1 John
1 John 1
1 John 1:1-2
Q? ஆதியிலிருந்து என்ன இருந்தது என்று யோவான் சொல்லுகிறான்?
A. ஆதியிலிருந்து ஜீவவார்த்தை இருந்தது என்று யோவான் சொல்லுகிறான் [1:1].
Q? ஜீவவார்த்தையைக் குறித்து யோவான் என்ன அறிந்திருந்தான்?
A. யோவான் ஜீவவார்த்தையைக் கேட்டு, கண்டு, ஆழ்ந்து சிந்தித்து மற்றும் தொட்டுப் பழகியிருந்தான் [1:1].
Q? ஜீவவார்த்தை யோவானிற்கு வெளிப்படுவதற்குமுன்பு, அது எங்கே இருந்தது?
A. ஜீவவார்த்தை யோவானிற்கு வெளிப்படுவதற்குமுன்பு, அது பிதாவுடன் இருந்தது [1:2].
1 John 1:3-4
Q? யோவான் தான் கண்டதும், கேட்டதும் இன்னதென்று ஏன் அறிவிக்கிறான்?
A. மற்றவர்களும் அவனோடு ஐக்கியம்கொள்ளும்படி, யோவான் தான் கண்டதும், கேட்டதும் இன்னதென்று அறிவிக்கிறான் [1:3].
Q? யோவானிற்கு ஏற்கெனவே யாரிடத்தில் ஐக்கியம் இருக்கிறது?
A. யோவானிற்கு ஏற்கெனவே பிதா மற்றும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிடத்தில் ஐக்கியம் இருக்கிறது [1:3].
1 John 1:5-7
Q? யோவான் தனது வாசகர்களுக்கு தேவனிடமிருந்து அறிவிக்கும் செய்தி யாது?
A. தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருள் இல்லை என்ற செய்தியை யோவான் அறிவிக்கிறான் [1:5].
Q? தனக்கு தேவனுடன் ஐக்கியமுண்டு என்று சொல்லியும், இருளில் நடக்கிற மனிதனைக் குறித்து யோவான் என்ன சொல்லுகிறான்?
A. அத்தகைய மனிதன் பொய்யனாய் இருக்கிறான், அவன் சத்தியத்தை நடப்பிப்பதில்லை என்று யோவான் சொல்லுகிறான் [1:6].
Q? ஒளியில் நடப்போரை, எல்லா பாவங்களிலிருந்தும் எது சுத்தமாக்குகிறது?
A. இயேசுவின் இரத்தம் அவர்களை எல்லா பாவங்களிலிருந்தும் சுத்தமாக்குகிறது [1:7].
1 John 1:8-10
Q? அவர்களிடம் பாவம் இல்லை என்று சொல்லும் மனிதனைக் குறித்து யோவான் என்ன சொல்லுகிறான்?
A. அத்தகைய மனிதன் தன்னைத் தானே வஞ்சித்துக் கொள்கிறான், சத்தியம் அவனில் இல்லை என்று யோவான் சொல்லுகிறான் [1:8].
Q? தங்கள் பாவங்களை அறிக்கை செய்வோருக்கு தேவன் என்ன செய்வார்?
A. தங்கள் பாவங்களை அறிக்கை செய்வோருக்கு தேவன் அவர்களுடைய பாவங்களை மன்னித்து, எல்லா அநியாயத்திலிருந்தும் அவர்களை சுத்தமாக்குவார் [1:9].
1 John 2
1 John 2:1-3
Q? இயேசு கிறிஸ்து யாருடைய பாவங்களுக்கு பாவநிவாரணபலியாக இருக்கிறார்?
A. இயேசு கிறிஸ்து முழு உலகத்தின் பாவங்களுக்கு பாவநிவாரணபலியாக இருக்கிறார் [2:2].
Q? இயேசு கிறிஸ்துவை நாம் அறிந்திருக்கிறோம் என்பதை நாம் எதினால் அறிகிறோம்?
A. அவருடைய கட்டளைகளை நாம் கைகொள்ளுகிறவர்களானால் நாம் இயேசு கிறிஸ்துவை அறிந்திருக்கிறோம் என்பதை அறிகிறோம் [2:3].
1 John 2:4-6
Q? எவனாகிலும் ஒருவன் தேவனை அறிந்திருக்கிறோம் என்று சொல்லியும், தேவனுடைய கட்டளைகளை கைகொள்ளாதவனாயிருந்தால் அவன் எப்படிப்பட்ட மனிதனாயிருக்கிறான்?
A. எவனாகிலும் ஒருவன் தேவனை அறிந்திருக்கிறோம் என்று சொல்லியும், தேவனுடைய கட்டளைகளை கைகொள்ளாதவனாயிருந்தால் அவன் பொய்யனாயிருக்கிறான் [2:4].
Q? ஒரு விசுவாசி எப்படி நடக்க வேண்டும்?
A. இயேசு கிறிஸ்து நடந்தபடியே ஒரு விசுவாசி நடக்க வேண்டும் [2:6].
1 John 2:7-8
1 John 2:9-11
Q? எவனாகிலும் ஒருவன் ஒளியிலே நடக்கிறேன் என்று சொல்லியும், தன் சகோதரனை வெறுக்கிறவனாயிருந்தால் அவனுடைய ஆவிக்குரிய நிலை என்ன?
A. எவனாகிலும் ஒருவன் ஒளியிலே நடக்கிறேன் என்று சொல்லியும், தன் சகோதரனை வெறுக்கிறவனாயிருந்தால், அவன் இருளில் இருக்கிறான் [2:9,11].
1 John 2:12-14
Q? தேவன் விசுவாசிகளின் பாவங்களை ஏன் மன்னிக்கிறார்?
A. கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் தேவன் விசுவாசிகளின் பாவங்களை மன்னிக்கிறார் [2:12].
1 John 2:15-17
Q? உலகத்தில் உள்ளவைகளிடத்தில் ஒரு விசுவாசியின் சிந்தை எத்தகையதாய் இருக்க வேண்டுமென்று யோவான் சொல்லுகிறான்?
A. விசுவாசி உலகத்தையும், உலகத்திலுள்ளவைகளையும் அன்புகூரக் கூடாதென்று அவன் சொல்லுகிறான் [2:15].
Q? பிதாவினால் உண்டானவைகள் அல்ல என்று யோவான் எந்த மூன்று காரியங்களைப் பெயரிடுகிறான்?
A. மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், வாழ்வின் வீண்பெருமையும் உலகத்திலுள்ளவைகள், அவை பிதாவினால் உண்டானவைகளல்ல என்று யோவான் பெயரிடுகிறான் [2:16].
1 John 2:18-19
Q? இது கடைசி மணிநேரம் என்று தான் அறிவதாய் யோவான் எப்படி சொல்லுகிறான்?
A. அநேக அந்திக்கிறிஸ்துகள் வந்திருப்பதால் இது கடைசி மணிநேரம் என்று தான் அறிவதாய் அவன் சொல்லுகிறான் [2:18].
Q? யார் வருகிறதாய் யோவான் சொல்லுகிறான்?
A. அந்திக்கிறிஸ்து வருகிறதாய் அவன் சொல்லுகிறான் [2:18].
1 John 2:20-21
1 John 2:22-23
Q? அந்திக்கிறிஸ்துவை நாம் அடையாளம் கண்டுகொள்ளும்படி அவன் என்ன செய்வான்?
A. அந்திக்கிறிஸ்து பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறான் [2:22].
Q? குமாரனை மறுதலிக்கிற ஒருவனால் பிதாவை பெற்றிருக்க முடியமா?
A. இல்லை, குமாரனை மறுதலிக்கிற ஒருவனால் பிதாவைப் பெற்றிருக்க முடியாது [2:23].
1 John 2:24-26
Q? குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருக்க விசுவாசிகள் என்ன செய்ய வேண்டுமென்று யோவான் கூறுகிறான்?
A. ஆதிமுதல் அவர்கள் எவைகளைக் கேள்விப்பட்டார்களோ அவைகளில் விசுவாசிகள் நிலைத்திருக்க வேண்டுமென்று யோவான் கூறுகிறான் [2:24].
Q? தேவனால் விசுவாசிகளுக்கு என்ன வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது?
A. தேவன் விசுவாசிகளுக்கு நித்தியவாழ்வை வாக்குப் பண்ணியிருக்கிறார் [2:25].
1 John 2:27-29
Q? கிறிஸ்து தமது வருகையில் தோன்றும்போது குமாரனில் நிலைத்திருப்போர் எத்தகைய சிந்தையுடையோராய் இருப்பார்கள்?
A. கிறிஸ்து தமது வருகையில் தோன்றும்போது குமாரனில் நிலைத்திருப்போர் தைரியத்தோடும், வெட்கப்பட்டுப்போகாமலும் இருப்பார்கள் [2:28].
1 John 3
1 John 3:1-3
Q? பிதா தமது அன்பினிமித்தம் விசுவாசிகள்மீது என்ன வழங்கினார்?
A.பிதா அவர்கள்மீது தேவனுடைய பிள்ளைகள் என்ற பெயரை வழங்கினார் [3:1-2].
Q? கிறிஸ்து வெளிப்படும்போது விசுவாசிகளுக்கு என்ன நடக்கும்?
A. கிறிஸ்து வெளிப்படும்போது, விசுவாசிகள் கிறிஸ்துவைப்போல் இருப்பார்கள், விசுவாசிகள் அவரைப் போலிருந்து, அவர் இருக்கிறபடியே அவரைக் காண்பார்கள் [3:2].
Q? கிறிஸ்துவில் நம்புகிற ஒவ்வொரு விசுவாசியும் தன்னைக் குறித்த விஷயத்தில் என்ன செய்துகொள்கிறான்?
A. கிறிஸ்துவில் நம்புகிற ஒவ்வொரு விசுவாசியும் தன்னை சுத்திகரித்துக் கொள்ளுகிறான் [3:3].
1 John 3:4-6
Q? கிறிஸ்து தம்மில் எதைப் பெறவில்லை?
A. கிறிஸ்து தம்மில் பாவத்தைப் பெறவில்லை [3:5].
Q? எவனாகிலும் ஒருவன் பாவத்தில் நிலைத்திருந்தால் அவன் தேவனிடம் என்ன உறவு பெற்றிருக்கிறான்?
A. பாவத்தில் நிலைத்திருக்கிறவன் எவனோ அவன் கிறிஸ்துவை கண்டதுமில்லை, அவரை அறிந்ததுமில்லை [3:6,8].
1 John 3:7-8
Q? தேவகுமாரன் என்ன காரணத்திற்காக வெளிப்பட்டார்?
A. பிசாசின் கிரியைகளை அழிக்கும்படி தேவகுமாரன் வெளிப்பட்டார் [3:8].
1 John 3:9-10
Q? தேவனுடைய பிள்ளைகளும், பிசாசின் பிள்ளைகளும் தனித்தனியே எப்படி வெளிப்படுகிறார்கள்?
A. தேவனுடைய பிள்ளைகள் நீதியை செய்கிறவர்களாக வெளிப்படுகிறார்கள், பிசாசின் பிள்ளைகள் பாவம் செய்கிறவர்களாக வெளிப்படுகிறார்கள் [3:7-10].
1 John 3:11-12
Q? காயீன் தன்னை பொல்லாங்கனின் பிள்ளையாக எப்படி காட்டினான்?
A. காயீன் தன் சகோதரனைக் கொன்றபோது, அவன் தன்னைப் பொல்லாங்கனின் பிள்ளையாகக் காட்டினான் [3:12].
1 John 3:13-15
Q? விசுவாசிகள் எப்போது ஆச்சரியப்படக் கூடாதென்று யோவான் சொல்லுகிறான்?
A. உலகம் அவர்களை வெறுக்கும்போது அவர்கள் ஆச்சரியப்படக் கூடாதென்று யோவான் சொல்லுகிறான் [3:13].
Q? ஒருவன் விசுவாசிகளிடம் கொண்டிருக்கும் எத்தகைய சிந்தை அவனை தேவனுடைய பிள்ளை என்று காட்டுகிறது?
A. ஒருவன் விசுவாசிகளிடம் அன்பின் சிந்தை கொண்டிருந்தால் அவன் தேவனுடைய பிள்ளை என்று காட்டுகிறது [3:10-11,14].
1 John 3:16-18
Q? அன்பு இன்னதென்று நாம் எப்படி அறிகிறோம்?
A. கிறிஸ்து நமக்காக ஜீவனைக் கொடுத்ததினால் அன்பு இன்னதென்று நாம் அறிகிறோம் [3:16].
Q? ஒரு சகோதரன் தேவையிலிருக்கும்போது, ஒரு விசுவாசி தேவனுடைய அன்பை எப்படிக் காட்டுகிறான்?
A. ஒரு சகோதரன் தேவையிலிருக்கும்போது, ஒரு விசுவாசி அவனுக்கு இவ்வுலக நன்மைகளினால் உதவுவதினால் தேவனுடைய அன்பை காட்டுகிறான் [3:17-18].
1 John 3:19-22
Q? ஒரு விசுவாசி தேவனுடைய அன்பை கிரியையினாலும் உண்மையினாலும் வெளிப்படுத்தும்போது, அவன் தனக்கு எதைப் பெற்றுக்கொள்கிறான்?
A. ஒரு விசுவாசி தேவனுடைய அன்பை கிரியையினாலும் உண்மையினாலும் வெளிப்படுத்தும்போது, அவன் தனக்கு நிச்சயத்தையும், தேவனிடத்தில் தைரியத்தையும் பெற்றுக்கொள்கிறான் [3:19,21].
1 John 3:23-24
Q? தேவனுடைய கட்டளையிலிருந்து யோவான் விசுவாசிகளுக்கு எதை நினைப்பூட்டுகிறான்?
A. அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் விசுவாசம் வைத்து, ஒருவரையொருவர் அன்புகூர வேண்டும் எனும் தேவனுடைய கட்டளையிலிருந்து யோவான் விசுவாசிகளுக்கு நினைப்பூட்டுகிறான் [3:23].
Q? தேவன் விசுவாசிகளுக்குள் நிலைத்திருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும்படி, தேவன் அவர்களுக்கு என்ன கொடுத்திருக்கிறார்?
A. தேவன் விசுவாசிகளுக்குள் நிலைத்திருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும்படி, தேவன் அவர்களுக்கு ஆவியானவரைக் கொடுத்திருக்கிறார் [3:24].
1 John 4
1 John 4:1-3
Q?எல்லா ஆவிகளையும் நம்பாதிருங்கள் என்று விசுவாசிகளை யோவான் ஏன் எச்சரிக்கிறார்?
A. உலகத்தில் அநேக கள்ளத்தீர்க்கதரிசிகள் புறப்பட்டிருக்கிறபடியினால், யோவான் விசுவாசிகளை அப்படி எச்சரிக்கிறார் [4:1].
Q? தேவனுடைய ஆவிதான் பேசுகிறது என்பதை நீங்கள் எப்படி அறிந்துகொள்ள முடியும்?
A. இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வந்தார் என்பதை அறிக்கை செய்கிற எல்லா ஆவிகளும் தேவனைச் சேர்ந்தது [4:2].
Q? எந்த ஆவி இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வந்தார் என்பதை அறிக்கை செய்யாது?
A. அந்திக்கிறிஸ்துவின் ஆவி இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வந்தார் என்பதை அறிக்கை செய்யாது [4:3].
1 John 4:4-6
Q? யோவான் எதைப் பெரிய ஆவி என்று சொல்லுகிறான்?
A. விசுவாசிகளுக்குள் இருக்கும் ஆவியே, உலகத்திலிருக்கும் ஆவிகளைவிடப் பெரியது [4:4-5].
1 John 4:7-8
Q? விசுவாசிகள் தாங்கள் தேவனை அறிந்திருக்கிறார்கள் என்பதையும், தாங்கள் அவரைப்போல இருக்கிறார்கள் என்பதையும் வெளிப்படுத்த அவர்கள் என்ன செய்கிறார்கள்?
A. விசுவாசிகள் ஒருவரையொருவர் அன்புகூருவது, அவர்கள் தேவனை அறிந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது, ஏனெனில் தேவன் அன்பாக இருக்கிறார் [4:7-8].
1 John 4:9-10
Q? தேவன் நமக்கு தமது அன்பை எப்படி வெளிப்படுத்தினார்?
A. தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை உலகத்திற்குள் அனுப்பினதினால் தமது அன்பை நமக்கு வெளிப்படுத்தினார் [4:9].
Q? பிதா தமது குமாரனை என்ன நோக்கத்திற்காக அனுப்பினார்?
A. நமது பாவங்களுக்கான பாவநிவாரண பலியாகவும், உலக இரட்சகராகவும் அவர் இருக்கும்படி பிதா தமது குமாரனை அனுப்பினார் [4:10,14].
1 John 4:11-14
1 John 4:15-16
Q? உண்மையான விசுவாசிகள் இயேசுவைக் குறித்து என்ன அறிக்கை செய்கிறார்கள்?
A. உண்மையான விசுவாசிகள் இயேசுவை தேவனுடைய குமாரன் என்று அறிக்கை செய்கிறார்கள் [4:15].
1 John 4:17-18
Q? அன்பிலும் தேவனிலும் நிலைத்திருப்போர் நியாயத்தீர்ப்பின் நாளில் என்ன சிந்தை கொண்டிருப்பார்கள்?
A. அன்பிலும் தேவனிலும் நிலைத்திருப்போர் நியாயத்தீர்ப்பின் நாளில் தைரியத்துடன் இருப்பார்கள் [4:17].
1 John 4:19-21
Q? நம்மால் எப்படி அன்புகூர முடிகிறது?
A. தேவன் முதலில் அன்புகூர்ந்தபடியால் நாம் அன்புகூருகிறோம் [4:19].
Q? ஒருவன் தேவனிடத்தில் பெற்றிருக்கும் எந்த உறவு அவன் தன் சகோதரனை வெறுக்கச் செய்கிறது?
A. தன் சகோதரனை வெறுக்கிற ஒருவன் தேவனிடத்தில் அன்புகூர முடியாது [4:20].
Q? தேவனிடத்தில் அன்புகூருவோர் யாரிடத்திலும் அன்புகூர வேண்டும்?
A. தேவனிடத்தில் அன்புகூருவோர் தங்கள் சகோதரனிடத்திலும் அன்புகூர வேண்டும் [4:21].
1 John 5
1 John 5:1-3
Q? நாம் தேவனிடத்தில் அன்புகூருவதை எப்படி வெளிப்படுத்துகிறோம்?
A. நாம் தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனிடத்தில் அன்புகூருவதை வெளிப்படுத்துகிறோம் [5:3].
1 John 5:4-5
Q? உலகத்தை மேற்கொள்ளுகிறதாய் எந்த ஜெயம் இருக்கிறது?
A. நமது விசுவாசமே உலகத்தை மேற்கொள்ளுகிற ஜெயமாயிருக்கிறது [5:4].
1 John 5:6-8
Q? இயேசு கிறிஸ்து எந்த இரண்டு காரியங்களால் வந்தார்?
A. இயேசு கிறிஸ்து தண்ணீராலும் இரத்தத்தாலும் வந்தார் [5:6].
Q?எந்த மூன்று காரியங்கள் இயேசு கிறிஸ்துவிற்கு சாட்சி கொடுக்கிறது?
A. ஆவி, தண்ணீர் மற்றும் இரத்தம் ஆகியவை இயேசு கிறிஸ்துவிற்கு சாட்சி கொடுக்கிறது [5:7-8].
1 John 5:9-10
Q? அவருடைய குமாரனைக் குறித்த தேவனுடைய சாட்சியை விசுவாசிக்காத ஒருவன் தேவனை என்னவாக்குகிறான்?
A. அவருடைய குமாரனைக் குறித்த தேவனுடைய சாட்சியை விசுவாசிக்காத ஒருவன் தேவனை பொய்யராக்குகிறான் [5:9-10].
1 John 5:11-12
Q? தேவன் தம்முடைய குமாரனில் நமக்கு என்ன கொடுத்திருக்கிறார்?
A. தேவன் தம்முடைய குமாரனில் நமக்கு நித்தியவாழ்வைக் கொடுத்திருக்கிறார் [5:11].
1 John 5:13-15
Q? தேவனுக்கு முன்பாக விசுவாசிகளுக்கு என்ன தைரியம் இருக்கிறது?
A. விசுவாசிகள் தேவனுடைய சித்தத்தின்படி எதையாகிலும கேட்டால், அவர்களுக்கு அவர் செவிகொடுக்கிறார் என்பது அவர்களுக்கு தைரியமாய் இருக்கிறது [5:14].
1 John 5:16-17
Q? ஒரு விசுவாசி தன் சகோதரன் மரணத்திற்கு ஏதுவல்லாத பாவத்தை செய்வதைக் கண்டால் அவன் என்ன செய்ய வேண்டும்?
A. ஒரு விசுவாசி தன் சகோதரன் மரணத்திற்கு ஏதுவல்லாத பாவத்தை செய்வதைக் கண்டால், தேவன் தன் சகோதரனுக்கு ஜீவனைக் கொடுக்கும்படி அவன் ஜெபிக்கவேண்டும் [5:16].
Q? அநீதியெல்லாம் என்னவாக இருக்கிறது?
A. அநீதியெல்லாம் பாவமாக இருக்கிறது [5:17].
1 John 5:18-19
Q? முழு உலகமும் எங்கே கிடக்கிறது?
A. முழு உலகமும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது [5:19].
1 John 5:20-21
Q? மெய்யான தேவனாயிருக்கிறவர் யார்?
A. இயேசு கிறிஸ்துவின் பிதா மெய்யான தேவனாயிருக்கிறார் [5:20].
Q? எவற்றிலிருந்து விசுவாசிகள் தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும்?
A. விசுவாசிகள் விக்கிரகங்களிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும் [5:21].