துவத்தைச் சொல்லுகிறார்.
Matthew 15:12-14
இயேசு மத்தேயு 15:10,11 இல் தான் சொன்ன உவமையின் பொருளை இங்கு தனது சீடர்களுக்கு விவரிக்கிறார்.
இந்தக் கூற்றை பரிசேயர்கள் கேட்டபோது வருந்தினரா?
மறு மொழிபெயர்ப்பு: “இந்தக் கூற்று பரிசேயர்களைக் கோபப்படுத்தினது?” அல்லது “இந்தக் கூற்று பரிசேயர்களை வருத்தியது?”
Matthew 15:15-17
இயேசு மத்தேயு 15:10,11 இல் தான் சொன்ன உவமையின் பொருளை இங்கு தனது சீடர்களுக்குத் தொடர்ந்து விவரிக்கிறார்.
நமக்கு
“சீடர்களாகிய நமக்கு”
கடந்துசென்ற
“போகிற”
கழிப்பிடம்
உடல் கழிவை வெளியேற்றுமிடத்திற்கான இடத்தைக் குறிக்கும் நல்ல வார்த்தை
Matthew 15:18-20
இயேசு மத்தேயு 15:10,11 இல் தான் சொன்ன உவமையின் பொருளை இங்கு தனது சீடர்களுக்குத் தொடர்ந்து விவரிக்கிறார்.
வாயிலிருந்து வருபவைகள்
“ஒரு மனிதன் சொல்லும் வார்த்தைகள்”
இருதயத்திலிருந்து வருகிறது
“ஒரு மனிதனின் உண்மையான உணர்வுகளிலிருந்தும் நினைவுகளிலிருந்தும் வருபவை”
கொலை
அப்பாவிகளைக் கொலைசெய்வது
அவமானங்கள்
“மற்றவர்கள் புண்படப் பேசப்படுபவைகள்””
கழுவாதக் கைகள்
பண்டிகையில் கழுவப்படத்தக்க கைகள்
Matthew 15:21-23
கானானிய பெண்ணின் மகளை இயேசு குணப்படுத்துகிறக் கணக்கை இது ஆரம்பிக்கிறது.
அந்தப் பகுதியிலிருந்து வந்த ஒரு கானானியப் பெண்
அப்பெண் இஸ்ரவேலுக்கு வெளியே இருக்கும் தன்னுடைய சொந்த நாட்டை விட்டு இஸ்ரவேலுக்குள் வந்து ஏசுவைக் கண்டாள்.
கானானிய பெண்
கானான் இப்பொழுது ஒரு நாடாக இல்லை: “கானானியர்கள் என்று அழைக்கப்படும் ஒரு மக்கள் கூட்டத்திலிருந்த பெண்.”
என் மகள் பிசாசினால் மிகவும் கொடுமைபடுத்தப்படுகிறாள்
“ஒரு பிசாசு என் மகளை மிகவும் கொடுமைப்படுத்துகிறது”
ஒரு வார்த்தைக் கூட பதிலாகத் தரவில்லை
“ஒன்றும் சொல்லவில்லை”
Matthew 15:24-26
இயேசு கானானிய பெண்ணின் மகளைக் குணமாக்கும் சம்பவத்தின் கணக்கை இது தொடர்கிறது.
அவள் வந்தாள்
“கானானிய பெண் வந்தாள்”
பிள்ளைகளின் அப்பம்...நாய்க் குட்டிகள்
“யூதர்களுக்கு முறையாக உள்ளவை...புறஜாதியார்கள்”
Matthew 15:27-28
இயேசு கானானிய பெண்ணின் மகளை குணமாக்கும் சம்பவத்தின் கணக்கை இது தொடர்கிறது.
தங்கள் எஜமானின் மேசையிலிருந்து விழும் அப்பத்தின் துணிக்கைகளை நாய்க் குட்டிகள் கூடத் தின்னும்
யூதர்கள் தூர வீசும் சில நல்லக் காரியங்களை புறஜாதியார் அனுபவிக்க முடிய வேண்டும்.
அவள் மகள் குணமாக்கப்பட்டாள்
“இயேசு அவள் மகளைக் குணமாக்கினார்” அல்லது “இயேசு அவள் மகளை நன்றாக ஆக்கினார்”
அந்த மணி நேரத்தில்
“அதே மணிப்பொழுதில்” அல்லது “உடனே”
Matthew 15:29-31
இது இயேசு கலிலேயா மக்களில் அநேகரை குணமாக்கும் சம்பவங்களின் கணக்கைத் துவங்குகிறது.
முடம், குருடு, ஊமை, ஊனமுற்ற மக்கள்
“நடக்கமுடியாத, பார்க்கமுடியாத, பேசமுடியாத, கைகள் கால்கள் அடிபட்டவர்கள்.” சில முந்தய எழுத்துப் படிவத்தில் இந்த வார்த்தைகள் வித்தியாசமான வரிசையில் உள்ளது.
இயேசுவின் பாதத்தில் அவர்களைக் கொண்டுவந்தார்கள்
“கூட்டத்தார் வியாதியஸ்தர்களை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்”
Matthew 15:32-35
இது இயேசு கலிலேயா மக்களில் அநேகரை போஷிக்கும் சம்பவத்தின் கணக்கைத் தொடர்கிறது.
மயங்கிடுவார்கள்
பெறக்கூடிய அர்த்தங்கள்: 1. “தற்காலிகமாக தங்களது சுயநினைவை இழந்துவிடுவார்கள் என்று பயந்ததினால்” அல்லது 2. “அவர்கள் பெலனற்றுவிடுவார்கள் என்று பயந்ததினால்”
உட்கார்ந்து
சாப்பிடும்போது மேஜை இல்லாமல் உங்களுடைய கலாச்சாரத்தில் எப்படி அமருவார்கள் என்பதைக் குறிக்கும் சொல்லைப் பயன்படுத்தவும்.
Matthew 15:36-39
இது இயேசு கலிலேயா மக்களில் அநேகரை போஷிக்கும் சம்பவத்தின் கணக்கைத் தொடர்கிறது.
அவர் எடுத்து
“இயேசு எடுத்து.” மத்தேயு 14:19 இல் மொழிபெயர்த்ததைப் போல மொழிபெயர்க்கவும்.
அவர்களுக்குக் கொடுத்தார்
“அப்பத்தின் துண்டுகளையும் மீன்களையும் கொடுத்தார்”
அவர்கள் சேகரித்தார்கள்
“சீடர்கள் சேகரித்தார்கள்”
சாப்பிட்டவர்கள்
“சாப்பிட்ட மக்கள்”
பகுதி
“நாட்டின் ஒரு பகுதி”
மகதான்
“மக்தலா” என்று சில நேரங்களில் அழைக்கப்பட்டது.
Matthew 16
Matthew 16:1-2
இயேசுவுக்கும் மதத் தலைவர்களுக்கும் உண்டான சந்திப்பை இது ஆரம்பிக்கிறது.
பரலோகம்...பரலோகம்
யூதத் தலைவர்கள் தேவனிடமிருந்து அடையாளத்தைக் கேட்டார்கள். ஆனால் இயேசு அவர்களைப் பார்க்கக்கூடிய ஆகாயத்தைப் பார்க்கச்சொன்னார். வாசகர்களுக்குப் புரியும் என்றால் தேவன் வாழுமிடத்திற்கும் ஆகாயத்திற்கும் ஒரே வார்த்தையைப் பயன்படுத்தலாம்.
சாயங்காலமானபோது
அந்த நாளில் சூரியன் மறையும் நேரம்
நல்ல காலநிலை
தெளிந்த, அமைதியான, ரம்மியமான
வானம் சிவந்து
சிவப்பான சூரிய அஸ்தமனத்தோடு ஆகாயம் வெளிச்சமாகவும் சிவப்பாகவும் இருக்கிறது
Matthew 16:3-4
இயேசுவுக்கும் மதத் தலைவர்களுக்கும் உண்டான சந்திப்பை இது தொடரச்செய்கிறது.
மோசமான காலநிலை
“மேகமூட்டமான இடியுமான காலநிலை”
இறக்கி
“அந்தகாரமும் பயங்கரமுமான”
ஒரு அடையாளமும் அதற்குக் கொடுக்கப்படாது
மறு மொழிபெயர்ப்பு: “தேவன் உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் கொடார்”
Matthew 16:5-8
இயேசு மதத்தலைவர்களிடம் சந்தித்தப்பிறகு தன் சீடர்களை எச்சரித்தார்.
புளிப்புச்சத்து
தீமையானக் கருத்துக்களும் தவறான போதனையும்
காரணம்
“விவாதம்” அல்லது “வாதம்”
Matthew 16:9-10
இயேசு மதத்தலைவர்களிடம் சந்தித்தப்பிறகு தன் சீடர்களை எச்சரித்தார்.
ஐந்து அப்பங்களை ஐயாயிரம் மக்களுக்குக் கொடுத்ததையும், பின்பு நீங்கள் எத்தனைக் கூடைகளை சேகரித்தீர்கள் என்பதையும், ஏழு அப்பங்களை நான்காயிரம் பேருக்குக் கொடுத்ததையும், பின்பு நீங்கள் எத்தனைக் கூடைகள் சேகரித்தீர்கள் என்பதையும் நினைவிலில்லையா?
இயேசு அவர்களைக் கடிந்து கொண்டார். மறு மொழிபெயர்ப்பு: “ஐந்து அப்பங்களை ஐயாயிரம் மக்களுக்குக் கொடுத்ததையும் எத்தனைக் கூடைகளை சேகரித்தீர்கள் என்பதையும், நீங்கள் புரிந்து நினைவில் வைத்திருந்திருக்க வேண்டும். ஏழு அப்பங்களை நான்காயிரம் பேருக்குக் கொடுத்ததையும், பின்பு நீங்கள் எத்தனைக் கூடைகள் சேகரித்தீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்து நினைவில் வைத்திருந்திருக்கவேண்டும்.”
Matthew 16:11-12
இயேசு மதத்தலைவர்களிடம் சந்தித்தப்பிறகு தன் சீடர்களை எச்சரித்தார்.
நான் உங்களிடத்தில் அப்பத்தைக் குறித்து தான் பேசினேன் என்று எப்படி நீங்கள் அறியாதிருந்தீர்கள்?
“உங்களிடம் அப்பத்தைக் குறித்து தான் பேசினேன் என்று நீங்கள் புரிந்திருந்திருக்க வேண்டும்.”
புளிப்புச்சத்து
தீய கருத்துக்கள் மற்றும் தவறான போதனைகள்
அவர்கள்...அவர்களுக்கு
“சீடர்கள்”
Matthew 16:13-16
இயேசு தேவனுடைய குமாரன் என்பதைப் பேதுரு ஒப்புக்கொண்டான்.
ஆனால் நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?
“ஆனால் உங்களிடம் நான் கேட்கிறேன்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?”
Matthew 16:17-18
இயேசு தேவனுடையக் குமாரன் என்ற பேதுருவின் ஒப்புதலுக்கு இயேசு பிரதியுத்திரம் சொன்னார். சீமான் யோனாவின் குமாரன் “யோனாவின் குமாரனாகிய சீமோனே” மாமிசமும் ரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை “ஒரு மனுஷனும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை” பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளுவதில்லை பெறக்கூடிய அர்த்தங்கள்: 1. “மரணத்தின் வல்லமை அதை மேற்கொள்ளுவதில்லை” (UDB பார்) 2. “ஒரு பட்டணத்தை ராணுவம் உடைத்து முன்னேறுவது போல, அது மரணத்தின் வல்லமையை உடைக்கும்.”
Matthew 16:19-20
இயேசு தேவனுடையக் குமாரன் என்ற பேதுருவின் ஒப்புதலுக்கு இயேசு பிரதியுத்திரம் சொன்னார்.
பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோல்
ஒரு வீட்டுக்குள் வேலைக்காரன் விருந்தாளிகளை வரவேற்கிறது போல தேவனுடைய பிள்ளைகளாகும்படி மக்களுக்கு வழியைத் திறக்கிற ஒரு பெலன்.
பூமியில் கட்டப்பட்டு...பரலோகத்தில் அவிழ்க்கப்பட்டு
பரலோகத்தில் செய்யப்படுவது போல மனுஷர் மன்னிக்கப்பட்டார்கள் அல்லது தண்டிக்கப்பட்டார்கள் என்று அறிவிக்க.
Matthew 16:21-23
இயேசு தன் சீடர்களுக்கு தன்னைப் பின்பற்றுவதற்கான விலையை சொல்லத் துவங்கினார்.
அந்த நேரத்திலிருந்து
தானே கிறிஸ்து என்று யாரிடமும் சொல்லவேண்டாம் என்று தனது சீடர்களுக்கு இயேசு கட்டளையிட்டப் பிறகு, தனக்கான தேவத் திட்டத்தை அவர்களோடு பகிர்ந்து கொண்டார்.
கொல்லப்பட்டு
மறு மொழிபெயர்ப்பு: “அவர்கள் அவரைக் கொன்றுபோடுவார்கள்”
மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்படுவார்.
மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்படுவார்
“மூன்றாம் நாளில், தேவன் அவரை மறுபடியும் உயிருள்ளவராக்குவார்”
Matthew 16:24-26
இயேசு தன் சீடர்களுக்கு தன்னைப் பின்பற்றுவதற்கான விலையைச் சொல்வதைத் தொடர்ந்தார்.
என்னை பின்பற்றுங்கள்
“சீடனாய் என்னோடு வாருங்கள்”
தன்னைத்தான் மறுத்து
“தன்னுடைய சொந்த விருப்பங்களுக்குத் தன்னைக் கொடாமல்” அல்லது “தன்னுடைய விருப்பங்களைத் தள்ளி.”
அவனுடைய சிலுவையை சுமந்து, என்ன பின்பற்றக்கடவன்
“தன்னுடைய சிலுவையைச் சுமந்து, என் பின்னே நடந்து,” கிறிஸ்து பாடுபடுவதற்கும் மரிப்பதற்கும் முனைந்ததைப் போல இருக்கவும்”
விரும்புபவர் யாராயினும்
“விரும்பும் யாராயினும்”
முழு உலகத்தையும் ஆதாயப்படுத்தினாலும்
“உலகத்திலுள்ள எல்லாவற்றையும் ஆதாயப்படுத்தினாலும்”
அவனுடைய வாழ்வை இழந்தால்
“அவனே தொலைந்து அல்லது அழிக்கப்பட்டு”
Matthew 16:27-28
இயேசு தன் சீடர்களுக்கு தன்னைப் பின்பற்றுவதற்கான விலையை சொல்வதைத் தொடர்ந்தார்.
மனுஷக்குமாரன் தன்னுடைய ராஜ்ஜியத்தில் வருவதைப் பார்க்காமல் மரணத்தை ருசியார்கள்
“அவர்கள் மரிக்கும் முன்பு மனுஷக்குமாரன் தன்னுடைய ராஜ்யத்தில் வருவதைக் காண்பார்கள்”
மரணத்தை ருசியார்கள்
“மரணத்தை அனுபவியார்கள்” அல்லது “மரிக்கமாட்டார்கள்”
மனுஷக் குமாரன் தன்னுடைய ராஜ்யத்தில் வருகிறார்
“என்னுடைய ராஜ்யத்தில் நான் வருகிறதைக் காணும் வரையில்”
Matthew 17
Matthew 17:1-2
இயேசு தன்னுடைய மகிமையைத் தனது சீடர்களில் மூன்று பேருக்கு காண்பிக்கிறார்.
பேதுரு, யாக்கோபு, மற்றும் அவன் சகோதரன் யோவான்
“பேதுரு, யாக்கோபு, மற்றும் யாக்கோபின் சகோதரன் யோவான்”
அவர் மறுரூபமானார்
“தேவன் இயேசுவின் தோற்றத்தை முற்றிலும் மாற்றினார்”
துணிகள்
“உடுப்புகள்”
வெளிச்சத்தைப் போல ஒளிமயமானது
“வெளிச்சத்தைப் போல பிரகாசித்தது”
Matthew 17:3-4
இயேசு தன்னுடைய மகிமையை தனது சீடர்களில் மூன்று பேருக்கு காண்பிக்கிற சம்பவம் தொடர்கிறது.
இதோ
இந்த வார்த்தை வரப்போகிற அதிசயமான தகவலுக்கு நம்மை கவனம் கொள்ளச்செய்கிறது.
அவர்களுக்கு
இயேசுவோடு இருந்த சீடர்களுக்கு
பதிலளித்துச் சொன்னது
“சொன்னது.” பேதுரு கேள்விக்கு பதிலளிக்கவில்லை.
நாம் இங்கிருப்பது நல்லது
பெறக்கூடிய அர்த்தங்கள்: 1. “உம்முடைய சீடர்களாகிய நாங்கள் உம்மோடும், மோசேயோடும், மற்றும் எலியாவோடும் இங்கிருப்பது நன்றாக இருக்கிறது” அல்லது 2. நீரும், மோசேயும், எலியாவும், சீடர்களாகிய நாங்களும் இங்கிருப்பது நன்றாக உள்ளது.”
கூடாரங்கள்
பெறக்கூடிய அர்த்தங்கள்: 1. ஆராதிக்க மக்கள் வரும் இடம் (UDB பார்) அல்லது 2. மக்கள் உறங்குவதற்கான தற்காலிகமான இடம்.
Matthew 17:5-8
இயேசு தன்னுடைய மகிமையைத் தனது சீடர்களில் மூன்று பேருக்கு காண்பிக்கிற சம்பவம் தொடர்கிறது.
இதோ
இந்த வார்த்தை வரப்போகிற அதிசயமான தகவலுக்கு நம்மை கவனம் கொள்ளச்செய்கிறது.
முகம் குப்புற விழுந்தார்கள்
“சீடர்கள் தங்கள் முகங்கள் தரையில் இருக்கப் பணிந்து கொண்டார்கள்”
Matthew 17:9-10
இயேசு தன்னுடைய மகிமையைத் தனது சீடர்களில் மூன்று பேருக்கு காண்பிக்கிற சரிதைத் தொடர்கிறது.
அவர்கள்
“இயேசுவும் சீடர்களும்”
Matthew 17:11-13
இயேசு தன்னுடைய மகிமையைத் தனது சீடர்களில் மூன்று பேருக்கு காண்பிக்கிற சரிதைத் தொடர்கிறது. மத்தேயு 17:9,10 இல் உள்ள கேள்விகளுக்கு இயேசு பதிலளிக்கிறார்.
எல்லாவற்றையும் சீர்ப்படுத்து
“எல்லாவற்றையும் ஒழுங்குப்படுத்து”
அவர்கள்...அவர்கள்...அவர்கள்
பெறக்கூடிய அர்த்தங்கள்: 1. யூதத் தலைவர்கள் (UDB பார்) அல்லது 2. எல்லா யூத மக்களும்.
Matthew 17:14-16
இயேசு அசுத்தாவி பிடித்திருந்த ஒரு மகனைக் குணப்படுத்தும் சரிதையை இது ஆரம்பிக்கிறது.
இழுப்பு நோயாளியாய் இருக்கிறான்
சில நேரம் நினைவிழந்துவிடுகிறான்; கட்டுப்படுத்தமுடியாத நிலைக்குப் போகிறான்.
Matthew 17:17-18
இயேசு அசுத்தாவி பிடித்திருந்த ஒரு மகனைக் குணப்படுத்தும் சரிதையை இது தொடர்கிறது.
எத்தனை நேரம் நான் உங்களோடு தங்கி இருப்பது? எத்தனை நேரம் நான் உங்களைச் சுமப்பது?
இயேசு மக்கள் நிமித்தம் சங்கடமாயிருந்தார். மறு மொழிபெயர்ப்பு: “நான் உங்களோடு இருந்து களைத்து விட்டேன்! உங்கள் அவிசுவாசத்தையும் நேர்மையின்மையையும் பார்த்துக் களைத்துவிட்டேன்!”
Matthew 17:19-21
இயேசு அசுத்தாவி பிடித்திருந்த ஒரு மகனைக் குணப்படுத்தும் சரிதையை இது தொடர்கிறது.
நாங்கள்
பேசுபவர்கள், கேட்பவர்களல்ல
வெளியேற்று
“பிசாசை வெளியே கொண்டு வாருங்கள்”
உங்களால் செய்யக்கூடாதது ஒன்றும் இல்லை
“எதையும் செய்ய உங்களால் கூடும்”
Matthew 17:22-23
கலிலேயாவில் தன சீடர்களுக்கு கற்றுக் கொடுப்பத்தை இயேசு தொடர்ந்தார்.
அவர்கள் தங்கினார்கள்
“சீடர்களும் ஏசுவும் தங்கினார்கள்”
மனுஷக்குமாரன் ஒப்புக்கொடுக்கப்படுவார்”
மறு மொழிப்பெயர்ப்பு: “யாரோ மனுஷக் குமாரனை ஒப்புவிப்பர்”
அவர்கள் அவரைக் கொன்றுபோடுவார்கள்
“அதிகாரிகள் மனுஷக்குமாரனைக் கொன்றுபோடுவார்கள்”
அவர் எழுப்பப்படுவார்
“தேவன் அவரை எழுப்புவார்” அல்லது “அவர் உயிரோடு மறுபடியும் வருவார்”
Matthew 17:24-25
ஆலய வரி இயேசு செலுத்துவதன் சரிதை சொல்ல இது ஆரம்பிக்கிறது.
அவர்கள் ...பொழுது
இயேசுவும் சீடர்களும் ...பொழுது
வரியாக அரை வெள்ளிப்பணம்
யூத ஆண்கள் தாங்கள் முதன்முதலாக செலுத்தவேண்டிய வரி தேவனுக்குக் கொடுக்கும் காணிக்கை தான்.
வீடு
இயேசு தங்கியிருந்த இடம்
பூமியின் ராஜாக்கள்
பொதுவாக தலைவர்கள்
கீழ்பட்டவர்கள்
ஆள்பவனுக்கு அல்லது ராஜாவுக்குக் கீழ் உள்ளவர்கள்
Matthew 17:26-27
ஆலய வரி இயேசு செலுத்துவதன் சரிதை சொல்ல இது ஆரம்பிக்கிறது.
கீழ்பட்டவர்கள்
ஆள்பவனுக்கு அல்லது ராஜாவுக்குக் கீழ் உள்ளவர்கள்
அதன் வாய்
“மீனின் வாய்”
அதை எடு
“வெள்ளிப்பணத்தை எடு”
Matthew 18
Matthew 18:1-3
இயேசு சீடர்களுக்காக ஒரு சிறுக் குழந்தையை எடுத்துக்காட்டாக பயன்படுத்துகிறார்.
குழந்தைகளைப் போல் ஆகுங்கள்
“குழந்தைகள் செய்யும் வழியை நினையுங்கள்”
Matthew 18:4-6
இயேசு சீடர்களுக்காக ஒரு சிறு குழந்தையை எடுத்துக்காட்டாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.
ஒரு சிறு குழந்தையைப் போல தன்னைத் தான் தாழ்த்துகிற எவனும்
“ஒரு சிறு குழந்தை தாழ்மையாய் இருப்பதைப் போல தன்னைத் தான் தாழ்த்துகிற எவனும்”
ஒரு பெரிய ஏந்திரக்கல்லை அவன் கழுத்தில் கட்டிக் கடலின் ஆழத்தில் மூழ்கடிக்கப்படவேண்டும்
“ஒரு பெரிய ஏந்திரக்கல்லை அவர்கள் அவன் கழுத்தில் கட்டி கடலின் ஆழத்தில் மூழ்கடிக்கப்படச் செய்யவேண்டுமானால்”
ஏந்திரக்கல்
கோதுமையை மாவாக அரைக்கப் பயன்படும் வட்டமான, பெரிய கனமானக் கல். மறு மொழிபெயர்ப்பு: “கனமானக் கல்”
Matthew 18:7-9
இயேசு சீடர்களுக்காக ஒரு சிறுக் குழந்தையை எடுத்துக்காட் டாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.
உன் கை
இயேசு தன்னைக் கேட்டுக்கொண்டிருப்பவர்களை ஒருவனைப் போல பாவித்துப் பேசுகிறார்.
Matthew 18:10-11
இயேசு சீடர்களுக்காக ஒரு சிறுக் குழந்தையை எடுத்துக்காட்டாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.
அருவருப்பு
“நிச்சயமாக வெறுக்கிறது” அல்லது “முக்கியமல்ல என்று நினைக்கிறது”
அவர்களின் தூதர்கள்
“பிள்ளைகளின் தூதர்கள்”
எப்பொழுதும் முகத்தை நோக்கி
“எப்பொழுதும் நெருக்கமாய்”
Matthew 18:12-14
இயேசு சீடர்களுக்காக ஒரு சிறுக் குழந்தையை எடுத்துக்காட்டாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
“மக்கள் எவ்வாறு நடக்கிறார்கள் என்று நினை.”
அவன் கடந்து சென்று போகமாட்டானா...மற்றும் தேடிச் செல்லமாட்டானா?
“அவன் எப்பொழுதும் விட்டுப் போவான்...மற்றும் தேடிச் செல்வான்....”
தொண்ணுற்று ஒன்பது
“99”
இந்த சிறியவரில் ஒருவர் கூட கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவின் சித்தமல்ல
“பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா இந்த சிறியர் எல்லாம் வாழவேண்டும் என்று விரும்புகிறார்”
Matthew 18:15-16
இயேசு மனந்திரும்புதலைப் பற்றியும் பாவமன்னிப்பைப் பற்றியும் போதிக்கத் துவங்கினார்.
உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொள்ளுவாய்
“உன்னுடைய சகோதரனோடு உள்ள உறவை மறுபடியம் சீர்ப்படுத்திக்கொள்ளுவாய்”
வாயினால்
“வாயிலிருந்து” வரும் சாட்சிகளின் வார்த்தைகள் மூலமாக
Matthew 18:17
இயேசு மனந்திரும்புதலைப் பற்றியும் பாவமன்னிப்பைப் பற்றியும் போதிப்பதைத் தொடர்ந்தார்.
அவர்களுக்கு செவிகொடுக்க
சாட்சிகளுக்குச் செவிகொடுக்க
ஒரு புறஜாதியானும், வரி வசூலிப்பவனும் எப்படியோ அப்படியே அவனும் உனக்கு இருக்கட்டும்.
“நீ ஒரு புறஜாதியானையும் வரி வசூலிப்பவனையும் நடத்துவதைப் போல அவனையும் நடத்து”
Matthew 18:18-20
இயேசு மனந்திரும்புதலைப் பற்றியும் பாவமன்னிப்பைப் பற்றியும் போதிப்பதைத் தொடர்ந்தார்.
கட்டுக்கிறது...கட்டினது...கட்டவிழ்க்கிறது...கட்டவிழ்த்தது
மத்தேயு 16:19 இல் மொழிபெயர்த்ததைப் போல மொழிபெயர்க்கவும்.
கட்டப்படும்...கட்டவிழ்க்கப்படும்
மறு மொழிபெயர்ப்பு: “தேவன் கட்டுவார்...தேவன் கட்டவிழ்ப்பார்.”
அவர்கள்...அவர்களுக்கு
“உங்களில் இரண்டு” பேர்
இரண்டு அல்லது மூன்று
“இரண்டு அல்லது அதற்கு மேல்” அல்லது “இரண்டாகிலும்”
கூடி
“சந்தித்து”
Matthew 18:21-22
இயேசு மனந்திரும்புதலைப் பற்றியும் பாவமன்னிப்பைப் பற்றியும் போதிப்பதைத் தொடர்ந்தார்.
ஏழு முறை
“7 முறைகள்”
ஏழு எழுபது முறை
பெறக்கூடிய அர்த்தங்கள்: 1. “70 முறை 7” (UDB) அல்லது 2. “77 முறை” (UDB). எண்களை உபயோகித்தால் குழப்பும் என்று கருதினால், “நீங்கள் எண்ணுவதற்கு மேல்” என்று மொழிபெயர்க்கவும் (UDB).
Matthew 18:23-25
இயேசு மனந்திரும்புதலைப் பற்றியும் பாவமன்னிப்பைப் பற்றியும் போதிப்பதைத் தொடர்ந்தார்.
ஒரு வேலைக்காரன் கொண்டுவரப்பட்டான்
மறு மொழிபெயர்ப்பு: “ராஜாவின் வேலைக்காரரில் ஒருவனை யாரோ ஒருவன் கொண்டுவந்தான்”
பத்தாயிரம் தாலந்துகள்
“10,000 தாலந்துகள்” அல்லது “ஒரு வேலைக்காரன் திரும்பக் செலுத்த முடியாத அளவு பணம்”
அவன் எஜமான் அவனை விற்கும்படி கட்டளையிட்டான்,...செலுத்தவேண்டிய பணம் செலுத்தப்படும்
“அந்த மனிதனை விற்கும்படி ராஜ அவன் வேலைக்காரர்களுக்குக் கட்டளையிட்டான்...விற்பனையிலிருந்து வரும் பணத்தைக் கொண்டு கடனைக் கட்டும்படி”
Matthew 18:26-27
இயேசு மனந்திரும்புதலைப் பற்றியும் பாவமன்னிப்பைப் பற்றியும் போதிப்பதைத் தொடர்ந்தார்.
தாழ விழுந்து, பணிந்து கொண்டு
“மண்டியிட்டு, தலை வணங்கினான்”
அவனுக்கு முன்பாக
“ராஜாவுக்கு முன்பாக”
அவனை விடுவித்தான்
“அவனைப் போக விட்டான்”
Matthew 18:28-29
இயேசு மனந்திரும்புதலைப் பற்றியும் பாவமன்னிப்பைப் பற்றியும் போதிப்பதைத் தொடர்ந்தார்.
நூறு வெள்ளிப்பணம்
“100 வெள்ளிப்பணம்” அல்லது “நூறு நாள் கூலி”
பிடித்து
“எடுத்துப் பிடித்து” அல்லது “கைப்பற்றி” (UDB)
தாழ விழுந்து...என்னோடு பொறுமையாக இருங்கள், நான் உங்களுக்கு திரும்பக் கொடுப்பேன்
“தாழ விழுந்து...என்னோடு பொறுமையாக இருங்கள், நான் உங்களுக்கு திரும்பக் கொடுப்பேன்” என்று மத்தேயு 18:26 இல் மொழிபெயர்த்ததைப் போல மொழிபெயர்க்கவும்.
Matthew 18:30-31
இயேசு மனந்திரும்புதலைப் பற்றியும் பாவமன்னிப்பைப் பற்றியும் போதிப்பதைத் தொடர்ந்தார்.
Matthew 18:32-33
இயேசு மனந்திரும்புதலைப் பற்றியும் பாவமன்னிப்பைப் பற்றியும் போதிப்பதைத் தொடர்ந்தார்.
பின்பு அந்த வேலைக்காரனின் எஜமான் அவனை அழைத்தான்
“பின்பு அந்த ராஜா தன்னுடைய முதல் வேலைக்காரனை அழைத்தான்”
நீ செய்யவேண்டாமா
“நீ செய்திருக்கவேண்டும்”
Matthew 18:34-8
இயேசு மனந்திரும்புதலைப் பற்றியும் பாவமன்னிப்பைப் பற்றியும் போதிப்பதைத் தொடர்ந்தார்.
Matthew 18:9-35
இயேசு சீடர்களுக்காக ஒரு சிறுக் குழந்தையை எடுத்துக்காட்டாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.
பிடுங்கி எறிந்துவிடு
இந்தக் கூற்று அவ்விசுவாசத்தின் கூர்மையையும் அதனை எக்காரணத்தைக்கொண்டாகிலும் தவிர்க்கவேண்டிய அவசியத்தையும் காண்பிக்கிறது.
ஜீவனுக்குள் பிரவேசித்து
“நித்திய ஜீவனுக்குள் பிரவேசித்து”
Matthew 19
Matthew 19:1-2
இயேசு கலிலேயாவை விட்டு யூதேயாவில் போதிக்கத் துவங்கினார்.
இப்படியாக
கதையில் ஒரு புதுப் பகுதியைக் குறிக்க உங்கள் மொழியில் வழி இருக்குமானால் இங்கு பயன்படுத்தப் பார்க்கவும்.
இந்த வார்த்தைகள்
...ளுடைய வார்த்தைகள்
இருந்து பிரிந்து
“எங்களை விட்டு நடந்து” அல்லது “விட்டு”
எல்லைகளுக்குள்ளே
“பகுதிக்குள்ளே”
Matthew 19:3-4
இயேசு திருமணத்தைக் குறித்தும் விவாகரத்தைக் குறித்தும் போதிக்கத் துவங்கினார்.
அவரிடம் வந்து
“இயேசுவிடம் வந்து”
நீங்கள் வாசித்ததில்லையா...?
இயேசு பரிசேயர்கள் வெட்கப்படும்படி விரும்பினார்.
Matthew 19:5-6
இயேசு திருமணத்தைக் குறித்தும் விவாகரத்தைக் குறித்தும் போதிக்கத் துவங்கினார்.
அவர் சொன்னார்...?
மத்தேயு 19:3 இல் உள்ள கேள்வி இங்கு தொடர்கிறது: “அவர் சொன்னவற்றை நீங்கள் வாசித்ததில்லையா...?
மனைவியோடு சேர்ந்திருப்பான்
“மனைவியின் அருகில் தங்கி இருப்பான்”
ஒரே சரீரம்
“ஒரு மனிதன்”
Matthew 19:7-9
இயேசு திருமணத்தைக் குறித்தும் விவாகரத்தைக் குறித்தும் போதிக்கத் துவங்கினார்.
அவர்கள் அவரிடம் சொன்னார்கள்
“பரிசேயர்கள் இயேசுவிடம் சொன்னார்கள்”
எங்களுக்குக் கட்டளையிடும்
“யூதர்களாகிய எங்களுக்குக் கட்டளையிடும்”
விவாகரத்தின் பத்திரம்
திருமணத்தை சட்டப்படி முடித்துவைக்கும் சான்று
துவக்கத்திலிருந்து இது அந்த வழி அல்ல
“தேவன் மனிதனையும் மனுஷியையும் படைத்த பொழுது, அவர்களுடைய விவாகரத்துக்கு அவர் திட்டம் இடவில்லை”
வேசித்தனத்தினிமித்தம் மாத்திரம்
“பாலியல் நம்பிக்கைக்கேட்டைத்தவிர”
விவாகரத்துப் பண்ண[பட்ட ஒருத்தியை திருமணம் செய்பவன் விபச்சாரம் செய்கிறான்
பல முந்தய எழுத்துப் படிவம் இந்த வார்த்தைகளைக் கொண்டில்லை
Matthew 19:10-12
இயேசு திருமணத்தைக் குறித்தும் விவாகரத்தைக் குறித்தும் போதிக்கத் துவங்கினார்
தங்கள் தாயின் கருவிலிருந்து பிறந்த அண்ணகர்கள்
“செயல்படும் பாலின உறுப்பில்லாமல் பிறக்கும் ஆண் குழந்தைகள்”
அண்ணகர்களாகத் தங்களை ஆக்கிக்கொண்டவர்கள்
பெறக்கூடிய அர்த்தங்கள்: 1. “தங்களுடைய பிறப்புறுப்பை அறுத்துக்கொண்டவர்கள்” அல்லது 2. “திருமணம் செய்யாமல் பாலின சுத்தம் உடையவர்களாக இருக்கத் தெரிந்துகொண்டவர்கள்”
பரலோக ராஜியத்திற்க்காக
“அதினால் தேவனுக்கு இன்னும் நன்றாக தொண்டு செய்ய”
இந்த உபதேசத்தைப் பெற்று...அதைப் பெற்றுகொண்டு
19:11 இல் உள்ள “இந்த போதகத்தை ஏற்று...அதை ஏற்றுக்கொண்டு” என்றதை எவ்வாறு மொழிபெயர்த்துள்ளீர்கள் என்று பார்க்கவும்.
Matthew 19:13-15
மக்கள் குழந்தைகளை இயேசுவிடம் கொண்டு வந்தார்கள்
சில சிறுக் குழந்தைகளை அவரிடம் கொண்டு வந்தார்கள்
மாற்று மொழிபெயர்ப்பு: “சிலர் சிறுக் குழந்தைகளை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்.”
அனுமதித்து
“விடு”
என்னிடம் அவர்கள் வருவதை தடுக்காதிருங்கள்.
“என்னிடம் அவர்கள் வருவதை நிறுத்தாதிருங்கள்.”
பரலோக ராஜ்யம் இப்படிப்பட்டவர்களுடையது
“பரலோக ராஜ்யம் இவர்களைப் போல இருப்பவர்களுடையாது” அல்லது “இந்த சிறுக் குழந்தைகளைப் போல இருப்பவர்கள் மாத்திரமே பரலோக ராஜியத்திற்க்குள் பிரவேசிக்கமுடியும்”
Matthew 19:16-17
இயேசு உலகத்தின் செல்வங்களைக் குறித்தும் பரலோகத்தில் இருக்கும் வெகுமதிகளைக் குறித்தும் பேசத்தொடங்கினார்.
இதோ
எழுத்தாளர் ஒரு புதிய மனிதனை கதையினுள் கொண்டுவருகிறார். உங்கள் மொழியில் இதை செய்ய வழி இருக்கலாம்.
நல்ல காரியம்
தேவனைப் பிரியப்படுத்தும் காரியம்
ஒன்றுமட்டுமே நல்லது
“தேவன் மாத்திரமே முற்றிலும் நல்லவர்”
Matthew 19:18-19
இயேசு உலகத்தின் செல்வங்களைக் குறித்தும் பரலோகத்தில் இருக்கும் வெகுமதிகளைக் குறித்தும் பேசத்தொடங்கினதைத் தொடர்ந்தார்.
Matthew 19:20-22
இயேசு உலகத்தின் செல்வங்களைக் குறித்தும் பரலோகத்தில் இருக்கும் வெகுமதிகளைக் குறித்தும் பேசத்தொடங்கினதைத் தொடர்ந்தார்.
விருப்பம்
“தேவை”
Matthew 19:23-24
இயேசு உலகத்தின் செல்வங்களைக் குறித்தும் பரலோகத்தில் இருக்கும் வெகுமதிகளைக் குறித்தும் பேசத்தொடங்கினதைத் தொடர்ந்தார்.
தேவனுடைய ராஜ்யத்தில் பணக்காரன் பிரவேசிப்பதைப் பார்க்கிலும் ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்.
பணக்காரர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறது கடினமானக் காரியம்.
ஊசியின் கண்
ஊசியின் முடிவிலே நூல் செலுத்துவதற்க்கான ஒரு ஓட்டை
Matthew 19:25-27
இயேசு உலகத்தின் செல்வங்களைக் குறித்தும் பரலோகத்தில் இருக்கும் வெகுமதிகளைக் குறித்தும் பேசத்தொடங்கினதைத் தொடர்ந்தார்.
அவர்கள் மிகவும் அசந்துபோனார்கள்
“சீடர்கள் அதிசயித்துப் போனார்கள்”
பின்னே யார் இரட்சிக்கப்படக்கூடும்?
பெறக்கூடிய அர்த்தங்கள்: 1. அவர்கள் ஒரு பதிலுக்காக எதிர்ப்பார்த்தார்கள் அல்லது 2. மறு மொழிபெயர்ப்பு: “பின்னே ஒருவரும் இரட்சிக்கப்படமுடியாது!”
நாங்கள் எல்லாவற்றையும் விட்டோம்
“எங்களுடைய எல்லா சம்பத்தையும் விட்டோம்” அல்லது “எங்களுடையது எல்லாவற்றையும் நாங்கள் விட்டுக்கொடுத்துவிட்டோம்”
பின்பு நாங்கள் என்ன வைத்திருப்போம்
“என்ன நல்ல காரியங்கள் தேவன் எங்களுக்குக் கொடுப்பார்”
Matthew 19:28
இயேசு உலகத்தின் செல்வங்களைக் குறித்தும் பரலோகத்தில் இருக்கும் வெகுமதிகளைக் குறித்தும் பேசத்தொடங்கினதைத் தொடர்ந்தார்.
மறுபிறப்பில்
“எல்லாம் புதுமையாய் மாற்றப்படும் போது” அல்லது “புதியக் காலத்தில்”
பன்னிரண்டு சிங்காசனத்தில் உட்கார்ந்து, நியாயந்தீர்த்துக்கொண்டு
“...மேல் ராஜாக்களாகவும் நியாயாதிபதிகளாகவும்”
Matthew 19:29-30
இயேசு உலகத்தின் செல்வங்களைக் குறித்தும் பரலோகத்தில் இருக்கும் வெகுமதிகளைக் குறித்தும் பேசத்தொடங்கினதைத் தொடர்ந்தார்.
நூறத்தனையைப் பெற்று
“அவர்கள் விட்டுக்கொடுத்த பல நல்ல காரியங்களை நூறு மடங்கு பெற்று”
இப்பொழுது முந்தினவர்களாக இருப்பவர்கள் பிந்தினவர்களாக இருப்பார்கள்
செல்வந்தரைப் போலவும் மற்றவரை ஆளுகிறவர்கள் போலவும், உலகத்தின் கண்களில் முந்தினவராய் இருக்கிற அநேகர், தேவனுடைய ராஜ்யத்தில் பிந்தினோராய் இருப்பார்கள்.
Matthew 20
Matthew 20:1-2
இயேசு, ஒரு மனிதன் தன் வேலையாட்களுக்கு கூலி கொடுப்பதைப்பற்றிய உவமையைச் சொல்லத் துவங்கினார்.
பரலோக ராஜ்ஜியம் ஒரு நில உரிமையாளனக்கு சமம்.
ஒரு நில உரிமையாளன் தன் நிலத்தை ஆள்வதுபோல தேவன் எல்லாவற்றையும் ஆள்கிறார்.
பரலோக ராஜ்ஜியம் இப்படிப்பட்டது
மத்தேயு 13:24 இல் உள்ளததை எவ்வாறுரு மொழிபெயர்த்தீர் என்பதைப் பார்க்கவும்.
அவன் ஒப்புக்கொண்ட பிறகு
“நில உரிமையாளன் ஒப்புக்கொண்ட பிறகு”
ஒரு பணம்
“ஒரு நாள் கூலி”
Matthew 20:3-4
இயேசு, ஒரு நில உரிமையாளன் தன் வேலையாட்களுக்கு கூலி கொடுப்பதைப்பற்றிய உவமையைச் சொல்லத் துவங்கியதைத் தொடர்ந்தார்.
அவன் மறுபடியும் வெளியே சென்றான்
“நில உரிமையாளன் மறுபடியும் வெளியே சென்றான்”
வெறுமெனே நின்றுகொண்டு
“எதுவும் செய்யாமல்” அல்லது “வேலையில்லாதவன்”
Matthew 20:5-7
இயேசு, ஒரு நில உரிமையாளன் தன் வேலையாட்களுக்கு கூலி கொடுப்பதைப்பற்றிய உவமையைச் சொல்லத் துவங்கியதைத் தொடர்ந்தார்.
அவன் மறுபடியும் வெளியே சென்றான்
“நில உரிமையாளன் மறுபடியும் வெளியே சென்றான்”
வெறுமெனே நின்றுகொண்டு
“எதுவும் செய்யாமல்” அல்லது “எந்த வேலையும் இல்லாமல்”
Matthew 20:8-10
இயேசு, ஒரு நில உரிமையாளன் தன் வேலையாட்களுக்கு கூலி கொடுப்பதைப்பற்றிய உவமையைச் சொல்லத் துவங்கியதைத் தொடர்ந்தார்.
அவர்களில் ஒவ்வொருவரும்
“பதினோராம் மணி நேரத்தில் வேலை செய்ய தொடங்கின வேலையாட்களுள் ஒவ்வொருவரும்”
ஒரு பணம்
“ஒரு நாள் கூலி”
அவர்கள் நினைத்தார்கள்
“நிறைய நேரம் வேலை செய்தவர்கள் நினைத்தார்கள்”
Matthew 20:11-12
இயேசு, ஒரு நில உரிமையாளன் தன் வேலையாட்களுக்கு கூலி கொடுப்பதைப்பற்றிய உவமையைச் சொல்லத் துவங்கியதைத் தொடர்ந்தார்.
அவர்கள் பெற்றுக்கொண்டபோது
“நிறைய நேரம் வேலை செய்தவர்கள் பெற்றுக்கொண்டபோது”
சொத்தின் உரிமையாளன்
“நில உரிமையாளன்” அல்லது “திராச்சைத்தோட்டத்தின் உரிமையாளன்”
இந்த நாளின் பாரத்தையும் சூட்டின் கொடுமையையும் நாங்கள் தான் சகித்தோம்
“நாங்கள் முழு நாளும் இந்த பயங்கர வெயிலில் வேலை செய்தோம்”
Matthew 20:13-14
இயேசு, ஒரு நில உரிமையாளன் தன் வேலையாட்களுக்கு கூலி கொடுப்பதைப்பற்றிய உவமையைச் சொல்லத் துவங்கியதைத் தொடர்ந்தார்.
அவர்களில் ஒருவன்
“நிறைய நேரம் வேலை செய்தவர்களுள் ஒருவன்”
நண்பன்
பொறுமையாக ஒரு மனிதனை மற்றவன் கடிந்துகொள்ளும்போது அவனைப்பார்த்து கடிந்துகொள்பவன் எப்படி அழைப்பானோ அந்த வார்த்தையைப் பயன்படுத்தவும்
ஒரு பணத்துக்கு சம்மதிக்கவில்லையா?
மறு மொழிபெயர்ப்பு: “நான் உனக்கு ஒரு பணம் தருவதற்கு நாம் முன்பே ஒப்புக்கொண்டாயிற்று.”
ஒரு பணம்
“ஒரு நாள் கூலி”
கொடுப்பது என்னுடைய விருப்பம்
“கொடுக்கிறது என்னை சந்தோஷப்படுத்துகிறது” அல்லது “நான் கொடுப்பதற்கு இரம்மியப்படுகிறேன்”
Matthew 20:15-16
இயேசு, ஒரு நில உரிமையாளன் தன் வேலையாட்களுக்கு கூலி கொடுப்பதைப்பற்றிய உவமையைச் சொல்லத் துவங்கியதைத் தொடர்ந்தார்.
என்னுடைய பொருட்களை வைத்து நான் விரும்புவதைச் செய்கிறது எனக்கு தகுந்தது அல்லவா?
மறு மொழிபெயர்ப்பு: “என்னுடைய பொருட்களை வைத்து நான் விரும்புவதைச் நான் செய்யலாம்.”
தகுந்த
“சட்டத்திற்குட்பட்ட” அல்லது “நேர்மையான” அல்லது “சரியான”
நான் நல்லவனாக இருப்பதால் உங்கள் கண்கள் வன்கண் ஆயிற்றோ?
“தகுதியில்லாதவர்க்கு நான் நன்மை செய்கிறதினால் நீங்கள் வருத்தப்படலாகாது.”
Matthew 20:17-19
இயேசு தனது சீடர்களும் எருசலேமுக்குப் பிரயாணம் பண்ணுகையில் அவர்களுக்கு போதிக்கத் துவங்கியதைத் தொடர்ந்தார்.
நாங்கள் போய்க்கொண்டிருக்கிறோம்
இயேசு தனது சீடர்களையும் சேர்த்துக்கொண்டார்.
மனுஷக் குமாரன் ஒப்புக்கொடுக்கப்படுவார்
மறு மொழிபெயர்ப்பு: “ஒருவன் மனுஷக் குமாரனை ஒப்புக்கொடுப்பான்”
அவர்கள் குற்றப்படுத்துவார்கள்...புறஜாதிகள் கேலி செய்யும்படி அவர்களிடம் அவரை
ஒப்புக்கொடுப்பார்கள் பிரதான ஆசாரியர்களும் வேதபாரகரும் அவரை குற்றப்படுத்தி புறஜாதிகளிடத்தில் அவரை ஒப்புக்கொடுப்பார்கள், புறஜாதியார் அவரை கேலி செய்வர்
அவர் எழுப்பப்படுவார்
மறு மொழிபெயர்ப்பு: “தேவன் அவரை எழுப்புவார்”
Matthew 20:20-21
இரண்டு சீடர்களின் தாய் இயேசுவிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறார்.
உம்முடைய வலது கைப்பக்கத்தில்...உம்முடைய இடது கைப்பக்கத்தில்
அதிகாரமுள்ள இடங்களில்
Matthew 20:22-24
இயேசு இரண்டு சீடர்களின் தாய்க்கு பதில் கொடுக்கிறார்.
நீங்கள்
தாயும் மகன்களும்
உங்களுக்கு கூடுமோ...?
“உங்களுக்கு முடியுமோ...?” இயேசு மகன்களிடம் மட்டுமே பேசுகிறார்.
நான் குடிக்கபோகும் பாத்திரத்தில் குடிக்க
“நான் கடந்துபோக உள்ள பாடுகளில் கடந்து போக”
அவர்கள்
மகன்கள்
என்னுடைய பிதாவினால் யாருக்கு ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கே அது.
“என்னுடைய அருகில் உட்காரும் கனம், என் பிதா யாருக்கு அந்த கனத்தை ஆயத்தம் செய்திருக்கிறாரோ அவர்களுக்கே”
ஆயத்தம் செய்து
ஆயத்தம் செய்து
Matthew 20:25-28
இயேசு அந்தத் தாய்க்கு சொன்னவற்றை வைத்து தன்னுடைய சீடர்களுக்குப் போதிக்க உபயோகப்படுத்தினார்.
புறஜாதியாரின் ஆளுநர்கள் அவர்களை அடக்கி ஆளுகிறார்கள்
“புறஜாதியாரின் ஆளுநர்கள் புறஜாதியாரை தங்களுக்கு வேண்டுவதைச் செய்யக் கட்டாயப்படுத்துகிறார்கள்”
அவர்களுடைய முக்கிய மனிதர்கள்
ஆளுநர்கள் அதிகாரத்தைக் கொடுக்கும் மனிதர்கள்
அதிகாரத்தைப் பயன்படுத்தி
“கட்டுப்பாடு செய்து”
விருப்பங்கள்
“விருப்பங்கள்” அல்லது “ஆசைகள்”
தன்னுடைய ஜீவனைக் கொடுக்க
“மரிக்க ஆயத்தமாய்”
Matthew 20:29-31
இது இயேசு இரண்டு குருடர்களைக் குணமாக்கும் சங்கதியைத் துவங்குகிறது.
அவர்கள் போய்க்கொண்டிருக்கையில்
இது இயேசுவையும் அவர் சீடர்கள் பற்றியும் சொல்லுகிறது.
அவரைப் பின்தொடர்ந்து
“இயேசுவைப் பின்தொடர்ந்து”
இதோ
வரப்போகிற அதிசயிக்கதக்கத் தகவலுக்கு எழுத்தாளர் வாசகர்களை கவனம் செலுத்த சொல்லுகிறார். உங்கள் மொழியில் இதை செய்ய வேறு வழி இருக்கலாம்.
கடந்து போகையில்
“அவர்கள் அருகில் நடந்து செல்கையில்”
அவர்கள் அதிகமாய்க் கத்தினார்கள்
“குருடர்கள் முன்பை விட அதிகமாய்க் கத்தினார்கள்” அல்லது “சத்தமாய்க் கத்தினார்கள்”
Matthew 20:32-34
இது இயேசு இரண்டு குருடர்களைக் குணமாக்கும் சங்கதியைத் துவங்கியதைத் தொடர்கிறது.
அவர்களை அழைத்து
அந்தக் குருடர்களை அழைத்து
விருப்பம்
“விருப்பம்”
எங்கள் கண்கள் திறக்கப்பட
மறு மொழிபெயர்ப்பு: “நீர் எங்களைப் பார்வை அடையச் செய்யும்படி நாங்கள் விரும்புகிறோம்” அல்லது “நாங்கள் பார்க்க விரும்புகிறோம்”
இரக்கத்தினால் அசைக்கப்பட்டு
“இரக்கத்தோடு” அல்லது “அவர்களுக்காக இரக்கத்தினால் அசைக்கப்பட்டு”
Matthew 21
Matthew 21:1-3
இயேசு தன சீடர்களுடன் எருசலேமுக்குப் பிரயாணம் பண்ணிக்கொண்டிருந்ததைத் தொடர்ந்தார்.
பெத்பகே
ஒரு கிராமம்
கழுதைக்குட்டி
“இளம் ஆண் கழுதை”
Matthew 21:4-5
இது இயேசு கழுதையை ஓட்டிக்கொண்டு எருசலேமுக்குள் போகிறதின் சங்கதியைத் துவங்குகிறது.
தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இது இப்படி ஆயிற்று.
“தேவன் அனேக ஆண்டுகளுக்கு முன் தம்முடைய தீர்க்கதரிசியைக் கொண்டு இது நடக்கப்போகிறது என்று சொல்லியிருந்தார்.”
தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது
“நடப்பதற்கு முன்பே தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது.”
சீயோன் குமாரத்தி
இஸ்ரவேல்
கழுதை
ஏழை மக்களால் சவாரி செய்யப்படும் ஒரு விலங்கு
கழுத்தைக் குட்டி
இளம் ஆண் கழுதை
Matthew 21:6-8
இது இயேசு கழுதையில் சவாரி செய்துகொண்டு எருசலேமுக்குள் போகிறத்தின் சங்கதியைத் துவங்கியதைத் தொடர்கிறது.
துணிகள்
வெளியே அணியப்படும் துணிகள் அல்லது நீள மேல்சட்டை
இயேசு அங்கு அமர்ந்தார்
“இயேசு கழுதையின் மீது போடப்பட்ட அந்தத் துணியின் மீது அமர்ந்தார்.”
Matthew 21:9-11
இது இயேசு கழுதையை ஓட்டிக்கொண்டு எருசலேமுக்குள் போகிறத்தின் சங்கதியைத் துவங்கியதைத் தொடர்கிறது.
ஓசன்னா
“எங்களைக் காப்பாற்றும்” என்று பொருள் படும் எபிரேய வார்த்தை; அனால் இப்பொழுது “தேவனைத் துதி” என்று அர்த்தம் கொள்ளுகிறது!”
முழு நகரமும் கிளர்ச்சிப்பட்டது.
“நகரத்திலிருக்கும் ஒவ்வொருவரும் அவரைப்பார்க்க குதூகலித்தனர்”
முழு நகரம்
“நகரத்தில் உள்ள அநேகர்”
Matthew 21:12-14
இது இயேசு தேவாலயத்துக்குள் பிரவேக்கிற சரிதையை துவங்குகிறது.
அவர் அவர்களிடம் சொன்னார்
“பணமாற்று செய்கிறவர்களிடமும், பொருட்களை விற்று வாங்குகிறவர்களிடமும் இயேசு சொன்னார்”
ஜெப வீடு
“மக்கள் ஜெபிக்கும் இடம்”
திருடர்களின் குகை
“திருடர்கள் பதுங்கும் இடம் போல”
சப்பாணி
நடக்கமுடியாத அல்லது மோசமாக காயம்பட்ட கால்கள் உள்ள
Matthew 21:15-17
இது இயேசு தேவாலயத்துக்குள் பிரவேக்கிற சரிதையை துவங்குகிறதைத் தொடர்கிறது.
ஓசன்னா
மத்தேயு 21:9 ல் எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பாருங்கள்
தாவீதின் குமாரன்
மத்தேயு 21:9 ல் எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பாருங்கள்
அவர்கள் கோபம் அடைந்தனர்
“இயேசுவை அவர்கள் வெறுத்து கோபம் அடைந்தனர்”
இவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று கேட்கிறீர்களா?
“உம்மைப்பற்றி மக்கள் இந்தக் காரியங்களைச் சொல்ல நீர் அனுமதிக்கக்கூடாது”
நீங்கள் வாசித்ததில்லையா?
“ஆம், நான் கேட்டிருக்கிறன், ஆனாலும் நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா”
இயேசு அவர்களை விட்டு போனார்
“பிரதான ஆசாரியர்களையும் வேதபாரகரையும் விட்டு போனார்”
Matthew 21:18-19
இயேசு அத்தி மரத்தை சபித்த சங்கதியை இது துவங்குகிறது.
வறண்டது
“செத்தது”
Matthew 21:20-22
இயேசு அத்தி மரத்தை சபித்ததைக் குறித்து விவரிக்கிறார்.
உதிர்ந்தது
“காய்ந்து மறித்து”
Matthew 21:23-24
மதத் தலைவர்கள் இயேசுவைக் கேள்வி கேட்ட சங்கதியை இது துவங்குகிறது.
Matthew 21:25-27
மதத் தலைவர்கள் இயேசுவைக் கேட்வி கேட்ட சங்கதியை இது துவங்குகினதைத் தொடர்கிறது.
பரலோகத்திலிருந்து
“பரலோகத்திலிருக்கும் தேவனிடம் இருந்து”
அவர் எங்களிடம் சொல்லுவார்
“இயேசு எங்களிடம் சொல்லுவார்”
மக்களைக் குறித்து நாங்கள் பயப்படுகிறோம்
“மக்கள் கூட்டம் என்ன யோசிபார்கள் அல்லது எங்களுக்கு என்ன செய்துவிடுவார்களோ என்று பயப்படுகிறோம்”
யோவானை எல்லாரும் தீர்க்கதரிசியாகப் பார்க்கிறார்கள்
“யோவான் தீர்க்கதரிசிஎன்று அவர்கள் நம்புகிறார்கள்”
Matthew 21:28-30
இயேசு மதத் தலைவர்களுக்கு ஒரு உவமையின் மூலம் பதிலளித்தார்.
Matthew 21:31-32
இயேசு மதத் தலைவர்களுக்கு ஒரு உவமையின் மூலம் பதிலளித்ததைத் தொடர்ந்தார்.
அவர்கள் சொன்னார்கள்
“பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் சொன்னார்கள்”
இயேசு அவர்களிடம் சொன்னார்
“இயேசு பிரதான ஆசாரியர்களிடமும் மூப்பர்களிடமும் சொன்னார்”
யோவான் உங்களிடம் வந்திருக்கிறார்
பொதுமக்களுக்கும் மதத்தலைவர்களுக்கும் இயேசு வந்து போதித்தார்
நீதியின் பாதையில்
மக்கள் தேவனுக்கு எவ்வாறு மறுமொழி கொடுத்து வாழவேண்டும் என்பதை யோவான் காண்பித்தான்.
Matthew 21:33-34
இயேசு மதத் தலைவர்களுக்கு இரண்டாம் உவமையின் மூலம் பதிலளித்ததைத் தொடர்ந்தார்.
நிறைய நிலம் வைத்திருக்கும் மனிதன்
“நிறைய சொத்து வைத்துள்ள ஒரு நில உரிமையாளன்”
திராட்சத் தோட்டக்காரர்களுக்கு வாடகைக்கு விட்டார்
“திராட்சத்தோட்டத்துக்கு திராட்ச ரசம் தயாரிப்பவனை அதிகாரியாக வைத்து.” ஆனாலும் உரிமையாளனே அதன் மேல் கட்டுபாடுள்ளவன்.
திராட்சரசத்தையும் திராட்சைகளையும் நன்றாக கவனிக்கத் தெரிந்தவர்கள்
Matthew 21:35-37
இயேசு மதத் தலைவர்களுக்கு இரண்டாம் உவமையின் மூலம் பதிலளித்ததைத் தொடர்ந்தார்.
அவன் வேலையாட்கள்
“நிறைய நிலம் வைத்திருக்கும் மனிதனின்” வேலையாட்கள்
Matthew 21:38-39
இயேசு மதத் தலைவர்களுக்கு இரண்டாம் உவமையின் மூலம் பதிலளித்ததைத் தொடர்ந்தார்.
Matthew 21:40-41
இயேசு மதத் தலைவர்களுக்கு இரண்டாம் உவமையின் மூலம் பதிலளித்ததைத் தொடர்ந்தார்.
மக்கள் அவரிடம் சொன்னார்கள்
“மக்கள் இயேசுவிடம் சொன்னார்கள்”
Matthew 21:42
இயேசு உவமையை விளக்கும்படி தீர்க்கதரிசிகளை உபயோகப்படுத்தினார்.
இயேசு அவர்களிடம் சொன்னார்
“இயேசு மக்களிடம் சொன்னார்”
கட்டுபவர்கள் ஒதுக்கின கல்லே மூலைக்கல்லாக மாற்றப்பட்டது.
மறு மொழிபெயர்ப்பு: “கட்டுபவர்கள் ஒதுக்கின கல்லே முக்கியமான கல் ஆயிற்று.” அதிகாரிகள் இயேசுவைத் ஒதுக்குவார்கள், ஆனால் தேவன் அவரை தம்முடைய ராஜ்யத்தின் தலையாக்குவார்.
இது கர்த்தரிடமிருந்து வந்தது
“இந்த பெரிய மாற்றத்தை கர்த்தர் ஏற்படுத்தினார்”
Matthew 21:43-44
இயேசு உவமையை விளக்குவதைத் தொடர்ந்தார்.
நான் உங்களுக்கு சொல்லுகிறேன்
பிரதான ஆசாரியர்களிடமும் மூப்பார்களிடமும் இயேசு பேசிக்கொண்டிருந்தார்.
அதன் கனிகளைத் தருகிற
“சரியானதை செய்யப்போகிற”
அதன் கனி
“தேவனுடைய கனிகளின் ராஜ்ஜியம்”
இந்தக் கல்லின் மேல் விழுகிற யாராயினும்
“இந்தக் கல்லின் மேல் தவறி விழுகிறவன்”
அது யார் மேல் விழுகிறதோ
“நியாயத்தீர்ப்பு யார் மேல் விழுகிறதோ”
Matthew 21:45-46
இயேசு சொன்ன உவமைக்கு மதத் தலைவர்கள் பிரதியுத்திரம் சொன்னார்கள்.
அவர் உவமைகள்
“இயேசுவின் உவமைகள்”
கைகளை வைத்து
“கைது செய்து”
Matthew 22
Matthew 22:1-3
மதத் தலைவர்களிடம் இயேசு கல்யாண விருந்தைப் பற்றின உவமையை சொல்லத் துவங்கினார்.
பரலோக ராஜ்ஜியம் எப்படிப்பட்டது என்றால்
மத்தேயு 13:24 கில் எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்.
அழைக்கப்பட்டவர்கள்
மறு மொழிபெயர்ப்பு: “ராஜாவால் அழைக்கப்பட்டவர்கள்”
Matthew 22:4
மதத் தலைவர்களிடம் இயேசு கல்யாண விருந்தைப் பற்றின உவமையை சொல்லத் துவங்கியதைத் தொடர்ந்தார்.
பார்
மறு மொழிபெயர்ப்பு: “பார்” அல்லது “கவனி” அல்லது “நான் உனக்கு என்ன சொல்லுகிறேன் என்பதற்கு கவனம் செலுத்து.”
Matthew 22:5-7
மதத் தலைவர்களிடம் இயேசு கல்யாண விருந்தைப் பற்றின உவமையை சொல்லத் துவங்கியதைத் தொடர்ந்தார்.
இந்த மனிதர்
“அழைக்கப்பட்ட விருந்தாளிகள்”
அவருடைய அழைப்பை மேன்மையாக எண்ணவில்லை
“அவருடைய அழைப்பை தவிர்த்தார்கள்”
Matthew 22:8-10
மதத் தலைவர்களிடம் இயேசு கல்யாண விருந்தைப் பற்றின உவமையை சொல்லத் துவங்கியதைத் தொடர்ந்தார்.
பெருவழி சந்திகள்
“சாலைகள் சந்திக்குமிடம்.”
மண்டபம்
பெரிய அறை
Matthew 22:11-12
மதத் தலைவர்களிடம் இயேசு கல்யாண விருந்தைப் பற்றின உவமையை சொல்லத் துவங்கியதைத் தொடர்ந்தார்.
Matthew 22:13-14
மதத் தலைவர்களிடம் இயேசு கல்யாண விருந்தைப் பற்றின உவமையை சொல்லத் துவங்கியதைத் தொடர்ந்தார்.
Matthew 22:15-17
மதத் தலைவர்கள் இயேசுவை சிக்கவைக்க செய்யும் முயற்சியின் சங்கதியை இது துவங்குகிறது.
இயேசுவை அவரது சொந்தப் பேச்சின் மூலமாக சிக்கவைக்கலாம்.
“அவர்கள் எவ்வாறு அவரை ஏதாவது பேசச் செய்து அதையே அவருக்கு எதிராக பயன்படுத்திட”
ஏரோதியர்கள்
அலுவலர்களும் ரோம பேரரசின் நண்பனான யூத ராஜா ஏரோதைப் பின்பற்றுபவர்களும்,
மக்கள் நடுவே வேற்றுமைக் காண்பிக்காதீர்கள்
“விசேஷ கனத்தை சிலருக்குக் கொடுக்காதீர்கள்” அல்லது “முக்கியமானவர்களுக்கு கவனம் செலுத்தாதீர்கள்”
Matthew 22:18-19
மதத் தலைவர்கள் இயேசுவின் வரிப்பண கண்ணோட்டத்தை வைத்து அவரை சிக்கவைக்கத் தொடர்ந்தனர்.
ஒரு பணம்
ஒரு நாள் கூலிக்கு ஒப்பான ரோம நாணயம்
Matthew 22:20-22
மதத் தலைவர்கள் இயேசுவின் வரிப்பண கண்ணோட்டத்தை வைத்து அவரை சிக்கவைக்கத் தொடர்ந்தனர்.
சீடருடையவை
“சீடருக்கு உரியவைகள்”
தேவனுடையவைகள்
“தேவனுக்கு உரியவைகள்”
Matthew 22:23-24
மதத் தலைவர்கள் இயேசுவின் விவாகாரத்து கண்ணோட்டத்தை வைத்து அவரை சிக்கவைக்கத் தொடர்ந்தனர்.
போதகரே, மோசே, ஒரு மனிதன் மரித்தால்,...’ என்று சொன்னார்.
மோசே வேதத்தில் என்ன எழுதினார் என்று அவரை அவர்கள் கேட்டனர். உங்கள் மொழியில் மேற்கோள் குறிக்குள் மேற்கோள் குறி வர வழி இருந்தால், செய்யப்பாட்டுவினையாக இதைக் குறிப்பிடலாம். “ஒரு மனிதன் மரித்தால்...என்று மோசே சொன்னார்.”
அவன் சகோதரர்...அவன் மனைவி...அவன் சகோதரன்
அவன் சகோதரர்...அவன் மனைவி...அவன் சகோதரன்
செத்துப்போன மனிதனின்
Matthew 22:25-28
மதத் தலைவர்கள் இயேசுவின் விவாகாரத்து கண்ணோட்டத்தை வைத்து அவரை சிக்கவைக்கத் தொடர்ந்தனர்.
அவர்களுக்கு அப்பால்
“ஒவ்வொரு சகோதரனும் அவளை மணந்த பிறகு” அல்லது “ஒவ்வொரு சகோதரனும் மரித்தப்பிறகு”
Matthew 22:29-30
தேவனுடைய வல்லமை
“தேவன் செய்யக் கூடியது” மதத் தலைவர்கள் இயேசுவின் விவாகாரத்து கண்ணோட்டத்தை வைத்து அவரை சிக்கவைக்கத் தொடர்ந்தனர்
Matthew 22:31-33
மதத் தலைவர்கள் இயேசுவின் விவாகாரத்து கண்ணோட்டத்தை வைத்து அவரை சிக்கவைக்கத் தொடர்ந்தனர்
நீங்கள் வாசித்ததில்லையா...யாக்கோபு என்ன (சொன்னார் என்பதை)?
நீங்கள் வாசித்ததில்லையா...யாக்கோபு?
மறு மொழிபெயர்ப்பு: “நீங்கள் அதை வாசித்திருக்கிறீர்கள் என்று அறிவேன், ஆனாலும் யாக்கோபு...என்ன (சொன்னார் என்பதை) நீங்கள் புரிந்து கொள்ளவில்லை.”
தேவனால் உங்களுக்கு சொல்லப்பட்டது
தேவனால் உங்களுக்கு சொல்லப்பட்டது
மறு மொழிபெயர்ப்பு:
“தேவன் உங்களிடத்தில் சொன்னது”
‘நான்...யாக்கோபின்’ தேவன் என்று சொன்னார். இது மேற்கோள் குறிக்குள் மேற்கோள் குறி. “தேவன் மோசேயிடம், அவர் தேவன் என்றும், ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன், யாக்கோபின் தேவன் என்றும் சொன்னார்.”
Matthew 22:34-36
மதத் தலைவர்கள் இயேசுவின் நியாயப்பிரமாணத்தைக்குறித்த கண்ணோட்டத்தை வைத்து அவரை சிக்கவைக்கத் தொடர்ந்தனர்
வக்கீல்
மோசேயின் சட்டத்தைப் புரிந்திருக்கும் பிரத்தியேக ஆற்றல் உள்ள ஒரு பரிசேயன்
Matthew 22:37-38
மதத் தலைவர்கள் இயேசுவின் நியாயப்பிரமாணத்தைக்குறித்த கண்ணோட்டத்தை வைத்து அவரை சிக்கவைக்கத் தொடர்ந்தனர்
Matthew 22:39-40
மதத் தலைவர்கள் இயேசுவின் நியாயப்பிரமாணத்தைக்குறித்த கண்ணோட்டத்தை வைத்து அவரை சிக்கவைக்கத் தொடர்ந்தனர்
அது போல
அந்த கட்டளைப் போல
Matthew 22:41-42
இயேசு மதத்தலைவர்களிடம் மேசியாவைக் குறித்து வினவத் துவங்கினார்.
Matthew 22:43-44
இயேசு மதத்தலைவர்களிடம் மேசியாவைக் குறித்து வினவத் துவங்கியதைத் தொடர்ந்தார்.
என் வலது கைப் பக்கத்தில்
என் வலது கைப் பக்கத்தில்
“வலது கை” ஒரு கனத்துக்குரிய இடத்தைக் குறிக்க அநேகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
உன் எதிரிகளை நான் உனக்கு பாதபீடமாக்கிப் போடும்வரை
“நான் உன் எதிரிகளை வெற்றிக்கொள்ளும் வரை”
Matthew 22:45-46
இயேசு மதத்தலைவர்களிடம் மேசியாவைக் குறித்து வினவத் துவங்கியதைத் தொடர்ந்தார்.
Matthew 23
Matthew 23:1-3
இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் மதத் தலைவர்களைப் போல இருக்கக்கூடாது என்று எச்சரிக்கிறார்.
மோசேயின் இடத்தில் உட்காருதல்
“மோசேயைப் போல அதிகாரம் கொண்டு” அலல்து “மோசேயின் நியாயப்பிரமாணத்தின் அர்த்தத்தைச் சொல்ல அதிகாரம் கொண்டு”
என்னவாயினும்
“எதுவாயினும்” அல்லது “எல்லாம்”
Matthew 23:4-5
இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் மதத் தலைவர்களைப் போல இருக்கக்கூடாது என்று எச்சரிக்கிறார்.
சுமக்க பாரமுடையவைகளை அவர்கள் கட்டுகிறார்கள்
சுமக்க பாரமுடையவைகளை அவர்கள் கட்டுகிறார்கள்
“பின்பற்ற முடியாத கடின சட்டங்களை உங்கள் மீது வைக்கிறார்கள்.”
அவர்களோ ஒரு விரலைக் கூட அசைக்கமாட்டார்கள்
“அவர்கள் ஒரு சிறிய உதவி கூட செய்யமாட்டார்கள்”
தோல்ப் பைகள்
வேத வாக்கியங்கள் எழுதப்பட்ட காகிதங்கள் கொண்ட சிறிய தோல் பெட்டிகள்
Matthew 23:6-7
இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் மதத் தலைவர்களைப் போல இருக்கக்கூடாது என்று எச்சரிக்கிறதைத் தொடர்கிறார்.
Matthew 23:8-10
இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் மதத் தலைவர்களைப் போல இருக்கக்கூடாது என்று எச்சரிக்கிறதைத் தொடர்கிறார்.
பூமியில் ஒரு மனிதனையும் உங்கள் தகப்பன் என்று அழைக்காதே
“பூமியில் ஒரு மனிதனையும் உங்கள் தகப்பன் என்று அழைக்காதேயுங்கள்” அல்லது “பூமியில் உள்ள ஒரு மனிதன் உங்கள் தகப்பன் என்று சொல்லாதிருங்கள்”
Matthew 23:11-12
இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் மதத் தலைவர்களைப் போல இருக்கக்கூடாது என்று எச்சரிக்கிறதைத் தொடர்கிறார்.
தன்னைத்தான் உயர்த்தி
“தன்னையே முக்கியமாக உயர்த்தி”
உயர்த்தி
“முக்கியத்துவத்தில் உயர்த்தி”
Matthew 23:13-15
இயேசு மதத்தலைவர்களின் போலி நடிப்பினால் அவர்களுக்கு எதிராகப் பேசத்தொடங்கினார்.
நீங்கள் அதில் பிரவேசிப்பதில்லை
“நீங்கள் தேவன் உங்களை ஆளும்படி விடுவதில்லை”
விதவைகளின் வீட்டை பட்சிக்கிறீர்கள்
“தங்களைக் காக்க ஆண்கள் இல்லாத பெண்களிடம் உள்ளதை கொள்ளையடித்து”
நரகத்தின் மகன்
“நரகத்திற்குரிய மனிதன்” அல்லது “நரகத்திற்குப் போகவேண்டிய மனிதன்”
Matthew 23:16-17
இயேசு மதத்தலைவர்களின் போலி நடிப்பினால் அவர்களுக்கு எதிராகப் பேசத்தொடங்கினதைத் தொடர்ந்தார்.
குருட்டு நடத்துனர்கள்...முட்டாள்கள்
தலைவர்கள் சரீரப்பிரகாரமாக குருடில்லை என்றாலும், அவர்கள் தவறியிருக்கிரார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
அவனுடைய சத்தியம் பண்ணுதலுக்கு அவன் பொறுப்பாயிருக்கிறான்.
மறு மொழிபெயர்ப்பு: “அவன் சத்தியம் பண்ணினதை அவன் செய்தே ஆகவேண்டும்”
எது பெரியது, பொன்னோ, அல்லது பொன்னை சுத்திகரித்த தேவ ஆலயமோ?
பரிசேயர்களைக் கடிந்து கொள்ளும்படி இயேசு இதைப் பயன்படுத்தினார்.
Matthew 23:18-19
இயேசு மதத்தலைவர்களின் போலி நடிப்பினால் அவர்களுக்கு எதிராகப் பேசத்தொடங்கினதைத் தொடர்ந்தார்.
குருடர்கள்
ஆவிக்குரிய குருடர்கள்
எது பெரியது, காணிக்கையோ, அல்லது காணிக்கையைப் பரிசுத்தம்பண்ணும் பலிபீடமோ?
இயேசு அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்ததை குறிக்க இந்த கேள்வியைப் பயன்படுத்தினார்.
காணிக்கை
ஒரு மிருகத்தின் பலியோ அல்லது பலிபீடத்தில் வைக்குமுன் தேவனுக்குக் காணிக்கையாகக் கொண்டுவரப்படும் நிலத்தின் தானியமாகவோ இருக்கலாம். பலிபீடத்தில் வைக்கப்பட்டால், அது பலி என்று ஆகிவிடும்.
Matthew 23:20-22
இயேசு மதத்தலைவர்களின் போலி நடிப்பினால் அவர்களுக்கு எதிராகப் பேசத்தொடங்கினதைத் தொடர்ந்தார்.
Matthew 23:23-24
இயேசு மதத்தலைவர்களின் போலி நடிப்பினால் அவர்களுக்கு எதிராகப் பேசத்தொடங்கினதைத் தொடர்ந்தார்.
உங்களுக்கு ஐயோ
மத்தேயு 23:13 ல் எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.
ஒற்தலாம், வெந்தயம், மற்றும் சீரகம்
ருசியுள்ள உணவைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இலைகள் மற்றும் விதைகள்
குருட்டு வழிகாட்டிகளே!
இவர்கள் சரீரபிரகாரமாக குருடர்களல்ல. இயேசு ஆவிக்குரிய குருட்டாட்டத்தை சரீரபிரகாரமாக உள்ள குருட்டாட்டத்திற்கு ஒப்பிடுகிறார்.
குடிபானத்தில் விழுந்த ஒரு சிறு பூச்சியை வடிகட்டிவிட்டு ஆனால் ஒரு ஒட்டகத்தை விழுங்குபவன் நீ
அவ்வளவு முக்கியமில்லாத சட்டங்களைக் கைக்கொள்ள ஜாக்கிரதையாய் இருந்து விட்டு மிகவும் முக்கியமான சட்டங்களைக் கைக்கொள்ளத் தவறுவது என்பது சிறிய அசுத்தமான மிருகத்தை உண்ணாமல் ஜாக்கிரதையாய் இருந்து விட்டு தெரிந்தோ தெரியாமலோ ஒரு பெரிய அசுத்தமான மிருகத்தை உண்பதற்கு ஜாக்கிரதையாக இல்லாத முட்டாள்த்தனத்தைக் குறிக்கிறது. மறு மொழிபெயர்ப்பு: “தன்னுடைய குடிபானத்தில் விழுந்த ஒரு சிறு பூச்சியை வடிகட்டிவிட்டு ஆனால் ஒரு ஒட்டகத்தை உண்ணும் முட்டாளைப் போன்ற முட்டாள் தனம் உடையவன் நீ.”
சிறு பூச்சியை வடிகட்டிவிட்டு
அந்த சிறிய பூச்சி வாயினுள் போகாமல் ஒரு துணியின் வழியாக பருகுவது.
பூச்சி
ஒரு சிறிய பறக்கும் பூச்சி
Matthew 23:25-26
இயேசு மதத்தலைவர்களின் போலி நடிப்பினால் அவர்களுக்கு எதிராகப் பேசத்தொடங்கினதைத் தொடர்ந்தார்.
உங்களுக்கு ஐயோ
மத்தேயு 23 : 13 ல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பாக்கவும்.
குவளை மற்றும் தட்டின் வெளிப்புறத்தை சுத்தம் செய்கிறீர்கள்
“வேதபாரகர்கள்” மட்டும் “பரிசேயர்கள்” மற்றவர்களுக்கு “வெளிப்புறம் சுத்தமாகக்” காணப்படுகிறார்கள்.
உள்ளே அவர்கள் கொள்ளையில் மிதமிஞ்சி நிறைந்தவர்கள்
“தங்கள் தேவைக்கு அதிகமாக வைத்துக்கொள்ள மற்றவர்களுடையவைகளை வலுக்கட்டாயமாக அவர்கள் எடுத்துக்கொள்வார்கள்”
குருட்டு பரிசேயர்களே!
பரிசேயர்கள் சத்தியத்தை அறிகிறதில்லை. அவர்கள் சரீரப்பிரகாரமான குருடர்கள் அல்ல.
வெளிப்புறமும் சுத்தம் ஆக, குவளை மற்றும் தட்டின் உட்புறத்தையும் சுத்தம் செய்யவும்.
தேவனோடு அவர்கள் இருதயம் சரியாக இருந்தால், அவர்கள் வாழ்க்கை அதைக் காட்டும்.
Matthew 23:27-28
இயேசு மதத்தலைவர்களின் போலி நடிப்பினால் அவர்களுக்கு எதிராகப் பேசத்தொடங்கினதைத் தொடர்ந்தார்.
Matthew 23:29-31
இயேசு மதத்தலைவர்களின் போலி நடிப்பினால் அவர்களுக்கு எதிராகப் பேசத்தொடங்கினதைத் தொடர்ந்தார்.
Matthew 23:32-33
இயேசு மதத்தலைவர்களின் போலி நடிப்பினால் அவர்களுக்கு எதிராகப் பேசத்தொடங்கினதைத் தொடர்ந்தார்.
உன் தகப்பனின் பாவத்தின் அளவை நிரப்புகிறீர்கள்
“உங்கள் மூதாதையர்கள் செய்யத் துவங்கின பாவங்களை நீங்கள் முடியுங்கள்”
பாம்புகளே. விரியன் பாம்புக் குட்டிகளே!
“ஆபத்தான விஷமுள்ள பாம்புகளைப் போல கொடியவர்கள் நீங்கள்”
நரகத்தின் நியாயத்தீர்ப்புக்கு எப்படி தப்பித்துக்கொள்வீர்கள்”
“நரகத்தின் நியாயத்தீர்ப்புக்கு தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வழி இல்லை”
Matthew 23:34-36
இயேசு மதத்தலைவர்களின் போலி நடிப்பினால் அவர்களுக்கு எதிராகப் பேசத்தொடங்கினதைத் தொடர்ந்தார்.
ஆபேல்...லிருந்து...சகரியா...வரையில்
முதலில் கொலையுண்டவன் ஆபேல், தேவாலயத்தில் யூதர்களால் கடைசியாகக் கொல்லப்பட்டவன் சகரியாவாக இருக்கலாம்.
சகரியா
யோவான் ஸ்நானகனின் தகப்பன் அல்ல
Matthew 23:37-39
இயேசு, எருசலேம் நகரத்தார் தேவனை தள்ளினார்கள் என்று வருந்துவதாகச் சொன்னார்.
எருசலேமே, எருசலேமே
எருசலேமே, எருசலேமே
எருசலேம் நகரத்தாரிடம் எருசலேமிடம் பேசுவது போல இயேசு பேசுகிறார்.
உங்கள் பிள்ளைகள்
முழு இஸ்ரவேல்
உங்களுக்கு உங்கள் வீடு கைவிடப்பட்டவண்ணமாக விடப்பட்டுள்ளது
மறு மொழிபெயர்ப்பு: “தேவன் உங்கள் வீட்டை விட்டுச் செல்லுவார்; அது காலியாக இருக்கும்”
உங்கள் வீடு
பெறக்கூடிய அர்த்தங்கள்: 1. எருசலேம் நகரம் (UDB பார்) அல்லது 2. தேவாலயம்.
Matthew 24
Matthew 24:1-2
இயேசு வரும் முன் என்ன சம்பவிக்கும் என்பதைத் தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லத் துவங்கினார். இந்தக் காரியங்களை நீங்கள் பார்க்கவில்லையா?
பெறக்கூடிய அர்த்தங்கள்: இயேசு 1. தேவாலயாக கட்டிடங்கள் (மறு மொழிபெயர்ப்பு: “இந்தக் கட்டிடங்களைக் குறித்து நான் உங்களுக்கு சொல்லட்டும்.”) அல்லது 2. அவர் இப்போ விவரித்த அழிவு (“நான் உங்களுக்கு இப்போ சொன்னவற்றை நீங்கள் புரிந்திருக்க வேண்டும், ஆனால் நீங்கள் புரியவில்லை!”).
Matthew 24:3-5
இயேசு தான் வரும் முன் என்ன சம்பவிக்கும் என்பதைத் தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.
உங்களை ஒருவனும் வழி தப்பப்பண்ணாமல் ஜாக்கிரதையாக இருங்கள்.
“இந்தக் காரியங்களைக் குறித்து உங்களிடத்தில் பொய் சொல்லும் ஒருவனையும் நீங்கள் நம்பவேண்டாம்.”
Matthew 24:6-8
கடைசிக் காலத்தைக் குறித்து இயேசு பேசிக்கொண்டிருந்தார்.
நீங்கள் கலங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்
“இந்தக் காரியங்கள் உங்களைக் கலங்கப்பண்ண விடாமல் இருங்கள்”
Matthew 24:9-11
கடைசிக் காலத்தைக் குறித்து இயேசு பேசிக்கொண்டிருந்தார்.
உங்களை ஒப்புக்கொடுப்பார்கள்
உங்களை ஒப்புக்கொடுப்பார்கள்
“உங்களைத் துன்பப்படுத்த விரும்புகிறவர்கள் உங்களை ஒப்புக்கொடுப்பார்கள்.
உங்களை ஒப்புக்கொடுப்பார்கள்.
மத்தேயு 10:16, 17 இல் எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.
Matthew 24:12-14
கடைசிக் காலத்தைக் குறித்து இயேசு பேசிக்கொண்டிருந்தார்.
அநேகருடைய அன்பு தணிந்து போம்
பெறக்கூடிய அர்த்தங்கள்: 1. “பலர் மற்றவர்களை நேசிக்கமாட்டார்கள்” (UDB பார்) அல்லது 2. “பலர் தேவனை நேசிக்கமாட்டார்கள்”
எல்லா தேசங்களும்
மறு மொழிபெயர்ப்பு: “எல்லா இடங்களில் உள்ள எல்லா மக்களும்”
Matthew 24:15-18
இயேசு தான் வரும் முன் என்ன சம்பவிக்கும் என்பதைத் தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.
தானியேல் தீர்க்கதரிசியின் மூலமாக பேசப்பட்டது
மறு மொழிபெயர்ப்பு: “தானியேல் தீர்க்கதரிசியை ...க்குறித்து எழுதினது”
Matthew 24:19-22
இயேசு தான் வரும் முன் என்ன சம்பவிக்கும் என்பதைத் தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.
குழந்தையோடு இருக்கிறவர்கள்
குழந்தையோடு இருக்கிறவர்கள்
கர்ப்பிணிகள்
குளிர்காலம்
“பனிக்காலம்”
மாமிசம்
மக்கள்
Matthew 24:23-25
இயேசு தான் வரும் முன் என்ன சம்பவிக்கும் என்பதைத் தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.
நம்பாதீர்கள்
“அவர்கள் உங்களிடத்தில் சொன்னத் தவறானக் காரியங்களை நம்பாதீர்கள்”
Matthew 24:26-28
இயேசு தான் வரும் முன் என்ன சம்பவிக்கும் என்பதைத் தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.
மின்னல் மின்னுவதைப் போல...வருகையும் அவ்வாறிருக்கும்
அவர் மிகவும் வேகமாகவும் பார்க்க எளிதாயும் வருவார்
செத்த மிருகங்கள் எங்கேயோ அங்கு கழுகுகள் கூடும்
பெறக்கூடிய அர்த்தங்கள்: 1. மனுஷக் குமாரன் வரும்போது, எல்லாரும் பார்த்து அவர் வந்துவிட்டார் என்று அறிந்து கொள்ளுவர் (UDB பார்) அல்லது 2. ஆவிக்குரிய மரித்தவர்கள் இருக்கும் இடத்தில் கள்ளத் தீர்க்கதரிசிகள் தங்கள் பொய்களைச் சொல்ல இருப்பார்கள்.
கழுகுகள்
செத்த அல்லது மரித்துக்கொண்டிருக்கிற ஜந்துக்களைத் தின்னும் பறவைகள்
Matthew 24:29
இயேசு தான் வரும் முன் என்ன சம்பவிக்கும் என்பதைத் தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.
உடனே
“இப்பொழுதே”
அந்த நாட்கள்
மத்தேயு 24:32; 24:23
28 இல் சொல்லப்பட்ட நாட்கள்
சூரியன் இருளாகும்
“தேவன் சூரியனை இருளாக்குவார்”
பரலோகத்தின் வல்லமைகள் அசைக்கப்படும்
“வானத்தில் உள்ளவைகளையும் வானத்திற்கு மேல் இருக்கிறவர்களையும் தேவன் அசைப்பார்.”
Matthew 24:30-31
இயேசு தான் வரும் முன் என்ன சம்பவிக்கும் என்பதைத் தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.
தங்கள் மார்பில் அடித்து
வரப்போகிற தண்டனைக்கு பயந்திருக்கிறார்கள் என்பதைக் காண்பிக்கும் பொருட்டு தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு
அவர்கள் கூட்டி
“அவருடைய தூதர்கள் கூடுவர்”
தம்முடைய தெரிந்துகொள்ளப்பட்டவர்களை
மனுஷக் குமாரன் தெரிந்துக் கொண்ட மக்கள்
நான்குக் காற்றுகள்
மறு மொழிபெயர்ப்பு: “மேற்கிலிருந்து, தெற்கிலிருந்து, வடக்கிலிருந்து, கிழக்கிலிருந்து” (UDB பார்) அல்லது
Matthew 24:32-33
இயேசு தான் வரும் முன் என்ன சம்பவிக்கும் என்பதைத் தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.
வாசல் அருகில்
நகரத்தில் ஊடுருவ தயாராக இருக்கும் ஒரு சேனைக்கு ஒப்பாக
Matthew 24:34-35
இயேசு தான் வரும் முன் என்ன சம்பவிக்கும் என்பதைத் தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.
இந்த சந்ததி கடந்துபோவதில்லை
“இன்று வாழும் மக்கள் மரிக்கமாட்டார்கள்”
இந்த எல்லாக் காரியங்களும் சம்பவிக்கும் வரையிலும்
மறு மொழிபெயர்ப்பு: “தேவன் இந்த எல்லா காரியங்களையும் சம்பவிக்கப்பண்ணும் வரையில்”
வானமும் பூமியும் கடந்துபோம்
“வானமும் பூமியும் இனி ஒருக்காலும் இருக்காது”
Matthew 24:36
இயேசு தான் வரும் முன் என்ன சம்பவிக்கும் என்பதைத் தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.
குமாரன் அல்ல
“குமாரன் கூட இல்லை”
Matthew 24:37-39
இயேசு தான் வரும் முன் என்ன சம்பவிக்கும் என்பதைத் தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.
நோவாவின் நாட்களைப் போல, மனுஷக்குமாரன் வரும் நாட்களும் இருக்கும்
மறு மொழிபெயர்ப்பு: “நோவாவின் நாட்களைப் போல, மனுஷக்குமாரன் வரும் நாளும் இருக்கும்.” ஏனென்றால், அவர்களுக்கு என்ன தீமை நடக்கும் என்பதை அறியாதிருந்தார்கள்.
வெள்ளம் வரும் முன் அவர்கள் உண்டும் குடித்தும் இருந்த அந்த நாட்களைப் போல, ... அவர்கள் யாவரையும் வாரிக்கொண்டது
அப்படியே மனுஷக் குமாரன் வருகையும் இருக்கும். மறு மொழிபெயர்ப்பு: “மனுஷக் குமாரன் வரும் நாட்களுக்கு முந்தைய நாட்கள், அனைவரும் குடித்தும் உண்டும் இருந்த, வெள்ளத்துக்கு முந்தைய நாட்களைப் போலவே இருக்கும். ...எல்லாவறையும் வாரிக்கொண்டது”
Matthew 24:40-42
இயேசு தான் வரும் முன் என்ன சம்பவிக்கும் என்பதைத் தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.
பின்பு
மனுஷக்குமாரன் வரும்போது
ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான். மற்றவன் விடப்படுவான்.
பெறக்கூடிய அர்த்தங்கள்: 1. தேவன் ஒருவனைப் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்வார் மற்றவனை பூமியிலேயே தண்டனைக்காக விட்டுவிடுவார் (UDB பார்) அல்லது 2. தேவதூதர்கள் ஒருவனை தண்டனைக்காக எடுத்துக்கொண்டுபோவார் மற்றவனை ஆசீர்வாதத்திற்காக விடுவார்.
ஆட்டுக்கல்
அரைப்பதற்கான கருவி
அதினால்
“நான் உங்களுக்கு சொன்னதின் நிமித்தம்”
எச்சரிக்கையாயிருங்கள்
“கவனம் செலுத்துங்கள்”
Matthew 24:43-44
இயேசு தன்னுடைய சீடர்களிடம் தன்னுடைய வருகைக்கு எப்படி ஆயத்தப்படவேண்டும் என்று சொல்லுகிறார்.
திருடன்
இயேசு திருடன் அல்ல; ஆனால், ஒருவரும் எதிர்பாராத பொழுது தான் வரப்போவதாக சொல்லுகிறார்.
அவன் எச்சரிக்கையாய் இருந்திருக்க வேண்டும்
வீட்டைப் பாதுகாப்பாகவைக்க “அவன் வீட்டை அவன் காத்துக்கொண்டிருந்திருக்கலாம்”
அவன் வீடு திருடப்பட விட்டு இருந்திருக்க வேண்டாம்.
“அவன் வீட்டுக்குள் யாரையும் அனுமதித்து பொருட்களைத் திருட விட்டிருந்திருக்க மாட்டான்”
Matthew 24:45-47
இயேசு தன்னுடைய சீடர்களிடம் தன்னுடைய வருகைக்கு எப்படி ஆயத்தப்படவேண்டும் என்று சொல்லுகிறதைத் தொடர்ந்தார்.
உண்மையும், ஞானமும் உள்ள வேலைக்காரன் யார், யாரை அவன் எஜமான்...?
மறு மொழிபெயர்ப்பு: “உண்மையும், ஞானமும் உள்ள வேலைக்காரன் யார்? அவனையே அவன் எஜமான்...”
அவர்களுக்கு அவர்கள் ஆகாரம் கொடுத்து
“எஜமான் வீட்டில் உள்ளவர்களுக்கு அவர்கள் ஆகாரம் கொடுத்து”
Matthew 24:48-51
இயேசு தன்னுடைய சீடர்களிடம் தன்னுடைய வருகைக்கு எப்படி ஆயத்தப்படவேண்டும் என்று சொல்லுகிறதைத் தொடர்ந்தார்.
இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிற
“அவன் மனதில் நினைக்கிற”
அவனுடைய விதியை உருவாக்குகிற
“அவனை நடத்த”
Matthew 25
Matthew 25:1-4
இயேசு புத்தியுள்ள மற்றும் புத்தி இல்லாத கன்னிகைகளைக் குறித்த உவமையைச் சொல்ல துவங்குகிறார்.
விளக்குகள்
இது 1. விளக்குகள் (UDB பார்) அல்லது 2. ஒரு தடியின் முனையில் துணி சுற்றி அதை எண்ணையில் நனைய வைத்து எரிய செய்யப்படும் தீவட்டிகள்.
அவைகளில் ஐந்து
“கன்னிகைகளுள் ஐந்து பேர்
அவர்களோடு எண்ணெயை எடுத்துக்கொண்டு போகவில்லை
“அவர்கள் விளக்குகளில் மட்டும் எண்ணெய் வைத்திருந்தனர்”
Matthew 25:5-6
இயேசு புத்தியுள்ள மற்றும் புத்தி இல்லாத கன்னிகைகளைக் குறித்த உவமையைச் சொல்ல துவங்குகிறதைத் தொடர்ந்தார்.
அவர்கள் உறக்கம் கொண்டனர்
“எல்லா பத்து கன்னிகைகளும் தூங்கம் கொண்டனர்”
Matthew 25:7-9
இயேசு புத்தியுள்ள மற்றும் புத்தி இல்லாத கன்னிகைகளைக் குறித்த உவமையைச் சொல்ல துவங்குகிறதைத் தொடர்ந்தார்.
தீவட்டிகளை ஆயத்தம் செய்தனர்
தீவட்டிகளை ஆயத்தம் செய்தனர்
“இன்னும் பிரகாசிக்க எரியும்படி தங்கள் விளக்குகளை ஒழுங்குப்படுத்தினர்.”
புத்தி இல்லாதவர்கள் புத்தியுள்ள கண்ணிகைகளிடம் சொன்னார்கள்
“புத்தி இல்லாத கன்னிகைகள் புத்தியுள்ள கண்ணிகைகளிடம் சொன்னார்கள்”
எங்கள் தீவட்டிகள் அணைகிறது
“எங்கள் தீவட்டிகளில் உள்ள நெருப்பு பிரகாசமாக எரியவில்லை”
Matthew 25:10-13
இயேசு புத்தியுள்ள மற்றும் புத்தி இல்லாத கன்னிகைகளைக் குறித்த உவமையைச் சொல்ல துவங்குகிறதைத் தொடர்ந்தார்.
அவர்கள் சென்றார்கள்
“புத்தியுள்ள ஐந்து கன்னிகைகள் சென்றார்கள்”
ஆயத்தமாய் இருந்தவர்கள்
அதிக எண்ணெய் வைத்து இருந்த கன்னிகைகள்
கதவு அடைக்கப்பட்டது
மறு மொழிபெயர்ப்பு: “யாரோ ஒருவன் கதவை அடைத்தான்”
எங்களுக்குத் திறந்தருளும்
“நாங்கள் உள்ளே வரும்படி கதவை எங்களுக்குத் திறந்தருளும்”
நான் உங்களை அறியேன்
“நீங்கள் யார் என்று நான் அறியேன்”
Matthew 25:14-16
இயேசு உண்மையான மற்றும் உண்மையில்லாத ஊழியக்காரர்களைக் குறித்ததான உவமையைச் சொல்லத் துவங்கினார்.
இது இப்படிப்பட்டது
“பரலோகராஜ்யம் இப்படிப்பட்டது”
போகப்போகிறது
“போக ஆயத்தமாக இருந்தது” அல்லது “சீக்கிரமாக போக இருந்தது”
அவனுடைய செல்வத்தை அவர்களுக்குக் கொடுத்து
“அவனுடைய செல்வத்திற்கு அவர்களை அதிகாரியாக வைத்து”
அவனுடைய செல்வம்
“அவனுடைய சொத்து”
ஐந்து தாலந்துகள்
“தாலந்து” என்பது இருபது வருடக் கூலி ஆகும். இக்கால சம்பளத்திற்கு இதை மாற்றிப் பார்ப்பதைத் தவிர்க்கவும். இந்த உவமை ஐந்து, மூன்று, மற்றும் ஒரு தாலந்தையும் மிகப்பெரிய சொத்தையும் ஒப்பிட்டு பார்க்கிறது. (UDB பார், “ஐந்து பை தங்கங்கள்”)
அவன் பிரயாணம் பண்ணிப் போனான்
“எஜமான் தன் பிரயாணத்தில் போனான்” மற்றுமொரு ஐந்து தாலந்துகளை சேர்த்தான் “மற்றுமொரு ஐந்து தாலந்துகளை சம்பாதித்தான்”
Matthew 25:17-18
இயேசு உண்மையான மற்றும் உண்மையில்லாத ஊழியக்காரர்களைக் குறித்ததான உவமையைச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.
இன்னுமொரு இரண்டை சேர்த்து
“மற்றுமொரு இரண்டு தாலந்துகளை சம்பாதித்தான்
Matthew 25:19-21
இயேசு உண்மையான மற்றும் உண்மையில்லாத ஊழியக்காரர்களைக் குறித்ததான உவமையைச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.
நான் மற்றுமொரு ஐந்து தாலந்துகளைச் சேர்த்தேன்
“நான் மற்றுமொரு ஐந்து தாலந்துகளைச் சம்பாதித்தேன்”
தாலந்துகள்
மத்தேயு 25:1௪, 15 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்ததைப் பார்க்கவும்.
நன்றாக செய்து
“நீங்கள் நன்றாக செய்தீர்கள்” அல்லது “நீங்கள் சரியாக செய்தீர்கள்.” உங்கள் கலாச்சாரத்தில் ஒரு வேலையாள் (அல்லது எஜமானுக்குக் கீழ் உள்ளாவன்) செய்த வேலையை எஜமான் (அல்லது அதிகாரத்தில் உள்ளவன்) பாராட்டுவதைக் கூறும் ஒரு உணர்ச்சி வெளிப்பாடு இருக்கலாம்.
Matthew 25:22-23
இயேசு உண்மையான மற்றும் உண்மையில்லாத ஊழியக்காரர்களைக் குறித்ததான உவமையைச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.
நான் செய்தேன்... அதிக தாலந்துகள்
மத்தேயு 25:19, 29 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பாருங்கள்.
நன்றாக செய்தீர் ... உன் எஜமானின் சந்தோசம்
மத்தேயு 25:19,21 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பாருங்கள்.
Matthew 25:24-25
இயேசு உண்மையான மற்றும் உண்மையில்லாத ஊழியக்காரர்களைக் குறித்ததான உவமையைச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.
நீர் விதைக்காத இடத்தில் நீர் அறுப்பதில்லை, தூவாத இடத்தில் சேர்க்கிறவர் நீர்
மறு மொழிபெயர்ப்பு: “விதைப்பதற்கு மற்றவனுக்கு பணம் கொடுத்து விதைக்கப்பட்ட நிலத்தில் இருந்து உணவை சேர்ப்பவர் நீர்.”
தூவி
முந்தைய காலத்தில் வரிசையில் விதைகளை விதைப்பதற்கு பதிலாக விதைகளைத் தூவுவார்கள்
உமக்குரியது இங்கு உமக்கிருக்கிறது,
பார், உமக்குரியது இங்கிருக்கிறது”
Matthew 25:26-27
இயேசு உண்மையான மற்றும் உண்மையில்லாத ஊழியக்காரர்களைக் குறித்ததான உவமையைச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.
பொல்லாதவனும் சோம்பேறியுமான வேலைக்காரனே
“வேலை செய்ய விரும்பாத பொல்லாத வேலைக்காரன் நீ”
நான் விதைக்காத இடத்தில் நான் அறுப்பதில்லை, தூவாத இடத்தில் சேர்க்கிறவர் நான்
மத்தேயு 25:24 இல் எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.
என்னுடையதை நான் பெற்றுக்கொண்டு
“என்னுடைய பொன்னை நான் பெற்றுக்கொண்டு
வட்டி
எஜமானுடைய பணத்தைத் தற்காலிகமாக உபயோகிக்க வங்கிக்காரர் செலுத்தும் பணம்.
Matthew 25:28-30
இயேசு உண்மையான மற்றும் உண்மையில்லாத ஊழியக்காரர்களைக் குறித்ததான உவமையைச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.
இன்னும் மிகுதியாக
“இன்னும் அதிகமாக”
அழுகையும் பற்கடிப்பும் உள்ள இடம்
“மக்கள் அழுதுகொண்டும் பற்களைக் கடித்துக்கொண்டும் இருக்கும் இடம்”
Matthew 25:31-33
இயேசு கடைசிக்காலத்தில் எவ்வாறு அவர் மக்களை நியாயம் தீர்ப்பார் என்பதைக் குறித்து சொல்லத் துவங்கினார்.
அவருக்கு முன்பாக எல்லா ஜனத்தாரும் கூட்டப்படுவார்கள்
மறு மொழிபெயர்ப்பு: “எல்லா ஜனத்தாரையும் அவருக்கு முன்பாக அவர் கூட்டுவார்.”
அவருக்கு முன்பாக
“அவருக்கு முன்”
எல்லா ஜனத்தாரும்
“ஒவ்வொரு நாட்டிலிருந்து எல்லா மக்களும்”
ஆடுகள்
ஆடுகள் என்பது நான்கு கால்கள் கொண்ட சராசரியான செம்மறி ஆடுக்கு ஒத்த ஜந்துகள். அவை அநேகமாக வீட்டில் வைத்தோ அல்லது மந்தை ஆகவோ வளர்க்கப்படும்.
அவர் வைப்பார்
“மனுஷக் குமாரன் வைப்பார்”
Matthew 25:34-36
இயேசு கடைசிக்காலத்தில் எவ்வாறு அவர் மக்களை நியாயம் தீர்ப்பார் என்பதைக் குறித்து சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.
ராஜா
“மனுஷக் குமாரன்”
அவர் வலது கைப் பக்கம் உள்ளவர்கள்
“செம்மறி ஆடுகள்”
வாருங்கள், என் தகப்பனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே
மறுமொழிபெயர்ப்பு: “வாருங்கள், என் தகப்பன் அசீர்வதித்தவர்களே”
உங்களுக்கு ஆயத்தம் செய்யப்பட்ட ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ளுங்கள்
மறு மொழிபெயர்ப்பு: “உங்களுக்கு தேவன் ஆயத்தம் செய்யப்பட்ட ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ளுங்கள்”
Matthew 25:37-40
இயேசு கடைசிக்காலத்தில் எவ்வாறு அவர் மக்களை நியாயம் தீர்ப்பார் என்பதைக் குறித்து சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.
ராஜா
“மனுஷக் குமாரன்”
அவர்களுக்கு சொல்லு
“அவருடைய வலது கைப்பக்கத்தில் இருப்பவர்களுக்குச் சொல்லு”
சகோதரர்கள்
ஆணையும் பெண்ணையும் ஒரு சேரக் குறிக்கும் சொல் உங்கள் மொழியில் இருந்தால் இங்கு குறிக்கவும்.
நீங்கள் எனக்கு செய்தீர்கள்
“நீங்கள் எனக்கு செய்தீர்கள் என்று நான் எடுத்துக்கொள்கிறேன்”
Matthew 25:41-43
இயேசு கடைசிக்காலத்தில் எவ்வாறு அவர் மக்களை நியாயம் தீர்ப்பார் என்பதைக் குறித்து சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.
சபிக்கப்பட்டவர்களே
“தேவன் சபித்த மக்களே”
நித்திய அக்கினி ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது
மறு மொழிபெயர்ப்பு: “தேவன் ஆயத்தம் செய்த நித்திய அக்கினி”
அவருடைய தூதர்கள்
அவருடைய உதவியாளர்கள்
எனக்கு நீங்கள் உடுத்துவிக்கவில்லை
“நீங்கள் எனக்கு உடுப்பு தரவில்லை”
வியாதிப்பட்டவர்கள் மற்றும் சிறைச்சாலையில் இருந்தவர்கள்
“நான் வியாதிப்பட்டும் சிறைச்சாலையிலும் இருந்தேன்”
Matthew 25:44-46
இயேசு கடைசிக்காலத்தில் எவ்வாறு அவர் மக்களை நியாயம் தீர்ப்பார் என்பதைக் குறித்து சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.
அவர்களும் பதில் சொல்லுவார்கள்
“அவருடைய இடது கைப்பக்கம் உள்ளவர்கள்”
இந்த சிறியரில் ஒருவருக்கு
“என்னுடைய மக்களில் சிறியரில் ஒருவனுக்காக”
எனக்கு நீங்கள் செய்யவில்லை
“நீங்கள் எனக்கு செய்யவில்லை என்று எடுத்துக்கொள்ளுவேன்” அல்லது “உண்மையாக, நீங்கள் உதவி செய்யாதவான் நான் தான்”
நித்திய தண்டனை
“முடிவில்லாத தண்டனை”
நீதிமான்கள் நித்திய வாழ்வுக்குள்
“நீதிமான்கள் நித்திய வாழ்வுக்குள் பிரவேசிப்பார்கள்”
Matthew 26
Matthew 26:1-2
இயேசு தான் பாடுபட்டு மரிக்க வேண்டும் என்பதைக் குறித்து சொல்லத் துவங்கினார்.
இது இப்படி ஆயிற்று
ஒரு கதையின் ஒரு புதிய பகுதியைக் குறிக்க உங்கள் மொழியில் வழி இருக்குமானால் இங்கு உபயோகிக்கக் கருதவும்.
இந்த எல்லா வார்த்தைகள் ...ளுடைய வார்த்தைகள் 24:4
25:46
மனுஷக்குமாரன் சிலுவையில் அறையப்பட ஒப்புக்கொடுக்கப்படுவார்.
“சில மனிதர்கள் மனுஷக் குமாரனை சிலுவையில் அறையும்படி மற்றவர்களிடம் கொடுப்பர்”
Matthew 26:3-5
யூதத் தலைவர்கள் ஏசுவைக் கைதுசெய்து கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார்கள்.
ஒளிவு மறைவு
“இரகசியமாக”
விருந்தின் போது
வருடாந்தர பஸ்கா பண்டிகையின் போது
Matthew 26:6-9
இயேசு மரிக்கும் முன்பு ஒரு ஸ்திரீ அவர் மீது எண்ணெய் வார்த்தாள்
சாய்ந்து
அவர் பக்கம் சாய்ந்து. சாப்பிட உட்காரும் முறையைக் குறிக்க உங்கள் மொழியில் வார்த்தை இருக்குமானால் அதை இங்கு பயன்படுத்தலாம்.
ஒரு ஸ்திரீ அவரிடம் வந்தாள்
ஒரு ஸ்திரீ இயேசுவிடம் வந்தாள்
வெள்ளைக்கல் பரணி
கல்லினால் செய்யப்பட்ட வாங்குவதற்கு விலை அதிகமுள்ள ஒரு புட்டி
தைலம்
நல்ல மணமுடைய தைலம்
இந்த வீணடிப்புக்கு என்னக் காரணம்?
“இந்த தைலத்தை வீணடித்ததின் மூலம் இந்த ஸ்திரீ தவறு செய்தாள்!”
Matthew 26:10-11
இயேசு தான் மரிப்பதற்கு முன் தைலத்தால் தன்னை அபிஷேகம் செய்த பெண்ணைப் புகழ்கிறார்.
ஏன் இந்தப் பெண்ணைக் கலங்கச் செய்கிறீர்கள்?
மறு மொழிபெயர்ப்பு: “நீங்கள் இந்த பெண்ணைக் கலங்கச் செய்யக்கூடாது அல்லவா!”
நீங்கள் ... நீங்கள் ... நீங்கள்
சீடர்கள்
Matthew 26:12-13
இயேசு தான் மரிப்பதற்கு முன் தைலத்தால் தன்னை அபிஷேகம் செய்த பெண்ணைப் புகழ்கிறதைத் தொடர்ந்தார்..
Matthew 26:14-16
சீடர்களுள் ஒருவன் இயேசுவை கைதுசெய்து கொலை செய்ய யூதத் தலைவர்களுக்கு உதவி செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறான்.
அவரை உங்களிடம் ஒப்புக்கொடுத்து
“இயேசுவை உங்களிடம் திருப்பி” அல்லது “இயேசுவைக் கைது செய்ய உங்களுக்கு உதவி”
முப்பது வெள்ளிக்காசு துண்டுகள்
பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனத்திலுள்ள அதே வார்த்தைகள் தான் இவைகளும் என்பதால், இக்கால பணத்திற்கு ஒப்பாக மாற்றாமல் இதே வடிவத்தில் வைக்கவும்.
அவரை அவர்களிடம் ஒப்புக்கொடுக்க
“பிரதான ஆசாரியர்களுக்கு இயேசுவைக் கைது செய்ய உதவ”
Matthew 26:17-19
தன் சீடர்களோடு பஸ்கா உணவை சாப்பிட இயேசு ஆயத்தமானார்.
அவர், “நகரத்துக்குள் சென்று ஒரு குறிப்பிட்ட மனிதனிடம் போய் சொல்லுங்கள், ‘போதகர், “என்னுடைய நேரம் வந்தது; உம்முடைய வீட்டில் என்னுடைய சீடர்களோடு பஸ்காவை வைப்பேன்,” என்றார்,’ என்று சொன்னார்.””
இயேசு தன் சீடர்களிடம் தன்னுடைய செய்தியை அந்த மனிதனிடம் சொல்லுங்கள் என்று சொல்லுகிறார். மறு மொழிபெயர்ப்பு: “அவர் தன் சீடர்களிடம், “நகரத்துக்குள் சென்று ஒரு குறிப்பிட்ட மனிதனிடம் போய் சொல்லுங்கள், ‘போதகர், “என்னுடைய நேரம் வந்தது; உம்முடைய வீட்டில் என்னுடைய சீடர்களோடு பஸ்காவை வைப்பேன்,” என்றார்,’ என்று சொன்னார்.”” அல்லது “அவர் தன் சீடர்களிடம் நகரத்துக்குள் சென்று ஒரு குறிப்பிட்ட மனிதனிடம் போய் போதகர் தன்னுடைய நேரம் வந்தது; அவனுடைய வீட்டில் தன்னுடைய சீடர்களோடு பஸ்காவை வைப்பேன், என்றார், என்று சொல்லச் சொன்னார்.”
என்னுடைய நேரம்
பெறக்கூடிய அர்த்தங்கள் 1. “நான் உங்களிடத்தில் சொன்ன நேரம்” (UDB பார்) அல்லது 2. “தேவன் எனக்குக் குறித்த நேரம்.”
கையில் இருக்கிறது
அருகில் இருக்கிறது
பெறக்கூடிய அர்த்தங்கள்: 1. “அருகில் இருக்கிறது” (UDB) அல்லது 2. “வந்தது”
பஸ்காவை ஆசரியுங்கள்
“பஸ்கா உணவை சாப்பிடுங்கள்” அல்லது “விசேஷ உணவை சாப்பிட்டு பாஸ்காவைக் கொண்டாடுங்கள்.”
Matthew 26:20-22
இயேசு தன் சீடர்களோடு பஸ்கா உணவை சாப்பிட்டுக்கொண்டே அவர்களுக்குப் போதித்துக் கொண்டிருக்கிறார்.
அவர் சாப்பிட அமர்ந்தார்
உங்கள் கலாச்சாரத்தில் மக்கள் சாப்பிட உட்காரும் முறையைக் குறிக்கும் சொல்லைப் பயன்படுத்தவும்.
ஆண்டவரே, உண்மையில் நான் இல்லை?
“கண்டிப்பாக நான் இல்லை, நானோ, ஆண்டவரே?”
Matthew 26:23-25
இயேசு தன் சீடர்களோடு பஸ்கா உணவை சாப்பிட்டுக்கொண்டே அவர்களுக்குப் போதித்துக் கொண்டிருந்ததைத் தொடர்ந்தார்.
அந்த மனிதனால் மனுஷக் குமாரன் காட்டிக்கொடுக்கப்பட்டார்.
“மனுஷக்குமாரனைக் காட்டிக்கொடுத்த மனிதன்”
நீயே சொல்லிவிட்டாய்
“நீ சொன்னது போல, நீ தான்” அல்லது “நீ ஒப்புக்கொண்டாய்”
Matthew 26:26
இயேசு தன் சீடர்களோடு பஸ்கா உணவை சாப்பிட்டுக்கொண்டே அவர்களுக்குப் போதித்துக் கொண்டிருந்ததைத் தொடர்ந்தார்.
எடுத்து ... ஆசீர்வதித்து ... உடைத்து
மத்தேயு 14:19 இல் மொழிபெயர்த்ததைப் போல மொழிபெயர்க்கவும்.
Matthew 26:27-29
இயேசு தன் சீடர்களோடு பஸ்கா உணவை சாப்பிட்டுக்கொண்டே அவர்களுக்குப் போதித்துக் கொண்டிருந்ததைத் தொடர்ந்தார்.
எடுத்து
மத்தேயு 14:19 இல் மொழிபெயர்த்ததைப் போல மொழிபெயர்க்கவும்.
அவர்களுக்குக் கொடுத்து
“அவருடைய சீடர்களுக்குக் கொடுத்து”
உடன்படிக்கையின் இரத்தம்
“உடன்படிக்கை இன்னும் நிலுவையில் உள்ளது என்பதைக் காட்டும் இரத்தம்” அல்லது “உடன்படிக்கையைக் சாத்தியப்படுத்து இரத்தம்”
ஊற்றப்படுகிறது
“மரணத்தில் ஊற்றப்படுகிறது” அல்லது “சீக்கிரம் என்னுடைய உடலிலிருந்து வழிந்து வரும்” அல்லது “நான் மரிக்கும் போது என்னுடையக் காயங்களிலிருந்து வழிந்து வரும்”
திராட்சைக் கொடியின் பழம்
“திராட்சை ரசம்
Matthew 26:30-32
இயேசு தன் சீடர்களோடு ஒலிவ மலைக்கு நடந்து கொண்டிருக்கையில் போதித்துக் கொண்டிருக்கிறதைத் தொடர்கிறார்.
பாமாலை
தேவனைத் துதிக்கும் பாட்டு
விலகி
“என்னை விட்டு”
செம்மறி ஆடுகள் சிதறடிக்கப்படும்”
மறு மொழிபெயர்ப்பு: “அவர்கள் மந்தையின் எல்லா செம்மறி ஆடுகளையும் சிதறடிப்பார்கள்” (UDB) அல்லது 2. “மந்தையின் செம்மறி ஆடுகள் எல்லாத் திசைகளிலும் ஓடும்.”
மந்தையின் செம்மறி ஆடுகள்
சீடர்கள்
நான் எழுப்பப்பட்ட பிறகு
மறு மொழிபெயர்ப்பு: “தேவன் என்னை எழுப்பின பிறகு”
நான் எழுப்பப்படுவேன்
மறு மொழிபெயர்ப்பு: “தேவன் என்னை மரித்தோரிலிருந்து எழுப்புவார்”
Matthew 26:33-35
இயேசு தன் சீடர்களோடு ஒலிவ மலைக்கு நடந்து கொண்டிருக்கையில் போதித்துக் கொண்டிருக்கிறதைத் தொடர்கிறார்.
விலகி
மத்தேயு 26:30, 31 இல் மொழிபெயர்த்ததைப் போல மொழிபெயர்க்கவும்.
சேவல் கூவுவதற்கு முன்
மறு மொழிபெயர்ப்பு: சூரியன் உதிக்கும் முன்”
சேவல்
சூரியன் உதிக்கும் நேரத்தில் சத்தமாக கத்தும் ஒரு பறவை
கூவுகிறது
சேவல் போடும் சத்தம்
Matthew 26:36-38
இயேசு தன் சீடர்களோடு ஒலிவ மலைக்கு நடந்து கொண்டிருக்கையில் போதித்துக் கொண்டிருக்கிறதைத் தொடர்கிறார்.
வருத்தமுள்ள
மிகவும் சோகமான
Matthew 26:39-41
இயேசு கெத்சமெனே தோட்டத்தில் ஜெபிக்கும் சரிதையை இது துவங்குகிறது.
முகம் குப்புற விழுந்து
ஜெபிக்கும்படி முகம் தரையில் படும்படி விழுவது.
Matthew 26:42-44
இயேசு கெத்சமெனே தோட்டத்தில் ஜெபிக்கும் சரிதையை இது தொடர்கிறது.
அவர் தூரப்போனார்
“இயேசு தூரப்போனார்”
நான் இதைக் குடிக்காவிட்டால்
“நான் இந்த துன்பத்தின் குப்பியைக் குடிக்காவிட்டால்”
அவர்கள் கண்கள் மயக்கமாய் இருந்தது
“அவர்கள் மிகவும் உறக்க மயக்கமாய் இருந்தார்கள்”
Matthew 26:45-46
இயேசு கெத்சமெனே தோட்டத்தில் ஜெபிக்கும் சரிதையை இது தொடர்கிறது.
அந்த மணி நேரம் அருகில் உள்ளது
“நேரம் வந்தது”
பாவிகளின் கைகள்
“பாவம் நிறைந்தவர்கள்”
பார்
“நான் சொல்ல இருப்பதற்கு கவனம் செலுத்து.”
Matthew 26:47-48
இயேசு கெத்சமெனே தோட்டத்தில் ஜெபிக்கும் சரிதையை இது தொடர்கிறது. அவர் பேசிக்கொண்டிருக்கையில்
அவர் பேசிக்கொண்டிருக்கையில்
“இயேசு பேசிக்கொண்டிருக்கையில்”
சொல்லுகிறான், “நான் முத்தமிடுபவரே அவர். அவரைப் பிடித்துக்கொள்ளுங்கள்.”
“சொன்னது என்னவென்றால், அவன் முத்தமிடுபவர் யாரோ அவரைத்தான் அவர்கள் கைப்பற்ற வேண்டும்.”
நான் முத்தமிடும் யாராயினும்
“நான் முத்தமிடப்போகும் ஒருவர்” அல்லது “நான் முத்தமிடப்போகும் மனிதர்” (UDB)
முத்தம்
ஒரு போதகரை வாழ்த்தும் மரியாதையான வழி.
Matthew 26:49-50
கெத்சமெனே தோட்டத்தில் இயேசுவின் கைது சரிதையை இது தொடங்குகிறது.
அவன் இயேசுவிடம் வந்தான்
“யூதாஸ் இயேசுவிடம் வந்தான்”
அவரை முத்தமிட்டான்
“முத்தத்தோடு அவரை சந்தித்தான்”
இயேசுவின் மீது கைகளை வைத்து
இயேசுவைக் காயப்படுத்த திட்டமிட்டு அவரைப் பிடித்து
அவரைப் பிடித்து
அவரைக் கைதியாக்கி
Matthew 26:51-54
கெத்சமெனே தோட்டத்தில் இயேசுவின் கைது சரிதையை இது தொடர்கிறது.
இதோ
எழுத்தாளர் ஒரு புது கதாப்பாத்திரத்தைக் கொண்டு வருகிறார். உங்கள் மொழியில் இதை செய்ய ஒரு வழி இருக்கலாம்.
என் தகப்பனை நான் அழைக்க முடியாது என்று நினைக்கிறீர்களோ? அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு
அதிகமான தூதர்களை என்னிடத்திற்கு அனுப்புவார். என் தகப்பனை நான் அழைக்க முடியாது என்று நினைக்கிறீர்களோ? அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதர்களை என்னிடத்திற்கு அனுப்புவார்.
மறு மொழிபெயர்ப்பு: “நான் என் பிதாவை # அழைத்தால் அவர் என்னிடம் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதர்களை என்னிடத்திற்குஅனுப்புவார் என்பதை நீங்கள் தெரிந்திருக்கவேண்டும். பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான
சரியான தூதர்களின் எண்ணிக்கை முக்கியமல்ல
லேகியோன்
ஆறாயிரம் சேனை வீரர்களைக் கொண்ட ஒரு ரோம ராணுவத்தின் பகுதி
Matthew 26:55-56
கெத்சமெனே தோட்டத்தில் இயேசுவின் கைது சரிதையை இது தொடர்கிறது.
நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு ஒரு திருடனைப் பிடிக்க வருவது போல என்னைப் பிடிக்க வந்தீர்களா?
மாற்று மொழிபெயர்ப்பு: “நான் திருடனல்ல என்று நீங்கள் அறிவீர்கள்; அதனால் தடியோடும் பட்டயத்தோடும் என்னைப் பிடிக்க வந்தது தவறு.”
தடி
மக்களை அடிக்க பெரிய மரக் கட்டைகள்
அவரை விட்டு
அவரோடு இருக்கவேண்டிய நேரத்தில் விட்டுச் சென்றனர் என்பதைக்குறிக்க உங்கள் மொழியில் ஏதேனும் ஒரு வார்த்தை இருக்குமானால் அதை இங்கு பயன்படுத்தவும்.
Matthew 26:57-58
இயேசு பிரதான ஆசாரியனால் வினவப்படும் சரிதையை இது துவங்குகிறது.
பிரதான ஆசாரியனின் அரமனை
பிரதான ஆசாரியனின் வீட்டின் அருகில் உள்ள ஒரு திறந்த வெளி இடம்
Matthew 26:59-61
இயேசு பிரதான ஆசாரியனால் வினவப்படும் சரிதையை இது துவங்குகிறது.
இரண்டு பேர் முன் வந்தனர்
“இரண்டு மனிதர் முன் வந்தனர்” (UDB) அல்லது “இரண்டு சாட்சிகள் முன் வந்தனர்”
சொன்னார்கள் “இந்த மனிதன், தான் தேவாலயத்தை இடித்து மூன்று நாளைக்குள் அதைத் திரும்பக்கட்டுவேன் என்கிறான்” என்று சொன்னார்கள் .மறு மொழிபெயர்ப்பு: “தான் தேவாலயத்தை இடித்து மூன்று நாளைக்குள் அதைத் திரும்பக்கட்டுவேன் என்று இயேசு சொன்னதைக் கேள்விப்பட்டோம் என்று சாட்சி சொன்னார்கள்.”
இந்த மனிதன் சொன்னான்
“இந்த மனிதன் இயேசு சொன்னார்”
Matthew 26:62-64
இயேசு பிரதான ஆசாரினால் வினவப்படும் சரிதையை இது தொடர்கிறது.
உமக்கு எதிராக அவர்கள் சாட்சி சொல்லுகிறார்கள்
“இந்த சாட்சிகள் உமக்கு விரோதமாக சாட்சி சொல்லுகிறார்கள்” நீர் தான் கிறிஸ்துவா என்று எங்களுக்கு சொல்லும்
நீர் தான் கிறிஸ்துவா என்று எங்களுக்கு சொல்லும்
நீர் தான் கிறிஸ்துவா என்று எங்களுக்கு சொல்லும்”
நீங்களே சொல்லிவிட்டீர்கள்
“நீங்கள் சொன்னதுபோல, நானே” அல்லது நீங்கள் சற்றே ஒப்புக்கொண்டீர்கள்”
ஆனால் நான் உங்களுக்கு சொல்லுகிறேன், இப்பொழுதிலிருந்து நீங்கள்
இயேசு பிரதான ஆசாரியனோடும் அங்கிருந்த மற்றவர்களோடும் பேசுகிறார்
இப்பொழுதிலிருந்து நீங்கள் மனுஷக்குமாரன்
சாத்தியமான அர்த்தங்கள்: 1. வருங்காலத்தில் ஒரு நேரத்தில் அவர்கள் மனுஷக்குமாரனைக் காண்பார்கள் (UDB பார்) அல்லது 2. “இப்பொழுது” என்று சொல்லுவதிலிருந்து இயேசு ஆருடைய மரிக்கும் நேரத்தையும், மரித்தொரிளிரிந்து எழுந்து வருவதையும், மற்றும் பரலோகம் செல்வதையும் குறிக்கிறார்,
வல்லமையின் வலதுகைப் பக்கத்தில்
“எல்லாம் வல்ல தேவனின் வலப்பக்கத்தில்
வானத்தின் மேகங்களில் வருகிறார்.
“வானத்தின் மேகங்கள் மேல் ஏறி பூமிக்கு வருதல்”
Matthew 26:65-66
இயேசு பிரதான ஆசாரியனால் வினவப்படும் சரிதையை இது தொடர்கிறது.
பிரதான ஆசாரியன் தனது வஸ்திரத்தைக் கிழித்தான்
வஸ்திரத்தைக் கிழிப்பது கோபத்தினும் சோகத்தினுமான அடையாளம்
அவர்கள் பதிலளித்தனர்
“யூதத் தலைவர்கள் பதலளித்தனர்”
Matthew 26:67-68
இயேசு பிரதான ஆசாரியனால் வினவப்படும் சரிதையை இது தொடர்கிறது.
பின்பு அவர்கள்
சாத்தியமான அர்த்தங்கள்: “பின்பு சில மனிதர்கள்” அல்லது “பின்பு வீரர்கள்”
அவர் முகத்தில் துப்பி
கேவலமாக
Matthew 26:69-70
பேதுரு எவ்வாறு இயேசுவை மறுதலித்தான் என்பதின் சரிதையை இது துவங்குகிறது.
நீ சொல்லுகிறது என்ன என்று எனக்கு தெரியாது
பேதுருவால் அந்த வேலைக்காரப்பெண் சொன்னவற்றை புரிந்துகொள்ள முடிந்தது. அவன் இந்த வார்த்தைகளை இயேசுவோடு தான் இருக்கவில்லை என்பதைச் சொல்லப் பயன்படுத்தினான்.
Matthew 26:71-72
பேதுரு எவ்வாறு இயேசுவை மறுதளித்தான் என்பதின் சரிதையை இது தொடர்கிறது.
அவன்
“பேதுரு”
வாசல்
அரமனையின் சுற்றியுள்ள வாசலின் வாயில்
Matthew 26:73-75
பேதுரு எவ்வாறு இயேசுவை மறுதலித்தான் என்பதின் சரிதையை இது தொடர்கிறது.
அவர்களில் ஒருவன்
“இயேசுவோடு இருந்தவர்களில் ஒருவன்” உன் பேச்சு உன்னைக் காட்டிக்கொடுக்கிறது
உன் பேச்சு உன்னைக் காட்டிக்கொடுக்கிறது
“கலிலேயனைப் போல நீ பேசுவதால் நாங்கள் எல்லாரும் நீ கலிலேயாவிலிருந்து வந்தாய் என்று சொல்ல முடியும்.” சாபம்
சாபம்
“அவனே சபிக்கத்துவங்கினான்”
சத்தியமாக, “நான் இந்த மனிதனை அறியேன்,”
மறு மொழிபெயர்ப்பு: “அவனுக்கு அந்த மனிதனை தெரியவில்லை என்று,”
Matthew 27
Matthew 27:1-2
இது இயேசுவின் வழக்கு விசாரணையையும் மரணத்தையும் குறிக்கும் சரிதையைத் துவங்குகிறது.
Matthew 27:3-5
எழுத்தாளர், யூதாஸ் அவரை எவ்வாறு கொலை செய்தான் என்பதை சொல்லுவதற்க்காக, இயேசுவை கைது செய்தக் கதையை சொல்லுவதை நிறுத்திவிட்டார்.
பின்பு யூதாஸ்
இந்த கதை மாறி வேறு கதை துவங்குவதைத் தெரிவிக்க உங்கள் மொழியில் வழி இருக்குமானால் பயன்படுத்தவும்.
முப்பது வெள்ளிக் காசுகள்
பிரதான ஆசாரியன் இயேசுவைக் காட்டிக்கொடுக்க யூதாசுக்குக் கொடுத்தது.
குற்றமற்ற ரத்தம்
“மரிப்பதற்கு தகுதி இல்லாதவர்”
Matthew 27:6-8
யூதாஸ் எவ்வாறு இயேசுவைக் கொலை செய்தான் என்பதை இது தொடர்கிறது. இது நியாயமல்ல
இது நியாயமல்ல
“எங்களுடைய சட்டம் இதை போட அனுமதிப்பதில்லை”
இதைப் போட
“இந்த வெள்ளியைப் போட”
இரத்தத்தின் விலை
ஒரு மனிதன் மரிக்கக் கொடுக்கப்பட்டப் பணம் (UDB பார்)
குயவனின் நிலம்
எருசலேமில் மரிக்கும் அந்நியர்களை அடக்கம் செய்ய வாங்கப்பட்ட நிலம்
இந்த நாள் வரை
ஆசிரியர் எழுதின அந்த நாள் வரை
Matthew 27:9-10
யூதாஸ் எவ்வாறு இயேசுவைக் கொலை செய்தான் என்பதன் சரிதையை இது தொடர்கிறது.
எரேமியா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறியது
“இந்த தீர்க்கதரிசனத்தை எரேமியா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது; அவன் சொன்னது உண்மையானது.”
இஸ்ரவேல் மக்கள்
இஸ்ரவேலின் மதத் தலைவர்கள்
என்னை நடத்தினது
“தீர்க்கதரிசி எரேமியாவை” நடத்தினது
Matthew 27:11-14
ரோம ஆளனர் முன்பு இயேசுவுக்கான வழக்கு விசாரணையின் சரிதையை இது தொடர்கிறது.
இப்பொழுது
கதையின் இடைவெளிக்குப் பின் அதைத் துவங்குவதற்கு உங்கள் மொழியில் ஒரு வழி இருக்குமானால் இங்கு பயன்படுத்தவும். ஆளுனர்
ஆளுனர்
பிலாத்து
நீங்களே சொல்லிவிட்டீர்கள்
“நீர் ஒப்புக்கொண்டுவிட்டீர்”
ஆனால் பிரதான ஆசாரியாராலும் மூப்பராலும் அவர் குற்றப்படுத்தப்பட்டபோது
மறு மொழிபெயர்ப்பு: “பிரதான ஆசாரியாரும் மூப்பரும் அவரை குற்றப்படுத்தின போது” உமக்கு விரோதமான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நீர் கேட்கவில்லையா?
“நீர் தவறான காரியங்களை செய்தீர் என்று குற்றம் சாட்டும் இவர்களுக்கு எதிராக நீர் ஒன்றும் பேசாமல் இருப்பது என்னை ஆச்சரியப்பட வைக்கிறது!”
ஒரு வார்த்தை, அதனால் ஆளுனர் அதிசயித்துப்போனார்
ஒரு வார்த்தை, அதனால் ஆளுனர் அதிசயித்துப்போனார்
மறு மொழிபெயர்ப்பு: “ஒரு வார்த்தை; இது ஆளுனரை ஆச்சரியப்படவைத்தது.”
Matthew 27:15-16
ரோம ஆளுனர் முன்பு இயேசுவுக்கான வழக்கு விசாரணையின் சரிதையை இது தொடர்கிறது.
இப்பொழுது
சில தகவலைத் தந்து, மத்தேயு 27:17 இல் துவங்கினதை வாசகர்கள் புரிந்துகொள்ளும்படி, முக்கியமான கதைவரிசையில் ஒரு நிறுத்தத்தைக் குறிக்க எழுத்தாளர் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்.
விருந்து
பஸ்கா கொண்டாடப்படும்போது அனுசரிக்கப்படும் விருந்து
மக்களால் தெரிந்தெடுக்கப்படும் கைதி
மறு மொழிபெயர்ப்பு: “மக்கள் தெரிந்து கொண்ட ஒரு கைதி”
வில்லங்கமான
கெடுதல் செய்து பிரபலமான
Matthew 27:17-19
ரோம ஆளுனர் முன்பு இயேசுவுக்கான வழக்கு விசாரணையின் சரிதையை இது தொடர்கிறது.
அவரை ஒப்புக்கொடுத்தார்கள்
பிலாத்து இயேசுவை நியாயம் விசாரிக்க “இயேசுவை அவனிடம் கொண்டு வந்தார்கள்”
அவர் உட்கார்ந்திருக்கையில்
“பிலாத்து உட்கார்ந்திருக்கையில்”
நியாய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கும்போது
ஒரு அலுவலனாக தன் வேலையை செய்து
வார்த்தையை அனுப்பி
“செய்தியை அனுப்பி”
Matthew 27:20-22
ரோம ஆளுநர் முன்பு இயேசுவுக்கான வழக்கு விசாரணையின் சரிதையை இது தொடர்கிறது.
அவர்களிடம் கேட்டு
“மக்களிடம் கேட்டு”
Matthew 27:23-24
ரோம ஆளுநர் முன்பு இயேசுவுக்கான வழக்கு விசாரணையின் சரிதையை இது தொடர்கிறது. அவர் செய்தாரா
அவர் செய்தாரா
“இயேசு செய்தாரா”
அவர்கள் கத்தினார்கள்
“மக்கள் கத்தினார்கள்”
இரத்தம்
“மரணம்”
Matthew 27:25-26
ரோம ஆளுநர் முன்பு இயேசுவுக்கான வழக்கு விசாரணையின் சரிதையை இது தொடர்கிறது.
அவருடைய ரத்தம் எங்கள் மீதும் எங்கள் குழந்தைகள் மீதும் இருக்கட்டும்!
“ஆம்! நாங்களும் எங்கள் சந்ததியும் அவரைக் கொலை செய்வதற்க்கான பொறுப்பை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளுகிறோம்!!”
Matthew 27:27-29
ரோம வீரர்கள் இயேசுவை பரிகசிக்கிற சரிதையை இது துவங்குகிறது.
தேசாதிபதியின் அதிபதி
சாத்தியமான அர்த்தங்கள்: 1. வீரர்கள் வாழ்ந்த இடம் (UDB பார்) அல்லது 2. ஆளுனர் வாழ்ந்த இடம்
அவர் துணியைக் களைந்து
“அவர் உடுப்பை இழுத்து”
சிவப்பான
பிரகாசமான சிவப்பு
வாழ்க
“உம்மை நாங்கள் கனப்படுத்துகிறோம்” அல்லது “நீடுழி வாழ்க”
Matthew 27:30-31
ரோம வீரர்கள் இயேசுவை பரிகசிக்கிற சரிதையை இது துவங்குகிறது.
அவர்கள் ... அவர்கள் ... அவர்கள்
பிலாத்துவின் வீரர்கள்
அவர் ... அவர் ... அவர் ... அவர் ... அவருடைய ... அவர் ... அவர் ... அவர்
இயேசு
Matthew 27:32-34
இயேசு சிலுவையில் அறையப்படும் சரிதையை இது துவங்குகிறது.
அவர்கள் வெளியே வந்த பொழுது
“எருசலேமை விட்டு வெளியே வந்த பொழுது
அவர் தன் சிலுவையை சுமக்க , அவர்களோடு அவர் வரும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்
“இயேசு தன் சிலுவையை சுமக்க , வீரர்களோடு அவர் வரும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்”
கொல்கொதா என்று அழைக்கப்படும் இடம்
“கொல்கொதா என்று மக்களால் அழைக்கப்படும் இடம்”
காடி
செரிமானத்திற்கு உடல்கள் பயன்படுத்தும் மஞ்சள் நிறமான ஒரு திரவம்.
Matthew 27:35-37
இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்த சரிதையை இது தொடர்கிறது.
உடைகள்
இயேசு அணிந்திருந்த துணிகள்
Matthew 27:38-40
இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரிக்கும் சரிதையை இது தொடர்கிறது
இரண்டு கள்ளர்கள் அவரோடு சிலுவையில் அறையப்பட்டார்கள்
மறு மொழிபெயர்ப்பு: “வீரர்கள் இரண்டு கள்ளர்களை இயேசுவோடு சிலுவையில் அறைந்தனர்”
அவர்கள் தலையைத் துலுக்கி
இயேசுவை நையாண்டி பண்ண
Matthew 27:41-42
இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரிக்கும் சரிதையை இது தொடர்கிறது
அவர் மற்றவர்களைக் காத்தான், ஆனால் தன்னைத்தான் காக்க முடியவில்லை
சாத்தியமான அர்த்தங்கள்: 1. யூதத் தலைவர்கள் இயேசு மற்றவரை காத்தார் என்பதையும் தன்னையே அவர் காப்பார் என்பதையும் நம்பவில்லை (UDB பார்) அல்லது 2. அவர் தன்னை காத்ததை நம்புகிறார்கள் ஆனால் இப்பொழுது அவரையே காப்பாற்ற முடியவில்லை என்று நகைக்கிறார்கள்.
இவர் இஸ்ரவேலின் ராஜா
தலைவர்கள் இயேசு இஸ்ரவேலின் ராஜா என்று நம்பவில்லை
Matthew 27:43-44
இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரிக்கும் சரிதையை இது தொடர்கிறது
அவரோடு சிலுவையில் அறையப்பட்டக் கள்ளர்கள்
“வீரர்களால் இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்டக் கள்ளர்கள்”
Matthew 27:45-47
இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரிக்கும் சரிதையை இது தொடர்கிறது
கத்தி
“அழைத்து” அல்லது “சத்தமாக கத்தி”
ஏலி, ஏலி, லாமா சபக்தனி
மொழிபெயர்ப்பாளர்கள் பெரும்பாலும் எபிரேய வார்த்தையையே வைத்துவிடுவார்கள்.
Matthew 27:48-50
இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரிக்கும் சரிதையை இது தொடர்கிறது
அவர்களில் ஒருவன்
சாத்தியமான அர்த்தங்கள்: 1. வீரர்களில் ஒருவன் அல்லது 2. அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தவர்களில் ஒருவன்
கடற்காளான்
திரவங்களை உறிஞ்சி வைத்துக்கொண்டு தேவையானபோது பிழிந்து எடுத்துக்கொள்ளப் பயன்படும் அருவடைசெயயப்பட்ட கடல் விலங்கு.
அவருக்குக் கொடுத்து
“இயேசுவுக்குக் கொடுத்து”
Matthew 27:51-53
இயேசு மரித்த பொழுது நடந்தவற்றின் சரிதையை இது துவங்குகிறது.
இதோ
வரப்போகும் அதிசயமான தகவலுக்கு வாசகர்கள் கவனம் செலுத்தும் படி இதைச் சொல்லுகிறார். கல்லறைகள் திறந்தது, பரிசுத்தவான்களின் மரித்த சரீரங்கள் எழுந்தன.
கல்லறைகள் திறந்தது, பரிசுத்தவான்களின் மரித்த சரீரங்கள் எழுந்தன.
“தேவன் கல்லறைகளைத் திறந்து, பரிசுத்தவான்களின் மரித்த சரீரங்களை எழுப்பினார்.
தூங்கி விழுந்த
“மரித்த”
கல்லறைகள் திறந்தது ... அநேகருக்குக் காட்சி தந்து
சம்பவங்களின் வரிசை தெளிவாக இல்லை. சாத்திய வரிசை: இயேசு மரித்தபோது வந்த பூமி அதிர்ச்சிக்குப் பின் கல்லறைகள் திறந்தது 1. பரிசுத்தவான்கள் எழுப்பப்பட்டனர், இயேசு உயிர்த்தெழுந்தார், பின்பு பரிசுத்தவான்கள் நகரத்துக்குள் சென்று அநேகரால் பார்க்கப்பட்டனர், அல்லது 2. இயேசு உயிர்த்தெழுந்தார், பரிசுத்தவான்கள் எழுப்பப்பட்டனர், பின்பு பரிசுத்தவான்கள் நகரத்துக்குள் சென்று அநேகரால் பார்க்கப்பட்டனர்.
Matthew 27:54-56
இயேசு மரித்த பொழுது நடந்த அற்புதமான சம்பவங்களின் சரிதையை இது தொடரச்செய்கிறது.
Matthew 27:57-58
இது இயேசுவின் அடக்கத்தைக் குறித்த சரிதையைத் துவக்குகிறது.
அவனுக்கு அதைக் கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டிருந்தான்.
“பின்பு இயேசுவின் சரீரத்தை யோசேப்புக்குக் கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டிருந்தான்.”
Matthew 27:59-61
இது இயேசுவின் அடக்கத்தைக் குறித்த சரிதையைத் தொடர்கிறது. மெல்லிய துப்பட்டி
மெல்லிய துப்பட்டி
வாங்குவதற்கு விலை அதிகமான மெல்லிய வஸ்திரம்
கல்லறையின் எதிரில்
“கல்லறையின் பக்கத்திலிருந்து”
Matthew 27:62-64
இயேசுவின் அடக்கத்துக்குப் பின் நடந்த சம்பவங்களின் சரிதையை இது தொடர்கிறது.
ஆயத்தம்
பஸ்காவுக்கு ஆயத்தமாகும் நாள்
வஞ்சிக்கிறவன் உயிரோடிருக்கும்போது
“வஞ்சிக்கிறவனாகிய இயேசு உயிரோடிருந்த போது”
Matthew 27:65-66
இயேசுவின் அடக்கத்துக்குப் பின் நடந்த சம்பவங்களின் சரிதையை இது தொடர்கிறது.
காவலன்
4
6 ரோம வீரர்கள்
கல்லுக்கு முத்திரைப் போட்டு
சாத்தியமான அர்த்தங்கள்: 1. கல்லைச் சுற்றி கயிர் போட்டு கல்லறையின் நுழைவில் உள்ள கற்சுவரின் இருபக்கத்திலும் சேர்த்துவிடுவார்கள் (UDB பார்) அல்லது 2. கல்லுக்கும் சுவருக்கும் இடையில் முத்திரைகளைப் போடுவார்கள்
காவலர்களை வைத்து
“மக்கள் கல்லறையைத் தொடவிடாமலிருக்கக் கூடிய தூரத்தில் அவர்களை நிற்கச் சொல்லி”
Matthew 28
Matthew 28:1-2
மரித்தோரிலிருந்து இயேசு எழுப்பப்படுகிறதின் சரிதையை இது துவங்குகிறது.
ஓய்வுநாளின் கடைசியில், வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில்
“ஓய்வுநாள் முடிந்த பிறகு, ஞாயிறுக் காலை சூரியன் உதிக்கும்போது”
மற்றுமொரு மரியாள்
“மரியாள் என்று பேர்கொண்ட மற்றொரு ஸ்திரீ,” யாக்கோபு மற்றும் யோசேப்பின் தாய் மரியாள்
இதோ
வரப்போகும் அதிசயமான தகவலுக்கு வாசகர்கள் கவனம் செலுத்தும் படி இதைச் சொல்லுகிறார்.
பூமியதிரும்படி வானத்திலிருந்து ஒரு தூதன் இறங்கி வந்து ... கல்லைப் புரட்டிப்போட்டான்
சாத்தியமான அர்த்தங்கள்: 1. தேவதூதன் இறங்கிவந்ததால் பூமியதிர்ச்சி ஏற்பட்டது (ULB) அல்லது 2. அல்லது இந்த அனைத்து சம்பவங்களும் ஒரே நேரத்தில் நடந்தது (UDB).
பூமியதிர்ச்சி
திடீரென்று மூர்க்கத்தனமான நில அதிர்வு
Matthew 28:3-4
இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கும் சரிதையை இது தொடர்கிறது. அவனது தோன்றுதல்
அவனது தோன்றுதல்
“தூதரின் தோற்றம்”
மின்னலைப் போல இருந்தது
“பிரகாசமான மின்னலைப் போல இருந்தது”
பனியைப் போல வெண்மையாய் இருந்தது
“மிகவும் பிரகாசமாக”
மரித்த மனிதரைப் போல
“நகர்ந்துபோக முடியாமல்”
Matthew 28:5-7
இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கும் சரிதையை இது தொடர்கிறது.
பெண்கள்
“மகதலேனா மரியாள் மற்றும் மரியாள் என்று பேருடைய மற்றொரு பெண்”
சிலுவையில் அடிக்கப்பட்ட
“மக்களும் வீரர்களும் சிலுவையில் அறைந்த”
ஆனால் அவர் எழுந்தார்
“ஆனால் தேவன் அவரை எழுப்பினார்”
Matthew 28:8-10
இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கும் சரிதையை இது தொடர்கிறது.
பெண்கள்
“மகதலேனா மரியாள் மற்றும் மரியாள் என்று பேருடைய மற்றொரு பெண்”
இதோ
வரப்போகும் அதிசயமான தகவலுக்கு வாசகர்கள் கவனம் செலுத்தும் படி இதைச் சொல்லுகிறார். அவர் பாதங்களைப் பிடித்து
அவர் பாதங்களைப் பிடித்து
“அவர்கள் முழங்காலில் நின்று அவர் பாதங்களைப் பிடித்து”
என் சகோதரர்கள்
இயேசுவின் சீடர்கள்
Matthew 28:11-13
உயிர்தெழுதலுக்கு அதிகாரிகளின் பிரதிக்கிரியையை இது துவங்குகிறது.
பெண்கள்
மகதலேனா மரியாளும் மரியாள் என்ற மற்றொரு பெண்ணும்
இதோ
இது பெரிய சம்பவத்தில் இன்னுமொரு சம்பவத்தின் துவக்கத்தைக் குறிக்கிறது. இங்கு முன் சம்பவாங்களில் இருந்தவர்கள் அல்லாமல் வேறே மக்களை ஈடுபடுத்தி இருக்கலாம். உங்கள் மொழி இதை செய்ய ஒரு வழி வைத்திருக்கலாம்.
அவர்களோடு ஆலோசித்து
“அவர்களுக்குள்ளாக ஒரு திட்டத்தை தீர்மானம்பண்ணி.” ஆசாரியர்களும் மூப்பர்களும் வீரர்களுக்குப் பணம் தர முடிவு செய்தனர். ‘இயேசுவின் சீடர்கள் வந்தார்கள் ... நாங்கள் உறங்கிக்கொண்டு இருக்கும்போது,’ என்று மற்றவர்களிடம் சொல்லுங்கள்.
“உங்களைக் கேட்கிற எல்லாரிடமும் சொல்லுங்கள் இயேசுவின் சீடர்கள் வந்தார்கள் ... நாங்கள் உறங்கிக்கொண்டு இருக்கும்போது,’ என்று.”
Matthew 28:14-15
அதிகாரிகள் வீரர்களிடம் என்ன செய்ய சொன்னார்கள் என்பதை இது தொடர்கிறது.
ஆளுனர்
பிலாத்து
அவர்களுக்கு சொல்லப்பட்டபடி அவர்கள் செய்தார்கள்
“ஆசாரியர்களால் அவர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லப்பட்டபடி அவர்கள் செய்தார்கள்”
இன்று
மத்தேயு புத்தகத்தை எழுதின நேரம்
Matthew 28:16-17
உயர்த்தெழுந்த பிறகு இயேசு தன் சீடர்களோடு சந்தித்த சரிதையை இது துவங்குகிறது.
Matthew 28:18-19
உயர்த்தெழுந்த பிறகு இயேசு தன் சீடர்களோடு சந்தித்த சரிதையை இது தொடர்கிறது.
பெயருக்குள்
“அதிகாரத்தின்படி”
Matthew 28:20
உயர்த்தெழுந்த பிறகு இயேசு தன் சீடர்களோடு சந்தித்த சரிதையை இது தொடர்கிறது.
அவர்களுக்குக் கற்றுக்கொடுத்து
“ஞானஸ்நானம் நீ கொடுக்கிறவர்களுக்குப் போதி”
பார்
மறு மொழிபெயர்ப்பு: “பார்” அல்லது “கவனி” அல்லது “நான் உனக்குஎன்ன சொல்லப்போகிறேன் என்பதற்கு கவனம் செலுத்து.”