தமிழ்: translationQuestions

Updated ? hours ago # views See on DCS Draft Material

Revelation

Revelation 1

Revelation 1:1-3

Q? முதலில் இந்த வெளிப்பாடு யாரிடமிருந்து வந்தது, யாருக்கு இந்த வெளிப்பாடு காட்டப்பட்டிருக்கிறது?

A. தேவனிடமிருந்து இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு வந்தது, இது தம்முடைய ஊழியர்களுக்குக் காட்டப்பட்டிருக்கிறது [1:1].

Q?வெளிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் எப்பொழுது நிகழப்போகிறது?

A. வெளிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் விரைவில் நிகழப்போகிறது [1:1].

Q?இந்த நூலினால் யார் ஆசீர்வதிக்கப்படுவார்கள்?

A. இந்த நூலை சத்தமாய் வாசிப்போர், கேட்போர் மற்றும் கீழ்ப்படிவோர் ஆசீர்வதிக்கப்படுவார்கள் [1:3].

Revelation 1:4-6

Q?இந்த நூலை எழுதினது யார், அவன் யாருக்கு எழுதினான்?

A. யோவான் இந்த நூலை எழுதினான், அவன் ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கு எழுதினான் [1:4].

Q? யோவான் இயேசு கிறிஸ்துவிற்கு கொடுக்கிற மூன்றுவிதப் பெயர்கள் யாவை?

A. உண்மையுள்ள சாட்சி, மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவர் மற்றும் பூமியிலுள்ள இராஜாக்களுக்கு அதிபதி ஆகியப் பட்டப்பெயர்களை யோவான் இயேசு கிறிஸ்துவிற்குக் கொடுக்கிறான் [1:5].

Q? இயேசு விசுவாசிகளை எத்தகையவர்களாய் உருவாக்கியிருக்கிறார்?

A. இயேசு விசுவாசிகளை ஒரு இராஜ்யமாகவும், பிதாவாகிய தேவனுக்கு ஆசாரியர்களுமாகவும் உருவாக்கியிருக்கிறார் [1:6].

Revelation 1:7-8

Q? இயேசு வரும்பொழுது, அவரை யார் காண்பார்கள்?

A. இயேசு வரும்பொழுது, அவரைக் குத்தினவர்கள் உட்பட எல்லாக் கண்களும் காணும் [1:7].

Q?கர்த்தராகிய தேவன் தம்மை எப்படி விவரிக்கிறார்?

A. கர்த்தராகிய தேவன் தம்மை அல்பாவும், ஒமேகாவும், இருக்கிறவரும், இருந்தவரும் மற்றும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ளவராக விவரிக்கிறார் [1:8].

Revelation 1:9-11

Q? யோவான் பத்மு எனும் தீவில் ஏன் இருந்தான்?

A. தேவனுடைய வார்த்தை மற்றும் இயேசுவைப் பற்றிய சாட்சியினிமித்தம் யோவான் பத்மு எனும் தீவில் இருந்தான் [1:9].

Q? யோவானிற்குப் பின்னிருந்த பெரிய சத்தம் அவனை என்ன செய்ய சொன்னது?

A. யோவான் கண்டதை ஒரு புத்தகத்தில் எழுதி, அதை ஏழு சபைகளுக்கு அனுப்புமாறு பெரிய சத்தம் அவனிடம் சொன்னது [1:11].

Revelation 1:12-13

Revelation 1:14-16

Q? யோவான் கண்ட மனிதர் எத்தகைய தலைமுடியும், கண்களும் உடையவராய் இருந்தார்?

A. யோவான் கண்ட மனிதர் வெண்பஞ்சைப் போன்ற தலைமுடியும், அக்கினி ஜூவாலை போன்ற கண்களும் உடையவராய் இருந்தார் [1:14].

Q? அந்த மனிதரின் வலது கையில் என்ன இருந்தது? அவருடைய வாயிலிருந்து வெளியே என்ன வந்தது?

A. அந்த மனிதரின் வலது கையில் ஏழு நட்சத்திரங்கள் இருந்தது, அவருடைய வாயிலிருந்து இருபுறமும் கூர்மையுள்ள பட்டயம் வந்தது [1:16].

Revelation 1:17-18

Q? அந்த மனிதரைக் கண்டதும், யோவான் என்ன செய்தான்?

A. யோவான் இறந்தவனைப்போல அந்த மனிதரின் பாதத்தில் விழுந்தான் [1:17].

Q? அந்த மனிதர் தன்னிடம் எந்த திறவுகோல்கள் இருப்பதாய் சொன்னார்?

A. அந்த மனிதர் தன்னிடம் மரணத்திற்கும், பாதாளத்திற்குரிய திறவுகோல்கள் இருப்பதாய் சொன்னார் [1:18].

Revelation 1:19-20

Q? ஏழு நட்சத்திரங்கள் மற்றும் ஏழு பொன் குத்துவிளக்குகளுக்கான பொருள் எதுவாக இருந்தது?

A. ஏழு நட்சத்திரங்கள் ஏழு சபைகளின் தூதர்களாயிருந்தார்கள் மற்றும் ஏழு குத்துவிளக்குகள் ஏழு சபைகளாயிருந்தது [1:20].

Revelation 2

Revelation 2:1-2

Q? புத்தகத்தின் அடுத்தப் பகுதி எந்த தூதனுக்கு எழுதப்பட்டது?

A. புத்தகத்தின் அடுத்தப் பகுதி எபேசுவிலுள்ள சபையின் தூதனுக்கு எழுதப்பட்டது [2:1].

Q? பொல்லாதவர்கள் குறித்தும் மற்றும் கள்ளத்தீர்க்கதரிசிகள் குறித்தும் எபேசுவிலுள்ள சபை என்ன செய்து கொண்டிருக்கிறது?

A. எபேசுவிலுள்ள சபை பொல்லாதவர்களை ஏற்றுக்கொள்ளாமலும், கள்ளத்தீர்க்கதரிசிகளை சோதித்தும் கொண்டிருக்கிறது [2:2].

Revelation 2:3-5

Q? எபேசுவிலுள்ள சபைக்கு எதிராக கிறிஸ்து என்ன குறை கொண்டிருக்கிறார்?

A. அவர்கள் தங்கள் முதல் அன்பை விட்டுவிட்டார்கள் என்று எபேசுவிலுள்ள சபைக்கு எதிராக கிறிஸ்து குறை கொண்டிருக்கிறார் [2:4].

Q? அவர்கள் மனம்திரும்பாவிட்டால் கிறிஸ்து என்ன செய்யப் போவதாய் கூறுகிறார்?

A. அவர்கள் மனம்திரும்பாவிட்டால் கிறிஸ்து வந்து, அவர்களுடைய விளக்குத்தண்டை அதனிடத்திலிருந்து நீக்கி விடுவேன் என்று கிறிஸ்து கூறுகிறார் [2:5].

Revelation 2:6-7

Q? ஜெயம் பெறுகிறவர்களுக்கு கிறிஸ்து என்ன வாக்களிக்கிறார்?

A. ஜெயம் பெறுகிறவர்கள் தேவனுடைய பரதீசிலுள்ள ஜீவ விருட்சத்திலிருந்து சாப்பிடுவார்கள் என்று கிறிஸ்து வாக்களிக்கிறார் [2:7].

Revelation 2:8-9

Q? புத்தகத்தின் அடுத்த பகுதி எந்த தூதனுக்கு எழுதப்பட்டது?

A. புத்தகத்தின் அடுத்த பகுதி சிமிர்னாவிலுள்ள சபையின் தூதனுக்கு எழுதப்பட்டது [2:8].

Q? சிமிர்னாவிலுள்ள சபை எதை அனுபவித்துக் கொண்டிருக்கிறது?

A. சிமிர்னாவிலுள்ள சபை பாடுகளையும், தரித்திரத்தையும், அவதூறையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது [2:9].

Revelation 2:10-11

Q? மரணம்வரையிலும் உண்மையாயிருக்கிறவர்களுக்கும், ஜெயம் பெறுகிறவர்களுக்கும் கிறிஸ்து என்ன வாக்களிக்கிறார்?

A. மரணம்வரையிலும் உண்மையாயிருக்கிறவர்களும், ஜெயம் பெறுகிறவர்களும் ஜீவ கிரீடத்தைப் பெற்று, இரண்டாம் மரணத்தினால் பாதிக்கப்படாமல் இருப்பார்கள் என்று கிறிஸ்து வாக்களிக்கிறார் [2:10-11].

Revelation 2:12-13

Q? புத்தகத்தின் அடுத்த பகுதி எந்த தூதனுக்கு எழுதப்பட்டிருக்கிறது?

A. புத்தகத்தின் அடுத்த பகுதி பெர்கமுவிலுள்ள சபையின் தூதனுக்கு எழுதப்பட்டிருக்கிறது [2:12].

Q? அந்திப்பா கொல்லப்பட்ட நாட்களில் பெர்கமுவிலிருந்த சபை என்ன செய்து கொண்டிருந்தது?

A. அந்திப்பா கொல்லப்பட்ட நாட்களில் பெர்கமுவிலிருந்த சபை கிறிஸ்துவின் நாமத்தை உறுதியாகப் பிடித்துக்கொண்டும், விசுவாசத்தை மறுதலியாமலும் இருந்தது [2:13] Q?பெர்கமுவின் சபை எங்கே குடியிருக்கிறது?

A. பெர்கமுவின் சபை சாத்தானுடைய சிங்காசனம் இருக்கும் இடத்தில் குடியிருக்கிறது. [2:13].

Revelation 2:14-15

Q? பெர்கமுவிலுள்ள சபையிலிருந்த சிலர் எந்த இரண்டு உபதேசங்களைப் பற்றிக் கொண்டிருந்தனர்?

A. பெர்கமுவிலுள்ள சபையிலிருந்த சிலர் பிலேயாமின் உபதேசங்களையும், நிக்கொலாய் மதத்தவரின் உபதேசங்களையும் பற்றிக் கொண்டிருந்தனர் [2:14-15].

Revelation 2:16-17

Q? இந்த கள்ள உபதேசங்களைப் பற்றிக் கொண்டிருக்கிறவர்கள் மனம்திரும்பாவிட்டால் கிறிஸ்து என்ன செய்யப் போவதாய் எச்சரிக்கிறார்?

A. இந்த கள்ள உபதேசங்களைப் பற்றிக் கொண்டிருக்கிறவர்களுக்கு எதிராகப் போர்புரிய போவதாய் கிறிஸ்து எச்சரிக்கிறார் [2:16].

Q? ஜெயம் பெறுகிறவர்களுக்கு கிறிஸ்து என்ன வாக்களிக்கிறார்?

A. ஜெயம் பெறுகிறவர்கள் மறைவான மன்னாவைப் புசித்து, புதிய பெயருடன்கூடிய வெள்ளைக் கல்லைப் பெறுவார்களென்று கிறிஸ்து வாக்களிக்கிறார் [2:17].

Revelation 2:18-19

Q? புத்தகத்தின் அடுத்த பகுதி எந்த தூதனுக்கு எழுதப்பட்டது?

A. புத்தகத்தின் அடுத்த பகுதி தியத்தீராவிலுள்ள சபையின் தூதனுக்கு எழுதப்பட்டது [2:18].

Q? தியத்தீராவிலுள்ள சபை செய்த எந்த நல்ல காரியங்களை கிறிஸ்து அறிந்திருக்கிறார்?

A. தியத்தீராவிலுள்ள சபை வெளிப்படுத்திய அன்பு, விசுவாசம், சேவை மற்றும் பொறுமையான சகிப்புத்தன்மையை கிறிஸ்து அறிந்திருக்கிறார் [2:19].

Revelation 2:20-21

Q? தியத்தீராவிலுள்ள சபைக்கு எதிராகக் கிறிஸ்து கொண்டிருக்கிற குறை யாது?

A. தியத்தீராவிலுள்ள சபை ஒழுக்கமில்லாத கள்ளத் தீர்க்கதரிசியாகிய யேசபேலை சகித்துக் கொண்டிருக்கிறதை கிறிஸ்து அவர்களுக்கு எதிரான குறையாகக் கொண்டிருக்கிறார் [2:20].

Revelation 2:22-23

Q? யேசபேல் மனம்திரும்பவில்லையெனில், கிறிஸ்து தாம் என்ன செய்யப் போவதாய் எச்சரிக்கிறார்?

A. கிறிஸ்து அவளை வியாதிப்படுக்கையில் விழச்செய்து, அவளுடைய பிள்ளைகளை கொன்றுபோடப் போவதாய் எச்சரிக்கிறார் [2:22-23].

Revelation 2:24-25

Q? யேசபேலின் போதனையைப் பற்றிக் கொள்ளாதவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று கிறிஸ்து கூறுகிறார்?

A. கிறிஸ்து வரும்வரையிலும் உறுதியாகப் பற்றிக் கொண்டிருக்கும்படி அவர்களுக்குக் கூறுகிறார் [2:25].

Revelation 2:26-29

Q? ஜெயம் பெறுகிறவர்களுக்கு கிறிஸ்து வாக்களிப்பது என்ன?

A. ஜெயம் பெறுகிறவர்களுக்கு தேசங்கள் மற்றும் விடிவெள்ளியின்மீது அதிகாரம் அளிப்பதாய் கிறிஸ்து வாக்களிக்கிறார் [26,28].

Q? இந்தப் புத்தகத்தை வாசிப்பவர் எதற்கு செவிகொடுக்க வேண்டுமென்று கிறிஸ்து சொல்லுகிறார்?

A. ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதை வாசிப்பவர் செவிகொடுக்க வேண்டுமென்று கிறிஸ்து சொல்லுகிறார் [2:29].

Revelation 3

Revelation 3:1-2

Q? இந்தப் புத்தகத்தின் அடுத்த பகுதி எந்த தூதனுக்கு எழுதப்பட்டது?

A. இந்தப் புத்தகத்தின் அடுத்த பகுதி சர்தையிலுள்ள சபையின் தூதனுக்கு எழுதப்பட்டது [3:1].

Q? சர்தையிலுள்ள சபை பெற்றிருந்த பெயர் என்ன? ஆனால் அவர்களைப் பற்றிய உண்மை என்ன?

A. சர்தையிலுள்ள சபையார் உயிரோடிருக்கிறதாய் பெயர் பெற்றிருக்கிறார்கள், ஆனால் உண்மை யாதெனில் அவர்கள் மரித்துப் போயிருக்கிறார்கள் [3:1].

Q? சர்தையிலுள்ள சபை என்ன செய்ய வேண்டுமென்று கிறிஸ்து எச்சரிக்கிறார்?

A. அவர்கள் விழித்தெழவும், எஞ்சியிருப்பதை பலப்படுத்தவும், நினைவுகூரவும், கீழ்ப்படியவும், மற்றும் மனம்திரும்பவும் வேண்டுமென்று கிறிஸ்து எச்சரிக்கிறார் [3:2-3].

Revelation 3:3-4

Revelation 3:5-6

Q? ஜெயம் பெறுகிறவர்களுக்கு கிறிஸ்து என்ன வாக்களிக்கிறார்?

A. ஜெயம் பெறுகிறவர்கள் வெண்ணிற ஆடையை அணிவார்கள், ஜீவப் புத்தகத்தில் நிலைத்திருப்பார்கள் மற்றும் அவர்களுடைய பெயர் பிதாவாகிய தேவனுக்கு முன்பு சொல்லப்படும் [3:5].

Revelation 3:7-8

Q? இந்தப் புத்தகத்தின் அடுத்த பகுதி யாருக்கு எழுதப்பட்டது?

A. இந்தப் புத்தகத்தின் அடுத்த பகுதி பிலதெல்பியாவிலுள்ள சபைக்கு எழுதப்பட்டது [3:7].

Q? பிலதெல்பியாவிலுள்ள சபையாருக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்?

A. பிலதெல்பியாவிலுள்ள சபையார் கிறிஸ்துவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து அவருடைய நாமத்தை மறுதலியாமல் இருக்கிறார்கள் [3:8].

Revelation 3:9-11

Q? கிறிஸ்து சாத்தானின் கூட்டத்தாரை என்ன பண்ணும்படி செய்வார்?

A. கிறிஸ்து சாத்தானின் கூட்டத்தாரை பரிசுத்தவான்களின் பாதங்களில் அடிபணிந்து வணங்கும்படி செய்வார் [3:9].

Q? கிறிஸ்து சீக்கிரமாய் வருகிறபடியால் பிலதெல்பியாவிலுள்ள சபை என்ன செய்ய வேண்டுமென்று அவர் சொல்லுகிறார்?

A. அவர்களுடைய கிரீடத்தை ஒருவராலும் எடுத்துக்கொள்ள முடியாதபடிக்கு, அவர்கள் தங்களிடமுள்ளதை உறுதியாகப் பற்றிக் கொண்டிருக்கும்படி கிறிஸ்து சொல்லுகிறார் [3:11].

Revelation 3:12-13

Q? ஜெயம் பெறுகிறவர்களுக்கு கிறிஸ்து என்ன வாக்களிக்கிறார்?

A. ஜெயம் பெறுகிறவர்கள் தேவனுடைய ஆலயத்தில் தூணாகவும், தேவனுடைய நாமத்தைப் பெறுகிறவர்களாகவும், தேவனுடைய நகரத்தின் நாமத்தைப் பெறுகிறவர்களாகவும் மற்றும் கிறிஸ்துவின் புதிய நாமம் அவர்கள்மேல் எழுதப்பட்டவர்களாகவும் இருப்பார்கள் [3:12].

Revelation 3:14-16

Q? இந்தப் புத்தகத்தின் அடுத்தப் பகுதி எந்த தூதனுக்கு எழுதப்பட்டது?

A. இந்தப் புத்தகத்தின் அடுத்தப் பகுதி லவோதிக்கேயாவிலுள்ள சபையின் தூதனுக்கு எழுதப்பட்டது [3:14].

Q? லவோதிக்கேயாவிலுள்ள சபை எந்தவிதத்தில் இருந்திருக்க வேண்டுமென்று கிறிஸ்து விரும்புகிறார்?

A. லவோதிக்கேயாவிலுள்ள சபை குளிராக அல்லது அனலாக இருந்திருக்க வேண்டுமென்று கிறிஸ்து விரும்புகிறார் [3:15].

Q? லவோதிக்கேயாவிலுள்ள சபைக்கு கிறிஸ்து என்ன செய்யப்போகிறார்? ஏன்?

A. லவோதிக்கேயாவிலுள்ள சபையார் வெதுவெதுப்பாய் இருக்கிறபடியினால், கிறிஸ்து அவர்களைத் தமது வாயிலிருந்து வாந்திபண்ணிப் போடப் போகிறார் [3:16].

Revelation 3:17-18

Q? லவோதிக்கேயாவிலுள்ள சபை தன்னைப் பற்றி என்ன கூறுகிறது?

A. லவோதிக்கேயாவிலுள்ள சபை தன்னை செல்வந்தன் என்றும், தனக்கு தேவை எதுவுமில்லை என்றும் கூறுகிறது [3:17].

Q? லவோதிக்கேயாவிலுள்ள சபையைப் பற்றி கிறிஸ்து என்ன சொல்லுகிறார்?

A. லவோதிக்கேயாவிலுள்ள சபை துயர்நிறைந்ததும், பரிதாபத்திற்குரியதும், தரித்திரமுடையதும், குருடானதும் மற்றும் நிர்வாணியுமாய் இருக்கிறது என்று கிறிஸ்து சொல்லுகிறார் [3:17].

Revelation 3:19-20

Q? கிறிஸ்து தாம் நேசிக்கிற யாவருக்கும் என்ன செய்கிறார்?

A. கிறிஸ்து தாம் நேசிக்கிற யாவரையும் பயிற்றுவிக்கவும் போதிக்கவும் செய்கிறார் [3:19].

Revelation 3:21-22

Q? ஜெயம் பெறுகிறவர்களுக்குக் கிறிஸ்து என்ன வாக்களிக்கிறார்?

A. ஜெயம் பெறுகிறவர்கள் கிறிஸ்துவுடன் அவரது சிங்காசனத்தில் அமர்வார்கள் [3:21].

Q? இந்தப் புத்தகத்தை வாசிப்பவர்கள் யாருக்கு செவிகொடுக்க வேண்டுமென்று கிறிஸ்து கூறுகிறார்?

A. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதை வாசிப்பவர்கள் செவிகொடுக்க வேண்டுமென்று கிறிஸ்து கூறுகிறார் [3:22].

Revelation 4

Revelation 4:1-3

Q? யோவான் எது திறந்திருந்ததைக் கண்டான்?

A. யோவான் பரலோகத்தில் ஒரு வாசல் திறந்திருந்ததைக் கண்டான் [4:1].

Q? அந்த சத்தம் யோவானிற்கு எதை காட்டப் போவதாய் கூறியது?

A. இவைகளுக்குப்பின்பு என்ன நிகழ வேண்டுமோ அதை யோவானிற்கு காட்டப் போவதாய் அந்த சத்தம் கூறியது [4:1].

Q? யாரோ ஒருவர் பரலோகத்தில் எதன்மீது அமர்ந்து கொண்டிருந்தார்?

A. யாரோ ஒருவர் பரலோகத்தில் சிங்காசனத்தின்மீது அமர்ந்து கொண்டிருந்தார் [4:2].

Revelation 4:4-5

Q? பரலோகத்திலிருந்த சிங்காசனத்தைச் சுற்றி என்ன இருந்தது?

A. சிங்காசனத்தைச் சுற்றி இருபத்திநான்கு மூப்பர்கள் அமர்ந்திருந்த இருபத்திநான்கு சிங்காசனங்கள் இருந்தன [4:4].

Q? சிங்காசனத்திற்கு முன்பு எரிந்துகொண்டிருந்த ஏழு விளக்குகள் யாவை?

A. ஏழு விளக்குகள் தேவனுடைய ஏழு ஆவிகளாய் இருந்தது [4:5].

Revelation 4:6

Q? சிங்காசனத்தைச் சுற்றி இருந்தவைகள் யாவை?

A. சிங்காசனத்தைச் சுற்றி நான்கு ஜீவன்கள் இருந்தன [4:6].

Revelation 4:7-8

Q? நான்கு ஜீவன்கள் இரவும் பகலும் என்ன செய்து கொண்டிருந்தன?

A. நான்கு ஜீவன்கள் இரவும் பகலும் தேவனுக்கு மகிமை, கனம் மற்றும் நன்றி செலுத்துவதை நிறுத்தவில்லை [4:8-9].

Revelation 4:9-11

Q? ஜீவன்கள் தேவனுக்கு மகிமை செலுத்துகிறபோது இருபத்திநான்கு மூப்பர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

A. இருபத்திநான்கு மூப்பர்கள் சிங்காசனத்திற்குமுன்பு சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கி, தங்கள் கிரீடங்களை கீழே வைத்தார்கள் [4:10].

Q? படைப்பில் தேவனுடைய பங்கு குறித்து மூப்பர்கள் என்ன கூறுகிறார்கள்?

A. தேவன் எல்லாவற்றையும் படைத்தார் மற்றும் அவருடைய சித்தத்தினால் எல்லாம் உயிரோடிருக்கவும், படைக்கப்படவும் செய்தார் என்று மூப்பர்கள் கூறுகிறார்கள் [4:11].

Revelation 5

Revelation 5:1-2

Q? சிங்காசனத்தில் அமர்ந்திருந்தவரின் வலது கையில் யோவான் எதைக் கண்டான்?

A. ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்ட ஒரு தோல்சுருளை யோவான் கண்டான் [5:1].

Q? பூமியிலிருந்த யார் தோல்சுருளைத் திறக்கவும், அதை வாசிக்கவும் தகுதியுடையவராய் இருந்தார்கள்?

A. தோல்சுருளைத் திறக்கவும், அதை வாசிக்கவும் ஒருவரும் தகுதியுடையவராய் இருக்கவில்லை [5:2-4].

Revelation 5:3-5

Q? தோல்சுருளையும், அதன் ஏழு முத்திரைகளையும் திறக்க யாரால் முடிந்தது?

A. யூதா கோத்திரத்துச் சிங்கமும், தாவீதின் வேருமானவரால் தோல்சுருளைத் திறக்க முடிந்தது [5:5].

Revelation 5:6-7

Q? சிங்காசனத்திற்கு முன்பு மூப்பர்களின் மத்தியில் நின்றுகொண்டிருந்தது யார்?

A. அடிக்கப்பட்டதுபோல் காணப்பட்ட ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கு முன்பு மூப்பர்களின் மத்தியில் நின்றுகொண்டிருந்தது [5:6].

Q? ஆட்டுக்குட்டியின் மேலிருந்த ஏழு கொம்புகளும், ஏழு கண்களும் எவைகளாய் இருந்தன?

A. ஏழு கொம்புகளும், ஏழு கண்களும் பூமியெங்கும் அனுப்பப்பட்ட தேவனுடைய ஏழு ஆவிகளாய் இருந்தன [5:6].

Revelation 5:8

Q? மூப்பர்கள் வைத்திருந்த தூபவர்க்கம் நிறைந்த பொற்கிண்ணங்கள் எவைகளாய் இருந்தன?

A. தூபவர்க்கம் நிறைந்த பொற்கிண்ணங்கள் பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாய் இருந்தன [5:8].

Revelation 5:9-10

Q? தோல்சுருளைத் திறக்க ஆட்டுக்குட்டியானவர் ஏன் தகுதியானவராய் இருந்தார்?

A. ஆட்டுக்குட்டியானவர் தமது இரத்தத்தினால் தேவனுக்காக மக்களை ஒவ்வொரு கோத்திரம், மொழி, இனம் மற்றும் நாட்டிலிருந்து மீட்டுக் கொண்டபடியால் அவர் தகுதியானவராய் இருந்தார் [5:9].

Q? தேவனுடைய ஆசாரியர்கள் எங்கே ஆளுவார்கள்?

A. தேவனுடைய ஆசாரியர்கள் பூமியிலே ஆளுவார்கள் [5:10].

Revelation 5:11-12

Q? ஆட்டுக்குட்டியானவர் எதைப் பெறத் தகுதியானவர் என்று தூதர்கள் கூறினார்கள்?

A. வல்லமை, செல்வம், ஞானம், பெலன், கனம், மகிமை மற்றும் துதியைப் பெற ஆட்டுக்குட்டியானவர் தகுதியானவர் என்று தூதர்கள் கூறினார்கள் [5:12].

Revelation 5:13-14

Q? சிங்காசனத்தில் இருக்கிறவரும், ஆட்டுக்குட்டியானவரும் சதாகாலங்களிலும் துதிக்கப்பட வேண்டுமென்று சொன்னது யார்?

A. ஒவ்வொரு படைப்பும் சிங்காசனத்தில் இருக்கிறவரும், ஆட்டுக்குட்டியானவரும் சதாகாலங்களிலும் துதிக்கப்பட வேண்டுமென்று சொன்னது [5:13].

Q? நான்கு ஜீவன்களும் "ஆமென்!" என்று சொன்னதும், மூப்பர்கள் என்ன செய்தார்கள்?

A. மூப்பர்கள் தரையில் விழுந்து தொழுதுகொண்டனர் [5:14].

Revelation 6

Revelation 6:1-2

Q? ஆட்டுக்குட்டியானவர் தோள்சுருளை என்ன செய்தார்?

A. ஆட்டுக்குட்டியானவர் தோள்சுருள்மீதிருந்த ஏழு முத்திரைகளில் ஒன்றை உடைத்தார் [6:1].

Q? முதலாம் முத்திரை உடைக்கப்பட்டபின்பு யோவான் எதைக் கண்டான்?

A. யோவான் ஒரு வெள்ளைக் குதிரையையும், அதன்மேல் ஏறியிருந்த ஒருவன் ஜெயிப்பதற்காகப் புறப்படுவதையும் கண்டான் [6:2].

Revelation 6:3-4

Q? இரண்டாம் முத்திரை உடைக்கப்பட்டபின்பு யோவான் எதைக் கண்டான்?

A. யோவான் ஒரு அக்னிமயமான சிவப்புக் குதிரையையும், அதன்மேல் ஏறியிருந்தவன் பூமியிலிருந்து சமாதானத்தை எடுத்துப்போடுவதையும் கண்டான் [6:4].

Revelation 6:5-6

Q? மூன்றாம் முத்திரை உடைக்கப்பட்டபின்பு யோவான் எதைக் கண்டான்?

A. யோவான் ஒரு கறுப்புக் குதிரையையும், அதன்மேல் ஏறியிருந்தவன் தன் கையில் ஒரு தராசை வைத்திருந்ததையும் கண்டான் [6:5].

Revelation 6:7-8

Q? நான்காம் முத்திரை உடைக்கப்பட்டபின்பு யோவான் எதைக் கண்டான்?

A. யோவான் ஒரு மங்கிய நிறமுள்ள குதிரையைக் கண்டான், அதன்மேல் ஏறியிருந்தவன் மரணம் எனப் பெயரிடப்பட்டிருந்தான் [6:8].

Revelation 6:9-11

Q? ஐந்தாம் முத்திரை உடைக்கப்பட்டபின்பு யோவான் எதைக் கண்டான்?

A. யோவான் தேவனுடைய வசனத்திற்காகக் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்மாக்களைக் கண்டான் [6:9].

Q? பலிபீடத்தின் கீழிருந்த ஆத்மாக்கள் தேவனிடம் எதை அறிய விரும்பினார்கள்?

A. ஆத்மாக்கள் தங்கள் இரத்தத்திற்காக தேவன் பழிவாங்க எவ்வளவு காலம் செல்லும் என்பதை அறிய விரும்பினார்கள் [6:10].

Q? ஆத்துமாக்கள் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமென்று அவர்களுக்கு சொல்லப்பட்டது?

A. கொல்லப்படப் போகிற உடன்ஊழியர்களின் தொகை நிறைவாகுமளவும் ஆத்துமாக்கள் காத்திருக்க வேண்டுமென்று அவர்களுக்கு சொல்லப்பட்டது [6:11].

Revelation 6:12-14

Q? ஆறாம் முத்திரை உடைக்கப்பட்டபின்பு யோவான் எதைக் கண்டான்?

A. யோவான் பூமி அதிர்வதையும், சூரியன் இருளடைவதையும், சந்திரன் இரத்தம் போலாவதையும், நட்சத்திரங்கள் பூமியில் விழுவதையும் கண்டான் [6:12-13].

Revelation 6:15-17

Q? இராஜாக்களும், சேனைத்தலைவர்களும், செல்வந்தர்களும், பலவான்களும் மற்றும் யாவரும் என்ன செய்வதாக யோவான் கண்டான்?

A. அவர்கள் குகைகளில் ஒளிந்துகொள்வதையும், மலைகளிடம் தங்கள்மீது விழுந்து தங்களை மறைத்துக்கொள்ளும்படி கேட்பதையும் யோவான் கண்டான் [6:15-16].

Q? இராஜாக்களும், சேனைத்தலைவர்களும், செல்வந்தர்களும், பலவான்களும் மற்றும் யாவரும் யாரிடமிருந்து மறைந்துகொள்ள விரும்பினார்கள்?

A. அவர்கள் சிங்காசனத்தில் அமர்ந்திருந்தவரிடமிருந்தும், ஆட்டுக்குட்டியானவரின் கோபத்திலிருந்தும் மறைந்துகொள்ள விரும்பினார்கள் [6:16].

Q? எந்த நாள் வந்துவிட்டது?

A. சிங்காசனத்திலிருந்தவர் மற்றும் ஆட்டுக்குட்டியானவரின் பெருங்கோபத்தின் மகாநாள் வந்துவிட்டது [6:17].

Revelation 7

Revelation 7:1-3

Q? பூமியின் நான்கு மூலைகளில் நின்று கொண்டிருந்த நான்கு தூதர்களை யோவான் பார்த்தபோது அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?

A. நான்கு தூதர்கள் பூமியின் நான்கு காற்றுகளைப் பிடித்து வைத்திருந்தனர் [7:1].

Q? பூமி சேதப்படுத்தப்படுவதற்குமுன்பு என்ன செய்யப்பட வேண்டுமென்று கிழக்கிலிருந்து வந்த தூதன் சொன்னான்?

A. பூமி சேதப்படுத்தப்படுவதற்குமுன்பு, தேவனுடைய ஊழியக்காரர்களின் நெற்றிகளில் முத்திரை போடப்பட வேண்டுமென்று தூதன் சொன்னான் [7:2-3].

Revelation 7:4-6

Q? எந்த கோத்திரத்திலிருந்து எவ்வளவு மக்கள் முத்திரையிடப்பட்டார்கள்?

A. இஸ்ரவேல் மக்களின் சகல கோத்திரத்திலிருந்து 144,000 மக்கள் முத்திரையிடப்பட்டார்கள் [7:4].

Revelation 7:7-8

Revelation 7:9-10

Q? பின்பு யோவான் தேவனுடைய சிங்காசனத்திற்குமுன்பும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பும் எதைக் கண்டான்?

A. ஒவ்வொரு தேசம், கோத்திரம், மக்கள் மற்றும் மொழியிலிருந்தும் ஒரு திரளான கூட்டம் சிங்காசனத்திற்கு முன்பிருந்ததை யோவான் கண்டான் [7:9].

Q? சிங்காசனத்திற்கு முன்பிருந்தவர்களின் கூற்றுப்படி, இரட்சிப்பு யாருடையது?

A. இரட்சிப்பு தேவன் மற்றும் ஆட்டுக்குட்டியானவருடையது என்று சிங்காசனத்திற்கு முன்பிருந்தவர்கள் சத்தமிட்டார்கள் [7:10].

Revelation 7:11-12

Q? தூதர்கள், மூப்பர்கள் மற்றும் ஜீவன்கள் எந்த சரீர நிலையில் தேவனை தொழுதுகொண்டார்கள்?

A. அவர்கள் தரையில் முகங்குப்புற விழுந்து தேவனை தொழுதுகொண்டார்கள் [7:11].

Revelation 7:13-14

Q? சிங்காசனத்திற்குமுன்பு வெள்ளை அங்கிகள் அணிந்து நின்றவர்களை மூப்பன் யார் என்று சொன்னான்?

A. அவர்கள் மகா உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள் என்று மூப்பன் சொன்னான் [7:14].

Q? சிங்காசனத்திற்கு முன்பிருந்தவர்கள் தங்கள் அங்கிகளை எப்படி வெண்மையாக்கினார்கள்?

A. அவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் தோய்த்து வெண்மையாக்கினார்கள் [7:14].

Revelation 7:15-17

Q? வெள்ளை அங்கி அணிந்தவர்களுக்கு தேவன் என்ன செய்யப் போவதாய் மூப்பன் சொன்னான்?

A. அவர்கள் இனி பாடுபடாதபடிக்கு தேவன் அவர்களைத் தமது வாசஸ்தலத்திற்குள் வைத்து காப்பார் [7:15-16].

Q? வெள்ளை அங்கி அணிந்தவர்களுக்கு ஆட்டுக்குட்டியானவர் என்ன செய்யப் போவதாய் மூப்பன் சொன்னான்?

A. ஆட்டுக்குட்டியானவர் அவர்களை மேய்த்து, ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளுக்கு வழிநடத்துவார் [7:17].

Revelation 8

Revelation 8:1-2

Q? பரலோகத்தில் அமைதி உண்டாக எது காரணமாயிருந்தது?

A. ஆட்டுக்குட்டியானவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் அமைதி உண்டானது [8:1].

Q? தேவனுக்குமுன்பு நின்றுகொண்டிருந்த ஏழு தூதர்களிடம் என்ன கொடுக்கப்பட்டது?

A. தேவனுக்குமுன்பு நின்றுகொண்டிருந்த ஏழு தூதர்களிடம் ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது [8:2].

Revelation 8:3-5

Q? தேவனுக்குமுன்பு என்ன எழுந்தது?

A. தேவனுக்குமுன்பு பரிசுத்தவான்களுடைய ஜெபங்களுடன் கூடிய தூபவர்க்கத்தின் புகை எழுந்தது [8:4].

Q? தூதன் பலிபீடத்திலிருந்து நெருப்பை எடுத்து பூமியில் கொட்டியதும் என்ன நடந்தது?

A. தூதன் நெருப்பை பூமியில் கொட்டியதும், இடியும், முழக்கங்களும், மின்னலும் பூமி அதிர்ச்சியும் உண்டாயின [8:5].

Revelation 8:6-7

Q? முதலாம் எக்காளம் ஊதப்பட்டபோது என்ன நடந்தது?

A. முதலாம் எக்காளம் ஊதப்பட்டபோது மூன்றில் ஒரு பங்கு பூமியும், மூன்றில் ஒரு பங்கு மரங்களும் மற்றும் பசும்புற்களெல்லாம் எரிந்துபோயின [8:7].

Revelation 8:8-9

Q? இரண்டாம் எக்காளம் ஊதப்பட்டபோது என்ன நடந்தது?

A. இரண்டாம் எக்காளம் ஊதப்பட்டபோது, கடலின் மூன்றிலொரு பகுதி இரத்தமாக மாறவும், கடலின் உயிரினங்களில் மூன்றிலொரு பகுதி மரிக்கவும், கப்பல்களில் மூன்றிலொரு பகுதி சேதமும் அடைந்தது [8:8-9].

Revelation 8:10-11

Q? மூன்றாம் எக்காளம் ஊதப்பட்டபோது என்ன நடந்தது?

A. மூன்றாம் எக்காளம் ஊதப்பட்டபோது தண்ணீர்களின் மூன்றிலொரு பகுதி கசப்பாகி, அநேக மக்கள் மரித்தனர் [8:10-11].

Revelation 8:12

Q? நான்காம் எக்காளம் ஊதப்பட்டபோது என்ன நடந்தது?

A. நான்காம் எக்காளம் ஊதப்பட்டபோது பகலின் மூன்றிலொரு பகுதியும், இரவின் மூன்றிலொரு பகுதியும் வெளிச்சம் இல்லாமல் போனது [8:12].

Revelation 8:13

Q? பூமியிலிருந்தவர்களுக்கு "ஐயோ, ஐயோ, ஐயோ" என்று கழுகு ஏன் சொன்னது?

A. மீதமிருக்கிற மூன்று எக்காள சத்தங்களினிமித்தம் பூமியிலிருந்தவர்களுக்கு "ஐயோ, ஐயோ, ஐயோ" என்று கழுகு சொன்னது [8:13].

Revelation 9

Revelation 9:1-2

Q? ஐந்தாம் எக்காளம் ஊதப்பட்டபோது யோவான் எத்தகைய நட்சத்திரத்தைக் கண்டான்?

A. ஐந்தாம் எக்காளம் ஊதப்பட்டபோது, யோவான் வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டான் [9:1].

Q? நட்சத்திரம் என்ன செய்தது?

A. நட்சத்திரம் ஆழத்திற்குச் செல்லும் வழியையும், பாதாளக்குழியையும் திறந்தது [9:2].

Revelation 9:3-4

Q? குழியிலிருந்து வந்த வெட்டுக்கிளிகள் என்ன செய்யும்படி சொல்லப்பட்டது?

A. பூமியை சேதப்படுத்தாமல், தேவனுடைய முத்திரையைப் பெறாதவர்களைமட்டும் சேதப்படுத்தும்படி வெட்டுக்கிளிகளுக்குச் சொல்லப்பட்டது [9:3-4].

Revelation 9:5-6

Q? வெட்டுக்கிளிகளால் வேதனைப்படுத்தப்பட்ட மக்கள் எதைத் தேடியும் காணமாட்டார்கள்?

A. வெட்டுக்கிளிகளால் வேதனைப்படுத்தப்பட்ட மக்கள் மரணத்தைத் தேடுவார்கள், ஆனால் அதைக் காணமாட்டார்கள் [9:6].

Revelation 9:7-9

Q? வெட்டுக்கிளிகளின் சிறகுகள் எத்தகைய சத்தத்தை ஏற்படுத்தியது?

A. வெட்டுக்கிளிகளின் சிறகுகளின் சத்தம் யுத்தத்திற்கு ஓடும் குதிரைகள் பூட்டிய அநேக இரதங்களின் இறைச்சலைப்போல இருந்தது [9:9].

Revelation 9:10-12

Q? வெட்டுக்கிளிகளுக்குமேல் இராஜாவாக இருந்தது யார்?

A. அபெத்தோன் அல்லது கிரேக்க மொழியில் அப்பொல்லியோன் எனப்படும் பாதாளத்தின் தூதன் வெட்டுக்கிளிகளுக்குமேல் இராஜாவாக இருந்தான் [9:11].

Q? ஐந்தாம் எக்காளம் ஊதப்பட்டபின்பு எது கடந்துபோயிற்று?

A. ஐந்தாம் எக்காளம் ஊதப்பட்டபின்பு, முதலாம் ஆபத்து கடந்துபோயிற்று [9:12].

Revelation 9:13-15

Q? ஆறாம் எக்காளம் ஊதப்பட்டபோது, யோவான் என்ன சத்தத்தைக் கேட்டான்?

A. ஆறாம் எக்காளம் ஊதப்பட்டபோது, யோவான் தேவனுக்கு முன்பிருந்த பொற்பீடத்திலிருந்து வருகிற ஒரு சத்தத்தைக் கேட்டான் [9:13].

Q? அவர்கள் சத்தத்தைக் கேட்டபோது, நான்கு தூதர்கள் என்ன செய்தார்கள்?

A. அவர்கள் சத்தத்தைக் கேட்டபோது, மனுக்குலத்தில் மூன்றிலொரு பகுதியினர் கொல்லப்படும்படி நான்கு தூதர்கள் விடுவிக்கப்பட்டார்கள் [9:15].

Revelation 9:16-17

Q? குதிரைகளில் ஏறியிருந்த எத்தனை போர்வீரர்களை யோவான் கண்டான்?

A. குதிரைகளில் ஏறியிருந்த 200,000,000 போர்வீரர்களை யோவான் கண்டான் [9:16].

Revelation 9:18-19

Q? மக்களின் மூன்றிலொரு பகுதியினரை எந்த வாதைகள் கொன்றன?

A. மக்களின் மூன்றிலொரு பகுதியினரை அக்கினி, புகை மற்றும் குதிரைகளின் வாய்களிலிருந்து வெளிவந்த கந்தகம் ஆகிய வாதைகள் கொன்றன [9:18].

Revelation 9:20-21

Q? வாதைகளால் கொல்லப்படாத மக்கள் எப்படி கிரியை செய்தார்கள்?

A. வாதைகளால் கொல்லப்படாத மக்கள் தங்கள் கிரியைகளிலிருந்து மனம்திரும்பவுமில்லை, பிசாசுகளை வணங்குவதை அவர்கள் நிறுத்தவுமில்லை [9:20].

Revelation 10

Revelation 10:1-2

Q? யோவான் கண்ட பலமுள்ள தூதனின் முகமும் பாதங்களும் எதைப்போன்று தோன்றியது?

A. தூதன் சூரியனைப் போன்ற முகத்தையும், நெருப்புத் தூண்கள் போன்ற பாதங்களையும் பெற்றிருந்தான் [10:1].

Q? தூதன் எங்கே நின்றான்?

A. தூதன் தனது வலது பாதத்தை கடலின்மீதும், தனது இடது பாதத்தை பூமியின்மீதும் வைத்து நின்றான் [10:2].

Revelation 10:3-4

Q? எதை எழுதாதபடிக்கு யோவான் கேட்டுக் கொள்ளப்பட்டான்?

A. ஏழு இடிகள் சொன்னதை எழுதாதபடிக்கு யோவான் கேட்டுக் கொள்ளப்பட்டான் [10:4].

Revelation 10:5-7

Q? பலமுள்ள தூதன் யார்மேல் ஆணையிட்டான்?

A. வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும் படைத்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவர்மேல் பலமுள்ள தூதன் ஆணையிட்டான் [10:6].

Q? இனி தாமதிக்காது என்று பலமுள்ள தூதன் எதைக் குறித்துச் சொன்னான்?

A. ஏழாம் எக்காளம் ஊதப்படும்போது, இனி தாமதிக்காமல், தேவனுடைய இரகசியம் நிறைவேறும் என்று தூதன் சொன்னான் [10:7].

Revelation 10:8-9

Q? பலமுள்ள தூதனிடமிருந்து எதை எடுத்துக்கொள்ளும்படி யோவான் சொல்லப்பட்டான்?

A. தூதனிடமிருந்து ஒரு திறந்த தோல் சுருளை எடுத்துக்கொள்ளும்படி யோவான் சொல்லப்பட்டான் [10:8].

Q? யோவான் தோல் சுருளை சாப்பிட்ட போது என்ன நடக்குமென்று தூதன் சொன்னான்?

A. தோல் சுருள் யோவானின் வாயில் இனிப்பாகவும், ஆனால் அவன் வயிற்றுக்கு கசப்பாகவும் இருக்கும் என்று தூதன் சொன்னான் [10:9].

Revelation 10:10-11

Q? யோவான் தோல் சுருளைத் சாப்பிட்ட பின்பு, அவன் எதைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைக்க சொல்லப்பட்டான்?

A. அநேக ஜனங்களையும், தேசத்தாரையும், மொழியினரையும், ராஜாக்களையும் குறித்து தீர்க்கதரிசனம் உரைக்க யோவான் சொல்லப்பட்டான் [10:11].

Revelation 11

Revelation 11:1-2

Q?எதை அளக்கும்படி யோவான் சொல்லப்பட்டான்?

A.தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும் மற்றும் அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளக்கும்படி யோவான் சொல்லப்பட்டான்.[11:1]

Q?யூதரல்லாதவர்கள் பரிசுத்த நகரத்தை எவ்வளவு காலம் மிதிப்பார்கள்?

A.யூதரல்லாதவர்கள் பரிசுத்த நகரத்தை நாற்பத்தி இரண்டு மாதங்கள் மிதிப்பார்கள்.

Revelation 11:3-6

Q?இரண்டு சாட்சிகளுக்கு எதை செய்யும்படி அதிகாரம் கொடுக்கப்பட்டது?

Revelation 11:7

Revelation 11:8-9

Q?இரண்டு சாட்சிகளின் சரீரங்கள் எங்கே கிடக்கும்?

A.அவர்களின் சரீரங்கள் அவர்களுடைய கர்த்தர் சிலுவையிலரையப்பட்டதும் சோதோம் மற்றும் எகிப்து என்று அடையாளப்பெயரில் அழைக்கப்பட்டதுமான நகரத்தின் வீதியில் கிடக்கும்.

Revelation 11:10-12

Q?இரண்டு சாட்சிகள் கொல்லப்படும்போது, பூமியிலுள்ள மக்களின் எதிர்செயல் எப்படியிருக்கும்?

A.இரண்டு சாட்சிகள் கொல்லப்படும்போது, பூமியிலுள்ள மக்கள் களிகூரவும், கொண்டாடவும் செய்வார்கள்.

Q?மூன்றரை நாட்களுக்குப்பின்பு, இரண்டு சாட்சிகளுக்கு என்ன நேரிடும்?

A.மூன்றரை நாட்களுக்குப்பின்பு, இரண்டு சாட்சிகள் காலூன்றி நின்று, பரலோகத்திற்கு ஏறிச் செல்வார்கள்.

Revelation 11:13-14

Q?இரண்டு சாட்சிகளும், பூமியதிர்ச்சியும் முடிந்தபின்பு, எது கடந்துபோயிற்று?

A.இரண்டு சாட்சிகள் மற்றும் பூமியதிர்ச்சிக்குப்பின்பு, இரண்டாம் ஆபத்து கடந்துபோயிற்று.

Revelation 11:15

Q?ஏழாம் எக்காளம் ஊதப்பட்டபோது, பரலோகத்தில் என்ன பேசப்பட்டது?

A.ஏழாம் எக்காளம் ஊதப்பட்டபோது, உலகத்தின் இராஜ்யம் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்கும் இராஜ்யமானது என்று பேசப்பட்டது.

Revelation 11:16-17

Q?கர்த்தராகிய தேவன் இப்பொழுது என்ன செய்யத் தொடங்கி விட்டாரென்று மூப்பர்கள் சொன்னார்கள்?

A.கர்த்தராகிய தேவன் இப்பொழுது ஆளத் தொடங்கி விட்டாரென்று மூப்பர்கள் சொன்னார்கள்.

Revelation 11:18

Q?மூப்பர்களின் கூற்றுப்படி, இப்பொழுது எந்த காலம் வந்திருக்கிறது?

A.மரித்தவர்கள் நியாயத்தீர்ப்படைவதற்கும், தேவனுடைய ஊழியர்கள் பலன் பெறுவதற்கும் மற்றும் பூமியை அழிக்கிறவர்களை தேவன் அழிப்பதற்குமுரிய காலம் இப்பொழுது வந்திருக்கிறது.

Revelation 11:19

Q?பின்பு பரலோகத்தில் எது திறக்கப்பட்டது?

A.பின்பு பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது.

Revelation 12

Revelation 12:1-2

Q?வானத்தில் காணப்பட்ட பெரிய அடையாளம் எது?

A.ஒரு கருவுற்ற பெண் சூரியனை அணிந்துகொண்டு, சந்திரனைத் தன் பாதங்களின் கீழே பெற்று, பனிரெண்டு நட்சத்திரங்களைத் தன் தலையின்மீது பெற்று பிரசவ வேதனையில் கதறுகிறவளாய் காணப்பட்டாள்.

Revelation 12:3-4

Q?வானத்தில் காணப்பட்ட வேறு பெரிய அடையாளம் எது?

A.வானத்தில் ஏழு தலைகள் மற்றும் பத்து கொம்புகள் கொண்டதும், அதன் தலைகளின்மேல் ஏழு கிரீடங்களையும் கொண்டதுமான ஒரு பெரிய சிவப்புநிற வலுசர்ப்பம் காணப்பட்டது.

Q?வலுசர்ப்பம் தன் வாலைக் கொண்டு என்ன செய்தது?

A.வலுசர்ப்பம் வானத்திலுள்ள நட்சத்திரங்களில் மூன்றிலொரு பங்கை இழுத்து பூமியில் வீசி எறிந்தது.

Q?வலுசர்ப்பம் என்ன செய்ய விரும்பியது?

A.வலுசர்ப்பம் பெண்ணின் குழந்தையை பட்சித்துப்போட விரும்பியது.

Revelation 12:5-6

Q?ஆண் குழந்தை என்ன செய்யப் போனது?

A.ஆண் குழந்தை சகல தேசங்களையும் இரும்புக் கோலால் ஆளுகை செய்யப் போனது.

Q?ஆண் குழந்தை எங்கே போனது?

A.ஆண் குழந்தை தேவனிடத்திற்கும் மற்றும் அவருடைய சிங்காசனத்திற்கும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

Q?பெண் எங்கே போனாள்?

A.பெண் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள்.

Revelation 12:7-9

Q?வானத்தில் யுத்தம் செய்தது யார்?

A.மிகாவேலும் அவனுடைய தூதர்களும் வலுசர்ப்பம் மற்றும் அவனுடைய தூதர்களுக்கு எதிராக யுத்தம் செய்தார்கள்.

Q?யுத்தத்திற்குப்பின்பு வலுசர்ப்பத்திற்கும் அவனுடைய தூதர்களுக்கும் என்ன நடந்தது?

A.வலுசர்ப்பமும் அவனுடைய தூதர்களும் பூமியில் வீசி எறியப்பட்டார்கள்.

Q?யார் அந்த வலுசர்ப்பம்?

A.வலுசர்ப்பம் பிசாசு அல்லது சாத்தானான பழைய பாம்பாக இருக்கிறது.

Revelation 12:10

Revelation 12:11-12

Q?சகோதரர்கள் வலுசர்ப்பத்தை எப்படி வென்றார்கள்?

A.சகோதரர்கள் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தாலும், சாட்சியின் வசனத்தாலும் வலுசர்ப்பத்தை வென்றார்கள்.[12:11]

Q?தனக்கு எவ்வளவு காலம் உண்டென்று வலுசர்ப்பம் அறிந்திருந்தது?

A.தனக்கு கொஞ்சக்காலம் மட்டுமே உண்டென்று வலுசர்ப்பம் அறிந்திருந்தது. [12:12]

Revelation 12:13-14

Q?பெண்ணை வலுசர்ப்பம் துரத்தியபோது, அவளுக்கு என்ன செய்யப்பட்டிருந்தது?

A.பெண் பராமரிப்படையும்படிக்கு அவளுக்கென்று ஆயத்தம் செய்யப்பட்டிருந்த இடத்திற்கு அவள் பறந்து செல்ல அவளுக்கு சிறகுகள் கொடுக்கப்பட்டது. [12:13-14]

Revelation 12:15-17

Q?வலுசர்ப்பத்தினால் பெண்ணை வாரிக்கொண்டு போகமுடியாதபோது, வலுசர்ப்பம் என்ன செய்தது?

A.வலுசர்ப்பம் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களோடும் மற்றும் இயேசுவைக் குறித்த சாட்சியைப் பற்றிக்கொள்கிறவர்களோடும் யுத்தம்செய்யப் போனது. [12:15-17]

Revelation 13

Revelation 13:1-2

Q?யோவான் பார்த்த மிருகம் எங்கிருந்து வந்தது?

A.மிருகம் கடலிலிருந்து வெளியே வந்தது.

Q?வலுசர்ப்பம் மிருகத்திற்கு என்ன கொடுத்தது?

A.வலுசர்ப்பம் மிருகத்திற்கு தன் பலத்தையும், சிங்காசனத்தையும், ஆளுவதற்கான அதிகாரத்தையும் கொடுத்தது.

Revelation 13:3-4

Q?ஏன் பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியப்பட்டு, மிருகத்தைப் பின்பற்றினர்?

A.மிருகத்திற்கு உண்டாயிருந்த சாவுக்கேதுவான காயம் குணமாக்கப்பட்டபடியால், பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியப்பட்டு, மிருகத்தைப் பின்பற்றினர்.

Revelation 13:5-6

Q?மிருகம் தன் வாயினால் என்ன பேசியது?

A.மிருகம் பெருமையான வார்த்தைகளையும், தேவனுக்கும், அவருடைய நாமத்திற்கும், அவருடைய வாசஸ்தலத்திற்கும் மற்றும் பரலோகத்தில் வாழ்பவர்களுக்கும் எதிரான நிந்தனையான வார்த்தைகளையும் பேசியது.

Revelation 13:7-8

Q?பரிசுத்தவான்களிடத்தில் என்ன செய்யும்படி மிருகத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது?

A.பரிசுத்தவான்களிடத்தில் யுத்தம்செய்யவும், அவர்களை ஜெயிக்கவும் மிருகத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.

Q?மிருகத்தை யார் வணங்கமாட்டார்கள்?

A.ஜீவப்புத்தகத்தில் பெயர் எழுதப்பட்டவர்கள் மிருகத்தை வணங்க மாட்டார்கள்.

Revelation 13:9-10

Q?பரிசுத்தவான்களாய் இருப்பவர்கள் எதற்கென்று அழைக்கப்பட்டிருக்கிறார்கள்?

A.பரிசுத்தவான்களாய் இருப்பவர்கள் நீடிய பொறுமைக்கும் விசுவாசத்திற்கும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

Revelation 13:11-12

Q?யோவான் பார்த்த வேறொரு மிருகம் எங்கிருந்து வந்தது?

A.வேறொரு மிருகம் பூமியிலிருந்து வெளியே வந்தது.

Q?வேறொரு மிருகத்திற்கு எத்தகைய கொம்புகளும், பேச்சும் இருந்தது?

A.வேறொரு மிருகம் ஆட்டுக்குட்டியைப் போன்ற கொம்புகளைப் பெற்று, வலுசர்ப்பத்தைப் போன்று பேசியது.

Q?வேறொரு மிருகம் பூமியில் வாழ்கிறவர்களை என்ன செய்யும்படி செய்தது?

A.வேறொரு மிருகம் பூமியில் வாழ்கிறவர்களை முதலாம் மிருகத்தை வணங்கும்படி செய்தது.

Revelation 13:13-14

Q? மிருகத்தை வணங்க மறுத்தவர்களுக்கு என்ன நடந்தது?

A.மிருகத்தை வணங்க மறுத்தவர்கள் கொல்லப்பட்டார்கள்.

Q?அனைவரும் மிருகத்திடமிருந்து எதைப் பெற்றனர்?

A.அனைவரும் வலது கையில் அல்லது நெற்றியில் ஒரு முத்திரையைப் பெற்றனர்.

Revelation 13:15-17

Revelation 13:18

Q?மிருகத்தின் எண் எது?

A.மிருகத்தின் எண் 666.[13:18]

Revelation 14

Revelation 14:1-2

Q?யோவான் தனக்குமுன்பு யார் நின்றுகொண்டிருந்ததைக் கண்டான்?

A.யோவான் தனக்குமுன்பு சீயோன் மலைமீது ஆட்டுக்குட்டியானவர் நின்றுகொண்டிருந்ததைக் கண்டான்.

Revelation 14:3-5

Q?சிங்காசனத்திற்குமுன்பு பாடப்பட்ட புதிய பாடலை யாரால் கற்றுக்கொள்ள முடிந்தது?

A.பூமியிலிருந்து மீட்கப்பட்டிருந்த 144,000 பேர்களால் மட்டுமே புதிய பாடலை கற்றுக்கொள்ள முடிந்தது. [14:3]

Q?தேவனுக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலன்களாக யார் மீட்கப்பட்டார்கள்?

A.குற்றமற்றவர்களாகிய 144,000 பேர்கள் தேவனுக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலன்களாக மீட்கப்பட்டார்கள்.[14:4-5]

Revelation 14:6-7

Q?தூதன் நித்திய செய்தியான நற்செய்தியை யாருக்குக் கொடுத்தான்?

A.தூதன் நித்திய செய்தியான நற்செய்தியை பூமியிலுள்ள ஒவ்வொரு தேசத்தாருக்கும், கோத்திரத்தாருக்கும், மொழிபேசுவோருக்கும் மற்றும் அனைத்து மக்கள்கூட்டத்திற்கும் கொடுத்தான்.

Q?பூமியில் வாழ்கிறவர்கள் எதை செய்ய வேண்டுமென்று தூதன் சொன்னான்?

A.தேவனுக்குப் பயப்படவும், அவருக்கு மகிமை செலுத்தவும் வேண்டுமென்று தூதன் அவர்களிடம் சொன்னான்.

Q?எந்த வேளை வந்திருப்பதாக தூதன் சொன்னான்?

A.தேவனுடைய நியாயத்தீர்ப்பின் வேளை வந்திருப்பதாக தூதன் சொன்னான்.

Revelation 14:8

Q?இரண்டாம் தூதன் என்ன அறிவித்தான்?

A.மகா பாபிலோன் விழுந்து விட்டதாக இரண்டாம் தூதன் அறிவித்தான்.

Revelation 14:9-10

Revelation 14:11-12

Q?மிருகத்தின் முத்திரையைப் பெற்றவர்களுக்கு என்ன நடக்குமென்று மூன்றாம் தூதன் சொன்னான்?

A.மிருகத்தின் முத்திரையைப் பெற்றவர்கள் சதாகாலமும் அக்கினியினாலும், கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவார்கள்.[14:9-11]

Q?பரிசுத்தவான்கள் எதற்கு அழைக்கப்பட்டார்கள்?

A.பரிசுத்தவான்கள் நீடியபொறுமைக்கு அழைக்கப்பட்டார்கள்.[14:12]

Revelation 14:13

Revelation 14:14-17

Q?மேகத்தின்மீது யார் அமர்ந்திருந்ததை யோவான் கண்டான்?

A.மனுஷகுமாரனைப் போன்ற ஒருவர் மேகத்தின்மீது அமர்ந்திருந்ததை யோவான் கண்டான்.[14:14]

Q?மேகத்தின்மீது அமர்ந்திருந்தவர் என்ன செய்தார்?

A.மேகத்தின்மீது அமர்ந்திருந்தவர் பூமியை அறுவடை செய்ய தமது அரிவாளை வீசினார்.[14:16]

Revelation 14:18-19

Q?கூர்மையான அரிவாளுடைய தூதன் என்ன செய்தான்?

A.கூர்மையான அரிவாளுயுடைய தூதன் பூமியின் திராட்சைப்பழங்களை அறுத்து தேவனுடைய கோப்பாக்கினையின் ஆலையில் போட்டான். [14:18-19]

Revelation 14:20

Q?தேவனுடைய திராட்சை ஆலையில் என்ன நடந்தது?

A.திராட்சை ஆலையில் பழங்கள் நசுக்கப்பட்டு, அதிலிருந்து இரத்தம் நிரம்பி வெளியே வழிந்தது. [14:20]

Revelation 15

Revelation 15:1

Q?யோவான் கண்ட ஏழு தூதர்கள் தங்களிடத்தில் எதை உடையவர்களாய் இருந்தார்கள்?

A.ஏழு தூதர்கள் இறுதி வாதைகளாகிய ஏழு வாதைகளை உடையவர்களாய் இருந்தார்கள். [15:1]

Revelation 15:2

Q?கடலருகே யார் நின்றுகொண்டிருந்தார்கள்?

A.மிருகத்தையும் அதன் உருவத்தையும் வென்றிருந்தவர்கள் கடலருகே நின்றுகொண்டிருந்தார்கள்.[15:2]

Revelation 15:3-4

Q?கடலருகே நின்றுகொண்டிருந்தவர்கள் யாருடைய பாடலைப் பாடினார்கள்?

A.கடலருகே நின்றுகொண்டிருந்தவர்கள் மோசேயின் பாடலையும், ஆட்டுக்குட்டியானவரின் பாடலையும் பாடினார்கள்.[15:3]

Q?தேவனுடைய வழிகள் அந்தப் பாடலில் எப்படி விவரிக்கப்பட்டிருந்தது?

A.தேவனுடைய வழிகள் நீதியும், உண்மையுமானவைகள் என விவரிக்கப்பட்டிருந்தது. [15:3]

Q?அந்தப் பாடலில், யார் வந்து தேவனை தொழுதுகொள்வார்கள்?

A.சகல தேசங்களும் வந்து தேவனை தொழுதுகொள்வார்கள். [15:4]

Revelation 15:5-6

Q?அதற்குப் பின்பு மகா பரிசுத்தஸ்தலத்திலிருந்து யார் வெளியே வந்தார்கள்?

A.அதற்குப் பின்பு மகா பரிசுத்தஸ்தலத்திலிருந்து ஏழு வாதைகளையுடைய ஏழு தூதர்கள் வெளியே வந்தார்கள்.[15:6]

Revelation 15:7-8

Q?ஏழு தூதர்களுக்கு என்ன கொடுக்கப்பட்டது?

Q?எதுவரையிலும் ஒருவராலும் மகா பரிசுத்தஸ்தலத்திற்குள் பிரவேசிக்க முடியாமலிருந்தது?

A.ஏழு வாதைகள் முடியும்வரையிலும் ஒருவராலும் மகா பரிசுத்தஸ்தலத்திற்குள் பிரவேசிக்க முடியாமலிருந்தது. [15:8]

Revelation 16

Revelation 16:1

Q?ஏழு தூதர்கள் எதை செய்யும்படி சொல்லப்பட்டார்கள்?

A.ஏழு தூதர்கள் போய் பூமியின்மேல் தேவனுடைய கோபத்தின் ஏழு கலசங்களை ஊற்றும்படி சொல்லப்பட்டார்கள்.[16:1]

Revelation 16:2

Q?தேவனுடைய கோபத்தின் முதலாம் கலசம் ஊற்றப்பட்டபோது என்ன நடந்தது?

A.மிருகத்தின் முத்திரையைப் பெற்றிருந்தவர்களின்மீது அசிங்கமானதும் வேதனைமிக்கதுமான கொப்புளங்கள் உண்டாயின.[16:2]

Revelation 16:3

Q?தேவனுடைய கோபத்தின் இரண்டாம் கலசம் ஊற்றப்பட்டபோது என்ன நடந்தது?

A.கடல் மரித்தவனுடைய இரத்தத்தைப் போலானது. [16:3]