Acts
Acts 1
Acts 1:1-3
நான் எழுதின முந்தைய புத்தகம்
லூக்கா முந்தைய புத்தகமாகும்.
ஓ தெயோப்பிலுவே
லூக்கா இந்தப் புத்தகத்தை தெயோப்பிலு என்ற மனிதருக்கு எழுதினார். லூக்கா அவருக்குத் தெரிவிப்பதினாலே "ஓ" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. சில மொழிபெயர்ப்புகள் தங்களுடைய சொந்தக் கலாச்சாரத்தில் கடிதத்தைத் தெரிவிக்கிற விதத்தைப் பின்பற்றி "அன்பான தெயோப்பிலுவே" என்று வாக்கியத்தின் துவக்கத்திலே எழுதுவார்கள். தெயோப்பிலுவே என்பதற்கு "தேவனுடைய சிநேகிதன் " என்று அர்த்தம்.
அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும்
இது இயேசு பரலோகத்திற்கு ஏறிச்சென்றதைக் குறிக்கிறது
பரிசுத்தஆவியினாலே கட்டளையிடுவது
குறிப்பிட்ட காரியங்களில் அவருடைய அப்போஸ்தலர்களுக்கு அறிவுறுத்துவதற்காகப் பரிசுத்தஆவியானவர் இயேசுவை வழிநடத்தினார்.
அவருடைய பாடுகளுக்குப் பின்பு
இது இயேசுவின் பாடுகள் மற்றும் சிலுவை மரணத்தையும் குறிக்கிறது.
அநேகருக்குக் காட்சியளித்தார்
அவருடைய பன்னிரெண்டு அப்போஸ்தலர்கள் அல்லாமல் அவருடைய மற்ற அநேக சீஷர்களுக்கும் காட்சியளித்தார்.
Acts 1:4-5
அப்பொழுது அவர்...
"அவர் " என்பது இயேசுவைக் குறிக்கிறது.
அவர்களோடு
"அவர்களோடு" என்பது பதினொன்று அப்போஸ்தலர்களைக் குறிக்கிறது.
அவர்கள் எருசலேமை விட்டுப் போகாமலிருக்கும்படி கட்டளையிட்டார்
"அவர்கள் எருசலேமிலேயே இருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார் ." இதை, திறக்கப்பட்ட வல்லமை வேதாகமத்தில் (UDB) இருக்கிறபடி நேரடிக் கட்டளையோடு மொழிபெயர்க்கலாம்.
பிதாவினுடைய வாக்குத்தத்தம்
இது பரிசுத்த ஆவியானவருக்கான குறிப்பு.
ஜலத்தினாலும்...ஆவியினாலும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டது.
இயேசு யோவானுடைய தண்ணீர் ஞானஸ்நானத்தையும், பரிசுத்த ஆவியோடுகூடிய தேவனுடைய ஞானஸ்நானத்தையும் வேறுபடுத்தினார்.
யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தார்
மொழிகளுக்காக, "ஞானஸ்நானப்படுத்து" என்பதின் பொருள் தேவைப்படுகிறது.இதை "யோவான் தண்ணீரினாலே ஜனங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார் " அல்லது "யோவான் அவர்களுக்கு தண்ணீரினாலே ஞானஸ்நானம் கொடுத்தார் " என்று மொழிபெயர்க்கலாம்.
நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்படுவீர்கள்
இதை "தேவன் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் " என்ற செய்வினையோடு மொழிபெயர்க்கலாம்.
Acts 1:6-8
இக்காலத்திலா ராஜ்ஜியத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர்
"நீர் இப்பொழுது மீண்டும் இஸ்ரவேலை வலிமையான தேசமாக்குவீரா?"
நேரங்கள் அல்லது காலங்கள்
"நேரங்கள் அல்லது நாட்கள் "
நீங்கள் பெலனைப் பெற்றுக்கொள்வீர்கள்
"நீங்கள் ஆவியிலே பெலப்படுத்தப்படுவீர்கள் "
நீங்கள் எனக்கு சாட்சியாயிருப்பீர்கள்
இது பெலனைப் பெற்றுக்கொள்வதன் முடிவு. இதை, இதுவே வல்லமையின் நோக்கமாக இருந்தது என்பதைக் காட்டுவதற்காக "எனக்கு சாட்சிகளாயிருங்கள் " என்றும் மொழிபெயர்க்கலாம்.
பூமியின் கடைசிபரியந்தம்
"உலகம் முழுவதும் " அல்லது "பூமியின் கடையாந்திரங்கள் வரைக்கும் "
Acts 1:9-11
அவர்கள் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில்
"அப்போஸ்தலர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில் "
அவர்களுடைய கண்களுக்கு மறைவாக அவர் மேகத்துக்குள் மறைந்தார்
"அவர் வானத்திற்கு ஏறிப்போனார், அவர்கள் அவரைக் காண்பதை மேகம் மறைத்தது, அவர்கள் அவரை ஒருபோதும் காணமுடியாமல் போனது. "
வானத்தை கூர்ந்து கவனித்தல்
"வானத்தை உற்றுப்பார்த்தல்" அல்லது "வானத்தை ஏக்கத்தோடு பார்த்தல்"
கலிலேயராகிய மனுஷரே
குறிப்பாக "அப்போஸ்தலர்களாகிய நீங்கள்". தூதர்கள் அப்போஸ்தலர்களோடு பேசினாலும், மற்ற வசனங்கள் அந்த நிகழ்வின்போது அங்கிருந்த ஆண்கள், பெண்களாகிய மற்ற சீஷர்களையும் குறிப்பிடுகிறது.
நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்?
இந்த அணி இலக்கணக் கேள்வி திறக்கப்பட்ட வல்லமை வேதாகமத்தில் (UDB) உள்ள தகவலாக மொழிபெயர்க்கலாம்.
Acts 1:12-14
பின்பு அவர்கள் எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்
"அப்போஸ்தலர்கள் திரும்பிப்போனார்கள்"
ஓய்வுநாள் பிரயாணம்
ஒய்வுநாளிலே ஜனங்கள் வேலை செய்யாதபடிக்கு பரிசேயர்கள் வைத்திருந்த ஒரு சட்டம்.
அவர்கள் வந்தபோது
"அவர்கள் எருசலேமில் வரவேண்டிய இடத்திற்கு வந்துசேர்ந்தபோது"
மேல்வீடு
வீட்டின் மேல் பகுதியிலுள்ள அறை.
செலோத்தே என்னப்பட்ட சீமோன்
"தேசப்பற்றுமிக்க சீமோன்". அங்கே அனேக செலோத்தேயர்கள் இருந்தார்கள். ஆனால் சீமோன் ஒருவனே செலோத்தேவாக இருந்தவன். செலோத்தேயர்கள், இஸ்ரவேலரை ரோமர்கள் ஆளுகை செய்வதை நிறுத்த விரும்பினார்கள்.
அவர்கள் ஒன்றில் இணைந்திருந்தார்கள்
அக்கூட்டம் ஒன்றாக இணைந்திருந்தது மேலும் அவர்களுக்குள்ளாக பிரிவினைகள் அல்லது சண்டைகள் இல்லை.
அவர்கள் தொடர்ந்து ஜெபத்திலே தரித்திருந்தபோது
"அவர்கள் ஜெபிப்பதற்காக தங்களை ஒன்றாக ஈடுபடுத்திக் கொண்டார்கள்"
Acts 1:15-16
அந்த நாட்களிலே
"இயேசு பரலோகத்திற்குத் திரும்பினதற்குப் பிந்தின குறுகிய நாட்களில்"
சகோதரர்களின் மத்தியில்
"சகோதரர்கள்" என்பது ஆண்கள் மற்றும் பெண்களை உள்ளடக்கிய சகவிசுவாசிகளைக் குறிக்கிறது.
வேதவாக்கியம் நிறைவேற வேண்டிய அவசியம் இருந்தது
பேதுரு குறிப்பாக யூதாசுடன் தொடர்புடைய தீர்க்கதரிசனங்களைத் தெரிவிக்கிறார்.
தாவீதின் வாயினால்
"தாவீதுடைய வார்த்தைகள்." தாவீது அவர்களுக்கு எழுதியிருந்தாலும், "வாய்" என்ற வார்த்தை "வார்த்தை"களைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Acts 1:17-19
பேதுரு 1:16ல் தான் துவங்கின விசுவாசிகளுக்கான தன்னுடைய பேச்சைத் தொடர்கிறார்.
அவனுடைய தீயச் செயல்
"இயேசுவினுடைய விரோதிகளை அவரிடத்திற்கு நடத்துகிற அவனுடைய தீயச் செயல்". "தீயச் செயல்" குறிப்பிடுவதை இது விளக்குகிறது.
பின்பு தலைகீழாக விழுந்து சரீரம் வெடித்து மற்றும் குடல்களெல்லாம் சரிந்துபோனது
இந்த நிலத்தின்மேல், யூதாஸ் தலைகீழாக விழுந்ததினால் அவனுடைய சரீரம் வெடித்தது. மற்ற வேதாகமங்கள் அவன் தன்னையே தூக்கிலிட்டுக்கொண்டான் என்று சொல்கிறது.
இது தெரிந்திருக்கிறது... இரத்த நிலம்.
மரணத்தினாலே ஜனங்கள் அந்த நிலத்தை புதிய பெயரினாலே அழைக்க ஆரம்பித்தார்கள்.
Acts 1:20
பேதுரு 1:16ல் தான் துவங்கின விசுவாசிகளுக்கான தன்னுடைய பேச்சைத் தொடர்கிறார்.
சங்கீத புஸ்தகத்திலே எழுதப்பட்டிருக்கிறது
அவன் மீண்டுமாக எடுத்துக்கூறிய யூதாசின் சூழ்நிலையின் அடிப்படையில், பேதுரு சங்கீத புஸ்தகத்தில் இருக்கிற, அவனுடைய நம்பிக்கை இன்றைய சூழ்நிலையோடு தொடர்புடையது என்ற வாசகத்தை நினைவு கூறுகிறார்.
சங்கீத புஸ்தகம்
இதை "துதிகளின் புஸ்தகம்" அல்லது "பாடல்களின் புஸ்தகம்" என்றும் மொழிபெயர்க்கலாம். இப்புத்தகம் வேதாகமத்தின் ஒரு பகுதி.
அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது
அந்த நிலம் சிதறுண்டு, களைகள்நிறைந்து, எஜமான் மரித்துப்போனதைச் சொல்கிறது.
மேலும் ஒருவனும் அதில் வாசம் பண்ணாதிருப்பானாக
நிலம் அசுத்தமானதும், வசிப்பதற்கு ஏற்றதாகவும் இல்லை.
அவனுடைய தலைமைத்துவப் பொறுப்பை வேறொருவன் எடுத்துக்கொள்ளட்டும்
"அவன் அவனுடைய தலைமைத்துவப் பொறுப்பிலிருந்து மாற்றப்படுவனாக."
Acts 1:21-23
பேதுரு 1:16ல் தான் துவங்கின விசுவாசிகளுக்கான தன்னுடைய பேச்சைத் தொடர்கிறார்.
ஆகையால் இது அவசியமானது
பேதுரு சங்கீத புஸ்தகத்திலிருந்து வசனங்களை ஏன் குறிப்பிட்டார் என்பதையும் அதைக் குறித்து அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதையும் வெளிப்படுத்த இருந்தார்.
எங்களுடனேகூட இருந்த மனிதர்கள்...இவர்களில் ஒருவன் அவருடைய உயிர்த்தெழுதலைக் குறித்து எங்களோடு சாட்சியாக இருக்கவேண்டும்
யூதாசுடைய இடத்தில் அப்போஸ்தலனாகப் பங்குபெறும் மனிதனுடைய தகுதிகளை பேதுரு விவரித்தார்.
அவர்கள் இருவரை முன்வைத்தார்கள்
யூதாசுடைய இடத்தில் வேறொருவனை வைப்பதற்காக, தகுதியுடைய இருவர்களை அவர்கள் கண்டுபிடித்தார்கள்.
யுஸ்து என்னும் மறுபெயருள்ள பர்சபா என்றழைக்கப்பட்ட யோசேப்பு
யோசேப்பு, பர்சபா மற்றும் யுஸ்து என்ற பெயர்களால் அறியப்பட்டார்.
Acts 1:24-26
அவர்கள் ஜெபித்தார்கள்
"பின்பு விசுவாசிகள் ஜெபித்தார்கள் "
கர்த்தராகிய நீர் எல்லோருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிறீர்
" கர்த்தாவே, நீர் ஒவ்வொருவருடைய உள்நோக்கங்களையும் சிந்தைகளையும் அறிந்திருக்கிறீர்."
ஆகவே, இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்குபெறுவதற்காக, இவ்விரண்டுபேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்கு வெளிப்படுத்தும்
"ஆதலால், தேவனே, அப்போஸ்தலர்கள் மத்தியில் காலியான இடத்தைப் பூர்த்திசெய்ய இந்த மனிதர்களில் நீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பியும்."
யூதாஸ் தனக்குரிய இடத்திற்குப் போகும்படி இழந்துபோனதிலிருந்து
யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுத்து, மரித்துப்போனதினால், காலியாக இருந்த ஸ்தானம்.
அவர்களுக்காக அவர்கள் சீட்டுப்போட்டார்கள்
யோசேப்பு மற்றும் மத்தியா ஆகிய இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதற்காக அவர்கள் சீட்டைப் பயன்படுத்தினார்கள்.
சீட்டு மத்தியாவின் பேரில் விழுந்தது
மத்தியா தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்று சீட்டு காண்பித்தது.
அவன் பதினொரு அப்போஸ்தலர்களில் ஒருவனானான்
" சீஷர்கள் அவனையும் அப்போஸ்தலர்களில் ஒருவனாகக் கருதினார்கள் "
Acts 2
Acts 2:1-4
அவர்கள் அனைவரும் ஒன்றாக ஓரிடத்திலே வந்திருந்தார்கள்
"அவர்கள் " என்ற வார்த்தை அநேகமாக லூக்கா 1:15
26 ல் ஒன்றாக இருந்த 120 விசுவாசிகள் கூட்டத்தைக் குறிக்கிறது. இது பன்னிரெண்டு அப்போஸ்தலர்களையும் சேர்த்தது.
பரலோகத்திலிருந்து ஒரு முழக்கம் உண்டானது
"வானத்திலிருந்து ஒரு சத்தம் வந்தது "
பலத்தக் காற்று அடிக்கிற முழக்கம்போல
"மிகவும் பலத்தக் காற்று வீசுவதுபோல " அல்லது "மிகவும் கடினமானக் காற்று வீசுவதுபோல "
வீடு முழுவதும்
இது வீடு அல்லது பெரிய கட்டிடமாக இருந்திருக்கலாம்.
அக்கினியைப் போன்ற நாவுகள்
அனுகூலமான அர்த்தங்கள் 1) நாவுகள் அக்கினியினால் உண்டாக்கப்பட்டது போலக் காணப்பட்டன, அல்லது 2) நாவுகளைப் போலிருந்த சிறிய அக்கினி ஜுவாலைகள். விளக்கைப்போல ஒரு சிறிய இடத்திலே அக்கினி எரியும்போது, ஜூவாலை நாவின் வடிவம் பெறலாம்.
வெவ்வேறு பாஷைகளில் பேசுவது
இந்த பாஷைகள் அவர்கள் இதற்குமுன்பு அறிந்திராதவைகள்.
Acts 2:5-7
தேவபக்தியுள்ள மனிதர்கள்
தேவனைக் கனப்படுத்த அல்லது ஆராதிக்க விரும்பும் ஜனங்கள்.
வானத்தின் கீழுள்ள எல்லாத் தேசங்கள்
"உலகத்திலுள்ள எல்லாத் தேசங்கள் "
இந்த சத்தம் கேட்டபொழுது
இது பலத்தக் காற்று அடிக்கும் சத்தத்தைப்போல என்பதைக் குறிக்கிறது. இதை "அவர்கள் இந்த சத்தத்தைக் கேட்டபொழுது " என்ற செய்வினையோடு மொழிபெயர்க்கப்படலாம்.
திரளான ஜனங்கள்
"அதிக ஜனக்கூட்டம் "
கலிலேயர்கள்
இதை "கலிலேயாவிலிருந்து " என்று மொழிபெயர்க்கலாம்.
Acts 2:8-11
ஏன், நாம் இவர்கள் பேசுகிறதைக் கேட்கிறோம்?
இது 1) ஜனங்களுக்கு பதில் தேவையான இது உண்மையாக கேள்வி, அல்லது 2) அவர்கள் எவ்வளவாய் பிரமித்தார்கள் என்பதை வெளிப்படுத்தும் அணி இலக்கணக் கேள்வியாக இருக்கலாம். இதை திறக்கப்பட்ட ஆற்றல் வேதாகமம் (UDB) அவர்கள் எவ்வளவாய் ஆச்சரியப்பட்டார்கள் என்பதைக் காண்பிக்கும் அறிக்கை.
பார்த்தரும், மேதரும் மற்றும் எலாமீத்தரும்
"பார்த்தா, மேதியா மற்றும் ஏலாம்."
மதம் மாறியவர்கள்
"யூதர்களாக மாறின யூதரல்லாதவர்கள் " அல்லது "தங்களுடைய மதத்திலிருந்து யூதராக மாறின ஜனங்கள் " அல்லது "யூத மதத்திற்கு மாற்றுவது "
Acts 2:12-13
பிரமித்து சந்தேகப்பட்டார்கள்
என்ன நடந்துகொண்டிருந்தது என்பதைக் குறித்து என்ன நினைப்பது என்பதை ஜனங்கள் அறியாமல் இருந்தார்கள். (UDB)இதை "ஆச்சரியப்பட்டு குழம்பியிருந்தார்கள் " என்று மொழிபெயர்க்கலாம்.
இதனுடைய அர்த்தம் என்ன?
சிலர் இந்த நிகழ்வைக் கருத்துடன் எடுத்துக்கொண்டனர்.
ஆனால் மற்றவர்கள் பரிகாசம்பண்ணினார்கள்
"ஆனால் மற்றவர்கள் அவமானப்படுத்தினார்கள்" அல்லது "இகழ்ந்தார்கள் "
அவர்கள் புதிய மதுபானத்தினால் நிறைந்திருந்தார்கள்
இதை "அவர்கள் மது அருந்தியிருந்தார்கள் " என்று மொழிபெயர்க்கலாம். சிலர் அற்புதங்களை விசுவாசிக்காமல், அப்போஸ்தலர்களைப் பரிகாசம்பண்ணினார்கள்.
புதிய மதுபானம்
சாதாரண மதுபானத்தைவிட திடமான பானம்.
Acts 2:14-15
பதினொருவரோடுங்கூட நின்றார்
பேதுருவினுடைய வார்த்தைகளுக்கு உதவியாக எல்லா அப்போஸ்தலர்களும் நின்றார்கள்.
அது மூன்றாம்மணிவேளை
"இது காலை ஒன்பது மணி " ஜனங்கள் நாளின் அதிசீக்கிரத்திலேயே மதுபானம் அருந்தக்கூடாது என்று அறிந்துகொள்ளவேண்டுமென்று பேதுரு எதிர்பார்த்தான். இது உள்ளடக்கமான தகவல், தேவைப்பட்டால் வெளிப்படையாகவும் தெரியப்படுத்தலாம்.
நாளின் மூன்றாம்மணிவேளை
"காலை ஒன்பது மணி "
Acts 2:16-17
பேதுரு 2:14 ல் தான் துவங்கின யூதர்களுக்கான தன்னுடைய பேச்சைத் தொடர்கிறார்.
யோவேல் தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டவைகள் இவைகளே
"இதுதான் தேவன் யோவேல் தீர்க்கதரிசிக்குக் கூறி, அவரை எழுதும்படியாய் சொன்னது" அல்லது "யோவேல் தீர்க்கதரிசி தேவன் சொன்னவைகளை எழுதினான்"
உரைக்கப்பட்டவை
இதை "தேவன் சொன்னவைகள்" அல்லது "தேவன் பேசினவைகள்" என்ற செய்வினைச்சொல்லோடு மொழிபெயர்க்கலாம்.
கடைசிநாட்களில் இருக்கும்
இதை "கடைசிநாட்களில்" என்று மொழிபெயர்க்கலாம். கடைசிநாட்களில் சம்பவிக்கப்போகிறவைகளைக் குறித்து அவர் பேசப்போகிற காரியங்கள். இது தேவன் சொன்னவைகளின் முதல் பகுதி. "கர்த்தர் சொல்லுகிறார் " என்ற வார்த்தைகள் திறக்கப்பட்ட ஆற்றல் வேதாகமத்தில் (UDB) வருவதுபோல முதலில் வரலாம்.
மாம்சமான யாவர்மேலும் ஆவியை ஊற்றுதல்
இது தேவன் எப்படியாய் மக்களுக்குத் தம்முடைய ஆவியைப் பரிபூரணமாகத் தருகிறார் என்பதைச் சொல்கின்ற உருவகஅணி.
எல்லா மாம்சங்கள்
"எல்லா ஜனங்கள்." ஜனங்கள் மாம்சத்தினாலே உண்டாக்கப்பட்டிருக்கிறபடியால் "மாம்சம் " என்ற வார்த்தை ஜனங்களைக் குறிக்கிறது.
Acts 2:18-19
1:16 ல் தான் தொடங்கின யூதர்களுக்கான தன்னுடைய பேச்சில் பேதுரு தொடர்ந்து யோவேல் தீர்க்கதரிசியைக் குறித்துக் குறிப்பிடுகிறார்.
நான் என் ஆவியை ஊற்றுவேன்
தேவன் தன்னுடைய ஆவியைத் தாராளமாய் தருவார்.
தீர்க்கதரிசனம்
தேவனுடைய சத்தியத்தைப் பேச தேவன் அவர்களை ஏவுகிறார்.
ஆவி
"மேகம்" அல்லது "புகை"
ஊற்றுதல்
இது ஒரு பெரிய பாத்திரம் அல்லது வாளியில் உள்ள நிறைய தண்ணீரை ஒருவர் வெளியே ஊற்றி காலிசெய்வதைப் போன்றது. இதை நீங்கள் கடைசி தொகுப்பில் மொழிபெயர்ப்பு செய்தது போலவே செய்யவும்.
Acts 2:20-21
1:16 ல் தான் தொடங்கின யூதர்களுக்கான தன்னுடைய பேச்சில் பேதுரு தொடர்ந்து யோவேல் தீர்க்கதரிசியைக் குறித்துக் குறிப்பிடுகிறார்.
சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்
இந்த சொற்றொடரின் சரியான அர்த்தம் தெளிவாக இல்லை, முடிந்தவரை உங்களுடைய மொழியில் இருப்பதைப்போலவே அதை பொருள்மாறாமல் மொழிபெயர்க்கவும்.
அழைத்தல்
ஜெபிப்பது அல்லது மன்றாடுவது
Acts 2:22-24
பேதுரு 1:16 ல் தான் துவங்கின யூதர்களுக்கானத் தன்னுடையப் பேச்சைத் தொடர்கிறார்.
நிர்ணயிக்கப்பட்ட ஆலோசனை மற்றும் தேவனுடைய முன்னறிவு
கிறிஸ்துவின் மரணம் நீண்ட காலங்களுக்கு முன்பாகவே நிர்ணயிக்கப்பட்ட திட்டம் மற்றும் தேவனுடைய அறிவின் படியானது.
உங்களுடைய
இது உங்களுடைய என்பதின் பன்மை. உங்களுடைய மொழியில் நீ என்பதற்கு வேறு வார்த்தை இருக்குமானால் அதைப் பயன்படுத்தவும்.
அவர் விடுவிக்கப்பட்டார்
"மனிதர்கள் அவரை விடுவித்தனர் ", நீங்கள் அவரை ஒப்புக்கொடுத்தீர்கள் ", மக்கள் அவரை விடுவித்தனர் "
கட்டவிழ்க்கப்பட்டது
ஒருவர் கயிற்றை அவிழ்ப்பதைப்போல கட்டவிழ்க்கப்பட்டது.
அவரிடமிருந்து மரணத்தின் உபாதைகளின் கட்டை அவிழ்ப்பது
"மரணத்தின் வேதனையிலிருந்து அவரை விடுவிப்பது அல்லது கட்டவிழ்ப்பது "
பிடித்துக்கொள்ளுதல்
மரணத்தின் வல்லமையினால் இயேசுவைப் பிடித்துவைக்க முடியவில்லை.
Acts 2:25-26
பேதுரு 1:16ல் தான் துவங்கின யூதர்களுக்கான தன்னுடைய பேச்சைத் தொடர்கிறார்.
நான் கண்டேன்
தாவீது தன்னுடைய வாழ்க்கையில் காரியங்கள் வெளிப்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே தேவன் செயல்படுவதைப் பார்த்தான்.
என் முகத்திற்கு முன்பாக
என்னுடைய சமூகத்தில், என்னோடு
என்னுடைய வலதுபாரிசத்தில்
வலதுகரம் என்பது பலமுள்ளதாக கருதப்பட்டது. வலதுபக்கத்தில் ஒருவர் இருக்கிறார் என்பது பலசாலியான ஊழியனாகவோ அல்லது பலசாலியான உதவியாளனாகவோ இருக்கலாம்.
என் இருதயம் மகிழ்ந்து, என் நாவு களிகூர்ந்தது
உள்ளார்ந்த மகிழ்ச்சியின் வெளிப்புற வெளிப்படுத்தப்படுதல் கொடுக்கப்பட்டுள்ளது.
என் மாம்சம் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்
"நான் வாழ்கிற நாட்களெல்லாம் தேவனையே நம்புவேன் "
Acts 2:27-28
1:16 ல் தான் தொடங்கின யூதர்களுக்கான தன்னுடைய பேச்சில் சங்கீதத்தில் உள்ள தாவீதைப் பேதுரு தொடர்ந்து குறிப்பிடுகிறார்.
உம்முடைய பரிசுத்தர்
"உம்முடைய அபிஷேகம் பண்ணப்பட்டவர் அல்லது தெரிந்துகொள்ளப்பட்டவர் "
அழிவைக் காண்பதற்காக
அவருடைய சரீரம் கெட்டுப்போகும்படி மரணத்தில் நிலைத்திருக்காது. அனேகமாக "அழிவை அடைய " என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம்.
ஜீவமார்க்கங்கள்
"வாழ்வுதரும் சத்தியங்கள் "
Acts 2:29-31
பேதுரு 1:16ல் தான் துவங்கின யூதர்களுக்கான தன்னுடைய பேச்சைத் தொடர்கிறார்.
கோத்திரத்தலைவன்
நீண்ட காலங்களுக்கு முன்பு வாழ்ந்த தகப்பன்.
உறுதிமொழி
ஒப்பந்தத் தகவல் அல்லது உறுதிமொழி
சத்தியம் செய்தல்
ஒருவர் வாக்குபண்ணினது உண்மை என்று உறுதியான தகவலை உண்டுபண்ணுதல்.
சகோதரர்கள்
ஆண்கள் மற்றும் பெண்களை உள்ளடக்கிய மொழி.
அவன் முன்னமே கண்டான்
தாவீது முன்னமே கண்டு அப்போஸ்தலர் 1:27
28 ல் மேசியாவைப்பற்றி பேசியிருக்கிறார்
Acts 2:32-33
பேதுரு 1:16ல் தான் துவங்கின யூதர்களுக்கான தன்னுடைய பேச்சைத் தொடர்கிறார்.
தேவனுடைய வலதுகரம்
"உறுதி, கனம், தயவு, நம்பிக்கை, ஒத்தாசை, வல்லமையின் இடம் மற்றும் தேவனுடைய பாக்கியங்கள் "
Acts 2:34-36
பேதுரு 1:16ல் தான் துவங்கின யூதர்களுக்கான தன்னுடைய பேச்சைத் தொடர்கிறார்.
கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார்
"கர்த்தர் (தேவன்) என்னுடைய ஆண்டவரிடம் (கிறிஸ்து) சொன்னார் "
என் வலதுபாரிசத்தில் உட்காரும்
" என்னிடத்தில் உம்முடைய கனத்தையும், நம்பிக்கையையும், பாக்கியங்களையும் மற்றும் வல்லமையையும் எடுத்துக்கொள்ளும் "
நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும்
"நான் உம்முடைய சத்துருக்களை உமக்காக தோற்கடிக்கப்பட்ட நிலைக்கு அல்லது இடத்தில் போடும்வரைக்கும் "
Acts 2:37-39
இருதயத்தில் குத்தப்பட்டவர்கள்
இந்தக் காரியங்களைக் கேட்பது எவ்வளவு வேதனையானது என்பதை வலியுறுத்துவதற்காக, குத்தப்படுகிற என்கிற இந்த உருவகத்தை லூக்கா பயன்படுத்துகிறார்.
உங்களுக்கு வாக்குத்தத்தம்
"வாக்குத்தத்தம் உங்களுக்கு"
Acts 2:40-42
உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள்
உங்களை விலக்கிக்கொள்ளுங்கள்.
மாறுபாடான சந்ததி
ஒழுக்கத்திலும் ஆவியிலும் கெட்டுப்போனார்கள்
பெற்றுக்கொண்டார்கள்
விசுவாசித்தார்கள், ஏற்றுக்கொண்டார்கள்
ஞானஸ்நானம் பெற்றார்கள்
இயேசுவின் சீஷர்கள் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்கள்.
Acts 2:43-45
எல்லாவற்றையும் பொதுவாக வைத்து அனுபவித்தார்கள்
"அவர்களுடைய எல்லா உடைமைகளையும் பகிர்ந்துகொண்டார்கள் "
பகிர்ந்துகொடுத்தார்கள்
அவர்களுக்குக் கொடுத்தார்கள் அல்லது விளைபயனைப் பகிர்ந்துகொண்டார்கள் அல்லது பணங்களைக் கொடுத்தார்கள்
பயம்
பயபக்தியின் அச்சம்.
ஒன்றாய் இருந்தார்கள்
ஒரே காரியத்தை விசுவாசித்தார்கள்.
ஒவ்வொருவனுடைய தேவைக்குத்தக்கதாக
தேவைகள் வெளிப்படுத்தப்பட்ட அல்லது கவனிக்கப்பட்டபோது, மற்ற விசுவாசிகள் தேவைகளைச் சந்திப்பதற்காகக் கொடுத்தார்கள்.
Acts 2:46-47
ஒரு நோக்கத்துடன்
"ஒரு மனதுடன் "
அவர்கள் தொடர்ந்திருந்தார்கள்
"விசுவாசிகள் தொடர்ந்திருந்தார்கள்"
அப்பம் பிட்டார்கள்
ஆகாரத்தைப் பகிர்ந்துகொண்டார்கள், கர்த்தருடைய பந்தியைப் பகிர்ந்துகொண்டார்கள்.
இருதயத் தாழ்மை
முன்பே அறியாமலும், வெறுமனே, தேவையில்லாத உபசாரம் இல்லாமல், கனம் அல்லது சலுகையைச் சாராமல்
தயவுபெற்றிருந்தார்கள்
அதின் மதிப்பைப் பெற்றிருந்தார்கள்
Acts 3
Acts 3:1-3
தேவாலயத்திலே
"தேவாலயப் பகுதிக்குள்" அல்லது "தேவாலயத்தில்." ஊழியம் செய்கின்ற ஆசாரியர்கள் மட்டும் அனுமதிக்கப்படும் உள் கட்டிடத்திற்குள் அவர்கள் செல்லவில்லை.
ஒன்பதாம்மணி நேரம்
"பிற்பகல் மூன்றுமணி "
தர்மம்
"தர்மம்" என்பது தரித்திரர்களுக்கு ஜனங்கள் கொடுக்கிற பணத்தைக் குறிக்கிறது. இந்த மனிதன் தரித்திரனாகவும், தனக்காக பணத்தைக் கேட்டுக்கொண்டிருந்தான்.
Acts 3:4-6
அவனை அவன் உற்றுப்பார்த்து
"அவனை உற்றுப்பார்த்து " அல்லது "அவனை ஆவலோடு பார்த்தல்"
முடவன் அவர்களைப் பார்த்தான்
"முடவன் அவர்களை மிகவும் கவனமாக உற்றுப்பார்த்தான் "
வெள்ளியும் பொன்னும்
இதைத்தான் ஒருமனிதன் பெற்றுக்கொள்ளும்படி எதிர்பார்க்கிறான் என்பதையும் ஆனால் அவனிடம் இல்லாததை பேதுருவிடத்தில் இருந்ததும், அவன் கொடுக்க விரும்பியதோடும் வேறுபடுத்திக் காண்பிப்பதற்காக இவைகள் வாக்கியத்தின் துவக்கத்திலே வைக்கப்பட்டுள்ளது. "வெள்ளியும் பொன்னும் " என்ற சொற்றொடர் பணத்திற்கான உருவகம்.
Acts 3:7-8
அவன் தேவாலயத்திற்குள்... பிரவேசித்தான்
இது தேவாலயத்தின் முற்றமாக இருக்கலாம். ஆசாரியர்கள் மட்டுமே தேவாலயத்தின் கட்டிடத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
Acts 3:9-10
அலங்காரவாசல்
"அழகானது என்று அழைக்கப்பட்ட வாசல்"
கண்டார்கள்
"நன்கு கவனித்து" அல்லது "அறிந்து" அல்லது "பார்த்து"
ஆச்சரியப்பட்டு பிரமித்தார்கள்
"மிகவும் பிரமித்தார்கள் " அல்லது "ஆச்சரியப்பட்டு திகைத்தார்கள் "
Acts 3:11-12
போல
"அப்பொழுது "
சாலோமோனுடைய மண்டபம் என்று அழைக்கப்பட்ட
"சாலோமோன் மண்டபம் " சாலோமோன் என்பது நீண்டகாலங்களுக்கு முன்பதாக வாழ்ந்த இஸ்ரவேலின் ராஜாவுடைய பெயர். மண்டபம், கூரையினால் மூடப்பட்ட வரிசையில் அமைந்த தூண்களும் ஒரு பக்கத்திலே திறக்கப்பட்டதாகவும் இருந்தது. இது "சாலோமோனின் முற்றம் " என்று அழைக்கப்படலாம். சாலோமோன் மண்டபம் மிகவும் பெரியதாக இருந்தது.
அதிகமாய் ஆச்சரியப்படுதல்
"முழுவதும் ஆச்சரியம்" அல்லது "திகைப்படைந்தனர் " அல்லது "முழுவதும் அச்சம் "
பேதுரு அதைக் கண்டபோது
"ஜனங்கள் பெருகுவதை பேதுரு கண்டபோது" அல்லது "பேதுரு ஜனங்களைக் கண்டபோது"
இஸ்ரவேல் மனிதர்களே
"சகஇஸ்ரவேலர்கள் " பேதுரு ஜனக்கூட்டத்தாரிடம். இந்த "மனிதர்கள்" என்பது அங்கே கூடிவந்திருந்த ஒவ்வொருவரையும் குறிக்கிறது (ஆண்கள், பெண்கள், பிள்ளைகள்).
நீங்கள் ஏன் ஆச்சரியப்படுகிறீர்கள் ?
இது ஒரு அணி இலக்கணக் கேள்வி. இதை "நீங்கள் வியப்படையக்கூடாது" என்று மொழிபெயர்க்கலாம்.
நீங்கள் எங்களை நோக்கிப் பார்க்கிறதென்ன?
இந்த அணி இலக்கணக் கேள்வியை "நீங்கள் எங்களை நோக்கிப் பார்க்கக்கூடாது" அல்லது "நீங்கள் எங்களை நோக்கிப் பார்ப்பதற்கான காரணங்கள் ஒன்றுமில்லை" என்று மொழிபெயர்க்கலாம்.
எங்களை
"எங்களை" என்பது பேதுருவையும் யோவானையும் குறிக்கிறது, இரட்டை மற்றும் தனிப்பட்ட அமைப்பு.
நாங்கள்
"நாங்கள்" என்பது பேதுருவையும் யோவானையும் குறிக்கிறது, இரட்டை மற்றும் தனிப்பட்ட அமைப்பு.
நாங்கள் எங்கள் சுயசக்தியினாலாவது, அல்லது சுயபக்தியினாலாவது இவனை நடக்கப்பண்ணினோமா?
இது ஒரு அணி இலக்கணக் கேள்வி. இதை "நாங்கள் எங்களுடைய சொந்த சக்தியினாலோ அல்லது பக்தியினாலோ அவனை நடக்கச் செய்யவில்லை" என்று மொழிபெயர்க்கலாம்.
Acts 3:13-14
பேதுரு 3:13ல் தான் துவங்கின யூதர்களுக்கான தன்னுடைய பேச்சைத் தொடர்கிறார்.
நீங்கள் ஒப்புக்கொடுத்தவர்
"நீங்கள் பிலாத்துவினிடத்தில் கொண்டுவந்தவர் "
மேலும் பிலாத்துவுக்கு முன்பாக மறுதலித்தீர்கள்
"மேலும் பிலாத்துவுக்கு முன்பாக நீங்கள் அவரை நிராகரித்தீர்கள் "
அவன் அவரை விடுதலையாக்கத் தீர்மானித்தபோது
" பிலாத்து இயேசுவை விடுதலையாக்கவேண்டுமென்று தீர்மானித்தபோது "
கொலைபாதகன் உங்களுக்காக விடுதலை பண்ணப்படவேண்டும்
இதை "பிலாத்து உங்களுக்காக கொலைபாதகனைக் கொடுக்கவேண்டும்" என்ற செய்வினைச்சொல்லோடு மொழிபெயர்க்கலாம்.
உங்களுக்காக விடுதலைபண்ணவேண்டும்
"உங்களுக்காக கொடுக்கப்படவேண்டும்" இதற்கு "தயவாக கொடுக்கப்படவேண்டும்" என்று பொருள். சூழ்ச்சியிலிருந்து "விடுவிக்கப்படுவது" என்று பொருள்படாது.
Acts 3:15-16
பேதுரு 3:13ல் தான் துவங்கின யூதர்களுக்கான தன்னுடைய பேச்சைத் தொடர்கிறார்.
ஜீவனின் அதிபதி
"ஜீவனைத் துவக்கினவர் " அல்லது "ஜீவனின் ஆளுநர் "
இந்த மனிதனை பெலப்படுத்தியது
"இந்த மனிதனுக்கு பூரண பெலத்தைக் கொடுத்தது"
அவருடைய நாமத்தில் உள்ள விசுவாசம்
பெயர்ச்சொல் அர்த்தங்கள் இல்லாத மொழிகள் "விசுவாசம்" என்பதற்கு வினைச்சொல் அர்த்தங்களாகிய விசுவாசம் அல்லது நம்பிக்கை ஆகியவற்றை பயன்படுத்த அவசியப்படலாம். யார் விசுவாசித்தது என்று அவர்கள் சொல்லவேண்டுமானால், அவர்கள் "நாங்கள்" என்பதைக் குறிக்கலாம்.
Acts 3:17-18
பேதுரு 3:13ல் தான் துவங்கின யூதர்களுக்கான தன்னுடைய பேச்சைத் தொடர்கிறார்.
Acts 3:19-20
பேதுரு 3:13ல் தான் துவங்கின யூதர்களுக்கான தன்னுடைய பேச்சைத் தொடர்கிறார்.
மீண்டும் திரும்புங்கள்
"தேவனிடத்தில் திரும்புங்கள் "
கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கு
"கர்த்தர் உங்களைப் பெலப்படுத்தும்படிக்கு"
கிறுக்கிப்போடப்பட்டது
"அழிக்கப்பட்டது" அல்லது "நீக்கப்பட்டது"
Acts 3:21-23
பேதுரு 3:13ல் தான் துவங்கின யூதர்களுக்கான தன்னுடைய பேச்சைத் தொடர்கிறார்.
பரலோகம் ஏற்றுக்கொள்ளவேண்டும்...
இயேசு என்ன செய்வார் என்று முன்பதாகவே சொல்லப்பட்டதினால் அவர் பரலோகத்திலேயே இருப்பார்.
எல்லாக்காரியங்களும் நிறைவேறித்தீரும் காலம்வரைக்கும்
"தேவன் எல்லாவற்றையும் புதுப்பிக்கும் காலம்வரை "
அவருடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளுடைய வாயினால் தேவன் பேசினவைகள்
"தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளுக்கு புதுப்பித்தலைக் குறித்து பேசச் சொன்னவை"
உலகத்தோற்றமுதல் இருக்கிற அவருடைய பரிசுத்த தீர்க்கதரிசிகள்
"பூர்வகாலத்தில் வாழ்ந்த அவருடைய பரிசுத்த தீர்க்கதரிசிகள் "
தீர்க்கதரிசியை எழும்பப்பண்ணுவார்
"தீர்க்கதரிசியாக இருக்கும்படி ஒருவனைத் தேர்ந்தெடுப்பார் " அல்லது "தீர்க்கதரிசியாக இருக்க ஒருவனுக்கு அதிகாரம் கொடுப்பார் "
அழிக்கப்பட்டது
"விலக்கப்பட்டது" அல்லது "நீக்கப்பட்டது " அல்லது "எடுக்கப்பட்டது"
Acts 3:24-26
பேதுரு 3:13ல் தான் துவங்கின யூதர்களுக்கான தன்னுடைய பேச்சைத் தொடர்கிறார்.
அவருக்குப்பின் வந்த எல்லோரும்
"சாமுவேலுக்குப் பின்பு வாழ்ந்த எல்லாத் தீர்க்கதரிசிகளும் "
இந்த நாட்கள்
"இந்த காலங்கள் " அல்லது "இப்பொழுது நடக்கிற காரியங்களை" அல்லது "நடந்துகொண்டிருக்கிற காரியங்களை"
நீங்கள் தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள்
"நீங்கள் தீர்க்கதரிசிகளின் சந்ததிகள்." இதை "தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளின் மூலமாக வாக்குத்தத்தம் செய்தவைகளை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.
உடன்படிக்கையின்
"உடன்படிக்கையின் புத்திரர்கள்" அல்லது "உடன்படிக்கையின் சந்ததி." இதை "தேவன் தம்முடைய உடன்படிக்கையில் வாக்குத்தத்தம் செய்தவைகளை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.
உன்னுடைய வித்தில்
"உன்னுடைய சந்ததியினாலே"
தேவன் தம்முடைய ஊழியரை எழுப்பினப்பின்பு
"தேவன் தம்முடைய ஊழியரைத் தெரிந்துகொண்டபின்பு" அல்லது "தேவன் தம்முடைய ஊழியருக்கு அதிகாரம் கொடுத்தப்பின்பு "
அவருடைய ஊழியர்
இது தேவனுடைய மேசியாவைக் குறிக்கிறது.
Acts 4
Acts 4:1-4
தேவாலயத்தின் சேனைத்தலைவன்
தேவாலயத்தின் தலைமைக் காவலன்
அவர்களிடத்தில் வந்து
"அவர்களை அணுகி" அல்லது "அவர்களிடம் வந்து"
அவர்கள் அதிகமாக சினமடைந்து
பேதுரு இயேசுவையும், மரணத்திலிருந்து அவருடைய உயிர்த்தெலுதலையும் போதித்தான். சதுசேயர்கள், மரணத்திலிருந்து இயேசுவின் உயிர்த்தெழுதலை விசுவாசிக்காததினால் இது அவர்களை கோபமடையச் செய்தது.
மனிதர்களுடைய எண்ணிக்கை
குறிப்பாக ஆண்கள். அங்கிருந்த பெண்கள் மற்றும் பிள்ளைகள் எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை.
சாயங்காலமாக இருந்தபடியால்
இரவு நேரத்தில் மக்களை விசாரிக்காமல் இருப்பது அப்பொழுது இருந்த பொதுவான பழக்கம்.
ஏறக்குறைய ஐயாயிரம்
"ஐயாயிரமானது" அல்லது "ஐயாயிரமாக வளர்ந்தது."
Acts 4:5-7
எந்த வல்லமையினாலே
"யார் உங்களுக்கு வல்லமை கொடுத்தது" அல்லது "எது உங்களுக்கு வல்லமை கொடுத்தது." பேதுருவும் யோவானும் தங்கள் சுயத்தினால் அந்த மனிதனை சுகமாக்கியிருக்க முடியாது என்று அவர்கள் அறிந்திருந்தார்கள்.
எந்த நாமத்தினால்
"யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது"
Acts 4:8-10
இஸ்ரவேல் மக்கள்
இஸ்ரவேல் தேசத்தின் குடிமக்கள்.
Acts 4:11-12
பேதுரு 4:8 ல் தான் துவங்கின யூதமதத்தின் அதிகாரிகளுக்கான தன்னுடைய பேச்சைத் தொடர்கிறார்.
இயேசு கிறிஸ்து ஒரு கல்
இது ஒரு உவமை. கட்டிடத்தின் அஸ்திபாரத்திற்கும், கட்டிடத்தின் குறிப்பிற்கும் ஒரே ஒரு மூலைக்கல் வைக்கப்படுவதைப்போல, இயேசு ஒருவரே இரட்சிப்பின் அஸ்திபாரமாக இருக்கிறார்.
Acts 4:13-14
தைரியத்தை அவர்கள் கண்டபோது
"அவர்கள்" என்பது ஜனத்தின் தலைவர்களைக் குறிக்கிறது.
அவர்களை அறிந்து
"உணர்ந்துகொள்ளுதல்" அல்லது "தெரிந்துகொள்ளுதல்"
அவர்கள் சாதாரணமானவர்கள்
"அவர்கள்" என்பது பேதுரு மற்றும் யோவானாகிய இருவரைக் குறிக்கிறது.
படிப்பறிவில்லாதவர்கள்
"பயிற்சியற்றவர்கள்" அல்லது "கல்வி கல்லாதவர்கள்"
Acts 4:15-18
நாம் அதை மறுக்கமுடியாது
"நாம் அற்புதத்தை மறுக்கமுடியாது". இந்த மனிதன் சுகமாக்கப்பட்டான் என்பது எருசலேமில் உள்ள எல்லோரும் தெரிந்திருந்தார்கள்
அவர்களை
பேதுரு மற்றும் பவுலாகிய இருவரைக் குறிக்கிறது.
பேசக்கூடாதென்று
"இனி பேசக்கூடாது"
Acts 4:19-20
நாங்கள் பேசாமலிருக்கக்கூடாது
நாங்கள் பேசுவதற்கு நிர்பந்தம் பண்ணப்பட்டிருக்கிறோம்.
அது சரியானதா
தேவனுக்கு நீதியும், கனமுமானது.
Acts 4:21-22
அவர்களைத் தண்டிக்க அவர்களால் ஒரு காரணமும் கண்டுபிடிக்கமுடியவில்லை
மனிதன் சுகமடைந்ததைப் பார்த்த ஜனங்கள், மத்தியில் கலகம் உண்டாக்காமல் பேதுருவையும், யோவானையும் எப்படி தண்டிப்பது என்று தலைவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை.
எச்சரிப்புக்குப் பின்பு
தலைவர்கள் அவர்களைத் தண்டிப்பதாக பயமுறுத்தினார்கள்.
அந்த மனிதன்...நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாக இருந்தான்
அவன் முடமாக இருந்து இப்பொழுதுதான் சுகமடைந்தான் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.
Acts 4:23-25
தங்களுடைய சொந்த ஜனங்களிடத்தில் வந்தார்கள்
அவர்கள் மற்ற விசுவாசிகளிடத்திற்கு போனார்கள்.
அவர்கள் ஒருமனப்பட்டு சத்தமிட்டார்கள்
அவர்கள் எல்லோரும் மனதிலும் சிந்தையிலும் ஒருமனப்பட்டிருந்தார்கள்.
பயனற்ற காரியங்களைச் சிந்திப்பது
ஆதாயமற்ற காரியங்கள்; உண்மையில்லாத காரியங்கள்
Acts 4:26
பேதுரு 4:25 ல் தான் துவங்கின சங்கீதத்தில் தாவீதுராஜாவிடமிருந்து தன்னுடைய குறிப்பைத் தொடர்கிறார்.
அவர்கள் ஏகமாய் கூடினார்கள்
அவர்கள் ஒன்றாய் வந்தார்கள். அவர்கள் தங்களுடைய சேனைகளை ஒன்று சேர்த்தார்கள்.
Acts 4:27-28
விசுவாசிகள் 4:24 ல் துவங்கின ஜெபத்தை ஒன்றுசேர்ந்து தொடர்ந்தார்கள்.
ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும், இஸ்ரவேல் ஜனங்களோடும்
தாவீது புறஜாதிகளை மட்டும் சேர்த்துக்கொண்டார், ஆனால் பேதுரு மேசியாவை எதிர்த்தவர்களாக இஸ்ரவேலர்களையும் அவர்களுடைய அதிபதிகளையும் சேர்த்துக்கொண்டார்.
இந்த நகரத்தில்
எருசலேமில்.
Acts 4:29-31
விசுவாசிகள் 4:24 ல் துவங்கின ஜெபத்தை ஒன்றுசேர்ந்து தொடர்ந்தார்கள்.
அவர்களுடைய எச்சரிக்கைகளை கவனியும்
சீஷர்களுக்கு தேவனுடைய வார்த்தையைப் பேசுவதற்கான தைரியத்தைக் கொடுப்பதற்கு இதுதான் காரணம்.
அவர்கள் தேவனுடைய வார்த்தையை தைரியத்தோடு பேசினார்கள்
சீஷர்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்ததின் முடிவு இது.
Acts 4:32-33
விசுவாசித்த திரளான கூட்டத்தார்...
"விசுவாசித்த அநேக ஜனங்கள்..."
அவர்கள் எல்லோர்மேலும் அதிக கிருபை இருந்தது
இதின் அர்த்தம் என்னவென்றால் 1) தேவன் எல்லா விசுவாசிகளின்மேலும் அநேக வரங்களையும், அதிக தைரியத்தையும் ஊற்றினார். அல்லது 2) எருசலேமில் இருந்த மற்ற ஜனங்களால் விசுவாசிகள் அதிக மகிமையில் வைக்கப்பட்டார்கள்.
Acts 4:34-35
விற்று...பணங்களைக் கொண்டுவந்து...பகிர்ந்துகொடுக்கப்பட்டது
வெவ்வேறு விசுவாசிகள் ஒரே நேரத்தில் இப்படி செய்யாமல், கிடைத்த மற்ற நேரங்களில் செய்தார்கள்.
அப்போஸ்தலர்களுடைய பாதத்திலே வைத்தார்கள்
இதுவே விசுவாசிகள்:1) மாறின இருதயம் வெளிப்படையாய் செயல்படுவதையும், மற்றும் 2) பகிர்ந்து கொடுக்கப்பட்டதின்மேல் அப்போஸ்தலர்களுக்கு அதிகாரம் கொடுப்பதையும் வெளிப்படுத்தும் விதமாகும்.
ஒருவனுடைய தேவைக்குத் தக்கதாக
விசுவாசிகளுடைய தேவைகள் ஒரு குறிப்பிட்ட காலங்கள் கவனிக்கப்பட்டதைப்போல் தெரிகிறது; ஒருவனுக்கு ஏதாவது ஒன்று தேவை என்று சொன்னபோது உடனே அவனுக்கு பொருட்கள் கொடுக்கப்படவில்லை.
Acts 4:36-37
சீப்புருவிலிருந்து வந்த லேவியனாகிய யோசேப்பு
பர்னபா இந்த கதையில் அறிமுகப்படுத்தப்படுகிறார். லூக்காவினுடைய அப்போஸ்தல நடபடிகள் புஸ்தகத்தில் பின்பதாக அவன் மிகப்பெரிய பங்கு வகிக்கும்வரை இல்லை. கதையில் புதிதாக பங்குபெருகிறவர்களை உங்களுடைய மொழி எப்படி அறிமுகப்படுத்துகிறது என்பதை கவனிக்கவேண்டும்.
அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்
இதுவே விசுவாசிகள் கொடுப்பதற்கான பொதுவான முறையாகும் மற்றும் இது கொடுக்கப்பட்டவைகளை உபயோகிக்க அப்போஸ்தலர்களுக்கு அதிகாரம் கொடுப்பதைக் காட்டுகிறது.
Acts 5
Acts 5:1-2
இப்பொழுது
அல்லது "ஆனால் இப்பொழுது". இது கதையின் புதிய பகுதியைக் குறிக்கிறது. உங்களுடைய மொழியில் வேறுபாடான கதைகள் எப்படி அறிமுகப்படுத்தப்பட்டன என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும்.
ஒரு மனிதன்
இதுதான் ஒரு புதிய நபரை அறிமுகப்படுத்தும் விதம். கதையில் ஜனங்கள் எப்படி அறிமுகப்படுத்தப்பட்டார்கள் என்று உங்கள் மொழியில் பார்க்கவும்.
அவன் விற்பனைப் பணத்தின் ஒரு பங்கை வைத்துக்கொண்டான்
அப்போஸ்தலர்களிடத்தில் முழு விற்பனைப் பணத்தையும் ஒப்புவிப்பதில் அவன் நேர்மையாக இருக்கவில்லை. இந்த உள்ளடக்கமான தகவலை "அவன் இரகசியமாக விற்பனைப் பணத்தின் ஒரு பங்கை வைத்துக்கொண்டான் " என்று விளக்கமாக சொல்லலாம்.
அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்
இதுவே ஆரம்பவிசுவாசிகள் கொடுப்பதற்கான பொதுவான முறையாகும். அவைகளை அப்போஸ்தலருடைய பாதத்திலே வைப்பது என்பது, கொடுக்கப்பட்டவைகள் எப்படி உபயோகிக்கப்படவேண்டும் என்பதில் அப்போஸ்தலர்களுக்கு அதிகாரம் கொடுப்பதைக் காட்டுகிறது.
அவனுடைய மனைவியும் அதை அறிந்திருந்தாள்
இதை "அவள் இதை அறிந்து, இதை செய்வதற்கும் சம்மதித்தாள் " என்றும் மொழிபெயர்க்கலாம்.
Acts 5:3-6
சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதேன்
பேதுரு அனனியாவைக் கடிந்துகொள்வதற்காக இந்த அணி இலக்கணக் கேள்வியைப் பயன்படுத்தினான்.
அது உன்னுடையதாயிருக்கவில்லையா...அது உன் வசத்தில் இருக்கவில்லையா
பணம் அனனியாவினுடையதும், அது இன்னும் அவனுடைய வசத்தில் இருந்தது என்று அனனியா ஏற்கனவே அறிந்திருந்த அவனுடைய காரியங்களையும் அனனியாவிற்கு ஞாபகப்படுத்துவதற்காக பேதுரு இந்த அணி இலக்கணக் கேள்வியைப் பயன்படுத்தினார்.
நீ உன் இருதயத்தில் இப்படிப்பட்ட காரியத்தை சிந்தித்தது எப்படி?
அனனியாவைக் கடிந்துகொள்வதற்காக பேதுரு அணி இலக்கணக் கேள்வியைப் பயன்படுத்தினார்.
வாலிபன் எழுந்துவந்தான்
சரியாக, "வாலிபன் எழுந்து...". இது ஆரம்ப செயலின் விளக்கமாகும்.
அவர்கள் அவனை வெளியே சுமந்துகொண்டுபோய், அடக்கம் பண்ணினார்கள்.
ஒருவன் மரிக்கும்போது, அடக்கம் செய்வதற்காக சரீரத்தை ஆயத்தம் செய்வது இயல்பானது. அனனியாவின் காரியத்தில் அப்படி இல்லை என்பது தெரிகிறது.
Acts 5:7-8
நடந்தவைகள்
அவளுடைய கணவன் மரித்துப்போனான்
எனக்குச் சொல்
அவனுடைய கேள்விக்கு உண்மை அல்லது பொய் என்று பதில் கூறும்படி அவளுக்குப் பேதுரு கட்டளையிட்டான்.
நிலத்தை இவ்வளவுக்குத்தான் விற்றோம்
இந்த கதை அனனியாவின் ஏமாற்றுதலைப் பற்றியது, உண்மையான தொகையைப் பற்றியதல்ல. லூக்கா உண்மையான மதிப்பைச் சொல்லாமலிருக்க விரும்பினார்.
Acts 5:9-11
கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன
இது அணி இலக்கணக் கேள்வி. இது "நீங்கள் கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு ஒருமனப்பட்டீர்கள் " என்றும் மொழிபெயர்க்கப்படலாம்.
அவள் ஜீவனை விட்டாள்
இது, அவள் "மரித்துப்போனாள் " என்பதை மறைத்துக் கூரும் மங்கல வழக்கு.
அவர்களுடைய கால்கள்
இது சினையாகு பெயர். கால்கள் அனனியாவை அடக்கம் செய்த மனிதர்களைக் குறிக்கிறது.
Acts 5:12-13
அநேக அடையாளங்களும் அற்புதங்களும் நடந்தன
"அநேக அற்புதங்கள் நடந்தன" (see UDB)
ஒருவரும்
அது, "சபையிலே அங்கமாக இல்லாத ஒருவனும்"
சாலோமோனுடைய மண்டபம்
இது தேவாலயத்தின் முற்றத்திற்குள் அமைந்துள்ளது.
மேன்மை
"பயபக்தியும், மதிப்பும்"
Acts 5:14-16
அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் விழும்
பேதுருவினுடைய நிழல் அவர்கள்மேல் பட்டால், அவர்கள் குணமடைவார்கள் என்பதை இது உள்ளடக்கியுள்ளது.
Acts 5:17-18
ஆனால்
இது வேறுபட்ட கதையை ஆரம்பிக்கிறது. உங்களுடைய மொழி எப்படி வேறுபட்ட கதையை அறிமுகப்படுத்துகிறது என்பதில் எச்சரிக்கையாக இருங்கள்.
பொறாமை
"எரிச்சல்" அல்லது "கோபம்". அப்போஸ்தலர்கள் அதிகமான மதிப்பையும், புகழையும் பெறுவதினாலே சதுசேயர்கள் கலக்கமடைந்தார்கள்.
அப்போஸ்தலர்கள்மேல் கைகளைப் போட்டு
"அப்போஸ்தலர்களைப் பிடித்து".
Acts 5:19-21
அவர்களை வெளியே கொண்டுவந்து
"அப்போஸ்தலர்களை சிறைச்சாலைக்கு வெளியே கொண்டுவந்து"
அதிகாலையில்
தேவாலயம் இரவு நேரத்தில் அடைக்கப்பட்டிருந்தது. அப்போஸ்தலர்கள் உடனே தேவ தூதர்களுக்கு கீழ்ப்படிந்தார்கள்.
Acts 5:22-23
(இந்த வார்த்தைகளுக்குக் குறிப்புகள் எதுவும் இல்லை)
Acts 5:24-25
அதிக கலக்கமடைந்தார்கள்
"குழம்பிப்போனார்கள்" அல்லது "குழப்பமடைந்தார்கள்"
அவர்களைக் குறித்து
"அவர்கள் கேட்ட வார்த்தைகளைக் குறித்து" (சிறைச்சாலையில் இருந்த அப்போஸ்தலர்கள் காணவில்லை என்ற அறிக்கை )
நீங்கள் காவலில் வைத்தவன்
நீங்கள் (பன்மை)
Acts 5:26-28
ஜனங்கள் அவர்களை கல்லெறிவார்கள்
இதை "தேவாலயக் காவலர்கள் ஜனங்களால் கல்லெறியப்படலாம்" என்றும் மொழிபெயர்க்கலாம்.
இந்த மனிதனுடைய இரத்தப்பழியை எங்கள்மீது கொண்டுவாரும்
"இந்த மனிதனுடைய மரணத்திற்கு எங்களைப் பொறுப்பாக்கும்"
உங்களுக்குக் கட்டளையிட்டோம்
உங்களுக்கு (பன்மை) கட்டளையிட்டோம்
நீங்கள் நிரப்பினீர்கள்
நீங்கள் (பன்மை) நிரப்பினீர்கள்
Acts 5:29-32
இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் கொடுக்க
இது "பாவத்திலிருந்து திரும்பி, தங்களுடைய பாவங்களுக்காக பாவமன்னிப்பைப் பெற்றுக்கொள்ள இஸ்ரவேலுக்கு வாய்ப்பு கொடுக்க" என்றும் மொழிபெயர்க்கலாம்.
பரிசுத்த ஆவியானவரும்
இயேசுவின் அற்புதமான செய்கைகளை உறுதிப்படுத்த சாட்சியிடும் ஒரு நபரைப்போல பரிசுத்த ஆவியானவர் பேசப்பட்டுள்ளார்.
Acts 5:33-34
அவர்கள் மூர்க்கமடைந்தார்கள்
அப்போஸ்தலர்கள் அவர்களைக் கடிந்துகொள்வதால், ஆலோசனை சங்கத்தார் அவர்கள்மேல் மிகுதியான கோபமடைந்தனர்.
Acts 5:35-37
அதிக கவனமாக இருங்கள்
"கவனமாக சிந்தியுங்கள்" அல்லது "எச்சரிக்கையாக இருங்கள்"
Acts 5:38-39
கமாலியேல் 5:35ல் துவக்கின தன்னுடைய அறிவுரைகளைத் தொடருகிறார்.
Acts 5:40-42
பாத்திரமாக எண்ணினார்கள்
இயேசுவுக்காக அவமானத்தை அனுபவிப்பது பாக்கியமாக( மேன்மையாக)எண்ணினார்கள்.
Acts 6
Acts 6:1
அந்நாட்களிலே
இது ஒரு புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துகிறது. உங்கள் மொழியில் நீங்கள் எப்படி ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறீர்கள் என்பதை நீங்கள் கவனிக்கவேண்டியது அவசியமாகும்.
பெருகுதல்
"அதிகமாக பெருகுதல் "
கிரேக்க யூதர்கள்
இவர்கள் தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை இஸ்ரவேலுக்கு வெளியே ரோமப் பேரரசில் வாழ்ந்து, வளர்ந்த கிரேக்க மொழி பேசுகிற யூதர்கள். இவர்களுடைய மொழியும், கலாச்சாரமும் இஸ்ரவேலில் வளர்ந்தவர்களிலிருந்து மாறுபட்டிருந்தது.
எபிரேயர்கள்
இவர்கள் இஸ்ரவேலில் வளர்ந்த அரேமியமொழி பேசுகிற யூதர்கள். சபையானது யூதர்களையும், இதுவரை யூதமதத்திற்கு மாறினவர்களையும் கொண்டிருந்தது.
விதவை
உண்மையான விதவை என்பவள், கணவன் இறந்தவளும், மீண்டும் திருமணம் செய்ய வயதுசென்றவளும், அவளை விசாரிக்க எந்த உறவினர்களும் இல்லாதவளே.
அன்றாடம் உணவளித்தல்
அப்போஸ்தலர்களுக்குக் கொடுக்கப்பட்ட பணம், ஆதிசபை விதவைகளுக்கு உணவு வாங்குவதற்கு ஒரு பங்காகப் பயன்படுத்தப்பட்டது.
கண்காணிக்கப்படவில்லை
"நிராகரிக்கப்பட்டார்கள்" அல்லது "மறக்கப்பட்டார்கள்." அங்கே விசாரிக்கப்படத் தவறிய, தேவையில் இருந்த அநேகர் இருந்தார்கள்.
Acts 6:2-4
பந்தி விசாரித்தல்
இது ஜனங்களுக்கு உணவு பரிமாறுவதின் ஆகுபெயர்.
பரிசுத்த ஆவியும், ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற மனிதர்கள்
அனுகூலமான அர்த்தங்கள் 1) மனிதர்கள் மூன்று தகுதிகளையுடையவர்கள்
நற்சாட்சி, பரிசுத்தஆவியும், ஞானமும் நிறைந்தவர்கள், அல்லது 2) மனிதர்கள் இரண்டு தகுதிகளுக்காக நற்சாட்சி பெற்றிருக்கிறார்கள்
பரிசுத்தஆவியினாலும் ஞானத்தினாலும் நிறைந்திருப்பது.
நற்சாட்சி
"ஜனங்களுக்குத் தெரிந்த நல்ல மனிதர்கள்" அல்லது "ஜனங்கள் நம்புகிற மனிதர்கள்"
நமக்கு...நாங்கள்
பொருத்தமான இடத்தில், உங்கள் மொழியில் தனிப்பட்ட அமைப்பைப் பயன்படுத்தவும்.
நீங்கள்
பொருத்தமான இடத்தில், உங்கள் மொழியில் பன்மை அமைப்பைப் பயன்படுத்தவும்.
Acts 6:5-6
அவர்களுடைய பேச்சு பிரியமாயிருந்தது
அவர்களுடைய பேச்சு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஸ்தேவான்...பிலிப்பு, பிரொகோர், நிக்கானோர், தீமோன், பர்மெனா மற்றும் அந்தியோகியாவைச் சேர்ந்த யூதமதத்திற்கு மாறின நிக்கொலா
இவைகள் கிரேக்கப் பெயர்கள், மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதரில் அநேகர் அல்லது அனைவரும் விசுவாசிகளின் கிரேக்க யூதக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிவுறுத்துகின்றன.
மதம் மாறினவன்
யூத மதத்திற்கு மாறின புறஜாதியான்.
அவர்கள்மேல் தங்கள் கரங்களை வைத்தார்கள்
ஆசீர்வாதங்களைக் கொடுப்பது மற்றும் ஏழுபேர்களின் வேலைக்காக பொறுப்புகளையும் அதிகாரங்களையும் கொடுப்பது.
Acts 6:7
தேவனுடைய வசனம் விருத்தியடைந்தது
அதினுடைய தாக்கம் மிகவும் பரவலாக பரவியது.
சீஷர்களுடைய
இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து அவரைப் பின்பற்றியவர்களுடைய
விசுவாசத்திற்கு கீழ்ப்படிந்திருந்தார்கள்
"புதிய விசுவாசத்தின் வழிகளைப் பின்பற்றினார்கள்"
Acts 6:8-9
லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயம்
அனேகமாக இந்த வித்தியாசமான இடங்களிலிருந்து வந்த முந்தைய அடிமைகளாக இருக்கலாம். சொல்லப்பட்ட ஜனங்கள் ஜெப ஆலயத்தைச் சேர்ந்தவர்களா அல்லது ஸ்தேவானோடு தர்க்கிப்பதில் மட்டும் பங்குபெற்றவர்களா என்பது தெளிவாக இல்லை.
ஸ்தேவானோடு தர்கித்தல்
"ஸ்தேவானோடு வாக்குவாதம் செய்தல்" அல்லது "ஸ்தேவானோடு கலந்துரையாடுதல்"
Acts 6:10-11
எதிர்த்துநிற்க முடியவில்லை
"எதிர்த்து வாக்குவாதம் செய்யமுடியவில்லை"
ஆவி
"பரிசுத்த ஆவி "
இரகசியமாக இணங்கச்செய்தனர்
"இரகசியமாக மனதை மாற்றினார்கள் "
தூஷணமான வார்த்தைகள்
இதை "தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்கும், மோசேயுடைய நியாயப்பிரமாணத்திற்கும் எதிரான வார்த்தைகள்" என்று மொழிபெயர்க்கலாம்.
Acts 6:12-15
ஜனங்களைத் தூண்டிவிட்டனர்
ஜனங்கள் கோபமாக இருப்பதற்காக அவர்களைத் கிளறிவிட்டனர்.
பிடித்தனர்
"இழுத்தனர் "
அவன்மேல் கண்ணோக்கமாயிருந்து
"அவனை உற்றுப் பார்த்தனர்." இது "அவனை முறைத்துப் பார்ப்பது" என்பதின் மரபுச்சொல்.
தேவ தூதனுடைய முகம் போலிருந்தது
இது, இங்கு சொல்லப்படாத "பிரகாசிக்கிறது" என்று ஒப்புமையாக இருக்கிறவைகளை ஒப்பிட்டுக்கூரும் உவமையாகும். இது "தேவ தூதனுடைய முகத்தைப்போல பிரகாசித்தது" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
Acts 7
Acts 7:1-3
சகோதரர்களே, பிதாக்களே, கேளுங்கள்
ஸ்தேவான், ஒரு விரிவுபடுத்தப்பட்டக் குடும்பத்தைப் போல ஆலோசனை சங்கத்தாரை வரவேற்பதில் மிகவும் மரியாதையுடையவராக இருந்தார்.
நம்முடைய பிதா
"நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம்" என்று குறிப்பிடுவதில், ஸ்தேவான் தன்னுடைய ஜனங்களையும் சேர்த்துக்கொள்கிறார்.
உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப்போ
"உன்னுடைய" என்பது ஆபிரகாமைக் குறிக்கிறது.
Acts 7:4-5
ஸ்தேவான், 7:2ல் யூதருடைய ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாகத் துவங்கின தன்னுடைய எதிர்ப்பைத் தொடருகிறார்.
நீங்கள் இப்பொழுது குடியிருக்கும் இடம்
"நீங்கள்" என்பது யூதருடைய ஆலோசனைசங்கமும், ஜனங்களும்.
அவனுக்கு சுதந்திரமாக
அந்த நிலம் என்றென்றும் ஆபிரகாமுக்குச் சொந்தமானது.
Acts 7:6-8
ஸ்தேவான், 7:2ல் யூதருடைய ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாகத் துவங்கின தன்னுடைய எதிர்ப்பைத் தொடருகிறார்.
அவர்கள் அடிமைகளாக இருக்கப்போவது
"உன்னுடைய சந்ததியார் அடிமைகளாக இருக்கப்போவது"
ஆகவே, ஆபிரகாம் ஈசாக்கிற்கு தகப்பனானான்...
இந்தக் கதையானது ஆபிரகாமுடைய சந்ததிக்கு மாறுகிறது.
Acts 7:9-10
ஸ்தேவான், 7:2ல் யூதருடைய ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாகத் துவங்கின தன்னுடைய எதிர்ப்பைத் தொடருகிறார்.
கோத்திரப்பிதா
"யாக்கோபுடைய மூத்தக் குமாரர்கள் " அல்லது "யோசேப்புடைய மூத்த சகோதரர்கள் "
Acts 7:11-13
ஸ்தேவான், 7:2ல் யூதருடைய ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாகத் துவங்கின தன்னுடைய எதிர்ப்பைத் தொடருகிறார்.
அங்கே பஞ்சம் உண்டானது
"பஞ்சம் வந்தது," பூமி ஆகார விளைச்சலை நிறுத்தியது.
நம்முடைய முற்பிதாக்கள்
"யோசேப்புடைய மூத்த சகோதரர்கள்"
தானியம்
இது "ஆகாரம்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
தன்னைத் தெரியப்படுத்தினான்
யோசேப்பு தன்னுடைய சகோதரர்களுக்கு, அவன் அவர்களுடைய சகோதரன் என்பதை வெளிப்படுத்தினான்.
Acts 7:14-16
ஸ்தேவான், 7:2ல் யூதருடைய ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாகத் துவங்கின தன்னுடைய எதிர்ப்பைத் தொடருகிறார்.
அவனும், நம்முடைய முற்பிதாக்களும்
"யாக்கோபும் அவனுடைய குமாரர்களும், நம்முடைய முற்பிதாக்களும்"
அவர்கள் கொண்டுவரப்பட்டார்கள்
யாக்கோபுடைய சந்ததியார் யாக்கோபுடைய சரீரத்தையும், அவனுடைய குமாரர்களுடைய சரீரங்களையும் கொண்டுவந்தார்கள்.
வெள்ளிப்பணத்திற்கு
பணத்திற்கு
Acts 7:17-19
ஸ்தேவான், 7:2ல் யூதருடைய ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாகத் துவங்கின தன்னுடைய எதிர்ப்பைத் தொடருகிறார்.
வாக்குத்தத்தத்திற்கான நேரம்
தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவதற்கு சமீபமான நேரம்.
யோசேப்பை அறியாதவன்
இது, "யோசேப்பு" என்பது "யோசேப்பு எகிப்து மக்களுக்கு அதிகமாக உதவி செய்துகொண்டிருந்தான்" என்பதற்கு பதிலாக சொல்லப்பட்ட ஆகுபெயராகும்.
நம்முடைய ஜனங்கள்
"நம்முடைய" என்பது ஸ்தேவானையும் அவனுடைய ஜனங்களையும் சேர்த்துக் கூறுகிறது.
வஞ்சனையாக நடத்தினர்
"மோசமாக நடத்தினர் " அல்லது "இஷ்டப்படி, விருப்பப்படி"
அவர்களுடைய குழந்தைகளை வெளியே போடுவது
குழந்தைகள் மரிக்கும்படிக்கு அவர்களுடைய குழந்தைகளை விட்டுவிடுவது.
Acts 7:20-21
ஸ்தேவான், 7:2ல் யூதருடைய ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாகத் துவங்கின தன்னுடைய எதிர்ப்பைத் தொடருகிறார்.
அக்காலத்திலே
இது மோசே என்கிற புதிய மனிதனை அறிமுகப்படுத்துவதற்காக சொல்லப்பட்டது.
தேவனுக்கு முன்பாக அதிக சவுந்தரியமுள்ளவன்
"தேவனுக்கு முன்பாக" என்பது மோசே மிகவும் சவுந்தரியமுள்ளவன் என்பதை உயர்த்திக் கூறுவதற்காகச் சொல்லப்பட்டது.
அவன் வெளியே போடப்பட்டபோது
"பார்வோனுடைய கட்டளையின்படி அவன் வெளியே போடப்பட்டபோது" என்பது புரிந்துகொள்ளப்பட்டது.
அவனை எடுத்துக்கொண்டாள்
"அவனைத் தத்தெடுத்துக்கொண்டாள்"
அவளுடைய சொந்த மகனாக
"அவன் அவளுடைய சொந்த மகனைப்போல"
Acts 7:22-25
ஸ்தேவான், 7:2ல் யூதருடைய ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாகத் துவங்கின தன்னுடைய எதிர்ப்பைத் தொடருகிறார்.
மோசே கற்பிக்கப்பட்டான்
"எகிப்தியர்கள் மோசேக்கு கற்பித்தார்கள்."
எகிப்தியருடைய எல்லா சாஸ்திரங்களும்
இது "எகிப்தியர்கள் அநேக காரியங்களை அறிந்திருந்தார்கள்" என்பதை மிகைப்படுத்திக்கூருகிறது.
அவனுடைய வார்த்தையிலும் செய்கையிலும் வல்லவனானான்
"பேச்சிலும் செய்கையிலும் ஊக்கமுடையது" அல்லது "பேச்சிலும் செய்கையிலும் வல்லமையுள்ளது" அல்லது "அவன் சொன்னவைகளிலும் செய்தவைகளிலும் செல்வாக்குடையது"
சகோதரர்களைச் சந்தித்தான்
அவர்களுடைய வாழும் நிலைமையை விசாரிப்பதற்காக
எகிப்தியனை அடித்தல்
மோசே எகிப்தியனை பலமாக அடித்ததினால் அவன் மரித்தான்.
அவன் நினைத்தான்
அவன் கற்பனைசெய்தான்
அவனுடைய கையினாலே
அவன் மூலமாக
அவர்களை இரட்சித்துக்கொண்டு
இது "அப்பொழுது அவர்களை இரட்சித்துக்கொண்டிருந்தான்" என்றும் மொழிபெயர்க்கப்படலாம்.
Acts 7:26-28
ஸ்தேவான், 7:2ல் யூதருடைய ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாகத் துவங்கின தன்னுடைய எதிர்ப்பைத் தொடருகிறார்.
மனுஷரே, நீங்கள் சகோதரர்கள்
இது சண்டை பண்ணிக்கொண்டிருந்த இரண்டு இஸ்ரவேலர்களைப் பற்றி சொல்லுகிறது.
அநியாயம் செய்தான்
ஒருவனை அநியாயமாய் நடத்துவது என்பது ஒரு மனிதனை அநீதியாக அல்லது நேர்மையற்றமுறையில் நடத்துவது'
எங்கள்மேல் அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் உன்னை ஏற்படுத்தினவன் யார் ?
மோசேயைக் கடிந்துகொள்வதற்காக இந்த அணி இலக்கணக்கேள்வி பயன்படுத்தப்பட்டது. இதற்கு "எங்கள்மேல் உனக்கு எந்த அதிகாரமும் இல்லை" என்று அர்த்தம்.
எங்கள்மேல் நியாயாதிபதி ?
இஸ்ரவேலர்கள் மோசேயை அவர்களில் பங்குள்ளவனாக தள்ளிவைத்தார்கள்.
Acts 7:29-30
ஸ்தேவான், 7:2ல் யூதருடைய ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாகத் துவங்கின தன்னுடைய எதிர்ப்பைத் தொடருகிறார்.
இதைக் கேட்டப்பின்பு
"நேற்று தான் ஒரு எகிப்தியனைக் கொன்றதை இஸ்ரவேலர்கள் தெரிந்துகொண்டார்கள் என்பதை மோசே கேட்டபோது" என்பது குறிக்கப்பட்ட தகவல்.
இரண்டு குமாரர்களுக்குத் தகப்பன்
"மோசே மீதியான் தேசத்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான் " என்பது ஸ்தேவானுடைய ஜனங்கள் முன்னமே அறிந்திருந்தார்கள்.
நாற்பது வருடங்கள் சென்றபின்பு
"மோசே எகிப்திற்கு ஓடிப்போய் நாற்பது வருடங்கள் சென்றபின்பு".
Acts 7:31-32
ஸ்தேவான், 7:2ல் யூதருடைய ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாகத் துவங்கின தன்னுடைய எதிர்ப்பைத் தொடருகிறார்.
அவன் கண்டு அதிசயப்பட்டான்
எரிகிற அக்கினியிலே முட்செடி எரியாமல் இருந்ததால் மோசே ஆச்சரியப்பட்டான். ஸ்தேவானுடைய ஜனங்கள் இதை முன்னமே அறிந்திருந்தார்கள்.
அதை உற்றுப்பார்க்க சமீபித்து வரும்போது...நடுக்கமடைத்து உற்றுப்பார்க்க துணியாமல் இருந்தான்
மோசே ஆரம்பத்திலே முட்செடியைப் பார்க்க அருகில் சென்றான் ஆனால் பயத்தினாலே திரும்பிவந்தான் என்று அர்த்தம் கொள்ளலாம்.
நடுக்கமடைந்து
மோசே பயத்தினால் நடுங்கினான்.
Acts 7:33-34
ஸ்தேவான், 7:2ல் யூதருடைய ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாகத் துவங்கின தன்னுடைய எதிர்ப்பைத் தொடருகிறார்.
நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாக இருக்கிறது
தேவன் எங்கே பிரசன்னமாயிருக்கிறாரோ, அந்த இடம் முழுவதும் பரிசுத்தமானது அல்லது தேவனால் பரிசுத்தமாக்கப்பட்டது என்பது குறிப்பிடப்பட்ட தகவல்.
நிச்சயமாக பார்த்து
"பார்த்து" என்பதற்கு முக்கியத்துவத்தை சேர்க்கிறது.
என்னுடைய ஜனங்கள்
ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு என்பவர்களின் சந்ததிகள்.
நான் இறங்கினேன்
அவர்களுடைய விடுதலையை தனிப்பட்டவிதத்தில் பார்க்க.
Acts 7:35-37
ஸ்தேவான், 7:2ல் யூதருடைய ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாகத் துவங்கின தன்னுடைய எதிர்ப்பைத் தொடருகிறார்.
35
38 வசனங்கள் மோசேயைக் குறிக்கின்ற இணைக்கப்பட்ட சொற்றொடர்களின் தொகுப்பை உள்ளடக்கியது. ஒவ்வொரு சொற்றொடரும் "இந்த மோசே" அல்லது "இதே மோசே " அல்லது "இந்த மனிதன்" அல்லது "இது அதே மோசே" போன்ற வாக்கியங்களில் துவங்குகிறது. மோசேயை முக்கியப்படுத்துவதற்காக, முடியுமானால் ஒப்புமையான வாக்கியங்களைப் பயன்படுத்தவும்.
அவர்கள் மறுதலித்த இந்த மோசே
7:26
28ல் சொல்லப்பட்ட சம்பவங்களை இது திரும்ப குறிக்கிறது.
உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்?
7:26 ல் இதை நீங்கள் எப்படி மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்.
தலைவனாகவும், மீட்பனாகவும்
"அவர்களை ஆளவும் மற்றும் அடிமைகளாக இருப்பதிலிருந்து அவர்களை விடுவிக்கவும்"
தூதனுடைய கரத்தினால்
"தூதனால்"
நாற்பது வருடகாலத்தில்
"இஸ்ரவேல் மக்கள் வனாந்திரத்தில் வாழ்ந்த நாற்பது வருடகாலத்தில்"
உங்கள் சகோதரர்களிலிருந்து
"உங்களுடைய சொந்த ஜனங்களிலிருந்து"
Acts 7:38-40
ஸ்தேவான், 7:2ல் யூதருடைய ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாகத் துவங்கின தன்னுடைய எதிர்ப்பைத் தொடருகிறார்.
இந்த பகுதி 7:35 ல் தொடங்கிய மோசேயை முக்கியப்படுத்தும் சொற்றொடர்களின் தொகுப்பைத் தொடருகிறது.
சபைக்குள் இருந்த மனிதன் இவனே
"இஸ்ரவேலர்களுக்குள் இருந்த மனிதனாகிய மோசே இவனே "
நமக்குக் கொடுக்கும்படி ஜீவவார்த்தைகளைப் பெற்றுக்கொண்ட மனிதன் இவனே
இது செய்வினை வடிவத்தில் "நமக்குக் கொடுக்கும்படியாக இந்த மனிதனிடமே தேவன் ஜீவவார்த்தைகளைப் பேசினார் " என்று மொழிபெயர்க்கப்படலாம்.
ஜீவனுள்ள வார்த்தைகள்
அனுகூலமான அர்த்தங்கள் 1) "நிலைத்திருக்கும் செய்தி" அல்லது 2) "ஜீவன் தரும் வார்த்தைகள்."
அவர்களைவிட்டு அவனைத் தள்ளிவிட்டனர்
இந்த உருவகம், அவர்கள் மோசேயை தள்ளிவிடுவதை வலியுறுத்துகிறது.இதை "அவர்கள் அவனைத் தலைவனாக ஏற்றுக்கொள்ளாமல் தள்ளினார்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.
அந்நாட்களில்
"எகிப்துக்குத் திரும்பிப்போக அவர்கள் முடிவெடுத்தபோது"
Acts 7:41-42
ஸ்தேவான், 7:2ல் யூதருடைய ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாகத் துவங்கின தன்னுடைய எதிர்ப்பைத் தொடருகிறார்.
அவர்கள் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணினார்கள்
"கன்றுக்குட்டியைப்போல் இருந்த ஒரு சிலையை அவர்கள் உண்டுபண்ணினார்கள் "
வானத்தின் சேனைகளுக்கு ஆராதனை செய்ய
"வானத்திலுள்ள ஒளிகளை ஆராதிக்க "
இஸ்ரவேல் வீட்டாரே
இது, முழு இஸ்ரவேல் தேசத்திற்கான ஆகுபெயராகும்.
நீங்கள் அடிக்கப்பட்ட மிருகங்களையும், பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ...
இது, அவர்களுடைய பலிகள் தேவனுக்கு செலுத்தப்பட்ட காணிக்கைகள் இல்லை என்பதைச் சொல்லும் அணி இலக்கணக் கேள்வியாகும். "நீங்கள் அடிக்கப்பட்ட மிருகங்களையும், பலிகளையும் எனக்குச் செலுத்தவில்லை... " என்று மொழிபெயர்க்கலாம்.
Acts 7:43
ஸ்தேவான், 7:2ல் யூதருடைய ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாகத் துவங்கின தன்னுடைய எதிர்ப்பைத் தொடருகிறார்.
மோளோகினுடைய கூடாரம்
பொய் தெய்வமாகிய மோளோக்கைக் கொண்டிருக்கும் கூடாரம் அல்லது கொட்டகை.
ரெம்பான் தெய்வத்தின் நட்சத்திரங்கள்
பொய் தெய்வமாகிற ரெம்பானுக்கு அறியப்படுகிற நட்சத்திரம்.
நீங்கள் உண்டாக்கின சொரூபங்கள்
அவர்கள் சிலைகளை அல்லது மோளோக் மற்றும் ரெம்பான் தெய்வங்களின் சொரூபங்களை, அவைகளை ஆராதிக்கும் நோக்கத்தோடு உண்டாக்கினார்கள்.
நான் உங்களை பாபிலோனுக்கு அப்புறத்திலே கொண்டுபோவேன்
"நான் உங்களை பாபிலோனைவிட்டு நீக்கிப்போடுவேன்"
Acts 7:44-46
ஸ்தேவான், 7:2ல் யூதருடைய ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாகத் துவங்கின தன்னுடைய எதிர்ப்பைத் தொடருகிறார்.
சாட்சியின் கூடாரம்
பத்துக் கட்டளைகள் பொறிக்கப்பட்ட கற்பலகைகள் உள்ளே வைக்கப்பட்ட உடன்படிக்கைப்பெட்டி வைக்கப்பட்டிருக்கும் கூடாரம்.
தேசங்களைப் பெற்றுக்கொள்ளுதல்
இது இஸ்ரவேல் தேசம் முறியடித்துக்கொண்டிருந்த தேசங்களின் நிலம், கட்டிடங்கள். பயிர்கள், மிருகங்கள் மற்றும் எல்லா உடைமைகளையும் உள்ளடக்கியது.
அது தாவீதின் நாள்வரைக்கும் இப்படி வைக்கப்பட்டிருந்தது
உடன்படிக்கைப்பெட்டி, அதுவரைக்கும் மற்றும் இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதின் நாள்வரைக்கும் கூடாரத்திலேயே இருந்தது.
யாக்கோபின் தேவனுக்கு ஒரு வாசஸ்தலம்
உடன்படிக்கைப்பெட்டி எருசலேமிலே இருக்கவேண்டுமென்றும், இஸ்ரவேல் முழுவதும் அலைகின்ற கூடாரத்திலே வைக்கப்படக்கூடாது என்றும் விரும்பினான்.
Acts 7:47-50
ஸ்தேவான், 7:2ல் யூதருடைய ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாகத் துவங்கின தன்னுடைய எதிர்ப்பைத் தொடருகிறார்.
கைகளினால் செய்யப்பட்டது
இது "மக்களால் செய்யப்பட்டது" என்பதற்கான சினையாகு பெயர்.
வானம் எனக்கு சிங்காசனம்...பூமி என் பாதங்களுக்கு பாதபடி
தீர்க்கதரிசி தேவனுடைய பிரசன்னம் மகாபெரியதாகவும் முழு உலகமும் அவருடைய சிங்காசனமாகவும், முழு பூமியும் அவருக்கு ஒன்றுமில்லை, ஆனால் அது அவருக்கு பாதபடியாகவும் இருப்பதால், தேவன் பூமியிலே இளைப்பாற மனிதன் அவருக்கு வீட்டைக் கட்டுவது எவ்வளவு இயலாத காரியம் என்று ஒப்பிடுகிறார்.
நீங்கள் எனக்காக எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்?
இது "நீங்கள் எனக்காக போதுமான வீட்டைக் கட்டமுடியாது!" என்பதற்கான அணி இலக்கணக் கேள்வியாகும்.
நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எங்கே?
"நான் தங்கியிருக்கத்தக்க போதுமான இடம் எனக்கு இல்லை!"
என்னுடைய கரம் இவைகள் எல்லாவற்றையும் உண்டாக்கவில்லையா?
இது "என்னுடைய கரம் இவைகள் எல்லாவற்றையும் உண்டாக்கியது!" என்பதற்கான அணி இலக்கணக் கேள்வியாகும்.
Acts 7:51-53
ஸ்தேவான், 7:2ல் யூதருடைய ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாகத் துவங்கின தன்னுடைய எதிர்ப்பைத் தொடருகிறார்.
நீங்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள்...
ஸ்தேவான் யூதத்தலைவர்களோடு அறிந்துகொள்ளப்படுவதிலிருந்து அவர்களை கடிந்துகொள்வதற்கு மாறினார்.
இருதயத்தில் விருத்தசேதனம் பண்ணப்படாதவர்கள்
"இருதயத்தில் கீழ்ப்படியாதவர்கள்." ஸ்தேவான் அனேகமாக அவர்களை இழிவென்று நினைத்த புறஜாதியாரோடு அவர்களை ஒப்பிட்டுக்கொண்டிருக்கலாம்.
தீர்க்கதரிசிகளில் யாரை உங்கள் முற்பிதாக்கள் துன்பப்படுத்தாமல் இருந்தார்கள்?
இது ஸ்தேவான் அவர்களைக் கடிந்துகொள்ளுகிற அணி இலக்கணக் கேள்வியாகும். "உங்கள் முற்பிதாக்கள் எல்லாத் தீர்க்கதரிசிகளையும் துன்பப்படுத்தினார்கள்!" என்று மொழிபெயர்க்கலாம்.
நீதிபரர்
இது மேசியாவாகிய கிறிஸ்துவைக் குறிக்கிறது.
அவரைக் கொலைசெய்தவர்கள்
"நீதிபரரைக் கொலைசெய்தவர்கள்" அல்லது "கிறிஸ்துவைக் கொலைசெய்தவர்கள்."
Acts 7:54-56
இருதயத்திற்குக் காயம்
இது "கோபத்தினால் மேற்கொள்" என்பதற்கான மரபுச்சொல்.
இவைகளைக் கேட்டபொழுது
இது பிரசங்கம் நிறைவுபெறுகிற மற்றும் ஆலோசனை சங்கத்தார் எதிர்செயல் புரிகிற திருப்புமுனையாகும்.
அவர்களுடைய பல்லைக் கடித்தார்கள்
இது பலமான கோபத்தை அல்லது வெறுப்பை வெளிப்படுத்துவதற்கான மரபுச்சொல். "அவர்கள் மிகுந்த கோபமடைந்து, அவர்கள் ஒன்றாகத் தங்கள் பற்களைக் கடித்தார்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.
பரலோகத்தை அண்ணாந்துபார்த்து...
"வானத்தை அண்ணாந்துபார்த்து..." கூட்டத்தில் இருந்த மற்ற ஒருவரும் பார்க்காமல், ஸ்தேவான் மாத்திரமே தரிசனத்தைப் பார்த்தான் என்பது தெரிகிறது.
இயேசு நின்றுகொண்டிருக்கிறதை அவன் கண்டான்
இயேசு, தேவனுடைய வலதுபாரிசத்தில் "உட்காரவில்லை". "நின்றுகொண்டிருந்தார் " என்பதை கவனிக்கவேண்டும். விருந்தினரை வரவேற்க ராஜா எழுந்து நிற்பது கனத்திற்குரியதாக இருக்கிறது.
தேவனுடைய மகிமை
வெளிச்சத்தைப்போல தேவனுடைய மகிமை அல்லது மாட்சிமை. "தேவனிடமிருந்து வரும் பிரகாசமான ஒளி" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மனுஷகுமாரன்
ஸ்தேவான் இயேசுவை "மனுஷகுமாரன் " என்கிற பெயரில் அறிகிறார்.
Acts 7:57-58
அவர்களுடைய காதுகளை அடைத்துக்கொண்டார்கள்
ஸ்தேவான் சொல்லிக்கொண்டிருந்ததை இனி ஒருபோதும் கேட்காதபடிக்கு அவர்கள் தங்களுடைய காதுகளை அடைத்துக்கொண்டார்கள்.
அவர்கள் அவனை நகரத்திற்கு வெளியே தள்ளினார்கள்
"ஆலோசனை சங்கத்தினர் ஸ்தேவானைப் பிடித்து, பலவந்தமாக நகரத்திற்கு வெளியே கொண்டுபோனார்கள்."
வெளி வஸ்திரங்கள்
இவைகள், வெளிசட்டை அல்லது தடித்த மேற்சட்டை செயல்படுவதைப்போலவே தங்களை சூடாக வைத்துக்கொள்வதற்காக வெளிப்புறத்தில் அணியும் தளர்த்தியான மேலங்கிகள் அல்லது அங்கிகள்.
பாதத்தின் அருகே
அவைகளை காவல்காக்கும் நோக்கத்திற்காக "முன்பாக"
Acts 7:59-60
என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்
"என் ஆவியை எடுத்துக்கொள்ளும் "
நித்திரையடைந்தான்
இது "மரித்துப்போனான்" என்பதற்கான பண்பான விளக்கம்.
Acts 8
Acts 8:1-3
சவுல் சம்மதித்திருந்தான்
லூக்கா, கதையை ஸ்தேவானிலிருந்து சவுலுக்கு மாற்றுகிறார். உங்கள் மொழியில், முக்கிய கதாபாத்திரங்களிடையே கதை எப்படி மாறுகிறது என்பதை நீங்கள் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.
வெளியே இழுத்து
அவர்கள் கட்டாயப்படுத்தி கொண்டுபோனார்கள்
அந்த நாள்
ஸ்தேவான் மரித்த நாள்
எல்லா விசுவாசிகளும் சிதறடிக்கப்பட்டார்கள்
இது அநேகருக்கு மிகைப்படுத்திகூரும் அணி அல்லது எருசலேமில் வாழ்ந்த விசுவாசிகள் அநேகருக்கு அதிக துன்பம் உண்டாயிற்று.
அப்போஸ்தலர்கள் தவிர
இது, அப்போஸ்தலர்கள் எருசலேமிலேயே இருந்தார்கள் மற்றும் அவர்கள் இந்த மகா துன்புறுத்தலை அனுபவிக்கவில்லை என்று பொருள்படுகிறது.
தேவபக்தியுள்ள மனிதர்கள்
"தேவனுக்கு பயப்படுகிற மனிதர்கள்" அல்லது "தேவனுக்கு பயந்திருந்த மனிதர்கள்"
மிகுந்த துக்கமடைந்தார்கள்
"அவனுக்காக...அதிகமாய் புலம்பினார்கள்"
அவன் ஒவ்வொரு வீடுகளுக்குள்ளும் சென்றான்
சவுல் அநேக வீடுகளுக்குள் நுழைந்தான் என்பது மிகைப்படுத்திக்கூறும் அணி. எருசலேமில் எல்லா வீடுகளுக்குள்ளும் நுழைவதற்கு அவனுக்கு அதிகாரமில்லை.
ஆண்களையும் பெண்களையும் வெளியே இழுத்து
சவுல் யூத விசுவாசிகளை கட்டாயப்படுத்தி அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியே இழுத்துக்கொண்டுபோய் காவலில் போட்டான்.
Acts 8:4-5
சிதறிப்போனவர்கள்...
"மிகுந்த துன்பத்தினால் சிதறிப்போனவர்கள் ". சிதறிப்போனதற்கும், துன்பங்களுக்கும் காரணம் முன்பே குறிப்பிடப்பட்டுள்ளது.
சமாரியாவின் பட்டணம்: சமாரியாவின் பட்டணம் "பட்டணம்" அல்லது "ஒரு பட்டணம்" என்று குறிப்பிடப்படுவது தெளிவில்லாதது. "பட்டணம்" என்று மொழிபெயர்க்கச் சொல்லலாம்.
Acts 8:6-8
திரளான ஜனங்கள்...
"சமாரியாவின் பட்டணத்திலிருந்து வந்த திரளான ஜனங்கள்." அந்த இடம் முன்பே குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்கள் கவனித்தார்கள்
பிலிப்பு செய்த அதிசயங்களே ஜனங்கள் கவனம் செலுத்துவதற்கு காரணமாக இருந்தது. இது புரிந்துகொள்ளப்படவேண்டும்.
அங்கே மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று
பிலிப்பு செய்த அதிசயங்களின் விளைவாக ஜனங்கள் சந்தோஷமடைந்தார்கள்.
Acts 8:9-11
ஆனால் அங்கே ஒரு மனிதன் இருந்தான்
"சீமோன் என்னும் பெயர்கொண்ட...ஒரு மனிதன் " என்பது ஒரு புதிய நபரை கதைக்குள் அறிமுகப்படுத்தும் விதமாகும். உங்களுடைய மொழியில் புதிய ஜனங்கள் எப்படி அறிமுகப்படுத்தப்பட்டார்கள் என்பதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம்.
பட்டணம்
"சமாரியாவின் பட்டணம் "
எல்லா சமாரியர்களும்
இது "பட்டணத்திலுள்ள அநேக சமாரியர்கள்" என்று மிகைப்படுத்திக்கூறும் அணி.
இந்த மனிதன் தேவனுடைய பெரிதான சக்தி என்று அழைக்கப்பட்டவன்
சீமோன், பெரிதான சக்தி என்று அறியப்பட்ட தெய்வீக சக்தி என்று ஜனங்கள் சொன்னார்கள்.
Acts 8:12-13
அவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள்
பிலிப்பு புதிய விசுவாசிகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்.
அவன் அடையாளங்களையும், பெரிய அற்புதங்களையும் பார்த்தபோது, பிரமிப்படைந்தான்
"பிலிப்பு அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் செய்வதை சீமோன் பார்த்தபோது, பிரமிப்படைந்தான்.
Acts 8:14-17
சமாரியா
இது சமாரியா மாவட்டம் முழுவதும் உள்ள அநேக ஜனங்களுக்கான ஆகுபெயர்.
அவர்கள் வந்தபோது
"பேதுருவும் யோவானும் வந்தபோது"
அவர்கள் அவர்களுக்காக ஜெபம்பண்ணினார்கள்
"பேதுருவும் யோவானும் சமாரியா விசுவாசிகளுக்காக ஜெபித்தார்கள்"
அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி
"சமாரியா விசுவாசிகள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி"
ஞானஸ்நானம் மாத்திரம் பெற்றிருந்தார்கள்
"பிலிப்பு சமாரியா விசுவாசிகளுக்கு ஞானஸ்நானம் மாத்திரம் கொடுத்திருந்தார்."
பின்பு, ஸ்தேவானுடைய சுவிசேஷத்தின் செய்தியை விசுவாசித்த சமாரியா ஜனங்களின்மீது பேதுருவும் யோவானும் தங்கள் கைகளை வைத்தார்கள்.
Acts 8:18-19
...அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததின் மூலமாக பரிசுத்த ஆவி கொடுக்கப்பட்டது...
"...அப்போஸ்தலர்கள் அவர்களுடைய கைகளை ஜனங்கள்மீது வைப்பதினாலே பரிசுத்த ஆவியைக் கொடுத்தார்கள்..."
நான் யார்மேல் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி.
"நான் என்னுடைய கைகளை ஜனங்கள்மீது வைக்கும்போது, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளவேண்டும்"
Acts 8:20-23
அவனை...உன்னுடைய...நீ
இந்தப் பெயர்சொற்கள் சீமோனைக் குறிக்கிறது.
உன்னுடைய இருதயம் செம்மையானதாக இல்லை
"உன்னுடைய எண்ணங்கள் சரியானவை இல்லை"
தேவனுடைய வரம்
கைகளை வைப்பதின் மூலமாக பரிசுத்த ஆவியானவரோடு தொடர்புகொள்ளும் திறன்.
நீ விரும்பியது
"மற்றவர்களுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுக்கும் திறனை விலைக்கு வாங்கவேண்டும் என்று விரும்பியது"
கசப்பான விஷம்
"மிஞ்சிய பொறாமையாக இருப்பது" என்பதின் உருவக விளக்கமாகும்.
பாவக்கட்டு
"பாவத்தின் கைதி" அல்லது "பாவம் மட்டுமே செய்யமுடியும்"
Acts 8:24
நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும்
இது "உன்னுடைய பணம் உன்னோடு அழிந்துபோகட்டும்" என்ற பேதுருவின் கடிந்துகொள்ளுதலைக் குறிக்கிறது.
நீங்கள் சொன்னவைகள்
"நீங்கள்" என்பது பேதுருவையும் யோவானையும் குறிக்கிறது.
Acts 8:25
சாட்சி கொடுத்தார்கள்
பேதுருவும் யோவானும் இயேசுவைப் பற்றி தனிப்பட்ட விதத்தில் அவர்கள் அறிந்தவைகளை சமாரியர்களுக்கு அறிவித்தார்கள்.
கர்த்தருடைய வார்த்தையைச் சொன்னார்கள்
இயேசுவைப் பற்றி வேதம் என்ன சொல்லுகிறது என்று பேதுருவும் யோவானும் சமாரியர்களுக்கு விளக்கினார்கள்.
...சமாரியருடைய அநேக கிராமங்களில்
"அநேக சமாரிய கிராமங்களில் உள்ள ஜனங்களுக்கு"
Acts 8:26-28
இப்பொழுது
இது கதையில் ஒரு மாறுதலைக் குறிக்கிறது.
கவனி
"கவனி" என்ற வார்த்தை கதையில் ஒரு புதிய நபரிடம் நம்மை விழிப்படையச் செய்கிறது. உங்களுடைய மொழியில் இதைச் செய்வதற்கான வழிகள் இருக்கலாம். "அங்கே... இருந்த ஒரு மனிதன் இருந்தான் " என்று ஆங்கிலம் பயன்படுத்துகிறது.
மந்திரி
இங்கு "மந்திரி" என்பது இனப்பெருக்கம் செய்யஇயலாத சரீர நிலையைக் குறிக்காமல் அரசாங்க உயர் அதிகாரியாக இருக்கும் எத்தியோப்பியன் என்று வலியுறுத்துகிறது.
கந்தாகே
எகிப்தின் ராஜாக்களுக்கு பார்வோன் என்பது பயன்படுத்தப்பட்டதைப்போல எத்தியோப்பிய ராஜஸ்திரீகளுக்கு இந்த பெயர் பயன்படுத்தப்பட்டது.
இரதம்
"குதிரைகள் பூட்டப்பட்ட வாகனம்"அல்லது "குதிரைகள் இழுத்துச்செல்லும் நான்கு சக்கர வாகனம்" என்பவைகள் இந்த பகுதியில் சரியாக பொருந்துகிறது. இரதங்கள் என்பது தூரமாக பயணம் செய்வதற்கான வாகனம் என்று இல்லாமல், பொதுவாக யுத்தத்திற்கான வாகனம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏசாயா தீர்க்கதரிசனத்தை வாசித்தல்
"ஏசாயா தீர்க்கதரிசன புத்தகத்திலிருந்து வாசித்தல்" என்று மொழிபெயர்க்கலாம். இது பழைய ஏற்பாட்டு ஏசாயா புத்தகம்.
Acts 8:29-31
நீ என்ன வாசிக்கிறாய் என்பது உனக்கு புரிகிறதா?
"நீ வாசிக்கிறவைகளின் அர்த்தம் உனக்கு புரிகிறதா?" என்று மொழிபெயர்க்கலாம். எத்தியோப்பியன் அறிவுள்ளவனும் வாசிக்கக்கூடியவனுமாக இருந்தான். ஆனால் இது ஆவிக்குரிய புரிந்துகொள்ளுதலைப் பற்றியது.
ஒருவன் எனக்கு உதவாவிட்டால், எனக்கு எப்படி?
"ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால், என்னால் முடியாது" என்கிற அணி இலக்கணக் கேள்வி. அவனால் புரிந்துகொள்ளமுடியவில்லை என்பதை அழுத்தமாக சொல்வதற்காக இது பயன்படுத்தப்பட்டுள்ளது
தன்னோடு உட்காரும்படி...பிலிப்புவை வேண்டிக்கொண்டான்.
பிலிப்பு அவனோடு பயணம் செய்வதற்கு சம்மதித்தான் என்று இது பொருள்படுகிறது.
Acts 8:32-33
மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாக அமைதியாயிருக்கிற ஆட்டுக்குட்டியைப்போல
மயிர்கத்தரிக்கிறவன் என்பவன் ஆடுகளின் மயிர்களைப் பயன்பாட்டிற்காக கத்தரிக்கிற நபர்.
அவருடைய தாழ்மையில் அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது
"அவர் தம்மைத் தாழ்த்தினார் மற்றும் அவர்கள் அவரைச் சரியாய் நியாயம் தீர்க்கவில்லை"
Acts 8:34-35
அவன் அவனுக்கு இயேசுவைக் குறித்து பிரசங்கித்தான்
"அவன் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அந்த மந்திரிக்கு போதித்தான்."
Acts 8:36-38
நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்கு தடையாக இருப்பது எது?
இது "நான் ஞானஸ்நானம் பெறுவதற்கு, உன்னை தடைபண்ணுகிறவைகள் ஒன்றுமில்லை" என்பதற்கான அணி இலக்கணக்கேள்வி.
37ம் வசனம்
இந்த வசனம் விடுபட்டுள்ளது. ஏனென்றால், சில பழைய நம்பகமான, பண்டைய பிரதிகள் இந்த வசனத்தை சேர்த்துக்கொள்ளவில்லை.
Acts 8:39-40
மந்திரி அதின்பின்பு அவனைக் காணவில்லை
"மந்திரி மறுபடியும் பிலிப்புவைக் காணவில்லை"
பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டான்.
பிலிப்பு, எத்தியோப்பியனை சந்தித்த இடத்திற்கும் ஆசோத்துக்கும் இடையே பயணம் செய்தான் என்பதற்கான குறிப்புகள் எதுவுமில்லை. அவன் காசாவின் சாலையில் திடீரென்று மறைந்து ஆசோத்தில் மீண்டும் தோன்றினான்.
அவன் செசரியாவுக்கு வருகிறவரையில்
பிலிப்புவின் கதை இங்கு செசரியாவில் நிறைவடைகிறது.
Acts 9
Acts 9:1-2
சவுல்
இந்தக் கதை பிலிப்பிலிருந்து சவுலுக்கு மாறுகிறது. மாற்று மொழிபெயர்ப்பு: "இதற்கிடையே, சவுல் "
இன்னும் சீஷர்களுக்கு எதிராக கொலைசெய்யும்படி பயமுறுத்திப் பேசுகிறான்
"கொலை" என்ற பெயர்ச்சொல்லை " இன்னும் சீஷர்களைப் பயமுறுத்தவும்,கொலைசெய்யவும் " என்ற வினைச்சொல்லாக மொழிபெயர்க்கலாம்.
கடிதங்களைக் கேட்டு வாங்கினான்
"பிரதான ஆசாரியனிடத்தில் சிபாரிசுக் கடிதங்களைக் கேட்டான் "
அவன் கண்டுபிடித்தால்...அவன் கொண்டுவரும்படி
"அவன்" என்ற வார்த்தை சவுலைக் குறிக்கிறது.
இந்த மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள்
"இயேசு கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றுகிறவர்கள் "
அவன் அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவருவான்
"அவன் அவர்களைக் கைதிகளாக எருசலேமுக்குக் கொண்டுவருவான். பவுலுடைய நோக்கம் " யூதத் தலைவர்கள் அவர்களை நியாயந்தீர்த்து தண்டிப்பார்கள் " என்பதைச் சேர்ப்பதினாலே தெளிவாக்கப்படலாம்.
Acts 9:3-4
( பிரதான ஆசாரியன் சவுலுக்கு நிரூபத்தைக் கொடுத்த பிறகு, அவன் தமஸ்குவுக்குப் போனான் )
அவன் பிரயாணமாய் போகையில்
சவுல் எருசலேமைவிட்டு இப்பொழுது தமஸ்குவுக்கு பிரயாணமாய்ப் போகிறான்.
இது சம்பவித்தது
ஏதோ ஒரு வித்தியாசம் சம்பவிக்கப்போகிறது என்கிற கதையின் மாற்றத்தினைக் குறிப்பிடுவதை இது தெரிவிக்கிறது.
பரலோகத்திலிருந்து...ஒரு ஒளி பிரகாசித்தது
வானத்திலிருந்து
அவன் தரையிலே விழுந்தான்
இது 1) "சவுல் தரையிலே வீசப்பட்டான்" அல்லது 2) " அந்த ஒளி அவனைத் தரையிலே தள்ளியது" அல்லது 3) ஒருவன் சோர்ந்து கீழே விழுவதைப்போல சவுல் தரையிலே விழுந்தான்" போன்ற பல அர்த்தங்களைக் கொடுக்கிறது. சவுல் எதிர்பாராதவிதமாக கீழே விழவில்லை.
நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?
கர்த்தர் கேள்வியின் வடிவில் சவுலைக் கடிந்துகொள்ளுகிறார். இதை "நீ என்னைத் துன்பப்படுத்துகிறாய்!" என்று மொழிபெயர்க்கலாம்.
Acts 9:5-7
"ஆண்டவரே, நீர் யார்?
"ஆண்டவரே " என்பதற்கு 1) "கர்த்தர் " அல்லது 2) "எஜமான்" அல்லது "ஐயா" என்று அர்த்தம். இது, அவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட மகாவல்லமையின் பிரசன்னத்தில் இருந்தான் என்பதைத் தெரிவிக்கும் காரியமாகும்.
எழுந்து, பட்டணத்திற்குள்ளே போ...
"எழுந்து தமஸ்கு பட்டணத்திற்குள்ளே போ..."
அது உனக்குச் சொல்லப்படும்
ஒருவன் உனக்கு சொல்லுவான்
நீ... நீ... உனக்கு
இவைகள் ஒருமை.
ஆனால் ஒருவரையும் காணாமல்
பவுல் மாத்திரமே ஒளியை அனுபவித்தான்.
Acts 9:8-9
அவனால் எதையும் காணமுடியவில்லை
சவுல் பார்வையற்றவனாக இருந்தான்.
அவன் புசிக்காமலும் குடிக்காமலும் இருந்தான்
"அவன் உபவாசித்தான்" என்பதில் இருக்கிறதைப்போல "அவன் புசிக்காமலும் குடிக்காமலும் இருப்பதைத் தெரிந்துகொண்டான்" அல்லது "பசி இல்லை" என்பதில் இருக்கிறதைப்போல "அவனால் புசிக்கவும் குடிக்கவும் முடியவில்லை".
Acts 9:10-12
இப்பொழுது அங்கே
இது ஒரு புதிய கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துவதோடு கதையின் ஒரு புதிய பகுதியைத் துவக்குகிறது.
அனனியா
இவர், சவுலிடத்திற்குச் சென்று, அவன்மீது கைகளை வைத்து அவனைக் குணப்படுத்தினதினால் தேவனுக்குக் கீழ்ப்படிந்த இயேசுவினுடைய சீஷன் ஆவான்.
அவன் சொன்னான்...
"அனனியா சொன்னான்..."
யூதாவின் வீடு
யூதா என்பவன் தமஸ்குவிலே அனனியா தங்கின வீட்டின் உரிமையாளர். புதியஏற்பாட்டிலே பலதரப்பட்ட யூதாக்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இதுதான் அவருடைய ஒரே தோற்றமாகத் தெரிகிறது.
தர்சுவிலிருந்து வந்த மனிதன்
"தர்சு பட்டணத்திலிருந்து வந்த மனிதன் "
Acts 9:13-16
பிரதான ஆசாரியர்களிடமிருந்து பெற்ற அதிகாரம்
சவுலுக்கு கொடுக்கப்பட்ட வல்லமை மற்றும் அதிகாரத்தின் வரம்பு, அந்த நேரத்தில் யூத மக்களுக்கு மாத்திரம் என்று பொருள்படுகிறது.
அவன் நான் தெரிந்துகொண்ட பாத்திரம்
"தெரிந்துகொள்ளப்பட்டக் கருவி" என்பது சேவைக்காக வேறுபிரிக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. இதை "எனக்கு சேவைசெய்ய நான் அவனைத் தெரிந்துகொண்டேன் " என்று மொழிபெயர்க்கலாம்.
என்னுடைய நாமத்தை சுமப்பதற்காக
இதை "அவன் என்னைப்பற்றி பேசுவதற்காக" என்று மொழிபெயர்க்கலாம்.
என்னுடைய நாமத்தினிமித்தம்
இது "என்னைப்பற்றி ஜனங்களுக்கு சொல்லுவதற்காக" என்பதைத் தெரிவிக்கிறது.
Acts 9:17-19
அவன்மேல் கைகளை வைத்து
அனனியா சவுலின்மீது தன்னுடைய கைகளை வைத்தான்.
உனக்கு தரிசனமானவர்
சவுலின் பயணத்தின்போது அவனோடு மற்றவர்களும் இணைந்திருந்தாலும், "உனக்கு" என்பது சவுலைக் குறிக்கிறது.
நீ பார்வையடையவும், பரிசுத்தஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் அவர் என்னை அனுப்பினார்
"நீ மீண்டும் பார்க்கும்படிக்கும், பரிசுத்தஆவி உன்னை நிரப்பும்படிக்கும் அவர் என்னை அனுப்பினார் " என்ற செய்வாக்கியத் தொடராகவும் சொல்லலாம்.
செதிள்கள் போன்றவைகள் விழுந்தன
"மீன் செதிள்கள்போல இருந்தவைகள் கீழே விழுந்தன "
அவன் எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான்
"அவன் எழுந்தான், அனனியா அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான் " என்று மொழிபெயர்க்கலாம்.
Acts 9:20-22
அப்பொழுதே அவன் பிரசங்கிக்கத் தொடங்கினான்
"அவன் " என்பது சவுலைக் குறிக்கிறது.
அவர் தேவனுடைய குமாரன் என்று சொன்னான்
"அவர் " என்பது இயேசுவைக் குறிக்கிறது.
அவனைக் கேட்டவர்கள் எல்லோரும்
இது "கேட்ட அநேகர் " என்பதை மிகைப்படுத்திக்கூருவது. மிகைப்படுத்துவதை நீங்கள் வித்தியாசமாகத் தெரியப்படுத்தினால் உங்களுடைய சொந்த நடையைப் பயன்படுத்தவும்.
எருசலேமில் இந்த நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவர்களை நாசமாக்கின மனிதன் இவனல்லவா?
இது, சவுல் உண்மையாகவே விசுவாசிகளைத் துன்பப்படுத்திக்கொண்டிருந்தான் என்பதை வலியுறுத்தும் அணி இலக்கண மற்றும் எதிர்மறைக் கேள்வி. இதை "எருசலேமில் இயேசுவின் நாமத்தைத் தொழுதுகொண்டவர்களைத் துன்பப்படுத்தின மனிதன் இவனே!" என்றும் சொல்லலாம்.
Acts 9:23-25
யூதர்கள் அவனைக் கொலை செய்யும்படி ஆலோசனை பண்ணினார்கள்
"அவனை" என்பது சவுலைக் குறிக்கிறது.
ஆனால் அவர்களுடைய யோசனை சவுலுக்குத் தெரியவந்தது
இந்த வாக்கியத்தொடர் "ஆனால் யாரோ ஒருவன் அவர்களுடைய திட்டங்களை சவுலுக்குச் சொன்னான் " என்ற செய்வாக்கியத்தொடராகவும் சொல்லுவது அவசியமானது.
ஆகவே, அவர்கள் வாசல்களைக் காத்துக்கொண்டிருந்தார்கள்
இந்தப் பட்டணம் மதில்களால் சூழ்ந்திருந்தது. ஜனங்கள் வாசல்கள் வழியாக மட்டுமே பட்டணத்திற்குள் நுழையவும், வெளியே செல்லவும் முடியும்.
அவனுடைய சீஷர்கள்
இயேசுவைப் பற்றிய சவுலுடைய செய்தியை விசுவாசித்து, அவனுடைய போதனைகளைப் பின்பற்றின மக்கள்.
Acts 9:26-27
ஆனால் அவர்களெல்லோரும் அவனுக்கு பயந்திருந்தார்கள்
"அவர்களெல்லோரும்" என்பது அநேக அல்லது அதிக என்பதை மிகைப்படுத்திக்கூருவது. இதை "ஏறக்குறைய அவர்கள் அனைவரும்" என்று சொல்லலாம்.(UDB)
ஆனால் பர்னபா அவனைச் சேர்த்துக்கொண்டான்
"ஆனால் பர்னபா சவுலைச் சேர்த்துக்கொண்டான்"
சவுல் இயேசுவின் நாமத்தினாலே தைரியமாக பிரசங்கித்தான்
இது சவுல் இயேசுகிறிஸ்துவினுடைய சுவிசேஷ செய்தியைப் பிரசங்கம் செய்கிறார் அல்லது போதிக்கிறார் என்பதின் ஆகுபெயர்.
Acts 9:28-30
அவன் அவர்களைச் சந்தித்தான்
"சவுல் அப்போஸ்தலர்களைச் சந்தித்தான்"
கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே
இது இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷ செய்தியின் ஆகுபெயர்.
கிரேக்க யூதர்களிடம் தர்க்கம் செய்தான்
சவுல் கிரேக்க யூதர்களிடம் காரணத்தைத் தேடினான்.
செசரியாவுக்கு
எருசலேமிலிருந்து செசரியாவுக்கு அமைப்பின் மாற்றம் இருந்தன. எப்படியோ, ஒருவன் எருசலேமுக்கும், தேவாலயத்திற்கும் ஏறிச் செல்கிறான், எருசலேமிலிருந்து கிளம்பும்போது, கீழே இறங்கிப் போகிறான் என்று சொல்வது வழக்கமானது.
Acts 9:31-32
வளர்ந்தது
தேவன் அவைகளைப் பெருகச்செய்தார்.
கர்த்தருடைய பயத்தில் நடப்பது
" கர்த்தரை தொடர்ந்து கனம்பண்ணுவது"
பரிசுத்த ஆவியின் ஆறுதலில்
"பரிசுத்த ஆவியானவர் அவர்களை பெலப்படுத்தி உற்சாகப்படுத்தியது"
நாடு முழுவதும்
இது யூதேயா, கலிலேயா, சமாரியா நாடுகளெங்குமுள்ள அநேக விசுவாசிகளை பேதுரு சந்திப்பதை மிகைப்படுத்திக் கூருவதாகும்
தேவனுடைய ஜனங்கள்
இது இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷ செய்தியை விசுவாசித்த ஜனங்களுக்கான ஆகுபெயர்.
லித்தா
லித்தா பட்டணம், யோப்பா பட்டணத்திற்கு தென்கிழக்கில் 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த பட்டணம் பழைய ஏற்பாட்டிலும், நவீன இஸ்ரவேலிலும் லோத் என்று அழைக்கப்படுகிறது.
Acts 9:33-35
அங்கே அவன் ஒரு மனிதனைக் கண்டான்
"அங்கே பேதுரு ஒரு மனிதனைச் சந்தித்தான்" பேதுரு ஒரு நோக்கத்தோடு திமிர்வாதமுள்ள மனிதனைத் தேடிப்போகவில்லை ஆனால் அது அவன்மீது வைக்கப்பட்டது.
திமிர்வாதம்
நடக்க முடியாமல், அனேகமாக இடுப்பிற்கு கீழே அசைக்க முடியாதவன்.
உன் படுக்கையைப் போட்டுக்கொள்
"உன் படுக்கையைச் சுற்று""
குடியிருந்த எல்லோரும்...
இது "குடியிருந்த அநேக மக்கள்..." என்பதற்காக மிகைப்படுத்திக் கூறுவதாகும்.
Acts 9:36-37
யோப்பா பட்டணத்திலே
இது பேதுருவின் கதையிலே புதிய சம்பவத்தை அறிமுகப்படுத்துகிறது.
"தொற்காள் " என்னும் அர்த்தங்கொள்ளும் தபீத்தாள்
அவளுடைய பெயர் அராமிக் மொழியில் தபீத்தாள், கிரேக்க மொழியில் அவளுடைய பெயர் தொற்காள். இரு பெயர்களும் "அராபிய மான்" என்று அர்த்தம் கொள்கிறது.
மிகுதியான நற்கிரியைகள்
"அநேக நற்கிரியைகளைச் செய்தல்"
அந்த நாட்களில் நடந்தது
"பேதுரு லித்தாவில் இருந்த நாட்களில் நடந்தது" இது அர்த்தம் நிறைந்த தகவல்.
Acts 9:38-39
அவர்கள் இரண்டு மனிதர்களை அவனிடத்தில் அனுப்பினார்கள்
"சீஷர்கள் இரண்டு மனிதர்களை பேதுருவினிடத்தில் அனுப்பினார்கள்"
விதவைகள்
கணவர்களை இழந்த பெண்கள்.
அவள் அவர்களோடு இருக்கும்போது
"அவள் சீஷர்களோடு வாழ்ந்தபொழுது"
Acts 9:40-43
எல்லோரையும் வெளியே போகச்செய்து
இந்தக் காரியத்தில், பேதுரு தனிமையில் இருந்து தபீத்தாளுக்காக ஜெபிப்பதற்காக எல்லோரையும் அனுப்பினான்.
இந்தக் காரியம் தெரியவந்தது
தபீத்தாளை மரணத்திலிருந்து எழுப்பின பேதுருவினுடைய அற்புதம்.
கர்த்தரிடத்தில் விசுவாசித்தார்கள்
இது "கர்த்தராகிய இயேசுவின் சுவிசேஷத்தை விசுவாசித்தார்கள்" என்பதின் ஆகுபெயர்.
பேதுரு தங்கியிருந்தான்
"பேதுரு அங்கே தங்கியிருந்தான் "
Acts 10
Acts 10:1-2
அங்கே ஒரு மனிதன் இருந்தான்
இதுவே, கதையில் ஒரு புதிய நபரை அறிமுகப்படுத்தும் விதமாகும். இந்த விஷயத்தில், அவன் கொர்நேலியு.
இத்தாலியா பட்டாளாம் என்னப்பட்ட பட்டாளத்திலே நூற்றுக்கு அதிபதியாகிய கொர்நேலியு என்னும் பேர்கொண்டவன்
"அவனுடைய பெயர் கொர்நேலியு. அவன் ரோம இராணுவத்தின் இத்தாலியா படைப்பிரிவில் 100 போர்வீரர்களுக்கு அதிகாரி."
அவன் தேவபக்தியுள்ளவனும், தேவனுக்கு பயந்தவனுமாக இருந்தான்
"அவன் தேவனை விசுவாசித்து, அவனுடைய வாழ்வில் தேவனைக் கனப்படுத்தவும், தொழுதுகொள்ளவும் விரும்பினான் "
தன் வீட்டாரனைவரோடும்
"அவனுடைய வீட்டின் நபர்களோடு"
அவன் ஜனங்களுக்கு மிகுந்த பணங்களைக் கொடுத்தான்
"...ஏழை ஜனங்களுக்கு." அவன் தன்னுடைய தேவபயத்தைக் காட்டினதில் இதுவும் ஒரு வழி.
Acts 10:3-6
ஒன்பதாம்மணி நேரம்
இது யூதர்களுக்கான வழக்கமான மதிய ஜெபநேரம்.
அவன் தெளிவாகப் பார்த்தான்
"கொர்நேலியு தெளிவாகப் பார்த்தான் "
தோல் பதனிடுகிறவன்
விலங்குகளின் தோலினால் தோல் பொருட்களைச் செய்கிறவன்.
Acts 10:7-8
அவனோடு பேசின தேவதூதன் போனபின்பு
"கொர்நேலியுவின் தரிசனம் நிறைவடைந்தபோது"
நடந்த எல்லாவற்றையும் அவர்களுக்குச் சொன்னான்
கொர்நேலியு தன்னுடைய தரிசனத்தை அவனுடைய இரண்டு வேலைக்காரர்களிடமும், போர்ச்சேவகனிடமும் விவரித்துச் சொன்னான்.
அவர்களை யோப்பாவிற்கு அனுப்பினான்
அவனுடைய வேலைக்காரரில் இருவரையும், ஒரு போர்ச்சேவகனையும் யோப்பாவிற்கு அனுப்பினான்.
Acts 10:9-12
அவர்கள் பிரயாணமாக போகும்போது
கொர்நேலியுவின் இரண்டு வேலைக்காரர்களும், போர்ச்சேவகனும் கொர்நேலியுவின் கட்டளையின்படி யோப்பாவிற்கு பயணமாய் போய்க்கொண்டிருக்கும்போது.
அவன் ஞானதிருஷ்டியடைந்தான்
ஞானதிருஷ்டி என்பது, பேதுருவுக்கு தரிசனம் உண்டானபோது, அவனுடைய மனம் அல்லது நிலைமையைச் சொல்லுகிறது.
வானம் திறந்திருப்பதை அவன் கண்டான்
இது பேதுருவின் தரிசனத்தின் ஆரம்பம்.
பெரிய துப்பட்டியைப்போன்ற ஒன்று
பெரிய துப்பட்டியைப்போல தோற்றமுடைய மிருகங்களைக் கொண்டிருக்கும் ஒரு கூடு.
எல்லா விதமான...மிருகங்கள் மற்றும் பறவைகள்...அதில் இருந்தன.
அது அநேக விதமான மிருகங்களைக் கொண்டிருந்தது.
Acts 10:13-16
ஒரு சத்தம் அவனோடு பேசியது
ஒரு நபர் பேசுவது குறிப்பிடப்படவில்லை. ஆனால் இதின் மூலதனம் தேவனிடமிருந்துதானேத் தவிர, சாத்தானிடமிருந்து அல்ல என்பதை உறுதியாக முடிவுசெய்யலாம்.
ஆண்டவர்
பேதுரு மரியாதைக்காகப் பயன்படுத்தின இந்தப் பதம் "கர்த்தர் " அல்லது "ஐயா" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
தீட்டும் அசுத்தமுமானதை நான் ஒருக்காலும் புசித்ததில்லை
இது, படைக்கப்பட்ட மிருகங்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தினால் தீட்டுப்பட்டதைப்போல அசுத்தமானவைகள், மற்றும் புசிக்கத்தகாதவைகள் என்று பொருள்படுகிறது.
Acts 10:17-18
அவன்மேல் கைகளை வைத்து
அனனியா சவுலின்மீது தன்னுடைய கைகளை வைத்தான்.
உனக்கு தரிசனமானவர்
சவுலின் பயணத்தின்போது அவனோடு மற்றவர்களும் இணைந்திருந்தாலும், "உனக்கு" என்பது சவுலைக் குறிக்கிறது.
நீ பார்வையடையவும், பரிசுத்தஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் அவர் என்னை அனுப்பினார்
"நீ மீண்டும் பார்க்கும்படிக்கும், பரிசுத்தஆவி உன்னை நிரப்பும்படிக்கும் அவர் என்னை அனுப்பினார் " என்ற செய்வாக்கியத் தொடராகவும் சொல்லலாம்.
செதிள்கள் போன்றவைகள் விழுந்தன
"மீன் செதிள்கள்போல இருந்தவைகள் கீழே விழுந்தன "
அவன் எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான்
"அவன் எழுந்தான், அனனியா அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான் " என்று மொழிபெயர்க்கலாம்.
Acts 10:19-21
பேதுரு அந்த தரிசனத்தைக் குறித்து சிந்தனை பண்ணிக்கொண்டிருந்தபோது
"பேதுரு அந்த தரிசனத்தைப்பற்றி இன்னும் தியானித்துக்கொண்டிருக்கும்போது."
ஆவியானவர்
"பரிசுத்த ஆவியானவர் "
மூன்று மனிதர்களைப் பார்
"கவனமாக இரு..." அல்லது "எழுந்திரு..."
நீங்கள் தேடுகிறவன் நான்தான்...நீங்கள் வந்த காரியம் என்ன?
"நீங்கள்" என்பது கொர்நேலியுவினால் அனுப்பப்பட்ட அந்த மூன்று மனிதர்களைக் குறிக்கிறது.
Acts 10:22-23
அவர்கள் சொன்னார்கள்
கொர்நேலியுவிடமிருந்து வந்த மூன்று தூதுவர்களும் பேதுருவிடம் சொன்னார்கள்
கொர்நேலியு...யூததேசத்தார் எல்லோராலும் நல்லவரென்று சொல்லப்பட்டவர்
அநேக யூத ஜனங்கள் கொர்நேலியுவைக் குறித்து நல்ல விஷயங்களைப் பேசுகிறார்கள்.
எல்லா யூததேசத்தார்
இது, கொர்நேலியுவினுடைய நன்னடக்கை அநேக யூத மக்களால் நன்கு அறியப்பட்டிருந்ததற்கான மிகைப்படுத்திக் கூறுவதாகும்.
அவனோடும், அவனோடிருந்தவர்களோடும் தங்கு
"அவனோடு" என்பது பேதுருவைக் குறிக்கிறது.
Acts 10:24
அவர்கள் வந்தார்கள்
பேதுரு, பேதுருவோடு இணைந்திருந்த யோப்பா பட்டணத்திலிருந்து வந்த மனிதர்கள், மற்றும் கொர்நேலியுவின் வேலைக்காரர்கள்.
அவன் தன்னுடைய உறவினர்கள் மற்றும் அவனுடைய நெருங்கிய நண்பர்களை ஒன்றாக அழைத்திருந்தான்
"அவன் " மற்றும் "அவனுடைய" என்பவைகள் கொர்நேலியுவைக் குறிக்கிறது.
Acts 10:25-26
அவனுடைய பாதத்தில் விழுந்தான்
கொர்நேலியு பேதுருவினுடைய பாதத்தில் விழுந்தபோது, இது கனப்படுத்துவதின் செயல் அல்ல, தொழுதுகொள்வதின் செயல்.
"எழுந்திரும்; நானும் ஒரு மனுஷன்தான்."
இது, பேதுருவைத் தொழுதுகொள்ளக்கூடாது என்பதற்காக கொர்நேலியுவுக்கான மிதமான கண்டிப்பு அல்லது சரிசெய்தல்.
Acts 10:27-29
அவனோடு பேசிக்கொண்டு
கொர்நேலியுவோடு பேசிக்கொண்டு
அநேக ஜனங்கள் ஒன்றாகக் கூடிவந்திருக்கிறதைக் கண்டு
"அநேக புறஜாதி ஜனங்கள் ஒன்றாகக் கூடிவந்திருக்கிறதைக் கண்டு." இது, கொர்நேலியு அழைத்திருந்த ஜனங்கள் புறஜாதியார் என்று பொருள்தருகிறது.
இது யூதமனிதனுக்கு நியாயமானது இல்லை
"இது யூதமனிதனுக்கு விலக்கப்பட்டுள்ளது"
நீங்களே அறிந்திருக்கிறீர்கள்
பேதுரு, கொர்நேலியுவிடமும், அவனுடைய அழைக்கப்பட்ட விருந்தினரிடமும் சொல்லுகிறார்.
ஆகவே, எதற்காக என்னை அழைத்தீர்கள் என்று நான் உங்களைக் கேட்கிறேன்
பேதுரு கொர்நேலியுவை நோக்கி கேள்வியைக் கேட்டாலும், "நீங்கள்" என்பது கூடியிருந்த புறஜாதியாரையும் உள்ளடக்கியது.
Acts 10:30-33
நான்கு நாட்களுக்கு முன்பு
வேதாகம கலாச்சாரம் இன்றைய நாளையும் சேர்த்துக்கொள்ளும். இன்றைய மேற்கத்திய கலாச்சாரத்தில், இது "மூன்று நாட்களுக்கு முன்பு" என்பதாகும்.
ஜெபத்தின் ஒன்பதாம்மணி நேரம்
யூதர்கள் தேவனிடத்தில் ஜெபிக்கும் வழக்கமான மதியநேரம்.
என் வீட்டிலே ஜெபம்
சில பழமையான அதிகாரங்கள் "உபவாசித்து ஜெபித்தார்கள்..." என்று சொல்லுகிறது.
உன்னுடைய ஜெபம்
கொர்நேலியுவைக் குறிக்கிறது.
உன்னைப்பற்றி தேவனுக்கு நினைப்பூட்டியது
"தேவனுடைய கவனத்திற்குக் கொண்டுவருதல்"
பேதுரு என்று மறுபேர் கொண்ட சீமோனை அழைப்பாயாக
"பேதுரு என்று அழைக்கப்பட்ட சீமோனை உன்னிடத்திற்கு வரச்சொல்"
நான் உனக்காக அனுப்பினேன்
"உனக்காக" என்பது பேதுருவைக் குறிக்கிறது.
நாங்கள் எல்லோரும் இங்கே இருக்கிறோம்
"நாங்கள்" என்பது, பேதுரு சொல்வதைக் கேட்பதற்காக கொர்நேலியு அழைத்திருந்த அநேக ஜனங்களைக் குறிக்கிறது, ஆனால் பேதுருவைச் சேர்த்து அல்ல.
Acts 10:34-35
பின்பு பேதுரு வாயைத் திறந்து பேசினான்
"பேதுரு அவர்களோடு பேசத் தொடங்கினான்"
தேவனுக்கு பயந்து, நீதியைச் செய்கிறவன் எவனோ, அவன் தேவனுக்கு உகந்தவன்
"தேவனுக்கு பயந்து, நீதியைச் செய்கிறவன் எவனோ, அவனை தேவன் ஏற்றுக்கொள்கிறார் "
Acts 10:36-38
( பேதுரு தொடர்ந்து பேசுகிறான் )
நீங்கள் செய்தியை அறிந்திருக்கிறீர்கள்
"நீங்கள் வார்த்தையை அறிந்திருக்கிறீர்கள் "
எல்லோருக்கும் கர்த்தராக இருக்கிறவர்
இது எபிரேயர், கிரேக்கர் இருதரத்தாரையும் உள்ளடக்கியது.
நீங்களே
இது கொர்நேலியுவையும், அவனுடைய விருந்தினர்களையும் குறிக்கிறது.
அந்த செய்தியை அறிந்துகொள்ளுங்கள்
"அவர் செய்த காரியங்களை அறிந்துகொள்ளுங்கள்"
Acts 10:39-41
( பேதுரு தொடர்ந்து பேசுகிறான் )
நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம்
"அப்போஸ்தலர்களாகிய நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்." "நாங்கள் " என்று சொல்வதினால், பேதுரு ஜனங்களை விட்டுவிடுகிறார்.
அவர் செய்தவைகள்
"இயேசு செய்தவைகள் "
அவர்கள் கொலைசெய்தவர்
"யூதத் தலைவர்கள் கொலைசெய்தவர் "
இந்த மனிதர்
"இந்த மனிதராகிய இயேசு"
தேவன் எழுப்பினார்
இயேசுவை தேவன் மீண்டும் வாழச்செய்தார்.
காணப்பண்ணும்படி அவரைக் கொடுத்தார்
அவர் நமக்குத் தம்மை வெளிப்படுத்தும்படி, தேவன் அவருக்கு அனுமதியளித்தார்.
Acts 10:42-43
( பேதுரு தொடர்ந்து பேசுகிறான் )
அவர் எங்களுக்கு கட்டளையிட்டார்
சாட்சிகளாகிய அல்லது அப்போஸ்தலர்களாகிய எங்களுக்கு தேவன் கட்டளையிட்டார். இந்த "எங்களுக்கு" என்பது பேதுருவின் ஜனங்களைச் விட்டுவிடுகிறது.
தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர் இவரே
இயேசுவே தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்.
உயிரோடிருக்கிறவர்களும் மரித்தவர்களும்
இன்னும் உயிரோடு வாழ்கிற ஜனங்கள் மற்றும் மரித்துப்போன ஜனங்கள்.
அவருக்கே தீர்க்கதரிசிகள் சாட்சியாக இருக்கிறார்கள்
"எல்லாத் தீர்க்கதரிசிகளும் இயேசுவுக்கே சாட்சியாக இருக்கிறார்கள்"
Acts 10:44-45
கேட்டுக்கொண்டிருந்த எல்லோர்மேலும் இறங்கியது
"எல்லோர் " என்பது அந்த வீட்டிலே இருந்த, பேதுருவை விசுவாசித்துக் கொண்டிருந்த புறஜாதியாரைக் குறிக்கிறது. மிகைப்படுத்தாமல் இயல்பான அனுகூலமாக இருப்பது.
வரம்
"இலவசமான வரம் "
பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்டார்
தேவன் பரிசுத்த ஆவியைப் பொழிந்தார்.
Acts 10:46-48
புறஜாதியார் பல பாஷைகளைப் பேசி தேவனைத் துதித்தார்கள்
இந்த மொழிகள், புறஜாதியார் உண்மையாகவே தேவனைத் துதிக்கிறார்கள் என்பதை யூதர்கள் ஒப்புக்கொள்ளும்படி ஜனங்கள் அறிந்துகொள்ளக்கூடிய பேசப்பட்ட மொழிகளே.
யாராவது இந்த ஜனங்களுக்கு தண்ணீரை விலக்கலாமா...
இது "ஒருவனும் இந்த ஜனங்களுக்குத் தண்ணீரை விலக்கிவைக்கக்கூடாது" என்பதற்கான அணி இலக்கணத் தொடர்.
அவர்கள் ஞானஸ்நானம் பெறக்கூடாது
இந்த ஜனங்கள் ஞானஸ்நானம் பெற தகுதியானவர்கள் என்பதை வலியுறுத்துவதற்காக அணி இலக்கணக் கேள்வியோடு, உருவகணி என்று அழைக்கப்பட்ட எதிர்மறைத் தகவலை உண்டாக்குகிறார்.
அவர்கள் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும்படி அவன் கட்டளையிட்டான்
"புறஜாதியார் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும்படி பேதுரு கட்டளையிட்டான் " அல்லது "புறஜாதி விசுவாசிகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி யூதகிறிஸ்தவர்களுக்கு பேதுரு கட்டளையிட்டான் "
பின்பு அவர்கள் அவனைக் கேட்டுக்கொண்டார்கள்
"புறஜாதியார் பேதுருவைக் கேட்டுக்கொண்டார்கள் "
Acts 11
Acts 11:1-3
இப்பொழுது...
இது கதையின் புதிய பகுதியைக் குறிக்கிறது.
யூதேயாவில் இருந்தவர்கள்
"யூதேயாவின் குடிகளில் இருந்தவர்கள் "
தேவவசனத்தை ஏற்றுக்கொண்டார்கள்
இயேசுகிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தையும், பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மேல் வருவதையும் விசுவாசிக்கிற ஞானஸ்நானம் பண்ணப்பட்ட புறஜாதியாருக்காக விளக்கமாகச் சொல்லப்படுகிறது.
பேதுரு மேலே எருசலேமுக்கு வந்தபோது
எருசலேம் மலையின்மேல் அமைந்திருந்தது.
விருத்தசேதனமுள்ள கூட்டத்தார்
இவர்கள், கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் விருத்தசேதனம் பண்ணப்பட்டு, மோசேயின் நியாயப்பிரமாணங்களைப் பின்பற்றவேண்டும் என்று போதித்த யூதக் கூட்டத்தினர்.
வாக்குவாதம் செய்தனர்
"அவனோடு தர்க்கம் பண்ணினார்கள் "
அவர்களோடு போஜனம் பண்ணினான்
விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களோடு போஜனம் பண்ணுவது யூத சட்டத்திற்கு எதிரானது.
Acts 11:4-6
பேதுரு விவரிக்கத் தொடங்கினான்
பேதுரு யூத விசுவாசிகளைக் கடிந்துகொள்ளவில்லை, ஆனால், சிநேகிதத்துவத்தோடு விவரிக்கும் முறையில் செயல்பட்டார்.
பூமியிலுள்ள நான்கு கால் ஜீவன்கள்
இந்த விலங்குகள் அனேகமாக முரட்டுத்தனமற்ற மக்களைக் குறிக்கலாம்.
காட்டு மிருகங்கள்
இந்த விலங்குகள் அனேகமாக அடங்காத அல்லது அடக்க முடியாத மக்களைக் குறிக்கலாம்.
ஊரும் ஜீவன்கள்
இவைகள் ஊர்ந்து செல்லும் விலங்குகள்.
Acts 11:7-10
( பேதுரு தொடர்ந்து பேசுகிறார் )
அசுத்தமும், தீட்டுமான எதுவும் என் வாய்க்குள்ளே போனதில்லை
துப்பட்டியில் இருந்த விலங்குகள், பழைய ஏற்பாட்டு யூத சட்டத்தில் யூதர்கள் சாப்பிடுவதற்குத் தடை செய்யப்பட்ட விலங்குகள் என்பது தெளிவானது.
ஒன்றும் அசுத்தமானதும் தீட்டுமானதும் இல்லை
இது "அசுத்தமான அல்லது தீட்டான ஆகாரம் " என்பதைக் குறிக்கிறது.
என் வாய்க்குள்ளே போனது
இது "நான் புசித்தேன் " என்பதைக் குறிக்கிறது.
தேவன் சுத்தமாக்கினவைகளை தீட்டு என்று சொல்லாதே
இது "தேவன் சுத்தமானவைகள் என்று சொன்ன விலங்குகளை, தீட்டானவைகள் என்று சொல்லாதே " என்பதைக் குறிக்கிறது.
தீட்டு
பழைய ஏற்பாட்டு யூத சட்டத்தில், ஒரு மனிதன் தேவனால் விலக்கப்பட்ட குறிப்பிட்ட விலங்குகளைப் புசிப்பதினால், பலவிதமான வழிகளில் சமய சடங்கு முறையில் " தீட்டு " அடைகிறான்.
Acts 11:11-14
( பேதுரு தொடர்ந்து பேசுகிறார் )
இதோ
"உடனே " அல்லது "அந்த நேரத்திலே." பெரிய கதையின் மற்றொரு சம்பவத்தின் ஆரம்பத்தை இது குறிக்கிறது. உங்களுடைய மொழியில் இதை செய்வதற்கான வழி இருக்கலாம்.
அவர்களைப் பற்றி நான் எந்தவொரு வேற்றுமையையும் உண்டுபண்ணக்கூடாது
அவர்கள் புறஜாதியாராக அல்லது யூதராக இருப்பதைக் குறித்து நான் எந்தவொரு வேறுபாட்டையும் உண்டாக்கக்கூடாது.
அவர்கள் அனுப்பப்பட்டார்கள்
யாரோ ஒருவர் அவர்களை அனுப்பினார்.
இந்த ஆறு சகோதரர்கள்
"இந்த ஆறு யூத விசுவாசிகள் "
பேதுரு என்னும் மறுபெயர் கொண்ட சீமோனைத் திரும்ப அழைக்கவும்
"பேதுரு என்று அழைக்கப்பட்ட சீமோனை திரும்ப அழைக்கவும் "
நீ இரட்சிக்கப்படுவாய்
"தேவன் உன்னை இரட்சிப்பார் "
Acts 11:15-16
( பேதுரு தொடர்ந்து பேசுகிறார் )
பரிசுத்த ஆவியானவர் ஆதியிலே நம்மேல் இறங்கினதுபோலவே, அவர்கள்மேலும் இறங்கினார்
"பெந்தெகொஸ்தே நாளில் யூத விசுவாசிகளின்மேல் வந்ததுபோலவே, புறஜாதி விசுவாசிகளின்மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.
ஆதியிலே நம்மேல்
"நம் " என்பது பேதுருவையும், ஆதியிலே அங்கிருந்த யூத விசுவாசிகளையும் குறிக்கிறது, ஆனால் ஆதியிலே அந்த அறைக்குள் இருந்த எல்லோரையும் அல்ல. உங்களுடைய மொழி அனுமதித்தால் பிரத்தியேக வடிவத்தினை பயன்படுத்தலாம்.
ஆதியிலே பேதுரு பெந்தெகொஸ்தே நாளுக்கு ஒப்பிடுகிறார்.
பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்
"தேவன் பரிசுத்த ஆவியினாலே உங்களை ஞானஸ்நானம் பண்ணுவார் "
Acts 11:17-18
( வசனம் 17ல் பேதுரு தன்னுடைய பேச்சை நிறைவுசெய்கிறார் )
தேவன் அவர்களுக்குக் கொடுத்தார்
இந்த கதையின் அமைப்பிலிருந்து "அவர்களுக்கு " என்பது கொர்நெலியுவையும், எருசலேமில் உள்ள அவருடைய யூத விசுவாசிகளையும் குறிக்கிறது.
அதே வரம்
பேதுரு பரிசுத்த ஆவியானவரின் வரத்தைக் குறிப்பிடுகிறார்.
தேவனை எதிர்ப்பதற்கு நான் யார் ?
நான் தேவனை எதிர்க்க முடியவில்லை
அவர்கள் இந்தக் காரியங்களைக் கேட்டபொழுது
"அவர்கள் ", என்பது பேதுருவை நிந்தித்த விருத்தசேதனமுள்ள ஜனங்கள்.
ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலைக் கொடுத்தார்
"ஜீவனுக்கு நடத்துகிற மனந்திரும்புதலைக் கொடுத்தார் "
Acts 11:19-21
ஆகையால், ஸ்தேவானுடைய மரணத்தினால் உண்டான உபத்திரவத்தினாலே எருசலேமிலிருந்து சிதறடிக்கப்பட்ட விசுவாசிகள்
இது பேதுருவினுடைய முந்தைய கதையோடு தொடர்பில்லாத, ஒரு புதிய நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துவதற்கான அப்போஸ்தலர் 8ல் உள்ள சுருக்கம்.
ஸ்தேவானுடைய மரணத்தினால் உண்டான உபத்திரவத்தினாலே எருசலேமிலிருந்து சிதறடிக்கப்பட்ட விசுவாசிகள்
"யூதத் தலைவர்கள் ஸ்தேவானைக் கொலைசெய்தப்பின்பு அநேக விசுவாசிகள் உபத்திரவப்படத் தொடங்கினார்கள். இந்த விசுவாசிகள் எருசலேமை விட்டு மற்ற இடங்களுக்குச் சென்றார்கள்..."
யூதர்களுக்கு மட்டுமேயன்றி மற்ற ஒருவருக்கும் இல்லை
தேவனுடைய செய்தி யூத ஜனங்களுக்கு மட்டுமேயன்றி, புறஜாதியாருக்கு அல்ல என்று அவர்கள் நினைத்தார்கள்.
கர்த்தருடைய கரம்
இது "தேவன் வல்லமையாய் செய்கிறவர் " என்பதற்கான விளக்கம்.
Acts 11:22-24
அவர்களைப் பற்றிய செய்தி
"அவர்களை " என்பது அந்தியோகியாவில் உள்ள புதிய விசுவாசிகள்.
சபையாரின் காதுகள்
இது "எருசலேமில் உள்ள விசுவாசிகள் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டார்கள் " என்பதற்கான விளக்கம்.
அவர்கள் அனுப்பினார்கள்
எருசலேமில் உள்ள சபையின் விசுவாசிகள் அனுப்பினார்கள்.
தேவனுடைய வரத்தைக் கண்டார்கள்
"தேவனுடைய கிருபையைக் கண்டார்கள் " அல்லது "விசுவாசிகளுக்கு தேவன் எப்படியாய் தயவாக செயல்பட்டார் "
அவன் அவர்களை உற்சாகப்படுத்தினான்
"அவன் தொடர்ந்து அவர்களுக்கு புத்தி சொல்லிக்கொண்டிருந்தான் "
கர்த்தரிடத்தில் நிலைத்திருங்கள்
" கர்த்தரிடம் உண்மையாய் நிலைத்திருக்க "
முழு இருதயத்தோடு
"கர்த்தரிடம் பக்தியுள்ளவர்களாக இருக்க " அல்லது "கர்த்தரில் முழுமையாக நம்ப "
பரிசுத்த ஆவியானவரின் நிறைவு
பர்னபா பரிசுத்த ஆவியானவருக்கு கீழ்ப்படிந்ததினால், பரிசுத்த ஆவியானவர் அவனை நடத்தினார்.
அநேக ஜனங்கள் கர்த்தரிடத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்
"அநேக ஜனங்கள் கர்த்தரில் விசுவாசித்தார்கள் " என்பதின் விளக்கம்.
Acts 11:25-26
தர்சுவுக்கு
"தர்சு பட்டணத்திற்கு "
அவனைக் கண்டபோது, அவனை அழைத்துக் கொண்டுவந்தான்
"பர்னபா சவுலைக் கண்டுபிடித்தபோது, பர்னபா சவுலை அழைத்துக் கொண்டுவந்தான் "
அவர்கள் ஒன்றாய் கூடியிருந்தார்கள்
"பர்னபாவும் சவுலும் ஒன்றாய் கூடியிருந்தார்கள் " அல்லது "பர்னபாவும் சவுலும் தொடர்ச்சியாக சந்தித்தார்கள் "
சீஷர்கள் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்
"அந்தியோகியா ஜனங்கள் சீஷர்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்தார்கள் "
Acts 11:27-28
அந்த நாட்களிலே
இது கதையின் புதிய பகுதியை அறிமுகப்படுத்துகிறது.
எருசலேமிலிருந்து அந்தியோகியாவுக்கு வந்தார்கள்
எருசலேமிலிருந்து அந்தியோகியாவுக்கு நிலஅமைப்பில் மாறுதல்கள் இருந்தது. எருசலேம் முக்கியமானவைகளில் முதன்மையானதாக இருந்ததால் எருசலேமைக் குறித்தும், தேவாலயத்தைக் குறித்தும் கருத்துக்கள் இருக்கின்றன. நிலஅமைப்பைக் குறித்த அக்கறை இல்லாமல், ஜனங்கள் எப்பொழுதும் எருசலேமிற்கும், மேலே தேவாலயத்திற்கும் சென்று, கீழே கடந்து போகிறார்கள்.
கொடிய பஞ்சம் உண்டாகும்
"மிகப்பெரிய ஆகாரப் பற்றாக்குறை உண்டாகும் "
உலகமெங்கும்
இது அனேகமாக முழு ரோம சாம்ராஜ்யத்தையும் குறிக்கலாம்.
Acts 11:29-30
ஒவ்வொருவரும் தங்களுக்கு இயன்றவரை
வசதியான ஜனங்கள் அதிகமாக அனுப்பினார்கள்; ஏழ்மையான ஜனங்கள் கொஞ்சமாக அனுப்பினார்கள்.
அவர்கள் இதைச் செய்தார்கள்; அவர்கள் பணம் அனுப்பினார்கள் "அந்தியோகியாவில் உள்ள விசுவாசிகள் பணங்களைக் கொடுத்தார்கள், அவர்கள் பணங்களை அனுப்பினார்கள்..."
பர்னபா மற்றும் சவுலுடைய கைகளில்
இது "பர்னபாவும் சவுலும் தனிப்பட்ட முறையில் எருசலேமிலுள்ள சபை மூப்பரிடம் பணங்களைக் கொண்டுவந்தார்கள் " என்பதின் விளக்கம்.
Acts 12
Acts 12:1-2
இப்பொழுதும்
இது கதையின் புதிய பகுதியை ஆரம்பிக்கிறது
அந்தக் காலத்திலே
அந்தியோகியாவில் உள்ள சீஷர்கள் யூதேயாவில் உள்ள சகோதரர்களுக்கு உதவி செய்வதற்காக பணம் அனுப்பின நாட்களில்.
கைகளைப் போட்டு
இது "கைது செய்வதற்காக போர்ச்சேவகர்களை அனுப்பியது" அல்லது "போர்ச்சேவகர்களை அனுப்பி பிடித்து காவலில் போடுவதற்காக" என்பதைத் தெரிவிக்கிறது.
சபையில் இருந்தவர்களில் சிலர்
அவர்கள் சபையின் தலைவர்கள் என்று கருப்பொருளிலிருந்து உணர்த்தப்பட்டுள்ளது. இதை "சபையின் தலைவர்கள் " அல்லது "விசுவாசக் கூட்டத்தாரின் தலைவர்கள் " என்று மொழிபெயர்க்கலாம்.
அவர்களைத் தவறாக நடத்துவதற்கு
"விசுவாசிகளைத் துன்பப்பட வைப்பது "
அவன் கொன்றான்
"ஏரோது ராஜா கொன்றான் " அல்லது "ஏரோது ராஜா கொல்லுவதற்கு கட்டளை கொடுத்தான் "
அவன் பட்டயத்தினாலே யாக்கோபைக் கொன்றான்
யாக்கோபு கொல்லப்பட்ட விதத்தை இது குறிப்பிடுகிறது.
Acts 12:3-4
இது யூதர்களுக்குப் பிரியமாக இருந்ததென்று அவன் கண்ட பிறகு
யாக்கோபைக் கொலைசெய்வது யூத தலைவர்களுக்கு பிரியமாக இருந்ததென்று ஏரோது அறிந்த பிறகு"
யூதர்களுக்கு பிரியமாக இருந்தது
"யூதத் தலைவர்களை சந்தோஷப்படுத்தியது"
பேதுருவையும் கைதுசெய்யத் தொடர்ந்தான்
"பேதுருவையும் கைதுசெய்யும்படி ஏரோது கட்டளைக் கொடுத்தான் "
அப்பொழுது
"இது நடந்தது" அல்லது "ஏரோது இதைச் செய்தான் "
அவனைக் கைது செய்தபின்பு, அவனை சிறைச்சாலையில் வைத்தான்
"போர்ச்சேவகர்கள் பேதுருவைக் கைது செய்தபின்பு, பேதுருவைச் சிறைச்சாலையில் போடும்படி ஏரோது போர்ச்சேவகர்களுக்குக் கட்டளையிட்டான் "
நான்கு வகுப்புகளின் போர்ச்சேவகர்கள்
"போர்ச்சேவகர்களின் நான்கு வகுப்புகள்." ஒவ்வொரு குழுவிலும் நான்கு போர்ச்சேவகர்களைக் கொண்ட குழுக்கள், ஒரு நேரத்தில் ஒரு குழுவாக பேதுருவைப் பாதுகாத்தார்கள். குழுக்கள் ஒரு நாளை பிரிவுகளாகப் பிரித்தார்கள். இரண்டு போர்ச்சேவகர்கள் அவன் அருகிலும், மற்ற இரண்டு போர்ச்சேவகர்கள் நுழைவுவாயிலிலும் இருந்தார்கள்.
அவனைக் காவல் காக்க
"பேதுருவைக் காவல் காக்க"
அவன், அவனை ஜனங்களிடத்தில் கொண்டுவர நோக்கமாயிருந்தான்
"மக்களின் முன்னிலையில் பேதுருவை நியாயம்தீர்க்கும்படி ஏரோது திட்டமிட்டிருந்தார் " அல்லது "யூத ஜனங்களுக்கு முன்பாக பேதுருவை நியாயம்தீர்க்கும்படி ஏரோது திட்டமிட்டிருந்தார் "
Acts 12:5-6
ஆகவே பேதுரு சிறைச்சாலையில் வைக்கப்பட்டான்
போர்ச்சேவகர்கள் தொடர்ச்சியாக சிறைச்சாலையில் பேதுருவைக் காத்துக்கொண்டிருந்தார்கள் என்று பொருள்படுகிறது.
ஊக்கத்துடன்
"தொடர்ந்து தியாகத்துடன் " அல்லது "நிறுத்தாமல் பொறுப்புடன் "
சபையாரால்
எருசலேம் விசுவாசிகள் ஜெபித்துக் கொண்டிருந்தார்கள் அல்லது எருசலேமில் இருந்த சபை ஜெபித்துக்கொண்டிருந்தது.
அவனுக்காக
"பேதுருவுக்காக"
ஏரோது அவனை வெளியே கொண்டுவர இருந்தான்
"ஏரோது பேதுருவின் தண்டனையை நிறைவேற்றும்படி சிறைச்சாலையிலிருந்து வெளியே கொண்டுவர இருந்தான் "
இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டான்
"இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டான்" அல்லது "இரண்டு சங்கிலிகளினாலே இணைக்கப்பட்டிருந்தான்"
காத்துக்கொண்டிருந்தார்கள்
"காவல் காப்பது"
Acts 12:7-8
இதோ
இங்கு "இதோ " என்ற வார்த்தை, தொடர்ந்து வருகின்ற ஆச்சரியமான காரியங்களை கவனிப்பதற்காக நம்மை ஜாக்கிரதைப் படுத்துகிறது.
அவனருகில்
"பேதுருவுக்கு அடுத்து " அல்லது "பேதுருவுக்கு அருகில் "
அறையிலே
"சிறைச்சாலை அறையிலே "
அவன் பேதுருவைத் தட்டி
"தூதன் பேதுருவைத் தட்டினான் " அல்லது "தூதன் பேதுருவைக் குத்தினான் "
அவனை எழுப்பினான்
"பேதுருவை எழுப்பினான் "
அவனுடைய சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தன
தூதர்கள் தொடாமலேயே பேதுருவிடமிருந்த சங்கிலிகளை விழச்செய்தது. இதை "பேதுருவின் சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தன " அல்லது "சங்கிலிகள் பேதுருவினுடைய கைகளிலிருந்து விழுந்தன" என்று மொழிபெயர்க்கலாம்.
அவனுக்குச் சொன்னான்
"பேதுருவுக்குச் சொன்னான்"
பேதுரு அப்படியே செய்தான்
"தூதன் அவனுக்குச் செய்யச் சொன்னவைகளைப் பேதுரு செய்தான் " அல்லது "பேதுரு கீழ்ப்படிந்தான் "
தூதன் அவனுக்குச் சொன்னான்
"தூதன் பேதுருவுக்குச் சொன்னான் "
என் பின்னே வா
இங்கு கூறப்பட்ட செயல், தூதனும் பேதுருவும் நடப்பதினாலே, பேதுரு தன்னுடைய கவனத்தை தூதன்மேல் வைக்கவேண்டும் என்று அர்த்தம் கொள்கிறது.
Acts 12:9-10
அவன் அறிந்திருக்கவில்லை
"பேதுருவுக்குத் தெரியவில்லை " அல்லது "பேதுரு புரிந்துகொள்ளவில்லை"
தூதனால் செய்யப்பட்டது உண்மை
"தூதனுடைய செயல்கள் உண்மையானவைகள் " அல்லது "தூதனுடைய செயல்கள் உண்மையாய் நடந்துகொண்டிருந்தன "
அவன் காண்கிறதாக நினைத்தான்
"அவன் காண்கிறதாக பேதுரு நினைத்தான் "
பின்பு அவர்கள்
"பின்பு தூதனும் பேதுருவும் "
கடந்து போனார்கள்
"நடந்து போனார்கள் "
இரண்டாவது
"இரண்டாவது காவல் "
அவர்கள் வந்தார்கள்
"தூதனும் பேதுருவும் வந்துசேர்ந்தார்கள் "
நகரத்திற்குப் போகிற
"நகரத்திற்குத் திறக்கப்பட்டது "
அது அவர்களுக்குத் தானாகத் திறந்தது
"கதவு அவர்களுக்காகத் திறந்தது " அல்லது "கதவு அவர்களுக்காகத் தானாக திறந்தது"
அவர்கள் வெளியே போனார்கள்
"தூதனும் பேதுருவும் கதவு வழியாக நடந்தார்கள் "
வீதி நெடுக போனார்கள்
"வீதி வழியாக நடந்தார்கள் "
அங்கே அவனை விட்டுப் போய்விட்டான்
"திடீரென்று பேதுருவை விட்டுப் போய்விட்டான் " அல்லது "திடீரென்று மறைந்தான் "
Acts 12:11-12
பேதுருவுக்கு தெளிவு வந்தபோது
"பேதுரு முழுமையாக விழிப்பான அல்லது கவனமானபோது " அல்லது "பேதுரு, நடந்தவைகளெல்லாம் உண்மை என்கிற கவனத்திற்கு வந்தபோது "
ஏரோதுவின் கைகளிலிருந்து என்னை விடுவித்தான்
"...ஏரோதின் கரம் " என்பது "ஏரோது எனக்காக திட்டமிட்டிருந்த தீங்கிற்கு என்னை விலக்கிமீட்டார் " என்பதின் விளக்கம்.
யூத ஜனங்களுடைய எதிர்பார்ப்பு
"எனக்கு என்ன சம்பவிக்கும் என்று யூத தலைவர்கள் நினைத்துக்கொண்டிருந்தது "
இதைப் புரிந்துகொண்டேன்
"இந்த சத்தியத்தில் கவனமானேன் "
மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானுடைய தாயார்
"...மாற்கு என்றும் அழைக்கப்பட்டவன் "
Acts 12:13-15
அவன் தட்டினான்
"பேதுரு தட்டினான் ". யூதருடைய முறைமையில் கதவைத் தட்டுவது என்பது நீங்கள் அவர்களைப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதை அவர்கள் அறிந்துகொள்வதற்காக செய்யப்படுவது.
வாசற்கதவில்
"வெளிக்கதவில் " அல்லது "வீதியிலிருந்து முற்றம் வரையான நுழைவுவாயிற் கதவில் "
பதிலளிக்க வந்தாள்
"யார் தட்டுவது என்று பார்க்க கதவருகே வந்தாள் "
அவள் அறிந்துகொண்டாள்
"ரோதை அறிந்துகொண்டாள் "
சந்தோஷத்தினால்
"ஏனென்றால் அவள் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள் " அல்லது "அதிக சந்தோஷமடைந்தாள் "
வாசலுக்கு அருகில் நிற்கிறார்
"வாசலுக்கு வெளியே நிற்கிறார் ." பேதுரு இன்னும் வெளியே நின்றுகொண்டிருந்தார்.
அவர்கள் அவளுக்குச் சொன்னார்கள்
"அந்த வீட்டின் உள்ளே இருந்த விசுவாசிகள், பணிப்பெண்ணாகிய ரோதையிடம் சொன்னார்கள் "
நீ பித்துபிடித்தவள்
ஜனங்கள், அவளை நம்பாமலிருந்தது மட்டுமல்லாமல், அவளைப் பயித்தியக்காரி என்று கடிந்துகொண்டார்கள். இதை "நீ பயித்தியக்காரி " என்று மொழிபெயர்க்கலாம்.
அவள் அப்படித்தான் என்று உறுதியாய் கூறினாள்
"ரோதை, தான் சொன்னது உண்மையென்று உறுதியாய் கூறினாள் "
அவர்கள் கூறினார்கள்
"வீட்டில் இருந்த ஜனங்கள் பதில் கூறினார்கள் "
அது அவருடைய தூதன்
"நீ பார்த்தது பேதுருவினுடைய தூதன்." சில யூதர்கள் காவல் காக்கும் தூதர்களை நம்பினார்கள், எனவே பேதுருவினுடைய தூதன் அவர்களிடத்தில் வந்தான் என்று நினைத்தார்கள்.
Acts 12:16-17
ஆனால் பேதுரு தொடர்ந்து தட்டிக்கொண்டிருந்தான்
இங்கு "தொடர்ந்து " என்ற வார்த்தை, அறையின் உள்ளே இருந்தவர்கள் பேசிக்கொண்டிருந்த முழு நேரமும் பேதுரு தட்டிக்கொண்டிருந்தான் என்று அர்த்தம் கொள்கிறது.
அவர்கள் கதவைத் திறந்தபோது, அவர்கள் அவனைப் பார்த்து பிரமித்தார்கள்
" கதவைத் திறந்தபிறகு, வீட்டிற்குள் இருந்த ஜனங்கள் பேதுருவைக் கண்டு பிரமித்தார்கள் "
அவர்களுக்கு சைகை காண்பித்து...அவர்களுக்குச் சொன்னான்
"வீட்டிற்குள் இருந்த ஜனங்களுக்கு சைகை காண்பித்து...ஜனங்களுக்குச் சொன்னான் "
இந்தக் காரியங்களை அறிவியுங்கள்
"இந்தக் காரியங்களைச் சொல்லுங்கள் "
அவன் போனான்
"பேதுரு போனான் "
Acts 12:18-19
இப்பொழுதும், பொழுது விடிந்தபின்பு
"இப்பொழுதும் " என்பது கதையில் ஏற்பட்டுள்ள இடைவெளியைக் குறிப்பிடுகிறது. மற்றும் இது பின்பதாக சரியான நேரத்தில் திரும்பவும் தொடருகிறது . இதை "இப்பொழுதும் விடியற்காலமானபோது " என்று மொழிபெயர்க்கலாம்.
சிறிய கலக்கம் இல்லை
இது ஒருவகையான அழுத்தமான உணர்வு. இதை "பெரிய குழப்பம் " அல்லது "நிறைய குழப்பம் " என்று மொழிபெயர்க்கலாம்.
சிறிய கலக்கம் இல்லை
இங்கு "கலக்கம் " என்பது நேர்மறையான உற்சாகம் இல்லை. ஆனால் வருத்தம், மிகுதியான கவலை, பயம் அல்லது குழப்பம் போன்ற எதிர்மறையானது.
குறித்து
" சம்பந்தமாக " அல்லது "பற்றி "
ஏரோது அவனைத் தேடிக் காணமுடியாமற் போனப்பின்பு
இது "ஏரோது பேதுருவைத் தேடி, பேதுருவைக் கண்டுபிடிக்காமல் போனப்பின்பு " என்று சொல்லப்படலாம்.
ஏரோது அவனைத் தேடினப்பின்பு
அனுகூலமான அர்த்தங்கள் 1) "பேதுரு காணாமற்போனான் என்று ஏரோது கேட்டபொழுது, அவனே சிறைச்சாலையில் தேடச் சென்றான் " அல்லது 2) "பேதுரு காணாமற்போனான் என்று ஏரோது கேட்டபொழுது, மற்ற போர்வீரர்களை சிறைச்சாலையில் தேட அனுப்பினான் "
அவர்களை விசாரித்து, அவர்களைக் கொலைசெய்யும்படி கட்டளையிட்டார்
"ஏரோது காவற்காரரை விசாரணை செய்து, காவற்காரரைக் கொலைசெய்யும்படி போர்வீரர்களுக்குக் கட்டளையிட்டார் "
பின்பு அவன் கீழேப்போனான்
"பின்பு ஏரோது கீழேப்போனான்". எருசலேம் மலையின்மேல் அமைந்திருந்ததினால், எருசலேமிலிருந்து பயணம் செய்யும்போது மற்ற எல்லாப் பகுதிகளும் தாழ்வானவைகளாக கருதப்பட்டன.
Acts 12:20-21
இப்பொழுது
"இப்பொழுது " என்பது கதையின் காலத்தில் ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது. "அக்காலத்திலே " என்பது மாற்று மொழிபெயர்ப்பு.
அவர்கள் அவனிடம் ஒருமித்து சென்றார்கள்
"ஏரோதுவிடம் பேசுவதற்காக ஒருமனப்பட்டு சென்ற தீரியர் மற்றும் சீதோனியர் மக்களை, இந்த மனிதர்கள் பிரதிபடுத்துகிறார்கள் "
அவர்கள் அறிவுறுத்தினார்கள்
"அந்த மனிதர்கள் அறிவுறுத்தினார்கள் "
பிலாத்து
பிலாத்து ஏரோதுவுக்கு துணையாக அல்லது காரியதரிசியாக இருந்தான். இங்கு அவன், அவனுடைய பெயரால் ஒரு முறைதான் குறிப்பிடப்பட்டுள்ளார்.
அவர்கள் சமாதானத்தைக் கேட்டுக்கொண்டார்கள்
"இந்த மனிதர்கள் சமாதானத்தை வேண்டிக்கொண்டார்கள் "
குறிக்கப்பட்ட நாளிலே
கூட்டத்திற்காக "திட்டமிடப்பட்ட நாளிலே "
அவர்களுக்குப் பிரசங்கம் பண்ணினான்
"ஏரோது அந்த மனிதர்களுக்குப் பிரசங்கம் பண்ணினான் " அல்லது "ஏரோது மனிதர்களோடு பேசினான் "
சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து
இங்குதான் ஏரோது வழக்கமாகத் தன்னைப் பார்க்க வருகிற மக்களிடம் பேசினான். "ஏரோது அவனுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தான் "
Acts 12:22-23
இது தேவனுடைய சத்தம்
"இவனுடையது தேவனுடைய சத்தம் " அல்லது "பேசுகிற இந்த மனிதன் தேவன் "
உடனே
ஜனங்கள் ஏரோதுவைத் துதித்துக்கொண்டிருந்தபொழுது
அவனை அடித்தான்
"ஏரோதுவைத் துன்பப்படுத்தினான் " அல்லது "ஏரோதுவை நோய்க்குள்ளாக்கினான்"
அவன் தேவனுக்கு மகிமை செலுத்தவில்லை
ஜனங்களுடைய ஆராதனையை தேவனுக்கு நேராகத் திருப்புவதற்கு பதிலாக ஜனங்கள் அவனையே ஆராதிக்கும்படிச் செய்தான். "ஏரோது தேவனுக்கு மகிமையைச் செலுத்தவில்லை."
அவன் புழுக்களினால் திண்ணப்பட்டு இறந்தான்
"புழுக்கள் ஏரோதுவைத் திண்றன, ஏரோது இறந்தான்."
Acts 12:24-25
தேவவசனம் வளர்ந்து பெருகியது
இது "இயேசுவின் இரட்சிப்பின் செய்தி பரவி, இந்த செய்தியை விசுவாசித்த ஜனங்களின் எண்ணிக்கை பெருகினார்கள் " என்பது இதன் விளக்கம். இது "தேவனுடைய வார்த்தை பரவி, விசுவாசிகளின் எண்ணிக்கை பெருகியது" என்றும் மொழிபெயர்க்கப்படலாம்.
எருசலேமில் அவர்களுடைய ஊழியத்தை நிறைவேற்றினார்கள்
"எருசலேமின் சபை மூப்பர்களிடம் பணத்தை ஒப்படைத்தார்கள் " என்று பொருள்படுகிறது.
திரும்பி வந்தார்கள்
"பர்னபாவும் சவுலும் அந்தியோகியாவுக்குத் திரும்பினார்கள் "
யோவானை அவர்களோடு கூட்டிக்கொண்டுவந்தார்கள்
"பர்னபாவும் சவுலும் யோவானை அவர்களோடு கூட்டிக்கொண்டுவந்தார்கள் "
மாற்கு என்னும் மறுபெயர் கொண்டவன்
"மாற்கு என்று அழைக்கப்பட்டவன் "
Acts 13
Acts 13:1-3
அந்தியோகியா சபையிலே
"அந்தியோகியா சபையில் அந்த நேரத்தில் "
சிமியோன் ( நீகர் என்று அழைக்கப்பட்டவன் ), சிரேனே ஊரானாகிய லூகி, மனாயீன் (தேசாதிபதியாகிய ஏரோதுடனே வளர்க்கப்பட்ட சகோதரன் )
ஏரோதுவோடு வளர்க்கப்பட்ட சகோதரன்
மனாயீம் அனேகமாக ஏரோதுவினுடைய விளையாட்டுத்தோழன் அல்லது வளருகிற நெருங்கிய நண்பனாக இருக்கலாம்.
எனக்காக பிரித்துவிடுங்கள்
"எனக்கு ஊழியம் செய்ய நியமியுங்கள் " அல்லது "பரிசுத்தப்படுத்துங்கள் "
அவர்களை அழைத்த
இங்கு இந்த வினைச்சொல், இந்தப் பணியைச் செய்வதற்காக இதற்குமுன்பே தேவன் அவர்களைத் தெரிந்தெடுத்தார் என்று அர்த்தம் கொண்டுள்ளது.
சபை கூடுகை
"சபையார் " அல்லது "விசுவாசிகளின் கூட்டம் "
அவர்களுடைய கரங்களை இந்த மனிதர்கள்மேல் வைத்தார்கள்
"தேவனுடைய ஊழியத்திற்காக வேறுபிரிக்கப்பட்டவர்கள்மேல் கரங்களை வைத்தார்கள். " இந்த எடுத்துக்காட்டில் கரங்களை வைப்பதினாலே ஆவிக்குரிய வரங்கள் அளிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. ஆனால் பர்னபா மற்றும் சவுல்மீது பரிசுத்த ஆவியானவருடைய அழைப்பை உறுதிப்படுத்துவது மூப்பர்களுடைய வழக்கமாக இருந்தது.
அவர்களை அனுப்பினார்கள்
"அந்த மனிதர்களை அனுப்பினார்கள் " அல்லது "பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குச் செய்யும்படிச் சொன்ன பணியைச் செய்வதற்காக அந்த மனிதர்களை அனுப்பினார்கள் "
Acts 13:4-5
அவர்கள்...அவர்கள்...அவர்கள்
"பர்னபா மற்றும் சவுல் "
அவர்கள் இறங்கிப்போனார்கள்
இது அதிகபட்சமாக நிலஅமைப்பின் மாற்றத்தைப் போன்றது.
செலூக்கியா
செலூக்கியா கடலோரத்தில் அமைந்துள்ள பட்டணம்.
சாலமி பட்டணம்
சாலமி, சீப்புரு தீவில் அமைந்துள்ள பட்டணம்.
யூதருடைய ஜெபஆலயங்கள்
அனுகூலமான அர்த்தங்கள் 1) "சலாமிஸ் பட்டணத்திலே பர்னபாவும் சவுலும் பிரசங்கித்த அநேக யூதருடைய ஜெபஆலயங்கள் இருந்தன " அல்லது 2) "பர்னபாவும் சவுலும் சாலமிஸ் பட்டணத்தின் ஜெப ஆலயத்திலே தங்களுடைய பிரசங்கத்தை ஆரம்பித்து, சீப்புரு தீவைச்சுற்றிலும் அவர்கள் பயணம் செய்தபோது அவர்கள் பார்த்த எல்லா ஜெபஆலயங்களிலும் தொடர்ந்து பிரசங்கித்தார்கள்."
Acts 13:6-8
அவர்கள் போனார்கள்
"அவர்கள் " என்பது பர்னபாவையும், சவுலையும் மற்றும் யோவான் மாற்குவையும் குறிக்கிறது.
முழுத் தீவும்
அவர்கள் தீவின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு கடந்துபோனார்கள். அவர்கள் ஒவ்வொரு நகரத்திற்கும் சென்றிருக்கமாட்டார்கள். ஆனால் அவர்கள் சென்ற ஒவ்வொரு நகரங்களிலும் சுவிசேஷ செய்தியைச் சொல்லியிருப்பார்கள்.
பாப்போ
இது சீப்புரு தீவில் அமைந்துள்ள அதிபதி வாழ்ந்த பெரிய நகரம்.
அவர்கள் கண்டார்கள்
கண்டார்கள் என்ற வார்த்தை அதைப் பார்க்கவேண்டும் என்கிற எண்ணம் இல்லாமலேயே வருவது என்ற கருத்தை உடையது, "அவர்கள் சந்தித்தார்கள் " அல்லது "அவர்கள் வந்தார்கள்."
ஒரு குறிப்பிட்ட மாயவித்தைக்காரன்
"மந்திரங்களைச் செய்கிற ஒரு மனிதன் " அல்லது "இயற்கைக்கு அப்பாற்பட்ட மந்திரக் கலைகளைச் செய்கிற மனிதன் "
பர்யேசு என்கிற பெயர்
கிரேக்க மொழியில் "இயேசுவின் குமாரன் " என்பது இதன் அர்த்தம். எப்படியோ, இந்த மனிதனுக்கும் இயேசுகிறிஸ்துவுக்கும் எந்தவொரு உறவும் இல்லை. அந்நாட்களில் இயேசு என்பது ஒரு பொதுவான பெயராகக் கருதப்பட்டது.
இணைந்திருப்பது
" அடிக்கடி உடனிருந்த " அல்லது "அடிக்கடி இணைந்திருந்த "
அதிபதி
ரோம சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தில் இருந்த தேசாதிபதி. இதை "ஆளுநர் " என்று மொழிபெயர்க்கலாம்.
இந்த மனிதன்
"செர்கியுபவுல்"
எலிமா என்கிற "மாயவித்தைக்காரன் "
இது மாயவித்தைக்காரனாகிய பர்யேசு.
( அப்படித்தான் அவனுடைய பெயர் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது )
"கிரேக்க மொழியில் அவன் அப்படியாகத்தான் அழைக்கப்பட்டான் "
அவர்களை எதிர்த்தான்; அவன் திருப்பமுயன்றான்
"திருப்பமுயன்றதினால் அவர்களை எதிர்த்தான்" அல்லது "திருப்பமுயன்றதினால் தன்னை அவர்களுக்கு எதிராக வைத்துக்கொண்டான்"
அவனுக்கு வேண்டியது
"செர்கியுபவுல்"
அவன் முயன்றான்
"எலிமா முயன்றான் "
அதிபதியை விசுவாசத்திலிருந்து திருப்பமுயன்றான்
"அதிபதி சுவிசேஷச் செய்தியை விசுவாசிக்காதபடிக்கு அவனை இணங்கச்செய்ய முயற்சித்தான் "
Acts 13:9-10
பவுல் என்று சொல்லப்பட்ட சவுல்
"மக்களால் பவுல் என்று அழைக்கப்பட்டவன் " அல்லது "தன்னை பவுல் என்று அழைத்துக்கொண்டவன் "
அவன் அவனை உற்றுப்பார்த்தான்
"மாயவித்தைக்காரனாகிய எலிமாவை சவுல் உற்றுப்பார்த்தான் "
பிசாசின் மகனே
"மகனே" என்பது ஏதோ ஒன்றைப்போல இருக்கிற மரபுச்சொல். இதை 1) "பிசாசின் குழந்தையே" அல்லது 2) "நீ பிசாசைப்போல் இருக்கிறாய்" அல்லது 3) நீ பிசாசைப்போல் செயல்படுகிறாய்" என்று மொழிபெயர்க்கலாம்.
நீ எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்திருக்கிறாய்
"நீ எப்பொழுதும் வஞ்சகத்தைப் பயன்படுத்தி மற்றவர்களை சத்தியமில்லாதவைகளை நம்பச்செய்யவும், எப்பொழுதும் தவறானவைகளைச் செய்யவும் ஆவல்கொண்டிருக்கிறாய்"
துன்மார்க்கம்
இந்த அமைப்பில் இது சோம்பேறியாக இருப்பது மற்றும் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றுவதில் சுறுசுறுப்பில்லாதவர்களுமாக இருப்பது என்று அர்த்தம் கொள்கிறது.
நீ எல்லாவிதமான நீதிகளுக்கும் பகைவனாக இருக்கிறாய்
கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதில் நீ ஓயமாட்டாயோ?
பிசாசைப் பின்பற்றுகிறதினால் பவுல் மாயவித்தைக்காரனைக் கடிந்துகொள்ளுகிறார். இது "தேவனாகிய கர்த்தரைப்பற்றிய சத்தியங்கள் பொய்யானவைகள் என்பதைச் சொல்வதை நீ நிறுத்தவேண்டும்" என்று சொல்லப்படலாம்.
கர்த்தருடைய செம்மையான வழிகள்
இது "கர்த்தரைப் பற்றின சத்தியங்கள்" என்பதற்கான விளக்கம். கர்த்தரைப்பற்றின சத்தியங்கள் பொய்சொல்கின்றன என்று சொல்வதினாலே மாயவித்தைக்காரனை பவுல் கடிந்துகொள்ளுகிறார்.
Acts 13:11-12
( 11ம் வசனத்தில் பவுல் எலிமாவிடம் பேசுவதைத் தொடருகிறார் )
கர்த்தருடைய கரம் உன்மேல் உள்ளது
இது, தேவனுடைய வல்லமை உன்னைத் தண்டிப்பதற்கு ஆயத்தமாக உள்ளது என்பதைத் தெரிவிக்கிறது. இதை "கர்த்தர் உன்னைத் தண்டிப்பார் " என்று மொழிபெயர்க்கலாம்.
நீ குருடனாவாய்
"தேவன் உன்னைக் குருடனாக்குவார் "
நீ சூரியனைக் காணமாட்டாய்
எலிமா முற்றிலும் குருடனாக இருப்பான். அவன் சூரியனின் வெளிச்சத்தைக் கூடக் காணமாட்டான்.
சிலகாலம்
"ஒரு குறிப்பிட்ட காலம்" அல்லது "தேவன் நியமித்த காலம்வரைக்கும்"
உடனே எலிமாவின்மேல் மந்தாரமும் இருளும் விழுந்தது
"மந்தாரமும் இருளும் எலிமாவின்மேல் விழுந்தது" அல்லது "ஒரு இருளான மந்தாரம் எலிமாவின்மேல் விழுந்தது" அல்லது "எலிமா தெளிவாகப் பார்க்கமுடியாமல் மற்றும் அவனால் எதையும் எப்போதும் பார்க்க இயலாமற்போனது"
அவன் சுற்றிலும் போக ஆரம்பித்தான்
"எலிமா சுற்றிலும் அலைந்தான் " அல்லது "எலிமா சுற்றிலும் உணர ஆரம்பித்தான்"
அதிபதி
ரோமப் பேரரசின் ஆளுகையில் இருக்கிற அதிகாரி. இதை "ஆளுநர் " என்றும் மொழிபெயர்க்கலாம்.
அவன் விசுவாசித்தான்
"அந்த அதிபதி விசுவாசித்தான் " அல்லது "அந்த அதிபதி இயேசுவை விசுவாசித்தான் "
அவன் அதிசயப்பட்டான்
"அதிபதி ஆச்சரியப்பட்டான் " அல்லது "அதிபதி பெரிய அதிசயமாக உணர்ந்தான் "
Acts 13:13-15
இப்பொழுது
இது கதையின் புதிய பகுதியைத் துவக்குகிறது.
பவுலும் அவனுடைய நண்பர்களும் பாப்போவிலிருந்து கப்பல் ஏறினார்கள்
"பவுலும் அவனோடிருந்தவர்களும் பாப்போவிலிருந்து கப்பலில் பயணம் செய்தார்கள்." இந்த நண்பர்கள் பர்னபாவும் யோவான் மற்றும் மாற்குமே.
ஆனால் யோவான் அவர்களைவிட்டுப்பிரிந்து போனான்
"ஆனால் யோவான் மாற்கு, பவுலையும் பர்னபாவையும் விட்டுப்பிரிந்து போனான் "
பம்பிலியாவிலிருக்கும் பெர்கேவிற்கு வந்தார்கள்
"பம்பிலியாவிலிருக்கும் பெர்கேவிற்கு வந்துசேர்ந்தார்கள் "
நியாயப்பிரமாணமும், தீர்க்கதரிசன ஆகமமும் வாசித்துமுடித்தப்பின்பு
இது "நியாயப்பிரமாணத்தைக் குறித்த புத்தகங்களிலிருந்தும், தீர்க்கதரிசனத்தைக் குறித்த புத்தகங்களிலிருந்தும் ஒருவர் வாசித்து முடித்தப்பின்பு" என்பதற்கான தெளிவான விளக்கம்.
அவர்களுக்குச் செய்தி அனுப்பினார்கள்
"பவுலிடமும், அவனுடைய நண்பர்களிடமும் பேசும்படி ஒருவனுக்குச் சொன்னார்கள் "
உங்களிடம் உற்சாகப்படுத்தும் செய்திகள் ஏதாவது இருந்தால்
"உங்களில் யாரிடமாவது உற்சாகப்படுத்தும் வார்த்தைகள் இருந்தால்"
அதைச் சொல்லுங்கள்
"தயவுசெய்து அதைப்பேசுங்கள்" அல்லது "தயவுசெய்து எங்களுக்கு அதைச் சொல்லுங்கள் "
Acts 13:16-18
அவனுடைய கைகளினால் சைகை காண்பித்தான்
அவனுடைய கைகளின் சைகை, அவன் பேசுவதற்கு ஆயத்தமாக இருந்தான் என்பதற்காக கைகளை அசைத்து அடையாளம் காட்டுவதைக் குறிக்கிறது. இதை "அவன் பேசப்போகிறான் என்பதைக் காண்பிக்கும்படி தன்னுடைய கைகளை அசைத்தான்" என்று மொழிபெயர்க்கலாம்.
தேவனைக் கனப்படுத்துகிற ஜனங்களே
இது, தேவனை விசுவாசிக்கவும், ஆராதிக்கவும் மனம்மாறின புறஜாதியாரைக் குறிக்கிறது. இதை "இஸ்ரவேலிலிருந்து வராதவர்களும் ஆனால் தேவனை ஆராதிக்கிறவர்களுமான நீங்கள் " என்று மொழிபெயர்க்கலாம்.
கேளுங்கள்
"என்னை கவனியுங்கள்" அல்லது "நான் சொல்லவிருப்பதை கவனியுங்கள்"
இஸ்ரவேலராகிய இந்த ஜனத்தினுடைய தேவன்
"இஸ்ரவேலின் ஜனங்கள் ஆராதிக்கிற தேவன் "
நம்முடைய முற்பிதாக்களைத் தெரிந்துகொண்டு
"நம்முடைய" என்கிற பிரதிபெயராகிய இது பிரத்தியேகமானதும், பவுலையும் அவனுடைய சகயூதர்களையும் குறிக்கிறதுமாக இருக்கிறது. இதை "நீண்ட நாட்களுக்கு முன்பு யூத ஜனங்களைத் தெரிந்துகொண்டார் " என்று மொழிபெயர்க்கலாம்.
அவர்கள் சஞ்சரித்தபோது
"இஸ்ரவேலர்கள் தங்கியிருந்தபோது"
அதிலிருந்து அவர்களைப் புறப்படப்பன்ணினார்
"தேவன் இஸ்ரவேலர்களை எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படப்பண்ணினார் "
அவர் அவர்களை ஆதரித்தார்
"தேவன் அவர்களைச் சகித்துக்கொண்டார் " அல்லது "தேவன் அவர்களுடைய கீழ்ப்படியாமையைத் தாங்கிக்கொண்டார் "
Acts 13:19-20
( பவுல் தொடர்ந்து பேசுகிறார் )
அவர் அதற்குப்பின்பு
தேவன் அதற்குப்பின்பு
அவர் நம்முடைய ஜனங்களுக்குக் கொடுத்தார்
"தேவன் பவுலுடைய ஜனங்களுக்குக் கொடுத்தார் " அல்லது "தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்தார் "
அவர்களுடைய தேசம்
"இஸ்ரவேல் ஜனங்களுடைய சொந்ததேசம்"
நானூற்று ஐம்பது வருடங்கள் அந்த தேசத்தை எடுத்துக்கொண்டார்கள்
"450 வருடங்கள் அனுபவித்தார்கள் "
தேவன் அவர்களுக்குக் கொடுத்தார்
"தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்தார் "
சாமுவேல் தீர்க்கதரிசிவரைக்கும்
"சாமுவேல் தீர்க்கதரிசியின் காலம்வரைக்கும்"
Acts 13:21-22
( பவுல் தொடர்ந்து பேசுகிறார் )
நாற்பது வருடகாலமாய்
"நாற்பது வருட காலத்திற்கு அவர்களுடைய ராஜாவாக இருக்கும்படி"
அவர் தாவீதை ஏற்படுத்தினார்
"தேவன் தாவீதைத் தெரிந்துகொண்டார் "
அவர்களுடைய ராஜா
"இஸ்ரவேலின் ராஜா" அல்லது "இஸ்ரவேலர்கள் மீதான ராஜா"
தாவீதைப்பற்றி தேவனே சொன்னார்
"தேவன் தாவீதைப்பற்றி இதைச் சொன்னார் "
ஈசாயின் குமாரனாகிய தாவீதை இருக்கக்கண்டேன்
"ஈசாயின் குமாரனாகிய தாவீதை நான் கவனித்தேன் "
என் இருதயத்திற்கு ஏற்றவன்
இது "நான் விரும்புவதையே தானும் விரும்புகிற மனிதன் " என்பதற்கான தெளிவான விளக்கம்.
Acts 13:23-25
( பவுல் தொடர்ந்து பேசுகிறார் )
இந்த மனிதனுடைய சந்ததிகளிலிருந்து
"தாவீதின் சந்ததிகளிலிருந்து"
அவர் செய்வேனென்று வாக்குத்தத்தம் செய்ததுபோல
"தேவன், செய்வேனென்று வாக்குத்தத்தம் பண்ணினதுபோல"
மனம் திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானம்
"மனந்திரும்புதலைத் தெரிவிக்கும் ஞானஸ்நானம்"
நீங்கள் என்னை யார் என்று நினைக்கிறீர்கள்?
யோவான்ஸ்நானகன், அவன் யார் என்பதைக் குறித்து சிந்திக்கும்படி ஜனங்களுக்குப் போதிக்கும்பொழுது இந்தக் கேள்வியைக் கேட்கிறான். இது "நான் யார் என்பதைப்பற்றி சிந்தியுங்கள் " என்றும் மொழிபெயர்க்கலாம்.
அவருடைய பாதரட்சையை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல
"அவருடைய பாதரட்சையை அவிழ்க்கிறதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை "
Acts 13:26-27
( பவுல் தொடர்ந்து பேசுகிறார் )
ஆபிரகாமின் சந்ததியின் பிள்ளைகள்
"ஆபிரகாமின் சந்ததிகள்"
அது நமக்கு
"நமக்கு" என்பது பவுலையும், ஜெபஆலயத்தில் உள்ள அவனுடைய அனைத்து ஜனங்களையும் உள்ளடக்கிக் குறிப்பிடுகிறது.
உண்மையாகவே அவரை அறியவில்லை
"உண்மையாகவே இயேசுவை அறியவில்லை"
இந்த இரட்சிப்பின் வசனம் அனுப்பப்பட்டிருக்கிறது
"இந்த இரட்சிப்பைக் குறித்த வசனத்தை தேவன் அனுப்பினார் "
தீர்க்கதரிசிகளின் சத்தங்கள்
இது "தீர்க்கதரிசிகளின் வாக்கியங்கள் அல்லது புத்தகங்கள் "என்பதின் தெளிவான விளக்கமாகும்.
ஆகவே அவர்கள் தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களை நிறைவேற்றினார்கள்
"எனவே எருசலேமின் தலைவர்கள், அவர்கள் என்ன செய்யவேண்டுமென்று தீர்க்கதரிசிகள் சொன்னார்களோ அவைகளைச் செய்தார்கள்"
வாசிக்கப்படுகிறவைகள்
"ஒருவன் வாசிக்கிறவைகள் "
Acts 13:28-29
( பவுல் தொடர்ந்து பேசுகிறார் )
அவர்கள்
அதிகமான "அவர்கள்" என்பது யூதத் தலைவர்களைக் குறிக்கிறது.
அவரை
அதிகமான "அவரை" என்பது இயேசுவைக் குறிக்கிறது.
மரணத்திற்குரிய நல்ல காரணங்கள் ஒன்றையும் அவர்கள் கண்டுபிடிக்கவில்லை
யூதத் தலைவர்கள் நல்ல காரணங்கள் ஒன்றும் இல்லாமலேயே இயேசுவைக் கொலைசெய்ய விரும்பினார்கள். இதை "இயேசு மரிப்பதற்கு நல்ல காரணங்கள் ஒன்றையும் யூதத் தலைவர்கள் கண்டுபிடிக்கவில்லை" என்று மொழிபெயர்க்கலாம்.
அவர்கள் பிலாத்துவைக் கேட்டுக்கொண்டார்கள்
இங்கு "கேட்டுக்கொண்டார்கள்" என்ற வார்த்தை வேண்டுவது,கெஞ்சுவது அல்லது மன்றாடுவது போன்ற அர்த்தங்களைக்கொண்ட வலுவான வார்த்தையாகும்.
அவரைக்குறித்து எழுதியிருக்கிறவைகள் எல்லாவற்றையும் அவர்கள் நிறைவேற்றி முடித்தபொழுது
யூதத் தலைவர்கள், தீர்க்கதரிசிகளின் ஆகமங்களில் எழுதப்பட்டிருந்த இயேசுவின் மரணத்தையும் சேர்த்து, மற்ற எல்லாக் காரியங்களையும் இயேசுவிற்கு செய்தபொழுது"
அவர்கள் அவரை மரத்திலிருந்து இறக்கினார்கள்
"இயேசு மரித்தப்பின்பு, சில தலைவர்கள் இயேசுவை சிலுவையிலிருந்து இறக்கினார்கள் "
Acts 13:30-31
( பவுல் தொடர்ந்து பேசுகிறார் )
ஆனால் தேவன் அவரை எழுப்பினார்
"ஆனால் தேவன் இயேசுவை எழுப்பினார் "
அவர் காணப்பட்டார்
"இயேசு காணப்பட்டார் "
இப்பொழுது ஜனங்களுக்கு அவருடைய சாட்சிகளாயிருக்கிறார்கள்
"இப்பொழுது இயேசுவைக் குறித்து ஜனங்களுக்கு சாட்சிகொடுக்கிறார்கள் "
Acts 13:32-34
( பவுல் தொடர்ந்து பேசுகிறார் )
நம்முடைய முற்பிதாக்களுக்கு அருளப்பட்ட வாக்குத்தத்தங்கள்
"நம்முடைய முற்பிதாக்களுக்கு தேவன் அருளிய வாக்குத்தத்தங்கள் "
தேவன் இந்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்றினார்
"தேவன் இந்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்றி முடித்தார் "
அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு
"நம்முடைய முற்பிதாக்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு"
அவர் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினதிலிருந்து
"இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே"
இதுவும் எழுதப்பட்டிருந்தது
"இந்த சத்தியமும் எழுதப்பட்டிருக்கிறது"
இனி அவருடைய சரீரம் அழியாதபடிக்கு அவரை மரித்தோரிலிருந்து அவர் எழுப்பினார் என்பதைக்குறித்த உண்மையை அவர் இப்படி சொல்லியிருக்கிறார்
இயேசுவினுடைய சரீரம் அழியாதபடிக்கு, இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினதைப்பற்றி தேவன் இந்த வார்த்தைகளைப் பேசினார்.
பரிசுத்தமும் மற்றும் நிச்சயமான ஆசீர்வாதங்கள்
"பரிசுத்தமும் மற்றும் உறுதியான ஆசீர்வாதங்கள்"
Acts 13:35-37
( பவுல் தொடர்ந்து பேசுகிறார் )
அவனும் சொல்லுகிறான்
"தாவீதும் சொல்லுகிறான்"
நீர்
தாவீது தேவனோடு பேசுகிறார்
அழிவை அனுபவிப்பது
"அவனுடைய சரீரம் கெட்டுப்போவது"
அவனுடைய சொந்த வம்சத்திலே
"அவனுடைய வாழ்நாட்களில்"
தேவனுடைய விருப்பத்தின்படி ஊழியம் செய்தான்
"தேவனுக்கு ஊழியம் செய்தான்" அல்லது "தேவனைப் பிரியப்படுத்தத் தேடினான்"
அவன் நித்திரையடைந்தான்
"அவன் மரித்தான்"
அவனுடைய பிதாக்களோடு வைக்கப்பட்டான்
"மரித்துப்போன அவனுடைய முன்னோர்களோடு அடக்கம்பண்ணப்பட்டான்"
ஆனால் அவரோ
"ஆனால் இயேசுவோ"
அழிவை அனுபவிக்கவில்லை
"அவருடைய சரீரம் கெட்டுப்போகவில்லை"
Acts 13:38-39
( பவுல் தொடர்ந்து பேசுகிறார் )
உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது
"இதைத் தெரிந்துகொள்ளுங்கள்" அல்லது "நீங்கள் தெரிந்துகொள்ள இது முக்கியமானது"
இந்த மனிதன் மூலமாக உங்களுக்குப் பாவமன்னிப்பு அறிவிக்கப்பட்டது
"இயேசு கிறிஸ்துவின் மூலமாக உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நாங்கள் உங்களுக்கு அறிவிக்கிறோம்"
அவரால்
"இயேசுவினால்" அல்லது "இயேசுவின் மூலமாக"
காரியங்கள்
"பாவங்கள்"
Acts 13:40-41
( பவுல் தொடர்ந்து பேசுகிறார் )
தீர்க்கதரிசிகள் பேசின காரியங்கள்
"தீர்க்கதரிசிகள் பேசினவைகள்."
உங்களுக்கும் நேரிடும்
"உங்களுக்கு" என்பது ஜெபஆலயத்தின் ஜனங்களைக் குறிக்கிறது.
அசட்டைக்காரரே, பாருங்கள்
"அலட்சியமாய் நினைக்கிறவர்களே, கவனமாக இருங்கள்" அல்லது "என்னைப் பரிகாசம் பண்ணுகிறவர்களே, கவனமாக இருங்கள்"
பின்பு அழிந்துபோங்கள்
"பின்பு மரித்துப்போங்கள்."
நானே
"நான்" என்பது தேவனைக் குறிக்கிறது.
ஒரு கிரியையை செய்கிறேன்
"ஒன்றைச் செய்கிறேன்" அல்லது "செயலைச் செய்கிறேன்"
உங்களுடைய நாட்களில்
"உங்களுடைய வாழ்நாட்களில்"
அந்தக் கிரியை
"நான் அந்த ஒன்றைச் செய்கிறேன்"
ஒருவன் அதை உங்களுக்கு அறிவித்தாலும்
"ஒருவன் அதை உங்களுக்குச் சொல்லியிருந்தாலும்"
Acts 13:42-43
பவுலும் பர்னபாவும் போகையில்
"பவுலும் பர்னபாவும் புறப்படும்போது"
அவர்களை வேண்டிக்கொண்டார்கள்
"அவர்களைக் கேட்டுக்கொண்டார்கள்"
மதம் மாறினவர்
இவர்கள் யூத மதத்திற்கு மாறின யூதரல்லாத ஜனங்கள்.
அவர்களோடு பேசி அவர்களைக் கேட்டுக்கொண்டவர்கள்
"பவுலும் பர்னபாவும் அந்த ஜனங்களோடு பேசி அவர்களைக் கேட்டுக்கொண்டார்கள்"
தேவனுடைய கிருபையிலே நிலைகொண்டிருக்கும்படி
"தேவனுடைய கிருபையை தொடர்ந்து நம்புவது"
Acts 13:44-45
ஏறக்குறைய முழு பட்டணமும்
இது "ஏறக்குறைய பட்டணத்திலுள்ள எல்லா ஜனங்களும்" என்பதற்கான ஆகுபெயராகும்.
ஏறக்குறைய முழு பட்டணமும்
இது மிகைப்படுத்தி விளக்கப்பட்டதற்கான உதாரணமாகும். "முழு பட்டணமும்" என்பது மிகைப்படுத்திக் கூருவதாகும் மற்றும் "ஏறக்குறைய" என்பது மிகைப்படுத்தி கூறப்படுவதின் அர்த்தம் என்ன என்பதைத் தெளிவாக்குகிறது.
யூதர்கள்
இது "யூதத் தலைவர்கள் " என்பதின் ஆகுபெயராகும்.
அவர்கள் பொறாமையினால் நிறைந்திருந்தார்கள்
"யூதத் தலைவர்கள் பொறாமையினால் நிறைந்திருந்தார்கள்" அல்லது "யூதத் தலைவர்கள் மிகுந்த பொறாமையடைந்தார்கள்"
அவனைத் தூஷித்தார்கள்
"பவுலைத் தூஷித்தார்கள்"
Acts 13:46-47
தேவனுடைய வார்த்தை முதலாவது உங்களுக்கே சொல்லவேண்டியதாயிருந்தது
"நாங்கள் முதலாவது உங்களுக்கு தேவனுடைய வார்த்தையைச் சொல்லுகிறோம்"
முதலாவது உங்களுக்கு சொல்லப்பட்டது
"முதலாவது யூதர்களாகிய உங்களுக்கு சொல்லப்பட்டது"
நீங்கள் உங்களைவிட்டு அதைத் தள்ளுவதைப் பார்க்கிறோம்
"யூதர்கள் தேவனுடைய வார்த்தையை விலக்குவதைப் பார்க்கிறோம்"
உங்களை நித்தியஜீவனுக்கு அபாத்திரராக எண்ணுங்கள்
இயேசு கிறிஸ்துவின் மூலமாக நித்தியஜீவன் என்கிற பவுலுடைய செய்தியை யூத ஜனங்கள் தள்ளிவிட்டார்கள்.
நாங்கள் திரும்புவோம்
"நாங்கள்" என்பது பவுலையும் பர்னபாவையும் குறிக்கிறது, அங்கே கூடியிருந்த கூட்டத்தாரை அல்ல.
நான் உம்மை ஒளியாக வைத்தேன்
இந்தக் குறிப்பு, "நான்" என்பது தேவனையும், "நீர் " என்பது மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவையும் உண்மையாகக் குறிக்கின்ற பழைய ஏற்பாட்டிலிருந்து எடுக்கப்பட்டது. பவுலும் பர்னபாவும் புறஜாதியாருக்கும் தேவனுடைய வார்த்தையை பகிர்ந்துகொள்ளவேண்டியதால் இந்தக் குறிப்பும் தனக்கும் பர்னபாவுக்கும் எப்படிப் பொருந்துகிறது என்று பவுல் வெளிப்படுத்தினார்.
Acts 13:48-49
நித்தியஜீவனுக்கென்று நியமிக்கப்பட்டவர்கள் எத்தனைபேர்களோ
"நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படிக்கு தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட எல்லா ஜனங்களும் "
நித்தியஜீவனுக்கு நியமிக்கப்பட்டிருந்தவர்கள்
"நித்தியஜீவனைக் கொடுக்க தேவன் தெரிந்துகொண்டார் "
கர்த்தருடைய வசனம் பிரசித்தமாயிற்று
விசுவாசித்தவர்கள் சென்று இயேசு கிறிஸ்துவைப் பற்றிய செய்தியை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்.
Acts 13:50-52
யூதர்கள்
"யூதத் தலைவர்கள் "
தூண்டிவிடப்பட்டார்கள்
"நம்பச்செய்தார்கள்" அல்லது "இணங்கச்செய்தார்கள்" அல்லது "கிளறிவிடப்பட்டது" அல்லது "நெருப்புப்பிழம்பை கிளறிவிடுதல்" போன்ற உருவக மொழிகள்.
இவைகள் உபத்திரவத்தைக் கிளறிவிட்டன
"இந்த முக்கியமான பெண்களும் ஆண்களும் உபத்திரவத்தைத் தூண்டிவிட்டனர் "
பட்டணத்தின் எல்லைகளுக்குப் புறம்பாக அவர்களைத் துரத்திவிட்டார்கள்
"பவுலையும் பர்னபாவையும் அவர்களுடைய பட்டணத்திலிருந்து துரத்தினார்கள்" அல்லது "பவுலையும் பர்னபாவையும் அவர்களுடைய பகுதிகளிலிருந்து வெளியேற்றினார்கள்"
தங்கள் கால்களில் படிந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டார்கள்
இது, தேவன் அவர்களை நிராகரித்தார் என்றும் அவர்களைத் தண்டிப்பார் என்பதையும் விசுவாசிக்காத ஜனங்களுக்குச் சுட்டிக்காட்டும் அடையாளச் செயலாகும்.
அவர்கள் போனார்கள்
"பவுலும் பர்னபாவும் போனார்கள் "
Acts 14
Acts 14:1-2
இக்கோனியாவிலும் சம்பவித்தது
"அதே காரியம் இக்கோனியாவிலும் நடந்தது"
ஆனால் கீழ்படியாத யூதர்கள் புறஜாதியாருடைய மனதைத் தூண்டிவிட்டு சகோதரருக்கு விரோதமாக கசப்பை உண்டாக்கினார்கள்
"ஆனால் கீழ்படியாத யூதர்கள் புறஜாதியாருடைய மனதைத் திருப்பி பகை உண்டாக்கினார்கள் "
Acts 14:3-4
ஆகவே அவர்கள் அங்கே தங்கினார்கள்
அநேக விசுவாசிகளுக்காக பவுலும் பர்னபாவும் இக்கோனியாவில் தங்கினார்கள். " ஆகவே" என்ற சொல் வாக்கியத்திற்கு குழப்பத்தைச் சேர்த்தால் இதை விட்டுவிடலாம்.
அவர் சாட்சி கொடுத்தார்
"கர்த்தர் சாட்சி கொடுத்தார் "
அவருடைய கிருபையைப்பற்றி
"கர்த்தருடைய கிருபையைப்பற்றி"
வசனத்தைக்குறித்த சாட்சி
"வசனம் உண்மையானது என்பதற்கான சாட்சி "
பவுல் மற்றும் பர்னபாவினுடைய கைகளினால்
இது மக்களாகிய பவுலையும் பர்னபாவையும் குறிப்பிடுகிறதை வெளிப்படுத்துகிறது.
அடையாளங்களையும் அற்புதங்களையும் அநுக்கிரகம்பண்ணுதல்
பவுலும் பர்னபாவும் அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்வதற்காக இயேசு அவர்களை தகுதிப்படுத்தினார். "அநேக அற்புதங்களைச் செய்ய அவர்களை தகுதிப்படுத்தினார் " என்று மொழிபெயர்க்கலாம்.
சேர்த்துக்கொண்டு
"உதவினார்கள்" அல்லது "தயவு காட்டினார்கள்"
அப்போஸ்தலர்களோடு
இந்த நிகழ்வில் லூக்கா, பன்னிரண்டு அப்போஸ்தலர்களைப்போல அதே இடத்தில் இவர்களையும் வைத்து, பவுலையும் பர்னபாவையும் அப்போஸ்தலர்களாக குறிப்பிடுகிறார்.
Acts 14:5-7
அவர்களுடைய அதிகாரிகளை இணங்கச்செய்
"இக்கோனியாவின் அதிகாரிகளை மனம்மாறச் செய்"
அவர்கள் அதற்கு எச்சரிக்கையானார்கள்
"பவுலும் பர்னபாவும் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் திட்டத்திற்கு எச்சரிக்கையானார்கள்"
லிக்கவோனியா
சிறிய ஆசியாவிலுள்ள மாவட்டம்.
லீஸ்திரா
சிறிய ஆசியாவில் இக்கோனியாவிற்கு தெற்கேயும், தெர்பைக்கு வடக்கிலும் உள்ள பட்டணம்.
தெர்பை
சிறிய ஆசியாவில் இக்கோனியா மற்றும் லீஸ்திராவுக்கு தெற்கே உள்ள பட்டணம்.
அங்கே அவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தார்கள்
"பவுலும் பர்னபாவும் அங்கேயும் சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தார்கள் "
Acts 14:8-10
அவன் அவனுக்குச் சொன்னான்
"பவுல் சப்பாணியான மனிதனுக்குச் சொன்னான் "
தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடக்காதவன்
"பிறவியிலேயே முடமாயிருந்து, நடக்க இயலாமல் இருந்தவன்."
பவுல் அவனை உற்றுப்பார்த்து
"பவுல் அவனை நேரடியாகப் பார்த்து"
பார்த்து, அவன்
" பார்த்து, சப்பாணியான மனிதன்"
குணமாக்கப்படுவதற்கு
"சுகமாக்கப்படுவதற்கு"
Acts 14:11-13
அவர்களுடைய சத்தத்தை உயர்த்தி
"மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்தார்கள் "
தேவர்கள் நம்மிடத்தில் இறங்கிவந்திருக்கிறார்கள்
ஜனங்களில் அநேகர் பவுலும் பர்னபாவும் வானத்திலிருந்து அல்லது பரலோகத்திலிருந்து இறங்கிவந்த அவர்களுடைய தெய்வங்கள் என்று நம்பினார்கள். இதை "தெய்வங்கள் வானத்திலிருந்து நம்மிடத்திற்கு இறங்கி வந்திருக்கிறார்கள் " என்று மொழிபெயர்க்கலாம்.
மனித ரூபத்தில்
இந்த ஜனங்கள், தெய்வங்கள் தோற்றத்தில் முழுவதும் மனிதனாக இருக்கமாட்டார்கள் என்று நம்பினார்கள்.
ஏனென்றால் அவன்
"ஏனென்றால் பவுல் "
எருதுகள் மற்றும் பூமாலைகள்
மிருகங்கள் பலியிடப்படுவதற்கும், பூமாலைகள் பவுலுக்கும் பர்னபாவுக்கும் அணிவிக்கவும் அல்லது பலியிடுவதற்காக மிருகங்களின்மேல் போடுவதுமாகும்.
அவனும் திரளான ஜனங்களும்
"ஆசாரியனும் ஜனக்கூட்டமும்"
Acts 14:14-16
அப்போஸ்தலர்கள்
லூக்கா, உண்மையான பன்னிரண்டு அப்போஸ்தலர்களுக்குச் சமமாக பவுலையும் பர்னபாவையும் வைத்து அவர்களை "அப்போஸ்தலர்கள்" என்று அழைக்கிறார்.
மனுஷரே, ஏன் இந்தக் காரியங்களைச் செய்கிறீர்கள்?
பவுலும் பர்னபாவும், ஜனங்கள் தங்களுக்கு பலியிட முயற்சிப்பதைக் கடிந்துகொள்ளுகிறார்கள். இதை "மனுஷரே, நீங்கள் இந்தக் காரியங்களைச் செய்யக்கூடாது!" என்று கூறலாம்.
உங்களைப்போலவே அதே உணர்வுகளுள்ள
இது "உங்களைப்போல எல்லாவிதங்களிலும்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
இந்த வீணான காரியங்களைவிட்டு திரும்புங்கள்
"இந்த வீணான தேவர்களை வணங்குவதை விட்டுவிடுங்கள்" அல்லது "இந்த பொய்யான தேவர்களை ஆராதிப்பதை விட்டுவிடுங்கள்"
ஒரு ஜீவனுள்ள தேவன்
"பதிலாக, ஜீவனுள்ள தேவனை ஆராதியுங்கள்"
நடந்துசெல்ல
"அதின்படி வாழ்வதற்கு"
Acts 14:17-18
(பவுலும் பர்னபாவும் தங்களுடைய நற்செயல்களைத் தொடர்ந்தார்கள் )
அவர் தம்மை விளங்கப்பண்ணாதிருந்ததில்லை
"தேவன் தம்மை விளங்கப்பண்ணாதிருந்ததில்லை"
அதில்
இது "உண்மையினால் சாட்சியளிக்கப்பட்டது போல " என்று மொழிபெயர்க்கப்படலாம்.
உங்களுக்கு தந்து...உங்கள் இருதயங்களை நிரப்பி
"நீங்கள் " என்பதில், பவுல் அவனுடைய அனைத்து ஜனங்களையும் குறிக்கிறார்.
ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி
"சாப்பிடுவதற்கு உங்களுக்கு போதுமானவைகளையும், அதைக்குறித்து சந்தோஷப்படும் காரியங்களையும் கொடுத்து"
பவுலும் பர்னபாவும் திரளான ஜனங்கள் அவர்களுக்கு பலி செலுத்துவதிலிருந்து அவர்களை அமர்த்தினார்கள்
ஜனங்கள் கிட்டத்தட்ட பவுலுக்கும் பர்னபாவுக்கும் எருதுகளை பலி செலுத்தினார்கள்.
Acts 14:19-20
ஜனங்களை இணங்கச்செய்தனர்
"ஜனங்களை பவுலுக்கு விரோதமாகத் திருப்பினார்கள் "
அவனை சூழ்ந்து...அவன் எழுந்து...அவன் போனான்
பவுலைக் குறிக்கிறது.
பட்டணத்திற்குள் பிரவேசித்தான்
"பவுல் விசுவாசிகளோடு லீஸ்திராவிற்குள் மறுபடியும் பிரவேசித்தான்."
அவன் தெர்பைக்குச் சென்றான்
"பவுல் தெர்பைக்குச் சென்றான் "
Acts 14:21-22
அவர்கள் பிரசங்கித்தார்கள்...அவர்கள் திரும்பிவந்தார்கள்...அவர்கள் சொன்னார்கள்
பவுலையும் பர்னபாவையும் குறிக்கிறது.
அந்தப் பட்டணம்
"தெர்பை"
சீஷர்களுடைய மனதைத் திடப்படுத்திக்கொண்டிருந்தார்கள்
பவுலும் பர்னபாவும், விசுவாசிகள் சுவிசேஷத்தின் சத்தியத்தை விசுவாசிக்கவும், அதிக உறுதியாக வளரவும் செய்தார்கள்.
விசுவாசத்தில் நிலைத்திருக்கும்படி அவர்களை உற்சாகப்படுத்தினார்கள்
அவர்கள் இயேசுவைத் தொடர்ந்து விசுவாசிக்கும்படிக்கு பவுலும் பர்னபாவும் அவர்களை உற்சாகப்படுத்தினார்கள்.
நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று அவர்கள் அவர்களுக்குச் சொன்னார்கள்
இது மறைமுகமாக பேசுகிற குறிப்பு. இதை "நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று அவர்கள் அவர்களுக்குச் சொன்னார்கள் " என்கிற நேரடி பேச்சின் குறிப்பாக மொழிபெயர்க்கலாம்.
அவர்கள் அவர்களுக்குச் சொன்னார்கள்
பவுலும் பர்னபாவும் லீஸ்திரா, இக்கோனியா மற்றும் அந்தியோகியாவில் உள்ள விசுவாசிகளுக்குச் சொன்னார்கள்.
நாம் பிரவேசிக்கவேண்டும்
பவுல் தன்னையும், பர்னபாவையும் மற்றும் விசுவாசிகளையும் சேர்த்துச் சொல்லுகிறார்.
Acts 14:23-26
அவர்கள் அவர்களுக்காக ஏற்படுத்தினபோது
"பவுலும் பர்னபாவும் விசுவாசிகளின் புதிய குழுக்களுக்காக மூப்பர்களை ஏற்படுத்தினபோது."
அவர்கள் அவர்களை ஒப்புவித்தார்கள்
"பவுலும் பர்னபாவும் தாங்கள் ஏற்படுத்தின மூப்பர்களை ஒப்புவித்தார்கள்"
அவர்கள் விசுவாசித்தவருக்குள்
"புதிய விசுவாசிகள் விசுவாசித்தவருக்குள்."
பின்பு அவர்கள் கடந்துவந்து...அவர்கள் பிரசங்கித்து...அவர்கள் கடந்துபோனார்கள்...அங்கிருந்து அவர்கள் கப்பல் ஏறி...அவர்கள் எங்கே இருந்தார்களோ...இப்பொழுது அவர்கள் நிறைவேற்றினது
"அவர்கள்" என்பது பவுலையும் பர்னபாவையும் குறிக்கிறது.
அவர்கள் தேவனுடைய கிருபைக்காக ஒப்புவிக்கப்பட்ட
"பவுலையும் பர்னபாவையும் தேவன் விசாரிக்கவும், பாதுகாக்கவும் வேண்டுமென்று அந்தியோகியா ஜனங்கள் ஜெபித்த இடம் "
Acts 14:27-28
அவர்கள் அங்கே வந்துசேர்ந்தபொழுது
"பவுலும் பர்னபாவும் அங்கே வந்தபொழுது"
தேவன் அவர்களைக்கொண்டு செய்தார்
"தேவன் பவுல் மற்றும் பர்னபாவின் மூலமாக செய்தார் "
அவர் எப்படி
"தேவன் எப்படி"
அவர் புறஜாதிகளுக்கு விசுவாசத்தின் கதவைத் திறந்தார்
இந்த உருவகம் "புறஜாதியார் விசுவாசிப்பதற்கு தேவன் வழியை உண்டுபண்ணினார்," அல்லது "புறஜாதியார் விசுவாசிப்பதற்கான அனுகூலத்தை தேவன் ஏற்படுத்தினார் " அல்லது "புறஜாதியார் விசுவாசிப்பதற்கு தேவன் அவர்களுக்கு வாய்ப்பைக் கொடுத்தார் " என்று மொழிபெயர்க்கப்படலாம். ஒருவன் அதைத் திறக்கும்வரைக்கும் அடைக்கப்பட்ட வாசலின் வழியாக ஒருவனும் செல்லமுடியாததைப்போல, தேவன் அனுகூலத்தை ஏற்படுத்தும்வரை புறஜாதியார் தேவனிடத்தில் விசுவாசம் வைத்திருக்கமுடியாது.
அவர்கள் தங்கினார்கள்
"பவுலும் பர்னபாவும் தங்கியிருந்தார்கள் "
Acts 15
Acts 15:1-2
குறிப்பிட்ட மனிதர்கள்
"சில மனிதர்கள்"
யூதேயாவிலிருந்து கீழே வந்தார்கள்
யூதர்களின் உலகப் பார்வையைவிட "கீழே வந்தார்கள்" என்பது எழுத்தின்படியான உயரத்தைப் பற்றிய குறைவான வெளிப்பாடே ஆகும். (யூதேயா அந்தியோகியாவைவிட உயரத்தில் இருக்கிறது) ஏனெனில், எருசலேமிற்கும் தேவாலயத்திற்கும் பயணிப்பதை "மேலே" செல்வதாகவும், எருசலேம் மற்றும் தேவாலயத்திலிருந்து வேறு இடத்திற்குப் பயணிப்பதை "கீழே" செல்வதாகவும் யூதர்கள் கருதினார்கள்.
சகோதரர்களுக்குப் போதித்தார்கள்
"அந்தியோகியாவிலுள்ள விசுவாசிகளுக்குத் தொடர்ந்து போதித்தார்கள்" அல்லது "அந்தியோகியாவிலுள்ள விசுவாசிகளுக்குப் போதித்துக் கொண்டிருந்தார்கள்".
முறைமையின்படியே
"வழக்கத்தின்படியே" அல்லது "போதனையைத் தொடர்ந்து"
அவர்களோடு
"யூதேயாவிலிருந்து வந்த மனிதர்களோடு"
எருசலேமிற்கு ஏறிச் செல்லுதல்
(மேலே உள்ள "கீழே வந்தார்கள்" என்பதற்குரிய குறிப்பைப் பார்க்கவும்)
இந்த கேள்வி
"இந்தப் பிரச்சனை"
Acts 15:3-4
அந்தப்படி அவர்கள் சபையாரால் வழிவிட்டனுப்பப்பட்டு, கடந்துபோனார்கள்
இந்த செயப்பாட்டுவினை வாக்கியத்தைப் பின்வருமாறு மொழிபெயர்க்கலாம்: "ஆனபடியால், சபை பவுல், பர்னபா மற்றும் வேறு சில விசுவாசிகளை அந்தியோகியாவிலிருந்து எருசலேமிற்கு அனுப்பியது. அவர்கள் கடந்தார்கள்...". (பார்க்க: செய்வினை அல்லது செயப்பாட்டு வினை) (பார்க்க: வெளிப்படையாகவும், மறைமுகமாகவும்)
வழியாய் கடந்துசென்று... அறிவித்தார்கள்
"வழியாய் கடந்துசென்று" மற்றும் "அறிவித்தார்கள்" போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் அவர்கள் வெவ்வேறு இடங்களில் சில காலம் செலவழித்து தேவன் செய்தவைகளை விபரமாகப் பகிர்ந்து கொண்டார்கள் என்பதைக் காட்டுகிறது.
யூதரல்லாதவர்களின் மனம்திருப்புதல்
இயேசுவை விசுவாசிக்கும்படி அநேக யூதரல்லாதவர்கள் தங்கள் கிரேக்க மற்றும் ரோம தெய்வங்கள்மீது கொண்டிருந்த நம்பிக்கையை மாற்றிக்கொண்டனர்.
அவர்கள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு...
இது செயப்பாட்டு வினை வடிவில் அமைந்துள்ளது. இதனை "சபை அங்கத்தினர்கள் அவர்களையும்... ஏற்றுக்கொண்டு..." என்று மொழிபெயர்க்கலாம். (பார்க்க: செய்வினை அல்லது செயப்பாட்டு வினை)
அவர்களுடன்
"அவர்கள்மூலம்"
Acts 15:5-6
ஆனால்
இயேசுவை விசுவாசித்தபோதிலும் "இரட்சிப்பிற்கு விருத்தசேதனமும் அவசியமாயிருக்கிறது" என்று நம்பிக்கொண்டிருந்த பரிசேயரிலுள்ள சில மனிதரிடமிருந்து "இரட்சிப்பு இயேசுவில் மட்டுமே உண்டு" என்று நம்பினோரை லூக்கா வேறுபடுத்திக் காட்டுகிறார்.
அவர்களுக்கு விருத்தசேதனம்பண்ணுவதும் அவர்களுக்குக் கட்டளை கொடுப்பதும்
"அவர்கள்" என்பது இதற்குமுன்பு விருத்தசேதனம் பெறாத யூதரல்லாத விசுவாசிகளைக் குறிக்கிறது.
நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுபடி
"நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியும்படி" அல்லது "நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றும்படி"
இந்தக் காரியத்தை சிந்திக்கும்படி
"நம்பிக்கைகளிலுள்ள வேறுபாட்டை கலந்தாலோசிக்கும்படி." அதாவது, பவுலின் நற்செய்திக்கும் (இயேசுவில் இரட்சிப்பு) பரிசேயரின் நற்செய்திக்கும் (விருத்தசேதனம் மற்றும் நியாயப்பிரமாணத்தில் இரட்சிப்பு) இடையிலான வித்தியாசமான இரட்சிப்பின் செய்திகளை விவாதிக்கும்படி.
Acts 15:7-9
அவர்களிடம் சொன்னார்கள்
"அப்போஸ்தலர்கள், மூப்பர்கள் மற்றும் அங்கு கூடியிருந்த வேறு விசுவாசிகளடங்கிய குழுவினரிடம் சொன்னார்கள்."
சகோதரர்கள்
குறிப்பாக, கூடியிருந்த மனிதரிடம் பேதுரு உரையாற்றினான்.
சில காலத்திற்கு முன்பு
"அநேக நாட்களுக்குமுன்பு" (UDB)
உங்கள் நடுவில்
யூத விசுவாசிகளின் நடுவில்
என் வாயினால்
பேதுரு தன்னைக் குறிக்கும்படி இந்தவித வெளிப்பாட்டைப் பயன்படுத்துகிறார் (பார்க்க: சின ஆகுபெயர்)
யூதரல்லாதவர்கள் கேட்க வேண்டும்
"யூதரல்லாதவர்கள் கேட்பார்கள்"
அவர்களுக்கு சாட்சிகள்
"யூதரல்லாதவர்களுக்கு சாட்சிகள்"
அவர் செய்தார்
"தேவன் செய்தார்"
வித்தியாசமிராதபடி செய்தார்
யூத விசுவாசிகள் மற்றும் யூதரல்லாத விசுவாசிகளுக்கிடையில் தேவன் எந்தவொரு வேறுபாட்டையும், இனவேற்றுமையையும் பார்க்கவில்லை.
நமக்கும் அவர்களுக்குமிடையில்
பேதுரு தன்னைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களை "நமக்கும்" என்னும் வார்த்தையில் சேர்த்துக் கொண்டான் (பார்க்க: உள்ளடக்குதல்). "அவர்கள்" என்பது யூதரல்லாதவர்களைக் குறிக்கிறது.
Acts 15:10-11
(பேதுரு தொடர்ந்து பேசுகிறான்)
நம்முடைய பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடியை சீடர் கழுத்தின்மேல் சுமத்துவதினால், நீங்கள் தேவனை சோதிப்பானேன்?
யூத விசுவாசிகள் யூதரல்லாத விசுவாசிகளிடம் மோசேயின் நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றுவதையும், குறிப்பாக விருத்தசேதனம் செய்வதையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்று பேதுரு சொல்லுமிடத்தில் இந்த சாதுரியான கேள்வி இடம்பெறுகிறது. இதனைப் பின்வருமாறும் மொழிபெயர்க்கலாம்: "யூதர்களாகிய நம்மால் சுமக்க முடியாத பாரத்தை யூதரல்லாத விசுவாசிகள்மேல் சுமத்துவதினால் தேவனை சோதிக்காதீர்கள்!" (பார்க்க: சாதுரிய கேள்வி).
நம்முடைய பிதாக்கள் அல்லது நாம்
பேதுரு தான் பயன்படுத்துகிற "நம்முடைய" மற்றும் "நாம்" எனும் வார்த்தைகளில் தன்னைக் கேட்போரை சேர்த்துக் கொள்கிறான் (பார்க்க: உள்ளடக்குதல்)
ஆனால் நாம் இரட்சிக்கப்படுவோம் என்று நாம் நம்பியிருக்கிறோம்
பேதுரு தன்னைக் கேட்போரை தன்னுடன் சேர்த்துக் கொள்கிறான் (பார்க்க: உள்ளடக்குதல்)
அவர்கள் எப்படியோ
"யூதரல்லாத விசுவாசிகள் எப்படியோ"
Acts 15:12
கூட்டத்தினர் யாவரும்
அப்போஸ்தலர்கள், மூப்பர்கள் மற்றும் அங்கிருந்த குறிப்பிடப்படாத மற்ற விசுவாசிகள்.
தேவன் கிரியை செய்தார்
"தேவன் செய்தார் "
அவர்கள்மூலம்
"அவர்கள்" என்பது பவுலையும் பர்னபாவையும் குறிக்கிறது.
Acts 15:13-14
அவர்கள் பேசி முடிந்தபின்பு
"பர்னபாவும், பவுலும் பேசி முடிந்தபின்பு"
ஒரு ஜனம்
"ஒரு மக்கள் குழு"
அவர்களிலிருந்து எடுத்து
அவர்களின் நடுவில் தெரிந்துகொண்டு
நாமத்திற்காக
இது அவருக்காக என்பதின் வெளிப்பாடாகும். இதனை "அவருக்காக" என்று மொழிபெயர்க்கலாம். (பார்க்க: ஆகு பெயர்)
Acts 15:15-18
(யாக்கோபு தொடர்ந்து பேசுகிறான்)
இதற்கு ஒத்திருக்கிறது
"இந்த சத்தியத்தை உறுதிசெய்கிறது" அல்லது "இந்த சத்தியத்துடன் ஒத்திருக்கிறது"
நான் திரும்பிவந்து... நான் கட்டி... நான் நிறுத்துவேன்
இங்கு "நான்" என்பது தீர்க்கதரிசியின் வார்த்தைகளின்மூலம் பேசுகிற தேவனைக் குறிக்கிறது.
நான் மறுபடியும் தாவீதின் கூடாரத்தைக் கட்டுவேன்
இது தேவன் இராஜாவாகிய தாவீதின் சந்ததிகளிலிருந்து ஒரு இராஜாவைத் தெரிந்துகொள்ளுவதைப் பற்றிய வெளிப்பாடாகும். (UDB) (பார்க்க: ஆகு பெயர்)
மீதியான மனிதர் கர்த்தரைத் தேடும்படிக்கு, நான் பழுதாய்ப்போனவைகளை மறுபடியும் சீர்ப்படுத்தி, அதை செவ்வையாக நிறுத்துவேன்
"மக்கள் கர்த்தரைத் தேட வாய்ப்புண்டாகும்படி, நான் தாவீதின் சந்ததிகளிலிருந்து ஒரு இராஜாவை ஏற்படுத்துவேன்"
பழுதாய்ப்போனவைகளை சீர்ப்படுத்தி
"பழுதாய்ப்போனவைகள்" என்பது ஒரு பட்டணம் அழிக்கப்பட்டு அல்லது அழிவிற்கு விடப்படும்போது அநேக ஆண்டுகளாய் அங்கே மீந்துகிடக்கும் கட்டடங்கள், சுவர்கள் மற்றும் அதைச் சேர்ந்தவைகளைக் குறிக்கிறது.
பூர்வமானவைகளாகிய இவைகளைத் தெரியப்படுத்தியிருக்கிறார்
"அநேக நாட்களுக்கு முன்பிருந்து இவைகளைத் தெரியப்படுத்தியிருக்கிறார்.
Acts 15:19-21
(யாக்கோபு தொடர்ந்து பேசுகிறான்.)
யூதரல்லாதவர்களை நாம் கலங்கப்பண்ணலாகாது
"விருத்தசேதனம் பண்ணவும், மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கீழ்ப்படியவும் கேட்டு யூதரல்லாதவர்களை நாம் கட்டாயப்படுத்தக்கூடாது" (பார்க்க: வெளிப்படையான மற்றும் மறைமுகமான தகவல்)
நாம் கலங்கப்பண்ணலாகாது
"நாம்" என்பதில் யாக்கோபு அப்போஸ்தலர்களையும், மூப்பர்களையும் மற்றும் விருத்தசேதனம் பண்ணப்பட்ட குழுவையும் சேர்த்துக் கொள்கிறான் (பார்க்க: உள்ளடக்குதல்)
விக்கிரகங்கள்...வேசித்தனம்...நெருக்குண்டு செத்தது...இரத்தம்
விக்கிரகங்கள் மற்றும் பொய்யான தெய்வங்களை வணங்குவதில் வேசித்தனம், நெருக்குண்டு செத்த மிருகங்களைப் புசித்தல் மற்றும் இரத்தத்தைக் குடித்தல் போன்றவை அவர்களின் சடங்குகளில் பங்கு வகித்தது.
பூர்வகாலம் தொடங்கி மோசேக்காக
"மோசேக்காக" என்பது தேவன் மோசேக்குக் கொடுத்த பிரமாணங்களைக் குறிப்பிடும் பதமாகும். (பார்க்க: ஆகு பெயர்)
அவனைப் பிரசங்கிப்பதும், வாசிப்பதும்
"மோசேயின் பிரமாணங்களைப் பிரசங்கிப்பதும் வாசிப்பதும்"
Acts 15:22-23
சபையாரெல்லாரும்
இது எருசலேமிலிருந்த சபை அங்கத்தினர்கள் யாவரும் அப்போஸ்தலர்கள் மற்றும் மூப்பர்களுடன் இசைந்திருந்தார்கள் என்பதை வெளிப்படுத்தும் பதமாகும். இதனை, "எருசலேமின் முழுசபையாரும்" என மொழிபெயர்க்கலாம். (பார்க்க: சின ஆகு பெயர் மற்றும் மிகையுரை)
யூதா பர்சபா
எருசலேமின் சபையிலிருந்த ஒரு தலைவன்.
சீலா
எருசலேமின் சபையிலிருந்த ஒரு தலைவன்.
அவர்களை அனுப்பி
"யூதாவையும் சீலாவையும் அனுப்பி"
அவர்கள் இதை எழுதினார்கள்
"அப்போஸ்தலர்களும், மற்ற மூப்பர்களும் மற்றும் எருசலேமிலிருந்த விசுவாசிகளும் இந்த வார்த்தைகளை எழுதினார்கள்"
சிலிசியா
சீப்புருத் தீவிற்கு வடக்கேயிருந்த சிறிய ஆசியாவின் கடலோரத்திலிருந்த ஒரு மாகாணம்.
Acts 15:24-26
(எருசலேமின் சபையிலிருந்து அந்தியோகியாவிலிருந்த யூதரல்லாத விசுவாசிகளுக்கு எழுதப்பட்ட கடிதம் தொடர்கிறது.)
அந்தக் குறிப்பிட்ட மனிதர்
"அந்த சில மனிதர்"
எங்களால் கட்டளை பெறாதவர்கள்
இந்த வார்த்தைகளைப் பிரசங்கிக்கும்படி நாங்கள் அவர்களை அனுப்பவில்லை.
அதனால் அது எங்கள் யாவருக்கும் நலமாகக் கண்டது
நாங்கள் யாவரும் இசைந்திருந்தோம்
எங்களுக்குப் பிரியமான பர்னபாவும், பவுலும்
இது அன்பை வெளிப்படுத்தும் ஒரு பதமாகும். "நாங்கள் அதிகமாய் நேசிக்கிறவர்கள்" (UDB)
Acts 15:27-29
(எருசலேமின் சபையிலிருந்து அந்தியோகியாவிலிருந்த யூதரல்லாத விசுவாசிகளுக்கு எழுதப்பட்ட கடிதம் தொடர்கிறது.)
ஆகவே, நாங்கள் யூதாவையும் சீலாவையும் அனுப்பியிருக்கிறோம்
"எனவே நாங்கள் யூதாவையும் சீலாவையும் அனுப்பி வைத்திருக்கிறோம்" அல்லது "இதனிமித்தம் நாங்கள் யூதாவையும் சீலாவையும் அனுப்பி வைத்திருக்கிறோம்"
அவர்களும் இவைகளையே உங்களுக்கு அறிவிப்பார்கள்
"நாங்கள் எழுதினவைகளையே, அவர்களும் உங்களுக்கு நேரில் சொல்லுவார்கள்"
இரத்தம்
மிருகங்களின் இரத்தத்தைக் குடிப்பதை அல்லது புசிப்பதைக் குறிக்கிறது. (பார்க்க: வெளிப்படையான மற்றும் மறைமுகமான)
நெருக்குண்டு செத்தவை
மிருகம் கொல்லப்பட்டிருப்பினும், இரத்தம் சிந்தப்படவில்லை.
பிரிவுரை
கடிதங்களின் இறுதியில் பயன்படுத்தப்படும் ஒரு இறுதி வாழ்த்து அல்லது விடைபெறுவதனைக் குறிக்கும் சொல். இது "விடைபெறுகிறேன்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
Acts 15:30-32
எனவே அவர்கள், அதை அவர்கள்...பின்பு அவர்கள்...அவர்கள் ஒப்புவித்தார்கள்
"அவர்கள்" என்பது யூதா, சீலா, பவுல் மற்றும் பர்னபா என்பவர்களைக் குறிக்கிறது.
கலைத்துவிடப்பட்டார்கள்
"புறப்படும்படி அனுமதி பெற்றார்கள் அல்லது அனுப்பிவிடப்பட்டார்கள்.
அந்தியோகியாவிற்கு இறங்கி வருதல்
மேடான வழியில் ஒரு மாற்றம். எருசலேமிலிருந்து விலகிச் செல்லும், மேடுகளின் வழி வந்தபோதும் இறுதியில் கீழே வந்து சேருதல்.
அவர்கள் அதை வாசித்தார்கள், அவர்கள் சந்தோஷப்பட்டார்கள்
இங்கு "அவர்கள்" என்பது அந்தியோகியாவிலுள்ள யூதரல்லாத விசுவாசிகளைக் குறிக்கிறது.
சகோதரர்களை ஆறுதல்படுத்தினார்கள்
"அந்தியோகியாவிலுள்ள விசுவாசிகளை ஆறுதல்படுத்தினார்கள்.
தீர்க்கதரிசிகளுமாயிருந்தார்கள்
தீர்க்கதரிசியாயிருப்பவன், விசேஷ விதத்தில் தேவனுடைய அதிகாரத்தை சுமந்து கொண்டிருப்பவன். இதனை "அவர்கள் தீர்க்கதரிசிகளாயிருந்தபடியால்" அல்லது "தீர்க்கதரிசிகளாயிருந்து" என்று மொழிபெயர்க்கலாம் (UDB)
Acts 15:33-35
பின்பு அவர்கள்...அவர்கள் அனுப்பப்பட்டார்கள்
"அவர்கள்" என்பது யூதாவையும், சீலாவையும் குறிக்கிறது.
சிலகாலம்
"ஒரு குறுப்பிட்ட காலம்வரை" அல்லது "சில வாரங்களுக்கு"
அவர்கள் சகோதரரால் சமாதானத்தோடு அனுப்பி விடப்பட்டார்கள்
"அவர்கள் புறப்படுகையில் விசுவாசிகள் வாழ்த்தி வழியனுப்பினார்கள்.
சகோதரர்களால் சமாதானத்தோடு
அந்தியோகியா சபையிலிருந்து நண்பர்களாக
அவர்களை அனுப்பி வைத்தவர்களிடம்
"யூதாவையும் சீலாவையும் அனுப்பிவைத்த எருசலேமின் சபைக்கு"
ஆனால் பவுலும் பர்னபாவும் தங்கி விட்டனர்
"பவுலும் பர்னபாவும் தங்கியிருந்தபோது"
சில பழைய அதிகாரிகள்
இது பல்வேறு பழைய மூலப்பிரதிகளிலுள்ள மாற்றங்களோடு தொடர்புடையது. (பார்க்க: வசன மாறுபாடுகள்)
Acts 15:36-38
நாம் போவோம்
"நாம் போகலாமென்று நான் யோசிக்கிறேன்"
சகோதரர்களை சந்திக்க
"சந்தித்தல்" என்பதின் பொருள் "கரிசனைகொள்ள" அல்லது "ஒருவரால் எப்படி உதவமுடியும் எனப் பார்ப்பது"
அவர்கள் எப்படியிருக்கிறார்களென்று பார்க்க
"சகோதரர்களின் தற்போதைய நிலையையும், அவர்களுக்கு வழங்கப்பட்ட சத்தியத்தை எப்படிப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிந்துகொள்ள"
மாற்கு எனப்பட்ட யோவானையும் அவர்களுடன் அழைத்துச்செல்ல
"பவுலோடும் தன்னோடும் (பர்னபா) மாற்கு எனப்பட்ட யோவானையும் அழைத்துக்கொண்டு போக"
Acts 15:39-41
கடும்விவாதம்
பவுல் மற்றும் பர்னபாவினால் ஒரு புரிந்துகொள்ளுதல் அல்லது உடன்பாட்டிற்கு வர முடியவில்லை.
அவர்கள் பிரிந்தார்கள்
"பர்னபாவும் பவுலும் பிரிந்தார்கள்"
கப்பலேறிப் போனார்கள்
"அவர்கள் கப்பலேறிப் போனார்கள்" (பார்க்க: விடுபடல்)
சகோதரர்களால்
"அந்தியோகியாவிலுள்ள விசுவாசிகளால்"
சீரியா மற்றும் சிலிசியா வழியாகப் போனான்
இவை சீப்புருத் தீவிற்கு வடக்கே சிறிய ஆசியாவிலிருந்த மாகாணங்கள்.
சபைகளைத் திடப்படுத்துதல்
"ஆவிக்குரியநிலையில் சபைகளை பலப்படுத்துதல்"
Acts 16
Acts 16:1-3
இதோ
"இதோ" எனும் வார்த்தை இந்த சம்பவத்தில் நமக்கு ஒரு புதிய நபரை அறிமுகப்படுத்துகிறது. இதனைத் தெரிவிக்க உங்கள் மொழியில் ஒரு முறை இருக்கலாம். "ஒரு மனிதன் இருந்தான், அவன் யாரென்றால்..." என்று ஆங்கிலம் பயன்படுத்துகிறது
விசுவாசித்த யூதப் பெண்மணியின் மகன்
கிறிஸ்துவை விசுவாசித்த யூதப் பெண்மணியின் மகன்
அவன் நல்லவிதமாய்ப் பேசப்பட்டவன்
"தீமோத்தேயு நற்சாட்சி பெற்றிருந்தான்" அல்லது "விசுவாசிகள் அவனைப் பற்றி நல்ல காரியங்கள் சொன்னார்கள்"
பவுல் தன்னோடு அவன் பயணம்செய்ய வேண்டுமென்று விரும்பினான்; எனவே அவனை அழைத்துப் போனான்
"பவுல் தன்னோடு தீமோத்தேயு பயணம்செய்ய வேண்டுமென்று விரும்பினான்; எனவே பவுல் தீமோதேயுவை அழைத்துப் போனான்." இந்த வசனங்களில் இடம்பெறும் படர்க்கை பிரதிப்பெயர்சொற்கள் (அவன், அவனுக்கு, அவனுடைய) தீமோத்தேயுவைக் குறிக்கிறது.
அவனுடைய தகப்பன் கிரேக்கனாயிருந்தான்
ஒரு கிரேக்கனாக, தீமோத்தேயுவின் தகப்பன் தீமோத்தேயுவிற்கு விருத்தசேதனம் பண்ணியிருக்க மாட்டான்; எனவே, பவுல் அவனுக்கு விருத்தசேதனம் பண்ணினான். பவுலைப் போன்ற யூத ரபீயால் பொதுவாக விருத்தசேதனம் செய்யப்பட்டது.
Acts 16:4-5
அவர்கள் சென்றார்கள்
இந்தப் பிரதிப்பெயர்சொல் பவுல், சீலா மற்றும் தீமோத்தேயுவைக் குறிக்கிறது.
அவர்கள் கீழ்ப்படியும்படி
"சபை அங்கத்தினர்கள் கீழ்ப்படியும்படி" அல்லது "விசுவாசிகள் கீழ்ப்படியும்படி"
எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களாலும் மூப்பர்களாலும் விதிக்கப்பட்டிருந்த
"எருசலேமிருந்த அப்போஸ்தலர்களாலும் மூப்பர்களாலும் எழுதப்பட்ட" (பார்க்க: செய்வினை அல்லது செயப்பாட்டு வினை)
சபைகள் ஸ்திரப்படுத்தப்பட்டன
"பவுல், சீலா மற்றும் தீமோத்தேயு சபைகளை ஸ்திரப்படுத்தினார்கள்." (பார்க்க: செய்வினை அல்லது செயப்பாட்டு வினை)
Acts 16:6-8
பிரிகியாவும் கலாத்தியாவும்
இவை ஆசியாவிலுள்ள மாகாணங்கள். (பார்க்க: பெயர்களை மொழிபெயர்த்தல்)
மீசியா...பித்தினியா
இவை ஆசியாவிலுள்ள வேறு இரண்டு மாகாணங்கள்.
அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் தடைபண்ணப்பட்டார்கள்
"பரிசுத்த ஆவியானவர் அவர்களைத் தடுத்தார்" அல்லது "பரிசுத்த ஆவியானவர் அவர்களை அனுமதிக்கவில்லை" (பார்க்க: செய்வினை அல்லது செயப்பாட்டு வினை)
இயேசுவின் ஆவி
"பரிசுத்த ஆவி"
Acts 16:9-10
பவுலிற்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று
பவுலிற்கு உண்டான தரிசனம் ஒரு சொப்பனத்தைவிட வித்தியாசமானது.
அவனை அழைத்து
"பவுலைக் கெஞ்சி அல்லது "பவுலிடம் வேண்டி"
எங்களுக்கு உதவும்
இங்கு "எங்கள்" என்பது தனிப்படுத்தப்பட்டது. உதவி தேவைப்பட்ட மனிதன் பவுலைத் தவிர்த்துவிட்டு சொன்னான். "எனக்கும் மக்கெதோனியாவிலுள்ள மற்ற மக்களுக்கும் உதவும்." (பார்க்க: உள்ளடக்காதிருத்தல்)
நாங்கள் புறப்பட்டு
"நாங்கள்" எனும் பிரதிப்பெயர்ச்சொல் பவுலையும், அவனோடு உடனிருந்தவர்களையும் குறிக்கிறது. அப்போஸ்தலருடைய நடபடிகளின் ஆசிரியராகிய லூக்கா இந்த சமயத்தில் பவுலோடு உடனிருந்தவர்களில் ஒருவனாயிருந்தான். இது எழுத்தாளரையும் அங்கிருந்த யாவரையும் குறிப்பதால், இது ஒரு உள்ளடக்கிய பிரதிப்பெயர்ச்சொல்லாக இருக்கிறது. (பார்க்க: உள்ளடக்குதல்)
தேவன் எங்களை அழைத்தார்
"எங்கள்" என்ற பிரதிப்பெயர்ச்சொல் பவுலையும், அவனோடு உடனிருந்தவர்களையும் குறிக்கிறது. அப்போஸ்தலருடைய நடபடிகளின் ஆசிரியராகிய லூக்கா இந்த சமயத்தில் பவுலோடு உடனிருந்தவர்களில் ஒருவனாயிருந்தான். எழுத்தாளர் தன்னோடிருந்த அனைவரையும் சேர்த்துக்கொண்டதால், இது ஒரு உள்ளடக்கிய பிரதிப்பெயர்ச்சொல்லாக இருக்கிறது. (பார்க்க: உள்ளடக்குதல்)
அவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கும்படி
"மக்கெதோனியாவிலுள்ள மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்கும்படி"
Acts 16:11-13
நாங்கள் பயணம்செய்தோம்
இந்த வசனங்களில் இடம்பெறும் "நாங்கள்" எனும் வார்த்தை பவுலையும் அவனோடு உடனிருந்தவர்களையும் குறிக்கிறது. அப்போஸ்தலருடைய நடபடிகளின் ஆசிரியராகிய லூக்கா இந்த சமயத்தில் பவுலோடு உடனிருந்தவர்களில் ஒருவனாயிருந்தான். (பார்க்க: உள்ளடக்குதல்)
சாமோத்திராக்கே...நெயாப்போலி
இவை பிலிப்பி பட்டணத்திற்கு அருகே உள்ள கடற்கரைப் பட்டணங்கள். (பார்க்க: பெயர்களை மொழிபெயர்த்தல்)
ஒரு ரோம குடியேற்றப் பகுதி
போர்வீரர்களைக் கொண்டு ரோமாபுரியால் கைப்பற்றப்பட்டு, குடியேற்றப்பட்ட ஒரு பகுதி.
Acts 16:14-15
லீதியாள் எனும் பெயருள்ள ஒரு குறிப்பிட்ட பெண்
"லீதியாள் என்ற பெயருடைய ஒரு பெண் இருந்தாள்"
இரத்தாம்பரம் விற்கிறவள்
"இரத்தாம்பரத் துணியை விற்ற ஒரு வணிகப்பெண்"
தேவனை வணங்கினாள்
தேவனை வணங்குகிறவன் என்றால் அவன் தேவனுக்கு நன்றிசெலுத்துகிற ஒரு யூதரல்லாதவன், அவன் தேவனைப் பின்பற்றுகிறவன், ஆனால் யூதப் பிரமாணங்கள் யாவற்றையும் கீழ்ப்படிகிறவனல்ல.
எங்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள்
"அவள் எங்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள்"
பவுலினால் சொல்லப்பட்ட காரியங்களை
"பவுல் சொன்ன காரியங்களை" (பார்க்க: செய்வினை அல்லது செய்யப்பாட்டு வினை)
அவளும், அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபோது
"அவர்கள் லீதியாளிற்கும் அவளுடைய வீட்டு அங்கத்தினர்களுக்கும் ஞானஸ்நானம் கொடுத்தபோது" (பார்க்க: செய்வினை அல்லது செய்யப்பாட்டு வினை)
Acts 16:16-18
ஒரு குறிப்பிட்ட வாலிபப் பெண்
"அங்கே ஒரு வாலிபப் பெண் இருந்தாள்"
குறிசொல்லும் ஆவி
மக்களின் எதிர்காலத்தைக் குறித்து அடிக்கடி அவளிடம் பேசின ஒரு பொல்லாத ஆவி.
அந்நேரமே அது புறப்பட்டுப் போயிற்று
"அந்த ஆவி உடனடியாக வெளியே வந்தது"
அவளால் மிகவும் தொந்தரவு படுத்தப்பட்டான்
"அவளால் மிகவும் தொல்லைப் படுத்தப்பட்டான்" அல்லது "அவள் என்ன செய்தாளோ அதினால் மிகவும் கஷ்டப்பட்டான்"
திரும்பினான்
"பவுல் திரும்பினான்" அல்லது "அவனுக்குப் பின்னிருந்த பெண்ணை நோக்கத் திரும்பினான்"
Acts 16:19-21
தன் எஜமான்கள்
அடிமைப் பெண்ணின் முதலாளிகள்.
அவளது ஆதாயத்து நம்பிக்கை
இது அந்தப் பெண்ணிற்கிருந்த குறிசொல்லும் திறனையும், அவள் சொல்லும் குறிகளுக்கு மக்கள் செலுத்தியக் கட்டணத்தையும் குறிக்கிறது.
அவர்களை இழுத்துக்கொண்டு
"பவுலையும் சீலாவையும் இழுத்துக்கொண்டு" ஆனால் குழுவிலிருந்த மற்றவர்களையும், லூக்காவையும், தீமோத்தேயுவையும் அல்ல.
அதிகாரிகளுக்குமுன்பு
"அதிகாரிகள் இருந்த இடத்திற்கு" அல்லது "அதிகாரிகளால் நியாயம்தீர்க்கப்படும்படி"
அவர்கள் அவர்களை அதிகாரிகளிடம் கொண்டுவந்தபோது, அவர்கள் சொன்னது
"எஜமான்கள் பவுலையும் சீலாவையும் அதிகாரிகளிடம் கொண்டுவந்தபோது, எஜமான்கள் சொன்னது."
அவர்கள் போதிக்கிறார்கள்
"பவுலும் சீலாவும் போதிக்கிறார்கள்"
நாம் அநுசரிக்கத் தகாத
அதிகாரிகளும் ரோமர்களாயிருந்தபடியால், எஜமான்கள் தங்கள் கோரிக்கையில் அவர்களையும் சேர்த்துக்கொண்டார்கள். (பார்க்க: உள்ளடக்குதல்)
Acts 16:22-24
பட்டணத்து நீதிபதிகள் அவர்கள் ஆடைகளைக் கிழித்தார்கள்
பட்டணத்து நீதிபதிகள் பவுல் மற்றும் சீலாவின் ஆடைகளைக் கிழித்தார்கள்.
அவர்கள் கோல்களினால் அடிக்கப்பட கட்டளையிட்டான்
"பவுலையும் சீலாவையும் கோல்களினால் அடிக்கும்படி போர்வீரர்களுக்குக் கட்டளையிட்டான்." (பார்க்க: செய்வினை அல்லது செயப்பாட்டு வினை)
அவர்கள் அவர்களைத் தள்ளினார்கள்
"பட்டணத்து நீதிபதிகள் பவுலையும் சீலாவையும் தள்ளினார்கள்" அல்லது "பவுலையும் சீலாவையும் தள்ளும்படி அதிகாரிகள் போர்வீரர்களுக்குக் கட்டளையிட்டான்."
அவர்களைப் பத்திரமாய்க் காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளையிட்டனர்
"அவர்கள் வெளியே போய்விடாதபடிக்குக் கவனமாயிருக்க சிறைச்சாலைக்காரனுக்கு சொல்லப்பட்டது." சிறைச்சாலைக்காரன் என்பவன் சிறையில் அல்லது காவல்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து மக்களுக்கும் பொறுப்பான ஒரு மனிதனாயிருக்கிறான்.
அடைத்து
பத்திரமாய் ஒரு இடத்தில் பூட்டி
தொழுமரம்
ஒருவன்/ஒருத்தி அசைவதைத் தடுக்க அவன்/அவளது கால்களை மாட்டி வைக்கப் பயன்படுத்தப்பட்ட துவாரங்கள் கொண்ட ஒரு மரத்துண்டு (பார்க்க: UDB)
Acts 16:25-26
அவர்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்
"அவர்கள்" எனும் பிரதிப்பெயர்சொல் ஜெபித்தும், தேவனுக்குப் பாடல்களைப் பாடியும் கொண்டிருந்த பவுலையும் சீலாவையும் குறிக்கிறது.
சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக
"அது சிறைச்சாலையின் அஸ்திபாரங்களை அசைத்தது"
எல்லாருடைய சங்கிலிகளும் கழன்றுபோனது
"எல்லாருடைய சங்கிலிகளும் தளர்ந்தது."
Acts 16:27-28
அவன், தன்னை, அவன்
இந்த வசனங்களிலெல்லாம் வரும் இந்தப் பிரதிப்பெயர் சொற்கள் சிறைச்சாலைக்காரனைக் குறிக்கிறது.
தன்னைக் கொலைசெய்து கொள்ளப் போனான்
" தன்னைக் கொலைசெய்ய ஆயத்தமானான்." சிறைக்கைதிகளைத் தப்பவிடுவதால் உண்டாகும் விளைவுகளை அனுபவிப்பதைவிட தற்கொலை செய்துகொள்வது மேலென்று சிறைச்சாலைக்காரன் எண்ணினான்.
நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம்
"நாங்கள்" என்பது ஒரு உள்ளடக்கும் வார்த்தை, அது பவுலையும், சீலாவையும் மற்றும் மற்ற அனைத்துக் கைதிகளையும் குறிக்கிறது. (பார்க்க: உள்ளடக்குதல்)
Acts 16:29-31
உள்ளே ஓடி
"வேகமாக சிறைச்சாலைக்குள் பிரவேசித்து."
பவுலுக்கும் சீலாவிற்கும் முன்பாக விழுந்து
சிறைச்சாலைக்காரன் பவுல் மற்றும் சீலாவின் பாதங்களை வணங்கித் தன்னைத் தாழ்த்தினான்.
அவர்களை வெளியே கொண்டுவந்து
அவர்களை சிறைச்சாலைக்கு வெளியே வழிநடத்தி
Acts 16:32-34
பவுலும் சீலாவும் தொடர்ந்து சிறைச்சாலைக்காரன் மற்றும் அவனுடைய வீட்டாருடன் இடைப்பட்டார்கள்.
அவனுடைய வீட்டில்
"அவனுடைய இல்லத்தில்." சிறைச்சாலைக்காரன் பவுலையும் சீலாவையும் தன் இல்லத்திற்கு அழைத்து வந்தான்.
அவனும் அவனுடைய வீட்டாரனைவரும் ஞானஸ்நானம் பெற்றனர்
இந்த வாக்கியத்தை செயப்பாட்டு வினையிலிருந்து செய்வினை வடிவிற்கு மாற்றிக் கொள்ளலாம்: "பவுலும் சீலாவும் சிறைச்சாலைக்காரனுக்கும், அவனுடைய வீட்டிலிருந்த அனைத்து அங்கத்தினர்களுக்கும் ஞானஸ்நானம் கொடுத்தார்கள்." (பார்க்க: செய்வினை அல்லது செயப்பாட்டு வினை)
அவன், அவனுடைய
இந்தப் பிரதிப்பெயர்சொற்கள் சிறைச்சாலைக்காரனைக் குறிக்கிறது.
ஏனென்றால் அவர்கள் யாவரும் விசுவாசித்தனர்
"ஏனென்றால் அவனுடைய வீட்டிலுள்ள அனைத்து அங்கத்தினர்களும் விசுவாசித்தனர்."
Acts 16:35-36
பகற்காலமானபோது
"அடுத்தக் காலையில்" (UDB). இது மற்றொரு சம்பவத்தின் ஆரம்பமாக இருக்கிறது.
வார்த்தை அனுப்பி
"ஒரு செய்தியை அனுப்பி" அல்லது "ஒரு கட்டளையை அனுப்பி."
அந்த மனிதரைப் போகவிடுங்கள்
"அந்த மனிதரை விடுதலை செய்யுங்கள்" அல்லது "அந்த மனிதரைப் போக அனுமதியுங்கள்"
வெளியே வாருங்கள்
"சிறைச்சாலையிலிருந்து வெளியே வாருங்கள்"
Acts 16:37-39
அவர்களிடம் சொன்னார்கள்
"சேவகரிடம் சொன்னார்கள்"
அவர்கள் வெளியரங்கமாய்
"பட்டணத்து நீதிபதிகள் வெளியரங்கமாய்"
எங்களை அடித்தவர்கள்
"எங்களை" எனும் வார்த்தை பவுலையும் சீலாவையும் மட்டுமே உள்ளடக்குகிறது (பார்க்க: உள்ளடக்காதிருத்தல்)
அப்படியல்ல
"நிச்சயமாக அல்ல!" பவுல் இங்கு சிறைச்சாலைக்காரனிடம் பேசிக் கொண்டிருந்தபோதிலும், அவன் பட்டணத்து நீதிபதிகள் அல்லது நகரத்தலைவர்களிடம் பதிலுரைத்துக் கொண்டிருந்தான். (பார்க்க: வெளிப்படையாகவும், மறைமுகமாகவும்)
ரோமர்கள்
இது சட்டப்பூர்வமாக குடியுரிமை பெற்று பேரரசின்கீழெங்கும் வசித்த மக்களைக் குறிக்கிறது. வேதனைப்படுத்துவதிலிருந்து விடுதலை மற்றும் நியாயம்விசாரிக்கப்பட சிலாக்கியம் ஆகியவை அவர்களுடைய உரிமைகளில் அடங்கும். நகரத்தலைவர்கள் பவுலையும் சீலாவையும் தவறாக நடத்தினார்கள் என்று பேரரசிற்குத் தெரியவந்தால் தங்களுக்கு என்ன நேரிடுமோவென்று நகரத்தலைவர்கள் பயந்தார்கள்.
அவர்கள் வரட்டும்
"பட்டண அதிபதிகள் வர வேண்டும்."
பட்டணத்து நீதிபதிகள் வந்து அவர்களை வேண்டினார்கள்
பட்டணத்து நீதிபதிகள் வந்து பவுலையும், சீலாவையும் வேண்டினார்கள்.
அவர்கள் அவர்களை அழைத்து வந்தபோது
பட்டணத்து நீதிபதிகள் பவுலையும், சீலாவையும் அழைத்து வந்தபோது.
Acts 16:40
லீதியாளின் வீடு
"லீதியாளின் இல்லம்"
அவர்கள் அவர்களை ஆறுதல்படுத்தினார்கள்
"பவுலும் சீலாவும் சகோதரர்களை ஆறுதல்படுத்தினார்கள்" அல்லது "பவுலும் சீலாவும் விசுவாசிகளை ஆறுதல்படுத்தினார்கள்."
Acts 17
Acts 17:1-2
அவர்கள் கடந்துபோனபோது
"அவர்கள்" என்ற வார்த்தை பவுலையும் சீலாவையும் குறிக்கிறது. தீமோத்தேயும் லூக்காவும் பவுல் மற்றும் சீலாவுடன் இருக்கவில்லை.
வழியாய் கடந்துபோனார்கள்
"வழியாய் பயணித்தனர்"
அம்பிபோலி மற்றும் அப்பொலோனியா பட்டணங்கள்
இவை மக்கெதோனியாவிலுள்ள கடற்கரைப் பட்டணங்கள். (பார்க்க: பெயர்களை மொழிபெயர்ப்பது எப்படி?)
தன் முறைமையின்படியே
"தன் வழக்கத்தின்படியே" அல்லது "தன் பொதுவான நடைமுறையின்படியே." யூதர்கள் கூடிவருகிற ஓய்வுநாளன்று, பவுல் வழக்கமாக ஜெபஆலயத்திற்குச் செல்வான்.
அவர்களிடம் போய்
"அவர்கள்" என்பது ஜெபஆலயத்தையும், அங்கு கூடிவந்த யூதர்களையும் குறிக்கிறது.
அவர்களிடம் சம்பாஷித்து
"ஜெபஆலயத்தின் யூதர்களுடன் விவாதித்து" அல்லது "ஜெபஆலயத்து யூதர்களுடன் கலந்துரையாடி"
Acts 17:3-4
அவன் வேதவாக்கியங்களைத் திறந்து
சாத்தியமான அர்த்தங்கள்: 1) "பவுல் தான் போதிப்பதை மக்கள் புரிந்துகொள்ளும்படி, அவன் வேதவாக்கியங்களைத் தெளிவாக விளக்கினான்" அல்லது 2) "பவுல் வேதவாக்கியங்களடங்கிய புத்தகத்தை அல்லது தோல்சுருளைத் திறந்தான்."
அது அவசியமாயிருந்தது
"அது திட்டத்தின் ஒரு பகுதியாயிருந்தது" அல்லது "அது அப்படித்தான் நடந்திருக்க வேண்டும்."
மறுபடியும் எழுந்திருக்கவும்
"உயிர் திரும்ப வரவும்"
யூதர்கள் இணங்கினார்கள்
"யூதர்கள் நம்பினார்கள்" அல்லது "யூதர்கள் ஆதாயப்படுத்தப்பட்டார்கள்"
பவுலைச் சேர்ந்தார்கள்
"பவுலுடன் நெருக்கமானார்கள்"
பக்தியுள்ள கிரேக்கர்கள்
தேவனை வணங்குகிறவர்களாயிருந்தாலும், விருத்தசேதனத்தின்மூலம் மாறி யூத மார்க்கத்திற்குள் வரவில்லை.
ஒரு மகா கூட்டம்
"ஒரு பெரிய கூட்டம்"
Acts 17:5-7
வைராக்கியம்கொண்டு
"தூண்டப்பட்டு"
குறிப்பிட்ட துன்மார்க்க மனிதர்கள்
"சில பொல்லாத மனிதர்கள்." இங்கு மனிதர்கள் என்று வரும் வார்த்தை குறிப்பாக ஆண்களைக் குறிக்கிறது.
சந்தைவெளியிலிருந்து
இது பொருட்கள், கால்நடைகள் மற்றும் பலசரக்குகள் வாங்குவதற்கும் விற்பதற்குமான ஒரு விசாலமான பொது வியாபாரஸ்தலம்; ஒரு பொதுவான நாற்சந்தி (UDB)
பட்டணத்தில் அமளியுண்டாக்கி
"பட்டணத்தில் கலவரத்தை ஏற்படுத்தி"
வீட்டைத் தாக்கி
"வீட்டைக் கடுமையாகத் தாக்கி"
அவர்கள் கொண்டுவர விரும்பினார்கள்
இந்தப் பிரதிப்பெயர்ச்சொல் விசுவாசியாத யூதர்களையும் சந்தைவெளியிலிருந்து வந்த பொல்லாத மனிதரையும் குறிக்கிறது.
வெளியேயிருந்த மக்களிடத்தில்
பொதுமக்களின் ஆதரவுடன் ஒரு தீர்மானத்தை எடுக்கக் கூடியிருந்த ஒரு அரசாங்கக் கூட்டம் அல்லது சட்டபூர்வமான குடிமக்களின் கூட்டத்திடம்.
அதிகாரிகளுக்குமுன்பு
"அதிகாரிகளின் முன்னிலையில்"
இந்த மனிதர்கள்
யூதத்தலைவர்கள் பவுல் மற்றும் சீலாவிடம் பேசிக்கொண்டு, அவர்களை "இந்த மனிதர்கள்" என்று குறிப்பிடவும் செய்தார்கள்.
உலகத்தைக் கலக்குகிறவர்கள்
இது "பிரச்சனை உண்டாகும்படி" எனும் பொருள் கொண்ட ஒரு மரபுச்சொல் (UDB). பவுலும் சீலாவும் தங்கள் போதனையினால் ஏற்படுத்திய செல்வாக்கை, யூதத்தலைவர்கள் இந்த முறையில் மிகைப்படுத்திக்கூறி தங்கள் பொறாமையை வெளிப்படுத்தினார்கள். (பார்க்க: மிகையுரை)
யாசோன் வரவேற்றான்
யாசோன் அப்போஸ்தலரின் பிரச்சனைக்குரிய செய்திக்கு உடன்பட்டிருந்தான் என்று இந்த சொற்றொடர் காட்டுகிறது.
Acts 17:8-9
அவர்கள் கலங்கினார்கள்
"கவலைப்பட்டார்கள்" அல்லது "மனரீதியில் துயரப்பட்டார்கள்"
ஜாமீன்
"ஒப்பந்தப் பத்திரம்" அல்லது "வைப்புத் தொகை" அல்லது "அபராதம் (UDB)." இந்தப் பணம் நல்ல நடத்தைக்கான உறுதிப்பணம், எல்லாம் சரியாக சென்றால், அந்தப் பணம் திரும்ப கிடைத்துவிடும் அல்லது தவறான நடத்தையால் ஏற்பட்ட சேதங்களை சீர்படுத்த அந்தப் பணம் பயன்படுத்தப்படும்.
மற்றவர்கள்
"யாசோனைத் தவிர்த்து மற்ற விசுவாசிகள்"
அவர்கள் அவர்களைப் போகவிட்டார்கள்
"அதிகாரிகள் யாசோனையும் கைதுசெய்யப்பட்ட மற்ற விசுவாசிகளையும் விடுதலை செய்தனர்"
Acts 17:10-12
உயர்ந்த மனதுடையவர்களாய்
"மிகவும் திறந்த மனமுள்ளவர்களாய்" அல்லது "கேட்க மிகவும் மனதுள்ளவர்களாய்." "கேட்க மனதாயிருப்பது" என்பது உயர்தர குடும்பங்களில் பிறந்து, கற்றோரின் ஒரு பண்பாக இருக்கிறது. புதிய கருத்துக்களைக் கேட்பது அவர்களை அதிகமாய்ப் பயமுறுத்தாது.
வார்த்தையை ஏற்றுக்கொண்டார்கள்
"போதனைக்கு செவிகொடுத்தார்கள்"
மனதின் முழு ஆயத்தத்துடன்
இந்தப் பெரோயர்கள் பவுலின் போதனையை வேதவசனத்துடன் ஆராய்ந்துபார்க்க ஆயத்தமாயிருந்தனர்.
வேதவாக்கியங்களைத் தினமும் ஆராய்ந்தனர்
"ஒவ்வொருநாளும் ஏற்ற வேதப்பகுதிகளை எடுத்து, கவனமாய் வாசித்து, ஆராய்ந்தனர்.
Acts 17:13-15
யூதர்கள்...கற்றபோது
"சொல்லப்பட்டார்கள்", "அறிவிக்கப்பட்டார்கள்" அல்லது "கேட்டார்கள்" (UDB)
அங்கே சென்று கிளப்பி விட்டார்கள்
"அங்கே சென்று கிளர்ச்சி செய்தார்கள்" அல்லது "அங்கே சென்று சந்தேகத்தை ஏற்படுத்தினார்கள்"
மக்களைக் கலங்க வைத்தார்கள்
"மக்கள் மத்தியில் திகிலையும் பயத்தையும் உண்டாக்கினார்கள்"
பவுலை வழிநடத்தினவர்கள்
"பவுலுடன் உடனிருந்தவர்கள்" அல்லது "பவுலுடன் சேர்ந்து சென்றவர்கள்"
Acts 17:16-17
தன் ஆவியில் வைராக்கியமடைந்து
"அவன் தொல்லையடைந்து" அல்லது "அவன் கலக்கமடைந்து" அல்லது "அவன் மிகவும் துயரமடைந்து" (UDB)
எனவே அவன் சம்பாஷித்தான்
"எனவே அவன் விவாதித்தான்" அல்லது "எனவே அவன் கலந்துரையாடினான்." இந்த வினைச்சொல்லானது பிரசங்கத்தின்போது கேட்போர் பகிர்ந்துகொள்ளுவதைவிட இந்தமுறையில் அதிகமாய் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வார்கள் என்று காட்டுகிறது.
சந்தைவெளியில்
இது பொருட்கள், கால்நடைகள் மற்றும் பலசரக்குகள் வாங்குவதற்கும் விற்பதற்குமான ஒரு விசாலமான பொது வியாபாரஸ்தலம்; ஒரு "பொதுவான நாற்சந்தி" (UDB)
Acts 17:18
எப்பிக்கூரர்...தத்துவஞானிகள்
எல்லாம் தற்செயலாய் உருவானது என்று நம்பின மக்கள். தேவர்கள் தங்கள் பாக்கியமான நிலையிலும், பேரின்ப நிலையிலும் அலுவலாயிருப்பதால் பிரபஞ்சத்தை நிர்வகிப்பதைப் பொருட்படுத்தாமலிருக்கிறார்கள் என்றும் அவர்கள் நம்பினார். அவர்கள் உயிர்த்தெழுதலை மறுத்தனர். (பார்க்க: பெயர்களை மொழிபெயர்த்தல்)
ஸ்தோயிக தத்துவஞானிகள்
ஒருவன் தன்னை விதிக்கு விட்டுக் கொடுத்துவிட்டால் விடுதலை கிடைத்துவிடும் என்று நம்பின மக்கள். அவர்கள் ஒரு தனிப்பட்ட அன்பான தெய்வத்தையும், உயிர்த்தெழுதலையும் மறுத்தார்கள். (பார்க்க: பெயர்களை மொழிபெயர்த்தல்)
அவனோடு வாக்குவாதம் செய்தார்கள்
"பவுலுடன் வாக்குவாதம் செய்தார்கள்"
சிலர் சொன்னார்கள்
"தத்துவஞானிகளில் சிலர் சொன்னார்கள்"
இந்த வாயாடி என்ன
"வாயாடி" எனும் வார்த்தை பறவைகள் தங்கள் விதைகளாகிய இரையைத் தின்னும்போது எழுப்பும் கொக்கரிக்கும் சத்தத்தின் பின்னணியிலிருந்து வருகிறது. இது புறங்கூறுகிறவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் எதிர்மறையான பதமாகும். பவுல் கேட்கப் பயனற்ற சில தகவல்களையுடைய ஒருவன் என்று தத்துவஞானிகள் கூறினர்.
மற்றவர்கள் சொன்னார்கள்
"மற்ற தத்துவஞானிகள் சொன்னார்கள்."
அவன் ஒரு பிரசங்கிபோலத் தோன்றுகிறான்
"அவன் ஒரு அறிவிப்பவனாகத் தோன்றுகிறான்" அல்லது "அவன் செய்தியைப் பரப்புகின்ற பணியை செய்பவன்போலத் தோன்றுகிறான்"
அந்நிய தெய்வங்கள்
இது "முரண்பட்ட" என்ற அர்த்தத்தில் வராமல், "அயல்நாட்டு" என்ற அர்த்தத்தில் வருகிறது, அதாவது கிரேக்க மற்றும் ரோம தெய்வங்கள் அல்லாதவைகள்.
Acts 17:19-21
அவர்கள் பவுலை அழைத்துக்கொண்டுபோய்
"எப்பிக்கூரர் மற்றும் ஸ்தோயிக தத்துவஞானிகள் பவுலை அழைத்துக்கொண்டுபோய்"
அரியோபோகஸிற்கு
அத்தேனேயிலுள்ள உச்சநீதிமன்றம் அத்தேனேயிலுள்ள ஒரு குன்றின்மீது கூடியிருக்கலாம். (பார்க்க: பெயர்களை மொழிபெயர்க்க)
இவைகளுக்கான பொருளை நாங்கள் அறிந்துகொள்ள விரும்புகிறோம்
"நாங்கள்" என்பது தத்துவஞானிகளை மட்டுமே குறிக்கிறது. "இவைகள் எவைகளென்று நீ கோருகிறாயோ அவைகளை நாங்கள் நியாயம்தீர்க்க விரும்புகிறோம்" என்றும் இது மொழிபெயர்க்கப்படலாம். (பார்க்க: உள்ளடக்காதிருத்தல்)
அத்தேனேயர் எல்லாரும்
"அத்தேனேயர்" என்பவர்கள் மக்கெதோனியாவிலுள்ள (இக்கால கிரேக்க நாடு) கடற்கரையோரமுள்ள அத்தேனே என்னும் பட்டணத்தில் இருப்பவர்கள் (பார்க்க: பெயர்களை மொழிபெயர்க்க)
அந்நியர்களும்
"அயல்நாட்டவர்கள்" அல்லது "அத்தேனேய சமுதாயத்திற்குள் வந்த ஒரு புதிய நபர்"
நேரத்தை செலவழித்தனர்
"நேரத்தைப் பயன்படுத்தினர்" அல்லது "நேரத்தை அர்ப்பணித்தனர்"
புதிதான சிலவற்றை சொல்லுதல் அல்லது கேட்டல்
"புதிய தத்துவ கருத்துக்களை கலந்தாலோசித்தல்" அல்லது "அவர்களுக்குப் புதிதாய் இருந்தவைகளைப் பற்றி பேசுதல்" (UDB)
Acts 17:22-23
எல்லாவிதத்திலும் மிகவும் பக்தியுள்ளவர்களாய்
அத்தேனேயர்கள் தங்கள் வழிபாடுகள், பலிபீடங்கள் கட்டுதல் மற்றும் பலிகள் செலுத்துதல் போன்றவற்றின்மூலம் தங்கள் தெய்வங்களைப் பொது இடங்களில் கனப்படுத்துவதைப் பற்றி பவுல் இங்கு குறிப்பிடுகிறான்.
எப்படியென்றால் நான் சுற்றி வந்தபோது
"ஏனென்றால் நான் நடந்து திரிந்தபோது"
அறியப்படாத தேவனுக்கு
சாத்தியமான அர்த்தங்கள்: 1) "ஒரு குறிப்பிட்ட அறியப்படாத தெய்வம்" அல்லது 2) "நாங்கள் அறியாத ஏதோவொரு தெய்வத்திற்கு"
Acts 17:24-25
பவுல் தொடர்ந்து பேசுகிறான்.
அவர் ஆண்டவராயிருக்கிறபடியால்
"அவர்" என்பது அறியப்படாத தேவனைக் குறிக்கையில், பவுல் தேவனாகிய கர்த்தரை விவரித்துக் கொண்டிருக்கிறான். "அவர் ஆண்டவராயிருக்கிறபடியினால்" என்று இதை மொழிபெயர்க்கலாம்.
கைகளால் கட்டப்பட்ட
"மக்களின் செயல்மூலம்"
பணிவிடை கொள்ளுதல்
"பணிவிடை" என்பது ஒரு மருத்துவர் ஒரு நோயாளியைக் குணப்படுத்த சேவைசெய்யும் அர்த்தத்தைக் கொண்டுள்ளது. வேறு மொழிபெயர்ப்பு: "பராமரித்தல்."
மனிதரின் கைகளால்
"மனிதக் கரங்களினால்"
அவர் தாமாக இருந்தாலும்
"ஏனென்றால் அவர்தாமே"
Acts 17:26-27
பவுல் தொடர்ந்து பேசுகிறான்.
ஒரு மனிதன்
சாத்தியமான அர்த்தங்கள்: 1) "ஒரு மனிதன் என்பது தேவனால் படைக்கப்பட்ட ஆதாமைக் குறிக்கிறது." 2) "இது தேவனால் படைக்கப்பட்ட ஆதாமையும் ஏவாளையும் உள்ளடக்கக் கூடும்."
அவர் சகல தேசத்தாரையும் படைத்து
"சிருஷ்டிகராகிய தேவன் சகல தேசத்தாரையும் படைத்து"
அவர்களுடைய...அவர்கள்
இந்தப் பிரதிப்பெயர்சொற்கள் பூமியில் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்து தேசமக்களையும் குறிக்கிறது.
தேவனைத் தேடுதல்
"தேவனைக் கண்டறிய ஆராயுதல்"
தம்மைத் தடவியாகிலும்
"அவருக்கான ஒரு தேவை இருப்பதைக் கண்டுகொள்ளுதல்"
நம்மில் ஒருவருக்கும்
பவுல் தன்னையும், தன்னைக் கேட்போரையும் மற்றும் சகல தேசத்தவரையும் உள்ளடக்கி "நம்மில்" எனும் பதத்தைப் பயன்படுத்துகிறான். (பார்க்க: உள்ளடக்குதல்)
Acts 17:28-29
பவுல் தொடர்ந்து பேசுகிறான்.
அவருக்குள்
"தேவனுக்குள்"
நாம் பிழைக்கிறோம், அசைகிறோம்
பவுல் தன்னைக் கேட்போரைத் தன்னுடன் சேர்த்துக்கொள்கிறான். (பார்க்க: உள்ளடக்குதல்)
அவருடைய சந்ததியாராயிருக்கிறோம்
சந்ததியார் என்பது உடனடி பிள்ளைகளாக இருக்க வேண்டுமென்று அவசியம் இல்லை. சந்ததியாராக, அவர்கள் மூதாதையரோடு சில பொதுவான குணங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். இந்த மேற்கோளில் "அவருடைய" என்பது விளக்கப்படாத ஒரு பிரதிப்பெயர்சொல்லாக இருக்கிறது.
தெய்வீகத்தன்மை
தேவனுடைய தன்மை அல்லது சிறப்பியல்புகள்
Acts 17:30-31
பவுல் தொடர்ந்து பேசுகிறான்.
அறியாமை
சாத்தியமான அர்த்தங்கள்: 1) "ஏதோவொன்று பற்றி வெறுமனே தெரியாதிருத்தல்" அல்லது 2) "வேண்டுமென்றே புறக்கணித்தல்."
தாம் தெரிந்துகொண்ட மனிதனைக்கொண்டு
"தேவன் தெரிந்துகொண்ட மனிதனைக்கொண்டு"
தேவன் இந்த மனிதனைக் குறித்து சாட்சி கொடுத்திருக்கிறார்
"தேவன் தாம் தெரிந்துகொண்ட மனிதன் இவர்தான் என்று விளங்கப்பண்ணியிருக்கிறார்"
Acts 17:32-34
அத்தேனேப் பட்டணத்து மனிதர்கள்
அரியோபாகஸில் கூடியிருந்து பவுலின் உரையைக் கேட்ட மக்கள்.
சிலர் பவுலை கேலி செய்தார்கள்
"சிலர் பவுலைப் பரிகசித்தனர்" அல்லது "சிலர் பவுலைப் பார்த்து நகைத்தனர்." இவர்கள், ஒருவர் மரித்து மறுபடியும் உயிரோடெழுவது சாத்தியமானது என்பதை நம்பவில்லை.
நாங்கள் கேட்போம்
"நாங்கள்" என்பது பவுலைக் கேட்க விரும்பிய அத்தேனேப் பட்டணத்து மனிதர்களைக் குறிக்கிறது. அவர்கள் பவுலுடன் நேரடியாகப் பேசினபோதும், அவர்கள் பவுலைத் தங்கள் குழுவில் சேர்த்துக்கொள்ளவில்லை. (பார்க்க: உள்ளடக்காதிருத்தல்)
அரியோபாகியனாகிய தியோனிசியும், தாமரி எனும் பெயர்கொண்ட பெண்ணும்
தியோனிசியு என்பது ஒரு மனிதனுடைய பெயராக இருக்கிறது. அரியோபாகியன் என்பது தியோனிசியு அரியோபாகஸிலுள்ள நீதிபதிகளுள் ஒருவனாக இருந்தான் என்று காட்டுகிறது. (பார்க்க: பெயர்களை மொழிபெயர்க்க)
Acts 18
Acts 18:1-3
இவைகளுக்குப்பின்பு
"அத்தேனேயில் இந்த சம்பவங்கள் நடைபெற்றபின்பு"
அங்கே அவன் கண்டு
சாத்தியமான அர்த்தங்கள்: 1) "அங்கே பவுல் தற்செயலாகக் கண்டிருக்கக்கூடும் அல்லது 2) "அங்கே பவுல் கருத்தாய் தேடியபின்பு கண்டிருக்கலாம்."
இனத்தால் பொந்து எனப்பட்டவன்
கருங்கடலின் தென்கரையிலிருந்த ஒரு மாகாணம்.
சமீபத்தில் வந்த
இது ஒருவேளை கடந்த வருடத்தில் இருக்கலாம்.
கிலவுதியுராயன் கட்டளையிட்டதினால்
அப்போதைய ரோமப் பேரரசர் (பார்க்க: பெயர்களை மொழிபெயர்ப்பது எப்படி?)
யூதர்கள் அனைவருக்கும் கட்டளையிட்டான்
"ஆணையிட்டான்" அல்லது "அறிவுறுத்தினான்"
Acts 18:4-6
எனவே பவுல் சம்பாஷித்தான்
"சம்பாஷனை" என்பது பவுல் பெற்றிருந்த இருவழி உரையாடலைக் குறிக்கிறது. வேறு மொழிபெயர்ப்பு: "எனவே பவுல் விவாதித்தான்" அல்லது "எனவே பவுல் கலந்துரையாடினான்"
அவன் இணங்கச் செய்தான்
இதனை "அவன் தொடர்ந்து இணங்கச்செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தான்" என்றும் மொழிபெயர்க்கலாம்.
ஆவியானவரால் கட்டாயப்படுத்தப்பட்டு
இந்த சொற்றொடரை செய்வினை வடிவிலும் வெளிப்படுத்தலாம். "ஆவியானவர் அவனைக் கட்டாயப்படுத்தினார்" (பார்க்க: செய்வினை அல்லது செயப்பாட்டு வினை)
தன் ஆடைகளை உதறி
இந்த அடையாள செயல் பவுல் விசுவாசியாத யூதர்களோடு தான் கொண்டிருந்த இணைப்புகளை வெட்டிவிடுவதையும், அவர்களை தேவனுடைய நியாயத்தீர்ப்பிற்கு விட்டுவிடுவதையும் காட்டுகிறது.
உங்கள் இரத்தப்பழி உங்கள் தலைகளின்மேல் இருக்கும்;
இது ஒரு உருவகமாக இருக்கிறது. இதன் பொருள், யூதர்கள் மனம்திரும்ப மறுத்தால், அவர்களுடைய இருதயக்கடினத்திற்காக அவர்கள் சந்திக்கவிருக்கும் நியாயத்தீர்ப்பிற்கு அவர்களே பொறுப்பாவார்கள் என்பதாகும். (பார்க்க: உருவகம்)
Acts 18:7-8
பின்பு அவன் அவ்விடத்தைவிட்டு
"பின்பு பவுல் அவ்விடத்தைவிட்டு"
தித்தியு யுஸ்து
ஒரு யூத விசுவாசி. (பார்க்க: பெயர்களை மொழிபெயர்ப்பது எப்படி?)
ஜெபஆலயத்தலைவன்
"ஜெபஆலயப்பணிக்கு நிதியுதவிசெய்து, நிர்வாகம்செய்த ஒரு சாதாரண மனிதன், அவன் ஒரு போதகனாய் இருக்கவேண்டுமென்று அவசியமில்லை"
கிறிஸ்பு எனும் தலைவன்...
மற்றொரு யூத விசுவாசி. (பார்க்க: பெயர்களை மொழிபெயர்ப்பது எப்படி?)
தன் வீட்டாரனைவரோடும்
"அவனோடு வாழ்ந்தவர்களும், அவனுடைய விரிவான குடும்பத்தினர்கள் யாவரையும் உள்ளடக்கி"
கொரிந்தியரில் அநேகர்
யூதர்களல்லாத அநேகக் கொரிந்தியர்கள்.
Acts 18:9-11
மவுனமாயிராதே
"நற்செய்தியைக் குறித்துப் பேசுவதை நிறுத்தாதே."
ஏனென்றால் நான்
"நான்" என்பது பவுலிடம் பேசிக்கொண்டிருந்த கர்த்தரைக் குறிக்கிறது.
உன்னுடன்கூட
"உன்" என்பது தரிசனத்தில் கர்த்தர் பேசிக்கொண்டிருந்த பவுலைக் குறிக்கிறது.
இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக மக்கள் உண்டு
"என்மேல் விசுவாசம் வைத்திருக்கிற அநேக மக்கள் இந்தப் பட்டணத்தில் எனக்கு உண்டு."
Acts 18:12-13
கல்லியோன் அகாயா நாட்டிற்கு ஆளுநரானான்
அகாயா நாடு ஒரு ரோம மாகாணமாக இருந்தது. அதில் கொரிந்து பட்டணம் அங்கம் வகித்தது. அது இப்பொழுது நவீன தென் கிரேக்கப் பகுதியாக இருக்கிறது. (பார்க்க: பெயர்களை மொழிபெயர்த்தல்)
அவனை நியாயாசனத்திற்குமுன்பு கொண்டுபோய்
யூதர்கள் பவுலை பலவந்தமாய் இழுத்து அவனை நியாயாசனத்திற்குமுன்பு கொண்டுபோனார்கள். வேறு மொழிபெயர்ப்பு: "ஆளுநரால் நியாயம்தீர்க்கப்படும்படி அவனைக் கொண்டுபோனார்கள்"
நியாயப்பிரமாணத்திற்கு முரணாக
யூதர்கள் வேண்டுமென்றே பவுலின் குற்றங்கள் யூதர்களின் சட்டங்களுக்கும் வழக்கங்களுக்கும் எதிராக உள்ளது என்றனர், இது ரோம சட்டத்திற்கு விரோதமான குற்றங்கள்போல் தோன்றியது.
Acts 18:14-15
கல்லியோன் சொன்னான்
அந்த மாகாணத்தின் ரோம ஆளுநர்
உங்கள் சொந்த பிரமாணம்
இவை மோசேயின் நியாயப்பிரமாணமும், பவுலின் காலத்தைச் சேர்ந்த மற்ற யூத வழக்கங்களுமாய் இருந்தன.
இப்படிப்பட்டவைகளை நியாயம்தீர்க்க எனக்கு மனதில்லை
"இப்படிப்பட்டவைகளைக் குறித்து நியாயம்தீர்க்க நான் மறுக்கிறேன்."
Acts 18:16-17
அவர்கள் யாவரும் பிடித்து
"அனைவரும் பிடித்து" அல்லது "அவர்களனைவரும் பிடித்தார்கள்." கூட்டத்திலுள்ள ஒவ்வொரு தனி நபராலும் அவனைப் பிடிக்கக் கூடாதாகையால், இது மிகையுரையாக இருக்கிறது. (பார்க்க: மிகையுரை)
ஜெபஆலயத்தின் அதிபதியாகிய சொஸ்தேனே
கொரிந்துவிலிருந்த ஜெபஆலயத்தின் யூத அதிபதி. (பார்க்க: பெயர்களை மொழிபெயர்க்க)
அவனை அடித்தார்கள்
"அவனைத் தாக்கினார்கள்" அல்லது "அவனைக் குத்தினார்கள்." சொஸ்தேனே சரீரத்தில் அடிக்கப்பட்டான்.
Acts 18:18-19
பிரிஸ்கில்லாள் மற்றும் ஆக்கில்லாவோடு சீரியாவிற்குப் போகக் கப்பலேறினான்
பவுல் சீரியாவை நோக்கிப் பயணித்த கப்பலில் ஏறினான். பிரிஸ்கில்லாளும், ஆக்கில்லாவும் அவனோடு சென்றார்கள்.
கெங்கிரேயா எனும் துறைமுகம்
கெங்கிரேயா எனும் துறைமுகம் பெரிய கொரிந்து பட்டணப் பகுதியில் இருந்தது. (பார்க்க: பெயர்களை மொழிபெயர்க்க)
நசரேயப் பொருத்தனை
இது தேவனுக்காக ஏதாவதொன்றை செய்ய மோசேயின் நியாயப்பிரமாணத்தில் விதிக்கப்பட்டிருந்த ஒரு பொருத்தனை அல்லது ஒரு ஆணையாக இருந்தது. இது லேவியின் கோத்திரத்திற்கு வெளியேயிருந்த ஒரு நபர் தேவனை சேவிக்க அனுமதித்தது.
அவர்கள் எபேசுவிற்கு வந்தபோது
"பவுல், பிரிஸ்கில்லாள் மற்றும் ஆக்கில்லா எபேசுவிற்கு வந்தபோது"
சம்பாஷனை பண்ணினான்
"கலந்துரையாடினான்" அல்லது "விவாதித்தான்"
Acts 18:20-21
அவர்கள் கேட்டார்கள்
"யூதர்கள் கேட்டார்கள்"
அவர்களிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு
"அவர்களிடம் விடைபெறுகிறேன் என்று சொல்லி"
Acts 18:22-23
செசரியாவில் கரைசேர்ந்து
"செசரியாவை வந்தடைந்து"
அவன் மேலே சென்றான்
"பவுல் எருசலேம் பட்டணத்திற்கு பிரயாணம் செய்தான்."
எருசலேம் சபையை வாழ்த்தினான்
"எருசலேம் சபையிலுள்ள அங்கத்தினர்களை வாழ்த்தினான்."
பின்பு கீழே சென்றான்
"பின்பு எருசலேமிலிருந்து கீழே சென்றான்." எருசலேம் ஒரு குன்றின்மீது இருந்தாலும், இங்கு மேலே மற்றும் கீழே என வரும் வழிகாட்டிக் குறிப்புகள் எருசலேமின் பூலோகரீதியிலான உயரநிலையைக் குறிக்காமல், அதன் ஆவிக்குரிய முக்கியத்துவத்தையே குறிக்கிறது.
பவுல் புறப்பட்டான்
"பவுல் சென்று விட்டான்" அல்லது "பவுல் போய்விட்டான்"
கலாத்தியா மற்றும் பிரிகியா நாடுகள்
இவை இன்று துருக்கி எனப்படும் ஆசியாவின் மாகாணங்கள் (பார்க்க: பெயர்களை மொழிபெயர்க்க)
சீடர்களனைவரையும் ஆறுதல்படுத்தினான்
"சீடர்கள் யாவரையும் பலப்படுத்தினான்"
Acts 18:24-26
பிறப்பினால் ஒரு அலெக்சந்திரியன்
"அலெக்சந்திரியா என்னும் பட்டணத்தில் பிறந்த ஒரு மனிதன்." சாத்தியமான பட்டணங்கள்: 1) "வடக்குக் கடற்கரையிலிருந்த எகிப்தின் அலெக்சந்திரியா" அல்லது 2) "மேற்குக் கடற்கரையிலிருந்த ஆசியாவின் அலெக்சந்திரியா."
ஆவியில் அனலுள்ளவன்
அவன் தனது வைராக்கியத்திலும், போதனையிலும் முழுஇருதயத்தோடிருந்தான்.
யோவானின் ஞானஸ்நானம்
"யோவான் கொடுத்த ஞானஸ்நானம்"
பேச்சில் வல்லவன்
"ஒரு நல்ல பேச்சாளன்"
மிகவும் திட்டமாய்
"மிகவும் நிறைவாய்"
Acts 18:27-28
அவன் விரும்பியபோது
"அப்பொல்லோ விரும்பியபோது"
அகாயாவிற்குள் கடந்துசெல்ல
"அகாயா நாட்டிற்குள் போக." அகாயா இன்றைய கிரேக்க நாட்டின் தென்பகுதியிலிருந்த ரோம மாகாணம்.
சீடர்களுக்கு எழுதினார்கள்
"அகாயாவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதினார்கள்"
அவன் வந்து சேர்ந்தபோது
"அப்பொல்லோ வந்து சேர்ந்தபோது"
அப்பொல்லோ வெளியரங்கமாக பலமாய்த் தர்க்கம் பண்ணினான்
அப்பொல்லோ தன்னுடைய வாதங்களினால் மற்ற மக்களுக்குமுன்பு யூதர்களைத் தோற்கடித்தான்.
Acts 19
Acts 19:1-2
அது நடந்தது
"அது சம்பவித்தது"
வழியாய்ப் போய்
"வழியாகப் பயணித்து "
மேடான தேசம்
இது எபேசு, அலெக்சாந்திரியா, துரோவா மாற்றும் கிழக்கு நோக்கியுள்ள உள்நாட்டிற்கு வடக்கில் இருந்த ஆசியாவின் ( இன்றைய துருக்கி ) ஒரு பகுதி.
பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்
பரிசுத்த ஆவியை அடைதல் அல்லது பெறுதல்.
பரிசுத்த ஆவியைக் குறித்து நாங்கள் கேள்விப்படவே இல்லை
"நாங்கள் பரிசுத்த ஆவியைப்பற்றி கேள்விப்படவில்லை "
Acts 19:3-4
பவுல் எபேசுவிலே உள்ள புதிய விசுவாசிகளோடு தன்னுடைய உரையாடலைத் தொடருகிறார்.
அப்படியானால், நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?
"நீங்கள் யாருடைய ஞானஸ்நானம் பெற்றீர்கள்?" அல்லது "நீங்கள் யாருடைய நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டீர்கள்?"
அவர்கள் சொன்னார்கள்
"சீஷர்கள் சொன்னார்கள் "
யோவானுடைய ஞானஸ்நானம்
"யோவான் கொடுத்த ஞானஸ்நானம்"
மனந்திரும்புதலின் ஞானஸ்நானம்
"ஜனங்கள் அவர்களுடைய பாவங்களிலிருந்து திரும்ப விரும்பினபோது, அவர்கள் கேட்டுக்கொண்ட ஞானஸ்நானம்"
அவனுக்குப் பின் வருவது
"நாட்களில் யோவான்ஸ்நானகனுக்குப் பின் வருவது", சரீரரீதியாக அவனுக்குப் பின் வருவது அல்ல.
Acts 19:5-7
ஜனங்கள்
எபேசு விசுவாசிகள் பவுலோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அவனுடைய கைகளை வைத்தான்
"அவன் ஜெபித்தபோது, அவர்களுடைய தலைகளின்மேல் அவனுடைய கைகளை வைத்தான் "
அவர்கள் அந்நிய பாஷைகளைப்பேசி தீர்க்கதரிசனம் சொன்னார்கள்
அப்போஸ்தல நடபடிகள் 2:3
4 ஐ போல இல்லாமல், அவர்களுடைய செய்திகளை யார் புரிந்துகொண்டார்கள் என்கிற விளக்கம் இங்கே இல்லை.
அவர்கள் பன்னிரண்டு மனிதர்கள் இருந்தார்கள்
"பவுல் ஞானஸ்நானம் கொடுத்தவர்கள் மற்றும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டவர்கள் " என்று பொருள்படுகின்ற திறக்கப்பட்ட வேதாகமத்தில் (ULB) குறிப்பிடப்படாத தகவல்.
Acts 19:8-10
பவுல் ஜெப ஆலயத்திற்குச் சென்று மூன்று மாதமளவும் தைரியமாகப் பேசினான்
இது "பவுல் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக ஜெபஆலயக் கூட்டங்களில் பங்குபெற்று தைரியமாகப் பேசினான் " என்றும் மொழிபெயர்க்கலாம்.
ஜனங்களுக்குப் புத்திசொல்வது
"பேசப்பட்ட சத்தியத்தில் ஜனங்களை இணங்கச்செய்ய முயற்சித்தல்"
சில யூதர்கள் கடினப்பட்டு
"சில யூதர்கள் செய்திகளை ஏற்றுக்கொள்ள பிடிவாதமாக மறுத்தார்கள் "
பொல்லாதவைகளைப் பேச
"பொல்லாத காரியங்களைப் பேச "
கிறிஸ்துவின் வழி
"இயேசு கிறிஸ்துவின் மூலம் இரட்சிப்பு"
விசுவாசிகளை இழுத்து
"விசுவாசிகளை நடத்தி" அல்லது "சரீரரீதியாக அசைக்கபட்டது"
ஆசியாவில் குடியிருந்த அனைவரும் கேட்டார்கள்
அனுகூலமான அர்த்தங்கள் 1) "பவுல் ஆசியாவெங்கும் வாழ்ந்த அநேக ஜனங்களுக்கு சுவிஷேசத்தை பகிர்ந்துகொண்டான்" அல்லது 2)"ஆசியா முழுவதிலுமிருந்து ஜனங்கள் எபேசுவிற்கு வருவதால் பவுலின் செய்தி எபேசுவிலிருந்து ஆசியா முழுவதும் சென்றது."
Acts 19:11-12
பவுலின் கைகளினாலே
"பவுலின் மூலமாக "
பவுலுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டுவந்தபோது
இதை "பவுலினால் பயன்படுத்தப்பட்ட உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டுவந்து வியாதிக்காரர்கள்மேல் போட்டபோது" என்று மொழி பெயர்க்கலாம்.
Acts 19:13-14
யூத மந்திரவாதிகள்
ஜனங்களைவிட்டு அல்லது இடங்களைவிட்டு அசுத்த ஆவிகளைத் துரத்துகிற மக்கள்.
இயேசுவினுடைய நாமத்தை அவர்களுடைய சொந்த பயனுக்காக எடுத்துக்கொண்டார்கள்
அவர்கள் இயேசுவை விசுவாசிக்கவில்லை என்றாலும், அவர்கள் இயேசுவின் நாமத்தை அவர்களுடைய மந்திரசொற்களில் ஒன்றாகப் பயன்படுத்த முயற்சித்தார்கள்.
பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்
"பொல்லாத ஆவிகளின் ஆதிக்கத்தின்கீழ் இருந்தவர்கள் "
பேசினார்கள்
"அதினோடு பேசினார்கள்"
Acts 19:15-17
நான் இயேசுவை அறிவேன், மற்றும் பவுலையும் அறிவேன்
"நான் இயேசுவையும், பவுலையும் அறிவேன்;" அல்லது "இயேசுவையும் பவுலையும் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன் "
நீ யார்
இது அசுத்த ஆவிகளின்மேல் அவர்களுக்கு இருக்கிற அதிகாரத்தைப் பற்றிய நம்பிக்கை இல்லாத நிலையை வெளிப்படுத்தும் அணிஇலக்கணக் கேள்வியாகும். இதை "உனக்கு என்ன அதிகாரம் உள்ளது?" அல்லது "உனக்கு அதிகாரம் இல்லை" என்றும் மொழிபெயர்க்கலாம்.
மந்திரவாதிகள்
"மந்திரவாதிகள்" என்பதை, முந்தின வசனம் (அப்போஸ்தல நடபடிகள் 19:15) ல் மொழிபெயர்த்த விதமாகவே மொழிபெயர்க்கவும்.
அவர்கள் நிர்வாணமாக ஓடிப்போனார்கள்
மந்திரவாதிகள் அவர்களுடைய சில ஆடைகள் அல்லது எல்லா ஆடைகளும் அவர்களிலிருந்து உரியப்பட்டவர்களாக ஓடிப்போனார்கள்.
அவர்கள் மிகவும் பயமடைந்தார்கள்
"எபெசுவிலிருந்த யூதர்களும் கிரேக்கர்களும் மிகவும் பயமடைந்தார்கள் "
Acts 19:18-20
அவர்களுடைய புத்தகங்களைக் கொண்டுவந்தார்கள்
மந்திரக்குறிகளும், சூத்திரங்களும் எழுதப்பட்டிருக்கும் சுருள்கள்.
எல்லோருடைய பார்வைக்கும் முன்பாக
"எல்லோருக்கும் முன்பாக"
வெள்ளிக் காசுகள்
ஒரு வெள்ளிக்காசின் மதிப்பு வேலையாளினுடைய ஒரு நாள் கூலியாகும்.
ஆகவே, கர்த்தருடைய வார்த்தை இவ்வளவு பலமான வழிகளில் விருத்தியடைந்து பரவியது
"கர்த்தரைக் குறித்ததான செய்தி மிகுந்த வல்லமையுடையதும், தொடர்ந்து பரவி அதிகமாக ஆதிக்கம்கொண்டது"
Acts 19:21-22
பவுல் தன்னுடைய ஊழியத்தை நிறைவேற்றினான்
எபேசுவிலே செய்யும்படியாய் தேவன் பவுலுக்கு வைத்திருந்த ஊழியத்தை அவன் நிறைவேற்றினான்.
மக்கெதோனியா மற்றும் அகாயா
இந்த மாகாணங்கள் தற்போதைய கிரேக்கு நாடு.
அவன் ஆவியில் தீர்மானித்தான்
அனுகூலமான அர்த்தங்கள் 1) "பவுல் பரிசுத்த ஆவியின் உதவியோடு தீர்மானித்தான். அல்லது 2) ஆவி பவுலைத் தீர்மானிக்கும்படி நடத்தியது.
நான் ரோமபுரியையும் பார்க்கவேண்டும்
"நான் ரோமபுரிக்கும் பிரயாணம் செய்யவேண்டும்"
ஆனால் அவன் இன்னும் சிலகாலம் ஆசியாவிலேயே தங்கினான்
பவுல் எபேசுவிலே தங்கியிருந்தான் என்பது அடுத்த சில வசனங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
Acts 19:23-25
பெரிய கலகம்
குழப்பமான சூழ்நிலை.
மார்க்கம்
இது கிறிஸ்தவத்தைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தையாகும்.
ஒரு வெள்ளித்தட்டான்
வெள்ளித்தட்டான் என்பவன் வெள்ளி உலோகத்தைக்கொண்டு சிலைகளையும் ஆபரணங்களையும் செய்யும் ஒரு தொழிலாளி.
தெமேத்திரியு என்னும் பெயரையுடையவன்
எபேசுவிலே பவுலுக்கும், சபைக்கும் எதிரானவனாக இருந்த ஒரு வெள்ளித்தட்டான்.
தியானாளின் வெள்ளிச் சிலை
எபேசுவிலே தேவியாகிய தியானாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பெரியக் கோவில் இருந்தது.
மிகுந்த ஆதாயம் உண்டுபண்ணினான்
தியானாளின் உருவத்தில் செய்யப்பட்ட அநேக வெள்ளிச் சிலைகளை விற்றான்.
Acts 19:26-27
வெள்ளித் தட்டானாகிய தெமேத்திரியு, தொடர்ந்து வெள்ளித் தொழிலாளிகளிடம் பேசுகிறான்.
நீங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறீர்கள்
"நீங்கள் அறிந்தும், புரிந்துமிருக்கிறீர்கள் "
அநேக ஜனங்களை வசப்படுத்தினான்
"உள்ளூர் தெய்வங்களை ஆராதிப்பதை விட்டுவிட்டு கிறிஸ்துவிடம் திரும்பும்படி அநேக ஜனங்களை இணங்கச்செய்தனர் "
அவளுடைய மகத்துவம்கூட அழிந்துபோகும்
தியானாளுடைய மகத்துவம், ஜனங்கள் அவளைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதிலிருந்துமட்டுமே வருகிறது.
எல்லா ஆசியாவும், முழு உலகமும் சேவிக்கிறவள்
இது, தேவியாகிய தியானாளின் பிரபலத்தையும், அநேக ஜனங்கள் அவளைச் சேவித்ததின் உண்மையையும் காண்பிப்பதை மிகைப்படுத்திக் கூறுவதாகும்.
Acts 19:28-29
அவர்கள் கேட்டபொழுது
"தொழிலாளிகள் கேட்டபொழுது"
கோபத்தினால் நிறைந்தனர்
"அதிகக் கோபமடைந்தனர் "
சத்தமிட்டு சொன்னார்கள்
"மிகுந்த சத்தமிட்டு, பேசினார்கள்"
அவர்கள் பவுலுடைய பிரயாணத் துணையாளர்களைப் பிடித்தார்கள்
"ஜனங்கள் பவுலுடைய பிரயாணத் துணையாளர்களைப் பிடித்தார்கள் "
ஜனங்கள் ஒருமனப்பட்டு ஓடினார்கள்
இது கலகம் அல்லது குழப்பமான சூழ்நிலை.
அரங்கசாலைக்குள்
எபேசு அரங்கமானது பொதுக்கூட்டங்களுக்காகவும், விளையாட்டு மற்றும் இசை போன்ற பொழுதுபோக்கிற்காகவும் பயன்படுத்தப்பட்டது.
மக்கெதோனியாவிலிருந்து வந்தவர்கள்
காயுவும், அரிஸ்தர்க்கும் மக்கெதோனியாவிலிருந்து வந்தார்கள் ஆனால் அந்த நேரத்தில் எபேசுவிலே பவுலோடு ஊழியம் செய்துகொண்டிருந்தார்கள்.
Acts 19:30-32
அரங்கசாலை
ஆயிரக்கணக்கான ஜனங்கள் அமரக்கூடிய இருக்கைகளையுடைய அரைவட்ட வடிவிலான வெளிப்புற வளாகம்.
Acts 19:33-34
யூதர்கள் அலெக்சந்தாவைக் கொண்டுவந்தார்கள்
கன்னானாகிய (செம்புத்தட்டான்) அலெக்சந்தாவின் தீமோத்தேயுவை பவுல் எச்சரிக்கிறார் (2தீமோத்தேயு 4:14). இவர்கள் ஒரே நபரா என்பது தெளிவாக இல்லை.
கையினால் சைகை காண்பித்தான்
" ஜனங்களுக்கு சைகை காண்பித்தான் "
விளக்கத்தை உண்டுபண்ணினான்
அவன் ஒரு "எதிர்வாதத்தை" முன்வைக்க விரும்பினான், ஆனால் அவன் என்ன சொல்லப்போகிறான் என்பது தெளிவாக இல்லை.
Acts 19:35-37
எபேசு மனிதர்களே
( நீங்கள் என்பதின் பொருளைப் பார்க்கவும் )
எபேசியருடைய பட்டணம் மகா தேவியாகிய தியானாளுக்கும் வானத்திலிருந்து விழுந்த சிலைக்கும் கோவிற்பாதுகாவலனாக இருக்கிறதை அறியாதவன் உண்டோ?
இது அங்கிருந்த கூட்டத்தினரை அமைதிபடுத்தும்படியாக பயன்படுத்தப்பட்ட அணிஇலக்கணக் கேள்வியாகும். இதை "எபேசியருடைய பட்டணம் மகா தேவியாகிய தியானாளுக்கும் வானத்திலிருந்து விழுந்த சிலைக்கும் கோவிற்பாதுகாவலனாக இருக்கிறதை ஒவ்வொரு மனிதனும் அறிந்திருக்கிறார்கள் " என்று மொழிபெயர்க்கலாம்.
கோவிற்பாதுகாவலன்
எபேசு மக்கள் தேவியினுடைய கோவிலைப் பராமரித்து பாதுகாத்தனர்.
வானத்திலிருந்து விழுந்த சிலைகள்?
தேவியின் கோவிலுக்குள் இருந்த சீயஸ்ஸிலிருந்து நேரடியாகக் கொண்டுவரப்பட்டதாக எண்ணப்பட்ட மின்னல் பாறையிலிருந்து வடிவமைக்கப்பட்ட தெய்வங்களுடைய சிலைகள்.
Acts 19:38-41
பட்டணத்து அதிகாரி தொடர்ந்து கூட்டத்தாரோடு பேசுகிறார்.
தெமேத்திரியு
எபேசுவிலே பவுலுக்கும், சபைக்கும் எதிரானவனாக இருந்த ஒரு வெள்ளித்தட்டான்.
தேசாதிபதிகள்
இது ஆளுநர் அல்லது அதிபதி என்பதற்கான ரோம வார்த்தை.
Acts 20
Acts 20:1-3
கலகத்திற்குப் பின்பு
"கூச்சலுக்குப் பின்பு " அல்லது "குழப்பத்திற்குப் பின்பு"
அவன் புறப்பட்டான்
"அவன் விடைபெற்றான்." இது ஒரு நபர் மற்றோருவரைவிட்டுப் பிரியும்போது சொல்லப்பட்ட ஒன்று.
விசுவாசிகளை அதிகமாக உற்சாகப்படுத்தினான்
"விசுவாசிகளை உற்சாகப்படுத்தும்படிக்கு அநேகக் காரியங்களைச் சொன்னான் "
அவன் அங்கே மூன்று மாதங்கள் கழித்தான்
"அவன் அங்கே மூன்று மாதங்கள் தங்கியிருந்தான் "
யூதர்களால் அவனுக்கு எதிராக சூழ்ச்சி செய்யப்பட்டது
"யூதர்கள் அவனுக்கு விரோதமாக சதி செய்தார்கள் "
சூழ்ச்சி செய்யப்பட்டது
"இரகசிய ஆலோசனை செய்யப்பட்டது "
அவன் சீரியாவிற்கு கப்பலேறி போகும்படி இருந்தான்
"அவன் சீரியாவிற்கு கப்பலேறி போவதற்கு ஆயத்தமாக இருந்தான் "
Acts 20:4-6
அவனோடு இணைந்துகொள்வது
"பவுலோடு பயணம் செய்வது"
பெரோயா ஊரானாகிய, பைரஸ்ஸின் மகனாகிய சோபத்தர்
(பெயர்களின் மொழிபெயர்ப்பைப் பார்க்கவும் )
இந்த மனிதர்கள் எங்களுக்கு முன்பாகப் போனார்கள்
அப்போஸ்தல நடபடிகளின் ஆசிரியராகிய லூக்கா இந்த குழுவோடு சேர்ந்துகொண்டார். மாற்று மொழிபெயர்ப்பு: "இந்த மனிதர்கள் எங்களுக்கு முன்பதாக பயணம் செய்தார்கள் "
Acts 20:7-8
வாரத்தின் முதல் நாளிலே
"ஞாயிற்றுக்கிழமையன்று"
அப்பம் பிட்கும்படி
கர்த்தருடைய பந்தியின்போது அப்பம் பிட்கப்பட்டு புசிக்கப்பட்டது.
அவன் தொடர்ந்து பேசினான்
"அவன் பேசுவதைத் தொடர்ந்தான்"
மேல்வீடு
இது அனேகமாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியாக இருக்கலாம்.
Acts 20:9-10
கன நித்திரையில் விழுந்தவன்
அவன் எப்பொழுதும் எழுந்திருக்கவில்லை ஆனால் பலமாக நித்திரை பண்ணிகொண்டிருந்தான்.
மூன்றாவது மாடி
தரைத்தளத்திற்கும்/முதல்மாடிக்கும் மேலே உள்ள இரண்டு மாடிகள்.
மரித்தவனாக எடுக்கப்பட்டான்
அவனுடைய நிலைமையைப் பார்க்கும்படி அவர்கள் கீழேச் சென்றபோது, அவன் மரித்திருப்பதைக் கண்டார்கள்.
அவனைத் தழுவினான்
"அவனை அணைத்துக்கொண்டான் "
பின்பு அவன் சொன்னான்
"பின்பு பவுல் சொன்னான் "
அவன் உயிரோடு இருக்கிறான்
"ஐத்திகு உயிரோடு இருக்கிறான் "
Acts 20:11-12
அவன் மாடிக்கு ஏறிப்போனான்
"பவுல் மாடிக்கு ஏறிப்போனான் "
அப்பம்பிட்டான்
"ஆகாரத்தைப் பகிர்ந்துகொண்டான் " இது அப்பத்துண்டுகளை ஜனங்களுக்கிடையே பிரித்துக்கொண்டார்கள் என்பதை உள்ளடக்கியது.
அவன் போனான்
"அவன் கடந்துபோனான் "
வாலிபன்
அனுகூலமான அர்த்தங்கள்: 1) 14 வயது நிரம்பின வாலிபன், 2) வேலைக்காரன் அல்லது அடிமை, 3) அல்லது 9 க்கும் 14க்கும் இடைப்பட்ட வயதையுடைய சிறுவன்.
Acts 20:13-14
நாங்களே சென்றோம்
"நாங்களே" என்பது கப்பலில் பயணம் செய்யாத பவுலிடமிருந்து லூக்கா மற்றும் அவனுடைய பிரயாணத் தோழர்களைப் பிரிக்கிறது மற்றும் முக்கியத்துவத்தைச் சேர்க்கிறது.
அவன் மனதாயிருந்தான்
"பவுல் விரும்பினான் "
ஆசோவிற்கு கப்பல்பயணம் செய்தோம்
ஆசோ, இன்றைய பெகராம், ஏகியான் கடலின் கரையில் அமைந்துள்ள துருக்கிக்குக் கீழே அமைந்துள்ள நகரம்.
நாங்கள் அவனைக் கூட்டிக்கொண்டோம்
"நாங்கள் " என்ற வார்த்தை லூக்காவையும், அவனோடு பயணம் செய்கிறவர்களையும் குறிக்கிறது, ஆனால் பவுலை அல்ல.
மித்திலேனேவுக்குச் சென்றோம்
மித்திலேனே, இன்றைய மித்திலினி, ஏகியான் கடலின் கரையில் அமைந்துள்ள துருக்கியில் அமைந்துள்ள நகரம்.
Acts 20:15-16
நாங்கள் அங்கிருந்து கப்பலேறிச் சென்றோம்
"நாங்கள்" என்ற வார்த்தை பவுலையும், லூக்காவையும், மற்றும் அவர்களோடு பயணம் செய்கிறவர்களையும் குறிக்கிறது.
கீயு தீவு
கீயு தீவானது ஏகியான் கடலிலுள்ள இன்றைய துருக்கியின் கடற்கரையில் உள்ள ஒரு தீவு.
நாங்கள் சாமு தீவை அடைந்தோம்
சாமு என்பது ஏகியான் கடலிலுள்ள இன்றைய துருக்கியின் கடற்கரையில் உள்ள கீயுவிற்கு தெற்கே அமைந்துள்ள தீவு. மாற்று மொழிபெயர்ப்பு: "சாமு தீவிற்கு வந்துசேர்ந்தோம்"
மிலேத்து பட்டணம்
மிலேத்து பட்டணம், மியாண்டர் ஆற்றின் வாயிலுக்கு அருகிலுள்ள மேற்கு ஆசியாவில் உள்ள துறைமுக நகரமாகும்.
பவுல் எபேசு பட்டணத்தைக் கடந்துபோகவேண்டுமென்று தீர்மானித்தான்
பவுல் மிலேத்து பட்டணத்திற்குப் போவதற்காக தொடர்ந்து தெற்கே பயணம்செய்து எபேசுவின் துறைமுக நகரத்தைக் கடந்தான்.
Acts 20:17-21
மிலேத்துவிலிருந்து
அப்போஸ்தல நடபடிகள் 20:15 ல் மிலேத்து என்பதை நீங்கள் எப்படி மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்.
ஆசியாவில் கால் வைத்தார்கள்
"இந்த ஆசியா பகுதியில் நுழைந்தார்கள் "
மனதின் தாழ்மை
"பணிவு " அல்லது "தாழ்மை"
கண்ணீருடன்
நான் கர்த்தரைச் சேவித்தபோது சில நேரங்களில் அழுதேன்.
வைத்துக்கொள்
"பிடித்துக்கொள் " அல்லது "நிறுத்திக்கொள்"
வீடுவீடாகச் செல்லுதல்
அவன் பலதரப்பட்ட வீடுகளுக்குச் சென்று ஜனங்களுக்குப் போதித்தான்.
தேவனிடத்திற்கு மனந்திரும்பு
"அவர்களுடைய பாவங்களிலிருந்து தேவனிடத்திற்கு திரும்பு "
Acts 20:22-24
பவுல் தொடர்ந்து பேசுகிறார்.
எருசலேமுக்கு பரிசுத்த ஆவியில் கட்டுண்டவனாக
"எருசலேமுக்கு பயணிப்பதற்காக பரிசுத்த ஆவியினாலே நிர்பந்தம்பண்ணப்பட்டேன்"
பரிசுத்த ஆவியானவர் எனக்குத் தெரிவித்தார்
"பரிசுத்த ஆவியானவர் இந்த எச்சரிப்புகளை எனக்குத் தெரியப்படுத்துகிறார் "
கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறது
"நான் கட்டப்பட்டு சிறையிலடைக்கப்படவும் சரீர தண்டனைகளை அனுபவிக்கவும் இருக்கிறேன்"
என்னுடைய ஓட்டத்தை முடிப்பது
"நான் செய்யும்படிக்கு தேவன் எனக்காக வைத்திருக்கும் ஊழியத்தைச் செய்துமுடிப்பது"
சாட்சியாய் இரு
"சாட்சி கொடு" அல்லது "சாட்சியளி"
Acts 20:25-27
பவுல் தொடர்ந்து பேசுகிறார்.
நான் அறிந்திருக்கிறேன், நீங்கள் எல்லோரும்
"நீங்கள் எல்லோரும், நான் அறிந்திருக்கிறேன்"
தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து நான் சென்று பிரசங்கித்தவர்கள்
"தேவனுடைய ராஜ்யத்தைப்பற்றியச் செய்தியை நான் பிரசங்கித்தவர்கள் "
என்னுடைய முகத்தை இனி பார்க்கமாட்டீர்கள்
"இப்பொழுதிலிருந்து என்னை எப்பொழுதும் பார்க்கமாட்டீர்கள் "
எந்த மனுஷனுடைய இரத்தப்பலிக்கும் நான் நீங்கலாயிருக்கிறேன்
"தேவனால் குற்றவாளியாக நியாயந்தீர்க்கப்படும் யாருக்காகவும் நான் குற்றப்படுத்தப்படமாட்டேன்"
Acts 20:28-30
பவுல் தொடர்ந்து பேசுகிறார்.
மற்றும் மந்தையை விட்டுவிடாதபடிக்கு... மந்தை முழுவதையும் குறித்து
இது விரிவாக்கப்பட்ட உருவகமாகும். சபையின் தலைவர்கள், மேய்ப்பன் தன்னுடைய ஆட்டுமந்தையைப் பராமரித்து ஓநாய்களிடமிருந்து பாதுகாப்பதைப்போல அவர்களண்டையில் இருக்கிற ஜனங்களைப் பராமரித்து எதிரிகளிடமிருந்து பாதுகாக்கவேண்டும்.
அவருடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட கர்த்தருடைய சபை
"கிறிஸ்து சிலுவையிலே தன்னுடைய இரத்தத்தைச் சிந்தி வாங்கிய ஜனங்கள்"
சீஷர்களைத் தங்களிடத்திற்கு இழுத்துக்கொள்ளுதல்
"கிறிஸ்துவைப் பின்பற்றுகிற ஜனங்களை இணங்கச்செய்து, தங்களுடைய சொந்த தவறான போதனைகளைப் பின்பற்றச்செய்வது"
Acts 20:31-32
பவுல் தொடர்ந்து பேசுகிறார்.
ஜாக்கிரதையாக இரு
"விழிப்பாகவும், கவனமாகவும் இரு " அல்லது "விழித்திரு " அல்லது கவனமாய் இரு "
நினைவுகூறு
"தொடர்ந்து நினைத்துக்கொண்டிரு" அல்லது "மறந்துவிடாதே."
ஜாக்கிரதையாக இரு. நினைவுகூறு
இவைகளை 1) "ஜாக்கிரதையாக இருந்து நினைத்துக்கொண்டிரு" அல்லது 2) "நினைத்துக்கொண்டிருப்பதால் ஜாக்கிரதையாக இரு" அல்லது 3) "நினைப்பதினால் ஜாக்கிரதையாக இரு" என்று மொழிபெயர்க்கலாம்.
மூன்று வருடங்கள் நான் புத்தி சொல்லுவதை நிறுத்தவில்லை
பவுல் அவர்களுக்கு தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் போதிக்கவில்லை, ஆனால் மூன்று வருட காலங்களில் போதித்தார்.
புத்தி சொல்லுவதை நான் நிறுத்தவில்லை
அனுகூலமான அர்த்தங்கள் 1) "நான் எச்சரிப்பதை நிறுத்தவில்லை" அல்லது 2) "நான் சீர்படுத்துவதோடு உற்சாகப்படுத்துவதை நிறுத்தவில்லை"
Acts 20:33-35
பவுல் தொடர்ந்து பேசுகிறார்.
நான் யாருடைய வெள்ளியையும் இச்சிக்கவில்லை
"நான் யாருடைய வெள்ளிமீதும் ஆசைப்படவில்லை" அல்லது "நான் யாருடைய வெள்ளியையும் எனக்கென்று விரும்பவில்லை"
மனிதனுடைய வெள்ளி, பொன், அல்லது வஸ்திரம்
வஸ்திரம் என்பது பொக்கிஷமாகக் கருதப்பட்டது; எவ்வளவு அதிகமாக உங்களுக்கு இருந்ததோ, நீங்கள் அவ்வளவு ஐசுவரியவான்கள்.
நீங்கள், நீங்களே
"நீங்களே " என்ற வார்த்தை வலியுறுத்தலைச் சேர்ப்பதற்காக இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கைகளே என்னுடைய சொந்தத் தேவைகளைச் செய்தது
பணம் சம்பாதித்து என்னுடைய சொந்த செலவுகளுக்காகச் செலுத்துவதற்கு, என்னுடைய சொந்தக் கைகளினாலே வேலை செய்தேன்.
வேலை செய்வதினால் பலவீனருக்கு உதவுவது
"தங்களுக்காக பணம் சம்பாதிக்க இயலாத ஜனங்களுக்கு உதவுவதற்காக பணம் பெறும்படி வேலை செய்யுங்கள் "
வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்
ஒருவன் கொடுக்கும்பொழுது தேவனுடைய தயவைப் பெற்றுக்கொள்கிறான் மற்றும் தேவனுடைய சந்தோஷத்தை அனுபவிக்கிறான்.
Acts 20:36-38
பவுலின் கழுத்தைக் கட்டிக்கொண்டு
"அவனை நெருக்கமாக அணைத்துக்கொண்டார்கள்" அல்லது "அவர்களுடைய கரங்களால் அவனைச் சுற்றிக் கட்டிக்கொண்டார்கள்"
அவனை முத்தமிட்டார்கள்
மத்திய கிழக்கிலே ஒருவனுடைய கன்னத்தில் முத்தமிடுவது என்பது சகோதர அல்லது சிநேகித அன்பை வெளிப்படுத்துவதாகும்.
அவர்கள் அவனுடைய முகத்தை இனி மறுபடியும் பார்க்கப்போவதில்லை
"அவர்கள் பவுலை இந்த பூமியில் இனி மீண்டும் பார்க்கப்போவதில்லை." "அவனுடைய முகம்" என்பது பவுலை ஒரு நபராகக் குறிப்பிடுவதற்காக இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
Acts 21
Acts 21:1-2
நாங்கள் பிரிந்தோம்
"நாங்கள்" என்ற வார்த்தை லூக்கா, பவுல் மற்றும் அவர்களோடு பயணம் செய்பவர்களையும் குறிக்கிறது.
நாங்கள் கோஸ் பட்டணத்திற்கு நேராகக் கடந்துச் சென்றோம்
"நாங்கள் நேராக கோஸ் பட்டணத்திற்குச் சென்றோம்" அல்லது "நாங்கள் நேரடியாக கோஸ் பட்டணத்திற்குச் சென்றோம்"
கோஸ் பட்டணம்
கோஸ் பட்டணம் என்பது தெற்கு ஏகியன் கடல் பிரதேசத்திலுள்ள இன்றைய துருக்கியின் கடற்கரையில் அமைந்துள்ள கிரேக்கத்தீவு.
ரோது பட்டணம்
ரோது பட்டணம் என்பது கோஸ் பட்டணத்தின் தெற்கேயும், கிரேத்துவின் வடகிழக்கிலும், தெற்கு ஏகியன் கடல் பிரதேசத்திலுள்ள இன்றைய துருக்கியின் கடற்கரையில் அமைந்துள்ள கிரேக்கத்தீவு.
பத்தாரா பட்டணம்
பத்தாரா பட்டணம் என்பது மத்தியத்தரைக்கடலில் உள்ள ஏகியன் கடலின் தெற்கே இன்றைய துருக்கியின் தென்மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள நகரம்.
Acts 21:3-4
நாங்கள் வந்தோம்
"நாங்கள்" என்ற வார்த்தை லூக்கா, பவுல் மற்றும் அவர்களோடு பயணம் செய்பவர்களையும் குறிக்கிறது.
அதை இடது புறமாக விட்டு
"இடது புறத்தில் விட்டு, தீவைக் கடந்துபோனோம் "
இந்த சீஷர்கள் ஆவியின் மூலமாக பவுலுக்குச் சொன்னார்கள்
"இந்த சீஷர்கள் தேவன் அவர்களுக்கு வெளிப்படுத்தினதைப் பவுலுக்குச் சொன்னார்கள்."
Acts 21:5-6
நாங்கள் நாட்களைக் கழித்து முடித்தபோது
"புறப்படவேண்டிய நேரம் வந்தபொழுது"
அவர்கள் எல்லோரும்
"அவர்கள் " என்ற வார்த்தை தீருபட்டணத்திலிருந்து வந்த விசுவாசிகளைக் குறிக்கிறது. "அவர்கள் " என்பது எல்லா விசுவாசிகளின் பெண்கள் மற்றும் பிள்ளைகளை உள்ளடக்கியது என்று பவுல் சொல்லிப்போகிறார்.
நாங்கள் எல்லோரும் விடைபெற்றுக்கொண்டோம்
இது நண்பர்களின் விடைபெறுதல்.
Acts 21:7-9
நாங்கள் எங்கள் பிரயாணத்தை முடித்தபோது
"நாங்கள்" என்ற வார்த்தை லூக்கா, பவுல் மற்றும் அவர்களோடு பயணம் செய்பவர்களையும் குறிக்கிறது.
நாங்கள் பித்தொலோமாய் பட்டணத்திற்கு வந்துசேர்ந்தோம்
பித்தொலோமாய் என்பது தீரு, லெபனோன் ஆகியவற்றிற்கு தெற்கே அமைந்துள்ள பட்டணம். பித்தொலோமாய் என்பது இன்றைய அக்ரே, இஸ்ரேல்.
ஏழுபேரில் ஒருவன்
முன்பதாக அப்போஸ்தல நடபடிகள் 6:5 ல் ஏழு மனிதர்களில் ஒருவன் விதவைகளுக்கு உணவுகள் மற்றும் உதவிகளைக் கொடுக்கவும் தெரிந்துகொள்ளப்பட்டான்.
இந்த மனிதன்
"பிலிப்பு"
தீர்க்கதரிசனம் உரைத்த நான்கு கன்னிப்பெண்கள்
"தேவனிடமிருந்து தொடர்ச்சியாக செய்திகளைப்பெற்று அதைத் தெரிவிப்பவர்களென்று அறியப்பட்ட மக்களாகிய நான்கு கன்னிப்பெண்கள்"
Acts 21:10-11
ஒரு தீர்க்கதரிசி
இந்த நபர் தேவனிடமிருந்து தொடர்ச்சியாக செய்திகளைப்பெற்று அதைத் தெரிவிப்பவர்களென்று அறியப்பட்டவர்.
அகபு என்னும் பெயர் கொண்டவன்
அகபு யூதேயாவிலிருந்து வந்த மனிதன்.
பவுலின் கச்சையை எடுத்து
"பவுலுடைய இடுப்பிலிருந்து கச்சையை உருவினான்"
அதினால் அவன் கட்டிக்கொண்டான்
"பவுலுடைய கச்சையைப் பயன்படுத்தி அவன் தன்னைக் கட்டிக்கொண்டான்"
அவனை ஒப்புக்கொடு
"அவனை விட்டுவிடு" அல்லது "அவனைக் கொடுத்துவிடு"
கைகளில்
"சட்டப்படியான பாதுகாப்பிற்குள்." புறஜாதியார் பவுலைத் தங்கள் கரங்களினால் பிடித்து கைது செய்வார்கள்.
Acts 21:12-14
நீங்கள் என்ன செய்கிறீர்கள், அழுது என் இருதயத்தை உடைக்கிறீர்கள்?
அவன் எருசலேமிற்குப் போகாமலிருக்க அவனைத் தூண்டுவதை அவர்கள் நிறுத்தும்படி பவுல் விரும்பினான், ஏனென்றால் அவர்கள் அவர்களுடைய கண்ணீரினால் அவனை வருத்தப்படுத்தினார்கள். மாற்று மொழிபெயர்ப்பு: "நீங்கள் அழுது என் இருதயத்தை உடையச் செய்வதை நிறுத்துங்கள்."
கர்த்தருடைய சித்தம் ஆகக்கடவது
"எருசலேமில் பவுலுக்கான தேவனுடைய திட்டம் எதுவானாலும் நாங்கள் இப்பொழுது ஏற்றுக்கொள்கிறோம்" அல்லது "எருசலேமில் கர்த்தர் பவுலுக்காக என்ன விரும்புகிறாரோ அதை ஏற்றுக்கொள்ள இப்பொழுது நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம்"
Acts 21:15-16
நாங்கள் எங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டோம்
"நாங்கள்" என்ற வார்த்தை லூக்கா, பவுல் மற்றும் அவர்களோடு பயணம் செய்பவர்களையும் குறிக்கிறது.
அவர்கள் அவர்களோடு கூட்டிக்கொண்டு வந்தார்கள்
"அவர்கள்" என்கிற வார்த்தை செசரியாவிலுள்ள சில சீஷர்களைக் குறிக்கிறது.
சீப்புருதீவானாகிய மினாசோன்
மினாசோன் என்பவன் சீப்புரு தீவிலுள்ள மனிதன்.
ஒரு பழைய சீஷன்
"முதல் விசுவாசிகளின் கூட்டத்திலிருந்து வந்த ஒரு சீஷன்"
Acts 21:17-19
சகோதரர்கள் எங்களை ஏற்றுக்கொண்டார்கள்
இவர்கள், மகா உபத்திரவம் துவங்கினப்பின்பு எருசலேமிலேயே இருந்த மீதமுள்ள யூத விசுவாசிகளாவார்கள்.
அவன் அவர்களை வாழ்த்தினபோது, அவன் விவரித்துச் சொன்னான்
"பவுல் மூப்பர்களை வாழ்த்தினபின்பு, அவன் விவரித்தான்" அல்லது "மூப்பர்களை வாழ்த்தினபின்பு, பவுல் விவரித்தான் "
அவனுடைய ஊழியம்
"பவுலினுடைய ஊழியம் "
தேவன் செய்த காரியங்களை அவன் ஒவ்வொன்றாய் விவரித்துச்சொன்னான்
"தேவன் செய்த காரியங்களின் விளக்கமான விவரத்தினை பவுல் விவரித்துச்சொன்னான்"
Acts 21:20-21
அவர்கள் அதைக் கேட்டபோது, அவர்கள் தேவனைத் துதித்து, அவர்கள் அவனுக்குச் சொன்னார்கள்,
"மூப்பர்கள் அதைக் கேட்டபோது, மூப்பர்கள் தேவனைத் துதித்தார்கள், மூப்பர்கள் பவுலுக்குச் சொன்னார்கள்,"
அவர்களெல்லோரும் வைராக்கியமுள்ளவர்கள்
"யூத விசுவாசிகள் அனைவரும் உறுதியானவர்கள்"
அவர்களுக்குச் சொல்லப்பட்டது
"மக்கள் யூத விசுவாசிகளுக்குச் சொன்னார்கள்"
நீ அவர்களுக்குச் சொல்
"நீ யூதர்களுக்குச் சொல் "
Acts 21:22-24
எருசலேம் மூப்பர்கள் தொடர்ந்து பவுலோடு பேசுகிறார்கள்.
நாங்கள் என்ன செய்யவேண்டும்?
"நாங்கள்" என்ற வார்த்தை மூப்பர்களைக் குறிக்கிறது.
பிரமாணம் செய்துகொண்ட நான்கு மனிதர்கள்
இந்த விதமான பிரமாணம், ஒரு மனிதன் குறிக்கப்பட்ட காலம்வரைக்கும் மது அருந்தாமலும், தங்களுடைய மயிரை வெட்டாமலும் இருப்பது. மாற்று மொழிபெயர்ப்பு: "தேவனிடத்தில் வாக்குப்பண்ணிக்கொண்ட நான்கு மனிதர்கள்."
அவர்களுடைய செலவை அவர்களுக்காகச் செலுத்தும்
ஆண் அல்லது பெண் செம்மறியாட்டுக் குட்டி, செம்மறிக்கடா, தானியம் மற்றும் பானபலிகள் வாங்குவதற்கு ஆகும் செலவுகள். மாற்று மொழிபெயர்ப்பு: "அவர்களுக்கு என்ன தேவைப்படுமோ, அவைகளுக்கு பணம் செலுத்து."
நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்
"மோசேயினுடைய நியாயப்பிரமாணத்திற்கும், மற்றும் யூதருடைய எல்லா வழக்கத்திற்கும் ஏற்றாற்போல வாழ்க்கை வாழ்வது"
Acts 21:25-26
எருசலேம் மூப்பர்கள் தொடர்ந்து பவுலோடு பேசுகிறார்கள்.
நாங்கள் எழுதினோம்
"நாங்கள்" என்ற வார்த்தை மூப்பர்களைக் குறிக்கிறது.
நெருக்குண்டது
"இரத்தம் சிந்தப்படாமல் ஆகாரத்திற்காக கொல்லப்பட்ட மிருகங்கள்"
அவர்களோடு அவனையும் சுத்திகரிப்பு செய்தல்
ஆலயப் பகுதிக்குள் நுழைவதற்குமுன்பு யூதர்கள் சடங்குகள் மற்றும் சம்பிரதாயத்தின்படி சுத்திகரிக்கப்படவேண்டும். இது புறஜாதிகளோடு தொடர்பு வைத்துக்கொள்ளும் யூதர்களுக்கு செய்யப்படவேண்டியது.
சுத்திகரிப்பின் நாட்கள்
இது மனிதர்கள் பண்ணின பிரமாணங்களோடு தொடர்புடைய தனிப்பட்ட சுத்திகரிப்பு முறையாகும். ஆலய பகுதிக்குள் நுழைவதற்காக நிறைவேற்றுவதற்குத் தேவையான சுத்திகரிப்பு முறைகள்
பலிகள் செலுத்திமுடிக்கும் வரைக்கும்
"அவர்கள் மிருகங்களைப் பலிகளாகப் படைக்கும் வரைக்கும்"
Acts 21:27-29
ஜனங்களெல்லோரையும் தூண்டிவிட்டனர்
"எதிர்க்கும்படிக்கு திரளான மக்கள் கூட்டத்தை ஏவிவிட்டனர் "
அவன்மேல் கைகளைப் போட்டு
"சரீரரீதியில் அவனை இழுத்து"
மேலும், இவன் தேவாலயத்திற்குள் கிரேக்கரையும் கூட்டிக்கொண்டுவந்தான்
எருசலேம் தேவாலயத்தின் உட்பிரகாரத்தில் யூத ஆண்கள் மாத்திரமே நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.
துரோப்பீமு
யூதர்களுக்கு மாத்திரமே என்னப்பட்ட உள் ஆலயப் பகுதியிலே கிரேக்க மனிதனாகிய இவனைத்தான் பவுல் கூட்டிக்கொண்டுவந்ததற்காக குற்றம்சாட்டப்பட்டான்.
Acts 21:30-31
நகரம் முழுவதும் கலக்கமுற்றது
"பட்டணத்தில் இருந்த அநேக ஜனங்கள் பவுலின் மீது கோபமடைந்தார்கள் "
உடனே கதவுகள் பூட்டப்பட்டது
ஜனக்கூட்டத்தினர் பவுலை வெளியே இழுத்துக்கொண்டுபோனவுடனே ஆலயத்தைக் கவனித்துக்கொள்கிறவர்கள் தேவாலயத்தின் கதவுகளை சீக்கிரமாக அடைத்தனர். "யூதர்கள் உடனே தேவாலயக் கதவுகளை அடைத்தனர் "
தலைமை சேனாபதி
600 போர்ச்சேவகர்களுக்கு இராணுவத்தலைவன் அல்லது அதிகாரி.
எருசலேம் முழுவதும் கலக்கமாயிருந்தது
"எருசலேமிலிருந்த அநேக ஜனங்கள் குழப்பத்தில் இருந்தனர் " இது, இந்த சம்பவத்தினாலே திரளான கூட்டம் கலங்கிப்போனார்கள் என்பதை அறிவுறுத்தும் மிகைப்படுத்திக்கூறுவதாகும்.
Acts 21:32-33
உடனே அவன் கூட்டிக்கொண்டு
"உடனே தலைமை சேனாபதி"
கீழே ஓடி
கோட்டையிலிருந்து, பிரகாரத்திற்குச் செல்ல அங்கே பல மாடிகள் இருந்தன.
தலைமை சேனாபதி
600 போர்ச்சேவகர்களுக்கு இராணுவத்தலைவன் அல்லது அதிகாரி.
பவுலைப் பிடித்தனர்
"பவுலைக் கட்டினார்கள்" அல்லது "பவுலைக் கைதுசெய்தனர் "
Acts 21:34-36
சேனாபதி
600 போர்ச்சேவகர்களுக்கு இராணுவத்தலைவன் அல்லது அதிகாரி.
கோட்டைக்குள்ளே
கோட்டையானது இராணுவத்தைப் பயன்படுத்தி பலமாய் பாதுகாக்கப்பட்டக் கட்டிடம்.
அவன் படிகளில் வந்தபோது, அவன் தூக்கிக்கொண்டுப்போகப்பட்டான்
"பவுல் படிகள்மேல் ஏறினபோது, போர்ச்சேவகர்கள் அவனைத் தூக்கிக்கொண்டுபோனார்கள்" போர்ச்சேவகர்கள் சரீரரீதியாக பவுலை மேலே தூக்கிக்கொண்டு போனார்கள்.
அவனை அகற்றும்
"அவனைக் கொலை செய்யும்." பவுலைக் கொலைசெய்யக் கேட்பதற்காக நாகரீகமான மொழியைப் பயன்படுத்துகிறார்கள்.
Acts 21:37-38
பவுல் கொண்டுபோகப்படுகையில்
"போர்ச்சேவகர்கள் பவுலைக் கொண்டுபோகிற சமயத்தில்" அல்லது "போர்ச்சேவகர்கள் பவுலைக் கொண்டுபோவதற்கு ஆயத்தமாயிருந்தபோது"
கோட்டை
21:34 ம் வசனத்தில் இதை நீங்கள் எப்படி மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்.
தலைமை சேனாபதி
600 போர்ச்சேவகர்களுக்கு இராணுவஅதிகாரி.
"நீ கிரேக்கு பாஷை பேசுவாயா? நீ இந்த நாட்களுக்குமுன்னே கலகம் உண்டாக்கி, நாலாயிரம் கொலைபாதகரை வனாந்திரத்திற்குக் கொண்டுபோன எகிப்தியன் அல்லவா?"
தலைமை சேனாபதி தன்னுடைய ஆச்சரியத்தை வெளிப்படுத்துவதற்காக இந்தக் கேள்விகளைப் பயன்படுத்துகிறார். பவுல் யாரென்று அவன் நினைத்தானோ, அவன் இல்லை.
நீ எகிப்தியன் அல்லவா
பவுலுடைய வருகைக்கு சற்று முன்பதாக, பெயர் அறியப்படாத ஒருவன் எகிப்திலிருந்து வந்து எருசலேமிலே ரோமுக்கு எதிராக கலகத்தை ஏற்படுத்தினான். பின்பு அவன் "வனாந்திரத்திற்குத்" தப்பிப்போனான், பவுல் அந்த மனிதனாக இருப்பானோ என்று அதிகாரிகள் ஆச்சரியப்பட்டார்கள்.
நாலாயிரம் கொலைபாதகர்கள்
"தங்களோடு இணங்கிப்போகாத மற்றவர்களை உபத்திரவப்படுத்தி கொலைசெய்த நாலாயிரம் மனிதர்கள்"
Acts 21:39-40
நான் உம்மைக் கேட்கிறேன்
"நான் உம்மை வேண்டிக்கொள்கிறேன்" அல்லது "நான் உம்மிடம் மன்றாடுகிறேன்"
எனக்கு இடம்கொடும்
"தயவுசெய்து எனக்கு உத்தரவு கொடும்" அல்லது "தயவுசெய்து என்னை அனுமதியும்"
சேனாபதி
600 போர்ச்சேவகர்களுக்கு இராணுவஅதிகாரி.
பவுல் படிகளின்மேல் நின்று
இது கோட்டைக்குப் போவதற்கான மாடிப்படிகளைக் குறிக்கிறது.
Acts 22
Acts 22:1-2
பவுல் ஜனங்களோடு பேசுகிறார்.
சகோதரரே, பிதாக்களே
இது, பவுல் தன்னை ஒத்த வயதையுடையவர்களும் மூத்தவர்களுமான மனிதர்களை அணுகுகின்ற நாகரீகமான வழியாகும்.
என்னுடைய நியாயத்தைக் கேளுங்கள்
"தயவுசெய்து என்னுடைய நியாயத்திற்கு செவிகொடுங்கள்"
நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லுவது
"நான் உங்களுக்குமுன் வைப்பது"
எபிரேயபாஷை
"அவர்களுடைய எபிரேயபாஷை"
Acts 22:3-5
பவுல் தொடர்ந்து ஜனங்களோடு பேசுகிறார்.
இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்திலே கற்பிக்கப்பட்டேன்
"இங்கு எருசலேமிலே போதகராகிய கமாலியேலின் மாணவன்"
நம்முடைய முற்பிதாக்களுடைய நியாயப்பிரமாணத்தின் திட்டமான வழியின்படி நான் போதிக்கப்பட்டேன்
"நம்முடைய முற்பிதாக்களுடைய நியாயப்பிரமாணத்தின் திட்டமான வழியின்படி அவர்கள் எனக்குப் போதித்தார்கள்" அல்லது "நான் பெற்றுக்கொண்ட போதனைகள் நம்முடைய முற்பிதாக்களுடைய நியாயப்பிரமாணத்தின் விளக்கத்தின்படியே அமைந்ததாகும்"
நான் தேவனுக்காக வைராக்கியமுள்ளவனாக இருக்கிறேன்
"தேவனுடைய சித்தமென்று நான் விசுவாசிக்கிறவைகளை செய்யும் கிரியையும் பலமான உணர்வும் என்னிடம் உண்டு" அல்லது "நான் என்னுடைய தேவஊழியத்தைக் குறித்து வாஞ்சையுள்ளவனாக இருக்கிறேன் "
இன்றைக்கு நீங்களெல்லோரும் இருக்கிறதுபோலவே
"இன்றைக்கு நீங்களெல்லோரும் இருக்கிறவிதமாகவே" அல்லது "இன்றைக்கு உங்களைப்போல." பவுல் தன்னை கூட்டத்தாரோடு ஒப்பிடுகிறார்.
இந்த மார்க்கம்
"இந்த மார்க்கம்" என்பது "பெந்தேகொஸ்தே"வைத்தொடர்ந்து எருசலேமிலுள்ள உள்ளூர் சபை விசுவாசிகளுக்குக் கொடுக்கப்பட்ட பெயராகும்.
மரணம் வரையிலும்
அந்த மார்க்கத்தைப் பின்பற்றின மக்களைக் கொலைசெய்ய பவுல் விருப்பமாக இருந்தான்.
சாட்சியாயிருங்கள்
"சாட்சி கொடுங்கள்" அல்லது "சாட்சியளி"
நான் அவர்களுடமிருந்து நிருபங்களைப் பெற்றுக்கொண்டேன்
"பிரதான ஆசாரியர்கள் மற்றும் மூப்பர்களிடமிருந்து நான் நிருபங்களைப் பெற்றுக்கொண்டேன்"
நான் கட்டித் திரும்பக் கொண்டுவரும்படி இருந்தேன்
"கட்டிக் கொண்டுவரும்படி அவர்கள் எனக்கு ஆணையிட்டார்கள் "
Acts 22:6-8
பவுல் தொடர்ந்து ஜனங்களோடு பேசுகிறார்.
Acts 22:9-11
பவுல் தொடர்ந்து பேசுகிறார்.
அவருடைய சத்தம்
"இயேசுவினுடைய சத்தம்"
அந்த ஒளியினுடைய பிரகாசத்தினாலே என்னால் பார்க்கமுடியாமல் போனது
"அந்த ஒளியினுடைய பிரகாசத்தினாலே நான் பார்வையற்றுப்போனேன் "
Acts 22:12-13
பவுல் தொடர்ந்து கோட்டையின் படிகளிலிருந்து யூதக்கூட்டத்தினருடன் பேசுகிறார்.
வேதப்பிரமாணத்தின்படி பக்தியுள்ளவன்
தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றுவதைக்குறித்து அனனியா மிகுந்த கரிசனையுள்ளவனாக இருந்தான்.
நன்றாக பேசப்பட்டது
"மற்றவர்கள் மத்தியில் நல்ல மதிப்பையுடைய"
அந்த நேரமே
"அந்த சமயத்தில்" அல்லது "உடனே." இது, உடனடியாக ஏதோ நடந்தது என்று பொருள்படும் மரபுச்சொல்.
Acts 22:14-16
பவுல் தொடர்ந்து பேசுகிறார்.
பின்பு அவன் சொன்னான்
"பின்பு அனனியா சொன்னான் "
அவருடைய சித்தம்
"தேவன் திட்டமிடுவதும் மற்றும் சம்பவிக்கவிருப்பதும்"
நீங்கள் ஏன் தாமதிக்கிறீர்கள்?
மாற்று மொழிபெயர்ப்பு: "காத்திருக்கவேண்டாம்!" அல்லது "தாமதிக்கவேண்டாம்!" பவுல் ஞானஸ்நானம் பெறவேண்டும் என்று உற்சாகப்படுத்துவதற்காக இந்த அணி இலக்கணக்கேள்வி பயன்படுத்தப்பட்டது
உன் பாவங்கள் போகக் கழுவப்பட்டு
ஒருவனுடைய சரீரத்தைக் கழுவுதல் கரைகளை நீக்குவதைப்போல, மன்னிக்கப்படுவதற்காக இயேசுவினுடைய நாமத்தை அழைப்பது, ஒருவனுடைய உள்ளார்ந்த மனிதனைப் பாவத்திலிருந்து சுத்திகரிக்கிறது. "உங்களுடைய பாவங்களுக்காக மன்னிப்பைக் கேளுங்கள்."
Acts 22:17-18
பவுல் தொடர்ந்து ஜனங்களோடு பேசுகிறார்.
நான் ஞானதிருஷ்டியடைந்தேன்
"எனக்கு தரிசனம் தோன்றியது" அல்லது "தேவன் மனிதனுக்கு தரிசனம் தந்தார் "
அவர் எனக்குச் சொல்வதைப் பார்த்தேன்
"இயேசு எனக்குச் சொல்வதைப் பார்த்தேன்"
அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்
"எருசலேமில் வாழ்கிறவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் "
Acts 22:19-21
பவுல் தொடர்ந்து பேசுகிறார்.
அவர்களே அறிந்திருக்கிறார்கள்
எருசலேமிலுள்ள விசுவாசிக்காத யூதர்கள்.
அவர்களை அடித்து
"அடிகளினாலே அவர்கள் தண்டிக்கப்படும்படிக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருந்தது"
ஒவ்வொரு ஜெபஆலயம்
எருசலேமிலெங்குமுள்ள ஜெபஆலயங்களில் யூதவிசுவாசிகள் யாராவது பங்குபெறுகிறார்களா என்று பவுல் தேடினான்.
ஸ்தேவானுடைய இரத்தம்...சிந்தப்பட்டது
ஒருவன் மரிக்கும்வரைக்கும் கொடூரமாக அடிக்கப்படுவதற்கு இது விளக்கமாயிருக்கிறது.
Acts 22:22-24
இப்படிப்பட்டவனைப் பூமியிலிருந்து அகற்று
"அவனைக் கொலைசெய்யுங்கள்"
பவுலைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான்
"பவுலைக் கொண்டுவரும்படி போர்ச்சேவகர்களுக்குக் ஆணையிட்டான்"
கோட்டை
21:34 ம் வசனத்தில் இதை நீங்கள் எப்படி மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்.
அவனே
"சேனாபதியாகிய அவனே"
Acts 22:25-26
சவுக்கு
இவைகள் தோல் வார் அல்லது மிருகத்தின் தோல்.
ரோமனும் நியாயம் விசாரிக்கப்படாதவனுமாயிருக்கிற மனிதனை அடிக்கிறது உங்களுக்கு நியாயமா?
பவுலை அடிப்பதைக்குறித்து நூற்றுக்குஅதிபதி தன்னைத்தானே கேள்வி கேட்கச்செய்யும்படிக்கு இந்த அணி இலக்கணக்கேள்வி பயன்படுத்தப்பட்டது. மாற்று மொழிபெயர்ப்பு: "ரோமனும் நியாயம் விசாரிக்கப்படாதவனுமாயிருக்கிற மனிதனை அடிக்கிறது உங்களுக்கு நியாயமில்லை!"
"நீ என்ன செய்யப்போகிறாய்?"
அவன் பவுலை அடிக்கவேண்டுமா என்பதைக்குறித்து சேனாபதியைச் சிந்திக்கச் செய்ய இந்த அணி இலக்கணக்கேள்வி பயன்படுத்தப்பட்டது. "நீ இதைச் செய்யக்கூடாது!"
Acts 22:27-29
அவனிடத்தில் சொன்னான்
"பவுலிடத்தில் சொன்னான்"
நான் குடியுரிமையைச் சம்பாதித்தேன்
"நான் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டேன்" அல்லது "நான் குடிமகனானேன்"
"நான் ரோமக் குடிமகனாகப் பிறந்தேன்"
"நான் ரோமக் குடிமக்களின் குடும்பத்தில் பிறந்ததினால், நான் ரோமக் குடிமகனாக இருக்கிறேன்."
அங்கே இருந்த மனிதர்கள்
"திட்டமிட்டிருந்த மனிதர்கள்" அல்லது "ஆயத்தமாகிக்கொண்டிருந்த மனிதர்கள் "
Acts 22:30
தலைமை சேனாபதி
600 போர்ச்சேவகர்களின் இராணுவஅதிகாரி.
அவன் பவுலைக் கீழேக் கொண்டுவந்தான்
கோட்டையிலிருந்து, அங்கே தேவாலய பிரகாரங்களுக்குச் செல்வதற்காக கீழேச்செல்லும் படிக்கட்டுகள் இருந்தன.
Acts 23
Acts 23:1-3
பிரதான ஆசாரியனாகிய அனனியா
(பெயர்களின் மொழிபெயர்ப்பைப் பார்க்கவும்)
வெள்ளையடிக்கப்பட்ட சுவர்
ஒரு சுவர் சுத்தமாகத் தெரியும்படிக்கு வெள்ளை வர்ணம் பூசுவது என்பது பழக்கத்தில் உள்ள ஒன்று. அழகாய்த் தோன்றுவதற்காக சுவர் வெள்ளையடிக்கப்பட்டிருக்கிறது, ஆகவே ஒருவன் முழுவதும் பொல்லாத எண்ணங்களை வைத்துக்கொண்டு பார்ப்பதற்கு ஒழுக்கத்தில் சிறந்தவனாகத் தோன்றலாமா. # அடிக்கப்படும்படி எனக்குக் கட்டளையிடு
"என்னை அடிக்கும்படிக்கு ஜனங்களுக்கு கட்டளையிடு" அல்லது "என்னை அடிக்கும்படிக்கு இந்த மனிதர்களுக்கு கட்டளையிடு"
Acts 23:4-5
தேவனுடைய பிரதான ஆசாரியனை இப்படித்தான் நிந்திப்பாயா
பவுல் சொன்னதற்காக அந்த மனிதர்கள் அவனைத் திட்டினார்கள். மாற்று மொழிபெயர்ப்பு: "தேவனுடைய பிரதான ஆசாரியனை நிந்திக்காதே!"
சகோதரரே, இவர் பிரதான ஆசாரியரென்று எனக்குத் தெரியாது
அனுகூலமான அர்த்தங்கள் 1) "பவுலுக்குத் தெரியவில்லை, ஏனென்றால் இவன் செய்ததுபோல, ஒரு பிரதான ஆசாரியன் இப்படி நடந்திருக்கக்கூடாது" அல்லது 2) "பவுல் நீண்ட நாட்களாக எருசலேமிற்குப் புறம்பே இருந்ததினால் புதிய பிரதான ஆசாரியன் நியமிக்கப்பட்டதை அவன் அறியாமலிருந்தான்"
Acts 23:6-8
நான் நியாயம் விசாரிக்கப்படுகிறேன்
"நீங்கள் என்னை நியாயந்தீர்க்கிறார்கள்"
கூட்டம் இரண்டாகப் பிரிந்தது
"சபையின் மக்கள் சம்மதிக்கவில்லை "
உயிர்த்தெழுதல் இல்லை, தேவதூதர்கள் இல்லை மற்றும் ஆவிகளும் இல்லை
அனுகூலமான அர்த்தங்கள் 1) அவர்கள் உயிர்த்தெலுதலையும், தூதர்களையும், ஆவிகளையும் நம்பவில்லை. அல்லது 2) தேவன் மரித்துப்போன ஜனங்களைத் தூதர்களாக அல்லது ஆவிகளாக உயிர்ப்பிக்கமாட்டார்.
Acts 23:9-10
"ஒரு ஆவி அல்லது ஒரு தூதன் இவனுடனே பேசினால் என்ன?"
ஆவிகளும் தூதர்களும் இருக்கின்றன, மற்றும் அவைகள் மக்களோடு பேசமுடியும் என்று உறுதியாகச் சொல்வதினால் பரிசேயர்கள் சதுசேயர்களைக் கடிந்துகொள்ளுகிறார்கள். மாற்று மொழிபெயர்ப்பு:"ஒருவேளை ஆவியோ அல்லது தூதனோ அவனுடன் பேசியிருக்கலாம்."
பவுல் அவர்களால் பீறுண்டுபோவான்
"அவர்கள் அவனுக்கு சரீரரீதியாக மிகப்பெரிய தீங்கை உண்டுபண்ணுவார்கள் "
அவனைக் கட்டாயப்படுத்தி இழுத்துச்செல்
"பவுலை இழுத்துச்செல்ல சரீர பெலத்தைப் பயன்படுத்து"
கோட்டைக்குள்
போர்ச்சேவகர்களும் அல்லது சிப்பாய்கள் தங்குமிடத்தை உள்ளடக்கிய மிகவும் முக்கியமான அல்லது இராணுவ பலத்தின் கட்டிடமாகும். 21:34 ம் வசனத்தில் இதை நீங்கள் எப்படி மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்.
Acts 23:11
சாட்சி கொடு
அனுகூலமான அர்த்தங்கள் 1) ஒருவரின் தனிப்பட்ட இரட்சிப்பைக் குறித்த சாட்சியைப் "பேச" அல்லது "தெரிவிக்க" 2) இரட்சிப்பின் செய்தியைப் பேச.
Acts 23:12-13
ஒப்பந்தம் செய்தனர்
"ஒன்றைச் செய்யும்படி ஒப்புக்கொள்ளப்பட்டது "
நாற்பது மனிதர்கள்
40 மனிதர்கள்.
Acts 23:14-15
அவர்கள் சென்றனர்
"நாற்பது யூதர்கள் சென்றனர் "
அவனை உங்களிடத்தில் கொண்டுவருகிறோம்
"கோட்டையிலிருந்து தேவாலயத்திலுள்ள ஆலோசனைச் சங்கத்தின் உறுப்பினர்களாகிய உங்களைச் சந்திக்க பவுலைக் கொண்டுவருகிறோம்"
Acts 23:16-17
அவர்கள் மறைந்து காத்திருந்தார்கள்
பவுலைக் கொல்லுவோம் என்று சபதம்பண்ணின மனிதர்கள், அவனைத் தாக்குவதற்காக ஆயத்தமாக இருந்தனர்.
அவரிடத்தில் அறிவிக்க இவனிடத்தில் ஒரு காரியம் உண்டு
தலைமை சேனாபதியிடம் தெரிவிக்க இந்த வாலிபனிடத்தில் ஓர் காரியம் உள்ளது.
கோட்டை
21:34 ம் வசனத்தில் இதை நீங்கள் எப்படி மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்.
Acts 23:18-19
காவலிலிருக்கிற பவுல் என்னை அவனிடத்தில் அழைத்தான்
"காவலிலிருக்கிற பவுல் அவனிடத்தில் வரவும் அவனோடு பேசவும் கேட்டுக்கொண்டான் "
வாலிபன்
சேனாபதி அந்த வாலிபனைக் கையைப் பிடித்து அழைத்துச்சென்றதால் என்பது பவுலுடைய சகோதரியின் குமாரன் மூத்தவனைவிட இளையவன் என்பதைச் சொல்லுகிறது. 12 முதல் 15 வயதுள்ளவனாக இருக்கலாம்.
Acts 23:20-21
நாற்பது மனிதர்கள்
"40 மனிதர்கள் "
அவனுக்காக மறைந்து காத்திருந்தார்கள்
"பவுலைத் தாக்குவதற்கு ஆயத்தமாக இருந்தனர் "
Acts 23:22-24
நூற்றுக்கு அதிபதிகளில் இரண்டுபேர்
நூற்றுக்கு அதிபதிகளில் 2 பேர்
எழுபது குதிரை வீரர்கள்
70 குதிரை வீரர்கள்
இருநூறு ஈட்டிக்காரர்கள்
தங்கள் கரங்களில் ஈட்டிகளை ஏந்தியுள்ள 200 ஈட்டிக்காரர்கள்.
இரவின் மூன்றாம் மணிவேளை
இது ஏறக்குறைய இரவின் 9:00 pm.
தேசாதிபதியாகிய பேலிக்ஸ்
பேலிக்ஸ் என்பவன் செசரியாவில் குடியிருக்கும் அந்தப் பகுதியின் ரோம ஆளுநர்.
Acts 23:25-27
தேசாதிபதியாகிய பேலிக்ஸ்
பேலிக்ஸ் முழு மாகாணத்திற்கும் ரோம ஆளுநராக இருந்தான்.
கொலைசெய்யப்போகிற சமயத்தில்
யூதர்கள் பவுலைக் கொலைசெய்யத் தயாராக இருந்தனர்.
அங்கே போய்
"கண்டேன்" அல்லது "அவர்கள் இருந்த இடத்தைச் சேர்ந்தேன்"
Acts 23:28-30
தளபதியாகிய கிலவுதியுவின் நிரூபம் தொடருகிறது.
நான் அறியவேண்டுமென்று விரும்பினேன்
"நான்"என்ற வார்த்தை கிலவுதியு லீசியாவைக் குறிக்கிறது.
அவர்கள் அவனைக் குற்றம் சாட்டினார்கள்
"யூதர்கள் பவுலைக் குற்றம் சாட்டினார்கள்"
பின்பு அது அறிவிக்கப்பட்டது
"பின்பதாக அது தெரிவிக்கப்பட்டது"
Acts 23:31-33
அந்திப்பத்திரி
இது ஏரோதுவின் தகப்பனாகிய அந்திப்பத்தரின் கனத்திற்காக ஏரோது கட்டின பட்டணமாகும். மத்திய இஸ்ரேலின் இன்று அமைந்துள்ள இடத்தில் இந்தப் பட்டணம் நிற்கிறது.
Acts 23:34-35
அவன் சிலிசியா நாட்டானென்று அவன் அறிந்தபோது
"பவுல் சிலிசியா நாட்டானென்று தேசாதிபதி அறிந்தபோது "
அவனைக் காவல்பண்ணும்படிக் கட்டளையிட்டான்
"பவுலைக் காவல்பண்ணும்படி போர்ச்சேவகர்களுக்குக் கட்டளையிட்டான்" அல்லது "பவுலைப் பாதுகாக்கும்படி போர்ச்சேவகர்களுக்குக் கட்டளையிட்டான்"
Acts 24
Acts 24:1-3
ஐந்து நாட்களுக்குப் பின்பு
ரோமப் போர்ச்சேவகர்கள் பவுலை செசரியாவிற்குக் கொண்டு சென்ற ஐந்து நாட்களுக்குப் பின்பு.
பிரதான ஆசாரியனாகிய அனனியா
23:1ம் வசனத்தில் அனனியா
என்பதை நீங்கள் எப்படி மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்.
அங்கே சென்றான்
"பவுல் இருந்த செசரியாவிற்குச் சென்றான்."
நியாய சாதுரியன்
"நீதிமன்றத்தில் பேசுகிற ஒருவன்." மாற்று மொழிபெயர்ப்பு: "வழக்கறிஞர் " அல்லது "மற்றொருவனை குற்றப்படுத்தப் பேசுகிற ஒருவன்"
தெர்த்துல்லு என்னும் பேருடையவன்
ஒரு மனிதனுடைய பெயர்.
பவுல் தேசாதிபதிக்கு முன்பாக நின்றபோது
"நியாயாசனத்தில் நியாயாதிபதியாக இருக்கின்ற தேசாதிபதியின் சமூகத்தில் பவுல் இருந்தபோது"
குற்றஞ்சாட்டத் தொடங்கினான்
"அவனுக்கு எதிராகப் பேசத் தொடங்கினான்" அல்லது "அவனுக்கு எதிராக ரோமச் சட்டத்தின் வன்செயலைக் கொண்டுவரத் தொடங்கினான்"
உம்மாலே
"உம்மால்" என்ற வார்த்தை தேசாதிபதியைக் குறிக்கிறது.
எங்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டு
"நீங்கள் ஆளுகிற ஜனங்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டு"
கனம்பொருந்திய பேலிக்ஸ்
23:25ம் வசனத்தில் பேலிக்ஸ்
என்பதை நீங்கள் எப்படி மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்.
Acts 24:4-6
தெர்த்துல்லு தேசாதிபதியாகிய பேலிக்ஸ்சிடம் தொடர்ந்து பேசுகிறார்.
ஆகவே, நான் உங்களை ஒருபோதும் தாமதப்படுத்தாமல்
அனுகூலமான அர்த்தங்கள் 1) ஆகவே, நான் உங்களுடைய நேரத்தை அதிகமாக எடுத்துக்கொள்ளாதபடிக்கு, அல்லது 2) "ஆகவே, நான் உங்களைக் களைப்படையச் செய்யாதபடிக்கு"
சுருக்கமாக கவனியுங்கள்
"என்னுடைய சுருக்கமான பேச்சைக் கவனியுங்கள் "
நாங்கள் இந்த மனிதனைக் கண்டோம்
"நாங்கள் பவுலை உற்று கவனித்தோம்" அல்லது "நாங்கள் பவுலைக் கண்டுபிடித்தோம்" "நாங்கள் " என்ற வார்த்தை அனனியாவையும், குறிப்பிட்ட மூப்பர்களையும், தெர்த்தில்லுவையும் குறிக்கிறது.
உலகம் முழுவதுமுள்ள எல்லா யூதர்கள்
"உலகம் முழுவதுமுள்ள அநேக யூதர்கள்"
தேவாலயத்தை அசுத்தமாக்க முயற்சித்தனர்
"தேவாலயத்தை மதரீதியில் கனவீனப்படுத்த முயற்சித்தனர் "
வசனங்கள் 6b
8a
சில பழங்கால பிரதிகளில் பலதரப்பட்ட ஏடுகள் இருந்தன. "[6b] மற்றும் எங்களுடைய சொந்த நியாயப்பிரமாணத்தின்படி அவனை நியாயந்தீர்க்க விரும்பினோம். [7] ஆனால் தளபதியாகிய லீசியா வந்து, மகா உக்கிரத்தோடு எங்கள் கைகளிலிருந்து அவனைப் பறித்துக்கொண்டு போய்விட்டான். [8b] பின்பு அவன் தன்னுடைய குற்றவாளிகள் வந்து அவனுக்கு முன்பாக நிற்கும்படி கட்டளையிட்டான்."
Acts 24:7-9
தெர்த்துல்லு தேசாதிபதியாகிய பேலிக்ஸ்சிடம் தொடர்ந்து பேசுகிறார்
லீசியா
23:26ம் வசனத்தில் லீசியா
என்பதை நீங்கள் எப்படி மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்.
அவன் பவுலை எங்கள் கைகளிலிருந்து பலவந்தமாகப் பறித்துக்கொண்டான்
"லீசியாவின் போர்ச்சேவகர்கள் பவுலை எங்கள் பாதுகாப்பிலிருந்து பலவந்தமாகப் பறித்துக்கொண்டார்கள்" "பலவந்தம்" என்பது முரட்டுத்தனத்தை அல்லது வலுவான வேகத்தைப் பயன்படுத்தும் உணர்வு.
நீ பவுலை விசாரிக்கும்போது
"நீ பவுலைக் கேள்விகள் கேட்கும்போது" அல்லது நியாயாசனத்தில் கேள்வி கேட்பதுபோல"
நாங்கள் அவனைக் குற்றப்படுத்துகிறோம்
"செய்வதினால் பவுலைக் குற்றப்படுத்துகிறோம்" அல்லது "செய்வதின் குற்றமுள்ளவனாக இருப்பதினால் பவுலைக் குற்றம் சாட்டுகிறோம்"
Acts 24:10-13
தேசாதிபதி சைகை காட்டினான்
"தேசாதிபதி சாடை காண்பித்தான்"
என் காரியத்தை விவரிக்கிறேன்
"என்னுடைய சூழ்நிலையை விவரித்துச் சொல்லுகிறேன்"
நீங்கள் அதை அறிந்துகொள்ளமுடியும்
"நீங்கள் அதை ஆராய்ந்து அறிந்துகொள்ளமுடியும்"
இதுவரை பன்னிரண்டு நாட்கள்
"இதுவரை 12 நாட்கள்"
நான் தூண்டிவிடவில்லை
"நான் இடையூறு செய்யவில்லை" அல்லது "நான் தொந்தரவு செய்யவில்லை"
குற்றச்சாட்டுக்கள்
"தவறானதைச் செய்வதால் குற்றப்படுத்துவது" அல்லது "குற்றங்களுக்கான குற்றச்சாட்டுகள்"
Acts 24:14-16
பவுல் தேசாதிபதியாகிய பேலிக்ஸ்சிடம் தன்னுடைய எதிர்ப்பை (எதிர்வாதத்தை) தொடருகிறார்.
நான் உம்மிடத்தில் இதை ஏற்றுக்கொள்கிறேன்
"நான் உம்மிடத்தில் இதை ஒப்புக்கொள்கிறேன்" அல்லது "நான் உம்மிடத்தில் இதை அறிக்கை செய்கிறேன்"
அவர்கள் மதபேதம் என்று சொல்கிறார்கள்
"அவர்கள் சமயபேதம் என்று சொல்கிறார்கள் "
"நம்முடைய முற்பிதாக்களின் தேவன்"
இது, விளக்கத்தின்படி புதிய இழிவான "மதபேதம்" அல்லாத, பழங்கால மதத்தைப் பின்பற்றுவதாக பவுல் தெரிவிக்கிறான் என்று அர்த்தம் கொள்கிறது.
நீதியுள்ளவன்
"நீதியுள்ள ஜனங்கள்"
நான் பெற்றுக்கொள்ள வேலைசெய்கிறேன்
"நான் பெற்றுக்கொள்ள பழகுகிறேன்" அல்லது "நான் பெற்றுக்கொள்ள பயிற்சிசெய்கிறேன்"
தேவனுக்கு முன்பாக
"தேவனுடைய பிரசன்னத்தில்"
Acts 24:17-19
பவுல் தேசாதிபதியாகிய பேலிக்ஸ்சிடம் தன்னுடைய எதிர்ப்பை (எதிர்வாதத்தை) தொடருகிறார்.
என் ஜனத்தாருக்கு உதவவும், தர்ம பணத்தைக் கொடுக்கவும்.
"தர்ம பணத்தில் உறுதியான உதவி."
கூட்டத்தாரோடு இல்லாமல்
"தவறு செய்யும்படியாய் ஒன்றாகக் கூடிவந்த கூட்டத்தாரோடு இல்லாமல்"
இந்த மனிதர்கள்
"ஆசியாவிலிருந்த யூதர்கள் "
அவர்களிடம் ஏதாகிலும் இருந்தால்
"அவர்களுக்கு ஏதாவது சொல்லுவதற்கு இருந்தால் "
Acts 24:20-21
பவுல் தேசாதிபதியாகிய பேலிக்ஸ்சிடம் தன்னுடைய எதிர்ப்பை (எதிர்வாதத்தை) தொடருகிறார்.
இதே மனிதர்கள்
பவுலின் விசாரணையின்போது செசரியாவிலே கூடிவந்திருந்த ஆலோசனை சங்கத்தினர்.
Acts 24:22-23
லீசியா கீழே வரும்பொழுதெல்லாம்
"லீசியா கீழே வரும்பொழுது" அல்லது "லீசியா கீழே வருகின்ற நேரத்தில்"
நான் உங்கள் காரியங்களைத் தீர்மானிப்பேன்
"உங்களுக்கு எதிரான இந்த குற்றச்சாட்டுகளைக் குறித்த தீர்மானங்களை உண்டுபண்ணுவேன்" அல்லது "நீங்கள் குற்றவாளியா என்று நான் நியாயந்தீர்ப்பேன் "
தயவு கொள்ளுங்கள்
மற்ற சிறைக்கைதிகளுக்கு வழங்கப்படாத சில சுதந்திரங்கள் பவுலுக்கு அளிக்கப்பட்டது.
Acts 24:24-25
சில நாட்களுக்குப் பின்பு
"பல நாட்களுக்குப் பின்பு "
பேலிக்ஸ் திரும்பவந்தான்
23:24 ம் வசனத்தில் பேலிக்ஸ்
என்பது எப்படி மொழிபெயர்க்கப்பட்டது என்று பாருங்கள்.
அவனுடைய மனைவியாகிய துருசில்லா
துருசில்லா என்பது பெண்ணுடைய பெயர்.
பேலிக்ஸ் பயமடைந்தான்
பேலிக்ஸ் தன்னுடைய பாவங்களுக்காகத் தன்னைக் குற்றவாளியாக உணர்ந்திருக்கலாம்.
இப்பொழுது
"இந்த நேரத்தில்" அல்லது "அதுவரைக்கும்"
Acts 24:26-27
பவுல் அவனுக்கு பணம் கொடுப்பான்
"பவுல் பேலிக்ஸ்க்கு பணம் கொடுப்பான்." அவனை விடுவிப்பதற்காக பவுல் தனக்கு லஞ்சம் கொடுப்பானென்று பேலிக்ஸ் நம்பியிருந்தான்.
ஆகவே, அவன் அவனை அநேகந்தரம் அழைத்துப் பேசினான்
"ஆகவே, பேலிக்ஸ் பவுலை அநேகந்தரம் அழைத்துப் பேசினான் "
பொர்க்கியுபெஸ்து
"பேலிக்ஸ்க்கு பதிலாக வந்த புதிய ரோம தேசாதிபதி."
Acts 25
Acts 25:1-3
பெஸ்து மாகாணத்திற்குள் நுழைந்தான்
அனுகூலமான அர்த்தங்கள்: 1) "பெஸ்து பகுதிகளில் வந்தான்" அல்லது 2) "பெஸ்து பகுதிகளுக்குள் வந்து தன்னுடைய ஆளுகையைத் துவங்கினான்"
அவன் செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான்
அனுகூலமான அர்த்தங்கள்: 1) "மேலே போனான் என்பது எருசலேமின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது" அல்லது 2) "எருசலேம் மலையின்மேல் அமைந்திருந்ததினால் அவன் உயர்ந்த சிகரத்திற்கு ஏறிச்சென்றான்."
பவுலுக்கு எதிராக குற்றஞ்சாட்டினார்கள்
இது நியாயாசனத்தில் வழக்குகளை முன்வைக்கும் முறையாகும். மாற்றுமொழிபெயர்ப்பு: "நியாயப்பிரமாணங்களை மீறுகிறதினாலே பவுலைக் குற்றஞ்சாட்டினார்கள்,"
அவர்கள் பெஸ்துவிடம் உறுதியாகப் பேசினார்கள்
"அவர்கள் பெஸ்துவிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்" அல்லது "அவர்கள் பெஸ்துவைவேண்டிக்கொண்டார்கள்"
அவர்கள் அவனைக் கொன்றுபோடும்படி...அவன் அவனை அழைக்கலாம்
"யூதர்கள் பவுலைக் கொன்றுபோடும்படி...பெஸ்து பவுலை அழைக்கலாம் "
அவனை அழைக்கலாம்
"அவனை அனுப்பலாம்"
வழியிலே அவர்கள் அவனைக் கொன்றுபோடும்படிக்கு
வழியிலே பவுலைத் தாக்கிக் கொலைசெய்யும்படிக்கு அவர்கள் போய்க்கொண்டிருந்தார்கள்.
Acts 25:4-5
பவுல் செசரியாவிலே காவலில் இருந்தான்
இது ஒரு எதிர்மறைக் குறிப்பு. மாற்றப்பட்ட மொழிபெயர்ப்பு: பவுல் செசரியாவில் காவலில் இருக்கிறான், மேலும் நான் சீக்கிரமாக அங்கே திரும்புவேன்.
அந்த மனுஷனிடத்தில் குற்றம் ஏதாகிலும் இருந்தால்
"பவுல் ஏதாவது தவறு செய்திருந்தால்"
நீங்கள் அவனைக் குற்றம்சாட்டுங்கள்
"நீங்கள் வழக்குகளைக் கொண்டுவாருங்கள் " அல்லது "நியாயப்பிரமாணத்தை மீறுவதினாலே நீங்கள் அவனைக் குற்றம் சாட்டுங்கள்"
Acts 25:6-8
அவன் தங்கியிருந்த பின்பு
"பெஸ்து தங்கியிருந்த பின்பு"
நியாயாசனத்தில் உட்கார்ந்தான்
"அவன் நியாயாதிபதியாக இருந்த இடத்தில் ஆசனத்தில் அமர்ந்தான்"
பவுலை அவனிடத்தில் கொண்டுவரும்படி
"அவர்கள் பவுலை அவனிடத்தில் கொண்டுவரும்படி"
அவன் வந்தபோது
"பவுல் வந்து, பெஸ்துவுக்கு முன்பாக நின்றபோது"
யூதர்களுடைய பெயர்
"யூதர்களுடைய வேதப்பிரமாணம்"
தேவாலயத்திற்கு விரோதமாக இல்லை
இது, எருசலேம் தேவாலயத்திற்குள் யார் நுழையமுடியும் என்பதைப்பற்றின எந்த விதிகளையும் அவன் மீறவில்லை என்று அர்த்தம் கொள்கிறது.
Acts 25:9-10
யூதருக்கு தயவுசெய்ய விரும்பினான்
"யூதர்களைப் பிரியப்படுத்த விரும்பினான்"
அங்கே இந்தக் காரியங்களைக் குறித்து என்னால் நியாயம் விசாரிக்கப்பட
"இந்த வழக்குகளைப்பற்றி நான் உன்னை எங்கே நியாயம் விசாரிப்பேன்?"
நான் நியாயம் விசாரிக்கப்படும் இடம்
"நீர் என்னை நியாயம் விசாரிக்கும் இடம்."
Acts 25:11-12
பவுல் பெஸ்துவிடம் தன்னுடைய எதிர்ப்பைத் (எதிர்வாதத்தை) தொடருகிறார்.
மரணத்திற்குப் பாத்திரமானது ஏதாகிலும் நான் செய்திருந்தால்
"மரண தண்டனையைப் பெற்றுக்கொள்ளத்தக்க தவறுகள் ஏதாகிலும் நான் செய்திருந்தால்"
அவர்களுடைய குற்றங்கள் முற்றிலும் அபத்தமானால்
"எனக்கு எதிராக சொல்லப்படுகின்ற குற்றங்கள் உண்மையில்லையென்றால்"
ஒருவனும் என்னை அவர்களுக்கு ஒப்புக்கொடுக்கலாகாது
அனுகூலமான அர்த்தங்கள்: 1) பொய்க்குற்றம்சாட்டுபவர்களிடம் பவுலை ஒப்புக்கொடுக்க பெஸ்துவுக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை. அல்லது 2) தான் ஒரு தவறும் செய்யவில்லையென்றால், தேசாதிபதி தன்னை யூதர்களுடைய வேண்டுகோளுக்கு விட்டுவிடக்கூடாது என்று பவுல் சொல்லுகிறார்.
இராயனிடத்தில் அபயமிட்டேன்
"நான் விசாரிக்கப்பட இராயனிடத்திற்கு போகவேண்டுமென்று கேட்கிறேன்"
பெஸ்து ஆலோசனைக்காரருடன் ஆலோசித்தான்
"பெஸ்து தன்னுடைய சொந்த ஆலோசனைக்காரரிடம் ஆலோசித்தான்"
Acts 25:13-16
அகிரிப்பா ராஜாவும் பெர்னிக்கேயாலும்
அகிரிப்பா அன்றைய நாளில் ஆளுகை செய்துகொண்டிருந்த ராஜா மற்றும் பெர்னிக்கேயால் அவனுடைய சகோதரியாவாள்.
பெஸ்துவை சந்திப்பதற்கு
"பெஸ்துவை அலுவலகக் காரியங்கள் சம்பந்தமாக சந்திப்பதற்கு"
ஒரு மனிதன் பேலிக்ஸினால் சிறைக்கைதியாக வைக்கப்பட்டவன்
பேலிக்ஸ் பதவியைவிட்டுச் சென்றபோது, ஒரு மனிதனைக் காவலில் வைத்துவிட்டுப்போனான்.
Acts 25:17-20
பெஸ்து தொடர்ந்து பேசுகிறார்
அவர்கள் இங்கு ஒன்றுசேர்ந்து வந்தபோது
"யூதத் தலைவர்கள் என்னைச் சந்திக்க இங்கே வந்தபோது "
நான் நியாயாசனத்தில் அமர்ந்தேன்
"நான் நியாயாதிபதியாக இருந்த இடத்தில் ஆசனத்தில் அமர்ந்தேன்" ( 25:6 பார்க்கவும் )
அந்த மனிதனைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டேன்
"பவுலை என் முன்னே கொண்டுவரும்படி போர்ச்சேவகர்களுக்குக் கட்டளையிட்டேன் "
அவர்களுடைய சொந்த மதம்
"மதம்" என்பது மக்கள் வாழ்க்கை மற்றும் இயற்கைக்கு அப்பற்பட்டதினிடத்தில் கொண்டிருக்கும் விசுவாச முறையாகும்.
இந்தக் காரியங்களைக் குறித்து அங்கே நியாயந்தீர்க்கப்படுவதற்கு
"இந்த வழக்குகளுக்கு அவன் குற்றமுள்ளவனாக இருக்கிறானா என்று யூத ஆலோசனைச் சங்கத்தினர் தீர்மானிக்கும் இடம்"
Acts 25:21-22
21ம் வசனத்தில் பெஸ்து தொடர்ந்து பேசுகிறார்
அவனை வைக்கும்படி நான் ஆணையிட்டேன்
"அவனைச் சிறைச்சாலையில் வைக்கும்படி போர்ச்சேவகர்களுக்கு நான் கட்டளையிட்டேன் "
நாளைக்கு நீர் அவன் சொல்வதைக் கேட்கலாம்
"நாளைக்கு நீங்கள் பவுல் சொல்வதைக் கேட்பதற்கு நான் ஆயத்தம் செய்கிறேன்"
Acts 25:23-24
அகிரிப்பாவும் பெர்னிக்கேயாளும் வந்தார்கள்
25:13ம் வசனத்தில் அகிரிப்பா மற்றும் பெர்னிக்கேயா என்பதை நீங்கள் எப்படி மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்.
பவுல் அவர்களிடத்தில் கொண்டுவரப்பட்டான்
அவர்களுக்கு முன்பாக நிற்கும்படி அவர்கள் பவுலைக் கொண்டுவந்தார்கள்.
அவர்கள் என்னிடத்தில் கூக்குரலிட்டார்கள்
"யூதர்கள் என்னிடம் அதிக வைராக்கியத்தோடு பேசினார்கள்"
Acts 25:25-27
நான் இவனை உங்களுக்கு முன்பாகவும், விசேஷமாக அகிரிப்பா ராஜாவே, உமக்கு முன்பாகவும் கொண்டுவந்தேன்
"நான் பவுலை உங்களிடத்திற்கும், ஆனால் விசேஷமாக அகிரிப்பா ராஜாவே, உம்மிடத்திற்கும் கொண்டுவந்தேன் "
நான் எழுதுவதற்கு ஏதாகிலும் எனக்கு இருக்கும்படி
"ஆகவே, நான் எழுதுவதற்கு எனக்கு ஏதாகிலும் இருக்கும்படி" அல்லது "ஆகவே, நான் என்ன எழுதவேண்டுமென்று நான் தெரிந்துகொள்வேன் "
அவனுக்கு எதிரான வழக்குகள்
அனுகூலமான அர்த்தங்கள்: 1) யூதத்தலைவர்கள் அவனுக்கு எதிராகக் கொண்டுவந்த குற்றச்சாட்டுகள். அல்லது 2) பவுலுடைய காரியத்திற்குப் பொருத்தமான ரோம நியாயப்பிரமாணத்திற்குக் கீழுள்ள வழக்குகள்.
Acts 26
Acts 26:1-3
அவனுடைய கைகளை நீட்டினான்
"கூட்டத்தினருடைய கவனத்தைப் பெறும்படி அவனுடைய கைகளை அவர்களை நோக்கி நீட்டினான் "
அவனுடைய எதிர்வாதத்தை முன்வைத்தான்
"குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தன்னுடைய எதிர்வாதத்தை தொடங்கினான்"
நான் என்னைப் பாக்கியவானாகக் கருதுகிறேன்
அகிரிப்பாவிற்கு முன்பாக நிற்கிறதை சுவிசேஷத்தைப் பற்றிப் பேசுவதற்கு ஒரு வாய்ப்பாக கருதினதினால் பவுல் சந்தோஷமாக இருந்தார்.
Acts 26:4-5
பவுல் தொடர்ந்து பேசுகிறார்
அனைத்து யூதர்கள்
அனுகூலமான அர்த்தங்கள்: 1) பவுலோடு வளர்ந்த, அவனைப் பரிசேயன் என்று அறிந்திருந்த பரிசேயர்கள். அல்லது 2) "பவுல் பரிசேயனாகவும், இப்பொழுது விசுவாசியாகவும் அவனுடைய வைராக்கியத்தினால், யூதர்கள் மத்தியில் அவன் நன்கு அறியப்பட்டிருந்தான்"
என்னுடைய தேசத்தில்
அனுகூலமான அர்த்தங்கள்: 1) அவனுடைய சொந்த ஜனங்களுக்குள், இஸ்ரவேலின் புவியியல் நிலப்பரப்பில் என்ற அவசியமில்லாதது. அல்லது 2) இஸ்ரவேல் தேசத்தில்.
Acts 26:6-8
பவுல் தொடர்ந்து பேசுகிறார்
நான் நியாயத்தீர்ப்படையும்படி இங்கே நிற்கிறேன்
"அவர்கள் என்னை நியாய விசாரணைக்கு உட்படுத்துகிற இந்த இடத்திலே நான் இருக்கிறேன்"
தேவன் நம்முடைய முற்பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்திற்காய் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
பவுல் மேசியாவினுடைய வருகைக்காக நம்பிக்கைக்கொண்டுள்ளான்.
நாங்கள் அதை அடைவதற்கு நம்பிக்கையாய் இருக்கிறோம்
"தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நாங்கள் பெற்றுக்கொள்வோம் என்று நாங்கள் நம்புகிறோம்"
தேவன் மரித்தோரை எழுப்புகிறது நம்பப்படாத காரியமென்று நீங்கள் நினைப்பது ஏன்?
தேவன் மரித்த ஜனங்களை எப்படி உயிர்ப்பிக்கமுடியும் என்பதைக் குறித்து அகிரிப்பா ஏற்கனவே விசுவாசிக்கிறவைகளாக பவுல் சொல்லுகிறவைகளோடு அகிரிப்பாவை இணைப்பதற்காக பவுல் இதைச் சொல்லுகிறார்.
Acts 26:9-11
பவுல் தொடர்ந்து பேசுகிறார்
இயேசுவின் நாமத்திற்கு எதிராக
"இயேசுவைப் பின்பற்றினவர்களுக்கு விரோதமாக"
நான் அவர்களை அநேகந்தரம் தண்டித்தேன்
அனுகூலமான அர்த்தங்கள்: 1) பவுல் சில விசுவாசிகளைப் பலமுறை தண்டித்தான். அல்லது 2) பவுல் பலவிதமான விசுவாசிகளைத் தண்டித்தான்.
அவர்களுக்கு எதிராக என் சம்மதத்தைத் தெரிவித்தேன்
"அவர்களைத் தண்டிப்பதற்கு விருப்பத்தோடு சம்மதித்தேன்"
Acts 26:12-14
பவுல் தொடர்ந்து பேசுகிறார்
அதிகாரத்தோடும், உத்தரவுகளோடும்
யூத விசுவாசிகளைத் துன்புறுத்துவதற்காக யூதத் தலைவர்களிடமிருந்து அவனுக்கு அதிகாரத்தையளித்து பவுல் கடிதங்களை எழுதினான்.
தார்க்கோலில் உதைப்பது உனக்குக் கடினம்
தேவனுடைய திட்டத்திற்கு பவுல் எதிர்த்து நிற்பதை, விவசாயியின் கூர்மையான கோலிற்கு எதிராக எருது உதைப்பதோடு தேவன் ஒப்பிடுகிறார். இது, தேவன் அவனுக்கென்று தீர்மானித்தவைகளிலிருந்து தப்பிப்பது பவுலுக்கு கடினமானது என்று பொருள்படுகிறது
Acts 26:15-18
பவுல் தொடர்ந்து பேசுகிறார்
எனக்காக வேறுபிரித்தேன்
"எனக்கு சொந்தமாக்கினேன்" அல்லது "எனக்காக சுத்திகரித்தேன்"
என்னிலுள்ள விசுவாசத்தினாலே
இது, தேவன் அவருக்காக வேறுபடுத்தினவர்களுடைய தேவனிலுள்ள விசுவாசத்தைக் குறிக்கிறது.
Acts 26:19-21
பவுல் தொடர்ந்து பேசுகிறார்
நான் பரலோக தரிசனத்திற்கு கீழ்ப்படியாமலிருக்கவில்லை
"பரலோகத்திலிருந்து எனக்கு வந்த இந்த தரிசனத்தில் கொடுக்கப்பட்ட வார்த்தைகளுக்கு நான் கீழ்ப்படிந்தேன்."
Acts 26:22-23
பவுல் தொடர்ந்து பேசுகிறார்
தீர்க்கதரிசிகள்
பவுல், பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளுடைய புத்தகங்களின் தொகுப்பைக் குறிப்பிடுகிறார்.
கிறிஸ்து பாடுபடவேண்டும்
"கிறிஸ்து பாடுபட்டு மரிக்கவேண்டும் "
ஒளியை அறிவிப்பதற்கு
"இரட்சிப்பின் வார்த்தையை அறிவிப்பதற்கு"
Acts 26:24-26
நீ பயித்தியக்காரன்
"நீ அறிவில்லாதவைகளைப் பேசுகிறாய்" அல்லது "நீ புத்தியில்லாதவன்"
புத்தியுடையவைகள்
"ஜாக்கிரதையுடையவைகள்" அல்லது "முக்கியமான காரியத்தைக் குறித்து"
நான் தைரியமாய் அவரிடத்தில் பேசுகிறேன்
"ராஜாவாகிய அகிரிப்பாவிடம் நான் தைரியமாய் பேசுகிறேன்"
ஒரு மூலையிலே செய்யப்படவில்லை
அது தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. மாற்று மொழிபெயர்ப்பு: "இரகசியமாய் செய்யப்படவில்லை."
Acts 26:27-29
பவுல் தொடர்ந்து பேசுகிறார்
நீங்கள் தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறீர்களா?
அகிரிப்பா யூதத்தீர்க்கதரிசிகள் சொன்னவைகளை ஏற்கனவே விசுவாசித்திருந்தான் என்பதை அகிரிப்பாவிற்கு நினைவுபடுத்தும்படியாக பவுல் இதைக் கேட்கிறான். இயேசுவைப்பற்றி பவுல் சொல்கிறவைகளை அகிரிப்பா ஏற்றுக்கொள்ளவேண்டும்.
குறுகிய காலத்தில் நீ என்னை நம்பச்செய்து, கிறிஸ்தவனாக்குவீரோ?
அவனைக் கிறிஸ்துவை நம்பச்செய்வதற்கு சிறிய பேச்சையல்லாமல் பவுலுக்கு வழியில்லை என்று அகிரிப்பா சொல்கிறார்.
Acts 26:30-32
பின்பு ராஜாவும், தேசாதிபதியும் எழுந்து நின்றார்கள்
"பின்பு ராஜாவாகிய அகிரிப்பாவும், தேசாதிபதியாகிய பெஸ்துவும் எழுந்து நின்றார்கள்"
Acts 27
Acts 27:1-2
தீர்மானிக்கப்பட்டபோது
"தேசாதிபதி தீர்மானித்தபோது"
இத்தாலியாவிற்கு கப்பலேறி
இத்தாலியா என்பது ரோமாபுரி இருந்த மாகாணத்தினுடைய பெயர்.
நாங்கள் கப்பலேறி
"நாங்கள்" என்ற வார்த்தை ஆசிரியர் லூக்கா, மற்றும் பவுலைக் குறிக்கிறது. ரோமாபுரி பயணத்தின்போது அவன் பவுலோடு இணைந்துகொண்டான்.
நூற்றுக்கு அதிபதியாகிய யூலியு
யூலியு என்பது மனிதனுடைய பெயர்.
அகுஸ்து பட்டாளம்
இது படைப்பிரிவின் பெயர் அல்லது அந்த நூற்றுக்கு அதிபதி இருந்த இராணுவத்தின் பெயர்.
அதிரமித்தியம் ஊர்க்கப்பல்
அனுகூலமான அர்த்தங்கள்: 1) அதிரமித்தியம் ஊரிலிருந்து வந்த கப்பல், அல்லது 2) அதிரமித்தியாவில் பதிவு செய்யப்பட்ட அல்லது உரிமம் பெறப்பட்ட கப்பல். இது தற்கால துருக்கியின் மேற்கு கடற்கரையில் அமைந்திருக்கக்கூடும்.
பயணப்படுவதற்கு ஆயத்தமாயிருப்பது
"சீக்கிரமாக பயணம் போகிற" அல்லது "சீக்கிரம் பிரிந்துசெல்வது"
கடலுக்குச் சென்றோம்
"கடலில் எங்களுடைய பிரயாணத்தை துவங்கினோம்"
தெசலோனிக்கேவின் அரிஸ்தர்க்கு
20:4 ம் வசனத்தில் அரிஸ்தர்க்கு
என்பதை நீங்கள் எப்படி மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்.
Acts 27:3-6
யூலியு பவுலைத் தயவாய் நடத்தினான்
"யூலியு பவுலை சிநேகித அக்கறையோடு நடத்தினான்." 27:1ம் வசனத்தில் "யூலியு"
என்பது எப்படி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று பார்க்கவும்.
அவனுடைய சிநேகிதரிடத்தில் போய் பராமரிப்பைப் பெற்றுக்கொள்ள
"அவனுடைய சிநேகிதரிடத்தில் போய் அவனுக்குத் தேவையான பராமரிப்பைப் பெற்றுக்கொள்ள" அல்லது "அவனுடைய சிநேகிதரிடத்தில் போய் என்னென்ன உதவிகள் அவனுக்குத் தேவைப்படுகிறதோ, அவைகளைப் பெற்றுக்கொள்ள"
எதிர்காற்றினால் சீப்புரு தீவின் எல்லைகளில் பயணித்து அங்கே ஒதுக்கப்பட்டோம்
"எதிர்காற்று எங்களை தவறான வழியில் கொண்டுசென்றுவிடாதபடி சீப்புரு தீவின் கரையில் சென்று, அந்தப் பகுதியில் தங்கினோம் "
மற்றும் பம்பிலியா
வசனம் 2:10 ல் "பம்பிலியா" என்பது எப்படி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கவும்.
லீசியா நாட்டின் மீறா பட்டணத்திற்கு வந்தோம்
மீறா என்பது இன்றைய துருக்கியின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள லீசியா மாகாணத்திலுள்ள ஒரு பட்டணம்.
லீசியா பட்டணம்
லீசியா என்பது இன்றைய துருக்கியின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள ரோமப் பேரரசு.
அலெக்சந்திரியாபட்டணத்துக் கப்பல்
வசனம் 6:9 ல் "அலெக்சந்திரியா" என்பது எப்படி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கவும்.
இத்தாலியாவிற்குச் சென்றோம்
வசனம் 27:1 ல் "இத்தாலியா" என்பது எப்படி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கவும்.
Acts 27:7-8
கினீதுவுக்கு அருகே
இது இன்றைய துருக்கியில் அமைந்துள்ள பழங்கால குடியிருப்புப் பகுதி.
லசேயபட்டணத்திற்கு அருகில்
"லசேய" என்பது கிரேத்தாத் தீவிலுள்ள கடற்கரைப் பட்டணம்.
சல்மோனேக்கு எதிரில்
"சல்மோனே" என்பது கிரேத்தாத் தீவிலுள்ள கடற்கரைப் பட்டணம்.
நல்ல துறைமுகம்
கிரேத்தாத் தீவிற்கு தெற்குக் கடற்கரையில் அமைந்துள்ள லசெயவிற்கு அருகிலுள்ள ஒரு துறைமுகம்.
Acts 27:9-11
நாங்கள் வெகுகாலங்கள் எடுத்துக்கொண்டோம்
எதிர்க்காற்று வீசிக்கொண்டிருந்தபடியினால் செசரியாவிலிருந்து நல்ல துறைமுகத்திற்குப் பயணம் செய்ய, திட்டமிட்டதைவிட அதிக காலங்கள் எடுத்துக்கொண்டது.
யூதர்களுடைய உபவாசக் காலங்களும் கடந்துபோனது
இந்த உபவாசம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தின் பாவநிவாரண நாளில் நடந்தது. இந்த காலத்திற்குப்பின்பு, பருவகாலப் புயல்களினால் அதிக சிரமம் உண்டானது.
Acts 27:12-13
துறைமுகம் மழைக்காலத்திலே தங்குவதற்கு வசதியாக இல்லை
"மழைக்கால புயல்களின் சமயத்தில் செப்பனிடப்பட்ட கப்பல்களைப் பாதுகாக்கப் போதுமான இடம் இந்தத் துறைமுகத்தில் இல்லை"
பேனிக்ஸ் பட்டணம்
பேனிக்ஸ் என்பது கிரேத்தாத் தீவின் கடற்கரையில் உள்ள துறைமுகப்பட்டணம்.
நங்கூரத்தைத் தூக்கினோம்
இது கப்பலுடைய நங்கூரத்தை தண்ணீரிலிருந்து வெளியே இழுப்பதற்கான கப்பற்பயணச் சொல் ஆகும். நங்கூரம் என்பது கப்பலுடைய பாதுகாப்பிற்கான கயிற்றில் இணைக்கப்பட்டுள்ள கனமான பொருள். துறைமுகத்தில் இருக்கும்போது கப்பல் இழுத்துச்செல்லப்படாதபடி இந்த நங்கூரமானது தண்ணீரிலே வீசப்பட்டு கடலுக்கு அடியில் மூழ்கவிடப்படும்.
Acts 27:14-16
கொந்தளிப்பான காற்று
"மிக பலத்த மற்றும் ஆபத்தான காற்று"
ஒதுக்குப்புறம்
"காற்றிலிருந்து பாதுகாத்த ஒதுக்குப்பகுதி"
கிலவுதா என்னப்பட்ட ஒரு சிறிய தீவு
இந்தத் தீவு கிரேத்தாவின் தெற்குக் கடற்கரையில் அமைந்திருந்தது.
Acts 27:17-18
அவர்கள் அதை மேலே ஏற்றினார்கள்
"அவர்கள் அதை மேலே தூக்கினார்கள் "
சிர்டிஸின் சொரிமணல்
சொரிமணல் என்பது கப்பல்கள் மணலிலே சிக்கிக்கொள்ளக்கூடிய கடலின் ஆழமற்ற பகுதிகள். "சிர்டிஸ்" வட ஆப்பிரிக்காவின் லிபியா கடற்கரையில் அமைந்துள்ளது.
கொண்டுபோகப்பட்டார்கள்
"காற்று எங்களைக் கொண்டுச்செல்கிற திசைகளில் போகவேண்டியதாக இருந்தது "
Acts 27:19-20
நாங்கள் தப்பித்துக்கொள்வோம் என்ற நம்பிக்கை முழுவதும் அற்றுப்போயிற்று
"நாங்கள் உயிர்வாழ்வோம் என்ற நம்பிக்கையை எல்லோரும் விட்டுவிட்டோம் "
Acts 27:21-22
கப்பலோட்டிகள் மத்தியில்
"மனிதர்கள் மத்தியில் "
இந்த வறுத்தமும் சேதமும் பெற்றுக்கொள்வதாக
"முடிவாக, நாங்கள் சேதங்களையும் இழப்புகளையும் சந்திக்கிறோம் "
Acts 27:23-26
பவுல் தொடர்ந்து பேசுகிறார்
உன்னோடு யாத்திரை செய்கிற எல்லோரையும் உனக்கு கொடுக்கப்பட்டுள்ளது
உன்னோடு யாத்திரை செய்கிற எல்லோரும் பிழைக்கும்படிக்கு அவர்களுக்கு தயவுபண்ணத் தீர்மானிக்கப்பட்டது.
நாம் ஒரு தீவிலே விழவேண்டும்
"கப்பல் ஒரு தீவின் கரைக்குக் கொண்டுசெல்லப்படவேண்டும் "
Acts 27:27-29
ஆதிரியாக் கடல்
இத்தாலியாவிற்கும் கிரேக்குவிற்கும் இடையே உள்ள கடல்.
அவர்கள் கடலின் ஆழத்தைக் கணக்கெடுத்தனர்
அவர்கள் கடல் தண்ணீரின் ஆழத்தைக் கணக்கிட்டனர்.
இருபது பாகங்களைக் கண்டு
"20 பாகங்களாகக் கண்டனர் " அல்லது "40 மீட்டர்களாகக் கண்டனர்." இது அளவீட்டின் ஒரு பகுதி.
15 பாகங்களைக் கண்டு
"15 பாகங்களாகக் கண்டனர் " அல்லது "15 மீட்டர்களாகக் கண்டனர் "
பின்னணியத்திலிருந்து
"கப்பலின் பின்புறத்திலிருந்து "
Acts 27:30-32
Acts 27:33-35
உங்கள் தலையிலிருந்து ஒரு மயிரும் விழாது
"உங்களில் ஒவ்வொருவரும் இந்தப் பேரழிவின் சேதமின்றி உயிர்வாழ்வீர்கள் "
அப்பத்தைப் பிட்டு
அப்பத்தை இரண்டு அல்லது அதிகத் துண்டுகளாகப் பிட்டனர் " அல்லது "அப்பத்திலிருந்து ஒரு துண்டைப் பிட்டனர் "
Acts 27:36-38
இருநூற்று எழுபத்தாறு ஜனங்கள்
"276 ஜனங்கள் "
Acts 27:39-41
இடத்தை அறிந்துகொள்ளவில்லை
"இடத்தைக் கண்டார்கள் ஆனால் அவர்களுக்குத் தெரிந்த இடமாக அறிந்துகொள்ளமுடியவில்லை"
நங்கூரங்களைத் தளரவிட்டு கடலிலே விட்டுவிட்டனர்
"கயிறுகளை அறுத்து நங்கூரங்களை விட்டுவிட்டனர் "
கரைக்கு நேராக ஓடி
"கரையை நோக்கி கப்பலைச் செலுத்தினோம் "
Acts 27:42-44
போர்ச்சேவகர்களுடைய திட்டம்
"போர்ச்சேவகர்கள் யோசனை பண்ணினார்கள் "
முந்திக் கடலில் குதித்து
"கப்பலைவிட்டுத் தண்ணீரில் குதித்தனர் "
Acts 28
Acts 28:1-2
நாங்கள் அறிந்துகொண்டோம்
"நாங்கள் ஜனங்களிடமிருந்து அறிந்துகொண்டோம் " அல்லது "குடியிருப்பவர்களிடமிருந்து நாங்கள் கண்டறிந்தோம்." "நாங்கள்" என்ற வார்த்தை பவுலையும், இந்த யாத்திரையில் பவுலோடு பிரயாணம் செய்த, அப்போஸ்தல நடபடிகளின் ஆசிரியராகிய லூக்காவையும் குறிக்கிறது.
மெலித்தா என்னப்பட்டத் தீவு
"மெலித்தா" என்பது, தற்போதைய சிசிலி தீவுக்கு தெற்கே அமைந்துள்ள தீவாகும்.
சொந்த ஜனங்கள்
"சொந்த ஜனங்கள்" என்ற வார்த்தை கிரேக்கு மொழியைப் பேசாதவர்கள் அல்லது கிரேக்கக் கலாச்சாரத்தை தழுவிக்கொள்ளாதவர்களைக் குறிக்கிறது.
சாதாரண தயவு அல்ல
"மிகப்பெரிய அளவிலான தயவு "
அவர்கள் நெருப்பை மூட்டினார்கள்
"அவர்கள் சிறு குச்சிகளையும், கிளைகளையும் ஒன்றுசேர்த்து அவைகளை எரித்தார்கள் "
எங்கள் அனைவரையும் சேர்த்துக்கொண்டார்கள்
அனுகூலமான அர்த்தங்கள்: 1) "கப்பலிலிருந்த எல்லா ஜனங்களையும் சேர்த்துக்கொண்டனர் " 2) "பவுலையும், அவனோடிருந்தவர்களையும் சேர்த்துக்கொண்டனர் "
Acts 28:3-4
ஒரு விரியன் பாம்பு வெளியே வந்தது
"ஒரு விஷம் நிறைந்த பாம்பு விறகுக்கட்டிலிருந்து வெளியே வந்தது"
அவனுடையக் கைகளைக் கவ்விக்கொண்டது
"பவுலுடையக் கையைக் கடித்துக்கொண்டு விடவில்லை"
இந்த மனிதன் உறுதியாகவே கொலைபாதகன்
"நிச்சயமாகவே, இந்த மனிதன் கொலைபாதகன் " அல்லது "இந்த மனிதன் உண்மையாகவே கொலைபாதகன் "
நீதி இவனைப் பிழைக்கவிடாது
"நீதி என்னப்பட்ட பெண்தெய்வம் இவனை மரணத்திலிருந்து தப்பிக்கவிடாது "
Acts 28:5-6
அந்தப் பூச்சியைத் தீயிலே உதறிப்போட்டான்
" அவனுடையக் கைகளை உதறியதால் பாம்பு அவனுடைய கையிலிருந்து நெருப்பிற்குள் விழுந்தது "
காய்ச்சலினால் அவதிப்படுவது
அனுகூலமான அர்த்தங்கள்: 1) "கடுங்காய்ச்சல் அடைவான் " 2) "வீங்கிவிடும்."
அவன் தேவனென்று சொன்னார்கள்
விஷம் நிறைந்த பாம்பு கடித்தப்பின்பும் உயிர்வாழ்கிறவன் தெய்வீகமானவன் அல்லது ஒரு தேவன் என்கிற நம்பிக்கை இருந்தது.
Acts 28:7-10
இப்பொழுதும் சமீபமாயிருந்த இடத்தில்
"இப்பொழுது" என்பது ஒரு புதிய நபரை அல்லது சம்பவத்தை அறிமுகப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
தீவின் முதலாளி
அனுகூலமான அர்த்தங்கள்: 1) "ஜனங்களுடைய முக்கியத் தலைவன்" அல்லது 2) "அவனுடைய செல்வத்தினால் தீவின் மிக முக்கியமான நபராக இருந்தவன்."
புபிலியு என்னும் பேர்கொண்ட ஒரு மனிதன்
புபிலியு தீவின் முதலாளியாக இருந்தவன்.
ஏற்றுக்கொண்டார்கள்
"பவுலையும், அவனோடிருந்தவர்களையும் ஏற்றுக்கொண்டார்கள் "
தயவாய் எங்களை விசாரித்தான்
"அந்நியராயிருந்த எங்களை தயவோடு உபசரித்தார்கள் "
உடல்நலம் குறைவுபட்டிருந்தான்
"சுகவீனமாயிருந்தான் "
ஜுரத்தினாலும் பேதியினாலும் வருத்தப்பட்டுக் கிடந்தான்
"பேதி என்பது குடல் சம்பந்தப்பட்ட தொற்று வியாதி "
அவன்மீது அவனுடைய கைகளை வைத்தான்
""அவனைத் தன் கைகளினால் தொட்டான் "
குணமாக்கப்பட்டார்கள்
" அவன் அவர்களையும் குணமாக்கினான் "
Acts 28:11-12
அலெக்சந்திரியாக் கப்பல்
அனுகூலமான அர்த்தங்கள்: 1) "அலெக்சந்திரியாவிலிருந்து வந்த கப்பல் " அல்லது 2) " அலெக்சந்திரியாவில் பதிவு செய்யப்பட்ட அல்லது உரிமம் பெறப்பட்டக் கப்பல்." "அலெக்சந்திரியா" என்பது 6:9ம் வசனத்தில் எப்படி மொழிபெயர்க்கப்பட்டது என்று பார்க்கவும்.
இரட்டை சகோதரர்கள்...காஸ்டர் மற்றும் பொல்லக்ஸ்
இது கிரேக்கக் கடவுளாகிய சீயுஸின் இரட்டைக் குமாரர்களாகிய காஸ்டர் மற்றும் பொல்லக்ஸ் ஆகியோரைக் குறிக்கிறது.
சீரகூசா பட்டணம்
சீரகூசா தற்போதைய சிசிலி தீவின் தென்கிழக்கு கடற்கரையிலும், இத்தாலியாவின் தென்மேற்கிலும் உள்ள பட்டணம்.
Acts 28:13-15
ரேகியு பட்டணம்
இது இத்தாலியாவின் தென்மேற்கு முனையில் அமைந்துள்ள துறைமுகப் பட்டணமாகும்.
தென்றல் காற்று வீசினது
" (தெற்கேயிருந்து) தென்திசைக் காற்றானது வீசத் தொடங்கியது "
புத்தேயோலி பட்டணம்
"புத்தேயோலி" இத்தாலியாவின் மேற்குக்கடற்கரையில் உள்ள தற்போதைய நாப்பில்ஸ்சில் அமைந்துள்ளது.
இந்தபடி நாங்கள் ரோமாபுரிக்கு வந்தோம்
"நாங்கள் அவர்களோடு ஏழு நாட்கள் தங்கியிருந்தபிறகு, ரோமாபுரிக்குச் சென்றோம்." பவுல் புத்தேயோலியை அடைந்தபோது, மீதமுள்ள ரோமாபுரி பயணம் தரைவழியாய் இருந்தது.
மூன்று சத்திரங்கள்
இது ரோமாபுரிக்கு தெற்கே 50 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அப்பியுபுரம் என்னப்பட்ட முக்கிய நெடுஞ்சாலையில் இருந்த ஓய்விடம்.
Acts 28:16-18
நாங்கள் ரோமாபுரியில் நுழைந்தபோது, பவுல் உத்தரவு பெற்றான்
"நாங்கள் ரோமாபுரிக்கு வந்து சேர்ந்தபின்பு, அரசாங்கம் அவனுக்கு அனுமதியளித்தது"
யூதர்களுடைய தலைவர்கள்
ரோமாபுரியில் இருந்த யூதப் பிரதானிகள் அல்லது மதத்தலைவர்கள்.
மரணதண்டனைக்கான காரணம் ஒன்றும் என்னில் இல்லை
"மரணதண்டனையடைவதற்கான ஒன்றையும் நான் செய்யவில்லை "
Acts 28:19-20
பவுல் தொடர்ந்து பேசுகிறார்
யூதர்கள் பேசினார்கள்
"எருசலேமிலுள்ள யூதர்கள் பேசினார்கள் "
அவர்களுடைய விருப்பத்திற்கு விரோதமாக
"ரோமத் தலைவர்களுடைய விருப்பத்திற்கு எதிராக"
நான் அபயமிடவேண்டியதாயிருந்தது
"நான் அபயமிடுவதைத்தவிர வேறு மாற்றங்கள் இல்லை"
இஸ்ரவேலுடைய நம்பிக்கை
தேவன் மேசியாவை இஸ்ரவேலுக்கு அனுப்புவார் என்பது.
Acts 28:21-22
நீ இந்த மதபேதத்தைக் பற்றி நினைத்துக்கொள்
"இந்த சுயமாக தெரிந்துகொள்ளப்பட்டக் குழுவைப்பற்றி நீ நினைத்துக்கொள்"
எங்கும் அது விரோதமாகப் பேசப்பட்டது
ரோமப் பேரரசு முழுவதும் சுவிசேஷ செய்தியைப் புறக்கணித்த யூத மக்கள் இந்த மார்க்கத்தைக் குறித்து தவறாக சொல்லிக்கொண்டிருந்தார்கள். ரோம யூதர்கள் கேட்டுக்கொண்டிருந்தவைகள் இந்தச் செய்திகளே.
Acts 28:23-24
அவன் அவர்களை நம்பச்செய்ய முயற்சித்தான்
"அவர்கள்" என்ற வார்த்தை பவுல் யாருக்கு பேசிக்கொண்டிருந்தானோ அந்த யூதத் தலைவர்களைக் குறிக்கிறது.
சிலர் விசுவாசித்தார்கள்
"பவுல் அவர்களில் சிலரை இணங்கச்செய்தான்"
Acts 28:25-26
Acts 28:27
பவுல் ஏசாயாவிலிருந்து குறிப்பைத் தொடர்ந்து பேசுகிறார்
Acts 28:28-29
பவுல் தொடர்ந்து பேசுகிறார்
அவர்கள் செவிகொடுப்பார்கள்
"அவர்களில் சிலர் கவனிப்பார்கள்"
வசனம் 29
"இந்த வார்த்தைகளை அவன் சொன்னபின்பு, யூதர்கள் தங்களுக்குள்ளே மிகவும் தர்க்கம்பண்ணிக்கொண்டு, போய்விட்டார்கள்." இந்த வசனம் விடுபட்டுள்ளது, ஏனென்றால் சில பழமைவாய்ந்த, அதிகமாக நம்பத்தகுந்த, பழங்கால பிரதிகள் இந்த வசனத்தைக் கொண்டிருக்கவில்லை.